எம்மதமும் சம்மதமா?

எம்மதமும் சம்மதமா?
இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்களைப் பின்பற்றக் கூடியவர்கள் எம்மதமும் சம்மதமே என்றுகருதுகின்றனர்இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறைகளை மற்ற சமயத்தவர்கள் கடைப்பிடிக்கத்தயாராக உள்ளனர்ஆனால் முஸ்லிம்கள் மற்ற மதத்தினர் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கமறுக்கின்றனர். என்பதும் இஸ்லாம் குறித்து மாற்று மத நண்பர்கள் செய்யும் விமர்சனமாகும்.
தங்கள் விமர்சனத்திற்கு ஆதரவாகப் பல சான்றுகளை முன்வைக்கின்றனர்.
முஸ்லிம்கள் தங்கள் பண்டிகையின் போது வழங்கும் உணவுப் பொருட்களைமுஸ்லிமல்லாதவர்கள் மனநிறைவுடன் பெற்றுக் கொள்கின்றனர்ஆனால் முஸ்லிமல்லாதமக்கள் தங்கள் பண்டிகைகளின் போது வழங்கும் உணவுகளை முஸ்லிம்கள் உண்பதில்லை.
முஸ்லிம்கள் தாங்கள் அறுக்கும் மாமிசத்தை மட்டும் தான் உண்ணுகிறார்கள்.முஸ்லிமல்லாதவர்கள் அறுக்கும் மாமிச உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடுவதில்லை.
முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களில் முஸ்லிமல்லாதவர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.ஆனால் முஸ்லிம்கள்முஸ்லிமல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களில் வழிபடுவதில்லை.
முஸ்லிம்கள் ஆணோபெண்ணோ முஸ்லிமல்லாதவர்களிடம் திருமண உறவு வைத்துக் கொள்ளஅனுமதிப்பதில்லைமுஸ்லிமாக மாறினால் தான் திருமணம் செய்து தருவோம் என்று நிபந்தனைவிதிக்கின்றனர்.
இது போன்ற காரணங்களை எடுத்துக்காட்டி முஸ்லிம்கள் எம்மதமும் சம்மதம் என்ற தத்துவத்துக்குவேட்டு வைக்கின்றனர் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
எம்மதமும் சம்மதம் என்ற தத்துவம் சரிதானா என்பதை முதலில் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
உலகில் பல மதங்கள் இருக்கின்றனஒரு மதத்தின் கொள்கைக்கு முரணாக இன்னொரு மதத்தின்கொள்கைகள் உள்ளனகொள்கையில் மட்டுமின்றி சட்ட திட்டங்களிலும் எண்ணற்ற முரண்பாடுகள்உள்ளனஇவ்வாறு முரண்பாடுகள் இருப்பதால் தான் இத்தனை மதங்கள் காணப்படுகின்றன.முரண்பாடுகள் இல்லாவிட்டால்  ஒரே ஒரு மதம் தான் உலகில் இருக்கும்இந்த அடிப்படையைமுதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மதங்களுக்கிடையே முரண்பாடுகள் இருப்பதை நாம் மறுக்க முடியாத போது முரண்பட்ட இரண்டும்எனக்குச் சம்மதமே என்று கூறுவது பொருளற்றது என்பதை இரண்டாவதாக நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கடவுள் ஒரே ஒருவன் தான் என்பது ஒரு மதத்தின் கொள்கை.
பல்வேறு பணிகளைச் செய்வதற்குப் பல்வேறு கடவுளர்கள் உள்ளனர் என்பது இன்னொரு மதத்தின்கொள்கை.
இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒரு கொள்கையைத் தான் ஒருவர் நம்ப முடியும்முதல்கொள்கையை நம்பும் போது இரண்டாவது கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும்இரண்டாவதுகொள்கையை நம்பும் போது முதல் கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும்எனவே இரண்டும்எனக்குச் சம்மதம் தான் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
கடவுளுக்கு மனைவியர் உண்டுமக்கள் உண்டுகடவுளுக்குத் தூக்கம் உண்டுகடவுளுக்குஅறியாமை உண்டு என்று ஒரு மதம் கூறுகிறது.
இவற்றில் எதுவுமே கடவுளுக்கு இருக்கக் கூடாதுஇவை கடவுள் தன்மைக்கு எதிரானபலவீனங்கள் என இன்னொரு மதம் கூறுகிறது.
முரண்பட்ட இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் ஒருவர் நம்ப முடியுமே தவிரஇரண்டையும் நம்ப முடியாது.
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே புரோகிதர் வேண்டும் என்று ஒரு மதம் கூறுவதைநம்பினால் புரோகிதர் கூடாது என்று இன்னொரு மதம் கூறுவதை நம்ப முடியாது.
இந்துவாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உண்மையாகவேநம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் நம்பவில்லைநம்ப முடியாதுநம்பக்கூடாது என்பது தான் பொருள்.
முஸ்லிமாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பினால் அவர்வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பவில்லைநம்ப முடியாதுநம்பக் கூடாது என்பது அதன் பொருள்.
மதங்கள் மனிதனிடமிருந்து எளிதில் பிரிக்க முடியாத படி ஆழமாக வேரூன்றியுள்ளனகட்சிகள்,சங்கங்கள்இயங்கங்கள் போன்றவை அந்த அளவுக்கு மனிதனிடம் வேரூன்றவில்லை.
மதங்களை விட குறைவாகவே மனிதர்களை ஈர்க்கும் வகையில் கட்சிகள் உள்ளனஅந்தக்கட்சிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.
கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிப்பவர் அதே நேரத்தில் காங்கிரசிலோதிமுகஅதிமுககட்சிகளிலோ அங்கம் வகிக்க முடியாதுஎல்லாக் கொள்கைகளும் எனக்குச் சம்மதமே என்று கூறமுடியாதுஅவ்வாறு கூறினால் அவர் எந்தக் கொள்கையுமில்லாத சந்தர்ப்பவாதியாகவேகருதப்படுவார்.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகிப்பவர் புதிய தமிழகத்தில் அங்கம் வகிக்கமுடியாது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் கவனிக்கப்படும் கட்சிகளின் நிலையே இதுவென்றால்மனிதனது அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பினணந்திருக்கும் மதங்களில் முரண்பட்ட இரண்டைஎப்படி ஒரு நேரத்தில் நம்ப முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உளப்பூர்வமாக இல்லாமல் வாயளவில் மட்டுமே பேசப்படும் சித்தாந்தமாக எம்மதமும் சம்மதம்சித்தாந்தம் அமைந்திருப்பதால் இந்தச் சித்தாந்தத்தினால் எந்த நன்மையும் விளையவில்லை.இந்தப் போலிச் சித்தாந்தம் மதங்களிடையே நல்லிணக்கத்தை எற்படுத்த முடியவில்லை.
இஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியைச்சொல்கிறதுபோலித்தனமில்லாத வழியைக் கூறுகிறது.
எனக்கு என் மார்க்கம் தான் பெரிதுஉன் மார்க்கத்தை நீ பெரிதாக மதிப்பதில் நான் குறுக்கிடமாட்டேன் என்பது இஸ்லாத்தின் நிலை
உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு என்று திருக்குர்ஆன் கூறுகிறது(109:6)
அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும்அதேசமயத்தில் மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத்தின் படி நடப்பதைத் தடுக்கவோகுறுக்கிடவோகூடாது என்ற இந்தக் கோட்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லைபோலித்தனமும் இல்லை.நடைமுறையிலும் இது முழு அளவுக்குச் சாத்தியமாகும்.
இந்த நிலையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் போது மத நல்லிணக்கம் ஏற்பட்டு விடும்என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இனி தங்கள் விமர்சனத்தை நியாயப்படுத்துவதற்காக எம்மதமும் சம்மதம் எனக் கூறுவோர் எடுத்துவைக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.
முஸ்லிம்கள் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி அறுக்கப்பட்ட உயிரினங்களை மட்டுமே உண்ணவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளைஇந்தக் கட்டளையின் காரணமாகவே மற்றவர்கள்அறுப்பதை உண்ண மறுக்கின்றார்களே தவிர காழ்ப்புணர்வின் காரணமாக அல்ல.
கடவுளுக்கு எந்தத் தேவையுமில்லைகடவுளுக்காக எந்தப் பொருளையும் படைக்கக் கூடாதுஎன்பதும் இஸ்லாத்தின் கொள்கைஇந்தக் கொள்கையில் முஸ்லிம்கள் உறுதியுடன் இருக்கவேண்டும் என்பதற்காகத் தான் படையல் செய்யப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம் என்றுஇஸ்லாம் கட்டளையிடுகிறது.
கடவுளுக்கும் தேவையிருக்கிறது என்ற நம்பிக்கை வந்து விடக் கூடாது என்பதற்காகவும் பலகடவுள் கொள்கையை நம்பிவிடக் கூடாது என்பதற்காகவும் இஸ்லாம் இவ்வாறுகட்டளையிட்டுள்ளதுஇதற்குக் காழ்ப்புணர்வு காரணமில்லை.
முஸ்லிம்கள் எப்படி மற்றவர்கள் மத நம்பிக்கைக்குப் மதிப்பளிக்க வேண்டுமோ அது போல்மற்றவர்களும் முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையை மதித்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
இந்து மதத்தில் சைவ உணவு உட்கொள்ளக் கூடிய பிரிவைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிமுக்குநண்பராக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம்முஸ்லிம் நண்பர் தனது பெருநாள்பண்டிகையைக் கொண்டாடும் போது மாமிச உணவைச் சமைத்து வைத்து நண்பரை அழைத்தால்அவர் அவ்விருந்தை உண்ண மாட்டார்இந்து நண்பர் எதை விரும்ப மாட்டாரோ அந்த உணவைஇந்து நண்பருக்குக் கொடுக்காமல் அவர் விரும்புகிற உணவை வழங்குவது தான் அவரையும்அவரது மதத்தையும் மதிப்பதாக ஆகும்.
இந்து நண்பர் முஸ்லிம் நண்பரின் அசைவ உணவை மறுப்பதால் அவர் இஸ்லாத்தையும்முஸ்லிம்களையும் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணக் கூடாது.
இதே போல் முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களை முஸ்லிம்களுக்கு வழங்காமல்இருப்பதே இஸ்லாத்தை மதிப்பதற்கு அடையாளமாகும்இவ்வாறு இரு சாராரும் நடந்துகொள்வதன் மூலம் ஒரு மதத்தவர் மற்ற மதத்தினரை மதித்து நடக்குமாறு இஸ்லாம் கூறுவதைநடைமுறைப்படுத்துகிறார்கள்.
வழிபாட்டு முறையிலும் இது போன்ற பரந்த மனப்பான்மை ஏற்பட வேண்டும்ஒவ்வொருமதத்தினருக்கும் வழிபாட்டில் வேறுபாடுகள் உள்ளனஅவரவர் தத்தம் மதத்தின்படி வழிபாடுநடத்திக் கொள்வதை மற்றவர்கள் அங்கீகரிப்பது தான் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும்ஒருவரதுவழிபாட்டை மற்றவர் மீது திணித்தால் நல்லிணக்கத்திற்கு பதிலாக துவேஷம் தான் வளரும்.
ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பது தான்இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கைஇந்தக் கொள்கையில் உறுதியுடன் முஸ்லிம்கள்இருந்தால் அதைக் குறை கூறுவது நியாயமாகாது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர் கருணாநிதியின் படத்தை வீட்டில்மாட்டியிருப்பார்அவரது அண்ணா தி.மு. நண்பர் ஜெயலலிதாவின் படத்தையும் மாட்டுமாறுகூறினால் அவர் ஏற்க மாட்டார்இவ்வாறு கூறுவது சரி தான் என்று யாரும் ஏற்க மாட்டோம்.அநாகரீகம் என்போம்.
கடவுள் நம்பிக்கை இதை விட வலிமையானதாகும்எனவே ஒருவரது கடவுளை மற்றவரும் ஏற்கவேண்டும் என்று கருதுவது ஏற்க முடியாததாகும்.
இந்துக்களின் வழிபாட்டு முறையில் முஸ்லிம்களோமுஸ்லிம்களின் வழிபாட்டு முறையில்இந்துக்களோ குறுக்கிடாமல் இருப்பதும்தமது நம்பிக்கையை மற்றவர்கள் மீதுகட்டாயப்படுத்தாமல் இருப்பதும் தான் மத நல்லிணக்கத்திற்கு வழிகோலும்.
முஸ்லிம்கள் முஸ்லிம்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம்வலியுறுத்துவது உண்மை தான்இதில் மத நல்லிணக்த்துக்கு எந்த ஊறும் ஏற்படாது என்பதைமுதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
சாதிவிட்டு சாதிமதம் விட்டு மதம் திருமணம் செய்யும் போது தான் இரண்டுசமுதாயங்களுக்கிடையே கலவரங்கள் நடந்துள்ளனஇதன் காரணமாக பல உயிர்கள்பலியாகியுள்ளனபெரும்பாலான சாதி மதச் சண்டைகளில் பின்னனியில் பெண் விவகாரமேமுக்கிய காரணமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
எனவே இதைத் தவிர்ப்பதால் மனித குலத்திற்கு எந்தக் கேடும் ஏற்படப் போவதில்லை.
இனக்கவர்ச்சியினால் அணின் குறைபாடுகள் பெண்ணுக்கும் பெண்ணின் குறைபாடுகள் ஆணுக்கும்ஆரம்பத்தில் தெரியாதுமோகம் தனிந்த பின் யதார்த்த நிலையை இருவரும் உணர்வார்கள்.
வீட்டில் கடவுள் படங்களை மாட்டுவதிலிருந்து பெற்ற குழந்தைக்குப் பெயர் சூட்டுவதுவளர்ப்பது,சொத்துரிமை போன்ற பல விஷயங்களில் தகராறுகள் ஏற்படும்யாராவது ஒருவர் தனது மதத்தைவிட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது பிரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்படும்.
பின்னால் ஏற்படக் கூடிய இந்த நிலையைத் தான் இஸ்லாம் முன்கூட்டியே கூறுகிறது.முஸ்லிமான ஆணை மணக்க விரும்பும் பெண்ணோமுஸ்லிமான பெண்ணை மணக்க விரும்பும்ஆணோ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.முஸ்லிமல்லாத ஆணோபெண்ணோ இஸ்லாம் தமக்கு முக்கியமில்லை எனக் கருதி வேறுமதத்தவர்களை மணந்து கொண்டால் அதை யாரும் தடுக்கப் போவதில்லைஆரம்பத்திலேயேஇதைப் பற்றி தீர்க்கமான முடிவெடுத்துக் கொள்வது எதிர்காலத்தில் ஏற்படும் பிளவையும்பிணக்கையும் தவிர்க்கும் என்ற தூர நோக்கோடு தான் இஸ்லாம் இவ்வாறு கட்டளையிடுகிறது.
கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகர்கடவுள் நம்பிக்கையில்லாத குடும்பத்தில் சம்பந்தம்வைத்துக் கொள்ள விரும்பினால் அதைக் கொள்கைப் பிடிப்பு என்று எடுத்துக் கொள்கிறோம்.இஸ்லாம் என்பதும் அது போன்ற ஒரு கொள்கை தான்.
இஸ்லாம் இவ்வாறு வலியுறுத்தியதையும் முஸ்லிம்கள் இவ்வாறு நடந்து கொள்வதையும் இதுபோன்ற கொள்கைப் பிடிப்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.
ஒரு சாதியைச் சேர்ந்தவர் என்ன தான் முயன்றாலும் இன்னொரு சாதிக்காரராக முடியாதுஆனால்யாரும் இஸ்லாத்தின் கொள்கையை ஏற்று முஸ்லிமாக முடியும்.
இதைப் புரிந்து கொண்டால் மத நல்லிணக்கத்துக்கு இஸ்லாம் எந்த வகையிலும் ஊறுவிளைவிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் பிஜே

Comments

Anonymous said…
“Talk sense to a fool and he calls you foolish.”

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை