Posts

புத்தாண்டு கொண்டாடலாமா?

புத்தாண்டு கொண்டாடலாமா ? கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.  ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.  3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சா

இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உள்ளனவா?

இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உள்ளனவா? ஐந்து கலிமாக்கள் உள்ளதாகக் கூறுவோர் சில சொற்களை உண்டாக்கி கலிமா தய்யிப், கலிமா ஷஹாதத், கலிமா தம்ஜீது, கலிமா தவ்ஹீது, கலிமா ரத்துல் குஃப்ர் என்று பெயர் வைத்துள்னர். இதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருப்பதாக நம்புவது பித்அத் எனும் வழிகேடும் பாவமும் ஆகும். ஐந்து கலிமாக்கள் என்று இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளதில் நான்காவது மற்றும் ஐந்தாவது கலிமாக்களில் உள்ள வாக்கியங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதே இல்லை. ஒரு நபித்தோழர் கூட அதைச் சொல்லவும் இல்லை. அவர்கள் அறிந்திருக்கவும் இல்லை. நான்கு மற்றும் ஐந்தாவது கலிமாக்களை எவனோ ஒருவன் சுயமாகக் கற்பனை செய்து அதை இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்று என நம்பச் செய்துள்ளான் என்றால் இந்தச் சமுதாயம் எந்த அளவுக்கு ஏமாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மரணத்தருவாயில் நபிகள் நாயகம்(வீடியோ)

Image
மரணத்தருவாயில் நபிகள் நாயகம்  (வீடியோ)

இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் உபரியான வணக்கங்கள்

Image
இறை நெருக்கத்தை பெற்றுத்தரும் உபரியான வணக்கங்கள்

இம்மையில் விதை மறுமையில் அறுவடை

இம்மையில் விதை மறுமையில் அறுவடை இந்தப் பரந்த உலகில் பல்வேறுபட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் அனைவரும் நிறத்தாலும் குணத்தாலும் மொழியாலும் பல விதமாக அமைந்துள்ளனர். இதில் பெரும்பான்மையான மக்கள், நம்மைப் படைத்த ஒருவன் இருக்கின்றான் என்பதை நம்பி வாழ்கின்றனர். மதங்கள் அதன் நம்பிக்கைகளும் கடவுளை நம்பும் மனிதர்கள் பல மதங்களை பின்பற்றி வாழ்கின்றனர். ஒரு கடவுள் கொள்கை உள்ளவர்கள் , முக்கடவுள் கொள்கை உள்ளவர்கள், பல கடவுகள் கொள்கை உள்ளவர்கள் என்று பலவிதமான பல மதங்களை பின்பற்றி நடக்கின்றனர். இவ்வாறு பல விதமான கடவுள் கொள்கை உள்ளவர்கள், கடவுளுக்காகப் பல விதமான காரியங்களைச் செய்கின்றனர். இது போன்ற காரியங்களைச் செய்வதன் மூலம் நாம் இறை திருப்தியை அடையலாம் என்று நம்புகின்றனர்.

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு :வெளிநாட்டு பெண்கருத்து!

Image
பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு : இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கருத்து! உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியும். ஆண்களிடம் குலைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரண ங்களில் ஒன்று நவீன கால பெண்களின் ஆடை முறைகளே. பெண்கள் தங்களின் உடலை இஸ்லாம் சொல்லும் முறைப்படி மறைத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை பெருமளவில் குறைக்க முடியும். அதேபோல் பெண்கள் ஆண்களிடம் குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலம் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என குர்ஆன் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றது. "... நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்" அல்குர் ஆன் (33.32)

இரத்ததானம் செய்யலாமா???

Image
இரத்ததானம் செய்யலாமா??? யாருக்கு எந்தவகை இரத்தம் கொடுக்கலாம்? « A குரூப்: இவர்களுக்கு A குரூப் அல்லது O குரூப் இரத்தத்தைத்தான் கொடுக்க வேண்டும். « B குரூப்: இவர்களுக்கு B குரூப் அல்லது B குரூப் இரத்தம்தான் கொடுக்க வேண்டும். « AB குரூப்: இவர்களுக்கு A AB O, B குரூப் இரத்தம் கொடுக்கலாம். « O குரூப்: இவர்களுக்கு O குரூப் இரத்தம் தான் கொடுக்கவேண்டும். ‘ஆர்எச்’ என்று சொல்கிறார்களே அது என்ன? இரத்தத்தில் கி,ஙி,ளி வகையைத் தவிர, பார்க்க வேண்டிய மற்றொரு ஆன்டிஜனும் இருக்கிறது. ரிசங் என்ற ஒரு குரங்கிலிருந்து இந்த ஆன்டிஜன் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு ஆர்எச் என்று பெயர் கொடுக்கப்பட்டது. இந்த ஆர்எச், இரத்த சிவப்பு அணுக்களின் தோலின் மேல் சிலருக்கு இருக்கும். சிலருக்கு இருக்காது. இதைக் குறிப்பிட A+ மற்றும் A என்று பயன்படுத்துகிறார்கள்.

கிறிஸ்மஸ் - மறைக்கப்பட்ட உண்மைகள்

கிறிஸ்மஸ் - மறைக்கப்பட்ட உண்மைகள் ‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’– Christmas – என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது. பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா? கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி இறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா? என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும் ஆய்வுக்குட்படுத்துவோம். வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ்…

கொன்றால் கூட தப்பில்லை... பெண்கள் கவனத்திற்கு!

கொன்றால் கூட தப்பில்லை... பெண்கள் கவனத்திற்கு! நம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சமூகதீமைகளுள் முதன்மையானதாக அதிகரித்துவரும் வன்புணர்வு இடம் பெற்றிருப்பது கவலைக்குறிய விஷயம். நாட்டின் தலை நகரில் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் கவனித்து இனி மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஒரு சில யோசனைகளை முன் வைக்கின்றனர். கொன்றால் கூட தப்பில்லை... பெண்கள் கவனத்திற்கு! தன்னுடைய பெண்மையை காப்பாற்றிக்கொள்வதற்காக நடைபெறும் போராட்டத்தில் எதிராளியை கொலை செய்வது கூட குற்றமாகாது என்று சட்டம் சொல்கிறது. எனவே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது பெற்றோர்களின் கடமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பள்ளி, கல்லூரிகளில், உறவினர்களிடத்தில் இருந்து பெண்களுக்கு எந்தமாதிரியாக பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படும் என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவதோடு, அவர்களுக்கு எந்தமாதிரியான சிக்கல்கள் வரும் என்றும், அதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கவேண்ட

நீங்கள் இறைவனை தேடுபவரா?????????

அன்பிற்கினிய சகோதர்களே நீங்கள் அகில உலகையும் படைத்து பராமரிக்கும்   ஓர் இறைவனை தேடக்கூடியவரா??? நீங்கள் தேடக்கூடிய இறைவன் கீழ் காணும் தகுதியுடையவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா??? 1) இறைவன் ஒரே ஒருவனே 2) அவனே படைக்க கூடியவன் 3) அவனே காக்க கூடியவன் 4) அவனே அழிக்க கூடியவன் 5) அவன் எந்த தேவையும் அற்றவன் 6)அவன் யாரையும் பெற்றவனாக இருக்க கூடாது 7) அவன் யாராலும் பெறப்பட்டவனாகவும் இருக்க கூடாது 8) அவன் சாப்பிடுபவனாக இருக்க கூடாது 9) அவன் தூங்குபவனாகவும் இருக்க கூடாது 10) அவன் சாவுபவனாகவும் இருக்க கூடாது 11) அனைத்தையும் கண்கானிக்க கூடியவனாக இருக்க வேண்டும் 12) அனைத்தையும் பார்க்க கூடியவனாக இருக்க வேண்டும் 13) அனைத்தையும் கேட்க கூடியவனாக இருக்க வேண்டும் 14) அனைத்து ஆற்றலும் அதிகாரமும் உடையவனாக இருக்க வேண்டும் 15) அவனுக்கு நிகராக வேறேதும் இருக்க கூடாது

தமிழகத்தில் தவ்ஹீத் மறுமலர்ச்சி

Image
தமிழகத்தில் தவ்ஹீத் மறுமலர்ச்சி

சினிமா கூத்தாடிகளின் உண்மை முகம்!

சினிமா கூத்தாடிகளின் உண்மை முகம்! ஜின்களிலும் ,  மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். அல்குர்ஆன்  7 : 179 சமுதாயத்திலுள்ள பல   துறைகளில் கடைந்தெடுத்த கடைமட்ட கழிசடைத் துறைதான் சினிமாத்துறை. இங்கே பொய் ,  பித்தலாட்டம் ,  ஏமாற்று ,  விபச்சாரம் என்று அயோக்கியத்தனங்களின் அத்தனை சொற்களுக்கும் நேர்முக சாட்சிகளை ப்  பார்க்கலாம். காசு சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் ,  எப்படி வேண்டுமானாலும் செய்யத் தயங்க மாட்டார்கள். சென்சார் எதையெல்லாம் அனுமதிக்குமோ அத்தனையும் செய்யத் துணிவார்கள். சென்சார்போர்டு முழு நிர்வாணத்தையும் அனுமதிக்குமானால் எவ்வித வெட்கமும் இல்லாமல் நிர்வாணமாகக் காட்சி தர எந்த நடிகரும் நடிகையும் மறுக்க மாட்டார்கள். சமுதாயத்தில் குற்றங்களை க்  கற்றுக் கொடுப்பவர்கள

மவ்லீது பாடலா??? வணக்கமா???(விடியோ)

Image
மவ்லீது பாடலா??? வணக்கமா???(விடியோ)

நபி வழியில் நம் தொழுகை செய்முறை விளக்கம்(வீடியோ)

Image
நபி வழியில் நம் தொழுகை செய்முறை விளக்கம்(வீடியோ)

யுகமுடிவு நாளின் அடையாளங்கள் (வீடியோ)

Image
யுகமுடிவு நாளின் அடையாளங்கள் (வீடியோ)

இபுராஹிம் நபியின் தியாகம் (வீடியோ)

Image
இபுராஹிம் நபியின் தியாகம் (வீடியோ) உரை; மசூது உஸ்மானி

. இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?

இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இவ்வசனம் (4:156 ,   157) கூறுகிறது. ஈஸா நபி எனும் ஏசுவைக் குறித்து இஸ்லாத்தின் நம்பிக்கையும் கிறித்தவர்களின் நம்பிக்கையும் பல விஷயங்களில் வேறுபடுகின்றன. இயேசுவை யூதர்கள் கொல்ல முயற்சித்ததை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக வேறொருவரைத் தான் கொலை செய்தார்கள். இயேசு இறைவனால் உயிருடன் உயர்த்தப் பட்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எந்த மனிதரும் மரணித்தே ஆகவேண்டும் ;  பூமியில் அடக்கம் செய்யப்பட்டே ஆக வேண்டும் என்ற இறைவனின் விதிக்கு ஏற்ப இயேசு இறுதிக் காலத்தில் பூமிக்கு அனுப்பப்பட்டு மரணிப்பார் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும். இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாகவும் பின்னர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த தாகவும் கிறித்தவர்கள் நம்புவதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசு கடவுளின் குமாரரா?

இயேசு கடவுளின் குமாரரா? இவ்வசனங்கள் (3:49 ,  3:59 ,  4:171 ,  4:172 ,  5:17 ,  5:72 ,  5:75 ,  5:116 ,  9:31 ,  43:59 ,  43:64) இயேசு கடவுளின் குமாரனல்ல ;  கடவுளின் தூதர்தான் என்று கூறு கின்றன. இயேசுவைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை. இயேசு தன்னைக் கடவுள் என்று ஒரு போதும் கூறியதில்லை. தன்னைப் படைத்த இறைவனை வணங்க வேண்டும் என்று தான் அவர் போதனை செய்தார். இயேசுவுக்குப் பின்னால் வந்தவர்கள் தான் கடவுளின் குமாரன் என்ற கொள்கையை உருவாக்கி இயேசுவின் கொள்கைக்கு எதிராக நடந்து விட்டனர் என்பது இஸ்லாத்தின் நிலைபாடாகும். இந்தக் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் வசனங்கள் பைபிளில் இன்றளவும் எஞ்சியிருக்கின்றன. ஒரே கடவுளாகிய கர்த்தர் என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். யாத்திராகமம் 20:3 கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு இது உனக்குக் காட்டப்பட்டது. உபாகமம் 4:35

கியாமத் நாளின் அடையாளங்கள்

Image
 கியாமத் நாளின் அடையாளங்கள் நாம் வாழுகின்ற இவ்வுலகம் ஒரு நாள் அழிக்கப்படும் ;  அதன் பின்னர் அனைவரும் உயிர்ப்பிக்கப்ப்டுவர். அந்நாளில் நியாயத் தீர்ப்பு வழங்கப்படும் என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும்.   கியாமத் நாளின் அடையாளங்கள்   உலகம் எப்போது அழிக்கப்படும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். நபிமார்களோ , வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய   முடியாது. ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர். அந்த அடையாளங்களை இந்த நூல் கீழ்க்காணும் தலைப்புகளில் தொகுத்துச் சொல்கிறது. சிறிய அடையாளங்கள் மகளின் தயவில் தாய் பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல் குடிசைகள் கோபுரமாகும் விபச்சாரமும் ,  மதுப்பழக்கமும் பெருகும் தகுதியற்றவர்களிடம் பொறுப்பு பாலை வனம் சோலை வனமாகும் காலம் சுருங்குதல் கொலைகள் பெருகுதல் நில அதிர்வுகளும் ,  பூகம்பங்களும் அதிகரித்தல் பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது நெருக்கமான கடை வீதிகள் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆடை அணிந்தும் நிர்வாணம் உய

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது!

டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியாது! வரக்கூடிய டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றதா? என்ற கேள்விக்குறியோடு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஏற்படுத்திய பீதிதான் தற்போது முக்கிய இடத்தைப் பிடித்த பரபரப்பு செய்தி. டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியும் என்று சொல்கின்றார்களே! இவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதை உண்மையில் சாத்தியமா? அவ்வாறு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் செய்திகளை யாராவது சொல்ல இயலுமா என்ற சிந்திக்கும் திறனை இவர்கள் இழந்ததுதான் இத்தகைய செய்திகளை இவர்கள் வெளியிடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மறைவான விஷயங்களை எவராலும் அறிய இயலாது : நாளை என்ன நடக்கவுள்ளது?. அடுத்த நிமிடம் என்ன நடக்க இருக்கின்றது? என்பதை அறியும் ஆற்றல் எந்த மனிதருக்கும் இல்லை. இதை சிந்திக்கும் திறன் படைத்த யாரும் விளங்கிக்கொள்ளலாம். அப்படி இருக்கும்போது டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியப்போகின்றது என்ற செய்தி எப்படி மற்ற மனிதர்களுக்குத் தெரியும் என்ற சாதாரண சிந்தனைத்திறன் இருந்தாலே இது மிகப்பெரிய கட்டுக்கதை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

டிசம்பர் 25-ல் ஏசு பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்கு மூலம்!

டிசம்பர் 25-ல் ஏசு பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்கு மூலம்! – கிறித்தவ மக்கள் அதிர்ச்சி!! கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.    போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமா? ஏசு பிறந்த ஆண்டு எது என்பதும் தவறாகவே மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் போப் ஆண்டவர்.

நபி(ஸல்)அவர்களின் இறுதி நாட்கள்

அழைப்புப் பணியின் வெற்றிகளும் அதன் தாக்கங்களும் நபி (ஸல்) அவர்களின் இறுதி காலக் கட்டத்தைப் பற்றி நாம் அறிவதற்கு முன் இதுநாள் வரை அவர்கள் புரிந்த செயல்பாடுகள், ஆற்றிய பணிகள் பற்றி சுருக்கமாகக் கூறுவது நல்லது. அதற்குக் காரணம், இச்செயல்பாடுகள்தான் நபி (ஸல்) வாழ்க்கையின் இதயப் பகுதியாகும். இதனால்தான் ஏனைய இறைத்தூதர்களிலிருந்து நமது நபி (ஸல்) தனிச் சிறப்புற்று விளங்குகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு “முன்னோர்கள் மற்றும் பின்னோர்களின் தலைவர்” என்று மகுடம் சூட்டியிருப்பதற்கும் காரணம் இதுதான். (நபியே!) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் நீங்கள் (தொழுகைக் காக எழுந்து) நில்லுங்கள். (முழு இரவிலுமல்ல அதிலொரு) சொற்ப பாகம். (அல்குர்ஆன் 73:1, 2) (வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் (அல்குர்ஆன் 74:1, 2)

கல்விக் கடலா கஸ்ஸாலி?

இந்த கஸ்ஸாலி எனப்படுபவன் இஸ்லாத்திற்கு மாற்றமான பல கருத்துக்களை சொல்லியுள்ளவன்... ஒரு சிலர் இவனை கல்விக்கடல் என்றும் ஏதோ நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு தெரியாத ப ல விஷயங்கள் இவனுக்கு தெரியும் என்பது போல் தூக்கி பிடித்து தங்களுடைய ஈமானை இழக்கும் காட்சியை பார்க்கிறோம்...உண்மையிலேயே... கல்விக் கடலா கஸ்ஸாலி? "வானத்தின் ரட்சகா! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்தப்புதியவனின் உள்ளத்தை ஒளிரச் செய்!'' காலை மாலையில் நடைபெறும் மக்தபுகள் முதல், பட்டமளிப்பு விழா நடக்கும் பெரியமதரஸாக்களின் மாணவர்கள் வரை ஒரு பிரார்த்தனையாகப் பாடுகின்ற பாடல் வரிகள் தான் இவை. அறிவுக் கடல், கல்விக் கடல் என்று இந்த ஆலிம்களால் மெச்சப்படுகின்றவர் கஸ்ஸாலி! இவர் கல்விக் கடலா? என்பதைக் கீழ்க்காணும் அவரது நூற்களில் இடம் பெறும் பதிவுகளைப் பார்த்துமுடிவு செய்வோம்.

மனுநீதி

மனுநீதி சூத்திரனுக்குத் தர்மம் சூத்திரன் சுவர்க்கத்திற்காவது , ஜீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது , பிராமணனையே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம். (அத் 10. சு .122) பிராமணர்களை வழிபடாததனாலும் உபநயனம் முதலிய சடங்குகள் செய்துகொள்ளாததனாலும் சத்திரியர் வரவர சூத்திரத் தன்மை அடைந்தார்கள். (அத்10. சு.43) பிராமணன் உண்டு மிகுந்த உணவு(எச்சில்) உடுத்திக் கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம்(பதர்) இவைகளைப் பிராமணன், சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும். (அத்.10.சு.,125) சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம், பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார். (அத்.8. சு 413) சூத்திரன் பிராமணனுக்குப் பணிவிடை செய்யும்படி அரசன் சொல்ல வேண்யது, அப்படிச் செய்யாவிட்டால் அரசர்கள் தண்டித்து அங்ஙனம் செய்யச் சொல்ல வேண்டியது. (அத் 8. சு. 235) சூத்திரன் மற்ற மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தர்மமாக ஏற்படுத்தினார் ; இதனால் அவனுக்குத் தானம் முதலியவையும் உண்டென்று தோன்றுகிறது (அத

தாடியின் நன்மைகள் -அறிவியல் சான்றுகள்.

தாடியின் நன்மைகள் -அறிவியல் சான்றுகள். தாடி பற்றி பிறமத அறிஞர்களின் ஆய்வுகள், கருத்துகள் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின்  சமூக உளவியல் துறையைச்  சேர்ந்த டாக்டர் டேனியல் G பிரீட்மான் (Daniel G. Freeman) என்பவர்  தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (reproductive value) பற்றி ஓர்  ஆய்வு மேற்கொண்டார். இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட  சில இளங்கலை மாணவர்களிடம், தாடி வைப்பதால் அவர்களுக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்படுகிறது என்பதைப் பற்றி பிரிண்ட் செய்யப்பட்ட கேள்வி மூலமாகவும் மற்றும் நேர்காணல் மூலமாகவும் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்யும் ஒரு மாணவர், பல மாணவிகளிடம்  "தாடி வைத்த ஆண்களைப்பற்றி என்ன உணருகிறீர்கள்" என்று நேர்காணல் எடுத்தார். அனேகமாக எல்லா மாணவிகளும், தாடியுடன் உள்ள  ஆண்களின் முகம் , முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட ஆண்களின் முகத்தைக் காட்டிலும் அதிக ஆண்மைத்தனம், முதிர்ச்சித்தன்மை, சுதந்திர உணர்வு கொண்டதாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

சூரா லஹப் விரிவுரை

Image
சூரா லஹப் விரிவுரை   நபிகளாரின் பகிரங்க அழைப்பு லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோன்று மஸத் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் கடைசி வார்த்தையாக இடம் பெறுவதால் மஸத் என்றும் இந்த அத்தியாயம் குறிப்பிடப்படுகிறது. சில அத்தியாயங்களுக்குத்தான் நபியவர்கள் பெயர் வைத்தார்கள். குர்ஆனிலுள்ள அனைத்து அத்தியாயங்களுக்கும் நபியவர்கள் பெயர் வைக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் சூட்டாமல் அடுத்த தலைமுறையினரால் பெயர் சூட்டப்பட்ட அத்தியாயங்களில் இந்த அத்தியாயமும் ஒன்றாகும். அந்தந்த அத்தியாயத்தில் இடம்பெறுகிற சொற்களில் ஏதாவது ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து அதை அத்தியாயத்தின் பெயராக ஆக்கினார்கள். இந்த அத்தியாயத்தில் லஹப் எனும் சொல் இடம்பெற்றதால் லஹப் என்றும் மஸத் என்ற சொல் இடம்பெற்றதால் சிலர் மஸத் என்றும் இந்த அத்தியாயத்துக்கு பெயரிட்டுள்ளனர். இக்லாஸ் (112) ஃபலக் (113), நாஸ் (114) போன்ற அத்தியாயங்களை நபிகள் நாயகம் சிறப்பித்துக் கூறியது போல் இந்த அத்தியாயத்தைச் சிறப்பித்து எதுவும் கூறவில்லை. ஆனாலும் இந்த அத்தியாயம்

நபி வழியில் நம் தொழுகை (வீடியோ)

Image
நபி வழியில் நம் தொழுகை (வீடியோ)

சபர் மாதம் பீடையா???(வீடியோ)

Image
சபர் மாதம் பீடையா???(வீடியோ)

இஸ்லாமியர்கள் அன்றும் இன்றும் (வீடியோ)

Image
இஸ்லாமியர்கள் அன்றும் இன்றும் (மசூது உஸ்மானி)

ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம்

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது இருக்கும் போது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான செய்திகளில் கூறப்பட்டுள்ளது. 5133 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ وَأُدْخِلَتْ عَلَيْهِ وَهِيَ بِنْت ُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا رواه البخاري நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி( நூல் : புகாரி (5133) நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட உடன் இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் ஒரே நேரத்தில் அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமாகவே அவர்களுக்கு அருளப்பட்டது. எனவே இறைவனிடம் இருந்து எது குறித்து சட்டம் அருளப்படவில்லையோ அந்த விஷயங்களில் அந்த சமுதாயத்தில்

ஈஸ்டர் சண்டே அல்ல! ஈஸ்டர் மண்டே !!!

Image
கிறிஸ்தவ சகோதரர்கள் ஈஸ்டர் சண்டே என்று கூறி “ஏசு மரணித்து உயிர்த்தெழுந்த நாள்” என்ற அடிப்படையில் கொண்டாடியாதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளைப் படித்து இந்த ஈஸ்டர் சண்டே குறித்து ஆய்வு செய்தால் பைபிள் அடிப்படையில் அது ஈஸ்டர் சண்டே அல்ல! ஈஸ்டர் மண்டே என்பது தெரிய வந்துள்ளது. அது குறித்த ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்டை கீழே தருகின்றோம். இதை கிறிஸ்தவ சகோதரர்கள் நன்கு ஆய்வு  செய்யக் கடமைப்பட்டுள்ளனர். ஏசு மரணித்த நாள்: ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை குட் ஃப்ரைடே அதாவது புனித வெள்ளி என்று கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படியானால் அவர் மரணித்தது வெள்ளிக்கிழமை என்பது உறுதியாகின்றது. ஏசு தான் மரணிப்பது குறித்து செய்த ஒரு முன்னறிவிப்பு மத்தேயூ என்ற சுவிஷேசத்தில் 12 : 40 ஆம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது.

மகாத்மா காந்திஜியே அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!

மகாத்மா காந்திஜியே அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!  தேசவிடுதலைக்காக போராடும் காஙிகிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில ் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பா... யிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர். லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தர்காஹ் என்பதன் விளக்கம்......!!!!

தர்காஹ் என்பதன் விளக்கம்......!!!! இஸ்லாமிய கொள்கைக்கு எதிரான தர்காக்கள் உருவான வரலாறு கண்டிப்பாக அனைத்து முஸ்லிம்களும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று இந்த கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் சகோதரர்களே! தர்காஹ் என்பது பாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் (Persian: درگه) இதற்கான விளக்கம் என்னவென்றால் ஒரு கட்டிடம் என்பதுவே. இந்த தர்காஹ் கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்ப டுத்தியவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்த சூஃபிக்கள் தான் மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் (ஸல்) காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமு மில்லை. இது முழுக்க முழுக்க வழிகேடாகும்.

இந்து மதமும் பெண்களும்

இந்து மதமும் பெண்களும்  சில மாதங்களிற்கு முன்பு திருமண மந்திரங்கள் பற்றிய ஒரு பதிவை சில தளங்களில் எழுதினேன். இதையடுத்து நான் எழுதியது சரியா என்று ஒரு விவாதம் ஏற்பட்டது. ஒரு பத்திரிகையில் இந்த மந்திரங்கள் பற்றி எழுதிய போது, யரோ ஒரு பார்ப்பனர் “மந்திரங்கள் புனிதமானவை, அதை குற்றம் சொல்லக் கூடாது” என்று ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தார். வேறு எந்த விளக்கமும் எழுதவில்லை. ஆனால் கருத்துக் களங்களில் திருமண மந்திரங்கள் பற்றிய என்னுடைய கருத்து தவறு என்று சிலர் வாதிட்டார்கள். சில விளக்கங்களை முன்வைத்தார்கள். அவைகளுக்கு பதில் அளிக்க முனைந்த பொழுதே, அது நீண்டு இப்படியான ஒரு தொடருக்கு வித்திட்டது. அந்த வகையில் இந்தத் தொடருக்கு காரணமான திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றி முதலில் ஒரு முறை பார்ப்போம். தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள். ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்தின்

முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை

முஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் மவ்லிதுகள் எனும் பாடல்களைப் புனிதமான வணக்கமாக எண்ணி ஓதி வருகின்றனர். இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமைகளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறை வேற்றாதவர்கள் கூட இந்த மவ்லிதுகளைப் பாடுவதை மட்டும் விடாப்பிடியாக நிறைவேற்றி வருவதிலிருந்து இதை அறியலாம். மிக முக்கியமான கடமையாகக் கருதப்படும் இந்த மவ்லிதுகள் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் புனிதமானவையா? அல்லது அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா? இது பற்றி கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் எந்த ஒரு காரியமும் ஒரு வணக்கமாகக் கருதப்பட வேண்டுமானால் – அதைச் செய்வதால் மறுமையில் ஏதேனும் நன்மை கிடைக்கும் என்று நம்ப வேண்டுமானால் – அந்தக் காரியம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களால் கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவர்கள் முன்னிலையில் அக்காரியம் நிகழ்ந்து அதை அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத எந்தக் காரியமும் ஒரு வணக்கமாக – மறுமையில் நன்மை யளிப்பதாக ஆக முடியாது. இது இஸ்லாத்தின் அடிப்படை விதி.

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக! தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும்  மவ்லவி தேங்கை சர்புத்தீன்  என்பவர் எழுதிய  சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித்  என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க! சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்? தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்

ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும் தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும் இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர். குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர். இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும். இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக  எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள். ஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்து பீடையை நீக்குகின்றனர். இன்னும் சிலர் மாவிலைகளில் "சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்'' என்ற  திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதன

அறியாமைக்கால மூட பழக்கங்கள்

அறியாமைக்கால பழக்கங்கள் வீட்டுக்குள் வரும்போது சகுனம் பார்த்தல் قَالَ سَمِعْتُ الْبَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِينَا كَانَتْ الْأَنْصَارُ إِذَا حَجُّوا فَجَاءُوا لَمْ يَدْخُلُوا مِنْ قِبَلِ أَبْوَابِ بُيُوتِهِمْ وَلَكِنْ مِنْ ظُهُورِهَا فَجَاءَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَدَخَلَ مِنْ قِبَلِ بَابِهِ فَكَأَنَّهُ عُيِّرَ بِذَلِكَ فَنَزَلَتْ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنْ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا رواه البخاري அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது "உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று; மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். ஆகவே வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!''

இறைவனிடம் கையேந்துங்கள் (வீடியோ)

Image
இறைவனிடம் கையேந்துங்கள் (வீடியோ)

விதி ஓர் விளக்கம் (வீடியோ)

Image
விதி ஓர் விளக்கம் (வீடியோ)