இறைநேசர்களை இறைத்தூதரால் அறிய முடியுமா?

இறைநேசர்களை இறைத்தூதரால் அறிய முடியுமா?
ஒருவரை நல்லடியார்மகான் என்று நபித்தோழர்களால் கூடக் கண்டுபிடிக்க முடியாது என்பதற்குஏராளமான ஆதாரங்களைக் கடந்த இதழில் பார்த்தோம்அதுபோல் நபி (ஸல்அவர்களால் கூட,அல்லாஹ் அவர்களுக்கு இவர் நல்லவர்இவன் கெட்டவன்இவன் முனாஃபிக் (நயவஞ்சகன்என்றுவஹீ அறிவித்துக் கொடுத்தாலே தவிர ஒருவரை நல்லடியார் என்றும் மகான் இறைநேசர் என்றும்கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றனஇன்ஷா அல்லாஹ் அதைஒவ்வொன்றாக நாம் பார்க்கவிருக்கின்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள்உங்கüல் ஒருவர் மற்றொருவரை விட வாக்குசாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும்ஆகவேஎவரது (சாதுர்யமானசொல்லை வைத்து அவரதுசகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியதுஎன்று தீர்ப்பüத்து விடுகின்றேனோ அவருக்கு நான்நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன்ஆகவேஅவர் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நூல்புகாரி 2680
தம்மிடம் வழக்குகள் கொண்டு வரப்படும் போது வெளிப்படையான வாதங்களையும் ஆதாரங்களையும்வைத்துத் தீர்ப்பளிப்பதாகவும் சில நேரங்களில் அந்தத் தீர்ப்பு தவறாக அமைந்து விடும் என்றும் நபிகள்நாயகம் (ஸல்அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
அதாவதுநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் யாரை நல்லவன் என்று கருதினார்களோ அவன் மறுமையில்கெட்டவானகவும்கெட்டவன் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் நல்லவர்களாகவும் இருப்பார்கள்தன்முன்னால் நின்று வழக்குரைக்கும் இருவரில் யார் உண்மையாளன் என்பதை நபியவர்களால்கண்டுபிடிக்கமுடியாது என்றால் மற்றவர்களுக்கு அது இயலுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்
நபியவர்கள் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பதை மட்டும் அறிபவர்களாக இருந்தால் அவ்விருவரில்யார் பொய் சொல்கிறார்யார் உண்மை சொல்கிறார் என்பதை அறிந்து அவர்களிடம் விசாரணைசெய்யாமல் அந்தப் பொருள் யாருக்குரியதோ அவரிடம் கொடுத்திருப்பார்கள்எனவே நபியவர்களால்கூட நல்லவர் யார்கெட்டவர் யார் என்பதை அறிய முடியவில்லை என்பதற்கு இந்தச் செய்திசான்றாகும்.
இப்படி நபிகள் தம்முடைய வாழ்நாளில் எத்தனையோ பேருக்கு இப்படி தீர்ப்பளித்திருப்பார்கள்.எத்தனையோ நல்லவனைகெட்டவன் என்று முடிவு செய்திருப்பார்கள்எத்தனையோ கெட்டவனைநல்லவன் என்று முடிவு செய்திருப்பார்கள்ஆக நபியவர்களாலேயே ஒரு மனிதரின் உள்ளத்தில்உள்ளதைக் கண்டறிய முடியவில்லை என்றால் நாம் எப்படி ஒருவரை இவர் அவ்லியாஇறைநேசர்,மகான் என்று கண்டுபிடிக்க முடியும்அவ்வாறு முடியும் என்று சொன்னால்நபியவர்களை விட நமக்குஅதிகமான அறிவு ஞானம் இருக்கிறது என்றாகிவிடும்நபிகள் நாயகத்துக்குத் தெரியாதது எங்களுக்குத்தெரியும்நபியவர்களுக்கு உள்ளத்தில் உள்ளதைக் கண்டுபிடிக்கத் தெரியாதுஆனால் எங்களுக்குஉள்ளத்தில் உள்ளதைக் கண்டுபிடிக்கத் தெரியும் என்றாகிவிடும்இதை நாம் புரிந்து கொண்டால் நாம்யாரையும் அவ்லியா என்றோ மகான் என்றோ சொல்ல மாட்டோம்.
நபி (ஸல்அவர்கüடம் ரிஅல்தக்வான்,  உஸய்யா,  பனூ  -ஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்வந்து,தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினர்மேலும்,  தமது சமுதாயத்தினரை நோக்கிஒரு படையனுப்பி உதவும்படியும் நபி (ஸல்அவர்கüடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்நபி  (ஸல்அவர்கள்அன்சாரிகü-ருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள்அவர்களை நாங்கள்"காரீகள்' (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்என்று அழைத்து வந்தோம்அவர்கள் பகல்நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்இரவு நேரத்தில் தொழுவார்கள்அவர்களை அழைத்துக் கொண்டுஅந்தக் குலத்தார் சென்றனர்இறுதியில், "பீரு மஊனாஎன்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன்முஸ்-ம்களை ஏமாற்றிக்  கொன்று விட்டனர்உடனே,  நபி (ஸல்அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்)ரிஅல்தக்வான்பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்டஅந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்டஓர் இறைவசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.
அறிவிப்பவர்அனஸ் (ரலி)
நூல்புகாரி 3064
மேலும் இந்த ஹதீஸ் புகாரியில் 1002, 3170, 4088, 4090, 4096 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளது.
இதில் நாம் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நபியவர்களிடம் வந்த நான்கு கூட்டத்தாரும்மகா கெட்டவர்கள் என்று நபியவர்களுக்குத் தெரியவில்லை70 முஸ்லிம்களைக் கொன்ற பிறகு தான்அந்தக் கூட்டத்தினர் கெட்டவர்கள் என்பது தெரிய வருகிறதுமுதலில் வரும்போதே அவர்கள்கெட்டவர்கள் என்று தெரிந்திருந்தால் நபியவர்கள் உஷாராக இருந்திருப்பார்கள்இவர்கள் 70 பேரையும்அழைத்துச் சென்று வஞ்சமாகக் கொலை செய்ய வந்திருக்கிறார்கள் என்பதை முதலிலேயேஅறிந்திருந்தால்அந்தக் கூட்டத்தினரைக் கைது செய்திருப்பார்களாஇல்லையா?
ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை70 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் சாதாரணமான விஷயம்அல்லமிகவும் பயங்கரமான விஷயம்கொல்லப்பட்ட 70 ஆட்களும் காரிகள்குர்ஆனை நன்கு மனனம்செய்தவர்கள்குர்ஆனை மிகவும் அறிந்த ஆலிம்கள்மார்க்க அறிஞர்களாக இருந்த ஸஹாபாக்கள்.
நபியவர்கள் அத்தகைய ஸஹாபாக்களை முத்துக்களைப் போல பொறுக்கி எடுத்து அவர்களுடன்அனுப்பி வைக்கிறார்கள்ஆனால் நல்லவர்கள் என்ற நம்பிக்கையுடன்பாதுகாப்பிற்காக ஆயுதங்கள்எதுவும் எடுக்காமல் வெறுங்கையுடன் சென்ற அந்த 70 பேரையும் நம்ப வைத்து கழுத்தைஅறுத்திருக்கிறார்கள்.
இந்த இடத்தில் நபியவர்களுடைய கணிப்பு தவறாக இருந்திருக்கிறதுஅதாவது நபியவர்களும்மற்றஸஹாபாக்களும் யாரை முஸ்லிம்கள்நல்லவர்கள் என நினைத்தார்களோ அவர்கள் கெட்டவர்களாகஇருந்திருக்கிறார்கள்அவர்களுடைய வெளிப்படையான தோற்றத்தை வைத்து நல்லவர்கள் என நம்பிஏமாந்துள்ளார்கள்இது வஹீ வராததின் போது நடந்ததுஅந்த 70 பேரும் கொல்லப்பட்டது வஹீயின்மூலம் வந்தபோது தான் அவர்களுக்குத் தெரிந்ததுஅவர்கள் எங்கே கொல்லப்பட்டார்கள் என்பதும்அவர்களுக்குத் தெரிந்ததுஅவர்களுடைய கண்ணுக்கு முன்னால் கூட்டிச் சென்ற போது அவர்களுக்குத்தெரியவில்லைஇதிலிருந்தே அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்து கொடுத்தால்தான்மறைவானதைக் கூறுவார்களே தவிர தாமாக அவர்களால் மறைவானதை அறிந்து கொள்ள முடியாதுஎன்பது விளங்குகிறது.
ஆக நபியவர்களைக் கூட ஒரு கூட்டம் ஏமாற்றியிருக்கிறது என்றால் நம்மை ஒருவன் ஏமாற்றுவதுபெரிய விஷயமே அல்லபெரிய தலைப்பாகைஜுப்பா போட்டு வந்தால் அவரைப் பார்த்து நாம் ஏமாந்துவிடுகிறோம்ஒருவன் பள்ளிவாசலே கதி என்று இருப்பான்நாள் முழுவதும் கையில் தஸ்பீஹ்மணியை உருட்டிக் கொண்டு இருப்பான்அடுத்தவனிடம் பேசாமல் இறைநினைவில் மூழ்கி இருப்பான்.24 மணி நேரமும் குர்ஆனையே ஓதிக் கொண்டிருப்பான்இவ்வாறு செய்பவரை நாம் பார்த்த உடனேயேயோசிக்காமல் நம் ஊருக்கு அவ்லியா வந்து விட்டார் என்று கூறிவிடுவோம்நபிகள் நாயகம் (ஸல்)அவர்களையே ஒரு கூட்டம் ஏமாற்ற முடியும் என்றால்நம்மைப் போன்ற சாதாரண மக்களை ஏமாற்றமுடியாதா?
இதே போன்றுஇன்னும் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் வாழ்க்கையில்நடந்துள்ளது.
"உக்ல்'' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்அவர்கüடம் (மதீனாவிற்கு)வந்ததுஅவர்களுக்கு மதீனாவின் (தட்ப வெப்பச்சூழல் (உடல் நலத்திற்குஉகந்ததாக இல்லைஆகவேஅவர்கள், "அல்லாஹ்வின் தூதரேஎங்களுக்குச் சிறிது (ஒட்டகப்பால் கொடுத்து உதவுங்கள்'' என்றுகேட்டார்கள்.  அதற்கு  நபி  (ஸல்அவர்கள், "நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறுவழியை நான் காணவில்லை'' என்று பதிலüத்தார்கள்உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர்ஒட்டக மந்தையை நோக்கிஅவர்கள் சென்றார்கள்அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்)  உடல்  நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள்மேலும்ஒட்டகம் மேய்ப்பவனைக்கொன்றுவிட்டுஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டார்கள்இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்துவிட்டார்கள்ஒருவர் இரைந்து சத்தமிட்ட படி  நபி (ஸல்அவர்கüடம் வந்தார்நபி  (ஸல்)  அவர்கள்"உக்ல்குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள்பகல்உச்சிக்குஉயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்)  கொண்டு வரப்பட்டனர்நபி (ஸல்அவர்கள் அவர்களுடையகைகளையும் கால்களையும் துண்டித்தார்கள்பிறகுஆணிகளைக்  கொண்டு வரச் சொல்-உத்தரவிட்டார்கள்அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டுபழுக்கக் காய்ச்சப்பட்டனஅவற்றால்அவர்களுடைய கண் இமைகüன் ஓரங்கüல் சூடிட்டார்கள்அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) "ஹர்ரா'எனுமிடத்தில் எறிந்து விட்டார்கள்அவர்கள் (தாகத்தால்தண்ணீர் கேட்டும் இறக்கும் வரைஅவர்களுக்குத் தண்ணீர் புகட்டப் படவில்லை.
அறிவிப்பவர்அனஸ் (ரலி)
நூல்புகாரி 3018
மேலும் இந்தச் செய்தி புகாரியில் 1051, 4192, 4610, 5685, 5686, 5728, 6802, 6804, 6805, 6899 ஆகியஇடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியில்அந்தக் கூட்டத்தினர் வந்த நோக்கம் ஒட்டகத்தைத் திருடுவதற்காக தான்.இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வரவில்லைநாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டோம்என்று பொய் சொல்கிறார்கள்நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் உள்ளத்தை அறிந்துஇவர்கள்நடிக்கிறார்கள் என்பதை அறியக் கூடியவர்களாக இருந்தால் ஏமாந்திருக்க மாட்டார்கள்ஒரு காவலரைப்கொடுத்திருக்கவும் மாட்டார்கள்ஒட்டகத்தையும் இழந்திருக்க மாட்டார்கள்அவர்கள் துரோகம்செய்த பிறகுதான் இவர்கள் துரோகிகள் என்று நபியவர்களுக்குத் தெரிகிறது.
நாமும் இவ்வாறு தான் கண்டுபிடிக்க முடியும்நமக்கு ஒருவன் துரோகம் இழைக்க நினைக்கிறான்என்றால்கடைசி நிமிடம் வரைக்கும் நமக்கு இவன் துரோகம் இழைப்பான் என்று நம்மால் அறியமுடியாதுதுரோகம் இழைத்த பிறகு தான் இவன் துரோகி என்று நம்மால் கண்டறிய முடிகிறது.அல்லாஹ்வுடைய தூதரையே இவ்வளவு எளிதாக ஏமாற்றி விடுகிறார்கள் என்றால்நம்மை ஏமாற்றஎவ்வளவு நேரம் ஆகும்அதிலும் குறிப்பாக அவர்கள் நபித்தோழர்களைப் போல் நடித்துஏமாற்றியிருக்கிறார்கள்.
இதை நாம் எதற்காக இங்கே சுட்டிக்காட்டுகிறோம் என்றால் நாம் ஒருவரை அவ்லியா என்று நினைத்து,அவருக்கு விழா நடத்துகிறோம்கந்தூரி கொண்டாடுகிறோம்இவ்வாறு அவர் அவ்லியா என்பதற்குஎன்ன ஆதாரம்அவரை அவ்லியா என்று சொன்னது யார்அவ்லியா என்ற ஒருவர் இந்த கப்ரில்அடங்கியிருக்கிறாராஅப்படி ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்தாராஅப்படியே வாழ்ந்து அவர் நல்லசெயல்களைத் தான் செய்தார் என்று நீங்கள் பார்த்தீர்களாஅப்படியே நல்ல செயல் செய்தாலும்அதைவெளிப்படையாகச் செய்திருக்கலாம்ஆனால் அது அவருடைய உள்ளத்தில் இருந்ததாஅல்லதுநல்லவனைப் போல் நடிப்பதற்காகச் செய்தாராஇது போன்ற ஏராளமான கேள்விக்கு இன்னும் பதிலைக்காணோம்.
இவ்வாறு ஒருவரை அவ்லியா என்று சொல்லஅல்லாஹ்வுடைய அதிகாரத்தை நாம் கையில் எடுக்கவேண்டுமாநாம் அல்லாஹ்விடம் பாவியாக வேண்டுமாஇப்படி நாம் சிந்திக்க வேண்டும்எனவேஇதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய விஷயம்யாராலும் அவ்லியாவை கண்டுபிடிக்கமுடியாது என்பது தான்.
யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்அவர்கüடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பüப்பாகக் கொண்டுவந்தாள்நபி (ஸல்அவர்கள் அதி-ருந்து (சிறிதுஉண்டார்கள். "அவளைக் கொன்று விடுவோமா?''என்று (நபி (ஸல்அவர்கüடம்கேட்கப்பட்டது.  அவர்கள், "வேண்டாம்'' என்று கூறி விட்டார்கள்நபி(ஸல்அவர்கüன் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
அறிவிப்பவர்அனஸ் (ரலி)
நூல்புகாரி 2617
இந்தச் செய்தியில்தன்னைக் கொல்வதற்காகத் திட்டம் தீட்டி வந்த ஆளையே நபியவர்களால்கண்டுபிடிக்க முடியவில்லைநல்லவள் என நம்பித்தான் அந்த இறைச்சியை வாங்கிச் சாப்பிட்டார்கள்.தன்னைக் கொல்வதற்காக இதைத் தருகிறாள் என அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.எனவே நம்மிடத்தில் வெளிப்படையாக எவன் நல்ல செயல் செய்கிறானோ அவன் நம்மிடம் நல்லவனாகமுடியும்ஆனால் அல்லாஹ்விடத்தில் வெளிப்படையாகவும் நல்ல செயல்கள் இருந்துஉள்ளமும்பரிசுத்தமாக இருந்தால்தான் அவன் நல்லவனாக முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் கூறுகிறார்கள்:
நீங்கள் (மறுமை நாüல் கா-ல்செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும்கத்னாசெய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள்பிறகு, "நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றேஅதை மீண்டும் படைப்போம்இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நமதுவாக்குறுதியாகும்இதை நாம்நிச்சயம் செய்யவிருக்கின்றோம்'' (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள்மறுமை நாüல்(நபிமார்கüல்முதன் முதலாக (சொர்க்கத்தின்ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள்ஆவர்என் தோழர்கüல் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிகொண்டு செல்லப்படுவார்கள்நான், "இவர்கள் என் தோழர்கள்இவர்கள் என் தோழர்கள்'' என்று (அவர்களை விட்டுவிடும்படிகூறுவேன்.அப்போது, "தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததி-ருந்து இவர்கள் தம் மார்க்கத்தை விட்டு விலகி,தாம் வந்த சுவடுகüன் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்'' என்று கூறுவார்கள்அப்போது,நல்லடியார் (ஈஸா நபிகூறியதைப் போல், "நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக்கண்காணிப்பவனாக இருந்தேன்நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களையும்கண்காணிப்பவனாக இருந்தாய்மேலும்நீ (இப்போதுஅவர்களுக்கு தண்டனை üத்தால் அவர்கள்நிச்சயமாக உன் அடிமைகளேநீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்நீயே யாவற்றையும்மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்'' என்னும் (5:117-118) இறைவசனத்தை(பதிலாகக்கூறுவேன்.
நூல்புகாரி 3349
மேலும் இந்தச் செய்தி புகாரியில் 3447, 4740 ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "என்னுடைய சமுதாயத்தாரில் சில பேர் கொண்டுவரப்பட்டு அவர்கள் இடப்பக்கம்(நரகத்தை நோக்கிக்கொண்டு செல்லப்படுவர்அப்போது நான், "என் இறைவா! (இவர்கள்என்தோழர்கள்'' என்று சொல்வேன்அதற்கு, "இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் என்னவெல்லாம்புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும்அப்போது நான்,நல்லடியார் ஈசா (அலைஅவர்கள் சொன்னதைப் போல் "நான் அவர்கüடையே (வாழ்ந்துகொண்டு)இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்நீ என்னை அழைத்துக்கொண்டபோதுநீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகிவிட்டாய்'' என்று பதிலüப்பேன்அதற்கு, "இவர்களை நீங்கள்பிரிந்து வந்ததி-ருந்து இவர்கள் தங்கள் குதிகால்(சுவடு)üன் வழியே தம் மார்க்கத்தி-ருந்து விலகிச்சென்றுகொண்டே யிருந்தார்கள்'' என்று கூறப்படும். (புகாரி 4740) என்று இடம்பெற்றுள்ளது.
மற்றொரு அறிவிப்பில், "அவர்கள் என்னைச் சர்ந்தவர்கள்தாம்'' என்று நபியவர்கள் கூறியதற்கு, "உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்றுசொல்லப்படும்உடனே நான், "எனக்குப் பிறகு (தமது மார்க்கத்தைமாற்றிவிட்டவர்களை இறைவன்தன் கருணையி-ருந்து அப்புறப்படுத்துவானாகஅப்புறப் படுத்துவானாக!'' என்று சொல்வேன். (புகாரி7051) என்று இடம்பெற்றுள்ளது.
மேலே சொன்ன மூன்று ஹதீஸ்களிலும் மார்க்கத்தை விட்டுத் தடம்புரண்டு சென்றவர்களையெல்லாம் நல்லடியார்கள் என்று நினைத்துஅதே நிலையில் நபியவர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள்.நபியவர்கள் யாரை நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டுஅதை மறுமையில் வெளிப்படுத்தும் போதுஅது பொய்யென்று ஆகிவிடுகின்றது.
அதே மாதிரி மூஸா (அலைஅவர்களுடைய சம்பவத்தையும் நாம் இதற்குச் சான்றாக எடுத்துக்கொள்ளலாம்மூஸா நபி அவர்கள் பிர்அவ்னிடத்தில் சென்று அழைப்பு பணி செய்கிறார்கள்அதைப்பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறும்போது,
"மூஸாவேஉங்களிருவரின் இறைவன் யார்?'' என்று அவன் கேட்டான். "ஒவ்வொரு பொருளுக்கும்அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார். "முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் கேட்டான். "அது பற்றிய ஞானம் எனதுஇறைவனிடம் (உள்ளபதிவேட்டில் இருக்கிறதுஎன் இறைவன் தவறிட மாட்டான்மறக்கவும்மாட்டான்'' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 20:49-52
இவ்வசனத்தில் ஃபிர்அவ்ன்மூஸா (அலைஅவர்களிடம், "நீ புதிய மார்க்கத்தைச் சொல்கிறாய்ஆனால்இதற்கு முன்னால் சென்ற நம்முடைய அப்பன்பாட்டன்மார்கள்முன்னோர்களுடைய நிலை என்ன?அவர்களெல்லாம் நீ சொன்ன மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லையேஅவர்களுடைய கதி என்ன?'என்று ஃபிர்அவ்ன் கேட்கிறான்அதற்கு மூஸா நபியவர்கள் "அதைப் பற்றி எனக்கு எந்த ஞானமும்கிடையாதுஅது அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளதாகும்அது அவன் எடுக்க வேண்டிய முடிவு.அவனுடைய முடிவைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதுஎன்று கூறிவிடுகின்றார்கள்இதுதான்முஸ்லிம்களுடைய நிலைபாடாகவும் இருக்க வேண்டும்.
ஏகத்துவம் மாத இதழ்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை