ஊழலை ஒழிக்க என்ன வழி?


ஊழலை ஒழிக்க என்ன வழி?
ஊழல். . . ஊழல். . .ஊழல்
எங்குபார்த்தாலும், எந்த தொலைக்காட்சி செய்தியை திறந்தாலும் இந்த வார்த்தைதான் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.
நாட்டையே உலுக்கி வரும் மிகப்பெரும் தொல்லையாக இந்த ஊழல் தற்போது உருவெடுத்துள்ளது.
பா.ஜ.க ஊழல் செய்து விட்டதாக காங்கிரஸும், காங்கிரஸ் ஊழல் செய்துவிட்டதாக பா.ஜ.க.வும் மாறி மாறி குற்றச் சாட்டைச் சொல்-லி வந்தது.
ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள மாநிலக்கட்சிகள் அவர்களை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்-லி வருகின்றன.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலி-ருந்து எந்த ஒரு கட்சியும் விதிவிலக்கல்ல..
இந்நிலையில் யாரெல்லாம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்களோ அவர்களும் ஊழல் செய்து மாட்டிக் கொள்ளும் நிலையை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
அன்னா ஹாசாரே என்பவர் ஊழலுக்கு எதிராக போராடுவதாக படம் காட்டினார். அவரும் தன்னால் இயன்ற அளவு ஊழல் செய்துள்ளார் என்பது நிரூபணமானது.
பாபா ராம்தேவ் என்பவரும் இது போல படம் காட்டினார்.
மருந்துகள் விற்கின்றேன் என்று சொல்-லி அவர் செய்த ஊழல்களும் திருகுதாளங்களும் வெளிவந்தன.
கெஜ்ரிவால் என்பவர் தற்போது ஊழலுக்கு எதிராக போராடுவதாக படம் காட்டி வருகின்றார். அவரது குழுவில் உள்ளவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாக மராட்டிய மாநிலத்தில் ஒரு ஊழல் நடந்துள்ளது. மராட்டிய மாநிலத்தை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. அணைகட்ட வேண்டும் என்பதற்காக மராட்டிய அரசு விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய 100 ஏக்கர் நிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆசியுடன் பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரிக்கு தாரை வார்த்துள்ளனர்.
அதாவது காங்கிரஸும், பா.ஜ.கவும் இணைந்து ஊழல் செய்துள்ளன.
மேற்கண்ட செய்திகளிலி-ருந்து ஒரு உண்மை நமக்குத் தெரியவருகின்றது.
ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு தங்களால் இயன்ற வரை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு தங்களது சக்திக்குட்பட்டு ஊழல் செய்து வருகின்றனர். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை ஒவ்வொருவரும் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். ஊழல் செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்களும், பிற கொள்ளையர்கள் செய்த ஊழலி-ல் தங்களுக்கு பங்கு கிடைக்காதவர்களும் அதை எதிர்ப்பது போல நாடகமாடுகின்றனர்.
இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளால் பொதுமக்கள் பணம் சுரண்டப்படுகின்றது. இதற்கு எதிராக எத்தனை லோக்பால்களை கொண்டு வந்தாலும் இந்த ஊழல்களை தடுத்து நிறுத்த முடியாது.
நம்மைப் படைத்த ஒருவன் இருக்கின்றான். அவன் நம் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான். நாம் மரணித்த பிறகு நம்மை திரும்பவும் உயிர்கொடுத்து எழுப்பி அவன் நம்மை கேள்வி கேட்பான் என்ற அச்ச உணர்வு எவரிடத்தில் உள்ளதோ அவர்களால் தான்
அத்தகைய ஆட்சியாளர்களால் தான் ஊழல் செய்யாமல் ஆட்சி செய்ய முடியும்.
பொதுச் சொத்தி-லிருந்து ஒரு சிறு பொருளை எடுத்தாலும்
அல்லாஹ்விடம் நாம் பதில் சொல்லி-யாக வேண்டும் என்ற அச்சவுணர்வு இருந்தால் மட்டும்தான் ஊழலை ஒழிக்க முடியும். 

தீன்குலபெண்மனி மாத இதழ்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை