மறு பிறவியின் மாயைகள் உண்மையா???

மறு பிறவியின் மாயைகள் உண்மையா???

இந்தியாவில் வாழும் சிலர் மறு பிறவி உள்ளதாக
நம்புகின்றனர். இப்படி ஒரு தத்துவம் இருக்க முடியுமா?
அப்படி இருந்தால் அது இந்த உலகத்திற்கு நன்மை
பயக்குமா? அறிவுக்கு ஏற்றதா? என்பது போன்ற கேள்வி
களுக்கு பதில் இல்லை எனபதே உண்மை.

ஒரு குட்டி கதையும் அது உணர்த்தும் சம்பவமும்.
ஒரு முற்றும் துறந்த முனிவர் ஒரு சிறுவனை
கண்டார். அச்சிறுவனோ ஒரு நாயை கடுமையாக
துண்புறுத்திக் கொண்டிருந்தான் அப்போது அந்த முனிவர்
அச்சிறுவனை நோக்கி ஏன் இந்த நாயை துண்புறுத்துகின்றாய்
அது ஒரு வாயில்லாத ஜீவன் தானே என்று முனிவர் கேட்டார்.
அதற்கு அச்சிறுவன் என்ன முனிவரே உங்களுக்கு தெரியாதா?
போன ஜென்மத்தில் நான் நாயாகவும் நாய் நானாகவும் இருக்கும் போது இப்படித்தான் செய்தது அப்போது(அந்த ஜென்மத்தில்)யாறும்
கேட்க வில்லை இப்போது ஏன் கேட்கின்றீர் என்றான் அச்சிறுவன்
உடனே முனிவர் வாயடைத்துப் போனார். அச்சிறுவனுக்கு படிக்கும் நீங்களாவது பதில் சொல்லலாமே?????????????????????

இப்போ கேள்வி என்னவென்றால் உதாரணமாக இந்தியாவை
மனுதர்மாம் ஆளுகின்றது என்று வைத்துக் கொள்வோம். (சும்மா
ஒரு பேச்சுக்குத்தான் (இது கணவிலும் நடக்காது)
இந்தியா உருப்படுமா??? உருப்படாது எப்படி என்றால்
ஒருவன் ஒரு பெண்னை கற்பழிக்கின்றான் என்று வைத்துக்
கொள்ளுங்கள் கையும் மெய்யுமாக பிடித்தாலும் அவனை
தண்டிக்க முடியாது ஏன்? அவன் சொல்வான் போன ஜென்மத்தில்
நான் அவளாகவும் அவள் நானாகவும் இருக்கும் போது இப்படித்தான்
நடந்த்து என்பான்.அப்போது(அந்த ஜென்மத்தில்)யாறும்
கேட்க வில்லை இப்போது ஏன் கேட்கின்றீர் இப்படி இது போன்ற
அனைத்து தீமைகளையும்
செய்து விட்டு இப்படியே ஒவ்வருவரும் சொன்னால் இந்தியா என்ன
கெதியாகிவிடும் என்பதை அறிவுடையோர் சிந்திக்க வேண்டும்.....???
மேலும் அதிக விபரத்திற்காகவும் சிந்திப்பவர்களுக்காகவும்
சில கேள்விகள்

மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்துவிடலாம்.
அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும்அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான்இந்தப் பிறவியில் ஒருவன்நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.
இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர்மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக்கொள்வதில்லைமற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.
நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும்பிறப்பெடுப்போம்அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய்நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதேபோன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள்.
இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்நூறு வருடங்களுக்குமுன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்ததுஇன்னும் பல ஆயிரம்ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர்தான் இருந்திருப்பார்கள்இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.
மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.
அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகினமனிதனையும் சேர்த்துஎத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லைஉதாரணத்துக்காகஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்ஒவ்வொரு வகைஉயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒருகோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.
மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாதுஇந்த ஒரு கோடிஉயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும்வேண்டுமானால் ஆடு மனிதனாக,மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிரஒரு கோடியை விட அதிகமாகவே கூடாதுஒரு கோடியாகஇருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்லபுதியஉயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.
பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார்அப்போது இந்தியாவில் முப்பது கோடிமக்கள் இருந்தனர்அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும்.80 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம்நாம் மட்டும் அதிகமாகவில்லைஅனைத்து உயிரினங்களும்அதிகமாகியுள்ளன.
புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும்பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாதுபெருக முடியாதுமறு பிறவி இல்லை என்பதற்குஇதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.
அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லைஏற்கனவே செய்த பிறவிப்பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?
இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால்மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனைவழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும்அது தான் தண்டனைபரிசு கொடுப்பதாகஇருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோதண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.
இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில்இருந்தோம் என்பது தெரியுமாநிச்சயம் தெரியாதுஎன்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையைஅடைந்தோம் என்று தெரியுமாஅதுவும் தெரியாதுஅப்படியானால் அவன் அடுத்த பிறவியைப்பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?
ஒருவன் கொலை செய்து விடுகிறான்அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறதுஆனால் கொலைசெய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்இந்த நிலையில்அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள்அவனே உணராமல் அவனைத் தண்டிப்பதுதண்டனையாகாதுஅதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறுதீர்ப்பளிக்கிறது.
அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதாநான் என்ன செய்தேன் என்பதுஎனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும்நீதிக்கும் சரியாகஇருக்குமா?
எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லைகாரண காரியத்தோடுஅலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.





Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை