Posts

ஈஸா நபியின் வருகை கியாம நாளின் அடையாளம்

ஈஸா   நபியின்   வருகை கியாம   நாளின்   அடையாளம். உலக முடிவு நாள் மிகவும் நெருங்கும் போது ஏற்படவுள்ள அடையாளங்களில் ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவதும் ஓர் அடையாளம் என்பதைக் கடந்த இதழில் கண்டோம். ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர். எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது. ஈஸா நபி இறைவனால் உயர்த்தப்பட்டார்கள் ;  இன்னும் மரணிக்கவில்லை ;  இறுதிக் காலத்தில் இறங்கி வருவார்கள் என்பதற்கான சான்றுகள்: வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா ,  மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு சாட்சியாக இருப்பார். ( திருக்குர்ஆன்  4:159)

ஆம்வே போன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா?

ஆம்வே போன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா ? எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல் ,  மோசடி ,  பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாகும். உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் ஒருவன் ஏமாறுகின்றான். தான் இழந்த பணத்தை மீட்டுவதற்காகவும் லாபம் அடைவதற்காகவும் தன்னைப் போல பல ஏமாளிகளை சங்கிலித் தொடராக உருவாக்குகின்றான். சங்கிலித் தொடர் ஏமாளிகளிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தில் ஒரு சிறிய பகுதியை ,  ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பங்கை ஏமாற்றியவர்களுக்கு ,  அதாவது ஏமாளிகளை உருவாக்கியவர்களுக்கு அந்தக் கம்பெனி கொடுக்கின்றது. இது தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் நடக்கின்றது.

உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான். [ரலி]வர லாறு..!!

நபித் தோழியர் வரலாறு..!!  உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான். [ரலி] أم سليم بنت ملحان  ஒவ்வொரு ஆண்களும், பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வரலாறு..! நபித்தோழியர் வரலாறு..!! வாருங்கள்..!!! உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் ரலியல்லாஹு அன்ஹா! أم سليم بنت ملحان  முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவை வெற்றி கொண்டு இரண்டு வாரங்கள்கூட ஆகியிருக்கவில்லை. ஹுனைன் பள்ளத்தாக்கில் பெரியதொரு படை முஸ்லிம்களுக்கு எதிரான போருக்குத் தயாரானது. ஹவாஸின் எனும் பதுஉ கோத்திரத்தினர், தகீஃப் எனும் அவர்களின் உபகோத்திரத்தினர் எல்லாம் இணைந்துகொண்டு, ‘அழித்து ஒழிப்போம் இந்த முஸ்லிம்களை’ என்று போருக்குத் தயாராகிவிட்டிருந்தனர். மக்காவிலிருந்து பெரியதொரு படையெழுப்பி, ஹுனைன் சென்று அவர்களை எதிர்கொண்டார்கள் நபியவர்கள். அந்தப் போரில் முஸ்லிம் படைகளுடன் கலந்துகொண்டு பயணம் புரிந்தார் பெண்மணி ஒருவர். அவர் இடையில் உடைவாள். அதைக் கண்ட அவர் கணவர் நபியவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! இதோ பாருங்கள். என் மனைவி உடைவாள் ஒன்று வைத்திருக்கிறார்” என்றார்.

உங்களை நான் திட்டியதற்கு என்ன பரிகாரம்

உங்களை நான் திட்டியதற்கு என்ன பரிகாரம் நான்   ஆரம்ப   காலத்தில்   உங்களை   மிகவும்   தவறாகப்   பேசியுள்ளேன் ,  தகாத   வார்த்தைகளால் திட்டியுள்ளேன் .  கடுமையாக   விமர்சித்துள்ளேன் .  நான்   அல்லாஹ்வின்   கிருபையால்   தவ்ஹீத் ஜமாஅத்தில்   இணைந்து   விட்டேன் .  தற்போது   நான்   என்ன   செய்ய   வேண்டும் ?  நீங்கள்   என்னை மன்னிப்பதற்கும் ,  குற்றம்   பிடிக்காமல்   இருப்பதற்கும் .  உங்களுடைய   ஜனாஸா   தொழுகையில்   நான் கலந்து   கொள்ளலாமா ?  அல்லது   காயிப்   ஜனாஸா   தொழலாமா ?

அல்லாஹ்வின் ஒளியை அனைக்க முடியாது

வளர்ந்துவரும் இஸ்லாத்தின் மீதுள்ள வெறியினால் வரம்பு மீறும் கையாலாகாத கோழைகளே! உங்களிடம் சில கேள்விகள்!! ''வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் என்ற பந்தம் இல்லாமலே சேர்ந்து வாழ, உங்கள் பெண் குழந்தைகளுக்கு கர்ப்பத்தடை சாதனங்களை கையில் மறவாமல் கொடுத்து வெளியில் சுற்றித்திரிய அனுமதிக்கும் மான‌ங்கெட்ட வாழ்க்கைக் கலாச்சாரத்தைக் கொண்ட அமெரிக்க/ஐரோப்பிய சமுதாயமே! ஒழுக்கம் சார்ந்த உயரிய திருமண வாழ்வினை வாழ் ந்துக் காட்டிய‌ முஹம்மத் நபியை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்கும் தகுதி உங்களுக்கு எங்கிருந்து வந்தது? *ஒழுக்கமின்மை தலைவிரித்தாடும் கட்டுக்கோப்பில்லாத உங்கள் சமூகத்தின் ஆண்களுக்கு வீட்டில் ஒரு மனைவியும், வெளி உல்லாசத்திற்கு பல பெண்களையும் அனுபவிக்கும் ஒழுக்கக்கேடு உங்களுக்கு அருவருப்பாக‌ தோன்றவில்லையா?

நபிகள் பல திருமணங்கள் செய்தது ஏன்?

Image
நபிகள் பல திருமணங்கள் செய்தது ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தது ஏன் ? ஒரே சமயத்தில் நான்கு மனைவிக்கு மேல் திருமணம் செய்யலாகாது என்று வரம்பு கட்டிய இஸ்லாம் அதன் தூதராக உள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் இதில் விதி விலக்கு அளித்தது ஏன் ?   Download this Book in PDF ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய இஸ்லாத்தின் தூதர்   அவர்கள் அந்த ஆசைக்கு அதிகமாகப் பலியாகி விட்டாரே! இது காம உணர்வு மிக்கவராகவல்லவா நபியவர்களை அடையாளம் காட்டுகிறது ? என்பது இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் கேள்வியாகும் . இந்த விமர்சனம் இஸ்லாத்திற்கு வெளியில் இருப்பவர்களால் செய்யப்பட்டாலும் பாரம்பர்ய முஸ்லிம்களில் பலரின் உள்ளங்களில் கூட இந்தச் சந்தேகம் குடிகொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இந்தச் சந்தேகத்தைப் பகிரங்கமாக அவர்கள் வெளிப்படுத்தாவிடினும் இப்படி ஒரு எண்ணம் அவர்களின் அடி மனதில் குடி கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. புதிதாக இஸ்லாத்தை நோக்கி வருபவர்களினது முதல் கேள்வியும் கூட இது பற்றியதாகவே அமைந்துள்ளது . இந்த ஐயத்தை அகற்றும் விதமாக அற

பித்அத் செய்யும் இமாமைப் பின்பற்றுவது எப்படி கூடும்?

பித்அத்   செய்யும்   இமாமைப்   பின்பற்றுவது   எப்படி   கூடும் ? மிக   விரைவில்   உங்கள்   மீது   சில   தலைவர்கள்   தோன்றுவார்கள்  ( அவர்கள் )  தொழுகையை   அதனுடைய நேரத்தை   விட்டும்   பிற்படுத்துவார்கள் . அத்துடன்   பித்அத்களையும்   தோற்றுவிப்பார்கள்    ( அப்போது ) நான்   எவ்வாறு   செய்து   கொள்ளவேண்டும்   என்று   இப்னு   மஸூத்  ( ரலி )   அவர்கள்   கேட்டார்கள் .   உம்மு அப்தின்   மகனே   எவ்வாறு   செய்து   கொள்ள   வேண்டும்   என   என்னிடம்   கேட்கின்றாயா ?  அல்லாஹ்வுக்கு மாறு   செய்தவருக்கு   எவ்வித   கட்டுப்   படுதலும்   கிடையாது   என   ரஸூல்  ( ஸல் )  அவர்கள்   கூறினார்கள் . ( இப்னு   மாஜா ,  அஹ்மத் ,   தபரானி )  இந்த   ஹதீஸ்   பித்அத்   செய்யும்   இமாம்   பற்றியதாகும் .  ஷிர்க்    செய்யும் இமாம்   பற்றியது   அல்ல   எனவே   பித்அத்   செய்யும்   இமாம்   பின்னால்   தொழ   முடியுமா ?  இந்த   ஹதீஸ் சஹீஹனதா பதில் நீங்கள்   குறிப்பிடும்   செய்தி   அஹ்மதிலும்   இப்னுமாஜாவிலும்   பதிவு   செய்யப்பட்டுள்ளது . 3601 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّ