எது சுதந்திரம்

எது சுதந்திரம்


முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இஸ்லாத்தையும், இறைவனின்இறுதிவேதமான திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்படத்தை தமிழக அரசு தடை செய்யக்கோரி முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கைவிடுத்ததையடுத்து அப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தற்போது இஸ்லாமியர்களை நோக்கிஎழுப்பப்படும் முக்கியமான விமர்சனம்தான் கருத்து சுதந்திரத்திற்கு தடைபோடலாமா என்ற கேள்வியாகும்.

 ஒருவர் சுதந்திரமாக கருத்துச் சொல்லக் கூடாதா? எங்களது கருத்துரிமையைப்பறிக்கலாமா? ஒரு நடிகன் தான் விரும்பிய கருத்துக்களைச் சொல்லக்கூடாதா?இவைகள்தான் தற்போது இஸ்லாமிய சமூகத்தின் முன்பு விஸ்வரூபத்தைஎதிர்க்கின்றோம் என்ற பெயரில் இஸ்லாத்தை அழிக்கத்துடிப்பவர்கள் எழுப்பக்கூடியமுக்கியமான கேள்விகள்.

 இந்தக் கேள்விகளை கேட்பவர்களுக்கு அதைக் கேட்க அருகதை உள்ளதாஎன்பதையும், அவர்கள் இதுபோல தாங்கள் பாதிக்கப்படும் நிலையில் என்ன முடிவைஎடுத்தார்கள் என்பதையும் அலசி ஆராய்ந்தால் கருத்து சுதந்திரம் என்றால் என்னஎன்பது விளங்கிவிடும்.

கருத்து சுதந்திரம் என்றால் என்ன?:

 கருத்து சுதந்திரம் என்று சொல்கின்றார்களே! அந்த கருத்து சுதந்திரம் என்றால்என்ன? ஒருவன் தான் விரும்பிய கருத்தை மேடைகளில் முழங்கவும்,எழுத்துக்களில் எழுதுவதற்கும் தடை இருக்கக்கூடாது என்பதுதான் கருத்து சுதந்திரம்என்பதாகும்.

 ஆனால் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, அதை ஒரு படமாக ஆக்கி,அதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்து அதன் மூலம்கல்லாக்கட்டுவது என்பதை கருத்து சுதந்திரம் என்று சொல்லலாமா என்பதுதான்நமது முதல் கேள்வி.

வியாபாரமா? கருத்து சுதந்திரமா?:

 இதற்குப் பெயர் கருத்து சுதந்திரம் அல்ல. இலாப நோக்கத்தோடு நடத்தப்படும்வியாபாரம். இந்த வியாபாரத்தைப் பொறுத்தவரை ஒரு வியாபாரி என்பவன்நுகர்வோருக்கு பாதிப்பில்லாத வகையில்தான் பொருட்களை விற்பனை செய்யவேண்டும்.

 ஒரு மாத்திரையை ஒருவன் வியாபாரம் செய்கின்றான் என்றால் அந்தமாத்திரையினால் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுமேயானால் அதனால்ஒட்டுமொத்தமாக அந்த மாத்திரையை தடை செய்கின்றது அரசாங்கம்.அப்படியானால் ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துவதால் அல்லதுஉட்கொள்வதால் பலருக்கு அது தீங்கு ஏற்படுத்தாவிட்டாலும், ஒரு சிலருக்கு அந்தப்பொருளானது தீங்கு ஏற்படுத்துமேயானால் அதனால் அந்தப் பொருள்தடைசெய்யப்படும் எனபதுதான் வியாபார நடைமுறை.

 அதுபோலத்தான் நுகர்வோரிடத்தில் படம் பார்க்க வைத்து காசு பார்க்க வேண்டும்;கல்லா கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கமல் எடுத்துள்ள இந்தத் திரைப்படம்முஸ்லிம்களை புண்படுத்துவதாக உள்ளதால் அது கூடாது என்று நாம்சொல்கின்றோம். ஆக முதலில் இது கருத்து சுதந்திரம் என்பது பொய்யான வாதம்என்பதை நாம் பதிவு செய்கின்றோம்.

பாராதி ராஜாவின் கருத்து சுதந்திரம்:

 முதலில் பாரதி ராஜா என்பவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையை எடுத்துக்கொள்வோம். இவர் கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டு முஸ்லிம்களைதீவிரவாதிகளாகச் சித்தரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 விஸ்வரூபம் படம் என்பது தீவிரவாதிகளை அடையாளம் காட்டக்கூடிய ஒருதிரைப்படம். அந்தப்படத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் முஸ்லிம்கள் , “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற நிலையை எடுத்து, தங்களைத் தாங்களேதீவிரவாதிகளாக அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்பதுதான் பாரதி ராஜாஎன்பவர் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம்.

 இவர் தனது கூற்றில் உண்மையாளராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?யார் என்ன கருத்து சொன்னாலும் அது கருத்து சுதந்திரம் என்று சொல்லிவரவேற்றிருக்க வேண்டும்.

குமுதம் வார இதழுக்கு இல்லையா கருத்து சொல்லும் சுதந்திரம்?:

 குமுதம் வார இதழில், “ஒரு நடிகையின் கதை” என்ற பெயரில் தலைப்பிட்டுநடிகைகளின் விபச்சார வாழ்க்கையை ஆதாரத்தோடு ஒரு நடிகை எழுத அதைதடுத்து நிறுத்த வேண்டும் என்று குமுதம் அலுவலகத்தை அடித்துநொறுக்கியவர்கள்தான் இந்த கருத்து சுதந்திரப் பேர்வழிகள்.

 அதோடுமட்டுமல்லாமல் இந்தத் தொடர் வெளியானால் தங்களது இருட்டுவாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்று சொல்லி அந்தத் தொடரையேநிறுத்தச் செய்தவர்கள்தான் கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகின்றார்கள்.

 மேலும், புவனேஸ்வரி என்ற நடிகை விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டபோது,இன்னும் பல நடிகைகள் விபச்சாரத் தொழில் செய்கின்றார்களே, அவர்களை ஏன்கைது செய்யவில்லை என்று கேட்டு பேட்டியளித்தார்.

தினமலருக்கு கருத்து சுதந்திரம் வழங்கமாட்டீர்களா?:

 இந்தப் பேட்டியை தினமலர் நாளேடு வெளியிட்டது. இதற்காக தினமலர்அலுவலகத்தைத் தாக்கினீர்களே! தினமலரை கொளுத்தினீர்களே! செய்தி ஆசிரியர்லெனினை உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி கைது செய்ய வைத்தீர்களே!அப்போது எங்கே போனது இந்த கருத்து சுதந்திரம்?

 இந்த இடத்தில் பாரதி ராஜாவிடத்தில் ஒரு கேள்வி கேட்க ஆசைப்படுகின்றோம்.தீவிரவாதிகளாக முஸ்லிம் சமுதாயத்தை பொய்யாக சித்தரித்ததைக் கண்டித்துமுஸ்லிம்கள் குரல் எழுப்புவதை கொச்சைப்படுத்தி, ““எங்கப்பன் குதிருக்குள்இல்லை” என்ற நிலையை எடுத்து, தங்களைத் தாங்களே தீவிரவாதிகளாகஅறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று கேட்கும் பாரதி ராஜா அவர்களே!நடிகைகளின் விபச்சார வேலைகளை அம்பலப்படுத்திய கதை குமுதம் இதழில்வரக்கூடாது என்று தாங்கள் கோரிக்கை வைத்தீர்களே! அப்படியானால் உங்கள்வீட்டுப் பெண்கள் அந்த வேலையைச் செய்ததால்தான் இந்த நிலையை எடுத்தீர்களா?

 நடிகைகளுக்கு ஆதரவான நிலையை எடுத்து “எங்கப்பன் குதிருக்குள் இல்லை”என்று உங்களை நீங்களே சொல்லிக் கொண்டீர்களா? விளக்கம் தேவை.

 விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டது கமலின் இரத்தம் குடிக்கும் வேலைஎன்றால், டாம்999 படத்தை தமிழகத்தில் தடை செய்ய வைத்தீர்களே! அது அந்தப்படத்தை பணம் போட்டு எடுத்தவனின் இரத்தத்தை குடித்ததாக ஆகாதா?

ராமதாஸின் கருத்து சுதந்திரம்:

 விஸ்வரூபம் பட விஷயத்தில் ஐயா மருத்துவக் குடிதாங்கி ராமதாஸ் அவர்களும்இதே கருத்து சுதந்திரத்தைப் பற்றி சரடு விட்டுள்ளார்.

 ரஜினிகாந்தின் பாபா படத்தை ஓட விடமாட்டோம் என்று சொல்லி பாபா படம்ஓடிய தியேட்டர்களையெல்லாம் அடித்து நொறுக்கிய மருத்துவக் குடிதாங்கிஅவர்களா கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுவது?

தா.பாண்டியனின் கருத்து சுதந்திரம் பேணும் லட்சணம்:

 கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனும் இதே கருத்தை விஸ்வரூபம் படவிஷயத்தில் வெளியிட்டுள்ளார்.

மதுரை ஆதீனத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஆகாதா?:

 பெண்கள் பாலியல் கொடுமைகளில் இருந்து பாதுகாப்புப் பெற பர்தா அணியவேண்டும் என்று சொன்ன மதுரை ஆதீனத்தின் மடத்தை முற்றுகையிட்டகம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பு ஆதீனத்தை கருத்து சொல்லவிடாமல்தடுத்து போராட்டம் நடத்தி இரு மாதம் கூட முடிவதற்குள் மறுபடியும் இவர்கள்கருத்து சுதந்திரத்தைப் பற்றி வாய்திறக்கலாமா?

 கருத்து சொன்னதற்காக ஆதீன மடத்தை முற்றுகையிட்ட இவர்கள்தான் கருத்துசதந்திரத்தைப் பற்றி பேசுகின்றார்களாம்.

 வரதராஜன் மரணத்தில் சந்தேகம் எழுகின்றது. அது கொலையாக இருக்கலாம்என்று யூகம் எழுகின்றது என்று செய்தி வாசித்த மக்கள் தொலைக்காட்சியை அடித்துநொறுக்கிய கம்யூனிஸ்ட்கள்தான் கருத்து சுதந்திரம் பற்றி பேசுகின்றார்களா?

 வால்மார்ட் என்ற வெளிநாட்டுக்கடையை அடித்து நொறுக்கியவர்களுக்கு கருத்துசுதந்திரம் ஒரு கேடா?

மனுஷ்ய புத்திரனின் கருத்து சுதந்திரம்:

 உன்னைப்போல ஒருவன் படத்தில் கமல் வீசிய நோட்டிற்கு ஏற்ப பாட்டெழுதி,ஸ்ருதி கமல்ஹாசனின் ஆளுமையைப் போற்றிப் புகழ்ந்ததுதான் மனுஷ்ய புத்திரன்கருத்து சுதந்திரமாம்.

பி.ஜே.பி.யின் கருத்து சுதந்திரம்:

 இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துவதுபோல கமல் படம் எடுத்துள்ளதால்இதற்கு முன்பாக இந்துக் கடவுள்களை கேவலப்படுத்தி படமும், பாட்டும் எழுதியகமல்ஹாசனின் மலரும் நினைவுகளை மறந்துவிட்ட சங்பரிவாரக் கும்பல்கள்அவருக்கு ஆதரவாக தற்போது கருத்து சுதந்திரத்தைப் பற்றி காட்டுக்கத்தல் போட்டுவருகின்றன.

 அப்படியானால் சங்பரிவாரக் கும்பல்தான் காவித்தீவிரவாதிகள். அவர்கள்தான்சுதந்திர இந்தியாவில் அனைத்து குண்டுகளையும் வெடிக்கச் செய்தபுண்ணியவான்கள் என்பதை ஆதாரத்தோடு பட்டியல் போட்டாரே உள்துறைஅமைச்சர் ஷிண்டே. அதைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் ஏனோ?

 விஸ்வரூபத்திற்கு வரவேற்பளிப்பதைப்போல, ஷிண்டேவை பாராட்டி போஸ்டர்அடித்து ஒட்டி பாராட்டு மழை பொழியச் செய்து கருத்து சுதந்திரத்தை பா.ஜ.க.வும்,சங்பரிவாரக் குமபலும் நிலைநாட்ட வேண்டியது தானே!

 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மும்பை வான்கடே மைதானத்தில் கிரிக்கெட்விளையாட வந்தபோது அந்த மைதானத்தில் பாம்புகளைவிட்டு, மைதானத்தைகடப்பாரையால் தோண்டி கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டிய தர்ம பிரபுக்கள்தான்தற்போது கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகின்றார்களோ!

 காதலர் தினங்களில் கட்டாய தாலிகட்டச் சொல்லி சித்திரவதை செய்யும்இவர்களுக்கு கருத்து சுதந்திரம் ஒரு கேடா?

ஃபேஸ்புக்கில் செய்தி வெளியிட்ட பெண்களை தாக்கிய தீவிரவாதிகளுக்கு கருத்துசுதந்திரம் பற்றி பேச அருகதை உள்ளதா?

காங்கிரஸும் கருத்து சுதந்திரம் பேசுகின்றார்களாம்:

 காங்கிரஸும் இந்த விஷயத்தில் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டுகின்றது.குற்றப்பத்திரிக்கை என்ற படத்தை தடை செய்த காங்கிரஸ் விஸ்வரூபத்திற்கு தடைநீக்கச் சொல்லி பேசலாமா?

 கலைஞர் கதை வசனம் எழுதிய பராசக்தியை தடை செய்த காங்கிரஸ்தான்சென்சார்போர்டு பற்றி பேசுகின்றது?

 ஆக மொத்தத்தில் இவர்கள் எல்லோருமே கருத்து சுந்தந்திரம் என்ற பெயரில்தனக்கு ஒரு இழப்பு என்றால் அந்த வாதத்தை பயன்படுத்தி அதைநிலைநாட்டப்பார்க்கிறார்களே ஒழிய இவர்களின் உண்மையான கொள்கைஅதுவல்ல.

உண்மையான கருத்துக்களைச் சொல்ல வழியுண்டா? கருத்து சுதந்திரம் உண்டா?:

 மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சங்பரிவாரக்கும்பல் தலைவன் கோட்சேவின் உண்மை வாழக்கைவரலாறை படம் எடுப்போமா?
 குஜராத்தில் நரவேட்டையாடிய நரபலி மோடியின்நரவேட்டையை படமாக எடுத்தால் அங்கீகரிக்குமாசங்பரிவாரக்கும்பல்?
 மாலேகான் குண்டு வெடிப்பு, சம்ஜோதாஎக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, மக்கா மசூதி குண்டுவெடிப்புகளை படமாக்கினால் பாராட்டு விழாநடத்துவார்களா இந்த பரிவாரக் கூட்டங்கள்?
 அரசியல்வதிகளின் உண்மை முகங்களை வெட்டவெளிச்சமாக்கி படம் எடுத்தால் விட்டுவைக்குமாஇந்த அயோக்கிய கும்பல்?

 மேற்கண்ட கேள்விகளுக்கெல்லாம் இல்லையென்று பதில் வந்தால் பிறகெங்கேஉள்ளது கருத்து சுதந்திரம்?

 மேற்கூறியவைகள் எல்லாம் உண்மைகள். அந்த உண்மைகளைச் சொன்னால் அதுகூடாது என்று கருத்துச் சொல்லும் இந்தக்கூட்டம் பொய்யான முறையில்முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து படம் எடுப்பதைக் கண்டித்தால்காட்டுக்கூச்சல் போடுவார்களோ?

இஸ்லாம் சொல்லும் கருத்து சுதந்திரம்:

 பேசினால் நல்லதையே பேசுங்கள்; இல்லாவிட்டால் வாய்மூடி இருங்கள். இதுதான்இஸ்லாம் எங்களுக்குக் கற்றுத்தந்த கருத்து சுதந்திரம்.

 நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையைமறைக்கவும் செய்யாதீர்கள். இதுதான் இஸ்லாம் கற்றுத்தரும் கருத்து சுதந்திரம்.

 இனியாவது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெட்டிச் சித்தாந்தம் பேசாமல்,உண்மையான, நேர்மையான, சரியான கருத்துக்களைச் சொல்ல வழிவிட்டு கருத்துசுதந்திரத்தைப் பேண அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 

அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையைமறைக்காதீர்கள்!

அல்குர் ஆன் 2 : 42

 அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப்பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6018
ஆன்லைன் பிஜே

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை