இறுதி பேருரை “இக்ரஃ – நீர் ஓதுவீராக” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனை முழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு செய்து கொள்வார்கள். (புகாரி 3554) ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமளானில் திருக்குர்ஆனை இரு முறை மறு பதிவு செய்கின்றார்கள். (புகாரி 4998) அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படத் துவங்கி விட்டது என்பதற்கு இது ஓர் அறிகுறியானது. இது வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வல்ல இறைவனால் கடமையாக்கப்பட்ட அனைத்து வணக்கங்களிலும் வழிகாட்டி விட்டிருந்தார்கள். எஞ்சியிருந்தது ஹஜ் என்ற இறுதிக் கடமை மட்டுமே! அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில், “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்” என்ற (5:3) வசனம் அருளப்பட்டது. “ஓதுவீராக’ என்று துவங்கிய திருக்குர்ஆன், ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது. அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு
பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை நாத்திக்ர்கள் விவாத பின்னணி என்ன? நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தின் போது அவர்கள் படு தோல்வி அடைந்ததை வீடியோ காட்சிகள் மூலம் அறிந்திருப்பீர்கள். பொதுவாக விவாதங்களின் போது எதிர்த் தரப்பினர் எதிர்பார்க்காத சில வாதங்கள் முன் வைக்கப்படும் போது அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படலாம். பின்னர் அதற்கான விடையை அவர்கள் கண்டு பிடிப்பார்கள். ஆனால் நாத்திகர்களுடன் நடந்த இந்த விவாதம் அத்தகையது அல்ல. மாறாக இறைவன் இருக்கிறான் என்பதற்கு நாம் என்னென்ன ஆதாரங்களை எடுத்துக் காட்டுவோம் என்பதும் , குர் ஆன் இறைவேதம் என்பதற்கு நாம் எத்தகைய சான்றுகளை எடுத்துக் காட்டுவோம் என்பதும் , நாத்திகர்களின் மூட நம்பிக்கை குறித்து நாம் எத்தகைய கேள்விகளை எடுத்துக் காட்டுவோம் என்பதும் பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டன. பல மாதங்களூக்கு முன்பே கேள்வித்தாள் வழங்கப்பட்டும் பதில் எழுதாத மாணவனைப் போல் அவர்கள் ஆகி விட்டனர். எத்தனை மாதங்கள் அவர்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டாலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு இஸ்லாம் தெளிவாக இருக்கிறது என்பதும் இதில் நிரூபணமாகியுள்ளது. உ
Comments