வரதட்சணை ஓர் வன் கொடுமை


வரதட்சணை ஓர் வன் கொடுமை

ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர்
கொடுக்க வேண்டும்; பெண்களிடம்
வரதட்சணை கேட்கக்
கூடாது என்று இஸ்லாம் மார்க்கம்
வழிகாட்டுகிறது.
இது தான் அறிவுப்பூர்வமானதும்,
நேர்மையானதுமான தீர்ப்பாகும்.
இல்லற வாழ்வில் ஆணும்,
பெண்ணும் இன்பம்
அனுபவிக்கிறார்கள்.
இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர்
இன்பத்தை அனுபவிப்பதால் யாரும்
யாருக்கும் எதனையும் கொடுக்கத்
தேவையில்லை தான்.
ஆனாலும் இந்த
இன்பத்தை அடைவதற்காக பெண்கள்
தாம் அதிகமான தியாகத்தைச்
செய்கின்றனர். அதிகமான
சிரமங்களையும் சுமக்கின்றனர்.
எனவே பெண்களுக்கு ஆண்கள்
கொடுப்பது தான் நீதியாகும்.



# ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும்
திருமணம் நடந்த பின் ஆண்
தனது வீட்டிலேயே இருக்கிறான்.
தனது தாய், தந்தையர் மற்றும்
உறவினருடன் இருக்கிறான். ஆனால்
அவனை விட வயதில் குறைந்த பெண்
தனது பெற்றோரையும்,
சொந்தங்களையும்
துறந்து விட்டு கணவன்
வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்தத்
தியாகத்திற்காக பெண்களுக்குத் தான்
ஆண்கள் வழங்க வேண்டும்.



# திருமணத்திற்குப் பின்
மனைவிக்காக கணவன் எந்தச்
சேவையும் செய்வதில்லை.
அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச்
செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக்
கொள்கிறான். ஆனால் பெண்கள்
கணவனுக்காக சமைத்தல்,
உடைகளைத் துவைத்தல், வீட்டைப்
பராமரித்தல்,
கணவனுக்கு மட்டுமின்றி கணவனின்
உறவினர்களுக்கும்
சேர்த்து பணிவிடை செய்தல்
என்று ஏராளமான சுமைகளைத் தம்
தலையில் சுமந்து கொள்கின்றனர்.
மாமியார் கொடுமைகளையும் சில
பெண்கள் கூடுதலாக தாங்கிக்
கொள்ள வேண்டியுள்ளது. இந்தக்
காரணத்துக்காகவும் ஆண்கள் தாம்
பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.



# இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண்
கருவுற்றால் ஆணுக்கு இதனால்
எந்தச் சிரமமும், சுமையும் இல்லை.
பெண் தான் சிரமப்படுகிறாள். அவள்
எதையும் உண்ண முடியாத
மசக்கை நிலையை அடைகிறாள்.
இயல்பாக நடக்கவும், படுக்கவும்
முடியாத சிரமத்தைத் தாங்கிக்
கொள்கிறாள். அத்துடன் மரணத்தின்
வாசல் கதவைத்
தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள்.
இந்த
ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும்
போதாது.



# பிரசவித்த பின் குழந்தைக்காக
தந்தை எதையும் செய்வதில்லை.

பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண்
தூங்காது கவனிப்பதும் என
ஏராளமான சுமைகளும் அவள்
மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக்
காரணத்திற்காகவும் ஆண்கள்
பெண்களுக்கு மஹர்
கொடுப்பது தான் நேர்மையானது.



# அடுத்தடுத்து குழந்தைகள்
பிறந்து விட்டால் பெண்
தனது எல்லா வசந்தங்களையும்
துறந்து விடும்
நிலையை அடைகிறாள்.
பெண்களுக்கு ஆண்கள் தான்
கொடுக்க வேண்டும்
என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த
மனிதனும் மறுக்க முடியாது.



நன்றி www.onlinepj.om
 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை