Posts

ஜனவரி 1 – ஈஸா அலை அவர்களுக்கு விருத்தசேதனம் செய்த நாள்?

Image
புத்தாண்டு கொண்டாட்டம்: ஜனவரி 1 – ஈஸா அலை அவர்களுக்கு விருத்தசேதனம் செய்த நாள்? கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஈசா (அலை) அவர்களுக்கு விருத்த  சேதனம் செய்த நாளை  அதாவது ஜனவரி 1 ஐ ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது. பிற மத கலாச்சாரத்தை பின் பற்றக் கூடாது என்று நபிகள் நாயகம் பல இடங்களில் கூறியுள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத் (3512)

அம்பேத்கர் நினைவு தினத்தன்று பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள் !!

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தன்று பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள் !! தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கார் 1956 டிசம்பர் 6_ந்தேதி காலமானார். 1990_ல் இந்தியாவின் உயர்ந்த விருதான "பாரத ரத்னா" விருது அவருக்கு (மறைவுக்குப்பின்) வழங்கப்பட்டது.பாபர் மசூதியை இடிக்க இந்த நாளை தேர்ந்தெடுத்து அம்பேத்காரை இழிவுபடுத்தியது அத்வானி, பா.ஜ.க, சங்க்பரிவார கும்பல். பாபர் மசூதி இடிக்கப் பட்ட தினமே என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என பாஜக தலைவர் வினய் கத்தியார் தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ள வினய் கத்தியார் கரசேவை குழுவினரால் பாபர் மசூதி இடிக்கப் பட்ட தினம் என வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சி மிக்க நாள் என்று கூறினார் இந்து மதக் காப்பாளர்களாக இவர்கள் வேடம் போட்டுக் கொண்டாலும், உண்மையிலேயே இவர்கள் பார்ப்பனர்களின் பாதுகாவலர்கள்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை எடுத்துக் காட்ட முடியும். இந்து மதத்தின் தலைவர்களாக வந்திருப்பவர்களில் ஹெட்கேவர் யார்? அவர் ஒரு சித்பவன் பார்ப்பனர்! அடுத்த தலைவர் கோல்வாக்கர் யார

பைபிள் கடவுளின் வார்த்தை இல்லை பாதிரியார் வாக்குமுலம்

பைபிள் கடவுளின் வார்த்தை இல்லை என்பதினை ஒப்புதல் வாக்குமுலம் தந்த கிருத்துவ பாதிரியார்................ . கடந்த 28.11.12 புதன் கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், அனாரியன் சமாஜ் ஊழியங்கள் என்ற கிறித்தவ சபையினருக்கும் இடையில், “திருக்குர்ஆன் இறைவேதமா? பைபிள் இறைவேதமா?” ஆகிய இரு தலைப்புகளில் விவாதம் பரபரப்புடன் நடந்து முடிந்தது. டிஎன்டிஜே சார்பாக கலீல் ரசூல் அவர்கள் தலைமையில் எம்.எஸ்.சுலைமான், அப்பாஸ் அலி, தாங்கல் ஹபீபுல்லாஹ், சையது இப்ராஹீம் ஆகியோர் அடங்கிய குழுவினர் விவாதித்தனர். காலை 9 மணி முதல் இரவு 8.30 வரை நடைபெற்ற இரண்டு தலைப்புகளிலான விவாதம் அனல் பறந்தது. விவாதம் ஆன்லைன்பீஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. திருக்குர்ஆன் இறைவேதமே!: முதலில் திருக்குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பிலும், அடுத்ததாக பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பிலும் விவாதிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. விவாதம் ஆரம்பித்த உடனேயே, “இயேசுவுக்கு முன்னதாக வந்த மோசே கொண்டு வந்தது நியாயப்பிரமாணம் என்றும், இயேசு அதை மாற்றி கிருபையின் பிரமாணத்தைக் கொண்டு வந்தார்

இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்வோம்

இன்னா   செய்தாருக்கும்   நன்னயஞ்   செய்வோம் அல்லாஹ்வின்   கிருபையால்   உலகம்   முழுவதும்   தமிழ்   பேசும்   மக்களுக்கு   மத்தியில்   ஏகத்துவச்   சிந்தனைநாளுக்கு   நாள்    துளிர்   விட்டு   வளர்ந்து   வருகிறது .  இறையருளால்   இந்ந   ஏகத்துவக்   கொள்கையின்வளர்ச்சிக்கு   அடிப்படையாகத்   திகழ்பவர்கள்    ஏகத்துவவாதிகள்   தான் .   இவ்வுலகிலும் ,  மறுமையிலும்வெற்றிக்கு   அடிப்படையாகத்   திகழ்கின்ற   இந்த   சத்தியக்   கொள்கை   அறியா   மக்களிடமும் ,  கொள்கைஎதிரிகளிடமும்   சென்றடைய   வேண்டுமென்றால் ,  மென்மேலும்   வளர்ச்சி   காண   வேண்டுமென்றால்அல்குர்ஆனும் ,  அண்ணல்   நபிகளாரின்   வாழ்வும்   போதிக்கின்ற   பண்புகளை   கொள்கைச்   சகோதரர்கள்வளர்த்துக்   கொள்ள   வேண்டும் . அப்பண்புகளில்   மிக   முக்கியமான   ஒன்று   தான்   பிரச்சாரப்   பாதையில்   சந்திக்கும்   இன்னல்களைப்பொறுத்துக்   கொண்டு ,  மன்னிக்கும்   மனப்பான்மையை   வளர்த்துக்   கொள்வது .  நமக்குத்   துன்பம்விளைவித்தவர்களுக்கும்   நாம்   நன்மையை   நாடும்   போது   நம்முடைய   எதிரிகள்   கூட    உற்ற   தோழராகமாறிவிடுவார் .  ஆனால்   இந்தத்  

முஸ்லிம்களைக் குறிவைக்கும் திரைப்படங்கள்.

முஸ்லிம்களைக்   குறிவைக்கும்    திரைப்படங்கள். ஓர்   இனத்தை   அல்லது   ஒரு   சமுதாயத்தை   அழிக்க   வேண்டுமாயின்   ஒட்டுமொத்தமாக   அந்த   இனத்தின் மீது   தாக்குதல்   தொடுத்து   அழித்துவிட   முடியாது .  ஒரேயொரு   இரவில்   அல்லது   ஒரு   பகலில்   அந்த இனத்தை   ஒழித்துவிட   முடியாது .  அதற்கென்று   ஆழமான ,  அழுத்தமான   சதித்   திட்டம்   தீட்டப்பட வேண்டும் .  அப்படிப்பட்ட   சதித்   திட்டங்களில்   ஒன்று   முஸ்லிம்கள்   மீது   பிற   சமுதாய   மக்களிடம்   பகையை ஊட்டுவதாகும் . கடந்த   காலத்தில்   முஸ்லிம்களுக்கும்   இந்துக்களுக்கும்   இடையில்   நடந்த   போர்களை   மக்களுக்கு   மத்தியில் ஒரு   கருவியாகப்   பயன்படுத்துதல் . உண்மையில்   இந்தப்   போர்கள்   மத   ரீதியில்   நடைபெற்றவை   அல்ல !  அவை   நாடு   பிடிக்கும்   ஆசையில் நடந்தவை !  அவற்றைத்   திரித்து ,  கூட்டிக்   குறைத்துச்   சொல்லி   அதன்   மூலம்   பகைமை   நெருப்பை   மூட்டுதல் . இந்த   யுக்தியை   சங்பரிவார   அமைப்புகள்   நீண்ட   காலமாகக்   கடைப்பிடித்து   வருகின்றன .  இதற்கு எடுத்துக்காட்டாக   பாபரி   மஸ்ஜிதைக்   குறிப்பிடலாம் . இ

பெண்கள் போராட்டத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா?

பேரணி ,  ஆர்ப்பாட்டம்   என   முஸ்லிம்   பெண்கள்   போராட்டத்தில்   ஈடுபட   இஸ்லாம்   அனுமதிக்கிறதா ? அந்நியர்களின்   பார்வையில்   மழையிலும்   கூட   மார்க்கச்   சகோதரிகளைக்   காட்சிக்கு   வைப்பது   மார்க்கத்தில் ஆகுமான   காரியமா ?  என்று   தவ்ஹீத்   ஜமாஅத்திலிருந்து   ஒழுங்கு   நடவடிக்கை   எடுக்கபட்டு நீக்கப்பட்டவர்களின்   அமைப்பைச்   சேர்ந்த   ஒருவர்   கேள்வி   எழுப்புகின்றார் .  இந்தக்   கேள்விக்குப்   பதில்   சொல்வதற்கு   முன்னால்   இக்கேள்வியைப்   பரப்புவோரின்   பச்சை நயவஞ்சகத்தனத்தை   நாம்   எடுத்துக்   காட்ட   வேண்டியுள்ளது . முஸ்லிம்   பெண்கள்   போராட்டத்தில்   ஈடுபடுவது   குறித்த   கேள்வி   தவ்ஹீத்   ஜமாஅத்   தொடர்பான கேள்வியா ?  அல்லது   அனைத்து   இயக்கங்களுக்கான   கேள்வியா ? தமிழகத்தில்   உள்ள   அனைத்து   இயக்கங்களும்  ( ஒரு   இயக்கம்   தவிர )  தாங்கள்   நடத்தும்   போராட்டங்களில் பெண்களைப்   பங்கேற்கச்   செய்து   வருகின்றனர் .  தமுமுக ,  ஜமாஅதே   இஸ்லாமி ,  மமக ,  விடியல்   குரூப் , முஸ்லிம்   லீக் ,  தேசிய   லீக் ,  உள்ளிட்ட   எல்லா   இயக்கங்களும்   போராட்டத்தில்   பெண

அறிவு சூன்யங்களின் அர்த்தமற்ற வாதங்கள்

அறிவு   சூன்யங்களின்   அர்த்தமற்ற   வாதங்கள் இஸ்லாத்தின்   மூலஆதாரங்கள்   குர்ஆன் ,  ஹதீஸ்   என்ற   இரண்டே   அடிப்படைகள்   தான் .  அவ்விரண்டைத் தாண்டி   வேறெதுவும்   ஆதாரமாகாது   என்பதை   நாம்   அனைவரும்   அறிவோம் . ஆனால்   தங்களைத்   தாங்களே   சுன்னத்   வல்ஜமாஅத்   என்று   பிதற்றிக்   கொள்கின்ற   ஒரு   போலி ஜமாஅத்தினர்   தங்களது   மாதப்   பத்திரிகையில்   ஒரு   கேள்வி   பதிலில்   குர்ஆனையும்   ஹதீஸையும்   தூக்கி எறிந்து   விட்டு   தங்கள்   மனோ   இச்சைப்படி   அளிக்கின்ற   விளக்கத்தைப்   பாருங்கள் . " குத்பியத் ,  அதாவது   முஹ்யித்தீன்   அவர்களின்   பெயரை   ஓதக்   கூடாது ;  அவ்வாறு   ஓதினால்   ஷிர்க்   என்று ஒரு   ஆலிம்   கூறுகிறார் .  இதற்கு   உங்கள்   பதில்   என்ன ?'' இவ்வாறு   ஒருவர்   அந்தப்   பத்திரிகையில்   கேள்வி   கேட்கிறார் .