Posts

Showing posts from September, 2012

யுக முடிவு நாளின் அடையாளங்கள்.

பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல் 'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777 ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி 50 குடிசைகள் கோபுரமாகும் இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 7121

சிசேரியன் கொடுமை விழிப்புணர்வு அவசியம்

சிசேரியன்   கொடுமை   விழிப்புணர்வு   அவசியம் தாய்மை   ஒரு   பெண்ணிற்கு   மிக்க   மகிழ்ச்சியளிக்கும்   விஷயம் .  நிழலின்   அருமை   வெயிலின்   போது   தான் தெரியும்   என்பதை   போல ,  தாய்மையடைவதின்   அருமை   குழந்தை   பாக்கியம்   இல்லாதவர்களுக்கு   மிக்க நன்றாக   புரியும் .   தாய்மையடைவது   எவ்வளவு   மகிழ்ச்சியானதோ ,  அதே   நேரத்தில்   கர்ப்ப   காலமும் குழந்தை   பெற்றுக் கொள்வதும்   அதற்கு   நேர்   எதிரானது   என்பதை   பெண்கள்   நன்றாகவே   உணர்ந்து இருக்கின்றனர் . இயற்கை   மார்க்கமான   இஸ்லாம் ,  தாய்மையடையும்   போது   ஒரு   தாய்   அடையும்   துன்பத்தை எடுத்துக்காட்டி ,  பெற்றோருக்கு   செய்ய   வேண்டிய   கடமையை   அழகாக   எடுத்து   காட்டுகிறது .

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அறிவுரைகள்

அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் அறிவுரைகள் ஹிஜ்ரி 470 ஆண்டு பிறந்த அப்துல் காதிர் ஜீலானி என்ற அறிஞரின் பெயரால் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்களை இறைவன் அளவுக்கு உயர்த்தியும் அவர்களிடம் எதையும் கேட்கலாம் என்றும் அவர்கள் தம் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்றும் பல ஆதாரமற்ற கதைகளை முஸ்லிம்களுக்கு மத்தியில் உலாவரச் செய்துள்ளனர். ஆனால் அந்த அறிஞர்கள் இவர்களின் இந்த செயலுக்கு முற்றிலும் மாற்றமாக, ஓரிறைக் கொள்கை போதித்தவராகவும் திருக்குர்ஆனையும் நபிவழியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியவராகவும் அவர்களின் நூல்களிலேயே தெளிவாக நாம் காணமுடிகிறது. அவர்களின் உண்மையாக கொள்கை விளங்கிக் கொள்ள அவர்களின் நூல்களிலிருந்து தொகுத்து தருகிறோம். இறைவனல்லாதவர்களிடம் நம்பிக்கை வைக்காதே!

பீஜேயின் சொத்து விபரம் வெளிவந்தது...

Image
பீஜேயின் சொத்து விபரம் வெளிவந்தது... பலருக்கு ஏமாற்றம்..! ஜனனமும் கல்வியும்: பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் திகதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில், எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், காலம் சென்ற தனது மூத்த சகோதர் பீ.எஸ்.அலாவுதீன் (மன்பஈ) போன்று, மார்க்கக் கல்வியையே தேர்ந்தெடுத்துக் கற்று, பட்டம் பெற்றார். இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு எழுதும் போது,

விமர்சனங்களை வென்றவர்

Image
விமர்சனங்களை வென்றவர் கி பி 571 ம் ஆண்டு ஏபரல் 20 ம் தேதி மக்காவில் அநாதையாக பிறந்த முஹம்மது (ஸல்) அவர்கள் பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இந்த உலகில் மனிதராகப் பிறந்த பிறக்கப் போகிற வேறு எந்த சக்தியும் எட்டிப் பிடிக்க முடியாதது. சமயம், , சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், மொழி, தத்துவம், இலக்கணம், இலக்கியம், வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவருக்கு தீர்க்கமான ஒரு இடம் இருக்கிறது. இன்றும் நபிமருத்துவம் என்பது மக்களின் பிணி தீர்க்கும் ஒரு முறையாக இடம்பிடித்திருக்கிறது என்பது மட்டுமல்ல மனித உடல் ஆரோக்கியத்திற்கான அவருடைய வழி காட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகிற துறைகளாகும். அந்தப் பாலைவனச் செல்வர் விவசாயத்தையும் விட்டு வைக்கவில்லை.

சிலுவைக் கோட்பாடு – ஓர் அலசல்!

கிறிஸ்தவம் அல்லது சிலுவைக் கோட்பாடு – ஓர் அலசல்! கேள்வி: //குர்ரான் சொல்வதுபோல் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்த உண்மையை ஏன் இயேசு (அல்லது இறைவன்) சீடர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை? அவர் தெரிவிக்காமல் போனதால்தானே இந்த சீஷர்கள் எல்லோரும் தவறான கருத்துகொண்டு பிரச்சாரம் செய்து கிறிஸ்த்தவம் என்றொரு மதத்தை உருவாக்கி இன்று உலகில் முதல் பெரிய மதமாக நிற்கிறது. இங்கு கிறிஸ்த்தவம் உருவாக காரணம் யார்? இயேசுவின் சீடர்களா அல்லது இயேசுவை பின்பற்றிய சீடர்களுக்கு கூட உண்மையை சொல்லாமல் அவரை எடுத்துக்கொண்ட இறைவனின் பொறுப்பற்ற செயலா?// விளக்கம்: கிறிஸ்தவம் என்ற மதத்தை மனிதர்கள் உருவாக்க இறைவன் காரணமானவனா? என்பதை ஆராயும் முன் இறைவனைப் பற்றியும் மதங்களைப் பற்றியும் ஓர் அடிப்படையை நாம் அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.

யார் அந்த முஹம்மது (ஸல்) அவர்கள்

Image
யார் அந்த முஹம்மது (ஸல்) அவர்கள்

எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்

Image
எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்

நபி(ஸல்)அவர்களை நேசிப்போம்

Image
நபி(ஸல்)அவர்களை நேசிப்போம்

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

முதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் மற்ற உயிரினங்களை விட மனிதனுக்கு இறைவன் அறிவை அதிகமாகக் கொடுத்திருந்தாலும் அவனை நல்வழிப்படுத்த பிறரின் வாயிலாக உபதேசங்களும் விதிமுறைகளும் அவனுக்குத் தேவைப்படுகின்றது. எனவே தான் எல்லா நாடுகளிலும் குடிமக்கள் பேண வேண்டிய ஒழுக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அவ்வப்போது அந்நாடு அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. மனிதனுடைய அறிவை நம்பி அந்நாடு அவற்றை வ¬யுறுத்தாமல் விட்டு விட்டால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விடும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. அவனுடைய அறிவு நல்லதையும் தீயதையும் தனித்தனியே பிரித்துக் காட்டினாலும் அவன் தன் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு, தவறான வழியில் செல்பவனாக இருக்கிறான். இவற்றைக் கவனத்தில் கொண்டு தான் இஸ்லாமிய மார்க்கம் ஆன்மீக ரீதியில் பிள்ளைகள் பெற்றோர்களிடத்திலும் பெற்றோர்கள் பிள்ளைகளிடத்திலும் கணவன் மனைவியிடத்திலும் மனைவி கணவனிடத்திலும் நடந்து கொள்ள வேண்டிய ஒழுக்கங்களை அவனுக்குப் பட்டிய¬ட்டுக் கூறுகிறது. இந்த அடிப்படையில் முதியவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை இஸ்லாம் நமக்குத் தெளிவாக விளக்குகிறது.

இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள்.

Image
சாமியார்கள்-இந்து தீவிரவாதி என்று அழைக்காதீர்கள். வெக்கமாயிருக்கு விக்கவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் …. தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் திருகு வலியும். கடந்த சில நாட்களாக நாட்டு மக்களிடையே ஆச்சரியத்துடனும் அதிகமாகவும் புழங்கி வரும் வார்த்தைதான் இந்து தீவிரவாதம். இதுவரை திரைமறைவில் இந்துத் தீவிரவாதிகளால் சாமர்த்தியமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளைக் குறித்து மக்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கும் அந்தப் பெருமைக்குரியவர், சாத்வி என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸின் பெண்கள் அமைப்பான துர்கா வாகினியில் பயிற்சி பெற்ற பெண் சாமியார். நாட்டின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து சேரும்முன்பே, வடநாட்டு இந்துத் தீவிரவாதிகளான அத்வானி, ராஜ்நாத் சிங், மோடிகள் முதல் தமிழக இராம கோபாலன் வரை "இஸ்லாமிய தீவிரவாதம்" என்று கூச்சல் போட்டு, ஒட்டுமொத்த மக்களையும் விசாரணை அமைப்பையும் திசை திருப்பிக் கொண்டிருந்தனர். அவர்களது தலையில் பேரிடியாக இறங்கியதுதான் மாலேகோன் குண்டு வெடிப்பு தொடர் விசாரணைகள்.

பேய் பிசாசுகளைத் துரத்தியடித்த டிஎன்டிஜே!

பேய் பிசாசுகளைத் துரத்தியடித்த டிஎன்டிஜே! பேய் நடமாட்டத்தால் மக்கள் பீதி!”, “பிசாசு நடமாட்டத்தால் மக்கள் கலக்கம்” என்று அடிக்கடி பரபரப்பு செய்தி வெளியிட்டு, தங்களது விற்பனையை சூடுபிடிக்க வைத்து பத்திரிக்கைகள் காசு பார்க்கின்றன. அந்த வகையில் கடந்த 12.07.2012 அன்று தினமலர் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள ஆத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் பெண் பேய் ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அது மொபைல் போனில் படம் எடுக்கப்பட்டதாகவும் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டிருந்தது தினமலர். இதே செய்தியை சன் டிவியும் ஒளிபரப்பியது இந்தச் செய்தி மாநிலத் தலைமையகத்திற்கு எட்டியவுடன் சம்பந்தப்பட்ட இடத்தில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று மாநிலத்தலைமையகம் வாயிலாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. உடனடியாக களமிறங்கிய திருவள்ளூர் மாவட்டம் :

சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா!

சத்திய மார்க்கத்தைத் தேடிய பயணத்தில் வென்ற டாக்டர் மதுமிதா மிஷ்ரா! ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக - பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார். ஆம், நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாசிப்பதும் இணையத்தில் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதும் டாக்டர் மதுமிதாவின் வழக்கம். பணியின் காரணமாக, தன்னுடைய சகோதரருடன் நொய்டா நகரில் இவரும் மருத்துவரான கணவர் கொல்கத்தாவிலும் சிறிது காலம் பிரிந்து வசிக்க வேண்டிய சூழலில் ஒரு நாள் மிக யதார்த்தமாக இணையத் தளங்களை உலா வந்து கொண்டிருந்த டாக்டர் மதுமிதாவின் கண்ணில் ஆங்கில மொழியாக

பித்அத் ஒரு ஆய்வு!!

பித்அத் ஒரு ஆய்வு!! அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாகி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்ககூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் அவர்களுக்கிடயில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (அல் குர்ஆன் 42:21) (நபியே நீர்கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியுலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 48:16) இந்த இரண்டு குர்ஆன் வசனங்களும், அல்லாஹ்வுக்கே மார்க்கம் சொந்தம் அவனே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான். ஒன்றை மார்க்கமாக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது. அதற்கு மாற்றமாக, மனிதர்களால் மார்க்கமாக்கப்பட்டதை. அதாவது புதியவை ஒன்றை ஏற்படுத்தி பித்அத்துக்களை எடுத்து நடப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறி செயல்படுகிறார்கள்.

போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்!

போலி ஹதீஸ்களும், சமூகத்தில் அதன் தாக்கங்களும்! குர்ஆன், ஹதீஸ் என்ற அடிப்படையான இரண்டு மூலாதாரங்களின் மீதுதான் இஸ்லாம் எனும் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. குர்ஆனைப் பொறுத்தவரையில் அது அல்லாஹ்வின் ‘கலாம்’ பேச்சு என்பதால் அதில் யாரும் எந்தக் குளறுபடிகளும் செய்துவிட முடியாது. 1400 வருடங்களாக எத்தகைய இடைச்செருகல் களுக்கோ, கூட்டல் குறைத்தல்களுக்கோ உள்ளாகாமல் அட்சரம் பிசகாமல் அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது.  ஆனால், இரண்டாவது மூலாதாரமான ஹதீஸைப் பொறுத்தவரை அதன் கருத்து வஹி மூலம் பெறப்பட்டதாயினும் வாசக அமைப்பு நபிகளாருடையதாகும். நபி(ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின்னர் ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் சில பலவீனங்களினால் ஹதீஸின் சில வாசகங்கள் விடுபட்டு, அல்லது மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அறிஞர்களால் ஒப்பீட்டாய்வின் மூலம் திருத்தப்பட்டுமுள்ளன. அதேவேளை இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தை அறியாத அறிவிலிகளும் சுயநலவாதிகளும் ஹதீஸ் என்ற பெயரில் போலியான செய்திகளை இட்டுக்கட்டி நபியவர்களின் பெயரில் பரப்பினர்.

இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை இனிதாக!

இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை இனிதாக! உலக சனத்தொகையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர் அதேபோல் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளும், கொடுமைகளும் திகரித்தே காணப்படுகின்றது. இவ்வாறு பெண்களுக்கு இழைக்கப்படுகின்றஅநீதிகளின், கொடுமைகளின் பின்னணியில் பெரும்பாலும் இன்னொரு பெண் இருப்பதே ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். அல்லது தாங்களே தங்களுக்கு இழைக்கப்படும்அநீதிகள், கொடுமைகளுக்கு காரணமாகவும்அமைகின்றனர். இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கியுள்ளது. இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனில் பெண்கள் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் கூட இருக்கின்றதென்றால் இஸ்லாம் பெண்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளது என்பதை உணரலாம். இன்று பெண் உரிமைக்காக வாய் கிழியப் பேசும் பெண்களின் புரட்சி பேச்சளவிலேயே உள்ளது. ஆனால், இஸ்லாம் செயல் வடிவில் காட்டவேண்டிய அத்தனை திட்டங்களையும் சீராக வகுத்துத்தந்துள்ளது. பெண்களுக்கு கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. ( அல்குர்ஆன் 2:228)

திக்குமுக்காட வைத்த திருப்பூர் விவாதம்-

Image
திருப்பூர் விவாதம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருப்பூர் மாவட்டம் – காலேஜ் ரோடு கிளையில் ‎உள்ள டிஎன்டிஜே உறுப்பினர் ஒருவரிடத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிறித்தவ ‎சகோதரர் ஆனந்தன் என்பவர், “இயேசுவைத்தான் நாம் ரட்சகராக ஏற்றுக் கொள்ள ‎வேண்டும். அவர்தான் நமது பாவங்களைப் போக்க தன்னையே ஒப்புக்கொடுத்தார்” ‎என்று கூறி தங்களது மதத்திற்கு ஆள் பிடிக்கும் வேலையைச் செய்துள்ளார். இந்த ‎செய்தியை மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவிக்க, தலைமையில் நடைபெற்ற ஒரு மாதப் ‎பிரச்சாரகர் பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுத்த முஹம்மது யூசுப் அவர்கள் திருப்பூர் ‎மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கிறித்தவ போதகருடன் விவாதம் செய்ய அந்தப் ‎பகுதிக்குச் சென்று ஆனந்தன் என்ற அந்த கிறித்தவ சகோதரரிடத்தில் சில ‎கேள்விகளைக் கேட்டுள்ளார்.‎ இயேசு இரட்சிக்க வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட கிறித்தவ போதகர் :‎ ‎ பேச்சைத்துவக்கியதுமே நமது தரப்பில் ஒரு கேள்வி அவரை நோக்கி ‎கேட்கப்பட்டுள்ளது. ஒரு கம்பெனியின் முதலாளி ஒரு நபரை கம்ப்யூட்டர் ‎ஆபரேட்டராக வேலைக்குச் சேர்த்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலையை நீ செய்ய ‎வேண்டும் என்று அவரிடத்தில் பொறுப்

போராட்டங்களை முறைபடுத்துவோம் –உணர்வலைகள்.

போராட்டங்களை முறைபடுத்துவோம்  – உணர்வலைகள்.     அரசின் கவனத்தை ஈர்த்து தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் போராட்டங்கள் நடத்த ஜனநாயக நாடுகளில் அனுமதி அளிக்கப்படுகிறது. அதிகமான போராட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்தபோதும் ,  சில போராட்டங்கள் வன்முறையிலும் தடியடியிலும் முடிந்து வருவதை நாம் காண்கிறோம்.     சமீப காலமாக முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களிலும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நிகழ்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களுக்கே பாதகமாக அமைந்து விடுகின்றது. மேலும் முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றியும் இஸ்லாம் பற்றியும் மற்றவர்கள் தவறாக எண்ணும் நிலை ஏற்பட்டு வருகிறது. எந்தக் கோரிக்கைக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டனவோ அந்தக் கோரிக்கையும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகிறது.

தினமணியின் திமிர் வாதம்

  தினமணி நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் விதமாக கடந்த மாதம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தது. அந்தத் தலையங்கத்தில் .   ·  முஸ்லிம்கள் பெருகிக்கொண்டே போகின்றார்கள்.    ·  பாகிஸ்தானிலும் ,  பங்களாதேஷிலும் இந்துக்கள் மிரட்டப்பட்டு மதமாற்றம்செய்யப்படுகின்றார்கள்.   ·   இந்துக்கள் அங்கு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றார்கள்    ·   அதே நேரத்தில் முஸ்லிம்கள் இந்தியாவில் சுகபோகமாக இருக்கின்றார்கள்    ·   இந்துக்களை விட முஸ்லிம் களுக்கு கூடுதலான சலுகைகள் இங்கு            வழங்கப்படுகின்றன என்று மேற்கண்டவாறு இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய்யையும் ,  புரட்டையும் அவிழ்த்துவிட்டிருந்தது.

கிழிந்து தொங்கியது இரட்டை நாக்கு மக்கா பள்ளி பேஷ் இமாமின் முகம்

” முஸ்லிம்களின் போராட்டம் போதும் ”  –   கிழிந்து தொங்கியது இரட்டை நாக்கு மக்கா பள்ளி பேஷ் இமாமின் முகம் “ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை   இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான போராட்டங்கள் போதும் ” என்று சென்னை மக்கா பள்ளியின் பேஷ் இமாம் சம்சுதீன் காசிமி வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நபிகள் நாயகத்தையும் ,  முஸ்லிம்களையும் கொச்சைப் படுத்தி திரைப்படம் எடுத்த யூதன் சாம் பெசிலி ,  அந்தப் படத்தை  “ யுடியூப் ”  மூலம் விளம்பரம் செய்த கிறிஸ்தவ பிஷப் டெர்ரி ஜோன்ஸ் ,  இந்த படத்திற்கு பரிபூரண ஆசி வழங்கி , அனைத்து உதவிகளையும் செய்த அமெரிக்க அரசு ஆகியவற்றிற்கு எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் போராடி வருகிறார்கள்.       இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. அதே சமயம் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் தலைமை ஏற்கும் வகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன் முஸ்லிம்களின் போராட்டம் நடந்து ,  அமெரிக்க துணை தூதரகத்திற்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

பைபிளின் போதனையை நடைமுறைபடுத்திக் காட்டிய பாதிரியார்கள்!

பைபிளின் போதனையை நடைமுறைபடுத்திக் காட்டிய பாதிரியார்கள்!  –  குழந்தைகளிடம் சிறப்பு(?) ஜெபம் செய்து சாதனை!!      தற்போது அனைவராலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பைபிள் பதிப்பு  “ கிங் ஜேம்ஸ் வெர்சன் ”  என்பது நாம் அனைவரும் அறிந்ததே!        “ கிங் ஜேம்ஸ் வெர்சன் ”  என்ற இந்த வெளியீடு இங்கிலாந்தை ஆண்ட "கிங் ஜேம்ஸ்" என்ற மன்னரால்தான் முதன் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது.     கிங் ஜேம்ஸ் என்ற அந்த மன்னர் ஒரு சிறுவனோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டார். அவர் பிடிபட்ட போது தான் செய்தது கிறித்தவ வேதத்தின் அடிப்படையில் சரியான செயல்தான் என்று கூறினார்.    அதற்கு அவர் கூறிய ஆதாரத்தைக் கேட்டவர்கள் அவரைக் குறை சொல்ல முடியாத அளவுக்கு அவரது ஆதாரம் பலமானதாக இருந்தது.    ஆம்!  “ இயேசு செய்த ஒரு செயலை ,  தான் செய்தது தவறா ?  இயேசு அவரது சீடர் ஜான் என்ற சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார் என்பதை பைபிளைப் படிக்கும் அனைவரும் அறிந்து கொள்ளலாம். அவர் செய்த அந்தச் செயலை நான் செய்தால் அது எப்படி தவறாகும் ?”  என்பதுதான் கிங் ஜேம்ஸ் எழுப்பிய ஆழமான ,  அழுத்தமான கேள்

இன்னோசன்ஸ் ஆஃப் கிறிஸ்டியன்ஸ் - புதிய திரைப்படம்(?)

பெற்ற தந்தையோடு குடும்பம் நடத்திய கிறித்தவப் பெண்ணின் அப்பாவித்தனம்!       இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் (முஸ்லிம்களின் அப்பாவித்தனம்)  என்ற பெயரில் முஸ்லிம்களின் மீது பொய்யையும் ,  புரட்டையும் சொல்லி படம் எடுத்தவர்களின் உண்மை முகத்தை தோலுரித்துக்காட்டும் விதமாக ,  அவர்களது அப்பாவித்தனத்தை படம்பிடித்துக்காட்டும் விதமாக தற்போது பல சம்பவங்களை வல்ல இறைவன் நிகழ்த்திக் காட்டி வருகின்றான். அப்படி சென்ற வாரம் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை உங்களுக்கு இங்கே தருகின்றோம். இதை  புதிய திரைப்படமாக கிறித்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் தயாரித்து வெளியிட்டால் அவருக்கு அமோக வரவேற்பு நிச்சயம்.  கிறித்தவப் பெண்ணின் சோகக் கதை:

கூடங்குளம் அணுமின் திட்டம் தேவையா?

கூடங்குளம் அணு  உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல்  சரியான நடவடிக்கையா?  தாக்குதல் சரியா என்ற பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் கூடங்குளம் அணு உலை குறித்துநாம் முன்னரே (குரல் 16:12) தெளிவுபடுத்தியதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.     கூடங்குளம் அணுமின்  திட்டம் தேவையா?  கூடங்குளம் அணுமின்  நிலையத்தை நிறுத்தச் சொல்லி உள்ளூர் மக்கள் போராட்டம்  நாளுக்கு நாள் தீவிரம் அடைகிறது. சில அரசியல் கட்சிகள் ஆதரவு  தருகிறார்கள்., அணுமின் நிலையத்தால் மக்களுக்கு நன்மையா தீமையா விளக்கவும் ?  கூடங்குளம் அணுமின்  நிலையம் பற்றி தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு என்ன?

இறைத்தூதர் அவர்களின் இறுதிப் பேருரை!

இறைத்தூதர் அவர்களின் இறுதிப் பேருரை! இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.  இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து ‘மினா’விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக

***தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்***

***தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்*** குர்ஆன், ஹதீஸ் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். வீண் பகட்டை விரும்பாது எளிமையோடும், அடக்கத்தோடும் செயல்படும் மாநில நிர்வாகத்தைப் பெற்ற தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்க ிறோம். கொண்ட கொள்கையில் தெளிவு பெற்றதோடு மட்டுமில்லாமல் அந்தக் கொள்கையை விமர்சிக்கும் எவரிடத்தும் விவாதித்து, உண்மையை நிரூபிக்கும் உறுதி கொண்ட தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். மார்க்கப் பணிகள் மட்டுமே இஸ்லாம் போதிக்கும் அடிப்படை என்றில்லாமல், மனிதர்களுக்கும் சேவை செய்வதும் இறை பணியே என்பதை முஸ்லிம் சமுதாயத்தில் விதைத்து, அதை செயல்வடிவிலும் வீரியத்துடன் செய்து கொண்டிருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

பழனி பாபாவும் விமான பனிப் பெண்ணும்.

பழனி பாபாவும் விமான பனிப் பெண்ணும். ஆகாயத்திலே நடந்த உண்மை. சஹித் பழனி பாபா அவர்கள் Gulf Air மூலமாக இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு பயணம் செய்யும் போது முதல் வகுப்பு இருக்கையில் நடந்த உரையாடல்கள் விமானப் பனி பொன்னுவுடன். பைபிளை எடுத்து வைத்துப் படிக்கிறேன்.நான் பெரும்பாலும் அரபி உடைகளையே விரும்பி அணிவேன்.மேலொட்டமாய்ப் பார்த்தாலும் கிறிஸ்துவ தோற்றம்.தலையை மூடியிருப்பதைக் கண்டால் முஸ்லிமின் வடிவம்.20 நிமிடம் கழித்து பயணிகள் அதிகமில்லாததால் பணிப்பெண் வந்து பணிவிடைகளை முடித்து விட்டு என் தேவைகளுக்காக நின்றவர் நீண்ட நேரம் குழம்புகிறார். பின்னர் மெதுவாய் fபாதர் நீங்கள் கிறிஸ்துவரா?முஸ்லிமா? என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்கிறார்.

முஸ்லிம்களுக்கு ஏன் சகிப்புத்தன்மை இல்லை................??????

முஸ்லிம்களுக்கு ஏன் சகிப்புத்தன்மை இல்லை................????? ?  கோபாலன், பொள்ளாச்சி கேள்வி : கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக, இன்னொஸென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தைத் தடை செய்யக் கோருவது நியாயமா ? முஸ்லிம்களுக்கு ஏன் சகிப்புத்தன்மை இல்லை.....??? பதில் : கருத்துச் சுதந்திரம் எதுவரை? யாருக்கு..? இந்த விஷயத்தில் இந்தியர்களான நாம் இரட்டை நிலைப்பாட்டைக் கைக்கொள்கிறோம். இந்தியாவில் சமீப காலமாக , ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகக் கீழ்த்தரமாக் எதையும் செய்யலாம் எதையும் எழுதலாம் பேசலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை இணையதள வாசகர்கள் நன்கறிவர். தமக்கு எதிராகப் பரப்பப் படும் கீழ்த்தரமான அவதூறுகளுக்கு அவர்கள் மறுப்புச் சொன்னால் "கருத்துச் சுதந்திரம் போச்சே" எனக் கூப்பாடு போடுகிறார்கள்.

உழைத்து வாழ வேண்டும்.

உழைத்து வாழ வேண்டும். இந்த உலகில் நாம் வாழ்கின்ற காலத்தில் கண்டிப்பாக உழைத்து வாழ வேண்டுமே தவிர எந்த ஒரு நேரத்திலும் பிறர் உழைப்பில் வாழ்வதற்கு எத்தனித்துவிடக் கூடாது.இது தான் இஸ்லாம் மனித சமூகத்திற்கு எடுத்துக் கூறும் மிகப் பெரிய கவுரவ வாழ்க்கையாகும். ஏன் என்றால் அல்லாஹ் தனது மார்கத்தை இந்த உலகில் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக பலரை தனது தூதர்களாக அனுப்பினான்.அந்த அனைவரையும் நாம் நபிமார்கள் என்று சொல்கிறோம்.இந்த நபிமார்கள் அனைவருமே இந்த உலகில் வாழ்கின்ற காலத்தில் தங்கள் கரத்தால் உழைத்து தாமும் தமது குடும்பத்தினரும் உயிர் வாழ்ந்துள்ளார்கள்.இவர்களில் ஒருவர் கூட தான் நபி என்ற அந்தஸ்தை மக்களிடம் முன்வைத்து தனக்கு வாழ்வாதார உதவிகள் செய்யும் படி கேட்கவில்லை.கேட்கவும் கூடாது. ஆனால் இன்றைக்கு நமக்கு மத்தியில் இருக்கக் கூடிய எத்தனையோ பேர்கள் தங்கள் கரத்தால் உழைத்து உண்பதற்கு முடியுமாக இருந்தும் உழைத்து சாப்பிடாமல் அடுத்தவர்களிடம் கையேந்திக் கேட்கிறார்கள். இது அவர்களின் மானம்,மரியாதையை இழக்கக் கூடிய செயல் என்பது அவர்களுக்குத் தெரிந்தாலும்.அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. இஸ்லாம

உலகமயமாக்கலினால் உலகுக்கு நன்மையா?

Image
உலகமயமாக்கலினால் உலகுக்கு நன்மையா? உலகில் உள்ள ஏழை நாடுகளின் பஞ்சத்தைப் போக்கி அவைகளை பணக்கார நாடுகளாக மாற்ற வேண்டும் என்பதற்காக பணக்கார நாடுகளால் ஏற்படுத்தப் பட்ட ஒரு போலித் தத்துவம் தான் உலகமயமாக்கல் தத்துவம். அதாவது பணக்கார நாடுகளின் பண்ணாட்டு நிருவனங்கள் ஏழை நாடுகளில் சென்று முதலிடுவதும்,ஏழை நாட்டில் வாழும் மக்கள் பணக்கார நாடுகளில் குடியேறுவதும் தான் இவர்களின் தத்துவத்தின் முக்கிய பகுதி. இந்தத் தத்துவம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம். உலகில் உள்ள பணக்கார நாடுகளினால் 21ம் நூற்றாண்டின் சக்திவாய்ந்த பொருளாதாரக் கொள்கையாக பிரகடனப் படுத்தப் பட்ட இந்த உலகமயமாக்கள் இன்று வரை ஏழ்மையை போக்கும் சக்தியாக மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகிறது.

இஸ்லாத்தை இழுக்காக்கும் இஸ்மாயில் சலபி

Image
இஸ்லாத்தை இழுக்காக்கும் இஸ்மாயில் சலபி அசத்தியவாதிகளை அடையாளம் காட்டும் சூனிய பத்வா. என்ற தலைப்பில் பலவேஷம் டாட் காம் தளத்தில் இஸ்மாயீல் ஸலபி எழுதிய ஆக்கத்திற்கு மறுப்பாக இந்த ஆக்கம் வெளியிடப்படுகின்றது. இறைவனின் அருளால் இன்று இலங்கையில் தூய தவ்ஹீத் போதிக்கப்பட்டு வருகிறது. நாங்கள்தான் தவ்ஹீத் முன்னோடிகள் என்று தங்களுக்குத்தாங்களே அக்மார்க முத்திரை குத்திக்கொள்ளும் ஸலபி வகையறாக்கள் இன்று போலி தவ்ஹீத் பேசுவதுடன் நின்றுவிடாமல் சூனியம் என்றொன்றை நம்பி ஷிர்க்கில் விழுந்து சீரழிந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பதை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகிறோம். ஆனால் இவர்களோ சூனியம் என்பது ஷிர்க் இல்லை என்ற அசத்தியக் கருத்தை நிரூபிக்க படாத பாடுபட்டு வருகின்றனர். இவர்களது வாதங்களுக்கு மரண அடி கொடுத்ததும் கல்லறைக்குள் சென்று குறிப்பிட்ட காலம் வரை இருட்டறை வாசம் செய்துவிட்டு மீண்டும் அதே அழுகலுடன் வந்து புதிதாக உளறிக்கொட்ட ஆரம்பித்துவிடுகின்றனர். இதற்கு முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் இஸ்மாயில் சலபி என்பவர். இந்த சலபி சூனியத்திற்கு விளக்கம் சொல்கிறேன் என்று புகுந்து உளறிக்கொட

ஸைபுத்தீன் பரேலவி

ஸைபுத்தீன்   பரேலவி தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வேரூன்றுவதற்கு முன்னால் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் இரு சாரார்களாக இருந்தனர். ஒரு சாரார் மத்ஹபு என்ற வட்டத்திற்குள் இருந்து கொண்டு சமாதி வழிபாட்டைக் கண்டிக்கின்ற சாரார்! இந்த சாரார் தேவ்பந்த் மஸ்லக் - அதாவது தேவ்பந்த் தாருல் உலூம் அரபிக் கல்லூரியின் கொள்கைகளை ,  நடைமுறைகளைப் பின்பற்றுவதாக அறியப்பட்டனர் ;  அடையாளப்படுத்தப்பட்டனர். மற்றொரு சாரார் ,  சமாதி வழிபாட்டை ஆதரித்து அதில் சாஷ்டாங்கம் செய்பவர்கள். இந்த சாரார் தர்ஹா தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆதரிப்பர். கப்ருக்கு சந்தனம் பூசுதல் ,  அதற்குப் போர்வை போர்த்துதல் ,  அதன் அருகில் ஊதுபத்தி கொளுத்துதல் ,  சாம்பிராணி போடுதல் போன்ற தீமைகள் அனைத்தையும் மார்க்கம் என்று மூர்க்கத்தனமாக வாதிடுவர். மல்விது ஓதுதல் ,  அந்த மவ்லிதுக் கதாபாத்திரங்களான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி , நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா ,  அஜ்மீர் காஜா ஆகிய அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற படு மோசமான ,  இஸ்லாத்திற்கு எதிரான ,  பரேலவிச சந்நியாச சாமியார் கொள்கைகளைக் கொண்டவர்கள்.

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா?

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா ?    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாத முஸ்லிம்கள் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று தான். ஒருவர் இறை நேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் நபிகள் நாயகத்தைக் கனவில் காண்பது தான் எனவும் மார்க்க அறிவு குறைந்த சிலர் நினைக்கின்றனர். இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றுப் பேர்வழிகள் தாங்கள் கனவில் நபிகள் நாயகத்தைக் கண்டதாகப் புளுகி மக்களிடம் இறை நேசர் என்ற பட்டத்தைப் பெற்று விடுகின்றனர். குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரான கருத்துக்களுடன் இயற்றப்பட்ட புர்தா '  என்ற பாடலை பூசிரி என்ற புலவன் எழுதினான். அவன் தனது கவிதையில் ஒரு இடத்தில் தடுமாறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனுடைய கனவில் தோன்றி அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தார்கள் என்று புளுகி புர்தா '  என்ற கட்டுக் கதையைப் புனிதமாக்கியுள்ளதைக் காண்கிறோம். மார்க்க அறிவு சிறிதும் இல்லாத பூசிரி என்ற புலவனை இறை நேசராகச் சித்தரிப்பதையும் காண்கிறோம்.

அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை

அஜ்வா   ஹதீஸின்   உண்மை   நிலை குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது நமது நிலைபாடு. இந்த நிலைபாட்டுக்குக் குர்ஆனிலிருந்தும் ,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்களிலிருந்தும் ஆதாரங்களை வெளிப்படையாக பல சந்தர்ப்பங்களில் மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம். இதே அடிப்படையில் நபித்தோழர்களும் ,  இமாம்களும் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுப்பதாக நம்மீது குற்றம் சாட்டுபவர்கள் இன்று வரை இதற்கு எந்தப் பதிலையும் கூறவில்லை. குர்ஆனுக்கு முரண்படும் குறிப்பிட்ட சில ஹதீஸ்களுக்கு மாத்திரம் பதில் என்ற பெயரில் உளறுகிறார்களே தவிர குர்ஆனுக்கு முரணாக அமைந்துள்ள செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற அடிப்படை விதியை மறுக்கும் விதமாக எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த அடிப்படைக்குப் பல சான்றுகளை நாம் தெளிவுபடுத்தி பல வருடங்கள் ஆகியும் இன்றுவரை இதைப் பற்றி இவர்கள் வாய்கூட திறக்கவில்லை.