Posts

Showing posts from June, 2013

எறும்புக்கு அறிவு உண்டா?

எறும்புக்கு அறிவு உண்டா?  சுலைமான் நபி வருவதை எறும்புகள் அறிந்து கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் எறும்புகள் மிதிபட்டு சாவது ஏன்? என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள். ஆனால் இன்று இவர்களின் விதண்டாவதத்துக்கு மரண அடி கொடுக்கும் வகையில் ஒரு ஆய்வின் முடிவு அமைந்துள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் 12வது பதிப்புக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ள பதிப்பில் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளோம். (இப்பதிப்பு ஜூலையில் வெளியாக உள்ளது)  470 எறும்புகளுக்கும் அறிவு உண்டு இவ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும் அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது. அப்படியானால் எறும்புகள் மனிதனின் கால்களில் மிதிபட்டுச் சாவது ஏன்? சுலைமான் நபி வருவதை அறிந்து மிதிபடாமல் தப்பித்தது போல்  இப்போதும் தப்பிக்க வேண்டியதுதானே என்று சிலர் விதண்டாவாதம் செய்வார்கள். அந்த எறும்புகள் எதை அறிந்து கொண்டதாக இவ்வசனம் கூறுகிறதோ அதை எறும்புகள் இப்போதும் அறிந்து கொள்ளத்தான் செய்கின்றன.

தேனீக்களின் வழி அறியும் திறன்

தேனீக்களின் வழி அறியும் திறன்  தேனீக்கள் மூலம் கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற செய்தி தமிழில் எல்லா ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு வெளிவந்தது. அச்சு அசலாக ஒரு வார்த்தை கூட மாறாமல் அனைத்து ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு தான் இச்செய்தி வெளியானது. ஏதோ ஒரு ஊடகத்தில் வந்ததை அப்படியே காப்பி அடித்து எல்லோரும் பயன்படுத்தியுள்ளனர். ஜாக்ரப், மே 23- வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அய்ரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை காடுகளும், பெரிய ஏரிகளும் உடையது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாட்டில், 1990இல் பால்கன் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. சுமார் 750 சதுர கி.மீ. பரப்பளவுக்கு கண்ணி வெடிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொத்தம் 90,000 வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தாலும், பலனளிக்கவில்லை. கண்ணிவெடியில் சிக்கி இதுவரை 2500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்நாட்டில் உள்ள ஜாக்ரப் பல்கலைக்க

குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று

குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று  திருக்குர் ஆன் இறைவேதம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதை நம்முடைய தமிழாக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளோம். அந்த வகையில் குர் ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்றைக் கீழே தந்துள்ளோம். இது விரைவில் வெளிவரவுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 12ஆம் பதிப்பில் கூறப்பட்ட விஷயமாகும். 467. யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண்குழந்தையை அல்லாஹ் கொடுத்த செய்தியைச் சொல்கிறான். திருக்குர்ஆன் இறைவேதம் என்று நிரூபிக்க இந்த ஒரே ஒருவசனமே போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது. ஸகரிய்யா நபிக்கு ஆண் குழந்தையைக் கொடுக்கும் போதே அதற்கு யஹ்யா என்ற பெயரைச் சூட்டி அல்லாஹ் வழங்குகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் ஒருவருக்கும் சூட்டியதில்லை எனவும் கூறுகிறான். இந்தப் பெயரை இதற்கு முன் சூட்டியதில்லை என்று அன்றைக்கு எந்த மனிதனாலும் பேச முடியாது. ஒரு மனிதன் இப்படிச் சொல்வதாக இருந்தால் அவனுக்கு உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். அன்று வரை உலகில் பிறந்த, பிறந்து மரணித்த ஒவ்வொரு நபரின் பெயரும் அவனு

பாவம் போக்குமா பராஅத் இரவு?

பாவம் போக்குமா பராஅத் இரவு?  இஸ்லாத்தில் இல்லாத வணக்கங்களை உருவாக்கிய பெருமை நமது உலமா பெருமக்களுக்கு உண்டு. அறிந்தே அறியாமலே செய்த இந்த தவறை திருத்திக் கொண்டு மக்களிடம் உண்மையை உரைக்க வேண்டிய உலமாக்கள் மீண்டும் மீண்டும் செய்த தவறை நியாயப்படுத்தும் வேலைகளை செய்துவருகிறார்கள் சில உலமாக்கள் என்ற பெயரில் உலாவருபவர்கள். ஷஅபான் மாதம் 15 நாள் ஷபே பராஅத், பராஅத் இரவு என்று சொல்-லிக்குக் கொண்டு புதிய பல வணக்கங்களை செய்துவருகிறார்கள். இவற்றை நாம் கண்டித்து, இது புதுமையான பித்அத் ஆகும் என்று துண்டு பிரசுரம் மூலமும் பயான்கள் மூலமும் மக்களை விழிப்புணர்வு அடைய செய்துவரும் வேளையில் திருப்பூர் வட்டார ஜமாஅத் உலமா மக்களிடம் பராஅத் இரவுக்கு ஆதாரம் உண்டு என்று இரண்டு பக்க ஜெராக்ஸ் காப்பி மக்களிடம் பரப்பி வருகின்றனர். இந்த காப்பியில் உள்ள செய்திகள் உண்மையா என்பதை நாம் இந்த கட்டுரையில் காண்போம். 

கிறித்தவத்திடமிருந்து கல்வியைக் காப்போம்

கிறித்தவத்திடமிருந்து கல்வியைக் காப்போம்  இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட முஸ்லிம்கள் தங்கள் உயிர், உடைமை அத்தனையையும் இழந்தனர். அத்துடன் நில்லாமல், "அடிமை இந்தியா வெள்ளையர்களிடமிருந்து நில அடிப்படையிலும் நிர்வாக அடிப்படையிலும் பெறுவது மட்டும் விடுதலையாகாது; வெள்ளையரின் கல்வி, கலாச்சாரம், பண்பாடு அடிப்படையிலும் விடுதலை பெற வேண்டும்' என்ற நோக்கில் "ஆங்கிலம் படிப்பது ஹராம்' என்று முழங்கினர். இந்தக் கலாச்சார விடுதலை தான் வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து, ஆங்கில ஆதிக்கபுரிகளிடமிருந்து அடைகின்ற முழுமையான விடுதலை என்று முடிவு கட்டி, முழு மூச்சாகக் களமிறங்கினர்; அதில் வெற்றியும் கண்டனர். ஆனால் நாடு விடுதலை பெற்ற பிறகு அது முஸ்லிம்களுக்குப் பெரும் பாதகமாக அமைந்தது. வெள்ளையர்களுக்கு வெண்சாமரம் வீசியவர்கள் இன்று கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னேறி விட்டனர். ஆனால் முஸ்லிம்களோ பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பெரிய பின்னடைவை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களால் உந்தி எழுந்து, எகிறி மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் முந்தி வர முடியாமல் முடங

குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் கட்டுப்பாடற்ற உறவு

குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் கட்டுப்பாடற்ற உறவு   குடும்ப அமைப்பையும் உறவையும் சீரழிக்கின்ற காரணங்களில் முதலாவதாக துறவறத்தைப் பற்றிக் கடந்த இதழ்களில் கண்டோம். குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் இரண்டாவது காரணம், ஃப்ரீ செக்ஸ் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் எப்படி வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் என்கின்ற கட்டுப்பாடற்ற உடலுறவு முறையாகும். "நான் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போவேன். தினசரி ஒரு பெண்ணிடம் போய்விட்டு வருவேன், யாரும் அதைத் தடுக்கக் கூடாது' என்று ஓர் ஆண் கூறுவது. அதேபோன்று ஒரு பெண், "நான் எப்படி வேண்டுமானலும் எந்த ஆணோடும் போவேன். இது எங்களுக்குரிய உரிமை, எங்களது சுதந்திரம், எங்களது சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது' என்று கூறி தான்தோன்றித் தனமாகத் திரிவது. இப்படிக் கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பில்லாமல் உல்லாசமாக, கட்டுபாடற்று சுற்றித் திரிவதாகும். இவனுக்கு மனைவி யார்? இவளுக்குக் கணவன் யார்? கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பு இல்லாவிட்டால் பிறக்கின்ற குழந்தைக்குப் பொறுப்பு யார்? அந்தக் குழந்தையை யார் வளர்ப்பது? உறவு முறைகள் எப்படி வ

ஆய்வே அமைப்பின் ஆணிவேர்

ஆய்வே அமைப்பின் ஆணிவேர்  எண்பதுகளில் தவ்ஹீத் ஜமாஅத் உதயமான வேளைகளில் தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பலைகளையும் எரிமலைகளையும் அது சந்தித்தது. எதிர்ப்பவர்கள் தங்கள் முழுப்பலத்தையும் பயன்படுத்தி, மொத்த சக்தியையும் பிரயோகித்து மூர்க்கத்தனமாக தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்தனர். முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும் என்பது அவர்களின் மூளையில் படிந்திருந்தது. அதனால் தங்கள் கட்டுப்பாட்டிற்கும் கைவசத்திற்கும் உட்பட்ட அனைத்து காட்டுத் தர்பார்களையும் கட்டவிழ்த்து விட்டனர். ஏனிந்த எதிர்ப்பு? எதற்காக இந்த ஏகோபித்த தாக்குதல்கள்? காரணம், தவ்ஹீத் ஜமாஅத் தொடுத்த இருமுனைத் தாக்குதல்கள். ஒன்று இணை வைப்பு, மற்றொன்று மத்ஹபு. இவ்விரண்டிற்கும் எதிரான இருமுனைத் தாக்குதல் தான் அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம். தமிழகத்தில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்த ஹைத்ரூஸ் ஆலிம், தென்காசி இ.எம். அப்துர்ரஹ்மான் ஆலிம் போன்றோரும், ஆலிம் அல்லாத வட்டத்தில் சிம்மக்குரலோன் என்று பாராட்டப்பட்டவரும் மறுமலர்ச்சி ஆசிரியருமான யூசுப் போன்றவர்களால் சமாதி வழிபாடு எனும் இணைவைப்பு எதிர்க்கப்பட்டது. இந்த வகையில் இணைவைப்பிற்கு எதிரான யுத்தம் தமிழகத்த

ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா?

ஷபே பராஅத் சாந்த நாளா? சாப நாளா?  ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவு பாமரர்கள், ஆலிம்கள் என அனைவராலும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் நம் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நன்மை என்ற பெயரில் பல சடங்குகளும் நடைபெற்று வருகின்றன. முன்னோர்கள் சிலரால் வழிவழியாக பின்பற்றப்பட்டு வருகின்றது என்பதைத் தவிர, குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இதற்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள் கூட ஆராயவில்லை. இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் அமல்கள் ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் காட்டித்தந்த அமல்கள், வணக்க வழிபாடுகள் (இபாதத்) ஒருபுறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள் மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன. அமல்களை நிர்ணயிக்க வேண்டியது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தானே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித்தோன்றல்களோ அல்ல! துரதிஷ்டவசமாக இன்று இந்நிலை முஸ்லிம்களிடத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. மார்க்கத்தில் எல்லை மீறிச் செல்கின்ற போது தனி மனித வழிபாடும், வழிகேடுகளும், மூட நம்பிக்கைகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறா