மாதங்கள் பன்னிரண்டு

மாதங்கள் பன்னிரண்டு
இவ்வசனத்தில் (9:36) வானங்
களையும் பூமியையும் படைத்த நாள்
முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் 12
மாதங்கள்' எனக் கூறப்படுகின்றது.
மக்கள் வருடத்தை 12 மாதங்களாகக்
கணக்கிடுகிறார்கள் எனக் கூறாமல்,
12 மாதங்கள் தான் இருக்க வேண்டும்
என்று ஒரு கோட்பாட்டை இவ்வசனம்
சொல்கிறது.
வானம், பூமி படைக்கப்பட்டது முதல்
எல்லாக் காலத்திலும்
வருடத்திற்கு 12 மாதங்கள்
என்று மக்கள் கணக்கிட்டுக்
கொண்டிருக்கவில்லை.
கி.பி. 1582ஆம் ஆண்டு கிரிகோரியன்
என்ற கத்தோலிக்க போப்,
நாட்காட்டிகளை ஒருங்கிணைப்பது வரை பல
விதமான கணக்குகளில் ஆண்டுகளில்
கணித்து வந்தனர்.
ஒரு கால கட்டத்தில், 304 நாட்களைக்
கொண்ட 10 மாதங்களே ஒரு வருடமாக
இருந்துள்ளது. இன்னொரு காலத்தில்
455 நாட்களைக் கொண்ட 15 மாதங்கள்
ஒரு வருடமாகக்
கணக்கிடப்பட்டுள்ளது.
வருடம்
என்பதற்கு எதை அளவு கோலாக
வைப்பது என்ற தெளிவான
அறிவு மனிதனுக்குத் துவக்கத்தில்
இல்லாததே இதற்குக் காரணம்.
மாதம் என்றோ, வருடம்
என்றோ தீர்மானிப்பதாக இருந்தால்
தெளிவான
ஒரு வரையறை அதற்கு வேண்டும்.
ஒருவர் நினைத்தால் 10
மாதங்களை ஒரு வருடம் என்பதும்,
மற்றொருவர் நினைத்தால் 15
மாதங்களை ஒரு வருடம் என்பதும்,
இன்னொருவர் 20
மாதங்களை ஒரு வருடம் என்பதும்
எந்த வரையறையின்
அடிப்படையிலும் கூறப்படுவதாக
இருக்க முடியாது.
நாம் வாழ்கின்ற பூமி சூரியனைச்
சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும்
கால அளவை வருடம்
என்று கணக்கிட்டால்
அது ஒரு வரையறைக்கு உட்பட்டதாக
இருக்கும்.
மனிதன் 16ஆம் நூற்றாண்டில்
கண்டுபிடித்த இந்த
வரையறையை ஆறாம்
நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன்
கூறுகின்றது.
வருடம் என்பது, அதாவது சூரியனைப்
பூமி சுற்றும் கால அளவு என்பது 12
மாதங்கள் தான். இது சூரியனையும்
பூமியையும் படைக்கும்
பொழுதே என்னால் ஏற்படுத்தப்பட்ட
முடிவு என்று இறைவன் கூறுவதைத்
திருக்குர்ஆன் எடுத்துச் சொல்கிறது.
திருக்குர்ஆன் இறைவனின்
வார்த்தை தான் என்பதற்கு இதுவும்
ஒரு சான்றாக அமைந்துள்ளது.

P ஜெய்னுலாப்தீன் அவர்கள் மொழிபெயர்த்த 10வது வெளியிடான குர்ஆனில் இருந்து 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை