Posts

முஸ்லிமல்லாதவர்களைக் கொள்ளச் சொல்கிறதா? இஸ்லாம்

முஸ்லிமல்லாதவர்களைக்   கொல்லச்   சொல்லும்   இஸ்லாம் இஸ்லாம்   மார்க்கம்   முஸ்லிமல்லாதவர்களைக்   கொல்லுமாறு   கட்டளையிட்டுள்ளது .  காபிர்களைக் கண்ட   இடத்தில்   வெட்டிக்   கொல்லுமாறு   திருக்குர்ஆனிலேயே   கூறப்பட்டுள்ளது என்பதும்  இஸ்லாத்திற்கெதிரான   விமர்சனங்களில்   ஒன்றாகும் .  திருக்குர்ஆனில்  2:191  வசனத்தை இதற்கு   ஆதாரமாக   காட்டுகின்றனர் .  ஜிஹாத்  ( புனிதப்   போர் )  செய்யுமாறு   திருக்குர்ஆனில்   உள்ள கட்டளைகளையும்   எடுத்துக்   காட்டி   இவ்வாறு   விமர்சனம்   செய்கின்றனர் . இது   குறித்தும்   விரிவாக   நாம்   விளக்க   வேண்டியுள்ளது .   முஸ்லிமல்லாதவர்களைக்     கண்ட   இடத்தில் வெட்டுங்கள்   என்று   திருக்குர்ஆன்   கூறுவதாகச்   சொல்வதை   முதலில்   பார்ப்போம் .  ( களத்தில் )  சந்திக்கும்   போது   அவர்களைக்   கொல்லுங்கள் !  அவர்கள்   உங்களை   வெளியேற்றியவாறு நீங்களும்   அவர்களை   வெளியேற்றுங்கள் !  கலகம் ,  கொலையை   விடக்   கடுமையானது .  மஸ்ஜிதுல் ஹராமில்   அவர்கள்   உங்களுடன்   போருக்கு   வராத   வரை   அங்கே   அவர்களுடன்   போர்   செய்யாதீர்கள் ! அவர்கள்   உங்களுடன்   போ

எம்மதமும் சம்மதமா?

எம்மதமும்  சம்மதமா ? இஸ்லாத்தைத்   தவிர   மற்ற   மதங்களைப்   பின்பற்றக்   கூடியவர்கள்   எம்மதமும்   சம்மதமே   என்று கருதுகின்றனர் .  இஸ்லாமியர்களின்   வழிபாட்டு   முறைகளை   மற்ற   சமயத்தவர்கள்   கடைப்பிடிக்கத் தயாராக   உள்ளனர் .  ஆனால்   முஸ்லிம்கள்   மற்ற   மதத்தினர்   வழிபாட்டு   முறைகளைக்   கடைப்பிடிக்க மறுக்கின்றனர் .   என்பதும்   இஸ்லாம்   குறித்து   மாற்று   மத   நண்பர்கள்   செய்யும்   விமர்சனமாகும் . தங்கள்   விமர்சனத்திற்கு   ஆதரவாகப்   பல   சான்றுகளை   முன்வைக்கின்றனர் . முஸ்லிம்கள்   தங்கள்   பண்டிகையின்   போது   வழங்கும்   உணவுப்   பொருட்களை முஸ்லிமல்லாதவர்கள்   மனநிறைவுடன்   பெற்றுக்   கொள்கின்றனர் .  ஆனால்   முஸ்லிமல்லாத மக்கள்   தங்கள்   பண்டிகைகளின்   போது   வழங்கும்   உணவுகளை   முஸ்லிம்கள்   உண்பதில்லை . முஸ்லிம்கள்   தாங்கள்   அறுக்கும்   மாமிசத்தை   மட்டும்   தான்   உண்ணுகிறார்கள் . முஸ்லிமல்லாதவர்கள்   அறுக்கும்   மாமிச   உணவுகளை   முஸ்லிம்கள்   சாப்பிடுவதில்லை . முஸ்லிம்களின்   வழிபாட்டுத்   தலங்களில்   முஸ்லிமல்லாதவர்கள்   வழிபாடு   நடத்துகின்றனர் . ஆனால

நபிகளாரை புகழ்வோம் (வீடியோ)

Image
நபிகளாரை புகழ்வோம் (வீடியோ)

மவ்லீதும் மீலாதும் (வீடியோ)

Image
மவ்லீதும் மீலாதும் (வீடியோ)

‘‘முஸ்லிம்கள் நல்லவர்கள். அவர்களை நம்பலாம்’’

Image
‘‘முஸ்லிம்கள் நல்லவர்கள். அவர்களை நம்பலாம்’’ 30 வருடங்கள் சவூதியில் வாழ்ந்து இஸ்லாத்தைத் தழுவிய ஜிப்ரீல் மாசன் கூறுகிறார் பிரித்தானியாவில் பிறந்து தற்போது சவூதியில் வசித்து வரும் ஜிப்ரீல் மாசன் என்பவர் தான் இஸ்லாத்தின்பால் கவரப்பட்டதன் சுவாரஷ்யங்களை சவூதி அரேபிய தொலைக்காட்சி ஒன்றுடன் பகிர்ந்துக்கொண்டார். ஷேக் யூசுப் எஸ்டெஸ்: அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய பெயரை தெரிந்து கொள்ளலாமா? ஜிப்ரீல் மாசன்: எனது பெயர் ஜிப்ரீல் மாசன். இஸ்லாத்தை ஏற்றதும் எரிக் மாசன் என்ற பெயரை ஜிப்ரீல் மாசன் என மாற்றிக் கொண்டேன் ஷேக் யூசுப் எஸ்டெஸ்:நீங்கள் பிரித்தானிய மொழி உச்சரிப்பினை கொண்டிருக்கிறீர்கள். எனினும் சில அரபு வார்த்தைகளை பேசுகிறீர்கள். அத்துடன் அரபுப் பெயரைக் கொண்டிருக்கிறீர்கள். இது எப்படி? ஜிப்ரீல் மாசன்: நன்று, நான் எனது இளமைக் காலத்தில் நைஜீரியாவில் வசித்தேன். எனது தாய் ஒரு இத்தாலிய கத்தோலிக்கர். தந்தை பிரித்தானிய புரொடொஸ்டண்ட். அவர்களுக்கு 4 குழந்தைகள். அக் குழந்தைகளில் நானும் ஒருவன்.நான் சிறுவனாக இருக்கும்போது எனது தந்தை பல வருடங்கள் நைஜீரியாவில் அரசியலில் ஈடுபட்டார். அப்போது நான் எமது பெற்றோருட

இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?

 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன? இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம ் 27ம் தேதி வெளியான 'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார். 'இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்' என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர் இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!

Image
ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..! நிச்சயமாக பாலைவனத்தில், தனிச்சிறப்பு வாய்ந்த தனக்கு ஒப்புமை அற்ற ஒட்டகமானது, பொதுவாக தாவர உண்ணி வகையைச்சேர்ந்த பாலூட்டி பிரிவைச்சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு. 250 லிருந்து 680 கிலோ எடை வரை வளரும் இவை, பொதுவாக 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன..! ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல்… உணவில்லாமல்… பாலைவனத்தில் பலநாள் வாழக்கூடியது, அதுவும் மாமூலாக செய்யக்கூடிய  அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே..!