முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?


முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?
 விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின்உரிமை பாதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறதுஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தலாக்என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்றஉண்மையை அறியலாம்.
விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லா விட்டால் அந்த உரிமையைப் பெறுவதற்காகநீதிமன்றத்தை நாடுகிறான்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விவாகரத்துதீர்ப்பைப் பெறுகிறான்.
இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க விரும்புகின்ற கணவன் உடனே மனைவியை விட்டுப் பிரிவதற்குக்கொடூரமான வழியைக் கையாள்கிறான்அவளை உயிரோடு கொளுத்திவிட்டு ஸ்டவ் வெடித்துச்செத்ததாக உலகை நம்ப வைக்கிறான்.
விவாகரத்துச் செய்யும் உரிமை கணவனுக்கு இருந்தால் பெண்கள் உயிருடன்கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

இன்னும் சில கணவன்மார்கள் மனைவியைக் கொல்லும் அளவிற்கு கொடியவர்களாகஇல்லாவிட்டாலும் வேறொரு கொடுமையை பெண்களுக்கு இழைக்கிறார்கள்கற்பொழுக்கம் உள்ளமனைவியை ஒழுக்கம் கெட்டவள் எனக் கூறுகின்றனர்இப்படிக் கூறினால் தான் நீதிமன்றத்தில்விவாகரத்துப் பெற முடியும் என்று நினைத்து இவ்வாறு செய்கின்றனர்இதன் பின்னர் ஒழுக்கம் உள்ளஅப்பெண்மணி களங்கத்தைச் சுமந்து கொண்டு காலமெல்லாம் கண்ணீர் விடும் நிலைமைஏற்படுகிறதுஅவளை வேறொருவன் மணந்து கொள்வதும் இந்தப் பழிச் சொல்லால் தடைப் படுகிறது.எளிதாக விவாகரத்துச் செய்யும் வழியிருந்தால் இந்த அவல நிலை பெண்களுக்கு ஏற்படாது.
வேறு சில கயவர்கள் விவாகரத்துப் பெறுவதற்காக ஏன் நீதிமன்றத்தை அணுகி தேவையில்லாதசிரமங்களைச் சுமக்க வேண்டும்என்று நினைத்து பெயரளவிற்கு அவளை மனைவியாக வைத்துக்கொண்டு சின்ன வீடு வைத்துக் கொள்கின்றனர்மனைவியை அடித்து உதைத்து சித்திரவதையும்படுத்துகின்றனர்இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் இந்தக் கொடுமைகள் அனைத்திலிருந்தும்பெண்கள் பாதுகாக்கப் படுகிறார்கள்ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை உள்ளது போலபெண்களுக்கு இவ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது.ஏனெனில் பெண்களுக்கு கணவனைப் பிடிக்கா விட்டால் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெறுவதுசிரமமாக இருந்தால் அவள் கணவனைக் கொலை செய்கிறாள்உணவில் விஷம் கலந்தோஅல்லதுகள்ளக் காதலனுடன் சேர்ந்தோ கணவனைத் தீர்த்துக் கட்டுகிறாள்.
அல்லது கணவனுக்கு ஆண்மையில்லை என்று பழி சுமத்தி கணவனுக்கு மறு வாழ்க்கை கிடைக்காமல்செய்து விடுகிறாள்அல்லது கணவனையும்பிள்ளைகளையும் விட்டுவிட்டு விரும்பியவனுடன்ஓடுகிறாள்எனவே ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது போலபெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரியான வாதமே.
அந்த உரிமையை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலிஎன்ற நபித் தோழரின் மனைவி நபிகள்நாயகம் (ஸல்அவர் களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரேஎனது கணவரின் நன்னடத்தையையோ,நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன்ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே(இறைவனுக்குமாறு செய்வதை நான் வெறுக்கிறேன்என்றார். (அதாவது கணவர் நல்லவராகஇருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்உடனே நபிகள் நாயகம்(ஸல்அவர்கள் அப்படி யானால் (அவர் உனக்கு மஹராக வழங்கியஅவரது தோட்டத்தைத் திருப்பிக்கொடுத்து விடுகிறாயாஎன்று கேட்டார்கள்அதற்கு அப்பெண்மணி சரி என்றார்உடனே நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் அவரது கணவரிடம் 'தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாகவிடுத்து விடுஎன்று கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (ரலிநூல்கள்:- புகாரி 5273, 5275, 5277
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையைஅறியலாம்.
ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிடவேண்டும்அந்தத் தலைவர்அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக்கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டுவிலகுமாறும் கட்டளையிட வேண்டும்திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச்செய்தியிலிருந்து அறியலாம்.
பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில்முறையிடுவதற்கு நியாயம் இருக்கிறதுஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர்தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும்என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிக சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகையமுடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடுஅவசியமாகின்றதுசமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது.இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதேஅவளுக்குச் சிறந்ததாகும்.
பெண்கள் விவாக ரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே காண முடியாததாகும்.இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறுஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.
இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப்பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம்இல்லைமேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை.தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார்.
அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லைகாரணம் கூறுவது முக்கியம்என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள்அவர்கள் ஏதும்விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிருந்து இதை உணரலாம்.
இஸ்லாம் திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லைமாறாக வாழ்க்கைஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்துநீங்கள் ஒருவர் மற்றவருடன்இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (திருக்குர்ஆன் 4:21)
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர் களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (திருக்குர்ஆன் 2:228)
ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும்உரிமை வழங்கியுள்ளது என்பதற்கு இவ்வசனங்களும் சான்றாகின்றன.
இனி முத்தலாக் விஷயத்துக்கு வருவோம்.
ஆண்களுக்கு தலாக் கூறும் மூன்று வாய்ப்புகள் உள்ளன.
ஒரு முறை விவாகரத்து செய்து விட்டு பின்னர் சேர்ந்து வாழலாம்பின்னர் மீண்டும் விவாகரத்துச்செய்து மீண்டும் சேர்ந்து வாழலாம்மூன்றாம் முறை விவாகரத்து செய்தால் தான் மீண்டும் சேரமுடியாது.
மூன்றாம் முறை விவாகரத்து செய்த பின் இன்னொருவ னுக்கு அவள் வாழ்க்கைப்பட்டு அவனும்விவாகரத்து செய்தால் மட்டுமே முதல் கணவன் அவளை மணக்க முடியும்.
அவசரப்பட்டு விவாகரத்து செய்தவர்கள் பின்னர் திருந்தி சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவேஇவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சில முஸ்லிம்கள் அறியாமை காரணமாக ஒரே சமயத்தில் மூன்று தலாக் என்று கூறி மனைவியைநிரந்தரமாகப் பிரிந்து விடுகின்றனர்இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லைஒரே சமயத்தில் மூன்றுதலாக் எனக் கூறினால் ஒரு தலாக் ஆகவே அது கருதப்படும் என்பது தான் சரியான கருத்தாகும்.
நபிகள் நாயகம் (ஸல்காலத்தில் மூன்று தலாக் என்பது ஒரு தலாக் என்பது மொத்தமாகவேகருதப்பட்டது

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 2689
எனவேஒரே சமயத்தில் முத்தலாக் கூறுவது என்பது இஸ்லாத்தில் இல்லைமுஸ்லிம்களில் சிலரதுஅறியாமை காரணமாக இது போன்ற கேள்விகளை நாம் எதிர் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.
பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை