Posts

Showing posts from February, 2013

பாவங்களுக்கு பரிகாரம் இறைச்சோதனை!

பாவங்களுக்கு பரிகாரம் இறைச்சோதனை! சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறதே! இதற்கு முடிவே இல்லையா? என்று தினமும்; அதிகமானோர் புலம்புவதைக் காணலாம்.  ஆனால் இவ்வுலகத்தின் சோதனைகளிலிருந்து தப்பியோர் யாரும் கிடையாது என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய உண்மை. அதாவது இவ்வுலகில் அல்லாஹ் நம்மைப் படைத்து, சகல வாழ்வாதார வசதிகளையும் நமக்களித்து, சீரான வாழ்க்கைப் பாதைகளையும் அமைத்துக் கொடுத்து நமக்கு இன்பங்களையும் துன்பங்களையும் மாறி மாறி வரச் செய்வதிலிருந்து இவ்வுலக வாழ்க்கையை ஒரு சோதனைக் களமாக, பரீட்சை மண்டபமாக ஆக்கியுள்ளான். நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (திருக்குர்ஆன் 29 : 2,3) மேலும் கூறுகின்றான்:  ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவையோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா?பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை.படிப்பினை பெறுவதுமில்லை.                         (அல்குர்ஆன்: 9:126) 

”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..”

Image
”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு! “அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..”  என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கச்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்: இதில் இந்திய நாட்டுமக்களுக்கு மோடியை தோலுருத்தி காட்டியுள்ளார் முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்சு அவர்கள். http://www.thehindu.com/opinion/op-ed/all-the-perfumes-of-arabia/article4415539.ece அனைத்து சமூகத்தாருக்கும் சரி சரிசமமாக உரிமை மற்றும் மதிப்பளிபதால் மட்டுமே இந்தியா வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும் என்பதை நரேந்திர மோடியை ஆரவாரமாய் வரவேற்று ஆதரிக்கும் மக்கள் முதலில் உணர வேண்டும் . அடக்குமுறைகளுக்கும் அதிகார வர்க்கத்தின் கொடுமைகளுக்கும் உள்ளாகி மிகுந்த மன நோவினைகளுக்கு உள்ளான பெருவாரியான இந்திய மக்களுக்கு விடிவெள்ளியாகவும் தற்கால மோசேயாகவும் காட்சி அளிக்கிறவர் நரேந்திர மோடி. அடுத்த பிரதமராவதற்குரிய அனைத்து தகுதிகளையும் இவர் கொண்டுள்ளார் என்

நாவை பேனுவோம் நரகிலிருந்து மீள்வோம்

Image
நாவை பேனுவோம் நரகிலிருந்து மீள்வோம். சோழபுரம் ஜீம்மா பயான் முகவை கான்

இஸ்லாமிய அரசியல் அப்பாவித்தனமானதா?

Image
இஸ்லாமிய அரசியல் அப்பாவித்தனமானதா? கடந்த 17.02.2013 ஞாயிறு அன்று வெளியான   ஹிரு தின பத்திரிக்கையில் மதுகம செனவிருவன்   என்பவர் இஸ்லாத்தைப் பற்றி  ‘ இஸ்லாமிய அரசியல் அப்பாவித்தனமானதா ? ‘  எழுதிய ஆக்கம் ஒன்றில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை கண்ட இடத்தில் கொலை செய்யும்படி குர்ஆன் தூண்டுவதாக எழுதியிருந்தார். இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட குறிப்பிட்ட ஆக்கம் முழுவதும் முன்னுக்குப் பின் முரனாக, தவறான கருத்துக்களை சுமந்து இஸ்லாத்தைப் பற்றியோ, குர்ஆனைப் பற்றியோ எவ்வித ஞானமும் இன்றி தன்னிச்சையாக இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வினால் எழுதப்பட்ட ஆக்கம் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. அது மட்டுமன்றி கட்டுரையாளர் தனது ஆக்கத்தில் சுட்டிக் காட்டும் வசனங்களும் அதற்கு அவர் வழங்கியுள்ள தவறான விளக்கங்களும் அவருடைய சொந்த முயற்சியினால் குர்ஆனில் இருந்து தேடி எடுத்து எழுதப்பட்டவைகள் அல்ல என்பது கட்டுரையையும் அதன் வாதங்களையும் பார்க்கும் போதே தெளிவாக விளங்குகின்றது. காரணம் இஸ்லாத்திற்கு எதிராக இந்த குற்றச் சாட்டை பல காலமாக பலரும் வைத்து வருகின்றார்கள். அந்தந்த கா

முஸ்லிம்களுக்குமட்டும் மறுக்கப்படும் நீதி!

முஸ்லிம்களுக்குமட்டும் மறுக்கப்படும் நீதி! அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு ரகசியமாக அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது குடும்பத்தினர்களுக்குக்கூட தெரியாத வகையில் அவரை தூக்கிலிட்டது அயோக்கிய காங்கிரஸ் அரசு. இந்த சம்பவம் நடந்து முடிந்த சில வாரங்களுக்குள்ளேயே காங்கிரஸ் கயவர்களின் கயமைத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகிக் கொண்டு வருகின்றது. முஸ்லிம்களின் முதுகில் குத்தும் கயவர்கள் நாங்கள்தான். நாங்கள் சங்பரிவாரர்களைவிட முஸ்லிம்களை கறுவருப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக காங்கிரஸின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு நாடகம்: வீரப்பன் கூட்டாளிகள் 4பேருடைய கருணை மனுக்களையும் ஜனாதிபதி நிராகரித்து விட்டதாகவும், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளதாகவும் சென்ற வாரம் செய்திகள் வெளியாயின. சங்பரிவாரர்களை திருப்திப்படுத்த அப்பாவி அப்சல் குருவை தூக்கிலிட்ட காங்கிரஸ் கயவர்கள், தாங்கள் நடுநிலையானவர்கள்தான் என்று காட்டிக்கொள்வதற்காக சோனியா காந்தியால் திரைக்கதை வசனம் எழுதப்பட்டு, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ஷிண்டே ஆகியோர் நடித்து வெளியான

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு!

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு! பாராளுமன்றத்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கடந்த 04/08/2005 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அபசல் குரு கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவோடு சேர்த்து இந்த நாட்டின் நீதி பரிபாலனமும் தூக்கிலிடப்பட்டுள்ளது. இந்தத்தீர்ப்பின் மூலம் நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கின்றதா? இந்திய அரசியலமைப்புச் சாசனச் சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? என்ற சந்தேகம் நம்முடைய உள்ளத்தில் எழுந்துள்ளது. பாபர் மசூதி விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி: இதற்கு முன்பாக பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பள்ளிவாசலை இடித்த பயங்கரவாதிகளுக்கு இரண்டு பங்கும், பள்ளிவாசலை இழந்த முஸ்லிம்களுக்கு ஒரு பங்கும் வழங்கி அற்புதமான(?) கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை வழங்கி நீதியை நிலைநாட்டினார்கள்(?) நமது நீதிபதிகள். அதுபோலத்தான் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனை குறித்த த

நமது வாழ்வும், நபித் தோழியர் வாழ்வும். – ஓர் ஒப்பீடு.

Image
நமது வாழ்வும், நபித் தோழியர் வாழ்வும். – ஓர் ஒப்பீடு. ஆணாயினும், பெண்ணாயினும் எவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு முறையான வாழ்கை வாழ்கின்றாரோ அவரே ஈருலகிலும் வெற்றியாளர். இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டதிட்டங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானவை என்றாலும், இன்றைய பெண்கள் தனக்கும் மார்க்கத்திற்கும் அறவே தொடர்பில்லை என்றளவுக்கு வாழ்ந்து வருகின்றார்கள். அநேகமான பெண்கள் தமது குழந்தைகளையும், வீட்டையும் பராமரிப்பதனால் தம்மால் தொழக் கூட முடியவில்லை என மாயக் கவலையுடன் செய்யும் பாவத்திற்கு நியாயம் கற்பிக்க முயல்கின்றனர். கணவனின் குதிரைக்காக வெகு தொலைவில் இருந்து தன் தலையிலேயே தீனியை சுமந்து கொண்டு வந்த கொள்கைப் பெண் அஸ்மா (ரலி) அவர்களும், தானும் இஸ்லாத்தை தழுவி தன் மகனுக்கும் போதித்த தியாகத் தாய் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் பெண் இனத்தை சார்ந்தவர்களே என்பதை நாம் மனதில் ஆழமாக பதித்துக் கொள்ள வேண்டும். ஸஹாபியப் பெண்மணிகள் மார்கத்திற்காக பல்வேறுபட்ட யுத்தங்களில் தாமும் களமிறங்கி போராடியது மட்டமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையில் இறையச்சத்துடன் வாழ மேற்கொண்ட முயற்சிகள் பொடு

விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”.தினம்

Image
விபச்சாரத்தின் மறு பெயர் “காதல்”.தினம் உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது. இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன. # முத்தமிடுவோர் தினம், # நிர்வாணமாக இருப்போர் தினம், # இறுகக் கட்டியணைப்போர் தினம், # ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம், # பாலுணர்வைத் தூண்டுவோர் தினம்  என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக மேற்குலகு கருதுகின்றது. கடந்த 2012 ஜனவரி மாதத்தில் நிர்வாணமாக இருப்போர் தினம் என்றொன்றை ரஷ்ய மக்கள் கொண்டாடியதும், ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடின்றி அனைவரும் நிர்வாணமாக காட்சி தந்ததையும் மிகப் பெரிய சாதனையாக ஊடகங்கள் கொண்டாடின. அதே ஜனவரி மாதத்தில் முழு உடம்பையும் காட்டிக் கொண்டு திரியும் சுமார் இருபத்தி ஐயாயிரம் பெண்களை ஓரிடத்தில் கூட்டி உலகிலேயே அதிகமான நிர்வாணிகள் ஒன்றினைந்த இடம் என்ற

அப்சல் தூக்கும்: அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகளும்!

Image
டிசம்பர் 13- நாடாளுமன்ற தாக்குதல்-அப்சல் தூக்கு: அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்! டிசம்பர் 13, 2001-இல் நாடாளுமன்ற வளாகம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரையான விவகாரத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்சல் குரு இவையனைத்தையும் திட்டமிட்டதாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இன்று தண்டனை ரகசியமாக நிறைவேற்றப்படவும் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தபோது சமூக ஆர்வலரும், இலக்கிய எழுத்தாளரும் அறிவு ஜீவியுமான அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் ஒரு 13 கேள்விகளை எழுப்பினார். அதன் தமிழ் வடிவம் இதோ:

அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.

Image
இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள். அறிவியல்  முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது. இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.

சத்தியமே வெல்லும் (வீடியோ)

Image
சத்தியமே வெல்லும் (வீடியோ)

இறுதி வெற்றி சத்தியத்திற்கே (வீடியோ)

Image
இறுதி வெற்றி சத்தியத்திற்கே (வீடியோ) மசூத் உஸ்மானி

பெற்றோரை பேணுதல் (வீடியோ)

Image
பெற்றோரை பேணுதல் (வீடியோ)

விஸ்வரூபம் நடந்தது என்ன? – ஒரு விரிவான அலசல்

Image
விஸ்வரூபம் நடந்தது என்ன ? – ஒரு விரிவான அலசல் விஸ்வரூபம் படத்திற்கு தடைகோரி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புகளும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனியாக உள்துறைச் செயலாளரைச் சந்தித்து கோரிக்கை வைத்தது.   இதை ஏற்று தமிழக அரசு முஸ்லிம்களை புண்படுத்தக்கூடிய விதத்திலான காட்சி அமைப்புகள் கொண்ட அந்தப் படத்திற்கு தடை விதித்தது. அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவே அதை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில் விஸ்வரூபத்திற்கு போடப்பட்ட தடை நீடிக்கப்பட்டது.   இதைத்தொடர்ந்து பல சர்ச்சைகள் ஏற்படவே கமல் கண்ணீர் பேட்டி கொடுக்க, தமிழ் திரையுலகமே திரண்டு அவருக்கு ஆறுதல் சொல்லியது. முஸ்லிம்களின் போராட்ட அறிவிப்பு ! தமிழக அரசின் தடை உத்தரவு ! அதை எதிர்த்து கமல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ! உயர் நீதிமன்றம் படத்தை வெளியிட அனுமதி ! அதைத்தொடர்ந்து தமிழக அரசின் மேல்முறையீடு !   என்று தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்ட நேரத்தில், அரசியல்வாதிகள் தங்களது சாயம் வெளுக்கும் விதமாக பல அறிக

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

Image
உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா? கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன. எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது. நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர், இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது. உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வ

இயேசுவின் போதனைகள்

Image
இயேசுவின் போதனைகள்      கடவுள் யார் ? கிறித்தவர்களது மதப்பிரச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையும் , அவர்கள் தங்களது பிரச்சாரத்தின் வாயிலாக அப்பாவிகளை ஆசைவார்த்தைக் காட்டி மதமாற்றம் செய்யும் நிகழ்வுகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையும் நாம் காண்கின்றோம். தங்களது மதத்தைப் பிரச்சாரம் செய்யும் கிறித்தவ போதகர்கள் மற்றும் பாதிரிமார்கள் கிறித்தவ மதப்பிரச்சாரத்தை வீடுவீடாகச் சென்று தாங்கள் செய்வதோடு மட்டுமல்லாமல் தங்களது வீட்டுப் பெண்களையும் அதற்குத் தயார்படுத்தி களமிறக்கி விட்டுள்ளனர். கன்னியாஸ்திரிகளாக உள்ளவர்களும் ,  இதர கிறித்தவப் பெண்களும் நமது பகுதியில் உள்ள முஸ்லி ம் பெண்களிடத்தில் வீடுவீடாக வந்து பிரச்சாரம் செய்யும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. நம்மோடு அவர்கள் நடத்திய விவாதத்தில் கிறித்தவத் தரப்பு விவாதக்குழுவில் கிறித்தவப் பெண்களை பங்கேற்க வைக்கக்கூடிய அளவிற்கு அவர்களது பெண்கள் பயிற்று வைக்கப்பட்டுள்ளார்கள்.

இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள்

இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள் அலங்காரங்களை வெளியே காட்ட வேண்டாம் وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ...  (سورة النور : 31 ) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.                          ( அல்குர்ஆன்  24:31) மெல்-லி ய ஆடைகளை அணிய வேண்டாம் 3971  حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِل

மஃரிப் நேரத்தில் பிள்ளைகளை வெளியில் அனுப்பாதீர்கள்

மஃரிப் நேரத்தில் பிள்ளைகளை வெளியில் அனுப்பாதீர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெüயே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். அறிவிப்பவர் : ஜாபிர் (ர-லி ), நூல் :புகாரி (3280,3304,5623)

தொலைக்காட்சியில் தொலைந்துவிட்ட சமுதாயம்

தொலைக்காட்சியில் தொலைந்துவிட்ட சமுதாயம்   வழிகெடுக்கும் பெற்றோர்கள் கருவறையை சிந்தித்துப் பார் விண்வெளியை சிந்தித்துப் பார் ஒவ்வொன்றிலும் நீ பயன் தரத்தக்க கோடான கோடி செய்திகள் உனக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு திருமறைக் குர்ஆன் அந்த அறிஞர்களை சிந்திக்கத் தூண்டியது. அதன் காரணமாக அவர்கள் சிந்தித்துப் பார்த்து திருமறைக் குர்ஆனைப் படித்தார்கள். அதன் மூலமாக உலகத்திற்கு ஏராளமான அறிவியல் அருட்கொடைகளை நம்முடைய முன்னோர்கள் அள்ளி வழங்கினார்கள். இப்னு அலீ ஸீனா என்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளவர். இவரை வரலாற்றுப் புத்தங்களில் அபி ஸன்னா என்றும் அழைக்கப்படும். இவர் ஒரு இஸ்லாமியப் பேரறிஞர் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர் என்று இன்றைக்கு மருத்துவ உலகம் இவருக்கு புகழ்சூட்டி அழைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மிகப் பெரிய மருத்துவர் அவர் கி,பி பத்தாம் நூற்றாண்டில் எழுதிய ஒரு மருத்துவ நூலை சென்ற நூற்றாண்டில் (கி,பி பத்தொன்பதாம் நூற்றாண்டு) மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்

நபிஸுலைமான் (அலை) இடம் பேசிய எறும்பு!

Image
எறும்பு பேசியது:! அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் 'எறும்புகள் பேசியதாகவும் அதை கேட்டு பறவைகள்  உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள் சிரித்ததாகவும்' இங்கே கூறப்படுகிறது. அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும் அதற்கொரு முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயி ன் அந்த அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது நமக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம் அதுபற்றி விரிவாகக் காண்போம். நபிஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் இடம் பேசிய எறும்பு!

ஆர்.எஸ்.எஸ் - ன் இரகசிய சுற்றறிக்கை..............!!

Image
ஆர்.எஸ்.எஸ் - ன் இரகசிய சுற்றறிக்கை..............! ! இந்த பதிப்பு ஆதாரத்தோடு நமக்கு கிடைத்ததால் மக்களுக்கு வெளிப்படுத்துகிறோம், ஒரு எழுத்து கூட எடிட் (Edit) செய்யாமல் அப்படியே வெளியிடுகிறோம்  ஆர்.எஸ்.எஸ் - ன் இரகசிய சுற்றறிக்கை விபரம் ................... உள்ளூர் தலைவர்களுக்கு ..............பழைய கருவிகளோடு புதிய கடமைகள் சில மாறுதலுடன் இங்கு தரப்படுகின்றன, இதனை தேசபக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும் இவற்றை புகுட்டுக ! கீழ்காணும் அறிவுறுத்தல்களை நமது உறுப்பினர்களுக்கு தெரிவித்துவிட்டு இந்த சுற்றறிக்கையை உடனே எரித்து விடுக. 

எது சுதந்திரம்

எது சுதந்திரம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இஸ்லாத்தையும், இறைவனின்இறுதிவேதமான திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்படத்தை தமிழக அரசு தடை செய்யக்கோரி முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கைவிடுத்ததையடுத்து அப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தற்போது இஸ்லாமியர்களை நோக்கிஎழுப்பப்படும் முக்கியமான விமர்சனம்தான் கருத்து சுதந்திரத்திற்கு தடைபோடலாமா என்ற கேள்வியாகும்.  ஒருவர் சுதந்திரமாக கருத்துச் சொல்லக் கூடாதா? எங்களது கருத்துரிமையைப்பறிக்கலாமா? ஒரு நடிகன் தான் விரும்பிய கருத்துக்களைச் சொல்லக்கூடாதா?இவைகள்தான் தற்போது இஸ்லாமிய சமூகத்தின் முன்பு விஸ்வரூபத்தைஎதிர்க்கின்றோம் என்ற பெயரில் இஸ்லாத்தை அழிக்கத்துடிப்பவர்கள் எழுப்பக்கூடியமுக்கியமான கேள்விகள்.  இந்தக் கேள்விகளை கேட்பவர்களுக்கு அதைக் கேட்க அருகதை உள்ளதாஎன்பதையும், அவர்கள் இதுபோல தாங்கள் பாதிக்கப்படும் நிலையில் என்ன முடிவைஎடுத்தார்கள் என்பதையும் அலசி ஆராய்ந்தால் கருத்து சுதந்திரம் என்றால் என்னஎன்பது விளங்கிவிடும்.

சினிமா கலாச்சாரமும் சீரழியும் சமுதாயமும் (வீடியோ)

Image
சினிமா கலாச்சாரமும் சீரழியும் சமுதாயமும் (வீடியோ)

குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!

Image
குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்காகவே அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான் போன்ற அமைப்புகளைத் தமது தலைவர்கள் மூலம் ஆர்.எஸ்.எஸ் இரகசியமாக இயக்கி வருகிறது குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் பங்கு: வெளிச்சத்துக்கு வரும் புதிய ஆதாரங்கள் மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக – அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.

இஸ்லாம் ஓர் வாழ்வியல் அற்புதம் (வீடியோ)

Image
இஸ்லாம் ஓர் வாழ்வியல் அற்புதம் (வீடியோ)

அல்குர்ஆன் ஓர் வழும் அற்புதம் (வீடியோ)

Image
அல்குர்ஆன் ஓர் வழும் அற்புதம் (வீடியோ)