Posts

Showing posts from October, 2012

ஏகத்துவ கொள்கை ஓர் விளக்கம்!:

கொள்கை விளக்கம்! வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதியாக நம்புவதும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமாவார் என்பதை உறுதியாக நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும்: "அல்லாஹ்வை வணங்குங்கள் அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! {அல்குர்ஆன் 4:36} "ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. {அல்குர்ஆன் 51:56} இணை கற்பித்தல் கூடாது: அகில உலகையும் படைத்துää காத்து பராமரிக்கும் ஒரே ஒரு இறைவன் அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள் ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கும் இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த ஒன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் ஆகும்.

பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!

பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்! மனிதர்களில் யாரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் நபிமார்களும் அடங்குவார்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இரண்டு வகையான தவறுகள் தவறுகளை செய்பவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றார்கள். சிலர் தவறுகள் பகிரங்கமாக செய்வார்கள். இன்னும் சிலர், சில தவறுகளை யாருக்கும் தெரியாமல், மறைமுகமாக செய்வார்கள். தவறுகளை காணும்போது நாம் செய்ய வேண்டியவை என்ன? வெளிப்படையாக செய்யப்படும் தவறுகளை நாம் விமர்சனம் செய்யலாம். அதைக்கண்டிக்கலாம். அதை பகிரங்கப்படுத்தலாம்; அவர்களைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்கள் இத்தவறுகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்.

பேய் பிசாசு உண்டா?

பேய் பிசாசு உண்டா? ! பேய் பிசாசைப் பற்றி முஸ்லிம்களிடம் இருவிதமான நம்பிக்கைகள் உள்ளன. இறந்தவர்கள் ஆவியாக மாறி மீண்டும் உலகிற்கு வந்து, உயிருள்ளவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். இந்த ஆவிகள் தான் பேய், பிசாசுகள் என்பது முதல் நம்பிக்கை. . இறந்தவர்களின் ஆவி திரும்ப உலகுக்கு வர முடியாது, ஆனால் ஷைத்தான் மனிதனிடம் மேலாடுவான். அது தான் பேய் என்பது இரண்டாவது நம்பிக்கை. இந்த இரண்டு நம்பிக்கைகளுமே குர்ஆன் ஹதீசுக்கு முற்றிலும் முரணானவையாகும். பேய் பிசாசுகள் இருக்கின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் குர்ஆன் ஹதீஸை மறுத்தவராவார். உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:42)

ஆயுதமின்றி மட்டும் இருக்காதே” என்பது பைபிளின் கட்டளை

நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே” என்று பைபிள் கட்டளையிடுகிறது. அன்பை, அகிம்சையையே பைபிள் போதிக்கிறது என்று மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்கள், “பல தெய்வ வழிபாடு உடையவர்கள் எல்லாம் கொல்லப்பட வேண்டும்” என்ற பைபிளின் உபதேசம் குறித்து மூச்சு விடுவதில்லை. தங்கள் மதப் பிரச்சாரத்தில் அத்தகைய வசனங்களை உட்படுத்துவதும் இல்லை. நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூர ியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். (உபாகமம் – 17: 2-5)

அல்லாஹ்வை நினைப்போம் அர்ஷின் நிழலில் நிற்போம்

Image
அல்லாஹ்வை நினைப்போம் அர்ஷின் நிழலில் நிற்போம் இன்று நாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் வீதியில் நடந்து சென்றாலும் டீக்கடையில் சென்று டீ குடித்தாலும் வாகனத்தில் ஏறினாலும் எங்கும் இசை மழை! ஆபாசமான பாடல் வரிகள் நம்முடைய காதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவை செவி வழியாகச் சென்று உள்ளத்தில் பதிவாகி நம்முடைய நாவுகள் அந்த வரிகளை முனுமுனுக்க ஆரம்பிக்கின்றன. நாம் தனிமையில் இருக்கும் போது நம்மை அறியாமல் இந்தப் பாடல்கள் நம்முடைய நாவுகளில் சரளமாக நடமாடுகின்றன. இது போன்ற கட்டங்களில் நாம் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போல் சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 7:200, 201)

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்.

Image
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம். அல் குர்ஆன் வழியில் அறிவியல்………. அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனையும், இன்னும் ஏராளமான ஜீவராசிகளையும் படைத்து பரவ விட்டுள்ளான். இவ்வுயிரினங்கள் தங்கள் முழு ஆற்றலை பயன்படுத்தி பயனடைவதற்காக ஐம்புலன்களையும் கொடுத்துள்ளான். தன் படைப்பினங்களில் சிறந்ததாக மனிதனை படைத்து அவனுக்கு ஆறாவது புலன் என்னும் பகுத்தறிவு பண்பையும் கொடுத்துள்ளான். பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல ்,முகர்தல்,தொடுதல் என்ற ஐந்து புலன்களிலும் எது மனிதனுக்கு மிக அவசியமானது என்ற கேள்வியை எவரிடம் கேட்டாலும், குறிப்பாக குருடராக இருப்பதா? அல்லது செவிடராக இருப்பதா? என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச்சொன்னால், அனைவரும் பார்வையுடையவராக இருக்கவே விரும்புவர். குருட்டுத்தன்மையை எவரும் விரும்பார். செவிடனானலும் பரவாயில்லை என்றே கூறுவார்கள். அமெரிக்க பிரௌன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் SETH HOROWITZ அவர்கள் எழுதிய “THE UNIVERSAL SENSE: HOW HEARING SHAPE THE MIND” என்ற ஆய்வு நூல் கடந்த மாதம் வெளியாகி அறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் என்ன கூறுகிறார் என்றால் மனிதனின் பார்வை புலனை விட ச

சர்க்கரை நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு ???

சர்க்கரை நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு ??? மனிதன், காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து, உடையணிந்து உணவருந்தி, சம்பாதிக்கச் செல்கிறான். வேலை, வீடு, மனைவி, மக்கள், எதிர்காலம், தொழில் என்று அன்பான வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறான். அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டு, சந்தோஷத்தை கெடுக்க வந்த நோய் தான் சர்க்கரை நோய். சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்: * சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப்படாமல் இருந்திருந்ததா? * சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா? * சில ஆண்டுகளாக இருக்கிறது என்றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும். * பல ஆண்டுகளாக இருந்தால் இதனால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும். முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் தாக்கம், செயலிழப்புகளைப் பார்க்க முடியும்.

ஷைத்தான் பெயரால் பித்தலாட்டங்கள்

ஷைத்தான் பெயரால் பித்தலாட்டங்கள் மனிதனுக்கு ஷைத்தானால் சில இடைஞ்சல்கள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.  "ஆதமின் மக்கüல் பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவருடைய மகனையும் தவிர''’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹ‚ரைரா (ரலி) நூல்: புகாரி 3431 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்-) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்- முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்- முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, "இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்'' என்று அவர் அதற்கு முன் நினைத்திராத

மாநபி வழியும் மத்ஹபுகளும்

மாநபி வழியும்  மத்ஹபுகளும் நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் இந்தப் பள்ளியில் தொழுவதற்கு அனுமதியில்லை. இது பள்ளிவாசல்களில் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகைகளில் எழுதப்பட்டிருக்கும் தடையுத்தரவு. இந்தத் தடை உத்தரவைப் படிப்பவர்களுக்கு, "மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் ஒரு பாவி' என்ற தோற்றம் ஏற்படும். அதனால் தான் மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்களுக்கு அடி உதை விழுகின்றது. காவல்துறையில் புகார் பதிவாகின்றது. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படுகின்றன.  ஏன் இந்தத் தாக்குதல்கள்? மக்கள் ஏன் இந்த மத்ஹபுகளை வெறித்தனமாகப் பின்பற்றுகிறார்கள்? இந்த மத்ஹபுகளில் மண்டிக் கிடக்கின்ற, இஸ்லாத்தின் அடிப்படைக்கு வேட்டு வைக்கும் விஷக் கருத்துக்கள் மக்களிடம் மறைக்கப்படுவதால் தான். மக்களை வெட்கப்பட வைக்கும் ஆபாசங்களை தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆலிம்கள் மறைப்பதால் தான். மத்ஹபுகளை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால் கூட்டம் கூட்டமாக இன்று வெளியேறிக் கொண்டிருக்கும் மக்கள் யார்?

”குர்-ஆன் ஹதீசுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை” SDPI அறிவிப்பு

Image
”குர்-ஆன் ஹதீசுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை” – எஸ்.டி.பி.ஐ திட்டவட்ட அறிவிப்பு திருப்பூர் கோம்பைத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் கடந்த 24-12-10 அன்று வெள்ளிக் கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் கோவை ரஹீம் அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஆரம்ப காலத்தில் குர்ஆன் ஹதீஸைப் பேசிய பல அமைப்புகள் தற்போது தடம் புரண்டு சென்று கொண்டு இருப்பதையும், எப்படி எப்படியெல்லாம் அவர்கள் தடம் புரண்டு சென்று கொண்டு இருக்கின்றார்கள் என்ற விஷயங்களையும் ஆதாரப்பூர்வமாகப் பட்டியலிட்டார்.

பெரு வெடிப்புக் கொள்கை(Big Bang Theory)

Image
வானங்களும் பூமியும் இணைந்திருந்தன! - அறிவியல் உண்மை. 'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன எனபதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா?' 21 : 30 -குர்ஆன் இந்த பூமி எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை குர்ஆன் எவ்வளவு அழகாக கூறுகிறது பாருங்கள். இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பல விதமான கட்டுக் கதைகளைத்தான் இதற்கு முன் படித்திருக்கிறோம். திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை முகமது நபி காலத்திலேயே சொல்லி விட்டது. வானம் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை தானே பிரித்துப் பிளந்து எடுத்ததாக இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பிரபஞ்சம் எப்படி உண்டானது? அல்லது எப்படி உருவானது?

குர்ஆன் இறை வேதம் என்பது உண்மையா?

Image
குர்ஆன் இறை வேதம் என்பது உண்மையா? குர்ஆன் வாதத்தையும் விவாதத்தையும் ஊக்கமூட்டுகிறது: குர்ஆனைப் பற்றி எவரும் சந்தேகம் கொண்டு விளக்கங்கள் கேட்டாலோ அல்லது விவாதத்துக்கு அழைத்தாலோ அது போன்ற சூழ்நிலைகளை குர்ஆன் ஊக்கப்படுத்துகிறது. பல முஸ்லிம்களின் நம்பிக்கையானது குர்ஆன் வாதத்தையோ விவாதத்தையோ ஊக்கமூட்டுவதில்லை என்பது. இதனால் இவர்கள் இஸ்லாத்தை அல்லது குர்ஆனைப் பற்றி உள்ள எல்லா விதப் பேச்சுக்களில் அல்லது உரையாடல்களிலிருந்து விலகுகிறார்கள். உண்மையிலேயே குர்ஆன் வாதத்தையும் விவாதத்தையும் ஊக்கமூட்டுகிறது. 'நபியே! உம் இறைவனின் பாதையில் மக்களை விவெகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன்வழியை விட்டுத் தவறியவர்களையும் அவன் வழியைச் சார்ந்து நேர்வழிப் பெற்றவர்களையும் நன்கு அறிவான்.' 16 : 125 - குர்ஆன்

விதியை நம்பியதால் கிடைக்கும் பயன்கள்.

விதியை நம்பியதால் கிடைக்கும் பயன்கள். எதுவும் கடவுள் விருப்பப்படி நடக்கிறது என்றால் மத மோதல்களும், மற்ற தவறுகளும் கடவுளின் விருப்பப்படி தானே நடக்கிறது. நான் கடவுளை மறுத்து வாழ்வதும் கடவுளின் விருப்பப்படி தானே. ஆக அவரின் விருப்பப்படி நடக்கும் தவறுகளுக்கு அவரே தண்டனை தருவது எவ்விதத்தில் நியாயம்? - ! எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று இஸ்லாம் கூறுவதை அடிப்படையாக வைத்து இவ்வாறு கேள்வி கேட்கப்படுகிறது. விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள் வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின்படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏது மில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், கடவுள் என்பவன் பல வீனனாக, கையாலாகாதவனாகக் கருதப் படும் நிலை இதனால் ஏற்படும். ''நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்'' என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது. நாளைய

தன்னம்பிக்கையின் சிகரம் - இப்ராஹீம் (அலை)

தன்னம்பிக்கையின் சிகரம் - இப்ராஹீம் (அலை) வாழ்க்கையே போரடிக்குது பா..... என்ன லைப் இது.....??? எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்குது.....??? நான் பட்ட கஷ்டம் யாருமே படக்கூடாது பா....?? என்னை போல கஷ்டப் பட்டவங்க யாருமே இல்லை...!!! அந்த ஆண்டவனுக்கு கண்ணே இல்லையே....!!! நான் யாருக்கு என்ன துரோகம் பண்ணுனேன்....??? ஊரை அடிச்சு உலையில போட்டவன் எல்லாம் நல்லா இருக்கான்...!!!?? நான் பாட்டுக்கும் நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்.... எனக்கு மட்டும் இவ்ளோ கஷ்டத்தை ஏன் அந்த ஆண்டவன் கொடுக்கிறான்???னு தினமும் நாம் புலம்பிக் கொண்டு இருக்கிறோம். இவ்வுலகம் என்பது ஒரு சோதனைக்களம்.உதாரணத்திற்கு நாம் ஒரு தேர்வு கூடத்திற்குள் சென்றால் நமக்கு வினா தாள் கொடுக்கப் படும். அதில் ஒரு மார்க் கொஸ்டின், இரண்டு மார்க் கொஸ்டின், ஐந்து மார்க் கொஸ்டின், பத்து மார்க் கொஸ்டின், இருபது மார்க் கொஸ்டின் என வகை வகையாக பிரிக்கப் பட்டு வினாக்கள் கேட்கப் பட்டிருக்கும். 

பிற இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களில் கலந்துகொள்ளுமா? TNTJ

Image
பிற இயக்கத்தினர் நடத்தும் போராட்டங்களில் தவ்ஹீத் ஜமாஅத் கலந்து கொள்ளாது. தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் மற்ற இயக்கங்களுக்கும் போராட்டவழிமுறைகள் உட்பட பல வேறுபாடுகள் உள்ளன. போராட்டம் நடத்துவது நம்முடைய இருப்பைக்காட்டிக் கொள்வதற்கு அல்ல. கோரிக்கைகளை வென்றெடுக்கத்தான் போராட்டம் நடத்த வேண்டும். ஆனால் முஸ்லிம் இயக்கங்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பெரியகட்சியுடன் கூட்டணிவைக்கிறார்கள்.தேர்த லின்போது ஆதரவு அளிப்பதுடன் நிற்காமல் தொடர்ந்து அதில் நீடிக்கிறார்கள். இவர்கள் திமுக கூட்டணியில் இருந்தால் அந்தக்கட்சியின் கேடுகளை எதிர்த்துப் போராடமாட்டார்கள். அதிமுககூட்டணியில் இருந்தால் அதன் தீமைகளை எதிர்த்துப்போராடமாட்டார்கள்

நேர்வழி காட்டிய இறைவனை பெருநாள் தினத்தில் பெறுமை படுத்துவோம்

Image
22:25 நேர்வழி காட்டிய... .

இறந்த பின்னர் உயிருடன் இருப்போர்

இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள்! இறந்தவர்கள் என எண்ணாதீர்கள்! ''  என்று இவ்வசனங்கள் (2:154 ,  3:169) கூறுவதை முஸ்லிம்களில் சிலர் தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். மகான்களும் ,  நல்லடியார்களும் இறந்த பின்பும் உயிரோடு உள்ளனர் ;  எனவே அவர்களை வழிபடலாம் ;  அவர்களை அழைக்கலாம் ;  பிரார்த்திக்கலாம் என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாக அமைந்துள்ளதாக அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். இது பல காரணங்களால் தவறான விளக்கமாகும். இவ்வசனங்கள் நல்லடியார்கள் மற்றும் மகான்களைக் கொண்டாடவோ ,  அவர்களுக்கு வழிபாடு நடத்துவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்ய ஒருவர் தயங்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே அருளப்பட்டன. இவ்வசனங்கள் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ ,  நபித் தோழர்களோ , அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை அழைக்கவோ ,  பிரார்த்திக்கவோ இல்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தெய்வீக சுகமளிக்கும் ஜெபக் கூட்டங்கள்

தெய்வீக சுகமளிக்கும் ஜெபக் கூட்டங்கள் போப் 16 ம் பெனடிக்ட் கை உடைந்த சம்பவத்தையும், அவருக்கு ஏற்பட்ட அந்த துன்பத்தை தெய்வீகத் தன்மை கொண்டவராகக் கருதப்படும் அவராலேயே போக்க முடியவில்லை என்பதையும், ஆசி வழங்கும் அவரது கையே உடைந்து, ஆசி வழங்கும் அவரது கைக்கே அவரால் ஆசி வழங்க முடியவில்லை என்பதையும், அதே நேரத்தில் அவர் களில் மற்றொரு சாரார், "தெய்வீக சுகமளிக்கும் ஜெபக் கூட்டம்' என்ற பெயரில் நடத்தும் நாடகங்கள் பற்றி யும் கண்போம். அதைத் தொடர்ந்து அதுபோன்ற "ஜெபக் கூட்டம்' ஒன்றில் நாம் பட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக மதுரை மாநகரத்தில் முஸ்-ம்கள் பெரு வாரியாக வசிக்கின்ற பகுதி ஒன்றில் முஸ் -ம் வீடுகளுக்கு சென்று முஸ்-ம் பெண் களைச் சந்தித்து, "இயேசுதான் உண்மை யான கடவுள்'' என்று கூறியும், "கிறிஸ்தவ மார்க்கத்தில் இணைவதே பரலோக ராஜ் ஜியம் செல்லும் வழி'' என்றும் வீடு வீடா கச் சென்று ஒரு கிறிஸ்தவப் பெண் பிரச் சாரகர் பிரச்சாரம் செய்வதாக நமக்கு செய்தி கிடைத்தது.

பேரழிவுகளும் படிப்பிணையும்

சுமத்ரா நிலநடுக்கமும்   சுனாமி - பேரலைகளும் நாம் வாழும் உலகில் அவ்வப்போது புயல் ,  மழை ,  வெள்ளம் ,  பூகம்பம் ,  எரிமலை வெடிப்புக்கள் என ஏதாவது ஒரு சோதனை நடந்து கொண்டேயிருக்கின்றது. 1923 ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர்.  1935 ல் இந்தியாவின் குவெட்டாவில்  50,000  பேரும் , 1939 ல் சிலியில்  28,000  பேரும் ,  அதே ஆண்டு துருக்கியில்  33,000  பேரும் , 1960 ல் மொரோக்காவில்  12,000  பேரும் , 1976 ல் சீனாவில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேரும் ,  அதே ஆண்டு கவுதமாலாவில்  23,000  பேரும் , 1978 ல் ஈரானில் 25,000  பேரும் , 1985 ல் மெக்ஸிகோவில்  9,500  பேரும் , 1988 ல் ஆர்மீனியாவில்  25,000  பேரும் , 1990 ல் ஈரானில்  50,000  பேரும் , 1993 ல் இந்தியாவின் லட்டூரில்  10,000  பேரும் , 1995 ல் ஜப்பானில்  6,000 பேரும் , 1998 ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தாஜிஸ்தானில்  5,000  பேரும் , 1999 ல் துருக்கில்  17,000 பேரும் , 2001 ல் குஜராத்தில்  13,000  பேரும் , 2003 ல் ஈரானில்  41,000  பேரும் பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இவை பேரழிவு ஏற்படுத்திய பூகம்பங்களின

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய பேரருள்

Image
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய பேரருள்

இஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்….

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக…ஆமின். சில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர்,  இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்…… முன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ? என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை. இந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக…. இந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!...

மனித வாழ்வு இவ்வுலகோடு முடிவு பெற்றால்!... பகுத்தறிவற்ற எண்ணற்ற பிராணிகளைப்போல், பகுத்தறிவுள்ள மனிதனும் ஒரு பிராணியே.  சிலர் சொல்லுவது போல் அவனுக்கு மறுமை வாழ்க்கை என்று ஒன்றில்லை. மனிதன் மரணிப்பதோடு அவனது வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.  மற்ற பிராணிகளைப் போல் அவனும் வாழந்து மடிந்து மண்ணாகிப் போவதே அவனது இறுதி முடிவு என்பது நாத்திக நண்பர்களின் உறுதியான முடிவு. இந்த அவர்களின் முடிவின் அடிப்படையில் எமக்குச் சில ஐயங்கள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பது அவர்களின் கடமையாகும். நாத்திகர்கள் தாங்கள் தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். 

இந்தியாவை நாறடிக்கும் அகோரிகள் பற்றிய தகவல்கள் !!!!

இந்தியாவை நாறடிக்கும் அகோரிகள் பற்றிய தகவல்கள் !!!! சிவனின் மைந்தர்கள் என கூறி கொண்டு கங்கை நதியின் இடுகாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் .. இவர்களை பற்றி இவர்கள் தான்தோன்றி தனமாக சுற்றி கொண்டு இருப்பதாய் "நான் கடவுள் "படத்தை பார்த்தவர்கள் அறிந்து இருப்பார் . அகோரிகள் என்கிற சாமியார்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுவதை நாம் பல தொலைக்காட்சி ஒலிபரப்புகளில் பார்த்திருக்கிறோம். அது நம்  உயிரை உறையவைக்கும் காட்சியாக இருக்கும். இவர்கள் எப்போதும் சிவா பானம் தான் புகைத்து கொண்டு இருப்பார்கள் அதாவது (கஞ்சா ) வை தான் இவர்களுக்கு சிவா பானம் அவர்களை அடுத்து இப்போது சீனாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை உயிரோடு வெட்டி சமைத்து சாப்பிடும் காட்சி இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மனித மிருகங்கள் ஒருபெண்ணை உயிரோடு ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கண்டம்துண்டமாக வெட்டி சமைத்து சாப்பிடுகிறார்கள். இவர்களின் முன்னோடிகள் வேறு யாரும் அல்ல நமது இந்திய அகோரிகளே. 

பைபிள் மாற்றப்பட்டதற்கு பைபிளில் இருந்தே இன்னொரு சான்று :

பைபிள் மாற்றப்பட்டதற்கு பைபிளில் இருந்தே இன்னொரு சான்று : யூதாஸ் இயேசுவை காட்டிகொடுத்து 30 வெள்ளிக்காசுகளை பெறுகிறான். அதை வைத்து ஒரு நிலத்தை வாங்குகிறான். அதிலேயே இரு சுவிஷேஷங்களுக்குள் பெரிய முரண்பாடு இருக்கிறது. யூதாஸ் அந்த நிலத்தை வாங்கினானா அல்லது யூத ஆசாரியர்கள் யூதாசின் 30 வெள்ளிக்காசுகளை வைத்து அந்த நிலத்தை வாங்கினார்களா என்று. இவ்வாறு உளறல்கள் பைபிளில் மலிந்து கிடக்கிறது. ஆனால் "அந்த" சர்ச்சைக்குள் இப்போது நாம் நுழையப்போவது இல்லை. "மத்தேயுவின்" பிரகாரம் யூத ஆசாரியர்கள் தான் யூதாசின் 30 வெள்ளிக்காசுகளை வைத்து அந்த நிலத்தை வாங்குகிறார்கள்.அந்த நிகழ்ச்சியை பின்வரும் வசனங்கள் குறிக்கின்றன. [மத்தேயு 27] 

பகைவர்கள் மீதும் இரக்கம் காட்டிய முஸ்லிம்கள்

பகைவர்கள் மீதும் இரக்கம் காட்டிய முஸ்லிம்கள் பாலஸ்தீன் முழுமையாக இஸ்லாமியப் பேரரசின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிடும். அதன்பின் ஜெருசலேத்தில் உள்ள மக்கள் அனைவரும் பேரரசின் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். உள்ளூர் கிறிஸ்துவர்கள், பல ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்து நிரந்தரமாகத் தங்கியிருக்கும் கிறிஸ்துவர்கள் அனைவருக்குமே இது பொருந்தும். மத வித்தியாசம் பார்க்கப்பட மாட்டாது. யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் அவர்கள் சமமாக அங்கே வாழலாம். ஆனால், இந்தச் சலுகை ராணுவ வீரர்களுக்குப் பொருந்தாது. (அதாவது சிலுவைப்போர் வீரர்களுக்குப் பொருந்தாது.) அவர்கள் மட்டும் தம் குடும்பத்தினருடன் நாற்பது தினங்களுக்குள் ஜெருசலேத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். உயிருக்கு உத்தரவாதம் உண்டு. நகரை விட்டு வெளியேறும் சிலுவைப்போர் வீரர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட மாட்டாது. ஆனால் அப்படி வெளியேறுவதற்குப் பிணையத் தொகையாக அவர்கள் தலைக்குப் பத்து தினார்கள் (இந்த தினார் என்பது அந்நாளைய சிரிய நாணயத்தைக் குறிக்கும்.) கட்ட வேண்டும். வீரர்களின் குடும்பப் பெண்கள் தலைக்கு ஐந்து சிரிய தினார் செலுத்தினால் போதும். குழந்தைகள்

இயேசு ஒரு கிறிஸ்தவரா?

இயேசு ஒரு கிறிஸ்தவரா? மேற்கண்ட தலைப்பில் உள்ள கேள்விக்கு கிருஸ்தவர்கள்(?) அளிக்கும் பதில் “ஆம் “ என்பதே. இது உண்மையா ? இந்த கட்டுரை கிரிஸ்துவர்கள் முன்நிறுத்தும் இது போன்ற கேள்விக்கான பதிலை காரண காரியங்களோடு , ஆதாரங்களோடும் ஆய்வுக்கண்ணோட்டத்தோடும் தரும் ஒரு தாழ்மையான முயற்சியாகும். முதல் முதலாக, இந்த "கிறிஸ்து" குறித்து பார்த்துவிட்டு போகலாம். என் அனுபவத்தில், சாதாரண கிறிஸ்துவர்கள் உடனடியாக "மீட்பர்" என்று வரையறுப்பார்கள்.. இப்போது "மீட்பர்" என்றால் என்ன என்ற கேள்வி தோன்றும். உண்மையிலேயே "கிறிஸ்டோஸ்" என்ற கிரேக்க மொழிச்சொல்லில் இருந்து "எழுத்து பெயர்ப்பால்" உருவானதே இந்த "கிறிஸ்து" என்ற சொல்.

ஒன்று சேர்க்கப்படும் நாள்…

ஒன்று சேர்க்கப்படும் நாள்…          இப்பிரபஞ்சத்தில் நம்மை அல்லாஹ் சிறந்த படைப்பாகப் படைத்து அதிலும் ஒப்பற்ற மார்க்கமான இஸ்லாத்தை நம் வாழ்க்கை நெறியாக பின்பற்றச் செய்தானே அது அவன் நமக்கு அளித்த மாபெரும் கிருபை. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நாம் சில அடிப்படை விஷயங்கள் மீது நம்பிக்கை கொள்கிறோம். அவை அல்லாஹ்வை நம்புதல், நெறிநூல்களை நம்புதல், வானவர்களை நம்புதல், விதியை நம்புதல் இறுதி நாள் (மறுமை) போன்றவற்றை உண்டென்று நம்பியிருந்தாலும் இறுதியாகச் சொல்லப்பட்ட மறுமை நாள் குறித்து  நம்பிக்கை குறைவாகவோ அல்லது அறவே நம்பிக்கை இல்லாத நிலையில் பாராமுகமாகவே பலர் இருந்து வருகிறோம். மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பாராமுகமாக இருக்கிறார்கள். அல்குர்ஆன் 21-1 (விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் நம்பிக்கை கொள்ளவில்லை. அல்குர்ஆன் 40-59

நபி மொழிகளும் நவீன விஞ்ஞானமும்

நபி மொழிகளும் நவீன விஞ்ஞானமும் இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார் ? من يكشف مجري الدم ؟      உணவு உட்கொள்ளப்பட்டவுடன் ,   அது இரைப்பைக்கு ( Stomach)  சென்று பின்னர்   குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு ,  சக்கைகள் வேறாகவும் ,  சத்துப்பொருட்கள் வேறாகவும்   பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் ( Blood Vessels of Intestine)  வழியாக இரத்த ஓட்டத்தைச் ( Blood Circulation) சென்றடைகிறது.   இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா ? ஒரு சுழற்சியில்   (One Cycle)  ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு   லட்சத்து  19  ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது ,  அதன் வேகம்   மணிக்கு  65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளரின் உறுதியான கருத்தும்.

Image
பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளரின் உறுதியான கருத்தும். 1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவத ற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.  இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது. தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார்.

தியாகத் திருநாள்....அது ஹஜ்ஜுப் பெருநாள்

Image
தியாகத் திருநாள்....அது ஹஜ்ஜுப் பெருநாள் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாள்கள்) மட்டுமே. “ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள்.  இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன. ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம். ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணர வைத்து. இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாட்டம் ஒரு நன்நாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது. 

கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு....!!!!

Image
{அபய பூமி} கஃபா {முதல் இறையில்லம்} வரலாறு....!!!! அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான்.  இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும். உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன. 'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.

முஸ்லிம்களின் அப்பாவித்தனம் எது?

Image
முஸ்லிம்களின் அப்பாவித்தனம் எது? கடந்த இரண்டு வாரங்களாக கண்ட கண்ட ஊடக வலையமைப்பிலெல்லாம் மலிவு விற்பனை செய்யப்பட்ட ஒரு செய்தி இருக்குமென்றால், அது நமது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொச்சைப்படுத்திய “Innocence of Muslims” எனும் குறுந்திரைப்படமும், அதையொட்டிய சர்வதேச கிளர்ச்சியுமே. அமெரிக்கா ஒழிக! இஸ்ரவேல் நாசமடைக! ஸாம் பசீல் மண்ணாய்ப் போக!  என்று தொண்டை கிழியக் கத்தியதன் விளைவாக நமக்கு ஏற்பட்டிருக்கும் தொண்டைப் புண் மெல்ல மெல்ல ஆறத் தொடங்கியிருக்கும் இத்தருணத்தில் ஆறாத காயம் பட்டிருக்கும் நம் உள்ளங்களைத் தட்டியெழுப்பி, சிந்தனையைக் கொஞ்சம் கசக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. கேள்விகள் பலநூறு நம் கண்முன்னால் நிற்கும் பொழுது உரிய விடைகளைக் கண்டறியாமல் அடுத்த அடியை எடுத்து வைப்பது ஆபத்தான பல பின்விளைவுகளுக்கு அடித்தளம் போட்டு விடும். அறியாமையையும், தெளிவின்மையையும் ஒட்டி நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் நமது உம்மத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்காற்ற வல்லது. ஆகவே எடுக்கப்படும் தீர்மானங்கள் பரிபூரண தெளிவுடனும், பொறுப்புணர்வுடன் எடுக்கப்பட வேண்டும். தெளிவ

தாயா? மார்க்காமா? சஹாபாக்கள் வாழ்வினிலே

தாயா? மார்க்காமா? தளராத உறுதியுடன் சஅத் இப்னு அபீவக்காஸ் [ரலி] நான்[சஅத்] இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காதவரை என்னுடன் பேசமாட்டேன் என்றும், உன்னவும் பருகவும் மாட்டேன் என்றும் என்தாயார் சத்தியம் செய்துவிட்டார்.மேலும் என்தாய், உன் பெற்றோரிடம் நீ நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுருத்தியுள்ளான் என்று கூறுகிறாய். நான் உன்தாய். நான்தான் இவ்வாறு[ இஸ்லாத்தை விட்டுவிடுமாறு] கட்டளையிடுகிறேன்! என்று கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் இருந்ததால் என்தாயார் மயக்கமுற்றுவிட்டார்கள். அப்போது அவரது உமாரா எனப்படும் மகன், என் தாயாருக்கு தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராக பிரார்த்தித்தார். அப்போது   அல்லாஹ்........   நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இரு

ஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா? பிராமணரா?

ஐயப்பனுடைய நண்பரான வாபர் முஸ்லிமா? பிராமணரா? அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் – (அல்குர்ஆன் 6:108) பிற மதத்தவர்கள் வணங்குபவற்றை ஏசக்கூடாது என்று நம் மார்க்கம் நமக்கு வலியுறுத்துகிறது. இஸ்லாம் என்ற எளிமையான மார்க்கம் அல்லாஹ்வைத் தவிர எதையும் வணங்கக்கூடாது என்று ஓரிரைக்கொள்கையை போதிக்கிறது ஆனால் இந்த கொள்கையை தகர்க்கும் விதமாக வரம்பு மீறி மாற்றுமதத்தவர்கள் நம் மார்க்கத்தை தங்கள் வழிபாட்டுத்தளங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். இதில் சபரிமலை ஐயப்ப கோவில் அதற்கு உதாரணமாக விளங்குகிறது. எனவே உண்மையை மக்களுக்கு புரியவைக்க வேண்டும் என்ன நிர்பந்தத்தின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவற்றை பற்றி ஏசவில்லை மாறாக விளக்கிக்கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். (மாற்றுமதத்தவர்கள் மன்னிக்கவும்) 1) ஐயப்பன் பிறப்பு எத்தகையது 2) ஐயப்பன் கடவுளா? மனிதரா? 3) ஐயப்பன் கோவில் 18 படிக்கட்டுகளும் வாவரும்! 4) வாபர் (வாவர்) பற்றிய கட்டுக்கதைகள் 5) வாவர் என்பவர் முஸ்லிமா? 6) வாவர் தர்காஹ்வ

வரதட்சனை ஒழிப்பில் நம் பங்கு என்ன???

வரதட்சனை ஒழிப்பில் நம் பங்கு என்ன??? நம் சமுதாயத்தில் எவ்வளவோ கொடுமைகள் மார்க்கத்தின் பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இம்மாதிரிக் கொடுமைகளுக்கு முன்னதாக ஒரு பாத்திஹாவும் முடியும் போது ஒரு பெரிய துவாவும் போட்டு சங்கைமிக்க தாக்கி விடுவார்கள். மேலும் மறக்காமல் நேர்ச்சை வேறு. முஸ்லிம் சமூகத்தில் தலைவிரித்தாடும் இம்மாதிரியான சமூகக்கொடுமை களில் ஒன்று வரதட்சனை ஆகும். இந்தக் கொடுமையை ஒழிக்க இன்று பல அல்ல சில ஜமாஅத்கள் மட்டுமே பல அவமானங்களை தாங்கியும், பலதரப்பட்ட ஏச்சு மற்றும் பேச்சுக்களை காதில் வாங்கிக் கொண்டும் வீரியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)

உதாரணத்திற்கு அப்பாற்பட்டவனே கடவுள்

உதாரணத்திற்கு அ ப்பாற்பட்டவனே கடவுள்                                              இறைவனுக்குரிய இலக்கணம் அவனைப் போல் யாரும் இல்லை எதுவும் இல்லை என்று நம்புவதாகும்.                              எதைப் போன்றும் அவனில்லை. அவனைப் போன்று எதுவும் இல்லை என்று நம்ப வேண்டும். இப்படி நம்புகிற போது ,  அல்லாஹ்வுக்கு இணைவைக்கிற சித்தாந்தங்களும் பல கடவுளை நம்புகிற போலிச் சிந்தாந்தங்களும் அடிபட்டுவிடுகி ன் றன.                            ஆனால் இதை உணர்ந்து கொள்ளாத சிலர் அல்லாஹ்வை நீதிபதியுடன் ஒப்பிட்டு உதாரணம் கூறுவதைப் பார்க்கலாம்.                              ஒருவன் தவறு செய்து விடுகிறான் அல்லது ஒருவன் மீது தவறான குற்றச்சாட்டு அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு வழக்குறைக்க நீதிமன்றத்திற்குச் சென்றால் ,  அவனே நேரடியாக நீதிபதியிடம் பேசமுடியாது.

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா?

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா? உளூவின்றி குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன? உளூ இல்லாதவர்களும் குளிப்பு கடமையானவர்களும் குர் ஆனைத் தொடலாமா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. தொடலாம் என்பதே சரியான கருத்தாகும். தொடக் கூடாது என்ற கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக அலசினால் இதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள் . அல்குர்ஆன் (56 : 79 ( குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை அவர்கள் எடுத்து வைக்கின்றனர். இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனை தூய்மையற்ற நிலையில் உள்ளவர்கள் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்று முடிவு செய்ய இடம் தருவது போல் தோன்றுகிறது. .

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா?

மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா? தந்தை தன் மகளுக்கு அன்பளிப்புச் செய்வது தவறல்ல. பின்வரும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன . 25158حَدَّثَنَا يَعْقُوبُ قَالَ حَدَّثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ عَبَّادٍ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ لَمَّا بَعَثَ أَهْلُ مَكَّةَ فِي فِدَاءِ أَسْرَاهُمْ بَعَثَتْ زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي فِدَاءِ أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ بِمَالٍ وَبَعَثَتْ فِيهِ بِقِلَادَةٍ لَهَا كَانَتْ لِخَدِيجَةَ أَدْخَلَتْهَا بِهَا عَلَى أَبِي الْعَاصِ حِينَ بَنَى عَلَيْهَا قَالَتْ فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَّ لَهَا رِقَّةً شَدِيدَةً وَقَالَ إِنْ رَأَيْتُمْ أَنْ تُطْلِقُوا لَهَا أَسِيرَهَا وَتَرُدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا فَافْعَلُوا فَقَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَأَطْلَقُوهُ وَرَدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا رو