முஸ்லிமல்லாதவர்களைக் கொள்ளச் சொல்கிறதா? இஸ்லாம்

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லும் இஸ்லாம்

இஸ்லாம் மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளதுகாபிர்களைக்கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது
என்பதும் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களில் ஒன்றாகும்திருக்குர்ஆனில் 2:191 வசனத்தைஇதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்ஜிஹாத் (புனிதப் போர்செய்யுமாறு திருக்குர்ஆனில் உள்ளகட்டளைகளையும் எடுத்துக் காட்டி இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர்.
இது குறித்தும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது. முஸ்லிமல்லாதவர்களைக்  கண்ட இடத்தில்வெட்டுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாகச் சொல்வதை முதலில் பார்ப்போம்.
 (களத்தில்சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்அவர்கள் உங்களை வெளியேற்றியவாறுநீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்கலகம்கொலையை விடக் கடுமையானதுமஸ்ஜிதுல்ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்!அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனைமறுப்போருக்குஇதுவே தண்டனை.

இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம்இரண்டாம் அத்தியாயத்தில் 191 வது வசனம்இது.
இவ்வசனத்தில் அவர்கள் என்று கூறப்பட்டுள்ளதுஎந்த மொழியில் அவர்கள் என்றுகூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்கவேண்டும்பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதாகுறிப்பிட்டஇனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதாகுறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைகுறிப்பிடுகின்றதாஇதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.
இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம்இந்தக்குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்வரம்புமீறாதீர்கள்வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 2:190)
உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்றுஇவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான்இறைவன்.
அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லைமாறாகஉங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதைஇதிலிருந்து அறியலாம்முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள்எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.
ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களைஎதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறுஎந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக்கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமாஅவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக்கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?
போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும்அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திருக்குர்ஆன் அவர்களுடன் போரிடுங்கள்ஆனால் வரம்பு மீறாதீர்கள்வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.
நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வதுநியாயம் தானாவிமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.
இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம்காபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.
அவர்கள் (ஏக இறைவனைமறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும்நீங்களும் (கொள்கையில்சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர்எனவே அவர்கள்அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்உற்ற நண்பர்களாகஆக்காதீர்கள்அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்அவர்களைக் கண்ட இடத்தில்கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும்உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிரஅல்லது உங்களைஎதிர்த்துப் போரிடுவதையோதமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம்வந்து விட்டோரைத் தவிரஅல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச்செய்திருப்பான்அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள்அவர்கள் உங்களைவிட்டு விலகி உங்களுடன் போர் செய்யாதுஉங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராகஅல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.
4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளதுஇதுவும்பொதுவான முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள்செய்யப்படுகிறதுஅதற்கு அடுத்த வசனமான 4:90 ல் உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம்சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்தநியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னஅவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில்ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்கபடை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூறமுடியுமா?
திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும்என்னென்னகாரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும்.
முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லைஇதைப் புரிந்து கொண்டால்இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்எப்படிநடந்தார்கள்எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறதுஇதையும் அறிந்து கொண்டால்இன்னும் தெளிவு கிடைக்கும்.
போர் என்று வந்துவிட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்எதிர்த்துப் போரிடுங்கள்!அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்என்ற கட்டளையில் என்ன தவறுஇருக்கிறது?
சமூகமாகவும்நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்துகொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றதுஎந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்றுதான் இஸ்லாம் போதிக்கின்றது.
மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுறு இஸ்லாம் கூறவேயில்லைநபிகள் நாயகம் (ஸல்)காலத்தில்அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.
எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது அர்த்தமற்றது.
நபிகள் நாயம் (ஸல்அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும்அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர்கிறித்தவர்கள் வாழ்ந்தனர்.முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர்அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக்கொல்லப்படவில்லை.
இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில்உறுதியாக இருக்கின்றதுமனிதர்கள் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது.மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாதுஎன்பதிலும்இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாதுஅதற்காகப் பிறமதத்தவர்களால் வழிபாடுசெய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டாகஉத்தரவிடுகிறது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்அவர்கள்அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும்அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம்பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின்இறைவனிடமே உள்ளதுஅவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
(அல்குர்ஆன் 6:108)
"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின்இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ்தடுத்திருக்காவிட்டால் மடங்களும்ஆலயங்களும்வழிபாட்டுத்தலங்களும்அல்லாஹ்வின் பெயர்அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்தனக்கு உதவி செய்வோருக்குஅல்லாஹ்வும் உதவுகிறான்அல்லாஹ் வலிமையுள்ளவன்மிகைத்தவன்.
(அல்குர்ஆன் 22:40)
தான தர்மங்கள் செய்வதில் உதவிகள் புரிவதில் நீதியை நிலைநாட்டுவதில் முஸ்லிம்முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப்பிறப்பிக்கிறது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும்உங்கள் வீடுகளிலிருந்து உங்களைவெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும்அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ்உங்களுக்குத் தடை செய்யவில்லைநீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
(அல்குர்ஆன் 60:8)
நம்பிக்கை கொண்டோரேஅல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுநீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்ஒருசமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்கஉங்களைத் தூண்ட வேண்டாம்நீதியாகநடங்கள்அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானதுஅல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்நீங்கள்செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 5:8)
முஸ்லிம்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன்கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்.
மாற்று மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறையைப் பின்வரும் செய்தியில் இருந்துஅறிந்து கொள்ளலாம்.
யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம் (ஸல்அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார்அதை நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் சாப்பிட்டார்கள்அவள் நபி (ஸல்)அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இது பற்றி விசாரித்தார்கள்உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன் என்று அவள் கூறினாள்அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபி (ஸல்கூறினார்கள்இவளைக் கொன்று விடட்டுமா? என நபித்தோழர்கள் கேட்டதற்கு கூடாது என நபி (ஸல்கூறினார்கள்.
(முஸ்லிம்அஹமது நூல்களில் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.)
இஸ்லாமியச் சட்டப்படி அவளைக் கொல்ல அனுமதியிருந்தும் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில்மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைத் தான் நபிகள் நாயகம் பயன்படுத்தினார்கள்..
மாற்றார்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்எப்படி நடந்துள்ளார்கள்என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஆன்லை பிஜே

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை