தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்


தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்

மக்களை ஐந்து நேரத் தொழுகைகளுக்கு அழைக்கின்ற பணி நிச்சயமாக சிறந்த பணியாகும்இதைஇன்றைய தப்லீக் இயக்கத்தினர் சிறப்பாகச் செய்கின்றனர்அதே சமயம் முஸ்லிம் என்று கூறிக்கொண்டுமக்கள் செய்கின்ற எண்ணற்ற தீமைகளை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது.
கப்ர் ஜியாரத் என்ற பெயரில் மக்கள் செய்கின்ற ஷிர்க் எனும் கொடிய பாவத்தைக் கண்டு கொள்வதுகிடையாதுவட்டிவரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யமாட்டார்கள்சுருங்கக் கூறின் நன்மைகளை மட்டும் அதிலும் குறிப்பாக தொழுகையை மட்டும்ஏவுவார்கள்எந்தவொரு தீமையையும் தடுக்க முன்வர மாட்டார்கள்.
தீமையைத் தடுப்பது சாதாரண பணியல்லகை கால்களைப் பதம் பார்க்கக் கூடியகண்ணீரையும்செந்நீரையும் வரவழைக்கும் மிகக் கடினமான பணி என்பதைசெய்து பார்த்தால் தான் தெரியும்.அதனால் தான் அல்லாஹ் அழைப்புப் பணியைப் பற்றிக் குறிப்பிடும் போதுநன்மையை மட்டும்ஏவுங்கள் என்று சொல்லாமல் தீமையையும் தடுக்கச் சொல்கின்றான்.
(பார்க்க அல்குர்ஆன் 3-104, 3-114, 9-71)
அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்னால் யாரும் கோபப்படுவது கிடையாதுஅதே சமயம்இறந்து விட்டவர்களிடம் உதவி தேடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும் போது தான் மக்கள்கொந்தளிக்கின்றார்கள்திட்டுவதற்கு மட்டுமல்லவெட்டுவதற்கும் முன் வருகின்றார்கள்எனவேதீமையைத் தடுப்பது மிகப் பெரிய பணிஇதை தப்லீக் இயக்கத்தினர் புறக்கணித்து வருகின்றார்கள்இதுஇவர்களிடம் உள்ள அடிப்படையான தவறாகும்.

அடுத்து இவர்களைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் இவர்களுடைய வேதம்(?). அது தான் இவர்களால்பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் வாசிக்கப்படும் தஃலீம் தொகுப்பாகும்இதற்கு இவர்கள்திருக்குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான் இவர்களது வேதம் என்று நாம் சொல்லவேண்டியுள்ளது.
இவர்கள் தொழுத பிறகு தஃலீம் புத்தகத்தை வாசிக்கும் போது, “இதற்குப் பதிலாக அல்லாஹ்வின்வேதமான திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள்அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதல்அடங்கிய ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பைப் படியுங்கள்” என்று சொன்னால் போதும்இவர்களுக்குக்கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்முகம் அனல் பிழம்பாகி விடும்குர்ஆன்ஹதீஸ் எல்லாம்பாமர மக்களுக்கு விளங்காது என்று உருப்படாத பதிலை உதிர்ப்பார்கள்ஜக்கரியா மவ்லானாபோன்றவர்கள் எழுதிய தஃலீம் தொகுப்பு எளிதாக மக்களுக்கு விளங்குமாம்ஆனால் அல்லாஹ்வின்வேதமான திருக்குர்ஆன் விளங்காதாம்.
இதையெல்லாம் பொருட்படுத்தாது நாம் குர்ஆனின் பொழி பெயர்ப்பை வாசித்து விட்டால்இனிமேல்பள்ளிவாசலில் யாரும் குர்ஆன் பொழி பெயர்ப்பை வாசிக்கக் கூடாது என்று தடை விதிப்பார்கள்இந்தக்கொடூர நிகழ்ச்சி சமீபத்தில் ஓர் ஊரில் நடந்தேறியது.
இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்ததுஅவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டுவெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.
(அல் குர்ஆன் 74-49,50,51)
என்று அல்லாஹ் கூறுவது போல் இவர்களது நடைமுறை அமைந்துள்ளதுஆர்.எஸ்.எஸ்காரர்கள்குர்ஆனை வாசிக்கக் கூடாது என்று சொன்னால் உடனே நாம் கொந்தளிப்போம்அதே சமயம் இந்தக்கருத்தை சமுதாயத்தில் உள்ள தப்லீக் காரர்கள் சொன்னால் அதை நாம் கண்டு கொள்ள மாட்டோம்.இது என்ன நியாயம்?
இது தப்லீக் காரர்களின் அடிப்படையான மாபெரும் இரண்டாவது தவறாகும்புரிந்து கொள்வதற்குஇரண்டு உதாரணங்களைக் கூறியுள்ளோம்இன்னும் இது போன்று தவறுகள் பல அவர்களிடம் மலிந்துகிடக்கின்றனஇவர்கள் வேதமெனக் கொண்டாடும் தஃலீம் புத்தகத்தில் மலிந்து கிடக்கும் மார்க்கத்திற்குமுரணான விஷயங்களைப் பட்டியல் போடுவதென்றால் இந்த இதழ் தாங்காதுஎனவே இந்த தப்லீக்இயக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற நாம் பெரும்பாடு பட்டாக வேண்டும்.
இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விடநபிகளாரின் பொன்மொழிகளை விட தஃலீம் புத்தகத்திற்குஅதிக முக்கியத்துவம் கொடுத்ததால், ‘ஃபழாயில் அஃமால்’ போன்ற நூல்களைப் பெருமளவில் அச்சிட்டுவெளியிடும் மிகப் பெரிய நிறுவனமான இதாரா இன்ஷாஅத்  தீனிய்யா’ என்ற பதிப்பகத்தின்உரிமையாளர் முஹம்மது அனஸ் என்பார் தப்லீக் இயக்கத்திலிருந்து தவ்பா செய்து தவ்ஹீதை,குர்ஆன் ஹதீஸை மட்டும் தமது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டுள்ளார்இனி இது போன்ற தஃலீம்தொகுப்புகளை அச்சிடுவதில்லை என்றும் அவற்றை விற்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளார்.
இது போல் பல சகோதரர்களும் தவ்பா செய்து உண்மையான தவ்ஹீதுடைய பாதைக்கு வர வேண்டும்.அதற்கு அல்லாஹ் அருள் செய்வானாககுர்ஆன்ஹதீஸைத் தனது வாழ்க்கை நெறியாக்கிக்கொண்டது பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஏகத்துவத்தில் வெளியிடப்படுகின்றதுஅதைப் பார்த்து,பலருக்கும் படிக்கக் கொடுத்து பயனடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஷிர்க்கான கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள் விற்பதை நிறுத்தி விட்டேன்

முஹம்மது அனஸ் அவர்களின் பேட்டி
தப்லீக் ஜமாஅத்திலிருந்து தவ்பா செய்த முஹம்மது அனஸ் அவர்களிடம் பேட்டி கண்ட போது அவர்தெரிவித்ததாவது-
மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஹனஃபி ஃபிக்ஹ் நூல்களை நான்நாடினேன்இவ்வாறு நாடுவதற்குக் காரணம்ஹனஃபி நூல்கள் தான் எங்களுக்கு மார்க்கச் சட்டநூல்கள் என்று தெரிவிக்கப்பட்டுஅந்தச் சூழலிலேயே நாங்கள் வளர்ந்திருக்கின்றோம்ஒரு குறிப்பிட்டபிரச்சனைக்காக அந்நூல்களில் தீர்வை நாடினால் ஏதாவது ஒரு ஆலிம் அல்லது ஒரு ஷைஹ் தனதுகருத்தைத் தெரிவித்திருப்பாரே தவிர குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்தவொரு விடையையும் நான்காணவில்லை.
அதனால் குர்ஆன் ஹதீஸிலே நான் நேரடியாகப் பார்க்க முற்பட்ட போதுஃபிக்ஹ் நூல்களில்கூறப்பட்டிருக்கும் தீர்வுகளுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் இடையில் பெரிய வேறுபாட்டைக் கண்டேன்.இப்போது குர்ஆன் ஹதீஸில் முழுமையாக நான் களம் இறங்கி விட்டேன்இதனால் இப்போதுஎன்னைச் சுற்றி இருப்பவர்களால்குறிப்பாக தேவ்பந்தி ஆலிம்களின் சிந்தனையில்வார்க்கப்பட்டவர்களால்நான் ஒரு மாபெரும் பாவத்தைச் செய்தவன் போல் சந்தேகக் கண் கொண்டுபார்க்கப் படுகின்றேன்.
நாம் குர்ஆன் ஹதீஸிலிருந்து விஷயங்களைத் தெரிந்தவுடன் அதைப் பின்பற்ற ஆரம்பித்தது தான்அவர்களுடைய பார்வையில் நான் செய்த மிகப் பெரும் தவறாகும்என்னுடைய உறவினர்கள்எல்லோரும் தங்களது முகத்தைத் திருப்பிக் கொண்டனர்என்னுடைய மகனுக்கு நான் நபிவழியில்திருமணம் நடத்தி வைத்த போது அதற்காக எந்தவித சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்நடத்தவில்லைஎன்னுடைய மகன் ஊர்வலமாக மணமகன் கோலத்தில் அழைத்து வரப்படவுமில்லை.இது எனது உறவினர்களை மேலும் ஆத்திரமூட்டியதுஒரு கார் மட்டும் ஏற்பாடு செய்து என்னுடையமருமகளை அழைத்து வந்தேன்ஹிஜாப் சம்பந்தப்பட்ட சில சிடி-க்களைக் கேட்டு விட்டு என்னுடையகண்களில் நீர் வழிந்தோடியதுஇவ்வளவு நாள் நாம் ஏன் இது போன்ற ஒரு ஹிஜாபைப் பின்பற்றாமல்இருந்து விட்டோம்என்று வருந்தி அன்றைய தினத்திலிருந்து மார்க்க அடிப்படையில் கணவனுடையசகோதரனிடம் கூட ஹிஜாபைப் பேண ஆரம்பித்து விட்டோம்.
பேட்டியாளர் குர்ஆன் ஹதீஸின் பக்கம் உங்களை ஈர்த்தது எது?
முஹம்மது அனஸ் அஹ்லே ஹதீஸின் வலை தளமான www.ahlehadees.com-ம் ஷைஹ்அதாவுல்லாஹ் தர்விஷைஹ் ஷஃபியுர்ரஹ்மான் முபாரக்புரிஷைஹ் மிஃராஜ் ரப்பானிஷைஹ்பதீவுத்தீன் ராஷிதி ஆகியோர் ஆற்றிய ஒலி நாடாக்களைக் கேட்டதும் தான் என்னை இந்தக் கருத்தின்பால் அழைத்து வந்தது. (அஷ்ரஃப் அலீ தானவி எழுதியதப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களின்வெளியீடான) ‘அஃமாலே குர்ஆனி’ என்ற நூலில் உள்ள ஒரு செய்தியைப் பற்றி ஷைஹ் மிஃராஜ்ரப்பானி அவர்கள் ஆற்றிய ஓர் உரையைக் கேட்டேன்அதில் அவர் குறிப்பிட்ட அந்தச் செய்தியை*அஃமாலே குர்ஆனி நூலில் பார்த்து விட்டு மிகவும் வெட்கப் பட்டேன்வேதனைப் பட்டேன்அந்த நூலைவிற்கக் கூடாது என்று என்னுடைய பதிப்பக ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு விட்டேன்இது போன்றுஷிர்க்கான கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை விற்பதையும் நான் நிறுத்தி விட்டேன்.
அஃமாலே குர்ஆனி என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக முஹம்மது அனஸ் அவர்கள் குறிப்பிடும்செய்தி இது தான்.
ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு காலத்தில் உதிரப் போக்கு அதிகமாக ஏற்படுமானால் சூரத்துஆலஇம்ரானின் 114வது வசனத்தை மூன்று துண்டுத் தாள்களில் எழுதி ஒன்றை வலது தொடையிலும்,மற்றொன்றை இடது தொடையிலும்இன்னொன்றை தொப்புளுக்குக் கீழும் கட்டித் தொங்க விட்டுக்கொள்ள வேண்டும்
பேட்டியாளர் அஹ்லே ஹதீசுக்கு வந்த பிறகுநீங்கள் ஏதேனும் சோதனைகளை எதிர்கொள்கின்றீர்களா?

பேட்டியாளர் : இன்னும் இந்தப் புத்தகத்தை அச்சடித்து விநியோகித்துவிற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இறுதியாக நீங்கள் என்ன அறிவுரை வழங்க விரும்புகின்றீர்கள்?
முஹம்மது அனஸ் : கொள்கையைப் பாழாக்கும் இத்ததைகய புத்தகங்களை விற்று பரப்புவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஹலாலான ஒன்றல்ல! ஆதாரப்பூர்வமான புத்தகங்கள் நிறைய இருக்கும் போதுபுறா சரித்திரங்கள்பச்சைக்கிளி சரித்திரங்களைக் கொண்ட புத்தகங்களை ஏன் விற்க வேண்டும்? (சூஃபிகள் சொன்ன பொய்யான கதைப் புத்தகங்களைக் குறிப்பிடுகின்றார்) இதுபோன்ற புத்தகங்களை விற்பதை விட்டு விட்டு ஆதாரப்பூர்வமான நூல்கள் விற்கப்பட வேண்டும்.
பேட்டியாளர் : உங்கள் இரு சகோதரர்கள் இந்த நபிவழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனரா?
முஹம்மது அனஸ் : ஆம்! நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் என்னுடைய இளைய சகோதரர் சி.டி.க்களைக் கேட்டு விட்டு தொழுகையில் தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துகின்றார். "தொழுகையில் கைகளை உயர்த்துவது உண்மை என்றிருக்கும் போது நாம் ஏன் அதைப் பின்பற்றுவதற்குப் பயப்பட வேண்டும்இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நிரூபிக்கப் பட்ட செயலும் நபிவழியும் அல்லவாஅதை நபி (ஸல்) அவர்கள் மரணமாகும் வரை கடைப்பிடித்திருக்கின்றார்கள் அல்லவாஎனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த சத்திய நெறியில் இருந்த காரணத்தால் நான் தொழுகையில் கையை உயர்த்த ஆரம்பித்து விட்டேன்'' என்று என்னிடம் என் சகோதரர் கூறினார்.
பேட்டியாளர் : சத்தியத்தைத் தேடும் பணியில் தப்லீக் ஜமாஅத்தினரையும் அரவணைத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
முஹம்மது அனஸ் : குர்ஆன் ஹதீஸ் போதனையைத் தேடுவதும்தங்கள் செயல்கள் குர்ஆன் ஹதீசுக்கு இசைவாக உள்ளனவாஎன்று சிந்தித்துப் பார்ப்பதும் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். இது தான் எல்லோருக்கும் தெரிவிக்கும் பொதுவான செய்தியாகும்.
பேட்டியாளர் : அஷ்ரப் அலீ தானவியின் "அஃமாலே குர்ஆன்போன்ற நூல்களைத் திரட்டி பரப்புகின்ற தேவ்பந்தி ஆலிம்களுக்கு எதையேனும் கூற விரும்புகின்றீர்களா?
முஹம்மது அனஸ் : ஆம்! மவ்லானா அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் அஃமாலே குர்ஆனின் ஆசிரியர் ஆவார். எனினும் யாரோ எழுதிய நூலை அஷ்ரப் அலீ தானவீ எழுதியதாகபின்னால் சொல்லப் படுகின்றதாஅல்லது உண்மையில் அஷ்ரப் அலீ தானவீ அவர்களே இதை எழுதினார்களாஎன்று உறுதியாகத் தெரியவில்லை. அல்லாஹ்வே உண்மையை அறிவான். ஆனால் நான் அந்த நூலில் கண்ட கருத்துக்கள் குர்ஆன் ஹதீசுக்கு நேர் முரணானவையாகும். அதனால் அவற்றை விற்பதை நிறுத்தி விட்டேன்.
பேட்டியாளர் : உறுதியாக முன்னால் இது யாரோ ஒருவரால் எழுதப்பட்டு பிந்திய காலத்தில் இது அஷ்ரப் அலீ தானவீயால் எழுதப்பட்டது என்று சொல்ல முடியாது. அப்படி அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் எழுதாததை அவர்கள் எழுதினார்கள் என்று தப்பாக சொல்லப்பட்டிருக்குமானால் அப்போதே தேவ்பந்தி உலமாக்கள் மறுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அஷ்ரப் அலீ தானவீ தான் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டல்லவா வருகின்றார்கள்எனவே இது நிச்சயமாக அஷ்ரப் அலீ தானவீ எழுதியது தான் என்பது ஊர்ஜிதமாகின்றது.
முஹம்மது அனஸ் : ஜக்கரியா மவ்லானா எழுதிய "ஹிகாயத் அவ்லியா' (வலிமார்கள் வரலாறு) என்ற நூலை நான் படித்த போது பெரிய அதிர்ச்சிக்குள்ளானேன். (பல்வேறு கப்ஸாக்களை உள்ளடக்கிய) இந்நூலுக்கு அஃபாஹே ஸலாஸா என்ற பெயர் வேறு உள்ளது. மொத்தத்தில் 60-70வகையான புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்வதை நிறுத்தி விட்டேன்
பேட்டியாளர் : ஜக்கரியா மவ்லானா எழுதிய ஜிஷ்தியா தரீக்கா வரலாற்றை படித்திருக்கின்றீர்களா?
முஹம்மது அனஸ் : நான் அந்த புத்தகத்திற்காக வந்த ஆர்டர்களையும் நிறுத்தி விட்டேன். அல்லாமல் இதுபோன்ற புத்தகங்களில் வரும் தவறான கருத்துக்களைத் தெளிவு படுத்துகின்ற (விமர்சன) நூல் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு யாரேனும் இம்மாதிரியான குறிப்புகளைத் தெரிவித்தால் நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து தவறாக இருந்தால் அதை நீக்கி விடுவேன்.
பேட்டியாளர் : இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் தேவ்பந்தி உலமாக்கள் மற்றும் பரேலவிகள் ஆவர். அவர்களது கண்மூடித்தனமான பின்பற்றுதல் அவர்களை குர்ஆன் ஹதீஸ் பக்கம் திரும்புவதை விட்டும் தடுக்கின்றது. ஏன்அவர்கள் சத்தியத்தைத் தெரிந்த பின்னரும் அதை மக்களிடம் எடுத்துரைக்க மறுக்கின்றார்கள். இவர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?
முஹம்மது அனஸ் : மார்க்கம் நமக்கு நபித்தோழர்கள் மூலம் வந்தது. யாரேனும் அவர்களது வாழ்க்கை வரலாறு நூல்களைத் தேடினால் அவை அவருக்குக் கிடைக்காது. ஆனால் நூறு வருடங்களுக்கு முன்னால் மரணித்த பீர்மார்களின் வாழ்க்கை வரலாறுகளை அவர்களின் முரீதுகள் எழுதித் தள்ளுகின்றனர். இன்றளவும் நாம் சஹாபாக்களைப் பற்றி நாம் தெரிந்திருக்கவில்லை.
(இதை அனஸ் அவர்கள் இங்கு குறிப்பிடக் காரணம்அஷ்ரப் அலீ தானவீக்குரிய வரலாறு நூல்கள் அதிகம் உள்ளன. அவை பத்து பாகங்களாக வெளிவந்துள்ளன.)
பேட்டியாளர் : ஒரு பெரிய நூல் வெளியீட்டாளர் என்ற அடிப்படையில் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
முஹம்மது அனஸ் : உங்கள் செயல்பாடுகளை ஆய்வு செய்யுங்கள். அவை குர்ஆன் ஹதீசுக்கு ஒத்து இருக்கின்றனவாஎன்று பாருங்கள். தன்னிடத்தில் மக்கள் சொல்வதையெல்லாம் ஒருவர் பின்பற்றக் கூடாது. இது தான் முதன் முதலில் விடுக்கும் செய்தியாகும். இன்று நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை ஆதாரங்களைக் குறிப்பிடுவது கிடையாது. எனவே ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். தனது செயல்கள் சரியாதவறாஎன்று (குர்ஆன் ஹதீஸ் மூலம்) உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏகத்துவம் இதழ்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை