புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக... வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீது என்றென்றும் நிலவட்டுமாக !!! நாம் நம்முடைய பெற்றோர் முஸ்லிம்களாக இருப்பதால் நாமும் வாரிசு முறையில் முஸ்லிம்களாக இருக்கின்றோம் ,ஏக இறைவனையும் ,அவனது திருத் தூதர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களையும் பின்பற்றி வாழ்ந்து வருகிறோம்,நாம் பிறப்பிலே முஸ்லிம்களாக வாழ்ந்து வருவதால் இஸ்லாத்தின் சட்ட,திட்டங்களை நன்கு அறியா விட்டாலும் ,ஓரளவிற்கு கடைபிடித்து வாழ்ந்து அருகிறோம்,இந்த சத்திய இஸ்லாத்தை படித்து,பல வழிகளிலும் ஆய்வு செய்து, மாற்று மதத்தில் இருந்து வருகை புரியும் எம் தொப்புள் கொடி உறவுகள் விளங்கி வைத்திருக்கின்ற அளவிற்கு கூட நாம் விளங்க வில்லையே என்று மனம் குமுறுகிறது,இந்த சத்திய மார்க்கத்தில் எவ்வளவோ நபர்கள் தினத்தோறும் படையெடுத்து நுழைந்த வண்ணம் உள்ளனர்,அல்ஹம்துலில்லாஹ்,அ வர்களுக்கு மத்தியில் இந்த இரண்டு சகோதர,சகோதரிகள் தங்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,,,,,ஒரு படிப்பினைக்காக,,,,,,