அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு!
அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு! பாராளுமன்றத்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கடந்த 04/08/2005 அன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் அபசல் குரு கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவோடு சேர்த்து இந்த நாட்டின் நீதி பரிபாலனமும் தூக்கிலிடப்பட்டுள்ளது. இந்தத்தீர்ப்பின் மூலம் நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கின்றதா? இந்திய அரசியலமைப்புச் சாசனச் சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றனவா? என்ற சந்தேகம் நம்முடைய உள்ளத்தில் எழுந்துள்ளது. பாபர் மசூதி விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி: இதற்கு முன்பாக பாபர் மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பள்ளிவாசலை இடித்த பயங்கரவாதிகளுக்கு இரண்டு பங்கும், பள்ளிவாசலை இழந்த முஸ்லிம்களுக்கு ஒரு பங்கும் வழங்கி அற்புதமான(?) கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை வழங்கி நீதியை நிலைநாட்டினார்கள்(?) நமது நீதிபதிகள். அதுபோலத்தான் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனை குறித்த த