Posts

மட்டம் தட்டாதீர்!

மட்டம் தட்டாதீர்! நண்பர்கள் பலரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு உரையாடிக் கொண்டிருப்பர். அங்கே பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் அவர்களுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கும். அவ்வாறு கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும் போது. அவர்களில் பொருளாதாரத்தில் குறைந்தவர் ஏதேனும் ஒரு கருத்தைச் சொல்வார். உடனே பக்கத்திலுள்ள ஒருவர் , " ஆமாம். இவர் பெரிய தத்துவ முத்தை உதிர்த்து விட்டார். நீ எல்லாம் எங்கோ இருக்க வேண்டிய ஆள். இங்கே வந்து உயிரை வாங்குகின்றாய் ''  என்று கடித்துக் குதறுவார். அவரை அந்தச் சபையில் வைத்து மட்டம் தட்டுவார். இப்படிப் பட்டவர்கள் பணம் ,  அறிவு ,  அழகு ,  அரசியல் செல்வாக்கு ஆகிய அம்சங்களில் ஏதேனும் ஒன்றில் மற்றவர்களை விட சிறந்து விளங்குவார்கள். இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும். அதை மற்றவர்களை மட்டம் தட்டுவதற்குரிய கருவியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதாவது பலர் முன்னிலையில் அவமானப் படுத்தி மூக்கறுப்பார்கள். அன்றாடம் திண்ணை சபைகளிலிருந்து ஆலோசனைக் கூட்டம். பொதுக்கூட்டங்கள் வரை இந்த ' நோஸ் கட் '  கலாச்சாரம் தொடர்கின்றது. இன்று கல்லூரிகளில் நடக்கும் ராக்கிங்

இஸ்திஃக்ஃபார்

இஸ்திஃக்பார் அல்லாஹ் தனது திருமறையில்  48:2  வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள். " அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் "அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி ' ( பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன் ''  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) , நூல் : புகாரி  6307 " எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன் ''  என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி) , நூல் : முஸ்லிம்  4870

ஷிர்க்கும் பித்அத்தும் (வீடியோ)

Image
ஷிர்க்கும் பித்அத்தும் (வீடியோ)

ஏகத்துவம் என்றால் என்ன? (வீடியோ)

Image
ஏகத்துவம் என்றால் என்ன? (வீடியோ)

மனுஷ்ய புத்திரனா? மிருக புத்திரனா?:

மனுஷ்ய   புத்திரனா ?  மிருக   புத்திரனா ?: மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதும் இவன் இந்தப் பெயரை வைப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவன் .  உண்மையில் மிருக புத்திரன் என்றுதான் இவனைச் சொல்ல வேண்டும் .  காரணம் என்னவென்றால் கொடூரமான முறையில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட  4  மாத குழந்தைக்கு இரக்கம் காட்ட முன்வராத இந்த மனித மிருகம் ,  கொடூரமான முறையில் கொலை செய்த கொலைகாரப் பெண்மணிக்கு இரக்கம் காட்ட முன்வருவதிலிருந்தே இவன் மனித ஜாதி அல்ல ;  மிருக ஜாதிதான் என்பது வெட்ட வெளிச்சமாகின்றது .   இவனது பெண்டாட்டியையோ, மகனையோ ,  மகளையோ ,  அண்ணனையோ ,  தம்பியையோ அநியாயமாக எவனாவது கொலை செய்தால் அப்போது கொலை செய்த கொலைகாரனுக்கு ஆதாரவாக மனிதநேயம் பேசுவானா ?  அல்லது கொலை செய்யப்பட்டவனைக் கொல்ல வேண்டும் என்று இவன் சொல்வானா என்பது இவனது வீட்டில் ஏதாவது கொலை நடந்தால் தெரிந்துவிடும் .  

ஏன் நபிகள் நாயகத்தை ‘மகான்’ என்கிறோம்?

Image
ஏன் நபிகள் நாயகத்தை ‘மகான்’ என்கிறோம்? “இஸ்லாத்தின் உயரிய பண்புகள் இதற்குமுன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதை விட, இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளிதேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசர அவசரமாகத் தேவைப்படுகின்றன. “இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல; ஓர் சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள்; இஸ்லாத்தின் மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள், இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர். “நான் மதத்தைப் பற்றிக்கொண்டுள்ள கருத்துக்கும், இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழா விற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஓர் மார்க்கமாகக் கருதி, நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன். இவ்விழா வில் நான் கலந்து கொள்வது இதுதான் முதல் தடவையென்பதுமல்ல; இதுவே கடைசி தடவையுமல்ல. 

இஸ்லாமியப் போர்கள்

இஸ்லாமியப்   போர்கள் முஸ்லிமல்லாதவர்களை   மதமாற்றம்   செய்வதற்காகவும்   மறுப்பவர்களைக்   கொன்று குவிப்பதற்காகவும்   பிறநாட்டில்   உள்ள   அழகு   மங்கையரைக்   கவர்ந்து   செல்வதற்காகவும்   அங்குள்ள செல்வங்களைக்   கொள்ளையடிப்பதற்காகவும்   முஸ்லிம்கள்   படையெடுத்து   உள்ளனர் .  இஸ்லாம் ,  பிற மதங்களைச்   சகித்துக்   கொள்ளாத   மார்க்கம்   என்பதற்கு   அது   வாள்முனையில்   பரப்பப்பட்ட   மார்க்கம் என்பதற்கும்   இந்தப்   போர்களும்   படையெடுப்புகளும்   சான்றாக   உள்ளன . முஸ்லிமல்லாதவர்கள்   அடிக்கடி   எழுப்பிவரும்   குற்றச்சாட்டுகளில்   இதுவும்   ஒன்றாகும் . முகலாய   மன்னர்களும் ,  வேறு   பல   முஸ்லிம்   மன்னர்களும்   இந்தியாவின்   மீது   படையெடுத்து வந்ததையும்   நபிகள்   நாயகம்   ( ஸல் )  அவர்கள்   தம்   வாழ்நாளில்   எராளமான   போர்களை நிகழ்த்தியதையும்   தங்கள்   வாதத்துக்குச்   சான்றாக   அவர்கள்   எடுத்துக்   காட்டுகின்றார்கள் . முஸ்லிம்   மன்னர்கள்   இந்தியாவின்   மீது   படையெடுத்து   வந்தது   உண்மை .  நபிகள்   நாயகம்  ( ஸல் ) அவர்கள்   பல   போர்களைச்   சந்தித்ததும்   உண்மை .  ஆயினும்