கிரகணம் ஓர் அறிவியல் விளக்கம்

 கிரகணம் ஓர் அறிவியல் விளக்கம்

கிரகணம் என்றால் என்னஅது எத்தனை வகைப்படும்என்பன பற்றி ஒரு சிறு குறிப்பை இப்போது பார்ப்போம்.

 ஒளிமறைப்பு (கிரகணம்)

புவியும் நிலவும் சூரியனிடமிருந்து தான் ஒளியைப் பெறுகின்றனஅவ்வாறு புவியும் நிலவும் பெறுகின்ற சூரியஒளியைப் புவியோ அல்லது நிலவோ தடுக்கும் போது கிரகணம் ஏற்படுகின்றதுஇத்தகைய ஒளிமறைப்பைக்கிரகணம் என நாம் அழைக்கிறோம்.
 இந்நிகழ்ச்சியை ஒரு எடுத்துக்காட்டுடன் நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்காலை அல்லது மாலைவேளைகளில் சூரியனை நோக்கி நில்லுங்கள்அப்பொழுது உங்கள் நிழல் உங்களுக்குப் பின்னால் விழுவதைப்பார்க்கலாம்மற்றொருவரை உங்களுக்குப் பின்னால் உங்கள் நிழலில் நிற்கச் சொல்லுங்கள்அவர் மீது உங்கள்நிழல் படிந்திருக்கும்அவ்வாறு நிற்பவரின் மீது சூரிய ஒளி விழாமல் உங்கள் நிழல் தடுக்கிறதுஉங்கள் நிழலில்நிற்பவரை நிழலிலிருந்து விலகி நிற்கச் சொல்லுங்கள்இப்பொழுது சூரிய ஒளி இருவர் மீதும் சமமாகவிழுகிறது.
அது போலவே சூரியனுக்கு நேராக வரும் பொழுது புவியின் நிழலும் நிலவின் நிழலும் விண்வெளியில்விழுகின்றனபுவியின் நிழலில் நிலவு வரும் பொழுது அல்லது நிலவின் நிழலில் புவி வரும் பொழுதுஒளிமறைப்பு நிகழ்ச்சி (கிரகணம்ஏற்படுகிறது.

ஒளிமறைப்பு நிகழ்ச்சி (கிரகணம்எல்லா பௌர்ணமிஅமாவாசை நாட்களிலும் நிகழ்வதில்லைஏன்நிலவுபுவியை வலம் வரும் பாதையின் கோணம்புவி சூரியனை வலம் வரும் பாதைக் கோணத்தை விட டிகிரிசாய்வாக உள்ளதுஎனவே பெரும்பாலும் நிலவு புவியின் நிழல் விழும் பகுதிக்கு அப்பால் சென்று விடுகிறது.அது போலவே புவியும் நிலவின் நிழல் விழும் பகுதிக்கு அப்பால் சென்று விடுகிறதுஅவற்றின் சுழலும் காலவேறுபாட்டினால் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் புவியானது நிலவின் நிழல் விழும் பகுதியிலும்நிலவானதுபுவியின் நிழல் விழும் பகுதியிலும் வந்து விடுகின்றன.
அவ்வேளைகளில் சூரியன்புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து விடுகின்றன.ஆதலால் இவை மூன்றின் அமைவிடங்களைப் பொறுத்து கிரகணம் நிகழ்கிறது.

 சந்திர கிரகணம்

 சந்திர கிரகணம் நிகழ்ச்சி ஏற்படக் கீழ்க்கண்ட சூழ்நிலைகள் உருவாக வேண்டும்.
1. சூரியன்புவி மற்றும் நிலவு ஆகியவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைய வேண்டும்.
2. நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் புவி அமைய வேண்டும்.
3. முழுநிலவாகக் காட்சியளிக்கும் பௌர்ணமி இரவாக இருத்தல் அவசியம்.

 சூரிய கிரகணம்

 சூரிய கிரகணம் நிகழ்ச்சி ஏற்படக் கீழ்க்கண்ட சூழ்நிலைகள் உருவாக வேண்டும்1. சூரியன்நிலவு மற்றும் புவிஆகியவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும்.
2. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு அமைய வேண்டும்.
3. அமாவாசை நாளாக இருத்தல் அவசியம்.
சந்திரன்சூரியனை விட மிக மிகச் சிறியதுஆனால் சந்திரனால் எவ்வாறு சூரியனை முழுமையாக மறைக்கமுடிகின்றது?
ஒரு கண்ணை மூடிக் கொண்டு மற்றொரு கண்ணுக்கு அருகில் நம் விரலை வைத்துப் பார்த்தால் எதிரே சற்றுத்தொலைவில் உள்ள கட்டடம் பெரிதாக இருந்தாலும்தொலைவில் உள்ளதால் நமக்கு சிறிதாகத் தெரிகின்றது.அது போல் விரல் சிறிதாக இருந்தாலும்நம் கண்ணுக்கு அருகில் இருப்பதால் பெரிய கட்டடத்தையே மறைக்கக்கூடியதாக இருக்கின்றது.
சந்திரனை விட சூரியன் 400 மடங்கு பெரிதாக இருந்தாலும்பூமியிலிருந்து பார்க்கும் போது சந்திரனும்,சூரியனும் ஒரே அளவாக இருப்பதாகத் தோன்றுகின்றதுஇதற்குக் காரணம்பூமியிலிருந்து சந்திரன் இருக்கும்தூரத்தைக் காட்டிலும்பூமியிலிருந்து சூரியன் 400 மடங்கு தூரத்தில் இருப்பது தான்ஆகவே தான் சூரியனும்சந்திரனும் ஒரே அளவாக நமக்குத் தெரிகின்றனஇதனால் சந்திரன்தன்னை விட 400 மடங்கு பெரிதானசூரியனை முழுமையாக மறைக்க முடிகின்றது. 

 முழு சூரிய கிரகணம் (Total Eclipse)

சூரியனுக்கு நேர் எதிரில்புவிக்கு இடையில் நிலவு வருகின்ற நேரங்களில் புவி நிலவின் நிழல் பகுதிக்குள்சென்று அமைகிறதுஅவ்வாறு நிலவின் நிழலில் புவி அமைவதால் சூரிய ஒளி புவியின் மீது படாமல்மறைக்கப்படுகின்றதுஇந்த நிகழ்ச்சி சூரிய கிரகணம் எனப்படுகிறதுபுவியை விட நிலவு உருவில் மிகச் சிறியது.எனவே புவியின் மொத்தபரப்பில் அதன் நிழல் மிகக் குறைந்த பரப்பில் மட்டுமே விழுகிறதுஇவ்வாறு நிலவின்நிழல் விழும் புவியின் பரப்பில் வசிக்கும் மக்கள் மட்டுமே முழு சூரிய கிரகணத்தைக் காண இயலும்ஏனையபகுதிகளில் வசிப்பவர்கள் முழுசூரிய கிரகணத்தைக் காண இயலாது.
புவி தனது அச்சில் சுழல 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறதுநிலவு தன் அச்சில் சுழல 27.3 நாள்களாகின்றன.இவ்விரண்டும் சுழலும் வேகத்தில் காணப்படும் வேறுபாட்டினால் மிகக் குறைந்த நேரமே அதாவது நிமிடங்கள்மட்டுமே முழு சூரிய கிரகணம் (பர்ற்ஹப் ஊஸ்ரீப்ண்ல்ள்ங்நீடிக்கும்அந்த நிமிடங்கள் புவி இருளில்மூழ்கிவிடும்.

 பகுதி கிரகணம் (Partial Eclipse)

சந்திரன்சூரியனுக்கும் பூமிக்கும் இடையே கடந்து செல்லும்ஆனால் சூரியனை அது முழுமையாகமறைக்காதுஇது பகுதி சூரிய கிரகணம் எனப்படுகின்றது.

 கங்கண கிரகணம் (Annular Eclipse)

கங்கணம் என்றால் தமிழில் வளையம்மோதிரம்காப்பு என்று பொருள்படும்புவி சூரியனைத் தனது நீள்வட்டபாதையில் வலம் வருகிறதுஅவ்வாறு வலம் வரும் பொழுது ஓர் ஆண்டில் சூரியனுக்கும் புவிக்கும் இடையில்காணப்படும் தொலைவு சிறிது மாறுபடுகிறதுபுவி சூரியனுக்கு அருகில் வரும் பொழுது நிலவு வெகுதொலைவில் அமைகிறதுஅவ்வேளைகளில் நிலவால் சூரியனை முழுமையாக மறைக்க இயலாதுஏனெனில்நிலவு சூரியனை விட அளவில் மிகச் சிறியதுஆதலால் இத்தகைய ஒளி மறைப்பின் போது சூரியனின்பிரகாசமான மையப் பகுதி மட்டுமே நிலவால் மறைக்கப்படுகிறதுஅவ்வேளைகளில் வெளிப்படும் வெளிச்சம்சூரியனின் விளிம்புகளிலிருந்து மட்டுமே வருகிறதுஇதை ஒரு சிறிய சோதனை மூலமாகப் புரிந்துகொள்ளலாம்.
 ஒரு ரூபாய் நாணயத்தின் மீது ஒரு 50 பைசா நாணயத்தை வைக்கவும்50 பைசா நாணயத்தின் எல்லையில் ஒருரூபாய் நாணயத்தின் விளிம்புகள் தெரியும்ஒரு ரூபாய் நாணயத்தின் மையம் 50 பைசா நாணயத்தால்மறைக்கப்படுகிறதுஅது போலவே சூரியனின் மையப்பகுதி நிலவினால் மறைக்கப்பட்டு நிலவின் வட்டு(உண்ள்ஸ்ரீஎல்லையிலிருந்து மட்டுமே சூரிய வெளிச்சம் வெளிப்படும்இந்த நிகழ்ச்சி வளைய கிரகணம்அல்லது கங்கண கிரகணம் (ஆய்ய்ன்ப்ஹழ்எனப்படுகிறதுஇத்தகைய கிரகணத்தையும் நிலவின் நிழல் விழும்புவியின் பரப்பில் வசிக்கும் மக்கள் மட்டுமே காண இயலும்.

 கலப்பு கிரகணம் (Hybrid Eclipse)

உலகின் ஒரு பகுதியில் முழுக் கிரகணமாகவும்உலகின் வேறு சில பகுதிகளில் வளைய சூரிய கிரகணமாகவும்காட்சியளிப்பது கலப்பு கிரகணம் ஆகும்.
பொதுவாக சூரிய கிரகணம் ஓர் ஆண்டில் இரண்டு முதல் நான்கு முறை நிகழக்கூடும்சில ஆண்டுகளில் அரிதாகஐந்து முறை நிகழலாம்சூரிய கிரகணத்தை நமது கண்களால் நேரடியாகப் பார்க்கக் கூடாதுஏனெனில் சூரியஒளி நம் கண்ணுக்குக் கேடு விளைவிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

 கிரகணமும் கியாமத்தும்

வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நிகழவிருக்கின்ற கங்கண சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் விளக்கங்களைக்கண்டோம்இப்போது இதில் மார்க்கம் தொடர்பான விளக்கத்தைப் பார்ப்போம்.
 இஸ்லாம் கிரகணத்தைப் பற்றி என்ன கூறுகின்றது?

நபி (ஸல்அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டதுஅந்நாளில் நபி (ஸல்அவர்களின் மகன் இப்ராஹீம்இறந்து விட்டிருந்தார்உடனே மக்கள்இப்ராஹீம் இறந்ததால் தான் சூரியனுக்குக் கிரகணம் பிடித்து விட்டதுஎன்று பேசினார்கள்ஆனால் நபி (ஸல்அவர்கள் அந்த அறியாமையைக் களைந்தெறிகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டதுஅன்றைய தினத்தில்(நபியவர்களின் புதல்வர்இப்ராஹீம் (ரலிஇறந்தார்இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத் தான்கிரகணம் ஏற்பட்டது'' என்று பேசிக் கொண்டனர்அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள்சூரியனும்சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும்எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும்கிரகணம் ஏற்படுவதில்லைஎனவேஅவற்றை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்;தொழுங்கள்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்முஃகீரா பின் ஷுஅபா (ரலி)நூல்புகாரி 1043
இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம் என்பதற்கு நபி (ஸல்அவர்களின் இந்த விளக்கம் சான்றாகஅமைந்துள்ளதுகிரகணம் பற்றி மக்கள் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தும் போதுநபி (ஸல்அவர்கள்அந்த அறியாமை இருளை நீக்கிகிரகணம் என்பது யாருடைய மரணத்துக்காகவும் நிகழ்வதில்லைஅதுஇறைவனின் ஏற்பாடு என்பதை உணர்த்துகின்றார்கள்.  
முஹம்மது (ஸல்அவர்கள் இறைவனின் தூதர் என்பதற்கும் இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.நபி (ஸல்அவர்கள் ஒரு சாதாரண மனிதராக இருந்துமக்கள் இவ்வாறு பேசியிருந்தால் அதைத் தமதுதூதுத்துவத்திற்கு ஆதாரமாக ஆக்கியிருப்பார்கள்நபியின் மகன் இறந்து விட்டான்அதனால் கிரகணம் பிடித்துவிட்டது என்று மக்களே பேசிக் கொள்ளும் போது அதைத் தடுக்க வேண்டிய அவசியம் இல்லைஇன்றுகடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பலர்இயற்கை நிகழ்வுகளைக் கூடத் தங்கள் அற்புதம் என்றுவாதிப்பதைப் பார்க்கிறோம்.
ஆனால் நபி (ஸல்அவர்கள்இதை அற்புதம் என்று வாதிடுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தும்மக்களேஇதை அற்புதம் என்று சொன்ன போதும் நபியவர்கள் உண்மையான இறைத் தூதர் என்பதால் அவ்வாறுபோலியான தகுதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
கிரகணம் ஏற்படுவதற்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைஅது இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளானசூரியனும் சந்திரனும் ஒரே நேர்க் கோட்டில் வரும் நிகழ்வு என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்அவர்கள்இறைத் தூதர் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.

 இறைவன் விடுக்கும் எச்சரிக்கை

 சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி (ஸல்அவர்கள் உலக முடிவு நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித்திடுக்குற்றவர்களாக எழுந்து பள்க்குச் சென்றார்கள்.
நிலைருகூஉசஜ்தா ஆகியவற்றை நீண்ட நெடிய நேரம் செய்து தொழுதார்கள்நான் ஒருபோதும் அவர்கள்அவ்வாறு செய்யக் கண்டதில்லை. (தொழுகை முடிந்ததும்)அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்தஅடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்லஎனினும் அல்லாஹ் தன்அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான்இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால்அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள்கவனம் செலுத்துங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)நூல்புகாரி 1059
 உண்மையில் நபி (ஸல்அவர்கள் அஞ்சியது போல் கிரகணம் என்பது ஒரு குட்டி கியாமத் நாளாகத் தான்அமைகின்றதுகொம்புள்ள இரண்டு ஆடுகள் கால் முட்டிகளைத் தூக்கிக் கொண்டு முட்டுவதற்கு ஆயத்தமாகிநிற்பது போல் மூன்று கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றன.
வானம் பிளக்கும் போது எண்ணையைப் போல் சிவந்ததாக ஆகும்.
 அல்குர்ஆன் 55:37
சந்திர கிரகணத்தின் போது வெண்ணிலவு சிவந்து எரிவது போன்று வானம் எங்கும் சிவப்பு வண்ணம்தெளிக்கப்பட்டது போல் காட்சியளிக்கின்றதுஇது கியாமத் நாளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துவதுபோன்றுள்ளது.
கங்கண சூரிய கிரகணத்தின் போதுசூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நெருப்பு பற்றி எரிவது போல்தோன்றுகின்றதுஏதோ மறு நொடியில் மறுமை துவக்கம் அமைந்து விடுமோ என்பது போன்ற ஒரு கோர பயம்நம்மை ஆட்கொள்கின்றது.
கியாமத் நாள் வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்குஒளியைக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்செவியுற மாட்டீர்களா?'' என்றுகேட்பீராக! (அல்குர்ஆன் 28:71)
இந்த வசனத்தில் அல்லாஹ் நம்மை அச்சுறுத்துவது போன்றுபூமியில் விழும் நிழலைத் தொடரச் செய்துவிட்டால் அவனைத் தவிர வேறு யார் வெளிச்சத்தைத் தர முடியும்?  

நபிகள் நாயகம் கண்ட நரகக் காட்சி

 அல்லாஹ்வின் தூதரேநீங்கள் (தொழுது கொண்டிருக்கையில்இதோ இந்த இடத்தில் எதையோ பிடிக்கமுயன்றதைக் கண்டோம்பிறகு (அந்த முயற்சியிலிருந்துபின்வாங்கியதையும் கண்டோமே! (அது ஏன்?)''என்று கேட்டார்கள்அதற்கு நபி (ஸல்அவர்கள்நான் சொர்க்கத்தைக் கண்டேன்அல்லது சொர்க்கம் எனக்குக்காட்டப்பட்டது'. அதிலிருந்து (பழக்குலையொன்றை எடுக்க முயன்றேன்அதை நான் எடுத்திருந்தால் இந்தஉலகம் உள்ளவரை நீங்கள் அதிலிருந்து புசித்திருப்பீர்கள்.
மேலும் நான் நரகத்தையும் கண்டேன்இன்றைய தினத்தைப் போல (ஒரு பயங்கரமானகாட்சி எதையும்ஒருபோதும் நான் கண்டதேயில்லைமேலும்நரகவாசிகல் அதிகமாகப் பெண்களையே கண்டேன்'' என்றுகூறினார்கள்.
அறிவிப்பவர்அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல்
புகாரி 5197
 நபி (ஸல்அவர்கள் இந்தக் கிரகண நாளில் சுவனம் மற்றும் நரகத்தின் காட்சிகளை நேரடியாகவே கண்ட காட்சி,உண்மையில் கிரகணம் கியாமத் மற்றும் மறுமை உலகை அடியார்கள் ஒரு கணம் தங்கள் கண் முன்னால்கொண்டு வந்து நிறுத்துவதற்காகத் தான் என்று தெளிவாக விளங்குகின்றது.

அனைத்தையும் கண்ட அல்லாஹ்வின் தூதர்

 நீங்கள் நுழையவிருக்கின்ற (மறுமை வெளிசொர்க்கம் மற்றும் நரகம் உட்படஅனைத்தும் எனக்குக்காட்டப்பட்டனஎனக்குச் சொர்க்கம் காட்டப்பட்ட போது அதிலிருந்த பழக் குலையொன்றை நான் எட்டிப் பிடிக்கப்போனேன்ஆனால்எனது கைக்கு எட்டவில்லைஎனக்கு (இத்தொழுகையின்போதுநரகமும் காட்டப்பட்டது.அதில் பனூ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ஒரு பூனையின் காரணத்தால் வேதனைசெய்யப்படுவதை நான் பார்த்தேன்அவள் தனது பூனைக்குத் தீனி போடாமல் கட்டிப் போட்டு வைத்திருந்தாள்.அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்துவிடவுமில்லை. (இதன் காரணமாகவே அவள்நரகம் சென்றாள்.) மேலும்நரகத்தில் நான் அபூஸுமாமா அம்ர் பின் மாலிக் என்பவரையும் பார்த்தேன்அவர்நரகத்தில் தனது குடலை இழுத்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்மக்கள் ஒரு மாமனிதர் (அல்லதுதலைவரின்மரணத்திற்காகவே சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுகிறதுஎன்று கூறுகின்றனர். (ஆனால்அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும்அவற்றை உங்களுக்கு இறைவன்காண்பிக்கிறான்அவற்றுக்குக் கிரகணம் ஏற்பட்டால் வெளிச்சம் வரும்வரை நீங்கள் (இறைவனைத்)தொழுங்கள்'' என்று கூறினார்கள்.
 அறிவிப்பவர்ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்
முஸ்லிம் 1508
கிரகணத்தின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் ஆற்றிய உரையில்பூனைக்கு இழைக்கப்பட்ட அநீதி,ஹாஜிகளிடம் செய்த திருட்டு உட்பட சமுதாயத்திற்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துஅனைத்துப்பாவங்களுக்கும்தீமைகளுக்கும் உரிய தண்டனையும் அத்தொழுகையில் கண்டதாகக் குறிப்பிடுவது நம்மைஅதிர்ச்சியில் உறைய வைக்கின்றது.

 திகிலடைந்த திருத்தூதர்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் ஆற்றிய கிரகண அதிர்ச்சி உரையில் தொடர்ந்து கூறியது:
முஹம்மதின் சமுதாயத்தாரேதன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபட்டாலும்(அதைக் கண்டு கடுமையாக ரோஷம் கொள்பவர் அல்லாஹ்வைவிட வேறெவருமிலர்முஹம்மதின்சமுதாயத்தாரேஅல்லாஹ்வின் மீதாணையாகநான் அறிவதையெல்லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச்சிரிப்பீர்கள்அதிகமாக அழுவீர்கள்நான் (சொல்ல வேண்டியதைச்சொல்லிவிட்டேன் அல்லவா?
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)

நூல்
முஸ்லிம் 1499
கிரகணத்தைக் கண்டு பயந்த நபி (ஸல்அவர்கள் பயணமே சொல்லி விட்டார்கள் என்றால் கிரகணம் என்பதுஒரு குட்டி கியாமத் என்று தான் நாம் விளங்க முடிகின்றது.

கப்ர் வேதனையைப் பற்றிய எச்சரிக்கை

எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் (இந்தஇடத்தில் (தொழுகையில் இருந்தபோதுகண்டேன்.சொர்க்கம்நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும் எனக்கு இறைவனின் தரப்பிலிருந்து (வஹீ)அறிவிக்கப்பட்டது:
 நீங்கள் உங்கள் மண்ணறைகளுக்குள் (பெருங்குழப்பவாதியானமஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு நிகரான'அல்லது நெருக்கமானஅளவிற்கு சோதிக்கப்படுவீர்கள்அப்போது (கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்இந்தமனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?'' என்று (நபியாகிய என்னைப் பற்றிக்கேட்கப்படும்அப்போது இறைநம்பிக்கையாளர்அல்லது உறுதிகொண்டவர்இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்ஆவார்கள்;அன்னார் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள்நாங்கள் (அவரதுஅழைப்பைஏற்றோம்அவர்களைப் பின்பற்றினோம்இவர் முஹம்மத் (ஸல்அவர்கள் தாம்என்றுமும்முறை கூறுவார்அப்போது (கேள்வி கேட்ட வானவர்களின் தரப்பிலிருந்துதகுதி பெற்றவராக நீர்(நிம்மதியாகஉறங்குவீராக!என்றும் நிச்சயமாகவே நீர் (இறைத் தூதரானஇவரைப் பற்றி இத்தகையஉறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்இருந்தீர் என்று நாமறிவோம்என்றும் கூறப்படும்.நயவஞ்சகனோஅல்லது சந்தேகப் பேர்வழியோ', எனக்கு எதுவும் தெரியாதுமக்கள் அவரைப் பற்றி ஏதோசொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன்எனவே நானும் அது போன்று கூறினேன்'' என்பான்.
அறிவிப்பவர்அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி)

நூல்
புகாரி 86, 184

 கிரகணமும் வணக்கமும்

அறிவியலாளர்கள் கண் கொள்ளாக் காட்சி என்று கேமராக்களையும் வீடியோக்களையும் தூக்கிக் கொண்டு சூரிய,சந்திர கிரகணங்களைப் படம் பிடிக்க பேயாய் அலைகின்றனர்சிலர் விமானத்தில் பயணம் செய்து விமானத்தில்இருந்தவாறே கிரகணத்தை கேமராக்களுக்குள் விழுங்குகின்றனர்.
இப்படி ஒரு சாரார் ஆய்வில் இறங்கியிருக்கும் போது மற்றொரு சாரார் சூரியசந்திர கிரகணங்களை ஏதோ ஒருவான வேடிக்கை போல் உல்லாசப் பார்வையில் இறங்கி விடுகின்றனர்மூன்றாவது சாரார் ஒரு விதமானபயத்திலும் மூட நம்பிக்கையிலும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
ஆனால் இஸ்லாம் மறுமையை நினைவுபடுத்துகின்ற மாபெரும் நிகழ்வுகள் என்பதை மனித குலத்தின் மனதில்பதிய வைத்து அந்நாளில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடச் சொல்கின்றது.
அப்போது செய்ய வேண்டிய வணக்கங்கள் என்னென்ன என்ற பட்டியலையும் விரிவாகத் தருகின்றது1. விரைந்துபள்ளிக்கு வருதல்
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கடம் இருந்து கொண்டிருந்தோம்அப்போது சூரிய கிரகணம்ஏற்பட்டதுஉடனே நபி (ஸல்அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக் கொண்டே பள்வாசலுக்குள்சென்றார்கள்.
அறிவிப்பவர்அபூபக்ரா (ரலி)

நூல்
புகாரி 1040

 2. தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள்சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும்.எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லைஎனவேஅவற்றை நீங்கள்கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்தொழுங்கள்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்முஃகீரா பின் ஷுஅபா (ரலி)

நூல்
புகாரி 1043
நபி (ஸல்அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டதுஉடனே அவர்கள் பள்வாசலுக்குப் புறப்பட்டுச்சென்றார்கள்அவர்களுக்குப் பின்னால் மக்கள் அணிவகுத்து நின்றனர்நபி (ஸல்அவர்கள் தக்பீர் (தஹ்ரீமா)'கூறிநீண்ட நேரம் ஓதினார்கள்பிறகு தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள்பின்னர் சமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்' (அல்லாஹ் தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்என்று கூறிநிலையில் நின்றார்கள்சஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் ஓதினார்கள்ஆனால் இது முதலில் ஓதியதைவிடக் குறைந்த நேரமே அமைந்திருந்ததுபிறகு தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள்இந்த ருகூஉ முதல்ருகூஉவை விடக் குறைந்த நேரமே அமைந்திருந்ததுபின்னர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்ரப்பனாவல(க்)கல் ஹம்துஎன்று கூறி (நிமிர்ந்துவிட்டுசஜ்தாச் செய்தார்கள்.
பிறகு இதுபோன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள்.- அப்போது நான்கு சஜ்தாக்(கள் கொண்ட இரண்டுரக்அத்)கல் நான்கு ருகூஉகள் செய்து முடித்தார்கள்அவர்கள் தொழுகையை முடிப்பதற்கு முன் (கிரகணம்விலகிவெச்சம் வந்து விட்டதுபிறகு நபி (ஸல்அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியானகுணங்களைக் கூறிப் போற்றி( பின் உரை நிகழ்த்தி)னார்கள்அவர்கள், (சூரியன்சந்திரன்இவ்விரண்டும்அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும்எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள்ஏற்படுவதில்லைஅவற்றை நீங்கள் கண்டால் தொழுகையில் கவனம் செலுத்துங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)

நூல்
புகாரி 1046

 3. இறைவனை நினைவு கூர்தல்பிரார்த்தனைபாவமன்னிப்பு

அல்லாஹ் அனுப்பி வைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும்ஏற்படுபவை அல்லஎனினும் அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான்.இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும்அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)

நூல்
புகாரி 1059
 கிரகணமும் தர்மமும்
நபி (ஸல்அவர்கள் (தமது உரையில்)சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகல் இரு சான்றுகளாகும்.எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லைஅதை நீங்கள் கண்டால்அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்தக்பீர் சொல்லுங்கள்தொழுங்கள்தான தர்மம் செய்யுங்கள்'' என்றுகூறினார்கள்.

அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)

நூல்
புகாரி 1044
கிரகணத்தின் போது நபி (ஸல்அவர்கள் தர்மத்தை வலியுறுத்துவதால் அந்நாளில் நாம் தர்மம் செய்துநபிவழியை செயல்படுத்துவோமாகமறுமையில் நன்மையைப் பெறுவோமாக!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எத்தனையோ புதுப்புது கிளைகளில் அல்லாஹ்வின் ஆலயம் எழுப்புவதற்காகஅலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்அதற்காகவும்நமது ஜமாஅத்தின் சமூக நலப் பணிகளுக்காகவும்,நலிவடைந்துள்ள நமது சொந்த பந்தங்களுக்காகவும் அந்நாளில் அள்ளி வழங்குவோமாக!

 பெண்களும் கிரகணமும்

நான் (தொழுதுகொண்டிருக்கையில்நரகத்தையும் கண்டேன்இன்றைய தினத்தைப் போல (ஒரு பயங்கரமான)காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லைமேலும்நரகவாசிகல் அதிகமாகப் பெண்களையேகண்டேன்'' என்று கூறினார்கள்மக்கள்ஏன்அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டார்கள்அதற்கு நபி (ஸல்)அவர்கள்பெண்கன் நிராகரிப்பே காரணம்'' என்றார்கள்அப்போது பெண்கள் அல்லாஹ்வையாநிராகரிக்கிறார்கள்?'' என வினவப்பட்டதுஅதற்கு கணவன்மார்களை நிராகரிக்கிறார்கள். (கணவன் செய்த)உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள்காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி செய்துபிறகு உன்னிடம்ஏதேனும் (குறைஒன்றை அவள் கண்டால் உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்டதேயில்லைஎன்றுசொல்லிவிடுவாள்'' என்று பதிலத்தார்கள்.
அறிவிப்பவர்அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல்
புகாரி 5197
நபி (ஸல்அவர்கள் பெருநாள் தினத்தின் போதும்கிரகண தினத்தின் போதும்பெண்களை நரகத்தில்அதிகமதிகம் பார்த்ததாகவும் அதற்குரிய காரணத்தையும் சொல்கிறார்கள்பெண்கள் இந்தக் காரணத்தைக்களைந்து தங்களை நரகத்திலிருந்து காத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
இவ்வாறாககிரகணம் ஏற்படும் போது மூட நம்பிக்கைகளைத் தவிர்ந்துமறுமை நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் காட்டித் தந்த வழியில் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வோமாக!
ஏகத்துவம் மாத இதழ்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை