தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவனா???


தன்னை அறிந்தவர் தன் நாயனை அறிந்தவனா??
தன்னை அறிந்தவர் தன் நாயனை அறிந்தவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சில சூஃபியாக்கள் நபி (ஸல்) அவர்களின் மீது அவதூறு சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். 

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி கூட ஹதீஸ் நூற்களில் இடம்பெறவில்லை. இந்தக் கருத்தில் பலவீனமான ஹதீஸ் கூட ஹதீஸ் நூற்களில் இல்லை. 

முஹ்யித்தீன் இப்னு அரபீ மற்றும் ஷஃரானி போன்ற சூபிக்கொள்கை அயோக்கியர்கள் தங்கள் நூற்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இப்படி ஒரு செய்தியை புனைந்து எழுதி வைத்துள்ளனர். இதற்கு அறிவிப்பாளர் தொடரையோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியைக் கேட்ட நபித்தோழரையோ யாராலும் காட்ட இயலாது. அந்த அளவுக்கு இது பொய்யான தகவல். 

நபியின் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தெளிவபடுத்தும் விதமாக பிற்காலத்தில் இமாம் சஹாவீ, அஜ்லூனி போன்ற அறிஞர்கள் நூற்களைத் தொகுத்துள்ளனர். அதில் இது இட்டுக்கட்டப்பட்டது என்று கூறியுள்ளனர். 


المصنوع في معرفة الحديث الموضوع (ص: 189)
349 - حَدِيثُ مَنْ عَرَفَ نَفْسَهُ فَقَدْ عَرَفَ رَبَّهُ قَالَ ابْنُ تَيْمِيَّةَ مَوْضُوعٌ


இமாம் இப்னு தைமியா அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார். இமாம் நவவீ அவர்களும் இப்படி ஒரு செய்தி இல்லவே இல்லை என்று கூறியுள்ளார். 

المقاصد الحسنة (ص: 657)
1149 - حديث: من عرف نفسه فقد عرف ربه، قال أبو المظفر ابن السمعاني: في الكلام على التحسين والتقبيح العقلي من القواطع أنه لا يعرف مرفوعا، وإنما يحكى عن يحيى بن معاذ الرازي يعني من قوله، وكذا قال النووي: إنه ليس بثابت،

இதன் கருத்தைக் கவனித்தால் இது மிகப்பெரிய உளறல் என்பதை அறியலாம். தன்னை அறிந்தவர் அல்லாஹ்வை அறிவார் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்க வேண்டும். 

ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளான். மனிதனுக்கு அடுத்தவனைப் பற்றி தெரியாவிட்டாலும் தன்னை அறியாத எந்த மனிதனும் இருக்க மாட்டான். அப்படி ஒருவன் இருப்பான் என்றால் அவன் புத்தி சரியில்லாத பைத்தியமாகவே இருக்க வேண்டும். 

தனது நாட்டம், தேவை, பலவீனம், பலம் ஆகிய விசயங்களை அவனவன் அறிந்தவனாகவே இருக்கின்றான். என்றாலும் அனைத்து மனிதனும் அல்லாஹ்வை அறிந்தவனாக இருக்கவில்லை. தன்னை அறிந்தால் அல்லாஹ்வை அறியலாம் என்றால் அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு விளக்குவதற்காக குர்ஆன் ஏன் வர வேண்டும் ? அல்லாஹ்வைப் பற்றி சரியான கருத்தை மக்களுக்குப் புரிய வைப்பதற்காக நபிமார்கள் ஏன் வர வேண்டும் ?

குர்ஆனும் தேவையில்லை. நபியும் தேவையில்லை. நாமாக சுயமாகவே அல்லாஹ்வைப் பற்றி முழுமையாக அறிய முடியும் என்று இதன் மூலம் இந்த சூபியாக்கள் கூற வருகின்றனர். குர்ஆனையும் நபிவழியையும் ஓரங்கட்டுவதற்காகவே இப்படி ஒரு செய்தியை இட்டுக்கட்டியுள்ளனர். 

மேலும் அனல் ஹக் நான் தான் இறைவன் என்ற கேடுகேட்ட சிந்தாந்தத்தைக் கூறி காபிராகியவர்கள் இந்த சூபியாக்கள். மனிதன் கடவுளாக முடியும் என்பது இவர்களின் கொள்கை. 

தன்னை அறிந்தால் இறைவனை அறியலாம் என்ற போலி தத்துவத்தின் மூலம் இந்த கேடுகெட்ட கொள்கையை சமுதாயத்தில் புகுத்த நினைக்கின்றனர். 

உன்னைப் பற்றி அறிந்தால் இறைவனை அறியலாம். ஏனென்றால் இறைவன் உனக்குள் இருக்கின்றான். நீயே இறைவனாக இருக்கும் போது வேறு இறைவனை எதற்குத் தேட வேண்டும்? என்ற நச்சுக்கருத்தையும் இந்த வாசகம் உள்ளடக்கியுள்ளது. 

அல்லாஹ்விடமிருந்து நேரடியாக கஷ்பு என்ற ஞானத்தின் மூலம் எங்களுக்கு இந்த உண்மை புலப்பட்டது என்றும் இந்த சூபியாக்கள் உளறியுள்ளனர். 

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் இந்த சூபியாக்கள் விசயத்தில் சமுதாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆன்லைன் பிஜே

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை