இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்வோம்

இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்வோம்

அல்லாஹ்வின் கிருபையால் உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் ஏகத்துவச் சிந்தனைநாளுக்கு நாள்  துளிர் விட்டு வளர்ந்து வருகிறதுஇறையருளால் இந்ந ஏகத்துவக் கொள்கையின்வளர்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்பவர்கள்  ஏகத்துவவாதிகள் தான்.  இவ்வுலகிலும்மறுமையிலும்வெற்றிக்கு அடிப்படையாகத் திகழ்கின்ற இந்த சத்தியக் கொள்கை அறியா மக்களிடமும்கொள்கைஎதிரிகளிடமும் சென்றடைய வேண்டுமென்றால்மென்மேலும் வளர்ச்சி காண வேண்டுமென்றால்அல்குர்ஆனும்அண்ணல் நபிகளாரின் வாழ்வும் போதிக்கின்ற பண்புகளை கொள்கைச் சகோதரர்கள்வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்பண்புகளில் மிக முக்கியமான ஒன்று தான் பிரச்சாரப் பாதையில் சந்திக்கும் இன்னல்களைப்பொறுத்துக் கொண்டுமன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுநமக்குத் துன்பம்விளைவித்தவர்களுக்கும் நாம் நன்மையை நாடும் போது நம்முடைய எதிரிகள் கூட  உற்ற தோழராகமாறிவிடுவார்ஆனால் இந்தத் தன்மையை நாம் பெறுவதென்பது இறைவன் நமக்கு செய்யும் பெரும்பாக்கியம் தான்.

இதோ திருமறைக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:  

நன்மையும்தீமையும் சமமாகாதுநல்லதைக் கொண்டே (பகைமையைதடுப்பீராகஎவருக்கும்உமக்கும்பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்பொறுமையை மேற்கொண்டோர் தவிரமற்றவர்களுக்கு இது (இந்தப் பண்புவழங்கப்படாதுமகத்தான பாக்கியம் உடையவர் தவிர(மற்றவர்களுக்குஇது வழங்கப்படாது.

அல்குர்ஆன் 41:34, 35

இறை நம்பிக்கையாளர்கள்தீங்கிழைப்போருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதையும்மன்னிக்கும்மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் திருமறைக் குர்ஆன் பல இடங்களில்வலியுறுத்துகிறது.

நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராகஅவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.

அல்குர்ஆன் 23:96

அவர்கள் செழிப்பிலும்வறுமையிலும் (நல் வழியில்செலவிடுவார்கள்கோபத்தை மென்றுவிழுங்குவார்கள்மக்களை மன்னிப்பார்கள்நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன் 3:134)

உறவினர்களுக்கும்ஏழைகளுக்கும்அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவமாட்டோம்'' என்று செல்வமும்வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம்மன்னித்துஅலட்சியம் செய்யட்டும். "அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா?அல்லாஹ் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 24:22)

பெருந்தன்மையை மேற்கொள்வீராகநன்மையை ஏவுவீராகஅறிவீனர்களை அலட்சியம் செய்வீராக

(அல்குர்ஆன் 7:199)

யுக முடிவு நேரம் வந்தே தீரும்எனவே அழகிய முறையில் அவர்களை அலட்சியப்படுத்துவீராக

(அல்குர்ஆன் 15:85)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் நமக்குத் தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்என்பதையும்அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து விட வேண்டும் என்பதையும் நமக்குப்போதிக்கின்றனஏகத்துவப் பிரச்சாரக் களத்தில் இந்தத் தன்மைகள் மிக மிக அவசியமான ஒன்றாகும்.கொள்கை விரோதிகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்களிடமிருந்து ஏற்படக்கூடியஇடைஞ்சல்களையும்இன்னல்களையும்  மறுமை வாழ்க்கைக்காகப் பொறுத்துக் கொள்ளும் தன்மைதான்  சத்தியக் கொள்கையின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும்.

மன்னிக்கும் தன்மை என்பது இரண்டு அடிப்படையிலாகும்.

ஒன்றுபிரச்சாரக்களத்தில் ஏற்படும் இன்னல்களைப் பொறுத்து இடர் ஏற்படுத்தியவர்களை மன்னித்தல்

இரண்டுநாம் பலமிக்கவர்களாகஎதிரிகளைத்  தண்டிப்பதற்கு வலிமையுடையவர்களாக  இருக்கும்காலகட்டத்திலும்  எதிரிகள் செய்த பாவங்களை மன்னித்து அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதாகும்.

முஃமின்களின் முன்மாதிரியான நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் வாழ்க்கையில் இதற்கு ஏராளமானசான்றுகளை நாம் காணலாம்.

தாயிஃப் நகர் துயரச் சம்பவம்

நபி (ஸல்அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலிஅவர்கள் கூறியதாவது: (ஒருமுறைநான் நபி(ஸல்அவர்களிடம், (தாங்கள் காயமடைந்தஉஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையானகால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டாஎன்று கேட்டேன்அதற்கு நபி (ஸல்அவர்கள்நான்உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன்அவர்களால் நான் சந்தித்ததுன்பங்களிலேயே மிகக் கடுமையானது அகபா (தாயிஃப்உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும்.ஏனெனில்அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானாஇப்னுஅப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன்அவர் நான் விரும்பியபடி எனக்குபதிலளிக்கவில்லைஆகவேநான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன்கர்னுஸ் ஸஆலிப்'என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லைஅங்கு வந்து சேர்ந்தவுடன் என்தலையை உயர்த்தினேன்அப்போது (அங்கே வானத்தில்ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்ததுநான் கூர்ந்து கவனித்த போது அதில் ஜிப்ரீல் (அலைஅவர்கள் இருந்தார்கள்அவர்கள்என்னை அழைத்துஉங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்தபதிலையும் அல்லாஹ் கேட்டான்அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காகமலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான் என்று கூறினார்கள்உடனே,மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லிபிறகுமுஹம்மதே!நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ளஇந்த இருமலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி,உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்என்று கூறினார்உடனே, (வேண்டாம்;)ஆயினும்இந்த (நகரத்துமக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல்அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே,அவர்களை தண்டிக்க வேண்டாம்என்று சொன்னேன்.

நூல்புகாரி 3231

நபியவர்களுக்கு கல்லடிகளாலும்சொல்லடிகளாலும் வேதனையளித்த தாஃயிப் நகர மக்களுக்கு எதிராகநபியவர்கள் பிரார்த்திக்கவில்லைஅவர்கள் திருந்தாவிட்டாலும் அவர்களுடைய சந்ததிகளாவதுதிருந்துவார்கள் என்று கொள்கைக்காக அவர்கள் செய்த அநியாயங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டார்கள்.

அல்லாஹ் தாயிஃப் நகரத்தில் மிகப்பெரும் இஸ்லாமிய பேரெழுச்சியை ஏற்படுத்தினான்கொள்கைக்காகநாம் சந்திக்கும் இன்னல்களையும்இடறுகளையும் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் சத்தியக்கொள்கையை மேலோங்கச் செய்வான் என்பதற்கு தாயிஃப் நகரச் சம்பவம் மிகப்பெரும் சான்றாகத்திகழ்கிறது.

கொலை செய்ய வந்த கொடியவர்களுக்கும் மன்னிப்பு

சத்தியக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த ஒரே காரணத்திற்காக நபியவர்கள் மக்காவிலிருந்துமதீனாவிற்கு குரைஷிக் காஃபிர்களால் விரட்டியடிக்கப்பட்டார்கள்நபியவர்கள் மதீனாவிற்குச்சென்றடையவதற்கு முன்னால் அவர்களை எப்படியாவது கொலை செய்து விடவேண்டும் என்றும்சண்டாளர்கள் சதி செய்தார்கள்.

நபியவர்களையும்அவர்களின் அருமைத் தோழர் அபூபக்கர் (ரலிஅவர்களையும் உயிருடனோ அல்லதுகொலை செய்தோ கொண்டு வருபவர்களுக்கு நூறுநூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என்று அறிவிப்புச்செய்தார்கள்நபியவர்களையும்அவர்களது அருமைத் தோழரையும் கொலை செய்து எப்படியாவதுஇருநூறு ஒட்டகங்களைப் பரிசாகப் பெறவேண்டும் என்று வெறிபிடித்து வந்தார் சுராகா பின் ஜூஃசும் (ரலி)அவர்கள்அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லைஇறையருளால் சுராகாவின் வஞ்சகஎண்ணம் ஈடேறவில்லைநபியவர்களையும்அவர்களது அருமைத் தோழரையும் அல்லாஹ் தனதுவல்லமையால் காப்பாற்றினான்.

அத்தகைய கொடியவரான சுராகாவைக் கூட நபியவர்கள் மன்னித்தார்கள்இந்த மன்னிக்கும் தன்மைதான் கொடியவர்களிடம் கூட சத்திய மார்க்கத்தைக் கொண்டு சேர்த்ததுசுராக்கா (ரலிஅவர்களைஇஸ்லாத்தில் இணைய வைத்தது.  இதோ ஸஹீஹூல் புகாரியில் பதிவு செய்யப் பெற்ற சுராகாவின்சம்பவத்தை சுருக்கமாகக் காண்போம்.

நபி (ஸல்அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்சென்ற போது சுராக்கா பின் மாலிக் பின் ஜுஃஷும்என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்பின்தொடர்ந்து சென்றார்நபி (ஸல்அவர்கள் அவருக்கெதிராக(அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்பிரார்த்தித்தார்கள்உடனேஅவரது குதிரை அவருடனேயேபூமியில் அழுந்தி விட்டதுசுராக்கா (நபியவர்களிடமே), எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்நான்உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன் என்று சொன்னார்அவ்வாறே நபி (ஸல்அவர்கள் அவருக்காகப்பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்பராஉ (ரலி), நூல்புகாரி 3908, 5607

இந்த சம்பவம் புகாரி 3615வது ஹதீஸிலே விரிவாக இடம் பெற்றுள்ளது.

நஞ்சூட்டியவருக்கும் நன்மை செய்த நபிகள் நாயகம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் நாட்டின் மிகப்பெரும் அதிபராகவும் இருந்தார்கள்இறைத்தூதருக்குஒரு பாதிப்பு ஏற்பட்டால் இன்னுயிரைக் கொடுப்பதற்கும் இலட்சக்கணக்காண தோழர்கள் இருந்தார்கள்.நபிகள் நாயகத்தின் ஆட்சியில் சிறுபான்மைச் சமுதாயமாக இருந்த  யூத சமுதாயத்தைச் சேர்ந்த ஒருபெண் நபிகள் நாயகத்திற்கு இறைச்சியில் விஷம் சேர்த்து உண்ணக் கொடுத்தாள்உயிரைப் பறிக்கநினைத்தாள்அல்லாஹ் தன்னுடைய அற்புதத்தால் தன்னுடைய தூதரைப் பாதுகாத்தான்.

இலட்சகணக்கான தோழர்கள் தம் உயிரினும் மேலாய் மதித்த இறைத்தூதருக்கு நஞ்சூட்டிய சிறுபான்மைச்சமுதாயமான யூத சமுதாயத்திற்கு எந்தப் பாதிப்பையும் இறைத்தூதர் ஏற்படுத்தவில்லைஇஸ்லாம்அவர்களைத் தடுத்ததுநஞ்சூட்டிய பெண்ணையும் மன்னித்து மாமனிதராக வாழ்ந்து காட்டினார்கள்.மன்னிக்கும் தன்மைக்கு முன்மாதிரியாய்த் திகழ்ந்தார்கள்.

அனஸ் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்அவர்களிடம் விஷம்தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள்நபி (ஸல்அவர்கள் அதிலிருந்து (சிறிது)உண்டார்கள்அவளைக் கொன்று விடுவோமாஎன்று (நபி (ஸல்அவர்களிடம்கேட்கப்பட்டதுஅவர்கள்,வேண்டாம் என்று கூறி விட்டார்கள்நபி (ஸல்அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின்பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

நூல்புகாரி 2617

மரணத்தை  வேண்டியவர்களுக்கு மறுப்பளித்த நபிகள் நாயகம்

மாபெரும் அதிபராகமக்கள் நேசிக்கும் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் ஆட்சியில்சிறுபான்மைச் சமுதாயமாக இருந்த யூதர்கள்மாமன்னர் நபிகள் நாயகத்தை வார்த்தையால் கேலிசெய்தார்கள்பொங்கி எழுந்தார் அன்னை ஆயிஷா (ரலிஅவர்கள்ஆனால் நபியவர்களோமென்மையைக் கடைபிடிக்குமாறு முஃமின்களின் அன்னைக்கு போதித்தார்கள்அழகிய முறையில்தீமைக்குப் பதிலடி கொடுத்தார்கள்இமாமின் புகாரியின் வார்த்தைகளிலே அந்த அழகிய வரலாற்றைக்காண்போம்.

ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்யூதர்கள் (சிலர்நபி (ஸல்அவர்களிடம் வந்து அஸ்ஸாமுஅலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்என்று (முகமன்கூறினர்உடனே நான், (அதுஉங்களுக்குநேரட்டும்மேலும்அல்லாஹ் தனது கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி உங்கள் மீதுஅல்லாஹ் கோபம் கொள்ளட்டும் என்று (அவர்களுக்கு பதில்சொன்னேன். (அப்போதுநபி (ஸல்)அவர்கள்ஆயிஷாநிதானம்! (எதிலும்நளினமாக நடந்துகொள்மேலும்வன்மையுடன் நடந்துகொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை நான் எச்சரிக்கிறேன் என்றுசொன்னார்கள்அப்போது நான்அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையாஎன்று கேட்டேன்.அதற்கு நபி (ஸல்அவர்கள்நான் (அவர்களுக்கு அளித்த பதிலைநீ கேட்கவில்லையா? (அஸ்ஸாமு'எனும் சொல்லைத் தவிர்த்து  அலைக்கும்'- அவ்வாறே உங்கள் மீது உண்டாகட்டும் என்றுஅவர்களுக்குநான் பதிலளித்துவிட்டேன்அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்எனக்காகஅவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாது என்று சொன்னார்கள்

நூல்புகாரி 6030

பகைவரையும் நேசராக்கிய மன்னிக்கும் தன்மை

உலகத்தில் முதல் எதிரியாக நபிகள் நாயகத்தையும்வெறுக்கும் மார்க்கமாக இஸ்லாத்தையும்பகைநாடாக மதீனாவையும் கருதினார் ஸுமாமா பின் உஸால்.  அன்பு மார்க்கமாம் இஸ்லாத்தையும்அதைப்போதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்அவர்களையும்அம்மார்க்கத்தைப் பின்பற்றும் அருமைத்தோழர்களையும் சில நாட்கள் பார்த்த ஸுமாமாவின் உள்ளம் இஸ்லாத்திற்கு முன்னால் அடிபணிந்தது.இந்த சுமாமாவை மாற்றியது நபிகள் நாயகத்தின் மன்னிக்கும் குணம்இதோ வரலாற்றில் என்றும்மங்காத பிரகாசமாய் ஒளிவீசும் சுமாமாவின் வரலாற்றைப் பாருங்கள்.

அபூ ஹுரைரா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நபி (ஸல்அவர்கள் "நஜ்த்பகுதியை நோக்கி குதிரைப்படையொன்றை அனுப்பினார்கள்அந்தப் படையினர் "பனூ ஹனீஃபாகுலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின்உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்துகொண்டு வந்தார்கள்பள்ளிவாசலின்தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்நபி (ஸல்அவர்கள் அவரிடம் வந்து, (உன்விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றிநீ என்ன கருதுகிறாய்ஸுமாமாவேஎன்றுகேட்டார்கள்அவர்நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதேநீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழிவாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்குநீங்கள் உபகாரம் செய்தால்,நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில்நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள் என்று பதிலளித்தார்எனவேஅவர் (மன்னிக்கப்பட்டுவிடப்பட்டார்.மறு நாள் வந்த போது அவரிடம்ஸுமாமாவேஎன்ன கருதுகிறாய்என்று நபி (ஸல்அவர்கள்கேட்டார்கள்அதற்கு அவர்தங்களிடம் நான் (ஏற்கெனவேகூறியது தான்நீங்கள் உபகாரம் செய்தால்நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள் என்றார்அவரை நபியவர்கள் (அன்றும்விட்டுவிட்டார்கள்.மறுநாளுக்கு அடுத்த நாள் வந்த போதுநீ என்ன கருதுகிறாய்ஸுமாமாவேஎன்று நபி (ஸல்அவர்கள்கேட்டார்கள்அவர்நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன் என்று பதிலளித்தார்.நபி (ஸல்அவர்கள்ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள் என்று சொன்னார்கள்.

உடனே ஸுமாமாபள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு,பள்ளிவாசலுக்கு வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை'என்று நான் உறுதி கூறுகிறேன்மேலும், "முஹம்மதுஅல்லாஹ்வின் தூதர்என்றும் நான் உறுதிகூறுகிறேன் என்று மொழிந்துவிட்டுமுஹம்மதேஅல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரைஉங்கள்முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லைஆனால், (இன்று)உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டதுஅல்லாஹ்வின்மீதாணையாக! (இன்றுவரைஉங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும்இருக்கவில்லைஆனால்இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம்ஆகிவிட்டதுஅல்லாஹ்வின் மீதாணையாகஉங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும்இருந்திருக்கவில்லைஆனால்இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது.உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர் என்று சொல்லிவிட்டுமேலும் நான்இப்போது (மக்காவிற்குச் சென்றுஉம்ரா செய்ய விரும்புகிறேன்நீங்கள் என்ன கருதுகிறீர்கள்என்றுகேட்டார்அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்குஅனுமதியளித்தார்கள்அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கேஒருவர் அவரிடம்நீ மதம்மாறிவிட்டாயாஎன்று கேட்டார்அதற்கு ஸுமாமா (ரலிஅவர்கள்இல்லைஅல்லாஹ்வின்மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாகஅல்லாஹ்வின்தூதர் முஹம்மத் (ஸல்)அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன்அல்லாஹ்வின்மீதாணையாகநபி (ஸல்அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடானயமாமாவிலிருந்து ஒருகோதுமை தானியம் கூட (மக்காவாசிகளானஉங்களுக்கு வராது என்று சொன்னார்கள்.

நூல்புகாரி 4372

வஞ்சகமாய் கொன்ற வஹ்ஷியை வாஞ்சையாய் மன்னிக்கும் தன்மை

நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் நேசத்திற்குரியவரான அன்னாரின் சிறிய தந்தையார் ஹம்சா (ரலி)அவர்களை உஹது யுத்தத்திலே வஞ்சகமாய்க் கொன்றார் வஹ்ஷி அவர்கள்ஹம்சா (ரலிஅவர்களின்உடல் எதிரிகளால் சின்னா பின்னமாக்கப்பட்டதுஉடலைக் கண்டதும்அதன் நிலையைப் பார்த்ததும்கண்ணீர் வடித்தது நாயகத்தின் கண்கள்சிறிய தந்தையைக் கொன்றதற்காக எதிரிகளில் எழுபது பேரைப்பழிவாங்குவேன் என்று சீற்றம் கொண்டார்கள்மன்னிக்கும் மார்க்கத்தைப் போதிக்க வந்த நாயகமேசீற்றம் கொள்ளலமாவரம்பை மீறலாமாபொறுமையின் வடிவம் நிதானம் தவறலாமா?

மன்னிப்பாளர்களுக்கெல்லாம் மிகப் பெரும் மன்னிப்பாளனான அல்லாஹ் பின்வரும் வசனத்தைஅருளினான்அதில் பொறுமையைப் போதித்தான்வரம்பு மீறுவதை எச்சரித்தான்.

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்நீங்கள்பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்ததுபொறுமையைக்கடைப்பிடிப்பீராகநீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளதுஅவர்களுக்காகக்கவலைப்படாதீர்அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்.

அல்குர்ஆன் 16:126, 127

நபிகள் நாயகத்தின் நேசத்திற்குரிய ஹம்சா (ரலிஅவர்களைக் கொன்ற வஹ்ஷியையும் இஸ்லாம்கவர்ந்ததுஅவரைச் சத்தியத்தின் போராளியாக்கியதுவஹ்ஷியையும் மன்னித்தார்கள் நபிகள் நாயகம்(ஸல்அவர்கள்வஹ்ஷியின் வரலாற்றை அவரின் வாய்மொழியாகக் கேட்போம்.

நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்துஅவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில்ஒளிந்து கொண்டேன்ஹம்ஸா அவர்கள் என்னை (கவனிக்காமல்நெருங்கி வந்த போதுஎனது ஈட்டியைஅவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன்அது (பாய்ந்துஅவரது புட்டத்திற்கிடையிலிருந்துவெளியேறியதுஅது தான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்ததுபிறகுகுறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கிதிரும்பிச் சென்ற போது நானும் அவர்களுடன்திரும்பினேன்மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்துஇஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்சென்று விட்டேன்.தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும்அதை ஏற்று நடக்கவும் கருதிதங்கள் தூதுக்குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களிடம் அனுப்பி வைத்தனர்அப்போதுஎன்னிடத்தில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் (தம்மிடம் வரும்தூதுவர்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள்; (எனவேதூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்என்று கூறப்பட்டதுஎனவேதூதுக்குழுவினருடன் நானும் புறப்பட்டுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களிடம் வந்து சேர்ந்தேன்என்னைஅவர்கள் கண்ட போதுநீ வஹ்ஷி தானேஎன்று கேட்டார்கள்நான்ஆம் என்று கூறினேன்நீ தானேஹம்ஸாவைக் கொன்றாய்என்று கேட்டார்கள்நான்உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்ததுஉண்மைதான் என்று கூறினேன்அப்போது அவர்கள், (உன்னைக் காணும் போது என் பெரிய தந்தைஹம்ஸாவின் நினைவு வரும்எனவே,) என்னை விட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?என்று கேட்டார்கள்உடனேநான் (அங்கிருந்துபுறப்பட்டுவிட்டேன்.

நபி (ஸல்அவர்கள் இறந்துவிட்ட போது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்பொய்யன்முஸைலமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போர் புரிவதற்காகப் பெரும்படை ஒன்றைத்திரட்டலானான்அவனை முறியடிப்பதற்காக அபூபக்ர் ஸித்தீக் (ரலிஅவர்களும் படை திரட்டி அதற்குகாலித் பின் வலீத் (ரலிஅவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்நான் (என் மனத்திற்குள்), நிச்சயம் நான்முஸைலமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன்அவனை நான் கொல்ல(வாய்ப்புக் கிடைக்க)லாம்.அதன் மூலம், (முன்புநான் ஹம்ஸா (ரலிஅவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி)ஈடுசெய்யலாம் என்று கூறிக் கொண்டேன். (அபூபக்ர் அவர்கள் அனுப்பிய போர்ப்படையிலிருந்த)மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன்அப்போது தான் அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்துமுடிந்ததுஅப்(போரின்போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந்தான்.அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்துசாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான்அவன்மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதேஎனது ஈட்டியை எறிந்தேன்நான் அந்த ஈட்டியைஅவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன்அது அவனது பின் தோள்களுக்கிடையிலிருந்துவெளியேறியதுஅவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார்தமது வாளால் அவனதுஉச்சந்தலை மீது ஓங்கி வெட்டி விட்டார். (அவன்தான் முஸைலமா.)

நூல்புகாரி 4072

நபிகள் நாயகத்தின் மன்னிக்கும் தன்மைக்கு இன்னும் ஏராளமான சான்றுகளைக் கூறலாம்மக்காவெற்றியின் போது எதிரிகள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கினார்கள்தன்னைப் பைத்தியம் என்றும்,சூனியக்காரர் என்றும்சந்ததியற்றவர் என்றும் பழித்தவர்களையெல்லாம் மன்னித்தார்கள்அத்தன்மைதான் 23 ஆண்டுகளில் காட்டுமிராண்டிக் கூட்டத்தையும் உலகிலேயே கியாமத் நாள் வரை தோன்றமுடியாத சிறந்த தலைமுறையாக உருவாக்கியது.

சத்தியவாதிகளை வார்த்தெடுத்ததுஅமைதி உலகத்தை அமைத்துஇத்தன்மையை நாமும் பெற்றால்நம்முடைய தலைமுறையும் சத்தியத்திற்கு சாட்சியாளர்களாய் மாறும் நாள் வெகு தொலைவில்இல்லைஇன்ஷா அல்லாஹ்.

இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்பவர்களாய்உண்மையான முஃமின்களாய் அல்லாஹ் நம்மைஆக்கி அருள்புரிவானாக!

அப்துந் நாசிர்கடையநல்லூர்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை