அத்வைதத்தின் அறியாமை

அத்வைதத்தின் அறியாமை
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர்க்களம் "பத்ருப் போர்.
இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.
* ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான் (8:9)
* சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக சிறிய தூக்கத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி அவர்களின் உள்ளங்களில் அமைதி ஏற்படுத்தினான். (8:11)
* அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின் பாதங்களையும் உறுதிப்படுத்தினான் (8:11)
* வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர் (8:12)
* எதிரிகளின் உள்ளங்களில் பீதியை அல்லாஹ் ஏற்படுத்தினான் (8:12)
இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத் தான் இவ்வசனத்தில் (8:17) அல்லாஹ் கூறுகிறான்.
"பொடிக்கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்து வா'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) எறிந்தனர். எதிரிக் கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும் அவைபட்டன. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் "நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும்அல்லாஹ் தான் எறிந்தான்'' என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: தப்ரானி)

இதைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.
மனிதர்கள் கற்களை வீசினால் என்ன விளைவு ஏற்படுமோஅது போன்ற விளைவு ஏற்படாமல் இறைவனே வீசினால் எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ அத்தகைய விளைவுகள் ஏற்பட்டன.
இத்தகைய அற்புதங்களால் தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில் பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இறைவன் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான்.
இவ்வளவு தெளிவான வசனத்தையும் சிலர் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக ஆக்கிக் கொள்கின்றனர்.
இதன் உச்சகட்டமாக "அல்லாஹ் வேறுநபிகள் நாயகம் வேறு அல்லஇருவரும் ஒருவர் தான்'' என்றெல்லாம் உளறுகின்றனர். ஏராளமான கட்டுக் கதைகளையும் இதற்கேற்ப இவர்கள் உருவாக்கியுள்ளனர். ஈஸா நபி விஷயத்தில் கிறித்தவர்கள் வரம்பு மீறியதையும் இவர்கள் மிஞ்சினார்கள்.
இஸ்லாத்துக்குத் தவறான வடிவம் கொடுத்த இவர்களின் தலைவனான இப்னு அரபி என்பவன் பிற மதங்களில் உள்ள "அத்வைதம்என்ற கொள்கையைக் காப்பி அடித்து இஸ்லாத்துக்குள்ளேயும் திணிக்க முயன்றான். காணும் பொருள் அனைத்துமே அல்லாஹ் என்று இவன் கூறினான். இவனை மகான் என்று கூறும் மூடர்களும் இந்தச் சமுதாயத்தில் உள்ளனர்.
திருக்குர்ஆனிலும்நபிமொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள இரு கருத்து கொண்ட வாக்கியங்களுக்குத் தவறான பொருள் கொடுத்து இவன் மக்களை வழிகெடுக்க முயன்றான்.
(இது பற்றி அறிய 86வது குறிப்பைக் காண்க)
குர்ஆன் வசனங்களையோஹதீஸ்களையோ வளைத்துதங்களின் உளறலை நியாயப்படுத்த முடியுமாஎன்று தேடியவர்களுக்கு மேற்கண்ட வசனம் மிகப் பெரிய சான்றாகத் தென்பட்டது.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தால் ஒரு கைப்பிடி கற்களால் அனைத்து எதிரிகளின் கண்களிலும் படுமாறு வீச முடியுமாமுஹம்மது நபியே அல்லாஹ்வாக இருந்தால் தானே அப்படி வீச முடியும்அவர்கள் எறிந்ததைதான் எறிந்ததாக அல்லவா அல்லாஹ் கூறுகிறான்எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும்,அல்லாஹ்வும் ஒன்றே'' என்று இவர்கள் உளறுகின்றனர்.
இணைவைத்தலின் வாசலை இறுக்கமாக அடைத்த மார்க்கத்திலேயே இவர்கள் விளையாடுகின்றனர்.
ஆனால் இந்த வசனம் இவர்களது வாதத்துக்கு நேர்எதிரானதாகும்.
"நான் கல்லை வீசினால் போதும்எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக் கூடாது. மாறாககுறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசிய போது எனது வல்லமையால் அதைப் பரவச் செய்தேன்''என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
இதுதான் இவ்வசனத்தின் கருத்து என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் போக வேண்டியதில்லை. இவ்வசனத்திலேயே இதற்கான காரணம் அடங்கியுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொடிக் கற்களை வீசியதைப் பற்றிக் கூறுவதற்கு முன்நபித் தோழர்கள் போரில் எதிரிகளை வெட்டி வீழ்த்தியதை அல்லாஹ் குறிப்பிடுகிறான். "நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான்'' என்று குறிப்பிடுகிறான்.
நபித் தோழர்கள் தமது வாள்களால் தான் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள். நபித் தோழர்களின் கரத்தால் செய்யப்பட்ட இந்தத் தீரச் செயலுக்கு அல்லாஹ் சொந்தம் கொண்டாடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எறிந்தது பற்றிப் பேசும் போது பயன்படுத்தியது போன்ற வாசக அமைப்பையே இங்கேயும் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) மட்டுமல்லபத்ருப் போரில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுமே அல்லாஹ்வாக இருந்தார்கள் என்று இவர்கள் வாதிட வேண்டுமல்லவா?
"அல்லாஹ் தான் நபிநபி தான் அல்லாஹ்'' என்று இவர்கள் கூறியது போல் "அல்லாஹ் தான் நபித் தோழர்கள்நபித் தோழர்கள் தான் அல்லாஹ்'' எனவும் கூற வேண்டிய நிலை ஏற்படும்.
பத்ருப் போரில் பல நபித் தோழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் கிறுக்குத் தனமான வாதப்படி அல்லாஹ் தான் கொல்லப்பட்டான் என்ற கருத்து ஏற்படும்.
"எதிரிகளின் படை பலத்தில் மூன்றில் ஒரு பங்காக நீங்கள் இருந்தும் உங்களால் எதிரிகளை வெல்ல முடிந்தது என்றால் அத்ற்கேற்ப பல சூழ்நிலைகளை நான் தான் ஏற்படுத்தினேன்'' என்ற கருத்தைப் பதிவு செய்வதற்காகவே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்
இந்த வெற்றிக்கு நபிகள் நாயகமோஅவர்களின் தோழர்களோ சொந்தம் கொண்டாடி விடக் கூடாது என்பதற்காகவே,தான் நடத்திய அற்புதங்களை இதற்கு முந்தைய வசனங்களில் அல்லாஹ் நினைவுபடுத்துகிறான்.
நானும் உங்களைப் போன்ற மனிதனே என்று தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கூறச் சொல்கிறான். (திருக்குர்ஆன் 18:110)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்டதுபருகியதுஅவர்கள் மல ஜலம் கழித்ததுகுடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டது,மற்றவர்களைப் போல் தாய்தந்தையருக்குப் பிறந்ததுமனைவிமக்களை இழந்து கவலைப்பட்டதுசித்ரவதைக்கு ஆளானதுநாடு கடத்தப்பட்டதுதமது மனைவியின் மீது எதிரிகள் பழி கூறிய போது உண்மை நிலையை அறியாமல் இருந்ததுஒரு கூட்டத்தாரின் அழைப்பை ஏற்று அனுப்பிய எழுபது நபித் தோழர்கள் அவர்களால் கொல்லப்படுவார்கள் என்பதை முன்பே அறியாமல் இருந்ததுவறுமையில் உழன்றது என ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் ஒரு மனிதர் என்பதை நிரூபித்துச் சென்ற பிறகும் இப்படி உளறுகின்றனர்.
நபிகள் நாயகத்துக்கும்நபித்தோழர்களுக்கும் மட்டுமல்லஎல்லா மனிதர்கள் விஷயத்திலும் கூட இறைவன் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளான்.
நீங்கள் பயிரிடுவதைப் பற்றிக் கூறுங்கள்! நீங்கள் தான் அதை விவசாயம் செய்கிறீர்களாஅல்லது நாம் விவசாயம் செய்கிறோமா? (திருக்குர்ஆன் 56:63,64) என்று அல்லாஹ் கேட்கிறான்.
மனிதர்கள் விவசாயம் செய்வதைக் கூறி விட்டு உண்மையில் நீங்கள் விவசாயம் செய்யவில்லை. நாமே விவசாயம் செய்கிறோம் என்று அல்லாஹ் கூறுகிறானே! விவசாயிகள் அனைவரும் அல்லாஹ்வாஇவர்கள் சிந்திக்க வேண்டாமா?
நாம் தான் விதைகளை விதைக் கிறோம். ஆனாலும் விதைத்ததை முளைப்பிக்கச் செய்து ஒன்றுக்கு நூறாக இன்னும் அதிகமாக ஆக்குவது அவனது வல்லமையின் பாற்பட்டது என்று இதை விளங்கிக் கொள்கிறோம்.
அது போல் தான் மேற்கண்ட வசனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் இவர்களது வாதம் எந்த அளவுக்கு அபத்தமானது என்பது எளிதில் விளங்கும்.
நீர் எறிந்த போது
நீர் எறியவில்லை
என இரண்டு சொற்றொடர்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. நீர் எறிந்த போது எனக் கூறும் போது எறிந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) என்று அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான். எதை ஒப்புக் கொண்டானோ அதையே "நீர் எறியவில்லைஎனக் கூறி உடனே மறுக்கவும் செய்கிறான்.
அல்லாஹ்வின் வார்த்தையில் நிச்சயமாக முரண்பாடு இருக்கவே முடியாது. "நான் சாப்பிட்ட போது நான் சாப்பிடவில்லை'' என்று கூறினால் அதை நாம் அபத்தம் என்போம்.
ஆனால் இறைவன் எப்படி முரண்பட்டுப் பேசுவான் என்பதைச் சிந்திப்பார்களானால் இதன் சரியான பொருளை விளங்கிக் கொள்வார்கள். உளறிக் கொட்ட மாட்டார்கள்.
இது போன்ற வார்த்தைப் பிரயோகத்தை நேரடியான பொருளில் நாம் எடுத்துக் கொள்வது கிடையாது. முரண்பட்ட இரண்டுக்கும் இரு வேறு அர்த்தங்களையே நாம் கருத்தில் கொள்வோம்.
நாம் பயிரிடும் போது நாம் பயிரிடுவதில்லைஅல்லாஹ் தான் பயிரிடுகிறான் என்று கூறினால்பயிரிடுதல் என்பதற்கு இருவேறு இடங்களில் இரு வேறு அர்த்தங்களை நாம் கவனத்தில் கொள்கிறோம்.
அதாவது நாம் பயிரிடும் என்றால் விதையைப் புதைக்கும் போது என்று பொருள் கொள்கிறோம்.
நாம் அதை பயிரிடுவது இல்லை என்றால் நாம் அதை முளைக்கச் செய்வதில்லை என்று பொருள் கொள்கிறோம்.
இது போல் தான் மேற்கண்ட வசனத்திலும் பொருள் கொள்ள வேண்டும்.
நீர் எறிந்த போது
நீர் எறியவில்லை
என்று முரண்பட்ட இரண்டு சொற்றொடர்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நீர் எறிந்த போதுஅதாவது "பொடிக் கற்களை நீர் வீசிய போது''
நீர் எறியவில்லைஅதாவது "ஒவ்வொருவர் முகத்திலும் நீர் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை''
என்று பொருள் கொண்டால் தான் முரண்பாடில்லாத வாசகமாக அது அமையும்.
இது போன்ற வார்த்தைப் பிரயோகம் அனைத்து மொழி இலக்கியங்களிலும்மக்களின் உரையாடல்களிலும் காணக் கூடியது தான். குர்ஆனுக்கு மட்டும் உரிய இலக்கணம் இல்லை.
இந்த விதியின் அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்குப் பொருள் கொண்டால் எறிந்தது நபிகள் நாயகம்அதைக் கொண்டு போய்ச் சேர்த்தது அல்லாஹ் என்ற கருத்து வரும். அல்லாஹ் செய்தது வேறுஅவன் தூதர் செய்தது வேறு. அல்லாஹ் வேறுஅவன் தூதர் வேறு என்பது இதன் மூலம் உறுதியாகும்.

"யார் உபரியான வணக்கத்தின் மூலம் என்னை நெருங்கி விட்டரோ அவரை நான் விரும்புவேன். நான் அவரை விரும்பிவிட்டால் அவன் கேட்கும் காதாகஅவன் பார்க்கும் கண்ணாகஅவன் பிடிக்கும் கையாக அவன் நடக்கும் காலாக நான் ஆவேன் (புகாரி 6502) என்பது போன்ற ஹதீஸ்களையும் இவர்கள் தமது வழிகேட்டுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
"பார்த்தீர்களாஅவ்லியாக்கள் வேறு! அல்லாஹ் வேறு அல்ல. அல்லாஹ் தான் அவ்லியாவாக அவதாரம் எடுத்துள்ளான்'' என்று கூறி மக்களை வழி கெடுக்க முயல்கின்றனர்.
அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறை நேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானாஅல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா?அல்லாஹ் தான் மரணித்தானாஎன்று இவர்கள் சிந்தித்திருந்தால் இப்படி உளற மாட்டார்கள்.
பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது சகஜமான ஒன்று தான். "இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்என்று கூறினால் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம். "ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.
இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
"நான் பசியாக இருந்த போது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லைநான் தாகமாக இருந்த போது நீ ஏன் தண்ணீர் தரவில்லைநான் ஆடை இல்லாமல் இருந்த போது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?'' என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் "நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏதுதாகம் ஏது?'' என்று கேட்பான்அதற்கு இறைவன் "ஒரு ஏழை பசி என்று கேட்ட போது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்'' என்று கூறுவான். (பார்க்க: முஸ்லிம் 4661)
அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லாம் அல்லாஹ்வாஅவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா?பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டலாமா?
இதை எப்படிப் புரிந்து கொள்கிறார்களோ அது போல் தான் முதஷாபிஹாத் (இரு பொருள் தரும்) வசனங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
onlinepj.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை