மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம்....!!!!
மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம்....!!!! அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! படிக்கத்தவறாதீர்! மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம்! "மார்க்கம் ரீதியாக மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்று அறுதியிட்டு கூறலாம்" என்று கூறும் இக்கட்டுரை - 'எங்கே கிறித்தவம்? யார் கிறித்தவர்?' என்ற தலைப்பில் தமிழகச் திருச்சபையின் தனிப்பெரும் அரசியல் ஆன்மீக சமூக வார இதழான 'நம்வாழ்வு' ஜனவரி 01-08, 2006-ல் பிரசுரமானது. 'இயேசுவின் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே' என்ற வார்த்தைகளை அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரார்த்தனைக் கூட்டங்களிலும் நாம் அடிக்கடி கேட்டு இருக்கின்றோம். இந்த வார்த்தைகள் உரைப்பவர்களின் உதடுகளிலிருந்து வெளிப்பட்டு, கேட்பவர்களின் செவிகளோடு மட்டும் நின்று விடுகிறது என்பதே கசப்பான உண்மை. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மதம் மாறியவர்களே. இருந்தபோதும் முஸ்லிம் மதத்தில் காணப்படும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் 'இறைவனின் மக்கள் நாம் அனைவரும்' என்ற உணர்வும் கிறிஸ்தவ மதத்தில் காணப்படுவதில்லை.