நபித்தோர்கள் வாழ்வினிலே .....


நபித்தோர்கள் வாழ்வினிலே .....  

என்னிடம் என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரரிடம் என் தாயார்
என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்கள். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா? என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அஸ்மா (ர­லி), நூல்கள் : புகாரீ (2620), முஸ்லி­ம் (1671?)
அஹ்மதுடைய (15529) அறிவிப்பில் சில பொருட்களை அன்பளிப்பாக கொண்டுவந்ததாகவும் அதை அஸ்மா (ரலி­) அவர்கள் மறுத்தவிட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடர் குறைகூறப்பட்டுள்ளது)
அபூபக்கர் (ர­லி) அவர்களுக்கு பல மனைவிகள் இருந்தன. அவர்களில் ஒருவர் குதைலா (சிலர் கைலா என்று குறிப்பிடுகின்றனர்) குதைலா அவர்களை அபூபக்கர் (ர­லி) அவர்கள் அறியாமை காலத்தில்  தலாக் விட்டுவிட்டார்கள். இவர்கள் மூலம் அபூபக்கர் (ர­லி) அவர்களுக்கு பிறந்தவர்கள்தாம் அஸ்மா (ர­லி) அவர்கள். இஸ்லாம் வந்த போது தன் மகள் அஸ்மாவுடன் இணைந்து வாழ, அவர்களின் உதவியை நாட எண்ணினார்கள். ஆனால் ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருந்த அஸ்மா (ர­லி) அவர்கள், தன் பெற்ற தாயை இணைத்துக் கொள்ள தயங்கினார்கள். மார்க்கம் அனுமதித்தால் மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும் என்று உறுதியான நம்பிக்கையில் தான் நபிகளாரிடம் தன் தாயின் விருப்பத்தையும் அவர்கள் இணைவைப்பவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

பத்துமாதம் சுமந்த தாயை யாரும் சேர்த்துக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். ஆனால் இஸ்லாத்தின் உயிர் நாடியான ஓரிறைக் கொள்கையில் யாருக்கும் விட்டுகொடுக்க தயங்காத அஸ்மா (ரலி­) அவர்களின் மன உறுதி தன் தாய் இணைவைப்புக் கொள்கையில் இருப்பதால் அவர்களை நபிகளாரின் அனுமதியின்றி சேர்த்துக் கொள்ள தயங்கினார்கள்.

இஸ்லாத்தின் உயிர் நாடி ஏகத்துவம்

 மறுமை நாளில் அல்லாஹ் மன்னிக் முடியாத பாவம் பட்டிய­ல் முதலி­டம் பெறுவது இணைவைப்பாகும். அல்லாஹ்விற்கு இருப்பதைப் போன்ற சக்தி மற்ற எவரிடம் இருப்பதாக நாம் கருதினாலும் நாம் இணைவைப்பு என்ற மாபாதகமான செய­ல் ஈடுப்பட்டவர்களாக கருதப்படுவோம். இவ்வாறு இணைவைப்பவர்களைப் பற்றி அல்லாஹ்வும் அவன் தூதரும் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? இணைவைப்பு என்பது....
பகிரங்க வழிகேடு!
மாபெரும் அநீதி!
மிகப்பெரிய பாவம்!
மறுமையில் மன்னிப்புக் கிடையாது!
சுவர்க்கம் ஹராமாக்கப்படும்!

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். (அல்குர்ஆன் 4:116)

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ''என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 31:13) 
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48) 
''மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். ''இஸ்ராயீ­ன் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார். (அல்குர்ஆன் 5:72)

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ் வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன் 4:48) 
ஆகிய வசனங்கள் மற்றும் பின்வரும் ஹதீஸ்கள் இணைவைப்பின் முடிவின் பயங்கரத்தை எடுத்துரைக்கிறது.
எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் என இறைவனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் சுபச்செய்தியைக் கூறினார் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அப்போது நான் அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா? என்று கேட்டேன். அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி­), நூல்கள் : புகாரீ (1237), முஸ்­லிம் (153)
பெரும்பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்று நபித் தோழர்கள் கூறினார்கள். (பெரும்பாவங்கள்) அல்லாஹ்விற்கு  இணைவைத்தல், பெற்றோருக்கு நோவினை செய்தல்... என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி­), நூல்கள் : புகாரீ (2654), முஸ்லி­ம் (143)
மேலே நாம் கூறிய வசனங்கள்,ஹதீஸ்கள்,மற்றும் இதே கருத்தை தெரிவிக்கும் திருக்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும்தான் அஸ்மா (ர­லி) அவர்களை இணைவைப்பு கொள்கையில் இருந்த பெற்றத்தாயைக்கூட சேர்த்துக் கொள்ள தயத்தை ஏற்படுத்தியது.
படைத்த இறைவன் இவ்வளவு தெளிவாக இணைவைப்பின் பயங்கரத்தை கூறியிருந்தும் கூட இஸ்லாத்தை ஏற்ற பலர் இன்றும் இணைவைப்பு காரியத்தில் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனைக்குரியது.
படைத்தவனிடம் மட்டும் பிராத்திக்க வேண்டியவர்கள் படைப்பினங்களிடம் பிராத்தனை செய்கிறார்கள். என் நேரத்தில் கேட்டாலும் எத்தனை பேர் கேட்டாலும் எங்கிருந்து கேட்டாலும் பதிலளிளக்கும் ஆற்றல் படைத்த இறைவனுக்கு மட்டுமே உண்டு. ஆனால் தர்ஹாக்களில் சென்று எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட ஒருவரிடம் தமிழ் தெரிந்தவர் தமிழிலும் மலையாளம் தெரிந்தவர் மலையாளத்திலும் தெலுங்கு தெரிந்தவர் தெலுங்கு மொழியிலும் இவ்வாறு அவரவரர் மொழிகளில் எத்தனை மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு அழைப்பதும் நமது பிராத்தனைகளுக்கு இந்த அவ்­யா பதில் சொல்வார் என்று கூறுவதும் தெளிவான இணைவைப்பு இல்லையா? இந்நிலையில் மரணித்தால் அல்லாஹ் மன்னிப்பானா? சிந்தித்துப்பார்க்க வேண்டும். 
அஸ்மா (ரலி­) அவர்களின் தாயார் இணைவைப்பு காரியத்தை செய்யக்கூட தூண்டவில்லை சேர்ந்து வாழத்தான் பிரியப்பட்டார்கள்.அதைக்கூட அஸ்மா (ரலி­) அவர்கள் இணைவைப்பின் குற்றத்திற்கு வந்துவிடுமோ என்று பயந்து, நபிகளாரிடம் தீர்ப்பு கேட்டுள்ளார்கள் என்றால் தெளிவான இணைவைப்பில் ஈடுபடுபவர்கள் ,எந்த அளவு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்? அஸ்மா (ர­லி) அவர்களின் வாழ்வில் நடந்த இந்த சம்பவம் இணைவைப்பில் ஈடுபடுவோருக்கு ஓர் அழகிய படிப்பினை இல்லையா?
அபூ ரபீஹா

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை