முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா உண்டா?
முஸ்லிம்கள் மத்தியில் முபஹலா செய்யலாமா? சொந்தச் சகோதரர்களுக்கு எதிராகவும் எந்தப் பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகள் உட்பட அவர்களின் குடும்பத்திற்கு எதிராகவும் இறைவனின் சாபம் ஏற்படட்டும் என பெரியவர் பிஜே சாபமிட்ட அந்த முபாஹலா நிகழ்ச்சிக்கான ஆதாரம் என்ன ?. அவ்வாறு முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக ஒரு சாபமிடும் நிகழ்ச்சி நடத்தலாமா ? கடலூர் முன்னாள் நிர்வாகிகளுடன் பீஜே முபாஹலா செய்த போது சில மார்க்க மேதாவிகள் முஸ்லிமுக்கு மத்தியில் முபாஹலாச் செய்யலாமா? என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளிப்பதற்கு முன்னாள் இப்படிக் கேட்பவர்களைப் பற்றியும் நாம் அடையாளம் காட்ட வேண்டியுள்ளது. தமிழக தவ்ஹீத் வரலாற்றில் கடலூர் முபாஹலா தான் முதல் முபாஹலா அல்ல. இதற்கு முன் பல முபாஹலாக்களுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது. தமுமுகவில் இருந்து பிரிந்த போது அதன் தலைவர் ஜவாஹிருல்லா பீஜே என்னுடன் முபாஹலா செய்ய தயாரா என்று அறை கூவல் விட்டார். உண்மை பேசுவோம் என்று தமுமுக வெளியிட்ட சீடியில் இதைக் காணலாம். பீஜே இந்த அறை கூவலை ஏற்றுக் கொண்டார். ஆனால் இதன் பின்னர் ஜவாஹிருல்லாவை பல தட