இஸ்லாமியப் போர்கள்


இஸ்லாமியப் போர்கள்
முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும் மறுப்பவர்களைக் கொன்றுகுவிப்பதற்காகவும் பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும் அங்குள்ளசெல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர்இஸ்லாம்பிறமதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கு அது வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம்என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றாக உள்ளன.
முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
முகலாய மன்னர்களும்வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்துவந்ததையும் நபிகள் நாயகம்  (ஸல்அவர்கள் தம் வாழ்நாளில் எராளமான போர்களைநிகழ்த்தியதையும் தங்கள் வாதத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள்.
முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தது உண்மைநபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் பல போர்களைச் சந்தித்ததும் உண்மைஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு எடுத்துவைக்கப்படும் வாதங்கள் தாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை.
இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இரண்டு ஆதாரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள்இந்தக் காரணங்களுக்காகப் போர் செய்திருந்தால் அதைக் காரணமாகக்கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதில் நியாயம் உள்ளதுஅவர்களைத் தவிர ஏனையமுஸ்லிம் மன்னர்கள் எந்தக் காரணங்களுக்காகப் போர் செய்திருந்தாலும் அதற்காக இஸ்லாத்தைவிமர்சிப்பது அறிவுடைமையாகாது.
ஆகவே நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் விளக்குவது தான் நமதுபொறுப்பாகும்ஆயினும் நாம் வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தது,பற்றியே பிரதானமாகப் பேசப்படுவதால் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் மன்னர்களின்படையெடுப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அதுபற்றி சுருக்கமாக ஆராய்ந்து விட்டுநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி ஆராய்வோம்.
அன்றைய காலத்தில் போர்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்நதனமன்னர்களின்சுயநலத்திற்காகப் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டது.
அன்றைக்கு தனித்தனி நாடுகளாக விளங்கிய சேரசோழபாண்டிய நாட்டு மன்னர்கள் ஒருவருடன்ஒருவர் போர் புரிந்த வரலாறு உண்டுஅன்றைக்கு தனிநாடாக விளங்கிய வடநாட்டின் மீதுபாண்டிய மன்னன் படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற வரலாறும் உண்டு.
இந்த நாட்டைச் சுரண்டுவதற்காக ஆரியர்கள் படையெடுத்த வந்த வரலாறும் உண்டு.
மத நம்பிக்கையில்லாத திராவிடர்கள் மீது ஆரியர்கள் இந்து மதத்தைத் திணித்த வரலாறும்உண்டு.
பல நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற அலெக்சாண்டரின் வீர(?) வரலாறும் உண்டு.வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட சமீபத்திய வரலாறும் உண்டுதங்கள்நாட்டு எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும்பகைமை கொண்டிருந்த அண்டை நாட்டுமன்னனுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும்வளங்களை வாரிச் செல்வதற்காகவும் எத்தனையோபடையெடுப்புகளை உலகம் சந்தித்துள்ளதுஅது போன்ற ஒரு படையெடுப்பே முகலாயர்களின்படையெடுப்பு.
முஸ்லிம் படையெடுப்புகள்
வெண்ணிவாகைபுள்ளலூர்பரியலம்மணிமங்கலம்நெய்வேலிபெண்ணாடகம்விழிஞம்,தெள்ளாறுதிருப்புறம்பியம்வெள்ளுர்தக்கோலம்நொப்பம்கூடல்கலிங்கம்ஈழம்சுமந்திரம்,மகேந்திரமங்கலம் மற்றும் கண்ணனூர் ஆகிய போர்கள் தமிழக அளவில் இந்து மன்னர்கள்நிகழ்த்திய போர்களில் சிலஇன்னும் ஏராளமான போர்கள் தமிழக அளவிலும் இந்திய அளவிலும்நிகழ்ந்துள்ளன.
இந்தப் போர்களுக்கெல்லாம் எவை காரணமாக இருந்தனவோ அவை தாம் முஸ்லிம் மன்னர்களின்படையெடுப்புக்கும் காரணங்களாக இருந்தனநிச்சயமாக மதத்தைப் பரப்புவதோ, மதமாற்றம்செய்வதோ இதற்குக் காரணங்களாக இருந்ததில்லை.
முஸ்லிம் மன்னர்கள் 800 ஆண்டு காலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தனர்.
அவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லைஆயிரம் ஆண்டுகள் பழமையானஆலயங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றனஇந்துக் கோவில்களைக்கட்டிய முஸ்லிம் மன்னர்களும் அவற்றுக்கு மானியம் வழங்கிய முஸ்லிம் மன்னர்களும்இருந்துள்ளனர்.
இஸ்லாம் தடை செய்துள்ள ஆடல் பாடல்களை அவர்கள் தடை செய்ததில்லைவட்டியைஅவர்கள் ஒழித்ததில்லைகுற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய தண்டனைகளை அவர்கள்சட்டமாக்கவில்லைஅரசுப் பதவிகளில் முஸ்லிமல்லாதவர்களைப் பெருமளவுநியமித்திருந்தார்கள்முஸ்லிமல்லாத பெண்களை மணந்தார்கள்.
இன்னும் இஸ்லாத்தின் ஆயிரமாயிரம் கட்டளைகளைப் புறக்கணித்தவர்கள் இஸ்லாத்தை இந்தநாட்டில் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக எப்படி இருந்திருக்க முடியும்?
இஸ்லாத்தை விட்டு வெகுதூரம் விலகியிருந்த முஸ்லிம் மன்னர்கள் வாளால் மிரட்டி இந்தியமக்களை முஸ்லிம்களாக்கினார்கள் என்று நியாய உணர்வுடைய எவருமே கூறத் துணிய மாட்டார்.
நவீன ஆயுதங்களுடன் இந்த நாட்டை அடிமைப்படுத்திய வௌ்ளையர்களை 200 ஆண்டுகளில்நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ளனர்அதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற ஏராளமானபோராட்டங்கள் நடந்துள்ளன.
ஆனால் முஸ்லிம் மன்னர்கள் கத்திஅரிவாள்வாள்கேடயம் போன்ற சாதாரண ஆயுதங்கள்பயன்படுத்தப்பட்ட காலத்தில் படையினரின் எண்ணிக்கையே வெற்றி தோல்வியைத்தீர்மானிக்கின்ற காலத்தில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர்முஸ்லிம் மன்னர்கள் மதமாற்றம்செய்வதில் ஈடுபட்டிருந்தால் வாள் முனையில் மிரட்டியிருந்தால் ஒரு சதவிகிதத்திற்கும்குறைவாக இருந்த அவர்களை இந்த நாட்டு மக்கள் வெறும் கையாலேயே அடித்துவிரட்டியிருப்பார்கள்முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது அவர்கள்மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.
ஆயினும் ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும்மோசமான நடத்தையுடையமுஸ்லிம் மன்னர்களின் மோசமான ஆட்சிஅதற்கு முன் நடந்த படு மோசமான இந்துமன்னர்களின் ஆட்சிகளை விட சிறப்பானதாக இருந்ததுஇல்லையென்றால்மகச் சிறு படையுடன்வந்தவர்களை இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் வரை சகித்துக் கொண்டிருக்க முடியாது.
படு மோசமான ஆட்சியாளர்களைக் கண்டு வெறுப்புற்றிருந்த மக்களுக்கு முகலாயர்களின் ஆட்சிசிறப்பானதாகத் தென்பட்டதாலேயே அவர்களை ஆளவிட்டார்கள்.
இந்து மன்னர்கள் நடத்திய போர்களை இந்துமதம் தான் தூண்டிவிட்டது என எப்படிக் கூறமுடியாதோ அது போலவே முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களை எல்லாம் இஸ்லாம் தூண்டிவிட்டதுஎன்று கூற முடியாது.
சுருங்கச் சொல்வதென்றால் வாள்முனையில் எந்த மதத்தையும் பரப்ப முடியாதுபரப்ப முடியும்என்றாலும் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நிச்சயமாக யாரையும் வற்புறுத்திமதமாற்றம் செய்ததில்லைஅப்படியே செய்திருந்தார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும் அதற்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லைஏனெனில் திருக்குர்ஆனில்கூறப்பட்டவையும்நபிகள் நாயகம் (ஸல்காட்டிய வழியும் தான் இஸ்லாம்முஸ்லிம் பெயர்தாங்கிகளின் தவறான செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது.
எனவே நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் ஏராளமான யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்களேஅவர்களும்நாடு பிடித்துள்ளார்களேஇதற்கு என்ன கூறுகிறீர்கள்என்ற அடிப்படையான விஷயத்துக்குவருவோம்.
அது பற்றியே நாம் வரிவாக விளக்க வேண்டியுள்ளதுநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் சந்தித்தபோர்க்களங்கள் எந்த அடிப்படையிலானவைஎன்பதை விரிவாகக் காண்போம்.
நபிகள் நாயகம் அவர்களின் போர்கள் நாடு பிடிப்பதற்காகவா?
நபி (ஸல்அவர்களும்அவர்களின் முன்னூறுக்கும் சற்று அதிகமான தோழர்களும்மக்காவின்எதிரிகளுடன் பத்ர் எனுமிடத்தில் போர் புரிந்தனர்ஆயிரம் பேர் கொண்ட எதிரிகளின் படை இந்தமுதல் போரிலேயே படுதோல்வி கண்டு ஓடலாயிற்றுநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மாபெரும்வெற்றி பெற்றனர்அனைவரும் அறிந்து வைத்துள்ள வரலாற்று நிகழ்ச்சி இது.
நாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும்.
விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும்மேலும் முன்னேறி எதிரிகளின்தலைநகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும்அந்த ஒரு போரிலேயேமக்கா அவர்களின் கைவசமாக ஆகிவிடக் கூடிய அருமையான சூழ்நிலை இருந்தது.வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அது தான்.
பத்ர் எல்லையைத் தாண்டி அவர்கள் ஓரடியும் எடுத்து வைக்கவில்லைநாடு பிடிப்பதுஅவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?
உம்ரா வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் ஆயிரத்துக்கும்அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர்ஹுதைபியா எனும் இடம்வரை வந்து விட்டனர்மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர்நபியவர்களுக்குஆத்திரமூட்டும் அளவுக்குப் பிடிவாதம் பிடித்தனர்நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் நாடுபிடிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம்அவர்களின் வசமாகியிருக்கும்.
ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதானஉடன்படிக்கை செய்து கொண்டனர்மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயேதிரும்பி வந்தனர்இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறு தான்.  நாடு பிடிக்கும் எண்ணம்நபியவர்களுக்கு இருந்ததில்லைஎன்பதற்கு இவையே போதுமாகும்.
கொள்ளையிடுவதற்கா?
எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காகப் போர் நடத்தினார்களாஎன்றால் நிச்சயமாகஇல்லை. ”தாயிப்” நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதினாவை விட வளமானதாகஇருந்ததில்லைபொருளாதாரம் போர் நோக்கமாக இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன்அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.
 நம்பிக்கை கொண்டோரேநீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்சென்றால் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப்பறிப்பதற்காக "நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்அல்லாஹ் விடம்ஏராளமான செல்வங்கள் உள்ளனஇதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள்அல்லாஹ்உங்களுக்கு அருள் புரிந்தான்எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்நீங்கள் செய்வதை அல்லாஹ்நன்கறிந்தவனாக இருக்கிறான்.
 (அல்குர்ஆன் 4:94)
கொள்ளையிடுவது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவானகட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.
பழிவாங்குவதற்கா?
எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச்சந்தித்தார்களாநிச்சயமாக அதுவுமில்லை.
மக்காவில் வெற்றி வீரராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழிவாங்குவதற்குரிய அத்தனைகாரணங்களும் இருந்தனசக்தியும் இருந்ததுநபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கேநின்றார்கள்அவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்கள்அவர்கள் நாடு துறக்கக்காரணமானவர்கள்அவர்களின் தோழர்களைச் சுடுமணலில் கிடத்தியவர்கள்தூக்கில்தொங்கவிட்டவர்கள்மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்கள்,இப்படிப் பலரும் அங்கே நின்றார்கள்தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய்நின்றார்கள்.
அனைவருக்குமே பொதுமன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனைபழிவாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தனஆனாலும் எவரையும் பழிவாங்கவில்லைஇந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்கு போதுமான சான்றாகும்.
நம்பிக்கை கொண்டோரேஅல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுநீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்ஒருசமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்கஉங்களைத் தூண்ட வேண்டாம்நீதியாகநடங்கள்அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானதுஅல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்நீங்கள்செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 5:8)
என்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்.
ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்ட நபி (ஸல்அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும்சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல்கள் : புகாரிமுஸ்லிம்
போர்க்களத்தில் போரிடுங்கள்வரம்பு மீறாதீர்கள்சிறுவர்களையும் மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : முஸ்லிம்.
போர்க்களத்தில் எந்தத் தர்மமும் பார்க்க வேண்டியதில்லை என்பது உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபாக இருந்தும் இங்கேயும் புது நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு நபிகள்நாயகம் (ஸல்அவர்களின் உள்ளம் விசாலமானதாக இருந்ததுஎனவே பழி வாங்குதல் என்பதுஅவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாது.
மதமாற்றம் செய்வதற்காகவா?
மற்றவர்களை மதமாற்றம் செய்வதற்காக போர் நடத்தினார்களாஎன்றால் நிச்சயமாக அதுவும்இல்லை.
இம்மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லைவழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகஉள்ளது.
அல்குர்ஆன் 2 : 256)
அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாய மதமாற்றத்தை தடை செய்கின்றது.வெற்றியடைந்த பின் அம்மக்களிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வார்கள்விரும்பியவர்கள்ஏற்றுக் கொள்வார்கள்விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு தம் மதத்திலேயேநீடிப்பார்கள். (ஜிஸ்யா வரி பற்றி பின்னர் விளக்கப்பட்டுள்ளது.)
இணை வைப்பவர்களில் (அதாவது மாற்று மதத்தவர்களில்உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராகபின்னர் அவருக்கு பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராகஎனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர்.
(அல்குர்ஆன் 9:6)
மாற்று மதத்தவர்களிடம் நபியவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தது என்பதற்கு இந்தவசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.
எதற்காகப் போர் செய்தனர்?
மேற்கண்ட காரணங்களுக்காகப் போர் நடக்கவில்லை என்றால் அவர்களே போர் நடத்தியதாகச்சொல்லப்படுவது பொய்யாஅதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவாஎன்ற கேள்விக்குவருவோம்.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை என்று நாம்சொல்லவில்லைகமண்டலமும் ஜெப மாலையும் வைத்துக் கொண்டு சன்னியாசியாகவாழ்ந்தார்கள் என்றும் நாம் சொல்வில்லை.
தாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள்மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள்எத்தனைஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாகமதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள்இதையெல்லாம் நாம்மறுக்கவில்லைஅவர்கள் படை நடத்திச் சென்றதற்கு நியாயமான சில காரணங்கள் இருந்தன.
முதலாவது காரணம்
நபிகள் நாயகம் (ஸல்அவர்களும்அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்துஅநியாயமாக விரட்டப்பட்டு மதீனா வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருந்தனர்அப்போது மக்காவைவிட்டு அவர்களை விரட்டியவர்கள்அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் பூண்டோடுகருவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர்அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்தசமுதாயமும் அழிந்துவிடக் கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்காக நபி (ஸல்போர்களைச் சந்தித்துள்ளனர்எல்லாப் போர்களுக்கும் இதுவேகாரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.
நியாய உணர்வுடைய எவரும் இதில் குறை காண மாட்டார்கள்இந்தக் காரணத்துக்காகநடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.
உஹது போர் என்பது பிரசித்தி பெற்ற போராகும்நபிகள் நாயகம் (ஸல்அவர்கள்தலைமையேற்று நடத்திய இந்தப் போர் உஹத் எனும் மலையடிவாரத்தில் நடந்ததால் உஹதுப்போர் என்று இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.
போர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளதுமக்காவிலிருந்து ஏறத்தாழமுன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளதுஅதாவது மக்காவாசிகளான எதிரிகள்சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்து விட்டனர்நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.
முன்னூறு மைல்கள் கடந்து வந்தவர்கள் வம்புச் சண்டைக்கு வந்தவர்களாஐந்து மைல் தூரம்சென்று எதிரிகளைச் சந்தித்த நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களாமுன்னூறுமைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள்செய்திருக்க வேண்டும்எவ்வளவு நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும்இந்த நிலையிலும்ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள் தமது குடிமக்கள் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள்இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் பங்கெடுத்த இரண்டாவது போரின் நிலைஇதுவென்றால்,அவர்கள் சந்தித்த முதல் போரின் நிலையும் இத்தகையது தான்.
பத்ருப் போர் என்று அறியப்படும் இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றதுஇந்தஇடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும்மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிகதூரத்திலும் அமைந்துள்ளது.
வலியப் போர் செய்ய நபியவர்கள் சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர்நடந்திருக்க வேண்டும்மதீனாவுக்கு அருகிலேயே இப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப்போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.
தங்களின் ஒப்பந்தங்களை முறித்துவிட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்)தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?)
அல்குர்ஆன் 9:13)
போரை முதலில் துவக்கியவர்களே அவர்கள் தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றதுசிலபோர்கள் இந்தக் காரணத்துக்காகவே நடத்தப்பட்டனஇதையும் குறை கூற முடியாது.
இரண்டாவது காரணம்
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன்ஒரு ஆட்சியை நிறுவினார்கள்மதீனாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின்எல்லைகளாக இருந்தனசிறியதோபெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கெனஇறையான்மை உண்டுஅதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும்ஒரு நாட்டுக்குள் அன்னியநாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும்இதுஇன்றைக்கு மட்டுமல்லநபிகள் நாயகம் (ஸல்காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாகஇருந்தது.
இதனால் தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள்மக்காவாசிகளின் ஆட்சேபனைக்கிணங்க திரும்பி வந்தார்கள்.
ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வபோது குறுக்கிட்டுக்கொண்டிருந்தனர்பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்றுவிட்டு மக்கா வியாபாரிகள்திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்துகொண்டிருந்தார்கள்இப்படி அனுமதியின்றி அத்துமீறுபவர்களை வழிமறிக்கவும் அவர்களின்பொருட்களைப் பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையைமேற்கொண்டார்கள்இதனால் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளனபத்ருப்போர்க்களத்துக்குச் சற்று முன்னால் மக்காவின் தலைவரான அபூசுப்யானின் வணிகக் கூட்டம்வழிமறிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையானஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும்தத்தமது நாடுகளில் இத்தகைய அத்து மீறல்களைஎந்த ஆட்சியாளரும் அனுமதிப்பார்களா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மூன்றாவது காரணம்
நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் தாயகம் மக்காவாகும்அவர்களுடன் தியாகப் பயணம்மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும்சொந்த நாட்டிலிருந்துவிரட்டியடிக்கப்பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.
நபிகள் நாயகத்தை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதேஅளவுக்கு நபிகள் நாயகத்துக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளதுநபிகள்நாயகம் (ஸல்அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும்அவர்களின்உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவந்தனர்ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சிமக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.
பெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர்இழந்ததை – சொந்த நாட்டைமீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றிகொண்டனர்இழந்ததை மீட்பதற்காக நடத்தப்படும் போர்களும் நியாயமான போர்களே.
தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு (அதற்கு)அனுமதியளிக்கப்படுகின்றதுமேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான்அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து எங்கள் இறைவன் அல்லாஹ் என்று கூறியதற்காக அநியாயமாக வெளியேற்றப்பட்டனர்.
(அல்குர்ஆன் 22 : 39)
திருக்குர்ஆனின் இவ்வசனம் அநீதியிழைக்கப்பட்டவர்கள் அடங்கிப் போகாமல் எதிர்த்துப்போரிடுமாறு கட்டளையிடுகிறதுஇழந்ததை மீட்பதற்காகக் கூட போர் செய்யக் கூடாது என்றுயாரும் கூற மாட்டார்கள்.
தங்கள் தாயகத்தை மீட்பதற்காகப் போராடும் பலஸ்தீனியர்களை இந்தியா உள்ளிட்ட அனேகநாடுகள் ஆதரிப்பதற்கு எவ்வளவு நியாயங்கள் இருக்கின்றனவோ அந்த அளவு நியாயங்கள் நபிகள்நாயகம் (ஸல்அவர்களிடமும் இருந்ததுஇதையும் நியாய உணர்வு படைத்த எவரும் குறைசொல்ல மாட்டார்கள்.
நான்காவது காரணம்
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மதீனாவில் நல்லாட்சி ஒன்றை நிறுவியது மக்காவின்தலைவர்களுக்கு எப்படிச் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்ததோ அது போலவே மதீனாவைச்சுற்றிலும் வாழ்ந்த யூதர்களுக்கும் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் வருகைக்கு முன் யூதர்கள் மதீனாவைத் தங்களின் ஆதிக்கத்தில்வைத்திருந்தனர்நபிகள் நாயகத்தின் வருகைக்குப் பின் மதீனத்து மக்களில் மிகப் பெரும்பாலோர்(மதீனத்து யூதர்கள் உட்படநபியின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள்.
இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்த யூதர்கள் சதிவேலைகளில் ஈடுபடலாயினர்சில்லரைவிஷமங்களையும் செய்து வந்தனர்மக்காவுக்குத் தகவல் அனுப்பும் ஏஜென்டுகளாகச்செயல்பட்டனர்இஸ்லாத்தை அறிந்து கொள்ள என்று கூறி சில நபித்தோழர்களை அழைத்துச்சென்று கோரமாகக் கொலை செய்தனர்நபிகள் நாயகத்துடன் பல தடவை ஒப்பந்தம் செய்துவிட்டுஒவ்வொரு தடவையும் அதை மீறி வந்தனர்இத்தகைய நம்பிக்கைத் துரோகிகளுடனும்நபியவர்கள் போர் செய்துள்ளனர்யூதர்களுடன் நடைபெற்ற போர்களில் பெரும்பாலானவை இந்தகாரணத்துக்காக நிகழ்த்தப்ட்டவையே...
இதுவரை கூறிய நான்கு காரணங்களுக்காகப் போர் செய்வதை நேர்மையான ஆட்சியாளர்கள் என்றுமாற்றார்களால் போற்றப்படும் தலைவர்கள் கூட தவிர்த்ததில்லைநாம் வாழும் நாட்டுக்குஇத்தகைய நிலை ஏற்பட்டால் போரில் ஈடுபடுவதையே நாம் வரவேற்போம்இவையல்லாதமற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.
ஐந்தாவது காரணம்
ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் இன்னொரு நாடு தலையிடக் கூடாது என்பதை உலகம் ஒருகொள்கையாகக் கொண்டுள்ளதுஉலகில் அமைதி நிலவிட இந்தக் கொள்கை அவசியமானது தான்.
ஆனாலும் இதற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும்ஒரு கட்டத்தில் இன்னொரு நாட்டின்விவகாரத்திலும் தலையிடுவது தவறில்லை என்பதையும் உலகம் ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஒரு மனிதன் தன் மனைவியை ஏசுகிறான்அடுத்த வீட்டு விவகாரம் என்று இருந்து விடலாம்.அவளைப் பட்டினி போடுகிறான்அப்போது கூட அடுத்த வீட்டு விவகாரம் என்று விட்டு விடலாம்.கூர்மையான கத்தியால் அவளைக் குத்திக் கொலை செய்யப் போகிறான்அப்போதும் அடுத்த வீட்டுவிவகாரம் என்று பேசாமல் எவரும் இருக்க முடியாதுஅப்படி இருந்தால் அவன் மனிதனாகவேஇருக்க முடியாதுஅடுத்த வீட்டு விவகாரத்திற்கு நாம் வைத்திருக்கும் எல்லை அடுத்த நாட்டுக்கும்பொருந்தக் கூடியது தான்.
ஒரு கொடுங்கோலன் தனது குடிமக்களைக் கொடுமைப்படுத்துகிறான்தாங்க முடியாத அளவுக்குக்கொடுமை அதிகரிக்கின்றதுஅவனை எதிர்ப்பதற்கான துணிவோபலமோ அம்மக்களுக்கு இல்லை.அந்த நாட்டு மக்களே இந்தக் கொடுங்கோலன் தொலைய மாட்டானாஇந்த நாட்டை விட்டு நாம்வெளியேறி விடுவோமாஎன்று ஏங்குகின்றனர்இந்த நிலையில் அந்த நாட்டின் மீதுபடையெடுத்துச் சென்று அம்மக்களை மீட்பதை இஸ்லாம் அனுமதிக்கின்றது.
பலவீனமான ஆண்களும்பெண்களும்சிறுவர்களும் எங்கள் இறைவாஇந்த அக்கிரமக்கார ஊரிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாகஉன் புறத்திலிருந்து ஒரு புறத்திலிருந்து ஒரு உதவியாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாகஎன்று கூறிக் கொண்டுள்ள நிலையில் அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன வந்துவிட்டது.
அல்குர்ஆன் 4 : 75)
யாராவது உதவிக்கு வர மாட்டார்களா என்று ஒரு நாட்டு மக்களே எதிர்பார்க்கும் நிலையில் அந்தஅக்கிரம ஆட்சியாளருக்கு எதிராகப் போரிடுமாறு இந்த வசனம் கட்டளையிடுகின்றது.
மக்களைச் சுரண்டிகொள்ளையடித்துநிற்பதற்கு வரிநடப்பதற்கு வரிபேசுவதற்கு வரிஎழுதவரிதிருமண வரிசாவு வரிவியாபார வரிவிவசாய வரிவாகனத்துக்கு வரிகுழந்தைபிறப்பதற்கு வரி என்று தாங்க முடியாத வரிகளை மக்கள் மீது சுமத்திஇப்படிப் பெறப்பட்டபணத்தை மக்களுக்குச் செலவிடாமல் தங்கத்தால் செருப்பு முதல் சிம்மாசனம் வரை தங்களுக்குச்செய்து கொண்டுஅந்தப் புரத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆட்சி புரிந்த நாடுகள்மீதும் நபியவர்கள் படையெடுத்துள்ளனர்அவர்களின் நான்கு கலீபாக்களும் போர் செய்துள்ளனர்.அங்குள்ள மக்களே அதை ஆதரிக்கவும் செய்தனர்.
இதையும் நியாய உணர்வுடைய எவரும் குறை சொல்ல மாட்டார்பங்களாதேஷ் என்றுஅறியப்படும் முன்னால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள்ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்கள்.அங்குள்ள வளங்கள் மேற்குப் பகுதியின் நலனுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளனஇதை எதிர்த்துமுஜீபுர் ரஹ்மான் என்பவரின் தலைமையில் போராட்டம் நடந்ததுஅவரால் இந்தியாவின்உதவியும் கோரப்பட்டது.
அன்னிய நாடு என்று பாராமல் அம்மக்களைக் காப்பாற்ற இந்தியா தனது இராணுவத்தைஅனுப்பியதுபங்களாதேஷ் என்ற தனிநாட்டை அம்மக்களுக்காக உருவாக்கியது.
விடுதைலைப் புலிகள் இன்றைக்கு இந்தியாவிற்கு வேண்டாதவர்களாக ஆகிவிட்டாலும்அவர்கள்வேண்டப்பட்டவர்களாக இருந்த காலத்தில் அவர்களுக்குப் பல வகையிலும் உதவிகள்வழங்கப்பட்டனஅந்த நாட்டுத் தமிழர்களை இலங்கை அரசு பட்டினி போட்ட போது இந்தியாவின்விமானங்கள் அந்நாட்டின் மீது பறந்து சென்று உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தன.
மாலத்தீவு என்ற அன்னிய நாடு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்திய அதிரடிப்படை சென்றுஅதை மீட்டுக் கொடுத்தது.
உலகமகா பயங்கரவாத நாடான அமெரிக்கா ஈராக் மீதும்அடிக்கடி அநியாயத் தாக்குதல் நடத்திவருகிறதுஅமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மக்கள் மீதுமிருகவெறியாட்டம் நடத்தி வருகிறதுஇவற்றுக்கெல்லாம் எந்த நியாயமும் இல்லை.அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பதற்கும் வட்டி வாங்குவதற்கும் உலக நாடுகள் மௌனமாக இதைஅங்கீகரிக்கின்றனஇந்த அக்கிரமத்தை ஆதரிப்போர் நியாயமான காரணங்களுக்காக நபிகள் நாயகம்அன்னிய நாட்டில் தலையிட்டதைக் குறை கூறுவது தான் வேடிக்கையானது.
அனைவராலும் நியாயமானவை என இன்றளவும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்றகாரணங்களுக்காகவே நபிகள் நாயகமும் போர் செய்துள்ளனர்.
நியாயமான காரணங்களுக்காக போர் நடத்தப்பட்டு நபிகள் நாயகம் வெற்றி பெற்ற பின் அவர்கள்நடந்து கொண்ட முறையை ஆராய்ந்தால் உண்மையை உணர்வார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் ஒரு ஆன்மீகவாதியாக இருப்பதால் அவர்கள் போர்க்களத்தில்பங்கெடுத்ததை ஏற்க இயல்பாகவே சிலருக்குத் தயக்கம் உள்ளது.
போர் என்பது என்னஎன்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே இவ்வாறுதயக்கம் காட்டுகின்றனர்.
பொதுவான தர்மங்களும் போர் தர்மங்களும் வெவ்வேறானவை என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
கொலை செய்வது பொதுவாக அனைவராலும் கண்டிக்கப்படும் ஒரு கொடுமையாகும்பிறர்பொருளை அபகரிப்பதும்சூரையாடுவதும் கூட கொடியவர்களின் செயலாகும்.
பொதுவாகஇந்தக் காரியங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் போர் என்று வந்து விடுமானால்இதையெல்லாம் செய்து தான் ஆக வேண்டும்இவ்வாறு செய்வது தான் போர் தர்மம்.
பொதுவாக வெறுக்கப்படும் சில செயல்கள் போர்க்களத்தில் விரும்பத்தக்கதாக அமைந்துவிடுகின்றன.
இராமன்கண்ணன்அர்ஜுனன்கர்ணன்பஞ்சபாண்டவர்கள்கவுரவர்கள் போன்ற புராணப்பாத்திரங்களாக இடம் பெறுவோர்பல கொலைகளைச் செய்துள்ளனர்சாதாரண சமயத்தில்இவற்றைச் செய்திருந்தால் அவர்கள் வெறுக்கப்பட்டிருப்பார்கள்போர்க்களத்தில் செய்ததால்அவர்கள் வீரர்கள் என போற்றப்படுகின்றனர்.
தமிழகத்தின் மூவேந்தர்களும் கூட பல கொலைகளைச் செய்தவர்கள் தான்போர்க்களத்தில்கொலைகள் செய்த காரணத்தினால் அவர்கள் வீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.
போர்க்களத்தில் மட்டுமின்றிஒரு நாட்டிலேயே நடக்கும் விடுதலைப் போராட்டத்திலும் இதுபோன்ற கொலைகள் நடந்துள்ளனஅதைச் செய்தவர்கள் இன்றளவும் தியாகிகளாகமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் முதல்தேசிய இராணுவம் அமைத்த நேதாஜிவரை அனைவரும் இன்று மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர்கொலைகாரர்களாகக்கருதப்படுவதில்லை.
போருக்கு என தனி தர்மங்கள் உள்ளன என்பதற்கே இந்த விளக்கங்கள்.
உலகத்தில் வெற்றி பெற்ற எந்த ஆட்சியாளரும் போரில் எது வேண்டுமானாலும் செய்யலாம்என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தனர்ஆனால் நபிகள் நாயகம் (ஸல்போரிலும் கூடபுதுநெறி புகுத்தினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் மக்காவில் தமது பிரச்சாரத்தைத் துவக்கிய போதுதுன்புறுத்தப்பட்டு மக்காவை விட்டே விரட்டப்பட்டார்கள்மதீனா சென்று அங்கே ஒருஆட்சியையும் நிறுவினார்கள்.  பல்வேறு போர்க்களங்களையும் மக்காவாசிகளால் அவர்கள்சந்தித்தார்கள்இறுதியாக மக்காவில் அவர்கள் வெற்றி வீரராக பிரவேசித்தார்கள்அவர்களைஊரை விட்டே விரட்டியவர்கள்அவர்களின் தோழர்கள் பலரைப் படுகொலை செய்தவர்கள்,சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் என்னவாகுமோ என்று பீதியடைந்திருந்தார்கள்.
மக்கத்துக் எதிரிகளைக் கொல்வதற்கு ஆயிரம் நியாயங்கள் இருந்த இந்த நேரத்தில் அவர்களைக்கொன்று குவித்திருக்க முடியும்அவர்களின் கடந்த கால கொடுமைகளுக்குப் பழி வாங்கியிருக்கமுடியும்.
சக்தி மிக்க ஆட்சியாளராகவும் தனது கட்டளைக்குக் காத்திருக்கும் தோழர்களைக் கொண்டசமுதாயத்தின் தலைவராகவும் மக்காவில் பிரவேசித்த நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கத்தியைஎடுக்கவில்லைஇரத்தமும் சிந்தச் செய்யவில்லைஎவரையும் பழிவாங்கவில்லை.அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.
உலக வரலாற்றில் சக்திமிக்க ஒரு தலைவர் ஒரு உயிரைக் கூடப் பறிக்காதுஒரு நாட்டை வெற்றிகொண்டது இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.
எதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கி, விளை நிலங்களுக்குத் தீ வைத்து,தோற்றவன் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்துதோற்றவனின் மூக்கை அறுத்துகோரப்படுத்திதோல்வி கண்டவனின் மனைவியின் கூந்தலை வெட்டி அவமதித்துபோரில் பங்குகொண்டவன்பங்கு கொள்ளாதவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டிக் குவித்துஇன்னபிற அக்கிரமங்கள் செய்தவர்களையெல்லாம் மாவீரர்களாகவும்தெய்வாம்சம்பொருந்தியவர்களாகவும் போற்றுகின்றவர்கள் இஸ்லாமியப் போர் முறையைக் குறை கூறுவதுவேடிக்கையானதே.
ஆன்லை பிஜே

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை