Posts

Showing posts from July, 2012

ஒரு சலாம் என் வாழ்வை மாற்றியது"

Image
"ஒரு சலாம் என் வாழ்வை மாற்றியது" அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு... (நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.) முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நோன்பும் இறையச்சமும்

Image
நோன்பும் இறையச்சமும்

கிருத்தவம் ஒரு வரலாற்று பார்வை

கிருத்தவம் ஒரு வரலாற்று பார்வை உலகின் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும்மதம் கிறிஸ்தவம். உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இரண்டும் சிலுவைக்கொள்கையில் எதிரும் புதிருமாக உள்ளது. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தைமெய்ப்படுத்தும் வரிகள் பைபிளில் உண்டு. பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசிகளின் போதனையும் முஹம்மத் நபி (ஸல்)அவர்களின் போதனையும் ஒன்றுதான். இயேசு போதித்ததை முஹம்மது நபி (ஸல்) அவர்களும்போதிக்கிறார். அப்படியெனில் எங்கு முரண்பாடு? எதில் முரண்பாடு? ஏன் முரண்பாடு? இஸ்லாம்மட்டும் தான் உண்மை மதமா?  உலகில் ஒருபெரும்பான்மைச் சமுதாயம் சிலுவைக் கொள்கையை தம் இரட்சிப்பின்  வழியாக நம்பிக்கொண்டிருக்க அது பொய் என்றுஇறைவன் 14 நூற்றாண்டுகளுக்கு முன் அறிவித்தாரா? அப்படியானால் அதற்கு முன்னர் அந்தநம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்த மக்களின் நிலை? 

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு :

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு : இது கிறிஸ்தவர்களில் பலர் போலி அமைதி வேடம் போட பெரிதும் உதவும் வசனம். இதைதான் வைத்துக்கொண்டு இயேசு பெரிய அமைதி விரும்பியை போலவும், வாயில் விரலை வைத்தால் கூட ஏசுவுக்கு சூப்ப தெரியாததை போலவும் பில்ட் அப் கொடுக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல மறுபடியும் பைபிளில் முரண். முரண்களை குத்தகைக்கு எடுத்துள்ள பைபிள் சொல்கிறது :

வரதட்சணைக் கொடுமையும் நிரந்தர நரகமும்

வரதட்சணைக் கொடுமையும் நிரந்தர நரகமும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்கள் ஏற்கனவே இருந்து வந்த மதக் கலாச்சாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. விட்ட குறை தொட்ட குறை என்பது போல்,

நபிகளாரின் நற்குணங்கள்

நபிகளாரின் நற்குணங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்திருந்த காலகட்டத்தில் இறுதி இறைத்தூதராக நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அவர்களின் அழகிய போதனைகளும் அவர்களின் நடவடிக்கைகளும் அறியாமை இருளை நீக்கி அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்குத் தந்தது. இன்றும் அந்த அழகிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடக்கும் அரிய வாய்ப்பை நபிகளார் மூலம் அல்லாஹ் 

அழகிய கடனும் அர்ஷின் நிழலும்

அழகிய கடனும் அர்ஷின் நிழலும் இஸ்லாமிய மார்க்கம் ஐந்து நேரத் தொழுகையின் மூலம் கூட்டுத் தொழுகையைத் தந்து சமுதாயத்தின் உறுப்பினர்கள் படும் அவதிகளைக் கண்டு கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பள்ளிக்கு வரக்கூடிய ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிமின் வாழ்க்கை எப்படிக் கழிகிறது என்பதைக் கணக்கில் கொள்ளச் செய்கிறது. இது அல்லாமல் ஒரு முஸ்லிம்  தன் அண்டை வீட்டுக்காரருக்கு, தன் வீட்டில் ஆக்கிய உணவுகளை வழங்கச் செய்து அவர் எப்படி காலம் தள்ளுகிறார் என்று பக்கத்து வீட்டுக்காரரின் பிரச்சனையை இஸ்லாம் பார்க்கச் செய்கிறது. இன்று நம்முடைய சமுதாயம் இது போன்ற காரியங்களில் ஈடுபடுவது கிடையாது. (பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல

குழந்தைகளைக் கொஞ்சுவோம்

குழந்தைகளைக் கொஞ்சுவோம் அல்லாஹ்வின் அருள் வேதம் அருளப்படுவதற்கு முன் அரபியர்கள் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் புதை குழிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டு, அன்பின் அர்த்தம் அவர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. வணக்க வழிபாடுகள் மூலம் மட்டுமே அல்லாஹ்வின் அருளை அடைய முடியும் – அதல்லாத வழிகளில் அடைய முடியாது என்று நிலவி வந்த வறட்டுச் சிந்தனை வழியனுப்பி வைக்கப்பட்டது. பெற்ற குழந்தைகள் மீது நாம் பொழிகின்ற அன்பு மழையில்

உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்

உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம் நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, எனது தாயாயர் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்’ என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?’ என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார். இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, உங்கள் இரத்தப் பிரிவு என்ன என்று கேட்கும் போது, எனது இரத்தப் பிரிவும் அது தான். எனினும் நான் இதுவரை இரத்தம் கொடுத்ததில்லை. பயமாக இருக்கின்றது’ என்று மகன் கூறுகின்றார்.

உனக்குக் கீழே உள்ளவர் கோடி

உனக்குக் கீழே உள்ளவர் கோடி பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப் படுகின்றது. ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது. இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன. இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான். இப்படி உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது தான் அடிப்படைக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

ஒற்றுமைக்கு வழி என்ன?

Image
ஒற்றுமைக்கு வழி என்ன? திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர். - அடி உதைகளுக்கு ஆளானார்கள். - ஊரை விட்டு விலக்கி வைக்கப் பட்டனர். - பொய் புகார் கூறி சிறையில் அடைக்கப் பட்டனர். - சொந்த பந்தங்களுக்குப் பகையாயினர். இப்படி ஏராளமான தியாகங்களுக்கு மத்தியில் தான் கொள்கையைக் கடைப்பிடித்தனர். இவ்வாறு தியாகம் செய்து கொள்கையை ஏற்றவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே கவலை “ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்தவர்கள் பிளவு பட்டு நிற்கின்றார்களே?”  என்பது தான். இது கவலைப் படக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.  அதே சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகவே பாடம் பயின்ற நபித்தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து இருபது ஆண்டுகளுக்குள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தாங்கிப் போரிடும் அளவுக்குப் பகைவர்களாகிப் போயினர். ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், அலீ (ரலி) அவர்களுக்கும் நடந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான

நபிகள் நாயகம் செய்த ஹஜ் ஓர் நேர்முக வர்ணனை!

Image
நபிகள் நாயகம் செய்த ஹஜ் ஓர் நேர்முக வர்ணனை! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒன்பது ஆண்டுகள் ஹஜ் செய்யாது தங்கியிருந்தனர். பிறகு பத்தாம் ஆண்டில் இந்த ஆண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை  நிறைவேற்றச் செல்கின்றார்கள்’ என்று மக்களிடம் அறிவிக்கச் செய்தார்கள். உடனே அதிகமான மக்கள் மதீனாவிற்கு வந்தனர். வாகனத்திலோ அல்லது நடந்தோ வர சக்தி பெற்ற எவரும் மதீனா வரத் தவறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்ல வேண்டும் என்பதற்காக மக்கள் (மதீனா) வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்கள் (ஹஜ்) செய்வது போல் தாங்களும் (ஹஜ்) செய்ய வேண்டும் என்று நாடிய வண்ணம் இருந்தனர். மதீனாவாசிகளின் இஹ்ராம் எல்லை துல்ஹுலைஃபா’ என்றும், ஷாம்வாசிகளின் இஹ்ராம் எல்லை ஜுஹ்ஃபா’ என்றும், இராக்வாசிகளின் இஹ்ராம் எல்லை தாது இர்க்’ என்றும், நஜ்த்வாசிகளின் இஹ்ராம் எல்லை கர்ன்’ என்றும், யமன்வாசிகளின் இஹ்ராம் எல்லை யலம்லம்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராம் கட்டும் எல்லைகள் பற்றிக்) குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்கஃதா 25 அல்லது 26ல

ஜமாஅதே இஸ்லாமி பற்றி தங்கள் கருத்து என்ன?

ஜமாஅதே இஸ்லாமி பற்றி தங்கள் கருத்து என்ன? தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு இயக்கத்தினரும் தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாகத் தான் சொல்வார்கள். அப்படிச் சொல்லாவிட்டால் அந்த இயக்கம் செத்து விடும். ஆனால் நேர்வழியில் இருப்பதாக ஒரு இயக்கம் சொல்லிக் கொள்வதால் மட்டும் அது நேர்வழியில் இருப்பதாக ஆகாது. குர்ஆனுக்கும் நபிவழிக்கும் உட்பட்டும் குர்ஆன் ஹதீஸுடன் மோதாமலும் அதன் கொள்கை கோட்பாடுகள் அமைந்திருந்தால் மட்டுமே அது நேர்வழியில் இருப்பதாக ஆகும். அபுல் அஃலா மவ்தூதி என்பவர் ஜமாஅத்தே இஸ்லாமீ இயக்கத்தை நிறுவினார். இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது . ஆனால் இன்றைக்கு இந்தக் கொள்கை இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களால் பரப்பப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.  தற்போது எந்தக் கொள்கையும் இல்லாமல் குருட்டுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர் .

தர்ஹாக்களுக்கு அனுமதி பள்ளிவாசலுக்குத் தடையா?

தர்ஹாக்களுக்கு அனுமதி பள்ளிவாசலுக்குத் தடையா? இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் பள்ளிவாசல்களுக்குத் தொழ வருவதற்குத் தடை விதிக்கும் இந்த ஆலிம்கள் தர்ஹாக்களுக்குப் பெண்கள் வருவதற்குத் தாராளமாக வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றனர். அதனால் இந்த தர்ஹாக்கள் விபச்சாரத்திற்கு வலை விரிக்கும் வலைத் தளங்களாக, விடுதிகளாக மாறியிருக்கின்றன. இப்படி தீமைகளின் ஊற்றுக்கள் பெருக்கெடுத்து ஓடும் திராவக அருவிகளாக  தர்ஹாக்கள் அமைந்திருக்கின்றன. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடங்களைச் சபிக்கின்றார்கள். சாபத்திற்குரிய சன்னிதானங்கள். நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருந்த போது, "யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1244 உம்மு ஹபீப

மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது? மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ?? துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு மு

முஹம்மது (ஸல்) அவர்களே இறுதி நபி.

முஹம்மது (ஸல்) அவர்களே இறுதி நபி. இவ்வசனம் ( 33:40)  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி எனவும் அவர்களுக்குப் பின் எந்த நபியும் வர மாட்டார்கள் எனவும் கூறுகிறது . முதல் நபியான ஆதம் (அலை) முதல் தொடர்ந்து நபிமார்களை அனுப்பிக் கொண்டே வந்த இறைவன் ,  முஹம்மது நபியுடன் ஏன் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் ?  நபிமார்கள் வருவது நன்மை தானே என சிலர் நினைக்கலாம் . எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதற்கான தேவை இருந்தால் தான் அறிவுடையோர் அதைச் செய்வார்கள் . மாபெரும் பேரறிவாளன் அல்லாஹ் தேவையற்ற எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டான் . நபிகள் நாயகத்துக்கு முன் தொடர்ந்து நபிமார்களை அனுப்பியதற்குத் தக்க காரணங்கள் இருந்தன . நபிகள் நாயகத்துக்குப் பின் அந்தக் காரணங்களில் ஒன்று கூட இல்லை . மனிதர்களுக்கு நல்வழி காட்டுவ தற்காக ஒரு வேதத்துடன் தூதரை இறைவன் அனுப்பி ,  அந்த வேதமும் அந்தத் தூதரின் விளக்கமும் பாதுகாக்கப் படாத நிலையில் தான் அடுத்து ஒரு தூதரை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படும் . அல்லது ,  தூதர் மரணித்த பின் அவர் கொண்டு வந்த வேதத்தையும் அவரது போதனைகளையும் கூட்டி ,  குறைத்த