இஸ்லாமும் துறவறமும்.
இஸ்லாமும் துறவறமும்
ஒரு மனிதன் தனக்கு வாழ்க்கைத் துணையில்லாமல் ஒழுக்கமாக வாழ முடியாது. ஒருவன் திருமணம் செய்யாமல் வாழ்கிறான் என்றால் ஒன்று அவன் ஆண்மையற்றவனாக இருப்பான். அல்லது தவறான வழியில் தன் ஆசையை தீர்த்துக் கொள்ளக்கூடியவனாக இருப்பான்.
திருமணம் முடிக்காமல் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்வதாக யார் கூறினாலும் அது பொய்யே. ஏனென்றால் இல்லறம் என்பது மனித உடலுக்கு அவசியமான தேவையான ஒன்று. இந்தத் தேவை ஒரு மனிதனுக்கு சரியாகக் கிடைத்தால் தான் அவனால் மன நிம்மதியாக வாழ முடியும்.
இல்லையென்றால் தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவான். இந்தப் பேருண்மையை செய்தித் தாள்களின் வாயிலாக தொடர்ச்சியாக நாம் அறிந்து வருகின்றோம்.
துறவறம் மேற்கொள்வதாகக் கூறிக் கொள்ளும் சாமியார்களும் பாதரிமார்களும் தான் அதிகமாக பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகின்றனர். சாதாரண மனிதர்களை விட இவர்களை இவ்விஷயத்தில் வரம்பு மீறி நடக்கின்றனர்.
தங்களால் கடைப்பிடிக்க இயலாத கொள்கையை கையில் எடுத்த காரணத்தால் தீமையின் உச்ச நிலைக்குச் சென்று விடுகின்றனர். மேலும் உலகத்தில் எல்லோரும் நான் துறவறம் மேற்கொள்ளப் போகின்றேன் என்று முடிவெடுத்தால் அதனால் உலகில் தீமைகள் தான் ஏற்படும்.
வாழ்க்கைதத் துணைத் தேவைப்படுபவர்கள் வழிகெடுவதற்கும் மனித வர்க்கம் பெருகாமல் குறிப்பிட்ட காலத்தில் அழிந்து போவதற்குமே இது வழிவகுக்கும்.
Comments