Posts

Showing posts from November, 2012

இஸ்லாத்தில் சட்ட நீதி(வீடியோ)

Image
இஸ்லாத்தில் சட்ட நீதி(வீடியோ)

இஸ்லாமும் துறவறமும்.

இஸ்லாமும் துறவறமும் இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் துறவறம் என்பது மனிதர்கள் யாரும் கடைபிடிக்க முடியாத பொய்யான கொள்கையாகும். இதனால் மனித சமுதாயத்துக்கு பாதிப்புகளைத் தவிர நன்மைகள் ஏற்படுவதில்லை . ஒரு மனிதன் தனக்கு வாழ்க்கைத் துணையில்லாமல் ஒழுக்கமாக வாழ முடியாது. ஒருவன் திருமணம் செய்யாமல் வாழ்கிறான் என்றால் ஒன்று அவன் ஆண்மையற்றவனாக இருப்பான். அல்லது தவறான வழியில் தன் ஆசையை தீர்த்துக் கொள்ளக்கூடியவனாக இருப்பான் . திருமணம் முடிக்காமல் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்வதாக யார் கூறினாலும் அது பொய்யே. ஏனென்றால் இல்லறம் என்பது மனித உடலுக்கு அவசியமான தேவையான ஒன்று. இந்தத் தேவை ஒரு மனிதனுக்கு சரியாகக் கிடைத்தால் தான் அவனால் மன நிம்மதியாக வாழ முடியும் .

மறு பிறவியின் மாயைகள் உண்மையா???

Image
மறு பிறவியின் மாயைகள் உண்மையா??? இந்தியாவில் வாழும் சிலர் மறு பிறவி உள்ளதாக நம்புகின்றனர். இப்படி ஒரு தத்துவம் இருக்க முடியுமா? அப்படி இருந்தால் அது இந்த உலகத்திற்கு நன்மை பயக்குமா? அறிவுக்கு ஏற்றதா? என்பது போன்ற கேள்வி களுக்கு பதில் இல்லை எனபதே உண்மை. ஒரு குட்டி கதையும் அது உணர்த்தும் சம்பவமும். ஒரு முற்றும் துறந்த முனிவர் ஒரு சிறுவனை கண்டார். அச்சிறுவனோ ஒரு நாயை கடுமையாக துண்புறுத்திக் கொண்டிருந்தான் அப்போது அந்த முனிவர் அச்சிறுவனை நோக்கி ஏன் இந்த நாயை துண்புறுத்துகின்றாய் அது ஒரு வாயில்லாத ஜீவன் தானே என்று முனிவர் கேட்டார். அதற்கு அச்சிறுவன் என்ன முனிவரே உங்களுக்கு தெரியாதா? போன ஜென்மத்தில் நான் நாயாகவும் நாய் நானாகவும் இருக்கும் போது இப்படித்தான் செய்தது அப்போது(அந்த ஜென்மத்தில்)யாறும் கேட்க வில்லை இப்போது ஏன் கேட்கின்றீர் என்றான் அச்சிறுவன் உடனே முனிவர் வாயடைத்துப் போனார். அச்சிறுவனுக்கு படிக்கும் நீங்களாவது பதில் சொல்லலாமே?????????????????????

மரணம் முதல் மறுமை வரை (வீடியோ)

Image
மரணம் முதல் மறுமை வரை (வீடியோ)

முஸ்லிமாக மாறினால் தான் பிற மதத்தவருக்கு உதவ வேண்டுமா?

முஸ்லிமாக மாறினால் தான் பிற மதத்தவருக்கு உதவ வேண்டுமா? இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் கிடையாது. ஒருவரை நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்தை ஏற்க வைப்பதை அல்லாஹ் ஏற்க மாட்டான். இஸ்லாத்தின் கொள்கைகளைப் புரிந்து மனப்பூர்வமாக ஏற்றால் தான் ஒருவர் முஸ்லிமாக முடியும். لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنْ الغَيِّ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدْ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ(256)2 இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. அல்குர்ஆன் 2 : 256 முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு சில தேவைகள் ஏற்படும் போது இஸ்லாத்திற்கு வந்தால் தான் அந்தத் தேவையை நிறைவேற்றிக்கொடுப்பேன் என்று கூறினால் இதுவும் அவரை நிர்பந்தப்படுத்துவதாகும். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.          ஒருவர் சிரமப்படும் போது அவருக்கு உதவி செய்வது மனித நேயமாகும். மனித நேயத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில் மதத்தை ஏற்றால் தான் உதவி செய்வேன் என்று கூறினால் இது மனித நேயத்துக்கு எதிரான செயலாகும்.

தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவனா???

தன்னை அறிந்தவர் தன் நாயனை அறிந்தவனா?? தன்னை அறிந்தவர் தன் நாயனை அறிந்தவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சில சூஃபியாக்கள் நபி (ஸல்) அவர்களின் மீது அவதூறு சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.  இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி கூட ஹதீஸ் நூற்களில் இடம்பெறவில்லை. இந்தக் கருத்தில் பலவீனமான ஹதீஸ் கூட ஹதீஸ் நூற்களில் இல்லை.  முஹ்யித்தீன் இப்னு அரபீ மற்றும் ஷஃரானி போன்ற சூபிக்கொள்கை அயோக்கியர்கள் தங்கள் நூற்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இப்படி ஒரு செய்தியை புனைந்து எழுதி வைத்துள்ளனர். இதற்கு அறிவிப்பாளர் தொடரையோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியைக் கேட்ட நபித்தோழரையோ யாராலும் காட்ட இயலாது. அந்த அளவுக்கு இது பொய்யான தகவல்.  நபியின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தெளிவபடுத்தும் விதமாக பிற்காலத்தில் இமாம் சஹாவீ, அஜ்லூனி போன்ற அறிஞர்கள் நூற்களைத் தொகுத்துள்ளனர். அதில் இது இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளனர். 

கர்ப்பம்” இஸ்லாமின் பார்வை.

கர்ப்பம்” இஸ்லாமின் பார்வை. இறைவன் முதல் மனிதனை மண்ணால் படைத்து அவரிலிருந்தே அவருக்கு ஒரு துணையையும் படைத்தான். அதன் பிறகு அந்த இருவரின் மூ லமாக மனிதவர்க் கத்தைப் இந்திரியதைக் கொண்டு படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான். (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு. (53:46) (உங்களைப் படைக்கின்றான்). (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா (75:37) அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண் பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான் அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “திண்ணமாக அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர் 'இறைவா! (இது ஒரு துளி) விந்து இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு'' என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது 'இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா

பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!

பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்! மனிதர்களில் யாரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் நபிமார்களும் அடங்குவார்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இரண்டு வகையான தவறுகள் தவறுகளை செய்பவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றார்கள். சிலர் தவறுகள் பகிரங்கமாக செய்வார்கள். இன்னும் சிலர், சில தவறுகளை யாருக்கும் தெரியாமல், மறைமுகமாக செய்வார்கள். தவறுகளை காணும்போது நாம் செய்ய வேண்டியவை என்ன? வெளிப்படையாக செய்யப்படும் தவறுகளை நாம் விமர்சனம் செய்யலாம். அதைக்கண்டிக்கலாம். அதை பகிரங்கப்படுத்தலாம்; அவர்களைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்கள் இத்தவறுகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும். இப்படி இல்லாமல் மறைமுகமாக உட்கார்ந்து யாருக்கும் தெரியாமல், அதை நேரத்தில் யாருக்கும் அந்த தவறு பாதிப்பை ஏற்படுத்தாது என்று இருக்குமானால் அதை வெளிப்படுத்தக்கூடாது. அதை பகிரங்கமாக கண்டிக் கக்கூடாது. அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவரின் தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும்.

நரகில் கொடுக்கப்படும் பல வகையான தண்டணைகளில் சில :

Image
நரகில் கொடுக்கப்படும் பல வகையான தண்டணைகளில் சில : விலங்கிடப்படுதல்: அப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள். திருக்குர்ஆன் 40:71,72 நெருப்பால் ஆன ஆடை: (ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும். திருக்குர்ஆன் 22:19,20

மாதங்கள் பன்னிரண்டு

மாதங்கள் பன்னிரண்டு இவ்வசனத்தில் (9:36) வானங் களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் 12 மாதங்கள்' எனக் கூறப்படுகின்றது. மக்கள் வருடத்தை 12 மாதங்களாகக் கணக்கிடுகிறார்கள் எனக் கூறாமல், 12 மாதங்கள் தான் இருக்க வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை இவ்வசனம் சொல்கிறது. வானம், பூமி படைக்கப்பட்டது முதல் எல்லாக் காலத்திலும் வருடத்திற்கு 12 மாதங்கள் என்று மக்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கவில்லை. கி.பி. 1582ஆம் ஆண்டு கிரிகோரியன் என்ற கத்தோலிக்க போப், நாட்காட்டிகளை ஒருங்கிணைப்பது வரை பல விதமான கணக்குகளில் ஆண்டுகளில் கணித்து வந்தனர்.

நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும்

நான்கு மத்ஹபுகளும்   நவீன பிரச்சனைகளும்   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் நபியின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களுடைய மகன்களும் இருந்தனர். அவ்விருவரில் ஒருவனை ஓநாய் கொண்டு சென்று விட்டது. உடனே அவர்கல் ஒருத்தி ,  தன் தோழியிடம் ,  உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது   என்று கூற ,  மற்றொருத்தி அவடம் ,  உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது   என்று கூறினாள். ஆகவே ,  இருவரும் தாவூத் (அலை) அவர்கடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றனர். அவர்கள் (அவ்விரு பெண்கல்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பத்தார்கள். (அதில் திருப்தியில்லாத) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்கடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்கடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் ,  என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்கருவருக்குமிடையே (மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்   என்று கூறினார்கள். அப்போது இளையவள் ,  அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்   என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே , சுலைமான் (அலை)

பயணிகளின் கவனத்திற்கு!

பயணிகளின் கவனத்திற்கு! இஸ்லாம் ஒரு நிறைவான, முழுமையான மார்க்கம். இது ஏதோ பூமிக்கு கீழே உள்ளதைப்பற்றியும், வானத் திற்கு மேலே உள்ளதைப்பற்றியும் மட்டுமே பேசக் கூடிய மார்க்கம் என்று இஸ்லாமியர்களில் பலர் தவறாக நினைக் கின்றார்கள். மாறாக நமது வாழ்க்கை முறையைப்பற்றி வேறெந்த மார்க்கமோ, மதமோ, சொல்லாத அளவிற்கு முழுமையான முறையில் கற்றுத்தரக்கூடிய மார்க்கம். இஸ்லாம் இதைப்பற்றி பேசவில்லை, இந்த விஷயத்திற்கு இஸ்லாத்தில் தீர்வு இல்லை என்று எவரும் வாய் திறக்க முடியாத வகையில் எல்லாவற்றையும் விரி வாக பேசுகிறது. இப்படி ஒரு மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக பெற்றதற்கே நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டி ருக்கிறோம். மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்ற பயணம் பற்றியும் இஸ்லாமிய மார்க்கத்தில் வழிகாட்டுதல் இருக்கின்றது. பயணம் மேற்கொள்ளும்போது யாவரும் பேண வேண்டிய ஒழுக்கங்களை கற்றுத் தருகின்றது. அதில் நாம் மேற்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து, அதை நீக்குவதற்காக இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சலுகைகளையும் வழங்கு கின்றது. பயணிகள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை இங்கே தருகிறோம்.

செவியேற்போம்! கட்டுப்படுவோம்!

செவியேற்போம்! கட்டுப்படுவோம்! காலத்தால் முரண்படவில்லை. கருத்து மோதல் இல்லை. கற்பனைக் கலவை இல்லை. பொய்யின் சாயல் இல்லை. ஆபாசத்தின் அடையாளம் இல்லை. அறிவியலுக்கு அப்பாற்படவில்லை. மிகையான வர்ணனைகள் இல்லை. இதுமட்டு மின்றி இறைவேதமாக இருப்பதற்கு அவசியமான அனைத்து தகுதி களையும் பொதிந்துள்ள வேதம், திருக்குர்ஆன் மட்டுமே. மிக உயர்ந்த தரம், இனிய இலக்கிய நயம் கொண்ட இவ்வேதத்தில் படைத்தவன், படைப்பினங்கள், பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம், இம்மை, மறுமை உட்பட இப்பிரபஞ்சத்தின் யதார்த்தமான நிலைகள் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும், நன்மைக்கும் தீமைக் கும் இடையேயான வேறுபாடுகள் விரிவான முறையில் விளக்கப்பட்டுள்ளன. மேலும் தனிமனிதன், குடும்பம் மற்றும் சமூகம் இவற்றுக்கான ஒட்டு மொத்த வாழ்வியல் நெறிமுறைகளும் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. அனைத்துக்கும் மேலாக அகிலத்தைப் படைத்து, பரிபாலிக்கின்ற, ஏக இறைவ னான அல்லாஹ்வினால் அருளப்பட்டு, அவன் மூலமே இன்றளவும் பாதுகாக் கப்பட்டு கொண்டிருக்கின்றது. இத்தகைய மாபெரும் அற்புதமான, சிறந்த அறி வுரையான, தெளிவான வழிகாட்டியாக இருக்கின்ற அல்க

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் "இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை ;  மனிதாபிமான மற்றவை ''  என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம். ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள். குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும். கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப்போவதில்லை ;  கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப்போவதில்லை ;  பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.

தவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்

தவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம் உணர்வற்ற ஜடங்கள் என்று உயிரோடு புதைக்கப்பட்டும், இழிவாக நடத்தப்பட்டும் வந்தது பெண் சமுதாயம். பெண்கள் என்றாலே போகப் பொருளாகவும், பொழுது போக்கு சாதனமாகவும்பயன்படுத்திய அவலங்கள் அரங்கேறியது அன்றைய அரபுலக தேசத்தில்! சமீபத்திலோபெண்களுக்கு ஆன்மா உண்டா? என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து விவாதம் நடத்தியது இன்றைய ஐரோப்பிய நாடுகள்.பெண் சமுதாயத்தை இவ்வளவு இழிவாகக் கருதும் மக்கள் மத்தியில் இஸ்லாம்சொல்லும் தீர்வைக் கொஞ்சம் செவி தாழ்த்திக் கேளுங்கள்! ''ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால்... (அல்குர்ஆன்16: 58) எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் கற்பனை கூட செய்ய இயலாத சுவனத்தின் நற்செய்தியைச் சொல்ல எந்த அரபிச் சொல்லை இறைவன் பயன்படுத்தினானோ அதே 'பஷர' என்ற மூலச்சொல்லைப் பயன்படுத்தியே பெண் குழந்தையை 'நற்செய்தி' என பிரகடனப் படுத்துகின்றான். அல்லாஹ்வின் தூதரான அண்ணல் நபியோ, கடுமையான முறையில் பெண்ணடிமைத் தனத்தைப் போற்றி வந்த அறியாமை அரபு மக்களிடம், ''இந்த உலகம் முழுவதும் செல்வம், அந்த

பைபிள் நம்மை வழி நடத்துமா ?வழி கெடுக்குமா??

Image
பைபிள் நம்மை வழி நடத்துமா ?வழி கெடுக்குமா?? சகோதரர்களே !மறுமை மற்றும் இம்மை வாழ்விற்கு வழிகாட்டவே வேதங்கள் .சரி பைபிள் கூறும் வழிமுறை இயல்பு வாழ்விற்கு பொருந்துமா ? அறிவிற்கு ஏற்றதா ? என ஆராய்வோம் விதவை மணம் மனைவியை இழந்த கணவன் மறுமணம் முடிப்பது போல் கணவனை இழந்த பெண்களும் மறுமணம் செய்ய அனுமதிக்கபடவேண்டும் என்பது தான் அறிவுலகின் எதிர்பார்ப்பு நான்   கர்த்தர்  . கன்னிகையாய்   இருக்கிற   பெண்ணை   அவன்   விவாகம்   செய்ய   வேண்டும்  . விதவையாகிலும் , தள்ளபட்டவளாகிளும் , வேசியாகிளும் , கற்பளிக்கபட்டவளாகிலும்   அவன்   விவாகம்   செய்யாமல்   தன்   ஜனத்தை   சேர்ந்த கன்னிகையை   அவன்   விவாகம்   செய்ய   வேண்டும் --   லேவியராகமம்  21:13 ,14 ஒரு பெண் விதவை ஆவது அவள் கையில் இல்லை எல்லாம் இறைவனின் சித்தம் .அத்தகைய இறைவன் இப்படி கூறி இருப்பாரா??

தவிர்க்க வேண்டிய குணங்கள் (வீடியோ)

Image
தவிர்க்க வேண்டிய குணங்கள் (வீடியோ)

அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம் நன்மை பயக்கும் மார்க்கம்.

நன்மை பயக்கும் மார்க்கம். இஸ்லாத்துடன் மற்ற மதங்களை ஒப்பிடும் போது எந்த மதத்திலும் இல்லாத பல்வேறு தனிச்சிறப்புகளை இஸ்லாத்தில் மட்டும் நம்மால் காணமுடியும். அல்லாஹ்வின் மார்க்கம் மனிதர்களின் மறுமை வெற்றிக்கு வழிகாட்டுவதோடு இம்மை வெற்றிக்கும் வழிகாட்கிறது. திருக்குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் ஒருவர் கடைபிடித்து வாழ்ந்தால் இந்த உலகத்திலேயே அவர் நன்மைகளை அடையமுடியும். இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும். பேய் பிசாசு நம்பிக்கையுள்ளவர்களால் இரவில் தன்னந்தனியாக செயல்படமுடியாது. யாரும் இல்லாத தெருவில் தனியே நடமாடமுடியாது. பயம் இவர்களை கவ்விக்கொள்ளும். நிம்மதியை இழந்து கோழகளாக திரிவார்கள். பில்­ சூனியத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் தனக்கு ஏதாவது சிறிய சிரமம் வந்துவிட்டாலும் யாராவது சூனியம் வைத்துவிட்டார்களோ என்று பதறுவார்கள். அறிவை இழப்பதோடு சம்பாதித்த பொருளையும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.

முஹர்ரமும் மூடநம்பிக்கையும்(வீடியோ)

Image
முஹர்ரமும் மூடநம்பிக்கையும் (வீடியோ)

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1கோடி பரிசு!

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு!!  ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்!!!... ஆயிரம் பெரியார்கள்  வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும். ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை. ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க - ரோமானிய கலாச்சாரத்திலிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும். பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள். இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள்.

தடை செய்யப்பட்ட தீமைகள்

தடை செய்யப்பட்ட தீமைகள் 1) ஷிர்க் எனும் இணைவைத்தல்! “நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48) 2) சூன்யம், ஜோதிடம் மற்றும் குறிபார்த்தல்! “யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத். “குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆட்சி மாற்றம் தந்த ஆஷுரா

ஆட்சி மாற்றம் தந்த ஆஷுரா உங்களை ஊரை விட்டும் துரத்தி விடுவோம்; உங்களை நாடு கடத்துவோம்” என்று இறைத் தூதர்களுக்கு எதிராக இறை மறுப்பாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எச்சரித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ் ஒரு வாக்குறுதியை அளிக்கின்றான். உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்” என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். இது, என் முன்னே நிற்க வேண்டும் என்பதை அஞ்சியோருக்கும், எனது எச்சரிக்கையை அஞ்சியோருக்கும் உரியது. அல்குர்ஆன் 14:13, 14 நானும் எனது தூதர்களுமே மிகைப்போம்” என்று அல்லாஹ் விதித்து விட்டான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன். அல்குர்ஆன் 58:21 நமது அடியார்களான தூதர்களுக்கு நமது கட்டளை முந்தி விட்டது. அவர்களே உதவி செய்யப்படுவார்கள். நமது படையினரே வெல்பவர்கள். அல்குர்ஆன் 37:171-173

பால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப்பார்வையும்

Image
பால்தாக்கரேயின் மரணமும், ஊடகங்களின் குருட்டுப்பார்வையும். மதவெறி மற்றும் ஊர்வெறியை மும்பை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டு ,   நாட்டைத் துண்டாடி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த இந்திய நாட்டில் இரத்த ஆறு ஓட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களையும் ,   உடைமைகளையும் இழக்கக் காரணமாக இருந்தவர் மதவெறி பிடித்த சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே.   இவர் கடந்த  17.11.12  அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் போலவும் ,  இவரைப்போல நாட்டின் மீதும் ,  நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர்.   பால்தாக்கரே என்ற இவர் தலைமையேற்று நடத்திய கலவரங்கள் கொஞ்ச நஞ்சமா ?  அதையெல்லாம் இந்த ஊடகங்கள் மறந்துவிட்டனவா ?

இவர்களை தூக்கிலிடுவது எப்போது???

Image
இவர்களை தூக்கிலிடுவது எப்போது??? அஜ்மல் கசாபின் தீர்ப்பை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை! தவறு செய்தவன் யாராக இருந்தாலு ம்... தண்டனை கொடுக்கவேண்டும் அதுவும் கடுமையாக என்பது இஸ்லாமிய பார்வையில் சரியே... ஆனால் அந்த தண்டனை அனைவருக்கும் சமமாக இருந்தால் அதுதான் ஜனநாயக நாடு.. ஒரு அயோக்ய நாயின் வாக்குமூலம் பாருங்கள் இவர்களுக்கு தூக்கு எப்போது??? “மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்… இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்… அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது… சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்…” - ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

கூத்தாடிகளின் கொட்டத்தை அடக்குவது எப்படி

Image
கூத்தடாடிகளின் கொட்டத்தை அட்க்குவது எப்படி? கமலஹாசன் எடுத்து வெளியிடவுள்ள விஸ்வரூபம் திரைப்படமும் விஜய் நடித்து வெளியிட்ட துப்பாக்கி படத்தைப் போலவே முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக சொல்லப்படுகிறதே ?   இதுபோல் தொடர்ந்து நடப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்கள் ? பதில் துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகுதான் இது குறித்து நமக்குத் தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சித்தரித்துள்ளார்கள் என்பதை நாம் இன்று வரை பார்க்கவில்லை. ஆனாலும் பல சகோதரர்கள் அதைப் பார்த்து அந்தப் படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையே பயங்கரவாதிகளாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளராகவோ காட்டியுள்ளது என்று தெரிவித்தனர். அப்படியானால் எங்கும் அந்தப் படத்தை திரையிட முடியாத அளவுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று 15/ 11/2012 அன்று கூடிய அவசர நிர்வாகக் குழுவில் முடிவுசெய்யப்பட்டது.

சொர்க்த்தில் தூய்மையான துணைகள்.

சொர்க்த்தில் தூய்மையான துணைகள். "சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்'' என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண்துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.  அப்படியானால் நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண்துணைகள் இல்லையா? என்ற கேள்வி எழும். இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் ஓர் இலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கையில் ஒருமையாகக் கூறும் போது மட்டுமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிச் சொல்லமைப்பு உள்ளது. தமிழில் அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும். படர்க்கைப் பன்மையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக "அவர்கள்' எனக் கூறுகிறோம்.

இயேசு ஒரு கிறிஸ்தவரா?

இயேசு ஒரு கிறிஸ்தவரா? மேற்கண்ட தலைப்பில் உள்ள கேள்விக்கு கிருஸ்தவர்கள்(?) அளிக்கும் பதில் “ஆம் “ என்பதே. இது உண்மையா ? இந்த கட்டுரை கிரிஸ்துவர்கள் முன்நிறுத்தும் இது போன்ற கேள்விக்கான பதிலை காரண காரியங்களோடு , ஆதாரங்களோடும் ஆய்வுக்கண்ணோட்டத்தோடும் தரும் ஒரு தாழ்மையான முயற்சியாகும். முதல் முதலாக, இந்த "கிறிஸ்து" குறித்து பார்த்துவிட்டு போகலாம். என் அனுபவத்தில், சாதாரண கிறிஸ்துவர்கள் உடனடியாக "மீட்பர்" என்று வரையறுப்பார்கள்.. இப்போது "மீட்பர்" என்றால் என்ன என்ற கேள்வி தோன்றும். உண்மையிலேயே "கிறிஸ்டோஸ்" என்ற கிரேக்க மொழிச்சொல்லில் இருந்து "எழுத்து பெயர்ப்பால்" உருவானதே இந்த "கிறிஸ்து" என்ற சொல். இச்சொல் "Mashiyach" ஹீப்ரு மொழியில் (அல்லது மேசியா) என்று மொழி பெயர்க்கப்படும். எந்த பொருள் ANNOINTED அல்லது "ஒரு தேர்வு". முஸ்லிம்களாகிய நாம் இவரை இயேசு கிறிஸ்து என்று அழைக்க தயங்குவதில்லை. குர்'ஆனும் இவரை அரபியில் மஸீஹ் என்று அழைக்கின்றது. ////அல்-குர்'ஆன் 4:171

வெறுக்கப்பட்ட குணங்கள்

வெறுக்கப்பட்ட குணங்கள் கெட்ட எண்ணங்கள் يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ(12) سورة الحجرات நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா?  அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12) ஆதாரமில்லாமல் சந்தேகிப்பது 6066 عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا رواه البخاري அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின

ஆங்கிலத்தில் நாமும் சாதிக்க...!!!

Image
ஆங்கிலத்தில் நாமும் சாதிக்க...!!! போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், உலகமயமாக்கப்பட்ட இக்காலகட்டத்தில் ஆங்கில அறிவு மிகவும் அவசியம் என்பதை யாராலும் மறுக்க இயலா து. ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே இந்த உலகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதிக்க முடியும் என்ற நிலையை நோக்கி உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினரிடம் திறைமைகள் இருந்தும் வேலைக்கான நேர்காணல்களில் ஆங்கில அறிவு போதுமான அளவில் இல்லையென்றால், ஆங்கில அறிவு பெற்றவர்களை விட பின்னோக்கி செல்லக்கூடிய நிலையை நாம் வெளிப்படையாக காணுகின்றோம். இன்றைய சமூகத்தில் நமது உரிமைகளை வென்றெடுக்கவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையவும் கல்வி தான் அடிப்படை என்பதை நாம் அறிந்து வைத்து இருக்கிறோம். அதே வேளையில், சிறந்த கல்வி தகுதிகளை பெற்று இருந்தாலும், ஆங்கில புலமை இல்லாவிட்டால் வீண் தான். ஆங்கில புலமையில் சிறந்து விளங்காவிட்டால் நம்மால் உயர்கல்வி மற்றும் போட்டித்தேர்வுகளில் சாதிக்கவே முடியாது. ஆங்கிலம் என்பது அணைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழி. இருந்தாலும் நாம் ஆங்கிலம் கற்பதற்கு அதிக சிரத்தை எடுப்பது இல்லை

இஸ்லாத்தில் இணைந்தார் ஜெர்மன் விஞ்ஞானி!-

நான் ஏன் முஸ்லீம் ஆனேன்? ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம். முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார ். தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வமாக இருந்ததாக கூறும் இவர் அறிவியல் குறித்து ஓரளவு அறிவு ஞானம் பெற்ற பின்னர் இந்த பிரபஞ்சம் குறித்து ஆராய்ந்த அவர் அதில் எந்தவித பிளவுகளுமின்றி மிகத் துல்லியமாகப் இருப்பதைக்கண்டு, இந்த பிரபஞ்சம் தாமாகத் தோன்றியிருக்க முடியாது, இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் தான் படைத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவில் ஓரு கடவுள் நம்பிக்கையாளராக மாறியதாகக் கூறுகிறார். ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மதத்தையும் தான் பின்பற்ற வில்லைய

நாங்கள் சொல்வது என்ன???(வீடியோ)

Image
நாங்கள் சொல்வது என்ன???[ வீடியோ ]

முஹர்ரமும் முஸ்லிம்களின் நிலையும் (வீடியோ)

Image
முஹர்ரமும் முஸ்லிம்களின் நிலையும் (வீடியோ)

நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு

Image
நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு – விஞ்ஞானம்.  “திருக்குர்ஆன் வசனத் தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள்ள ஒரு கப்பல்” ” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்” எனவும் கூறப்பட்டது . (திருக்குர்ஆன் 11:44.) இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை” (திருக்குர்ஆன் 26:121.).“அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்”. (திருக்குர்ஆன் 29:15.)” பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? “. (திருக்குர்ஆன் 54:13-15.)இவ்வசனங்களில் நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

ஹிஜ்ரி இஸ்லாமிய ஆண்டா?

ஹிஜ்ரி இஸ்லாமிய ஆண்டா? ஹிஜ்ரி ஆண்டு எனும் ஆண்டைக் கணக்கிடும் முறை இஸ்லாமிய ஆண்டு என்று கூறப்பட்டாலும் குர்ஆனிலோ ஹதீஸிலோ இதற்கு ஆதாரம் இல்லை. நான் ஹிஜ்ரத் செய்ததில் இருந்து ஆண்டுகளை எண்ணிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் நபித்தோழர்கள் யானை ஆண்டு என்பதைத் தான் பயன்படுத்தி வந்தனர். ஆப்ரஹா என்ற மன்னன் காபாவை அழிக்க யானைப் படையுடன் வந்த போது அவனும் அவனது யானைப் படையும் அழித்து ஒழிக்கப்பட்ட ஆண்டைத் தான் யானை ஆண்டு என்று அரபுகள் பயன்படுத்தி வந்தனர். யானை ஆண்டுக்கு முன் - யானை ஆண்டுக்குப் பின் என்று தான் நிகழ்ச்சிகளை அரபுகள் குறிப்பிட்டு வந்தனர்.

பெண்கள் முகத்தை மறைப்பது அவசியமா?

Image
பெண்கள் முகத்தை மறைப்பது அவசியமா? முகத்திரை மறுப்புக்கு மறுப்பு பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது  ' ஹிஜாப் '  என்றும் நம் நாட்டில் பர்தா ,  புர்கா ,  துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது . பெண்கள் தங்களுடைய முகத்தையும் கட்டாயம் மறைத்தாக வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் பெண்கள் தங்களுடைய முகத் தைக்  கட்டாயம் மறைத்தாக வேண்டும் என்பதற்கு நபிவழியில் எந்தச் சான்றுகளும் இல்லை. மாறாக நபி கள் நாயகம்  (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹிஜாப் அணியும் போது பெண்கள் தங்களுடைய முகங்களை மறைக்கவில்லை என்பதற்கு ப்  பல சான்றுகள் உள்ளன.

ஜாகிர் நாயக் மீது காழ்ப்புணர்ச்சி ஏன்?

ஜாகிர் நாயக் மீது காழ்ப்புணர்ச்சி ஏன்? நான் அண்மையில் ஆன்லைன் பீ ஜே வெப்சைட்டில் ஜாகிர் நாயக்கின் அறியாமை என்ற   தலைப்பில் , கருவில் உள்ள குழந்தை வெளி உலகில் நடப்பதைச் செவியுருமா என்பது   குறித்து ஜாகிர் நாயக்கரின் கருத்துக்கு உங்களுடைய விமர்சனம் படித்தேன்.   அதில் நீங்கள் ஜாகிர் நாயக் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களைக் கூறி   உள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளீர்கள். மேலும் யாராவது முடிந்தால் ஜாகிர் நாயக்கின் கருத்துக்கு அவரிடம் விளக்கம் கேட்டு பதில் அளிக்குமாறு கூறி   இருந்தீர்கள். நான் ஜாகிர் நாயக்கிடம் கேட்கவில்லை. ஆனால் நான் சில   டாக்டர்களிடம்   இதைப்பற்றி விசாரித்தேன். நான் விசாரித்த டாக்டர்கள் சொன்ன   பதிலும் ஜாகிர் நாயக்கின் பதிலும் ஒன்றாகவே உள்ளது.

'9/11 - என்ன மாதிரியான மதம் இது?'

'9/11 - என்ன மாதிரியான மதம் இது?' "9/11 தாக்குதலின் போது, மனக்குழப்பத்தில் இருந்த பலரையும் போல, ஜோஹன்னாஹ் சகரிச் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார், 'இம்மாதிரியான செயலை செய்ய இவர்களை ஊக்குவிக்கிறதென்றால் என்ன மாதிரியான மதம் இது?' இந்த சகோதரி, இஸ்லாத்தை தவிர மற்ற மதங்களை படித்திருக்கின்றார். இஸ்லாம் குறித்த தன்னுடைய எண்ணங்களை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு குர்ஆன் பிரதியை வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தார். ஏழு வசனங்கள் கொண்ட முதல் அத்தியாயம், அன்புடைய இறைவனிடம் இருந்து வழிகாட்டுதலை பெறுவதை பற்றி இருந்தது. சில வாரங்களில் குர்ஆன் முழுவதையும் படித்துவிட்டார் சகரிச். 9/11 அரங்கேறி சுமார் பத்து வாரங்களுக்கு பிறகு, 'நான் இப்போது உணர ஆரம்பித்தேன்' என்று கூறும் இவர், 'நான் ஒரு முடிவை தற்போது எடுக்க வேண்டும்' 

தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ? சம்ஜ்யோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன்  யார் ? சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ? மக்க மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ? அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ? கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ? மலகோனில் குண்டு வைத்தவன் யார் ? நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ? குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ? நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ? காந்தியை கொன்றவன் யார் ? விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ? பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார்? மாவீரன் கார்க்ரேவை கொன்றவன் யார் ? ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்? இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?

புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...

Image
புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக... வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீது என்றென்றும் நிலவட்டுமாக !!! நாம் நம்முடைய பெற்றோர் முஸ்லிம்களாக இருப்பதால் நாமும் வாரிசு முறையில் முஸ்லிம்களாக இருக்கின்றோம் ,ஏக இறைவனையும் ,அவனது திருத் தூதர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களையும் பின்பற்றி வாழ்ந்து வருகிறோம்,நாம் பிறப்பிலே முஸ்லிம்களாக வாழ்ந்து வருவதால் இஸ்லாத்தின் சட்ட,திட்டங்களை நன்கு அறியா விட்டாலும் ,ஓரளவிற்கு கடைபிடித்து வாழ்ந்து அருகிறோம்,இந்த சத்திய இஸ்லாத்தை படித்து,பல வழிகளிலும் ஆய்வு செய்து, மாற்று மதத்தில் இருந்து வருகை புரியும் எம் தொப்புள் கொடி உறவுகள் விளங்கி வைத்திருக்கின்ற அளவிற்கு கூட நாம் விளங்க வில்லையே என்று மனம் குமுறுகிறது,இந்த சத்திய மார்க்கத்தில் எவ்வளவோ நபர்கள் தினத்தோறும் படையெடுத்து நுழைந்த வண்ணம் உள்ளனர்,அல்ஹம்துலில்லாஹ்,அ வர்களுக்கு மத்தியில் இந்த இரண்டு சகோதர,சகோதரிகள் தங்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,,,,,ஒரு படிப்பினைக்காக,,,,,,

மரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்:

மரணிக்கும் போதும், மண்ணறையிலும் நிகழ்பவைகள்: அல்லாஹ் கூறுகிறான்: – ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35) மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரணவேளை என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த உலகவாழ்வின் இறுதிக் கட்டமான அந்த மரணத்தின் நேரம் மற்றும் மண்ணறைகளில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் அமல்கள் செய்வதற்குரிய கால, நேரங்கள் எல்லாம் நாம் உயிருடன் இருக்கும் போது தான். மரணம் நம்மை வந்தடைந்தவுடன் நம்முடைய நன்மை தீமை பதிவேடுகள் மூடப்படும். ஆகவே நல்ல அமல்கள் செய்வதற்கு இதுதான் நேரமாகும்.

கொடிய வரதட்சணையின் கோர முகம்

Image
கொடிய வரதட்சணையின் கோர முகம் பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலமாக அப்பெண்களை பெற்றிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டே அவர்களின் கற்புகளை சொந்தமாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்களின் படுக்கையில் படுக்க வைக்காமல் இருப்பதே அவர்கள் உங்களுக்கு செய்யும் கடமையாகும். அதை அவர்கள் செய்தால் காயமின்றி அவர்களை அடியுங்கள். உணவும் உடையும் வழங்குவதே நீங்கள் அவர்களுக்கு நல்ல முறையில் செய்ய வேண்டிய கடமையாகும். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய இறுதி உரையாகும். ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத் ஒரு பெண்ணை ஒருவன் மணம் முடிக்கின்றான் என்றால் அந்தப் பெண்ணை அல்லாஹ் அவரிடம் அடைக்கலமாகத் தந்திருக்கின்றான். அல்லாஹ்வின் கட்டளைப் படியே அவர் அப்பெண்ணை திருமணம் முடிக்கின்றார். திருமணம் முடித்து விட்டால் அப்பெண்மணி சாகும் காலம் வரை அவருக்கு சாசுவதமாக சாசனம் செய்து கொடுக்கப்பட்ட அடிமைப் பெண்! தன்மானம், சூடு, சொரணை என்று சகல உணர்வுகளையும் இழந்து விட்ட ஜடப் பொருள்! வெறும் சடலம் என்ற நிலைகள் ஒரு போதும் கிடையாது. 

பிறமதத்தினர் பள்ளிவாசலுக்குள் வரலாமா?

பிறமதத்தினர் பள்ளிவாசலுக்குள் வரலாமா ? முஸ்லிமல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் வரக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் உள்ளது. இது தவறான கருத்தாகும். குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இதைத் தெளிவாக அனுமதிக்கின்றன நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பள்ளியான மஸ்ஜிதுந் நபவீயில் முஸ்லிமல்லாதவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க வைத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம் 462حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ سَمِعَ أَبَا هُرَيْرَةَ قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَطْلِقُوا ثُمَامَةَ فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنْ الْمَسْجِدِ فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ  رواه