வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?


வஸீலா ஆளை வைத்தாஅமலை வைத்தா?

வஸீலா என்பது ஆளை வைத்துத் தான் என்று கூறும் தில்லுமுல்லுகளுக்கும்திருகுதாளங்களுக்கும் சரியான விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
சான்று: 1
பார்வை தெரியாத நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பரேலவிகள் சொல்வது போன்று, "முஹம்மது நபி பொருட்டால் உன்னிடம் மன்றாடுகிறேன். முஹம்மது (ஸல்) அவர்களே! என் ரப்பிடம் என் தேவை நிறைவேற உங்களின் பொருட்டு முறையிடுகிறேன்'' என்று கூறவில்லை. அப்படிச் சொல்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் நேரில் வர வேண்டிய அவசியமும் இல்லை. அவர் வீட்டில் இருந்து கொண்டே இந்தப் பிரார்த்தனையைச் செய்திருக்கலாம். ஆனால் அந்த நபித்தோழர் அவ்வாறு செய்யவில்லை. ஏன்அவர்தவஸ்ஸுல் - வஸீலா தேடுதல் என்ற வார்த்தையில் பொருள் அறிந்தஅரபி மொழி தெரிந்த ஓர் அரபியர்.
ஓர் ஆளை வைத்து வஸீலா தேட வேண்டுமானால் அவர் தனது வஸீலாவில் அவரது பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி பிரார்த்திக்க வேண்டும். அப்படிப் பெயரைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவேதன் மீது அக்கரை காட்டுபவர்மார்க்க ஞானம் உள்ளவர் என்று யாரை அந்த நபித்தோழர் நம்புகிறாரோ அவரிடம்அந்த நபி (ஸல்) அவர்களிடம் வந்துஎனக்காகப் பிரார்த்தியுங்கள் என்று கூறுகிறார். அதில் தான் முழுப் பயன் இருக்கின்றது என்று அவர் தெளிவாக விளங்கி வைத்திருந்தார்.
அதனால் தான் நபி (ஸல்) அவர்களிடம் நேரில் வந்து பிரார்த்திக்கச் சொல்கிறார். நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படுவதற்கு அல்லாஹ்விடம் மிக மிகத் தகுதியானது என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

சான்று: 2
நபி (ஸல்) அவர்கள்உஸ்மான் பின் ஹுனைபுக்காகப் பிரார்த்திக்கின்றார்கள். அதே சமயம் அவரிடம் சிறந்ததைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரையும் செய்கிறார்கள்.
"நீ விரும்பினால் இந்தச் சோதனைக்குரிய கூலியை மறுமையில் கிடைப்பதற்காக விட்டு விடுகின்றேன்நீ விரும்பினால் நான் பிரார்த்தனை செய்கிறேன்என்பது தான் அந்த அறிவுரையாகும்.
பொதுவாக இவ்வாறு பிரார்த்தனை செய்யக் கோருபவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை மறுமையை முன்னிறுத்தியே அமைந்திருக்கும் என்பதைப் புகாரியில் இடம்பெறும் ஹதீஸ் விளக்குகின்றது.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள்இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கின்றது. ஆகவேஎனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்''என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, "நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்கள்: புகாரி 5652, முஸ்லிம் 4673
இதுபோன்ற சோதனைகளில் பாதிக்கப்பட்டவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பிரார்த்தனை செய்யக் கோரும்போது மறுமை நன்மையைத் தான் நபியவர்கள் முன்னிலைப்படுத்துவார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் எடுத்துக்காட்டாகும்.
மிக முக்கியமாகஇந்த உரையாடலில் நமக்கு நிரூபணமாவதுகண் தெரியாத அந்த நபித்தோழரின் கோரிக்கை முஹம்மது (ஸல்) என்ற ஆள் அல்லஅவர்கள் செய்கின்ற பிரார்த்தனை என்ற அமல் தான்.
சான்று: 3
பார்வை தெரியாத தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று வலியுத்துகின்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கின்றார்கள்.
நபியவர்கள் பிரார்த்தித்த விபரம் இந்த ஹதீஸில் இடம் பெறாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள்அந்த நபித்தோழருக்கு அளித்த வாக்குறுதியைக் கண்டிப்பாக நிறைவேற்றியிருப்பார்கள்.
அவருக்காக நபி (ஸல்) அவர்கள்தாம் பிரார்த்திக்கின்ற அதே வேளையில்அவர் மீதுள்ள அன்பின் மேலீட்டால் அவரையும் பிரார்த்திக்குமாறு சொல்கின்றார்கள். தான் செய்கின்ற பிரார்த்தனையை ஏற்குமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபித்தோழரிடம் நபியவர்கள் கூறுகின்றார்கள்.
அதிலும் குறிப்பாகஉளூச் செய்து விட்டு இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு துஆச் செய்யுமாறு கூறுகின்றார்கள்.
அதாவது தொழுகைதுஆ என்ற அமலை வைத்து வஸீலா தேடச் சொல்கின்றார்கள். இது தான் அல்லாஹ்வின் வசனத்தில் உள்ள கட்டளையாகும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
அல்குர்ஆன் 5:35
சான்று: 4
நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் கற்றுக் கொடுத்த துஆவில், "அல்லாஹும்ம ஃபஷஃப்பிஃஹு ஃபிய்ய- யா அல்லாஹ் என் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக'' என்ற வார்த்தை இடம்பெறுகின்றது.
இவ்வார்த்தை இடம்பெறும் ஹதீஸ் அஹ்மதில் (16604) பதிவாகியுள்ளது. இதில் ஃபிய என்ற வார்த்தை இல்லாமல் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பிரகாசமான வார்த்தை பிரகடனப்படுத்துவதென்னவஸீலா தேடுதல் என்பது நபி (ஸல்) அவர்களின் பொருட்டால்... என்ற ஆளைஅந்தஸ்தைதகுதியை வைத்தல்ல. அவர்களது துஆவை வைத்துத் தான். ஆளை வைத்துஅந்தஸ்தை வைத்து வஸீலா தேடலாம் என்று பொருள் கொள்வது அசாத்தியம் என்பதை இது தெளிவாக உணர்த்துகின்றது.
ஏனெனில், "யா அல்லாஹ்என் விஷயத்தில் - அதாவது எனக்குப் பார்வையை எனக்குத் திரும்பத் தருவதில் அவர்களின் பரிந்துரையை (ஷஃபாஅத்தை) ஏற்றுக் கொள்வாயாக!'' என்ற வாசகத்தின் பொருள், "நபி (ஸல்) அவர்களின் துஆவை ஏற்றுக் கொள்வாயாகஎன்பது தான்.
இந்தச் செய்தியில் ஷஃபாஅத் என்ற வார்த்தைக்குபரிந்துரை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உண்மையில் ஷஃபாஅத் என்பதற்கு அரபியில், "துஆ - பிரார்த்தனைஎன்பதே பொருளாகும்.
நபிமார்களுக்கும் நல்லவர்களுக்கும் நாளை மறுமையில் ஷஃபாஅத் என்று சொல்வது இந்தப் பொருளில் தான். இந்த அடிப்படையில் ஷஃபாஅத் என்பது குறுகிய பொருள் கொண்டதாகவும் துஆ என்பது விரிந்த பொருள் கொண்டதாகவும் அமைகின்றது.
துஆ என்றால் ஒருவர் தனக்காகச் செய்வதையும்பிறருக்காகச் செய்வதையும் எடுத்துக் கொள்ளும். ஷஃபாஅத் என்பது ஒருவர் மற்றவருக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை மட்டும் குறிக்கும். இதன்படி ஷஃபாஅத் என்பது துஆவையே குறிக்கின்றது.
உஸ்மான் பின் ஹுனைபுக்கு நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்வதிலிருந்துஅமலை வைத்துத் தான் வஸீலா தேட வேண்டுமே தவிர ஆளை வைத்து அல்ல என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.
சான்று: 5
நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த துஆவில் மிக முக்கியமானது,வ ஷஃப்பிஃனீ ஃபீஹி என்ற வார்த்தையாகும்.
என் பார்வை திரும்பக் கிடைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்கின்றார்கள். அந்தப் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் செய்கின்ற பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக
இந்தக் கருத்தைக் கொண்ட செய்தி மேற்கண்ட வார்த்தைகளுடன் அஹ்மதில் (17280)இடம்பெறுகின்றது. இதே செய்தி ஹாகிமிலும் பதிவாகியுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தையேஒரு ஆள் மூலம் வஸீலா தேடுதல் என்பதற்கு மரண அடி கொடுக்கின்றது.
இதில் வேதனை என்னவென்றால் இந்த ஹதீஸின் பிற்பகுதியை பரேலவிகள் திட்டமிட்டு மறைப்பது தான். ஏனெனில் ஹதீஸின் இந்தப் பகுதிக்குஅமல்கள் மூலமே வஸீலா தேட வேண்டும் என்பதைத் தவிர்த்து வேறு எந்தப் பொருளும் கொடுக்க முடியாது என்பதால் தான் இதை அவர்கள் அப்பட்டமாக மறைக்கின்றனர்.
ஆளைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பதற்கு அவர்கள் எழுப்பியிருக்கின்ற போலியான வாதங்கள்,நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் பின் ஹுனைபுக்குக் கற்றுக் கொடுத்த இந்த வார்த்தைகள் மூலம் தகர்ந்துதரையில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கிப் போய்விடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் இந்தக் கண் தெரியாத நபித்தோழருக்குப் பரிந்துரை செய்வது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் நபி (ஸல்) அவர்களின் துஆவிற்கு அந்த நபித்தோழர் எப்படிப் பரிந்துரைக்க முடியும் என்ற கேள்விக்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.
இந்த ஹதீஸின் முற்பகுதியை வைத்துக் கொண்டுஇவ்வாறு வஸீலா தேடலாம் என்று வாதிடும் இவர்கள், "யா அல்லாஹ் என் விஷயத்தில் உன்னுடைய நபியின் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் கேட்கும் துஆவையும் ஏற்பாயாக'' என்று தான் கூற வேண்டும். ஆனால் பரேலவிகள் அவ்வாறு சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் அவர்களின் விளக்கங்கள் அனைத்து அபத்தமாகவும் அர்த்தமற்றதாகவும் ஆகி விடும். அதனால் அவர்கள் அப்படிச் சொல்வதில்லை.
சான்று: 6
அறிஞர்கள் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களிலும்ஒப்புக் கொள்ளப்பட்ட துஆ தொடர்பானவற்றிலும் பதிவு செய்துள்ளார்கள். உண்மையில் இயற்கைக்கு மாற்றமான அதி அற்புத நிகழ்வாகும். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாகவே அவரது குருட்டுத்தன்மை நீங்கியது,பார்வை திரும்பியது.
இதனால் தான் இமாம் பைஹகீ போன்றவர்கள்தலாயிலுன் நுபுவ்வா - நபித்துவத்தின் அடையாளங்களில் இதைப் பதிவு செய்திருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துஆவின்றிதனது துஆவைக் கொண்டு மட்டும் அந்த நபித்தோழர் நிவாரணத்தைப் பெற்றிருந்தால் உலகிலுள்ள கண் தெரியாதவர்கள் அனைவருக்கும் இது பொதுவானதாகி விடும். உலகில் உள்ள கண் தெரியாதவர்கள் ஒவ்வொருவரும் அல்லது ஒரு சிலராவதுஇதுபோன்று உருக்கமாகவும்உளத்தூய்மையாகவும் பிரார்த்தனை செய்து குணம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. இது இவ்விஷயத்தில் ஒளிந்து கிடக்கின்ற நுணுக்கமாகும்.
இதுபோல் இன்னொரு நுணுக்கத்தையும் நாம் காணத் தவறிவிடக் கூடாது. பரேலவிகள் இந்த ஹதீஸை விளங்குவது போல்கண் தெரியாத நபித்தோழர்நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்துதகுதி,மரியாதை மற்றும் அவர்களது பொருட்டைக் கொண்டு கேட்டதால் தான் இந்தக் குணம் கிடைத்தது என்று விளங்கினால்இதே நிவாரணம்அதாவது உலகிலுள்ள ஒவ்வொரு குருடருக்கும் பார்வை கிடைக்க வேண்டுமல்லவா?
இந்தக் கொள்கையில் உள்ளவர்கள் நபி (ஸல்) அவர்களை மட்டும் வைத்து வஸீலா தேடுவதில்லை. நபிமார்கள்அவ்லியாக்கள்ஷுஹதாக்கள்ஸாலிஹீன்கள்மலக்குகள்ஜின்கள் அனைவரின் பொருட்டாலும்தனித்தனியாகவோஅனைவரையும் சேர்த்தோ கேட்கின்றனர். அவர்களுக்குக் குணம் கிடைத்ததா என்று பார்த்தால் நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு இத்தனை நூற்றாண்டுகளில் யாருக்கும் பார்வை திரும்பக் கிடைத்ததாக வரலாறு இல்லை.
இதுவரை உள்ள இந்த விபரங்களின்படி ஒரு விஷயம் தெளிவாகப் புரிகின்றது. கண் தெரியாத நபித்தோழரின் வஸீலா என்ற சக்கரம் சுழல்வது துஆ என்ற அச்சாணியில் தான். அதாவது துஆ என்ற அமல் மூலம் தான். ஆளைக் கொண்டு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இத்தனைக்குப் பிறகும் இங்கு இன்னொரு கேள்வி எழுகின்றது.
ஒரு அறிவிப்பில், "யா அல்லாஹ்உன்னிடத்தில் கேட்கின்றேன்இரக்கமுடைய உன்னுடைய நபி முஹம்மதை வஸீலாவாக்கி (சாதனமாக்கி) கேட்கின்றேன்'' என்று பார்வை தெரியாத நபித்தோழர் சொல்கின்றாரே! அது ஏன்என்பது தான் அந்தக் கேள்வி.
இந்த இடத்தில், "உன்னுடைய நபியின் துஆவைக் கொண்டு'' என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு அர்த்தம் கொள்வதற்கு மொழி இலக்கணத்தில் இடம் உண்டு.
"நாங்கள் இருந்த ஊர்வாசிகளிடமும்எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தாரிடமும் விசாரியுங்கள்! நாங்கள் உண்மை கூறுபவர்களே'' (என்று தந்தையிடம் கூறினார்கள்.)
அல்குர்ஆன் 12:82
இந்த வசனத்தில்ஊர்வாசிகள்ஒட்டகக் கூட்டத்தார் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள இடத்தில், "ஊரைக் கேள்ஒட்டகத்திடம் கேள்என்று தான் இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் ஊரையும்,ஒட்டகத்தையும் கேட்பதல்ல. ஊர்வாசிகளையும்ஒட்டகக் கூட்டத்தாரையும் என்று பொருள் கொள்கிறோம்.
இந்த வசனத்தில் ஊர் என்பதற்குப் பின்னால் "வாசிகள்என்ற இணைப்புச் சொல்லும்ஒட்டகம் என்ற வார்த்தைக்குப் பின்னால் "உரிமையாளர்கள்என்ற இணைப்புச் சொல்லும் போக்கப்பட்டுள்ளது.
அதுபோன்றே மேற்கண்ட ஹதீஸில் முஹம்மது நபி என்ற வார்த்தைக்குப் பின்னால் ஓர் இணைப்புச் சொல் போக்கப்பட்டுள்ளது. இதைப் பரேலவிகளும் ஒப்புக் கொள்கின்றார்கள். அந்த இணைப்புச் சொல்,முஹம்மது நபியின் அந்தஸ்துமரியாதைபதவிபொருட்டு என்ற பொருளை அவர்கள் கொடுக்கிறார்கள். நாம் இந்த இடத்தில் முஹம்மது நபியின் துஆ என்ற பொருளைப் பயன்படுத்துகிறோம்.
இந்த ஹதீஸில் அந்தஸ்துபதவிபொருட்டு என்ற இணைப்புச் சொல்லை இங்கு சேர்ப்பதற்கு இந்த ஹதீஸிலோவேறு ஹதீஸ்களிலோ இவர்களுக்கு ஆதாரம் இல்லை. இந்த ஹதீஸின் முன்பின் வாசக அமைப்பும் இதற்கு இடம் தரவில்லை. ஆனால் துஆ என்ற இணைப்புச் சொல்லைச் சேர்க்கும் போது அழகாகப் பொருந்திப் போகின்றது. வேறு நூற்களில் இடம் பெறும் இதே ஹதீஸின் வாசகங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.
ஒரு பேச்சுக்கு இவர்கள் வாதிடுவது போன்று ஹதீஸின் வெளிப்படையான வாசக அமைப்பைக் கொண்டு, "ஆளை வைத்துஎன்று பொருள் கொண்டாலும் அந்த வாதம் மேலே நாம் காட்டிய அஹ்மத் ஹதீஸ் மூலம் உடைந்து போகின்றது. "யா அல்லாஹ் என் விஷயத்தில் உன்னுடைய நபியின் பரிந்துரையை ஏற்பாயாக என்று நான் கேட்கும் துஆவையும் ஏற்பாயாக'' (அஹ்மத் 17280) என்ற வார்த்தைகள் மூலம் "ஆளைக் கொண்டு வஸீலா தேடுதல்என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது.
இதையும் தாண்டி இந்த ஹதீஸ் அந்தப் பொருளைத் தான் கூறுகின்றது என்று வைத்துக் கொண்டாலும் இது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில்அவர்களுக்கு மட்டும் உரிய தனி உரிமையாகும். இதில் மற்ற யாருக்கும் அறவே பங்கு கிடையாது என்று தான் விளங்க வேண்டும்.
ஏகத்துவம்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை