மட்டம் தட்டாதீர்!
மட்டம் தட்டாதீர்! நண்பர்கள் பலரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு உரையாடிக் கொண்டிருப்பர். அங்கே பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் அவர்களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும். அவ்வாறு கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும் போது. அவர்களில் பொருளாதாரத்தில் குறைந்தவர் ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்வார். உடனே பக்கத்திலுள்ள ஒருவர் , " ஆமாம். இவர் பெரிய தத்துவ முத்தை உதிர்த்து விட்டார். நீ எல்லாம் எங்கோ இருக்க வேண்டிய ஆள். இங்கே வந்து உயிரை வாங்குகின்றாய் '' என்று கடித்துக் குதறுவார். அவரை அந்தச் சபையில் வைத்து மட்டம் தட்டுவார். இப்படிப் பட்டவர்கள் பணம் , அறிவு , அழகு , அரசியல் செல்வாக்கு ஆகிய அம்சங்களில் ஏதேனும் ஒன்றில் மற்றவர்களை விட சிறந்து விளங்குவார்கள். இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும். அதை மற்றவர்களை மட்டம் தட்டுவதற்குரிய கருவியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதாவது பலர் முன்னிலையில் அவமானப் படுத்தி மூக்கறுப்பார்கள். அன்றாடம் திண்ணை சபைகளிலிருந்து ஆலோசனைக் கூட்டம். பொதுக்கூட்டங்கள் வரை இந்த ' நோஸ் கட் ' கலாச்சாரம் தொடர்கின்றது. இன்று கல்லூரிகளில் நடக்கும் ராக்கிங்