நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையா???
நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையா??? "ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன் படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத் திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்'' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இது பில்லி, சூனியம், ஏவல், செய்வினை என்று பல்வேறு சொற்களால் குறிப்பிடப்படுகின்றது. "ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி ஒருவன் இன்னொருவனின் உடலில் காயத்தையோ வேதனையையோ ஏற்படுத்த முடியும்'' என்பதை நாம் நம்பலாம். கண் கூடாக இது தெரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்படையில் எந்த ஆதாரத்தையும் நாம் தேட வேண்டியதில்லை. ஆனால் புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த இயலும் என்று நம்பலாமா? அவ்வாறு நம்புவது அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்ற குற்றத்தில் சேரும். அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லை; எவரும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கைக்கு மாற்றமான நம்பிக்கைகள் அனைத்தும் அல்லாஹ்வுக