பாவம் போக்குமா பராஅத் இரவு?

பாவம் போக்குமா பராஅத் இரவு?

 இஸ்லாத்தில் இல்லாத வணக்கங்களை உருவாக்கிய பெருமை நமது உலமா பெருமக்களுக்கு உண்டு. அறிந்தே அறியாமலே செய்த இந்த தவறை திருத்திக் கொண்டு மக்களிடம் உண்மையை உரைக்க வேண்டிய உலமாக்கள் மீண்டும் மீண்டும் செய்த தவறை நியாயப்படுத்தும் வேலைகளை செய்துவருகிறார்கள் சில உலமாக்கள் என்ற பெயரில் உலாவருபவர்கள். ஷஅபான் மாதம் 15 நாள் ஷபே பராஅத், பராஅத் இரவு என்று சொல்-லிக்குக் கொண்டு புதிய பல வணக்கங்களை செய்துவருகிறார்கள். இவற்றை நாம் கண்டித்து, இது புதுமையான பித்அத் ஆகும் என்று துண்டு பிரசுரம் மூலமும் பயான்கள் மூலமும் மக்களை விழிப்புணர்வு அடைய செய்துவரும் வேளையில் திருப்பூர் வட்டார ஜமாஅத் உலமா மக்களிடம் பராஅத் இரவுக்கு ஆதாரம் உண்டு என்று இரண்டு பக்க ஜெராக்ஸ் காப்பி மக்களிடம் பரப்பி வருகின்றனர். இந்த காப்பியில் உள்ள செய்திகள் உண்மையா என்பதை நாம் இந்த கட்டுரையில் காண்போம். 


அவர்களின் ஆதாரம் :  பாரஅத் இரவு ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு பராஅத் இரவு என்று கூறப் படும். இப்பெயர் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தஃப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்பத்துல் அஹ்வதியிலும் மற்றும் பிரபல்யமான பல நூற்களிலம் இடம்பெற்றுள்ளது. நமது விளக்கம் பராஅத் இரவு என்ற பெயர் திருக்குர்ஆனிலோ நபிமொழியிலோ இல்லை என்பதை தெளிவாக ஒத்துக் கொண்டுள்ளதை அவர்களின் வாசகம் விளக்குகிறது. தப்ஸீர் நூல்களிலும் திர்மிதியின் விரிவுரை நூ-லிலும்தான் உள்ளது. நபிகளார் இந்த வாசகத்தை பயன்படுத்தவில்லை என்ற உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்கள். நபிமொழியில் இவை இல்லை என்பதிலிருந்து பின்னால் வந்தவர்கள் உருவாக்கிய பித்அத் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அவர்களின் ஆதாரம் பெயர்க்காரணி பராஅத் எனும் அரபுச் சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைத்துல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) எனப் பெயர் வந்தது. இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள்  கூறினார்கள் : ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதத்தில் 15ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான். நூல் : பைஹகீ இமாம் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஃபுல் ஈமான், ஹதீஸ் எண் : 3837 நமது விளக்கம் ஷஅபான் 15ம் நாள் அல்லாஹ் நரகவாசிகளை விடுதலை செய்கிறான் என்று அவர்கள் எடுத்துக்காட்டிய செய்தியின் அரபி மூலம் இதோ : 3677 - أخبرنا أبو عبد الله الحافظ ، ومحمد بن موسى ، قالا : حدثنا أبو العباس محمد بن يعقوب ، حدثنا محمد بن عيسى بن حيان المدائني ، حدثنا سلام بن سليمان ، أخبرنا سلام الطويل ، عن وهيب المكي ، عن أبي رهم ، أن أبا سعيد الخدري ... قَالَتْ عَائِشَةُ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ عَنْهُ ثَوْبَيْهِ ثُمَّ لَمْ يَسْتَتِمَّ أَنْ قَامَ فَلَبِسَهُمَا فَأَخَذَتْنِي غَيْرَةٌ شَدِيدَةٌ ظَنَنْتُ أَنَّهُ يَأْتِي بَعْضَ صُوَيْحِباتِي فَخَرَجْتُ أَتْبَعَهُ فَأَدْرَكْتُهُ بِالْبَقِيعِ بَقِيعِ الْغَرْقَدِ يَسْتَغْفِرُ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالشُّهَدَاءِ، فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي أَنْتَ فِي حَاجَةِ رَبِّكَ، وَأَنَا فِي حَاجَةِ الدُّنْيَا فَانْصَرَفْتُ، فَدَخَلْتُ حُجْرَتِي وَلِي نَفَسٌ عَالٍ، وَلَحِقَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " مَا هَذَا النَّفَسُ يَا عَائِشَةُ ؟ "، فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي أَتَيْتَنِي فَوَضَعْتَ عَنْكَ ثَوْبَيْكَ ثُمَّ لَمْ تَسْتَتِمَّ أَنْ قُمْتَ فَلَبِسْتَهُمَا فَأَخَذَتْنِي غَيْرَةٌ شَدِيدَةٌ، ظَنَنْتُ أَنَّكَ تَأْتِي بَعْضَ صُوَيْحِباتِي حَتَّى رَأَيْتُكَ بِالْبَقِيعِ تَصْنَعُ مَا تَصْنَعُ، قَالَ: " يَا عَائِشَةُ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللهُ عَلَيْكِ وَرَسُولُهُ، بَلْ أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: هَذِهِ اللَّيْلَةُ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَلِلَّهِ فِيهَا عُتَقَاءُ مِنَ النَّارِ بِعَدَدِ شُعُورِ غَنَمِ كَلْبٍ، لَا يَنْظُرُ اللهُ فِيهَا إِلَى مُشْرِكٍ، وَلَا إِلَى مُشَاحِنٍ ، وَلَا إِلَى قَاطِعِ رَحِمٍ، وَلَا إِلَى مُسْبِلٍ ، وَلَا إِلَى عَاقٍّ لِوَالِدَيْهِ، وَلَا إِلَى مُدْمِنِ خَمْرٍ "... هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ இமாம் பைஹகீ அவர்களின் ஷ‚அபுல் ஈமான் என்ற நூலி-ருந்து எடுத்துக்காட்டியவர்கள் அந்த செய்தியின் இறுதியில் இமாம் பைஹகீ அவர்களின் அந்த செய்தியின் தரத்தைப் பற்றி கூறியதை வசதியாக இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். அதன் இறுதியில் هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர் கொண்டதாகும் என்று குறிப்பிட்டு இந்த செய்தி ஆதாரமற்றது என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள். இந்த விஷயத்தை கூறினால் அவர்களின் ஆதாரத்தின் தகுதி மக்களுக்கு தெரிந்து விடும் என்பதால் அதை தெரிந்து கொண்டே மறைத்திருக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் ''முஹம்மத் பின் ஈஸா பின் ஹய்யான்'' என்பார் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ்கலை வல்லுநர்கள் மிகக் கடுமையாக குறைகூறியுள்ளனர். 171 - محمد بن عيسى بن حيان أبو عبد الله المدائني متروك الحديث  (سؤالات الحاكم - (ج 1 / ص 135) இவர் ஹதீஸ்களில் கைவிடப்பட்டவராவார் என இமாம் ஹாகிம் குறைகூறியுள்ளார்கள். (நூல் : ஸ‚ஆலாத்துல் ஹாகிம்  பாகம் : 1 பக்கம் : 135) وسألته عن محمد بن عيسى بن حيان الرازي ، فقال : لا شيء . ( سؤالات السلمي للدارقطني - (ج  / ص ) இவர் எந்த ஒன்றுக்கும் தகுதியில்லாதவர் என இமாம் தாரகுத்னீ விமர்சித்துள்ளார்கள். (நூல் : சுஆலாத்துஸ் சுலமீ) மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ''ஸல்லாம் பின் சுலைமான்'' என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவராவார். 2704- سلام بن سليمان بن سوار المدائني ابن أخي شبابة نزيل دمشق وقد ينسب إلى جده ضعيف من صغار التاسعة مات سنة عشر ومائتين أو بعدها ق - تقريب التهذيب : ابن حجر 1 /261 ஸல்லாம் பின் சுலைமான் என்பவர் பலவீனமானவராவார் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள். நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :1,பக்கம் : 261 அவர்களின் ஆதாரம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் ஷஃபான் மாதத்தின் 15ம் இரவில் இறைவன் தன் அடியார்களை நெருங்கி வருகிறான். இûவைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன், இவ்விருவரைத் தவிர மற்ற எல்லோரையும் மன்னனிக்கிறான். அறிவிப்பாளர் : ஹஜ்ரத் முஆத் பின் ஜபல் (ரளியல்லாஹ அன்ஹு) நூற்கள் : இப்னுஹிப்பான் எண் : 5665, தப்ராணி (முஃஜமுல் அவ்ஸதி எண் : 6776 அறிவிப்பாளர் : ஹஜ்ரத் அபூ மூஸல் அஷ்அரீ (ரளியல்லாஹ அன்ஹு) நூல் : இப்னுமாஜா எண் : 1390 நமது விளக்கம் : அவர்கள் ஆதாரமாக காட்டும்  செய்தியின் அரபி மூலம் இதோ : 5665 - أخبرنا محمد بن المعافى العابد بصيدا و ابن قتيبة وغيره قالوا : حدثنا هشام بن خالد الأزرق قال : حدثنا أبو خليد عتبة بن حماد عن الأوزاعي و ابن ثوبان عن أبيه عن مكحول عن مالك بن يخامر عن معاذ بن جبل عن النبي صلى الله عليه و سلم قال : ( يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن ) صحيح ابن حبان 12 /481 இந்தசெய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஏரளாமான குளறுபடிகள் நிறைந்துள்ளன. இதை ஹதீஸ் கலை நிபுணர் இமாம் தாரகுத்னீ அவர்கள் தனது அல்இலல் என்ற நூலி-ல் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்த செய்தி மக்கூல் என்பவரிடமிருந்து இரண்டு வழிகளில் அறிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு அறிவிப்பாளர் தொடர்வரிசையும் சரியானது அல்ல என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள். كلاهما غير محفوظ இவ்விரு வழிகளும் சரியானது அல்ல நூல் : இல்இலல் -தாரகுத்னீ, பாகம் 6, பக்கம் :50 وقد روى عن مكحول في هذا روايات وقال هشام بن الغاز عن مكحول عن عائشة وقيل عن الأحوص بن حكيم عن مكحول عنأبي ثعلبة وقيل عن الأحوص عن حبيب بن صهيب عن أبي ثعلبة وقيل عن مكحول عن أبي إدريس مرسلا وقال الحجاج بن أرطأة عن مكحول عن كثير بن مرة مرسلا أن النبي صلى الله عليه و سلم قال وقيل عن مكحول من قوله والحديث غير ثابت - العلل للدارقطني 6 /50 மேலும் மக்கூல் வழியாக  பல அறிவிப்புகள் கூறப்படுகிறது. ஆயிஷா (ர-லி) அவர்கள் அறிவித்ததாகவும், அபீ ஸஅலபா (ர-லி) அவர்கள் அறிவித்ததாகவும், மக்கூல், அபூ இத்ரீஸ் வழியாக முர்ஸலாகவும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் மக்கூல் வழியாக கஸீர் பின் முர்ரா என்பவரிடமிருந்து முர்ஸலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (மொத்தத்தில்) இந்த செய்தி உறுதியானது அல்ல. நூல் : இல்இலல் -தாரகுத்னீ,பாகம் 6, பக்கம் :50 இந்த செய்தியைப்பற்றி இமாம் அபூஹாத்திம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது அளித்த விடை : 2012- وسألت أبي عن حديث رواه أبو خليد القاري ، عن الأوزاعي ، عن مكحول وعن ابن ثوبان ، عن أبيه ، عن مكحول ، عن مالك بن يخامر ، عن معاذ بن جبل ، قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله تبارك وتعالى ليلة النصف من شعبان إلى خلقه   قال أبي هذا حديث منكر بهذا الإسناد ولم يرو بهذا الإسناد عن أبي خليد ولا أدري من أين جاء به  -علل الحديث لابن أبي حاتم 2059 இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை தொடர் மறுக்கப்படவேண்டியதாகும். இந்த அறிவிப்பாளர் தொடர்வரிசையை அபூகலீத் என்பவரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதை இவர் எங்கிருந்து கொண்டுவந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நூல் : இலலுல் ஹதீஸ்- இப்னு அபீ ஹாத்திம், பக்கம் : 2059 அவர்கள் குறிப்பிட்ட இப்னுமாஜா நூலில் இடம்பெற்ற செய்தி இதோ 1380 حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ حَدَّثَنَا أَبُو الْأَسْوَدِ النَّضْرُ بْنُ عَبْدِ الْجَبَّارِ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ الزُّبَيْرِ بْنِ سُلَيْمٍ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ أَبَا مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ رواه ابن ماجة இமாம் இப்னுமாஜா அவர்கள் இந்த செய்தியை இரண்டு அறிவிப்பாளர் வழியாக இடம்பெறச் செய்துள்ளார்கள். முதல் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவது அறிவிப்பாளர் ளஹ்ஹாக் பின் அய்மன் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். அவர் யாரென அறியப்படாதவர். இவரின் நம்பகத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை. 3928 - الضحاك بن أيمن الكلبى  د .شيخ لابن لهيعة .لا يدرى من ذا. له في ليلة نصف شعبان. (ميزان الاعتدال - الذهبي 2 /322 ளஹ்ஹாக் பின் அய்மன் என்பவர் இப்னு லஹீஆவின் ஆசிரியர். இவர் யார் என அறியப்படாதவர். ஷஅபான் பாதி இரவு (சிறப்பு) தொடர்பாக இவர் ஒரு செய்தியை அறிவித்துள்ளார். நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் :2, பக்கம் : 322 இப்னுமாஜாவின் நான்காவது அறிவிப்பாளர் இப்னு லஹீஆ என்பவரும் பலவீனமானவராவார். 346 - عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيف - الضعفاء والمتروكين - النسائي ளص 64ன அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவர் பலவீனமானவர் என்று இமாம் நஸயீ கூறினார்கள். நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம் : 1, பக்கம் : 64 533  قلت: كيف رواية بن لهيعة عن أبي الزبير عن جابر فقال: بن لهيعة ضعيف الحديث- تاريخ ابن معين - الدارمي 153 அபூஸுபைர் வழியாக இப்னு லஹீஆ அறிவிக்கும் செய்தி பற்றி நான் கேட்டேன்.  அதற்கு இப்னு மயீன் அவர்கள், இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறினார்கள். நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 153 5388 - سمعت يحيى يقول بن لهيعة لا يحتج بحديثه - تاريخ ابن معين - رواية الدوري 4 /481 இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது என்று யஹ்யா (பின் மயீன்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். நூல் : தாரீக் இப்னு முயீன், பாகம் : 1, பக்கம் : 481 قال عبد الرحمن بن مهدي لا أحمل عن بن لهيعة قليلا ولا كثيرا... قال يحيى بن سعيد قال لي بشر بن السري لو رأيت بن لهيعة لم تحمل عنه حرفا - المجروحين - ابن حبان 2 /12   "இப்னு லஹீஆ வழியாக குறைவாகவோ, அதிகமாகவோ (எதையும்) எடுத்துக் கொள்ள மாட்டேன்' என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி கூறுகின்றார்கள்.  "நீ இப்னு லஹீஆவைப் பார்த்தால் அவரிடமிருந்து ஒரு எழுத்தைக் கூட எடுத்துக் கொள்ளாதே என்று பிஷ்ர் என்னிடம் கூறினார்' என்று யஹ்யா பின் ஸயீத் கூறுகின்றார்கள்.  நூல் : அல்மஜ்ரூஹீன், பாகம் : 2, பக்கம் : 14 عبدالله ابن لهيعة بفتح اللام وكسر الهاء ابن عقبة الحضرمي أبو عبدالرحمن المصري القاضي صدوق من السابعة خلط بعد احتراق كتبه ورواية ابن المبارك وابن وهب عنه أعدل من غيرهما وله في مسلم بعض شيء مقرون - تقريب التهذيب : ابن حجر 2 /319 அப்துல்லாஹ் பின் லஹீஆ, எகிப்து நாட்டைச் சார்ந்த நீதிபதியாவார்.  அவர் நல்லவர். அவருடைய நூற்கள் எரிந்த பிறகு மூளை குழம்பி விட்டது.  (இவரிடமிருந்து) இப்னுல் முபாரக், இப்னு வஹப் ஆகியோர் அறிவிப்பது இவ்விருவர் அல்லாதோர் அறிவிப்பை விட உறுதியானது, வலுவானது.  (இவரல்லாத மற்றவர்கள் இவருடைய செயதியைப் போன்று அறிவிக்கும் போது) இணைப்பாக இவருடைய சில செய்திகள் முஸ்-ம் என்ற நூ-ல் இடம் பெற்றுள்ளது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்கள். நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1, பக்கம் : 319 இப்னு லஹீஆ என்பவர் மூத்த தாபியீன் ஆவார். இவர் தனக்குக் கிடைத்த செய்திகளை எழுதி வைத்துக் கொண்டு அதி-ருந்து அறிவித்து வந்தார்.  ஒருநாள் அவருடைய வீடு எரிந்த போது அவர் எழுதி வைத்த நூற்களும் சாம்பலாயின!  பின்னர் அவர் மூளை குழம்பி விட்டார்.  இதனால் இவருடைய பிந்திய அறிவிப்புக்கள் மிகவும் குளறுபடி நிறைந்ததாக காணப்பட்டது.  எனவே இவருடைய ஹதீஸ்களை ஹதீஸ் கலை அறிஞர்கள் நிராகரித்தனர். மூளை குழம்புவதற்கும், இவரது நூற்கள் எரிவதற்கும் முன்பு இவரிடம் கேட்ட இப்னுல் முபாரக், இப்னு வஹப் ஆகியோரின் செய்திகளை மட்டுமே ஏற்கலாம் என்று  சிலர் முடிவு செய்தனர்.  பெரும்பாலும் இவருடைய செய்திகளை ஹதீஸ கலை அறிஞர்கள் நிராகரித்துள்ளனர்.  இவரைப் பலவீனமானவர் என்றே கூறியுள்ளனர். ஹதீஸ் கலை மேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது புகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல் பாரியில் பல இடங்களில் இவரைப் பலவீனமானவர் என்றே கூறியுள்ளார்கள்.  அதில் ஒன்று இதோ: وأخرجه الطبري من طريق أبي سلمة عن عائشة مرفوعا أيضا وفيه بن لهيعة وهو ضعيف - فتح الباري - ابن حجر 4 /184 அபூ ஸலமா வழியாக ஆயிஷா (ர-) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (ஒரு செய்தியை) தப்ரீ பதிவு செய்துள்ளார்கள்.  இதில் இப்னு லஹீஆ இடம் பெற்றுள்ளார்.  இவர் பலவீனமானவர். ஃபத்ஹுல் பாரி, பாகம் : 4, பக்கம் : 184 இதைப் போன்றே திர்மிதி இமாம் அவர்களும் பல இடங்களில் இவரைப் பலவீனமானவர் என்றே கூறியுள்ளார்கள். وابن لهيعة ضعيف عند أهل الحديث ضعفه يحيى بن سعيد القطان وغيره ள من قبل حفظه - سنن الترمذي 1 /15   இப்னு லஹீஆ என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களிடம் பலவீனமானவர்.  யஹ்யா பின் ஸயீத் அல் கத்தானும் மற்றும் பலரும் இவரது நினைவாற்றல் அடிப்படையில் இவரைப் பலவீனமானவர் என்று முடிவு செய்துள்ளனர்.  (திர்மிதீ10) மேலும் திர்மிதீ ஹதீஸ் எண் 576, 1036 ஆகிய ஹதீஸ்களில் இதே போன்று இடம்பெற்றுள்ளது. மேற்கூறப்பட்ட இப்னு லஹீஆ என்பவரைப் பற்றிய விமர்சனங்கள் அவர் பலவீனமானவர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.  அவரின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் (சிலரின் கூற்றுப்படி) இப்னுல் முபாரக், இப்னு வஹப் ஆகியோர் அவரிடமிருந்து அறிவித்திருக்க வேண்டும். இந்த செய்தியில் சிலரின் கூற்றுப்படிகூட இப்னு லஹீஆவிடமிருந்து இப்னுல் முபாரக், இப்னு வஹப் போன்றோர் அறிவிக்கவில்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும். இப்னு மாஜாவின் இன்னொரு அறிவிப்பாளர் தொடரில் இதே இப்னு லஹீஆ என்பவரே இடம்பெற்றுள்ளார். மேலும் ளஹ்ஹாக் பின் அய்மன் என்பவர் இடத்தில் ஸுபைர் பின் சுலைம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவர். 2837 - الزبير بن سليم ள ق ன. شيخ لا يعرف.- ميزان الاعتدال - الذهبي 2 /67 ஸுபைர் பின் சுலைம் என்பவர் யாரென அறியப்படாத நபர் என்று தஹபீ அவர்கள் கூறுகிறார்கள். நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் :2, பக்கம் : 322 அவர்களின் வாதம் : இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள்  கூறினார்கள் : ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இவ்விருவரைத் தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான். 1. பகைமை பாரட்டுபவன் 2. கொலை செய்தவன் (இவ்விருவரையும் இறைவன் மன்னிப்பதில்லை) அறிவிப்பவர் : ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர்  (ரளியல்லாஹ அன்ஹு), நூல் :அஹ்மத் (6642) நமது விளக்கம் : அஹ்மதில் இடம்பெற்றதாக அவர்கள் எழுதிய செய்தியின் அறிவிப்பாளர் வரிசையை கவனியுங்கள். 6642 - حدثنا عبد الله حدثني أبي ثنا حسن ثنا بن لهيعة ثنا حيي بن عبد الله عن أبي عبد الرحمن الحبلي عن عبد الله بن عمرو ان رسول الله صلى الله عليه و سلم قال : يطلع الله عز و جل إلى خلقة ليلة النصف من شعبان فيغفر لعباده الا لاثنين مشاحن وقاتل نفس - مسند أحمد بن حنبل 2 /176 இந்த செய்தியிலும் நாம் முன்னர் விமர்சனம் செய்த அதே இப்னு லஹீஆ என்ற பலவீனமான அறிவிப்பாளரே இடம்பெற்றுள்ளார். எனவே இந்த செய்தி அடிப்படையாகக் கொண்டு செயல்பட முடியாது. அவர்களின் ஆதாரம் அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் இரவு இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்களை படுக்கையில் காணவில்லை. அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள். (ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும் உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் என பயந்து போனாயா? நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள் துணைவியர் ஒருவரிடம் வந்திருப்பீர்கள் என்று தான் கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள்: தின்னமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவின் போது முதல்வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் அடியார்களை மன்னிக்கிறான். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) நூற்கள் : அஹ்மத் எண் : 26060, திர்மிதி எண் : 739, இப்னுமாஜா எண்: 1389 இப்னு அபீஷய்பா எண் : 29858 நமது விளக்கம் : இவர்கள் எடுத்துரைத்த இந்த செய்தி இமாம் புகாரி அவர்களால் பலவீனமானது என்று ஆதாரத்துடன் இடித்துரைக்கப்பட்ட செய்தியாகும். புகாரி இமாமின் மாணவரான இமாம் திர்மிதீ அவர்கள் இந்த செய்தியைப் பற்றி புகாரி இமாமிடம் கேட்டபோது இது ஆதாரமற்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். 739 - حدثنا أحمد بن منيع حدثنا يزيد بن هارون أخبرنا الحجاج بن أرطاه عن يحيى بن أبي كثير عن عروة عن عائشة : قالت فقدت رسول الله صلى الله عليه و سلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله ؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نساءك فقال إن الله عز و جل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيفغر لأكثر من عدد شعر غنم كلب وفي الباب عن أبي بكر الصديق  قال أبو عيسى حديث عائشة لا نعرفه إلا من هذا الوجه من حديث الحجاج وسمعت محمدا يضعف هذا الحديث وقال يحيى بن أبي كثير لم يسمع من عروة و الحجاج بن أرطاه لم يسمع من يحيى بن أبي كثير - سنن الترمذي 3 /116 இந்த செய்தி பலவீனமானது என்று இமாம் புகாரி அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் (இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளர்) யஹ்யா பின் அபீகஸீர் அவர்கள், (அடுத்த அறிவிப்பாளர்) உர்வா பின் ஸுபைர் என்பவரிடமிருந்து (நேரடியாக எதையும்) கேட்டதில்லை. இன்னும் (நான்காவது அறிவிப்பாளர்) ஹஜ்ஜாஜ் பின் அர்த்தாத் அவர்களும் யஹ்யா பின் அபீகஸீர் அவர்களிடமிருந்து (நேரடியாக எதையும்) கேட்கவில்லை என்றும் கூறினார்கள். நூல் : திர்மிதீ தமிழ் ஹதீஸ் எண் : 670 இமாம் திர்மிதீ அவர்கள் அந்த ஹதீஸின் கீழே தெளிவாக எடுத்துரைத்த இந்த கருத்தை இருட்டடிப்பு செய்து மக்களிடம் மறைத்துவிட்டார்கள். ஆதாரமற்றது என்று தெளிவாக ஆதாரத்துடன் கூறிய ஒன்று ஆதாரமாக நிற்குமா? மேலும் அவர்கள் காட்டிய அஹ்மத், இப்னுமாஜா, இப்னு அபீஷைபா ஆகிய நூல்களிலும் திர்மிதியின் அறிவிப்பாளர் வரிசையே இடம்பெற்றுள்ளது என்பதை கவனிக்க. அஹ்மதின் அறிவிப்பு : 26060 - حدثنا عبد الله حدثني أبى ثنا يزيد بن هارون قال أنا الحجاج بن أرطاة عن يحيى بن أبى كثير عن عروة عن عائشة قالت : فقدت رسول الله صلى الله عليه و سلم ذات ليلة .... - مسند أحمد بن حنبل 6 /238 இப்னுமாஜாவின்அறிவிப்பு : 1389 - حدثنا عبدة بن عبد الله الخزاعي ومحمد بن عبد الملك أبو بكر . قالا حدثنا يزيد بن هارون  أنبأنا حجاج عن يحيى بن أبي كثير عن عروة عن عائشة قالت  : - فقدت النبي صلى الله عليه و سلم ذات ليلة . فخرجت أطلبه  .... سنن ابن ماجه 1 /444 இப்னு அபீஷைபாவின் அறிவிப்பு : 29858 - حدثنا أبو خالد الأحمر عن حجاج عن يحيى بن أبي كثير عن عروة عن عائشة قالت كنت إلى جنب النبي صلى الله عليه و سلم ففقدته فاتبعته فإذا هو بالبقيع - مصنف ابن أبي شيبة 6 /108 அனைத்து அறிவிப்புகளிலும் இமாம் புகாரி அவர்கள் குறைகூறியுள்ள அறிவிப்பாளர் தொடரே இடம்பெற்றிருப்பதை பார்க்கலாம். அவர்களின் ஆதாரம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் நவின்றார்கள் : ஷஃபான் மாதத்தின்  15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால் நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான் : என்னிடம் பாவமன்னிப்புத் தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்துவிடுகிறேன். என்னிடம் ரிஜ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஜ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுப்ஹ் தொழுகையில் நேரம் வரும் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக்கொண்டேயிருப்பான். அறிவிப்பவர் : ஹஜ்ரத் அலீ  (ரளியல்லாஹ அன்ஹு) நூல்கள் : இப்னுமாஜா எண் : 1388, இமாம் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஃபுல் ஈமான் ஹதீஸ் எண் : 3822 நமது விளக்கம் : இவர்கள் பெரிய ஆதாரமாக காட்டும் இந்த செய்தியும் ஆதாரமற்று என்று ஹதீஸ்களை அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் ஆதாரமாக காட்டிய இரண்டு நூல்களின் அரபி மூலம் இதோ : இப்னுமாஜா அறிவிப்பு: 1378 حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ رواه ابن ماجة ஷுஅபுல் ஈமான் அறிவிப்பு : 3664 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ الأَصْبَهَانِيُّ ، أنا أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ أَحْمَدَ بْنِ فِرَاسٍ الْمَكِّيُّ ، نا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ زَيْدٍ الصَّائِغُ ، نا الْحَسَنُ بْنُ عَلِيٍّ ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ ، نا ابْنُ أَبِي سَبْرَةَ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، قال : قال رسول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا كَانَ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَتَهَا ، وَصُومُوا يَوْمَهَا ، فَإِنَّ اللَّهَ تَعَالَى ، يَقُولُ : أَلا مِنْ مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ ، أَلا مِنْ مُسْتَرْزِقٍ فَأَرْزُقَهُ ، أَلا مِنْ سَائِلٍ فَأُعْطِيَهُ ، أَلا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ " ، -شعب الإيمان للبيهقي ள8 /343ன இந்த இரண்டு அறிவிப்புகளிலும் இப்னு அபீ ஸப்ரா என்று அறிவிப்பாளர் இடம்பெற்றுளார். இவர் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று கடுமையாக ஹதீஸ்கலை வல்லுநர்களால் விமர்சிக்கப்பட்டவர். அவரின் விமர்சனங்கள் இதோ : وقال صالح بن أحمد بن حنبل (1)، عن أبيه: أبو بكر محمد ابن عبدالله بن أبي سبرة يضع الحديث،... وقال عبدالله بن أحمد بن حنبل (2)، عن أبيه: ليس بشئ كان يضع الحديث ويكذب... وقال عباس الدوري : سئل يحيى عن أبي بكر السبري، فقال: ليس حديثه بشئ ... وقال البخاري: ضعيف. وقال في موضع آخر : منكر الحديث… وقال النسائي : متروك الحديث... وقال أبو أحمد بن عدي : عامة ما يرويه غير محفوظ، وهو في جملة من يضع الحديث.- تهذيب الكمال للمزي ள33 /105ன இப்னு ஸப்ரா என்பவர் ஹதீஸ்களை இட்டுகட்டுபவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் கூறியுள்ளார்கள்.மற்றொரு இடத்தில் இவர் மதிப்பற்றவர், ஹதீஸ்களை இட்டுகட்டுபவர், பொய் சொல்பவர் என்றும் கூறியுள்ளார்கள். இப்னு ஸப்ராவை பற்றி யஹ்யா (பின் மயீன்) அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கவர்கள் ; அவருடைய ஹதீஸ்கள் எந்த மதிப்பும் அற்றது என்று கூறினார்கள். இமாம் புகாரி அவர்கள் இவரை பலவீனமானவர் என்றும் மற்றொரு இடத்தில் ஹதீஸ்துறையில் மறுக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்கள். ஹதீஸ்கலையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸாயீ அவர்கள் கூறினார்கள். இவருடைய பெரும்பாலான செய்திகள் ஆதாரமற்றவை. இவர் இட்டுக்கட்டிச் சொல்வர்களில் ஒருவர் என்று இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்கள். நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 33, பக்கம் :105 இப்னு ஸப்ரா என்பவரைப்பற்றி இன்னும் பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். இது ஆதாரமற்ற மிகவும் பலவீனமான செய்திகளில் ஒன்றாகும். அவர்களின் ஆதாரம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள்  இயம்பினார்கள் : உங்களில் மரணித்தோருக்கு யாஸீன் (சூராவை) ஓதுங்கள்! அறிவிப்பவர் : ஹஜ்ரத் மஃகில் இப்னு யஸார் (ரளியல்லாஹு அன்ஹு) நூற்கள் : அஹ்மத் எண் : 19842, அபூதாவூத் எண் : 2717, இப்னுமாஜா எண் : 1438, இப்னு அபீஷய்பா எண் : 10473 நமது விளக்கம் : யாஸீன் ஓதவேண்டும் என்று இவர்கள் காட்டும் ஆதாரத்தில் ஷஅபான் 15 ம் நாள் யாஸீன் ஓதவேண்டும் என்று இல்லை என்பதையும் அதுவும் மூன்று யாஸீன் ஓதவேண்டும் என்றும் இல்லை என்பதை கவனத்தில் கொள்க. மேலும் இந்த செய்தி ஆதாரமற்றது என்பதை ஹதீஸ்கலை வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவர்கள் கூறிய செய்திகளின் அரபி மூலங்கள்: அஹ்மத் அறிவிப்பு : 20316 - حدثنا عبد الله حدثني أبي ثنا عارم ثنا عبد الله بن المبارك ثنا سليمان التيمي عن أبي عثمان وليس بالنهدي عن أبيه عن معقل بن يسار قال قال رسول الله صلى الله عليه و سلم : اقرءوها على موتاكم يعني يس - مسند أحمد بن حنبل 5 /26 அபூதாவூத் அறிவிப்பு : 3121 - حدثنا محمد بن العلاء ومحمد بن مكي المروزي المعنى قالا ثنا ابن المبارك عن سليمان التيمي عن أبي عثمان وليس بالنهدي عن أبيه عن معقل بن يسار قال  : قال النبي صلى الله عليه و سلم " اقرءوا { يس } على موتاكم " وهذا لفظ ابن العلاء . - سنن أبي داود 2 /208 இப்னு மாஜா அறிவிப்பு : 1448 - حدثنا أبو بكر بن أبي شيبة . حدثنا علي بن الحسن بن شقيق عن ابن المبارك عن سليمان التيمي عن أبي عثمان ( وليس بالنهدي ) عن أبيه عن معقل بن يسار قال  : - قال رسول الله صلى الله عليه و سلم ( اقرءوها عند موتاكم ) يعني ياسين . - سنن ابن ماجه 1 /466 இப்னு அபீஷைபா அறிவிப்பு : 10853 - حدثنا علي بن الحسن بن شقيق عن بن المبارك عن التيمي عن أبي عثمان وليس بالنهدي عن أبيه عن معقل بن يسار قال قال رسول الله صلى الله عليه و سلم اقرءوها عند موتاكم يعني يس  - مصنف ابن أبي شيبة 2 /445 உங்களில் மரணித்தோருக்கு யாஸீன் (சூராவை) ஓதுங்கள்! என்று இவர்கள் செய்த பொருளும் தவறானது என்று இந்த செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்கள். قال أبو حاتم رضي الله عنه : قوله : ( اقرؤوا على موتاكم يس ) : أراد به من حضرته المنية لا أن الميت يقرأ عليه  - صحيح ابن حبان 7 /269 اقرؤوا على موتاكم يس இந்த வாசகத்தின் மூலம் நாடப்படுவது இறக்கும் நிலையில் உள்ளவரைத்தான். (ஏனெனில்) இறந்தவருக்கு (எதுவும்) ஓதப்படாது. நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான், பாகம் :7, பக்கம் : 269 மேலும் அவர்கள் காட்டிய நான்கு நூல்களின் அறிவிப்பும், ஒரே அறிவிப்பாளர் தொடர் கொண்டதாகும். இந்த செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அபூஉஸ்மான் என்பவரும் அவருடைய தந்தையும் யாரென அறியப்படாதவர்கள். இவரின் நம்பத்தன்மை உறுதிபடுத்தப்படவில்லை. 734 - حديث روي أنه صلى الله عليه و سلم قال اقرءوا يس على موتاكم أحمد وأبو داود والنسائي وابن ماجة وابن حبان والحاكم ... وأعله بن القطان بالاضطراب وبالوقف وبجهالة حال أبي عثمان وأبيه ونقل أبو بكر بن العربي عن الدارقطني أنه قال هذا حديث ضعيف الإسناد مجهول المتن ولا يصح في الباب حديث- تلخيص الحبير - ابن حجر 2 /104 இந்த செய்தியை இப்னுல் கத்தான் அவர்கள் இது குளறுபடியானவை என்றும் நபித்தோழரின் கூற்றாகவும் இடம்பெற்றுள்ளது என்றும் அபூஉஸ்மான் என்பவரும் அவருடைய தந்தையும் யாரென அறியப்படாதவர் என்று குறைகூறியுள்ளார்கள். மேலும் இந்த செய்தி அறிவிப்பாளர் பலவீனமானவர் செய்தி விளங்காதவை. இந்த கருத்தில் ஆதாரப்பூர்வமான ஒரு நபிமொழியும் இல்லை என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். நூல் : தல்கீஸுல் ஹபீர், பாகம் :2, பக்கம் : 104 அவர்களின் ஆதாரம் : இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள்  கூறினார்கள் : யார் இறைவனின் திருப்பொருத்தம் நாடி யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார். அறிவிப்பாளர் : ஹஜ்ரத் ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு நூற்கள் : இப்னுஹிப்பான் எண் : 2639, தாரமீ எண் : 3322 நமது விளக்கம் : இப்னு ஹிப்பானின் அறிவிப்பு : 2574 - أخبرنا محمد بن إسحاق بن إبراهيم مولى ثقيف حدثنا الوليد بن شجاع بن الوليد السكوني حدثنا أبي حدثنا زياد بن خيثمة حدثنا محمد بن جحادة عن الحسن عن جندب قال : قال رسول الله صلى الله عليه و سلم : من قرأ يس في ليلة ابتغاء وجه الله غفر له - صحيح ابن حبان (6 /312) தாரமியின் அறிவிப்பு : 3281 حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ مُوسَى بْنُ خَالِدٍ حَدَّثَنَا مُعْتَمِرٌ عَنْ أَبِيهِ قَالَ بَلَغَنِي عَنْ الْحَسَنِ قَالَ مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ أَوْ مَرْضَاةِ اللَّهِ غُفِرَ لَهُ وَقَالَ بَلَغَنِي أَنَّهَا تَعْدِلُ الْقُرْآنَ كُلَّهُ رواه الدارمي இப்னுஹிப்பான் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள இரண்டாவது அறிவிப்பாளர் அல்ஹஸன் (பஸரீ) அவர்கள் அடுத்து வரும் நபித்தோழரான ஜுன்துப் (ர-லி) அவர்களிடம் செவியுற்றதில்லை. இடையில் (குறைந்தது) ஒரு அறிவிப்பாளர் விடுப்பட்டுள்ளார். ولا يصح له السماع من جندب ولا من معقل بن يسار ولا من عمران بن حصين ولا من أبي هريرة - تهذيب التهذيب - ابن حجر 2 /232 ஜுன்துப் (ரலி), மஃகில் பின் யஸார் (ரலி), இம்ரான் பின்  ஹுஸைன் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோரிடம் ஹஸன் பஸரீ செவியேற்றல் என்பது சரியானது அல்ல. நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :2, பக்கம் : 232 ஹஸன் பஸரீ என்ற தாபியீ நபித்தோழர்களான ஜுன்துப் (ரலி), மஃகில் பின் யஸார் (ரலி), இம்ரான் பின்  ஹுஸைன் (ரலி-), அபூஹுரைரா (ரலி)ஆகியோரிடம் நபிமொழிகளை கேட்டுள்ளார் என்பதற்கு சான்றுகள் இல்லை என்று ஹதீஸ்கலை வல்லுநர்கள் கூறியுள்ளனர். எனவே ஹஸன் பஸரீ அவர்களுக்கும் ஜுன்துப் (ரலி) அவர்களுக்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார். அவர் யார்? அவரின் நம்பகத்தன்மை என்ன? என்பது நிரூபணமாகாததால் இந்த செய்தி முன்கதிவு (தொடர்பு அறுந்த) பலவீனமான செய்தியாகிறது. தாரமீயில் இடம்பெற்ற செய்தியில் ஹஸன் அவர்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக இடம்பெற்றுள்ளது. இதுவும் (குறைந்தது) இரண்டு அறிவிப்பாளர்கள் தொடர்ந்தாற்போல் விடுபட்ட (முஃலல்) வகையைச்சார்ந்த மிகவும் பலவீனமான செய்தியாகும். எனவே இந்த செய்திகளை ஆதாரமாகக் கொண்டு நாம் செயல்படமுடியாது. ஷஅபான் மாதம் 15 ம் நாளுக்கு என சிறப்பு உண்டு என்று அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியையும் நாம் காணமுடியவில்லை. திருப்பூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா காட்டிய அனைத்து செய்திகளும் பலவீனமான அல்லது மிகவும் பலவீனமான செய்தியாகவே உள்ளது. பலவீனமான செய்திகளை பின்பற்றினால் என்ன? என்று சிலருக்கு தோன்றலாம். பலவீனமான செய்திகளை பின்பற்றத் தொடங்கினால் இஸ்லாத்தின் தூய்மையை இழக்க நேரிடும். இதற்கு உதாரணமாக பின்வரும் செய்தியை தருகிறோம். 2810 - النظر إلى الوجه الحسن يجلو البصر رواه أبو نعيم بسند ضعيف - كشف الخفاء 2 /317 அழகிய முகத்தை பார்ப்பது பார்வையை கூர்மையாக்கும் என்ற நபிமொழி அபூநுஐம் அவர்கள் பலவீனமான அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளார்கள். (நூல் : கஷ்புல் கஃபா, பாகம் : 2, பக்கம் : 317) இந்த செய்தி பலவீனமாதாக உள்ளது. பலவீனமான செய்தியை ஏற்றுக் கொள்ளலாம் என்ற நிலைக்கு நாம் வந்தால் பெண்களை சைட் அடிப்பது சுன்னத் என்று கூறவேண்டிய நிலை ஏற்படும். இது ஒரு உதாரணத்திற்காக கூறியுள்ளோம். இதுபோன்ற ஏராளமான பலவீனமான செய்திகள் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலவீனமான செய்திகளை பின்பற்றக்கூடாது என்று நாம் கூறுவதை விட ஹதீஸ்கலை மேதை இமாம் முஸ்லிம் அவர்களின் கூற்றை அப்படி தருகிறோம் அதை படியுங்கள் : அடுத்து -அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!- தம்மை ஹதீஸ் அறிவிப்பாளர் என்று காட்டிக்கொள்வோரில் பலர் ஒரு விஷயத்தை நன்கறிந்து வாக்குமூலம் அளித்துள்ளனர். அதாவது அவர்கள் அப்பாவி மக்களுக்கு அறிவிக்கும் ஹதீஸ்களில் பெரும்பாலானவை நிராகரிப்பட்டவையும் திருப்தியற்றோரிடமிருந்து அறிவிக்கப்படுபவையும் ஆகும். மாலிரிக் பின் அனஸ் (ரஹ்), ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்), சுஃப்யான் பின் உயைனா (ரஹ்), யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்), அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) போன்ற நபிமொழி வல்லுநர்கள் யாரிடமிருந்து அறிவிப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளார்களோ அவர்களிடமிருந்தே தாங்கள் ஹதீஸ்களை அறிவிப்பதாக இவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். பலவீனமான ஹதீஸ்களையும் மறுக்கப்பட்ட அறிவிப்புகளையும் கைவிட்டு, உண்மை, நாணயம் ஆகியவற்றில் பெயர் பெற்ற நம்பத் தகுந்தோர் அறிவித்துள்ள பிரபலமான சரியான தகவல்களை மட்டுமே அறிவிப்பது இவர்களின் கடமையாயிருக்க, அதில் முறை தவறி நடந்துகொள்கிறார்கள். இந்நிலையை நாம் கண்டதால்தான் நீங்கள் கோரியபடி ஹதீஸ்களைத் தரம் பிரித்துக் காட்டிச் சரியானவற்றைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டியதாயிற்று. பலவீனமானதும் அறியப்படாததுமான அறிவிப்பாளர்தொடர்களில் வரும் மறுக்கப்பட்ட செய்திகளை, அவற்றின் குறைகளைக் கண்டறிய முடியா மக்களிடம் அவர்கள் பரப்பிவருவதால்தான் உங்கள் கோரிக்கையை ஏற்பது நமக்கு எளிதாயிற்று. (நூல் : ஸஹீஹ் முஸ்-லிம் முன்னுரை) எனவே பலவீனமான செய்திகளை அடிப்படையாக வைத்து அமல் செய்வது கண்டிப்பாக கூடாது.
ஆன்லைன் பீஜே

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை