புறக்கணிப்பு ஒரு போர்க் கவசம்.


புறக்கணிப்பு ஒரு போர்க்  கவசம்

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி அவர்களுடைய சமுதாயத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போதுஅவர்களது புறக்கணிப்பு என்ற வியூகத்தில் முன்மாதிரி இருக்கின்றது என்று பாராட்டிச் சொல்கின்றான்.
"உங்களை விட்டும்அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள்விலகியவர்கள்உங்களை மறுக்கிறோம்அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரைஎங்களுக்கும்உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்றுகூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரிஇருக்கிறது.
அல்குர்ஆன் 60:4
அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்று நிலைகுலையாமல் இருப்பதற்கும்,ஒரு நெடிய வளர்ச்சியைக் காண்பதற்கும் இப்ராஹீம் நபியின் இந்த முன்மாதிரி அடிப்படையாகஅமைந்துள்ளதுஅல்ஹம்துலில்லாஹ்.

தமிழகத்தில் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்குப் போட்டியாக சுன்னத்ஜமாஅத் ஆலிம்களும் குரல் கொடுத்தனர்ஆங்காங்கே பல்வேறு ஊர்களில் வரதட்சணை ஒழிப்புஇயக்கங்கள் செயல்பட்டனபட்டிமன்றங்கள்கருத்தரங்குகள்கண்டனக் கூட்டங்கள் என்று பல்முனைப்போர்கள் வரதட்சணைக்கு எதிராக நடந்தனஅவை அனைத்தும் தடயம் தெரியாமல் அழிந்து போயின.கால நீரோட்ட வெள்ளத்தில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டு விட்டனஎன்ன காரணம்போர்க்குரல்எழுப்பிய சுன்னத் வல் ஜமாஅத் போன இடமே தெரியவில்லைஏன்?
அவர்கள் தாங்கள் சொன்னபடி நடக்கவில்லைவரதட்சணைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள்தாங்கள் திருமணம் முடிக்கும் போதோ அல்லது தங்களது குடும்பத்தில் தங்கள் மகன்களுக்கோ,சகோதரர்களுக்கோ திருமணம் நடக்கும் போதோ தங்களின் பிரச்சாரத்திற்கு நேர்மாற்றமாக நடந்தனர்.
வரதட்சணை வாங்குகின்றகொடுக்கின்ற திருமணங்களில்அது எளிய திருமணமாக இருந்தாலும் சரி,ஆடம்பரத் திருமணமாக இருந்தாலும் சரி அதில் கலந்து கொண்டுஅங்கு நடைபெறுகின்ற விருந்துகளில்எந்தவித உறுத்தலும்குற்ற உணர்வும் இல்லாமல் பங்கெடுத்தனர்.
இது அந்தக் குற்றத்தைப் பற்றிய பார்வையை மழுங்கவும் மறக்கடிக்கவும் செய்ததுநெருப்பாகஇருந்தவர்களை நீறு பூக்க வைத்ததுஅதனால் அவர்களது முயற்சிகள்உழைப்புகள் அனைத்தும்விழலுக்கு இழைத்த நீராயிரன.
இன்று தப்லீக் இயக்கத்தினர் நன்மையை ஏவிதீமையைத் தடுக்கும் பணியைத் தாங்கள் தான்ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்தது போன்று பேசுவார்கள்இதற்கு அவர்கள் தான் தனி ஏஜெண்டுகள்போல் பிரச்சாரம் செய்வார்கள்ஆனால் வரதட்சணை திருமணங்களில்விருந்துகளில் போய் சர்வசாதாரணமாகக் கலந்து கொள்வார்கள்அதனால் அவர்களாலும் இந்தத் தீமையை ஒழிக்கமுடியவில்லை.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இறைவனின் அருளால் இந்த வரதட்சணை ஒழிப்பில் சாதனை படைத்துவருகின்றதுஇதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?
இந்த ஜமாஅத்தினர் தங்களது பிரச்சாரத்திற்கு மாற்றமாக நடக்கவில்லை.
"எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான்விரும்பவில்லைஎன்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன்எனக்குரிய நல்லுதவிஅல்லாஹ்விடமே உள்ளதுஅவனையே சார்ந்துள்ளேன்அவனிடமே மீளுகிறேன்'' என்று (ஷுஐப்)கூறினார்.
அல்குர்ஆன் 11:88
இதுதீமையை ஒழிப்பதற்கு இறைத்தூதர் ஷுஐப் (அலைஅவர்கள் கூறுகின்ற இலக்கணமாகும்.
தான் செய்யாத ஒன்றை மக்களுக்கு ஏவுவதை அல்லாஹ் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றான்.
நம்பிக்கை கொண்டோரேநீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்நீங்கள் செய்யாததைச் சொல்வதுஅல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.
அல்குர்ஆன் 61:2,3
இந்தப் பிரச்சாரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நிலைத்து நிற்பதற்கு அடுத்த காரணம்இதுபோன்ற தீமைகளைஇப்ராஹீம் (அலைஅவர்களின் பாணியில் புறக்கணித்தது.
வரதட்சணை எனும் கொடிய தீமை நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று தவ்ஹீத்ஜமாஅத் மிக வலிமையாகப் போதிப்பதாலும்இந்தத் திருமணங்களைப் புறக்கணிப்பதாலும்வரதட்சணை ஒழிப்பில் இந்த ஜமாஅத் சாதனை படைத்து வருகின்றது.
புறக்கணிப்பின் பூரண பலன்கள்
பொதுவாக ஒரு தீமையைப் புறக்கணிக்கும் போது அதில் மிகப் பெரிய பலன்கள் உள்ளன.
நாம் அந்தத் தீமைக்குப் பலியாகாமல் இருப்பது அதில் முதலாவதாகும்.
தடுக்கப்பட்ட ஒரு தீமையில் பங்கெடுப்பது அந்தத் தீமையின் கடுமையை நம்மிடம் குறைத்து விடும்.கடைசியில் நாமும் அந்தத் தீமையைச் செய்ய ஆரம்பித்து விடுவோம்.
பனூ இஸ்ரவேலர்களிடம் இது தான் நடந்ததுஅதனால் அவர்கள் இறைத்தூதர்களின் சாபத்திற்குஆளாயினர்.
"தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக இறைவனைமறுத்த இஸ்ராயீலின்மக்கள் சபிக்கப்பட்டனர்அவர்கள் மாறு செய்ததும்வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம்.அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர்அவர்கள்செய்தது மிகவும் கெட்டது.
அல்குர்ஆன் 5:78, 79
தீமையான காரியங்களில்குறிப்பாக இணை வைப்பு என்ற கொடிய தீமையில் ஒரு கவர்ச்சியும்கவிழ்த்து விடும் தன்மையும் உள்ளது.
பனூ இஸ்ரவேலர்கள் இந்தக் கவர்ச்சிக்குப் பலியானதை அல்லாஹ் இரண்டு இடங்களில் கூறுகின்றான்.
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம்அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடுநடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். "மூஸாவேஅவர்களுக்கு இருக்கும் கடவுள்கள்போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!'' என்று கேட்டனர். "நீங்கள் அறிவு கெட்டகூட்டமாகவே இருக்கின்றீர்கள்'' என்று அவர் கூறினார்.
"அவர்கள் எதில் இருக்கிறார்களோஅது அழியக் கூடியதுஅவர்கள் செய்து வந்தவையும் வீணானது.''
"அல்லாஹ் அல்லாதவர்களையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்அவனே உங்களைஅகிலத்தாரை விட சிறப்பித்திருக்கிறான்'' என்று (மூஸாகூறினார்.
அல்குர்ஆன் 7:138-140
பிளந்த கடல் சேர்ந்துகாய்ந்த இடம் கூட நனைந்திருக்காதுஆனால் அதற்குள் அவர்களுடைய நிலைஅவ்வளவு பெரிய பாவத்தை நோக்கி விரைகின்றது.
ஏதோ சிறு குழந்தைகள் பொம்மைகளை வாங்கிக் கேட்பது போன்று சிலைகளைத் தங்களுக்குஏற்படுத்தித் தருமாறு கேட்கின்றனர்.
கடவுளான காளை மாடு
மூஸா (அலைஅவர்கள் இறைவனிடத்தில் வேதம் பெறுவதற்காகச் செல்கின்றார்கள்அதற்குள்ளாகசாமிரி என்பவன் அந்தச் சமுதாயத்திற்குள் ஒரு விளையாட்டை விளையாடி விட்டான்இதைஅல்லாஹ் மிகவும் சுவையாக விவரிக்கின்றான்.
"மூஸாவேஉமது சமுதாயத்தை விட்டு விட்டு அவசரமாக வந்தது ஏன்?'' (என்று இறைவன் கேட்டான்.)
"அவர்கள் இதோ எனக்குப் பின்னால் வருகின்றனர்என் இறைவாநீ திருப்திப் படுவதற்காக உன்னிடம்விரைந்து வந்தேன்'' என்று அவர் கூறினார்.
"உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம்அவர்களை ஸாமிரி வழி கெடுத்து விட்டான்''என்று (இறைவன்கூறினான்.
உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும்கவலைப்பட்டவராகவும் திரும்பினார். "என்சமுதாயமேஉங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையாஅல்லது(நான் புறப்பட்டுப் போய்அதிக காலம் ஆகி விட்டதாஅல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீதுகோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா?'' என்று கேட்டார்.
"நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லைமாறாக அந்தச்சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டனஅதை வீசினோம்இவ்வாறே ஸாமிரியும்வீசினான்.
அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்வெளிப்படுத்தினான்அது சப்தமும்போட்டதுஉடனே அவர்க(ளில் அறிவீனர்க)ள் "இதுவே உங்கள் இறைவன்மூஸாவின் இறைவன்.அவர் வழி மாறிச் சென்று விட்டார்'' என்றனர்.
அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும்அவர்களுக்குத் தீங்கு செய்யவும்நன்மைசெய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?
"என் சமுதாயமேஇதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்அளவற்ற அருளாளன் தான் உங்கள்இறைவன்எனவே என்னைப் பின்பற்றுங்கள்எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!'' என்று இதற்குமுன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.
"மூஸாஎங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம்'' என்று அவர்கள் கூறினர்.
"ஹாரூனேஅவர்கள் வழி கெட்டதை நீர் பார்த்த போது என்னை நீர் பின்பற்றாதிருக்க உமக்கு என்னதடைஎனது கட்டளையை மீறி விட்டீரே!'' என்று (மூஸாகேட்டார்.
"என் தாயின் மகனேஎனது தாடியையும்எனது தலையையும் பிடிக்காதீர்எனது வார்த்தைக்காககாத்திராமல் இஸ்ராயீலின் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர் என்று கூறுவீரோ எனஅஞ்சினேன்'' என்று (ஹாரூன்கூறினார்.
"ஸாமிரியேஉனது விஷயமென்ன?'' என்று (மூஸாகேட்டார்.
"அவர்கள் காணாததைக் கண்டேன்இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன்அதை எறிந்தேன்.என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது'' என்றான்.
"நீ சென்று விடுஉனது வாழ்க்கையில் "தீண்டாதேஎன நீ கூறும் நிலையே இருக்கும்மாற்றப்படமுடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளதுநீ வணங்கிய உனது கடவுளைப் பார்அதைநெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று (மூஸாகூறினார்.
அல்குர்ஆன் 20:83-97
மூஸா (அலைஅவர்கள் தனது சகோதரர் ஹாரூனைக் கண்காணிக்கும்படிச் செய்து விட்டுசில நாட்கள்இறைவனிடம் வேதம் பெறுவதற்காகச் சென்று திரும்புவதற்குள்ளாக இவ்வளவு பெரிய விளையாட்டைசாமிரி என்பவன் விளையாடித் தள்ளிவிட்டான்இத்தனைக்கும் ஹாரூன் என்ற இறைத்தூதர் ஊரில்இருக்கின்றார்அப்படியாயின் இந்த இணை வைப்பு என்ற விஷம் எப்படிப்பட்டதுஅதன் வீரியமும்கவர்ச்சியும் எப்படிப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
இன்று இந்துக்களிடம் உள்ள பொங்கல் பண்டிகையை எடுத்துக் கொள்வோம்இது சூரியனைக் கடவுளாகவழிபடுகின்ற ஒரு பண்டிகையாகும்அந்தப் பண்டிகைக்கு நம்மை அழைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்நாம் இதில் போய் கலந்து கொள்வோம் என்றால் இந்தப் பாவத்தின் வீரியம் நம்மிடமிருந்துஎடுபட்டுப் போய் நாளடைவில் நாமும் சமத்துவப் பொங்கல் கொண்டாட ஆரம்பித்து விடுவோம்இங்குதான் இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பு நமக்குக் கைகொடுக்கின்றதுநம்மை நரகத்திலிருந்து காப்பாற்றிவிடுகின்றதுகலாச்சாரக் கலப்பு என்ற பெயரில் இணை வைப்பில் வீழ்ந்து விடாமல் நம்மையும்நம்முடைய சந்ததிகளையும் இந்தப் புறக்கணிப்பு காப்பாற்றுகின்றது.
எதிரிகள் திருந்துதல்
என்னைப் படைத்தவனைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நான் விலகியவன்அவன் எனக்குநேர் வழி காட்டுவான் என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும்தமது சமுதாயத்திடமும் கூறியதைநினைவூட்டுவீராக!
இதையே அவரது வழித்தோன்றல்களிலும் நிலைத்திருக்கும் கொள்கையாக்கினான்இதனால் அவர்கள்திருந்தக்கூடும்
அல்குர்ஆன் 43:26-28
இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பில் முன்மாதிரி இருக்கின்றது என்று 60:4 வசனத்தில் சொன்னஅல்லாஹ்இந்தக் கொள்கைப் பிரகடனத்தைப் பிந்தைய சமுதாயத்திற்குத் தொடரும் கொள்கையாகஆக்கியிருப்பதாகக் கூறுகின்றான்ஏகத்துவக் கொள்கை எங்கெல்லாம் உதயமாகியிருக்கின்றதோ அங்குஇந்தப் புறக்கணிப்பு தொடரும் என்று கூறுகின்றான்இதன் மூலம் மக்கள் இந்தக் கொள்கைக்குத்திரும்புவார்கள் என்றும் கூறுகின்றான்ஆம்இந்தப் புறக்கணிப்பின் மூலம் மக்கள் திருந்துவார்கள்என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
உதாரணத்திற்குபொங்கல் பண்டிகைக்காக அழைப்பவர்களிடம், "நாங்கள் ஒரே இறைவனைவணங்குபவர்கள்அவன் அல்லாதவர்களுக்காகப் படைக்கப்பட்டதை நாங்கள் சாப்பிட மாட்டோம்என்றுகூறும் போது அது அவர்களைச் சிந்திக்க வைக்கின்றதுஇறுதியில் அவர்களை மனம் மாறவைக்கின்றது.
நம்முடைய தாய்தந்தை அல்லது பிள்ளைகள் போன்ற உறவினர்கள் இணை வைப்பில் இருந்தால்அவர்களிடம் இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பு என்ற போர் கவசத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.இப்படி நாம் இருக்கும் போதுநாம் அவர்களுடைய கொள்கையில் ஒருபோதும் இறங்கப் போவதில்லை.ஆனால் சத்தியவாதிகளைப் போன்று அசத்தியவாதிகளால் உறுதியாக இருக்க முடியாதுஅவர்கள்பாசத்திற்குப் பலியாகி விடுவார்கள்அதன் மூலம் சத்தியத்திற்கு வந்து விடுவார்கள்இதுபுறக்கணிப்பின் மூலம் கிடைக்கும் மிகப் பெரும் வெற்றியாகும்.
மறுமையில் இது ஒரு காவல் அரண்
அபூசயீத் அல்குத்ரீ (ரலிஅவர்கள் கூறியதாவது:
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரேமறுமை நாüல் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?'' என்றுநபி (ஸல்அவர்கüடம் கேட்டோம்அதற்கு அவர்கள், "(மேகமூட்டமில்லாதுவானம் தெளிவாகஇருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியத்துக்கொண்டுசிரமப்படுவீர்களா?''என்று கேட்டார்கள்நாங்கள், "இல்லை'' என்று பதிலüத்தோம்இவ்விரண்டையும் பார்க்க நீங்கள்சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்''என்று கூறிவிட்டு (பின்வருமாறுவிளக்கினார்கள்:
(மறுமை நாüல்அழைப்பாளர் ஒருவர், "ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக்கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்'' என்று அழைப்புவிடுப்பார்அப்போது சிலுவைவணங்கிகள் தங்கள் சிலுவையுடனும்சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும்ஒவ்வொரு(பொய்த்தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும் செல்வார்கள்முடிவில் அல்லாஹ்வைவணங்கிக்(கொண்டு நன்மைகளும் புரிந்துகொண்டிருந்த நல்லவர்கள் அல்லது (அல்லாஹ்வையும்வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்துவந்தபாவிகள்மேலும் வேதக்காரர்கüல் மிஞ்சியவர்கள்மட்டுமே எஞ்சியிருப்பர்பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக்காட்டப்படும்.
அப்போது யூதர்களிடம், "நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்கப்படும்அதற்குஅவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம்'' என்றுபதிலளிப்பார்கள்அப்போது அவர்களிடம், "நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்அல்லாஹ்வுக்கு மனைவியோமக்களோ இருக்கவில்லை'' என்று சொல்லப்படும்பிறகு அவர்களிடம், "இப்போது நீங்கள் என்னவிரும்புகிறீர்கள்?'' என்று கேட்கப்படும்அதற்கவர்கள், "எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்புகட்டுவாயாக!''என்பார்கள்அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு), "குடியுங்கள்'' என்றுகூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போதுஅவர்கள் நரகத்தில் விழுந்துவிடுவார்கள்.
பின்னர் கிறிஸ்தவர்களிடம், "நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்என்று கேட்கப்படும்அதற்குஅவர்கள், "அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவைநாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்'' என்றுபதிலளிப்பார்கள்அப்போது அவர்களிடம், "நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்அல்லாஹ்வுக்கு மனைவியோமக்களோ இருக்கவில்லை'' என்று கூறப்பட்ட பின் "நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?'' என்று கேட்கப்படும்.அதற்கு அவர்கள், "நீ எங்களுக்கு (நீர்புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்'' என்று பதிலளிப்பார்கள்.அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று காட்சி தரும் நரகத்தைக் காட்டி) "குடியுங்கள்!'' என்றுகூறப்படும்அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள்.
இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லோர் அல்லது(அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்ததீயோர் மட்டும் எஞ்சியிருப்பர்.அவர்களிடம் "மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்சென்றுவிட்டார்களேநீங்கள்மட்டும் ஏன் இங்கேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்கப்படும்.
அதற்கு அவர்கள், "(உலகத்தில்நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக)இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிராமல்அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள் பின்னால் நாங்கள்செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர் "ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகவாழ்வில்தாம் வணங்கிக்கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும்என்று அழைக்கக் கேட்டோம்நாங்கள் (வணங்கிக்கொண்டிருந்தஎங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்''என்று கூறுவார்கள்.
அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன்அவனைப் பற்றி அவர்கள் எண்ணிவைத்திருந்ததோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து, "நானே உங்கள்இறைவன்'' என்று கூறுவான்அதற்கு இறைநம்பிக்கையாளர்கள், "நீயே எங்கள் இறைவன்'' என்றுசொல்வார்கள்அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள்.அப்போது, "அவனை இனங் கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம்உண்டா?'' என்று (ஒருவர்கேட்பார்அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், "(இறைவனின்கால்(பாதம்)தான்'' என்று கூறுவார்கள்உடனே அல்லாஹ் தனது காலை வெüப்படுத்துவான்இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (சஜ்தாசெய்வார்கள்முகஸ்துதிக்காகவும்பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுதுகொண்டிருந்தவர்கள் மட்டுமே அப்போதுஎஞ்சியிருப்பார்கள்அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள்ஆனால்அவர்கüன் முதுகு (குனியமுடியாதவாறுஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிர வணக்கம் செய்ய முடியாது).
நூல்புகாரி 7439
புகாரி 4581வது எண்ணில் இடம் பெற்றுள்ள இதே அறிவிப்பில், "உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின்தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகஇந்த மக்கüடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாகஇருந்தும்அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க,இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக்கொண்டிருந்த எங்கள் இறைவனையேநாங்கள் (இத்தருணத்தில்எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்'' என்று பதிலüப்பதாக இடம்பெற்றுள்ளது.
மறுமையில் இந்தப் பதில் நம்முடைய வாயிலிருந்து வர வேண்டும் என்றால் இந்த உலகில் புறக்கணிப்புஎன்ற கொள்கையில் உறுதியாக இருந்தால் தான் வரும்இல்லையென்றால் இந்த வார்த்தை நம்மிடம்வராது.
இந்த அடிப்படையில் புறக்கணிப்பு என்பது இம்மையிலும் மறுமையிலும் நம்மைக் காக்கும் ஒருகவசமாக அமைந்திருக்கின்றதுஇப்ராஹீம் நபியின் தியாகங்களை நினைவுகூருகின்ற இந்த நாட்களில்அவர்களின் புறக்கணிப்பு என்ற போர்க்கவசத்தை நமது கொள்கையாகக் கொள்வோமாக!
ஏகத்துவம் மாத இதழ்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை