பாதுகாக்கப் பட்ட கூரை (குர்ஆனும் அறிவியலும்)


பாதுகாக்கப் பட்ட கூரை (குர்ஆனும் அறிவியலும்)

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! எதேனும் குறையைக் காண்கிறீரா?இரு தடவை பார்வையைச் செலுத்துவீராக! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.
(அல்குர்ஆன் 67:3,4)
இந்த வசனங்களின் படி மனிதன் அறிவியல் உலகின் வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு நூற்றாண்டிலும் புதுப்புது கருவிகளைக் கண்டுபிடித்துஆகாய அண்டப் பெருவெளியின் அதிசய ரகசியங்களைக் கண்டுபிடித்து விட்டு வெற்றியுடன் தனது பார்வையைக் கீழே போட நினைக்கின்றான்.
ஆனால் அவனது பார்வையோ படுதோல்வியைச் சந்தித்துதரையை நோக்கித் திரும்புகின்றது. இன்னும் அவன் கண்டுபிடிக்க வேண்டியவை ஏராளம்! ஏராளம்! ஏழு வானங்கள் என்று அல்லாஹ் கூறும் உண்மையும் அவற்றில் அடக்கம்! மனிதன் எட்டிப் பிடிக்க வேண்டியவை இன்னும் எவ்வளவோ உள்ளன. இப்போது அவன் எட்டிப் பிடித்தவற்றை மட்டும் சற்று நோக்குவோம். நமக்கு மேலே வளி மண்டலத்தில் ஐந்து அடுக்குகள் உள்ளன என்று பார்த்தோமல்லவாஅந்த அற்புதங்களுக்குள் - அந்த அடுக்குகளுக்குள் ஒவ்வொன்றாக இப்போது நுழைவோம்.

வளி மண்டலத்திலுள்ள ஐந்து அடுக்குகளாவன:
1. கீழ் அடுக்கு - புவியின் மேற்பரப்பிலிருந்து 16 கி.மீ. உயரம் வரை
2. படுகை அடுக்கு - 16 கி.மீ. முதல் 50 கி.மீ. உயரம் வரை
3. நடு அடுக்கு - 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை
4. வெப்ப அடுக்கு - 80 கி.மீ. முதல் 1600 கி.மீ. வரை
5. வெளி அடுக்கு - 1600 கி.மீ. முதல் 10,000 கி.மீ. வரை

கீழ் அடுக்கு

இந்த அடுக்கு புவியை ஒட்டிய பகுதியாகும். இந்த அடுக்கில் மட்டும் தான் நைட்ரஜன்ஆக்ஸிஜன்,கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் அதிகம் காணப்படுகின்றன. மேகம்இடிமின்னல்,புயல்மழை போன்ற வானிலை நிகழ்வுகளுக்குக் காரணமான நீராவி காணப்படுகின்றது. இந்த அடுக்கில் தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல வெப்பம் குறைந்து கொண்டே செல்கின்றது. இது165 மீ. உயரத்திற்கு 1ஞ ஈ வீதம் குறைகின்றது.
இதை ஊட்டியின் வெப்பத்தையும் சென்னையின் வெப்பத்தையும் ஒப்பிடுவதன் மூலம் புரிந்து கொள்ளலாம். ஊட்டியின் வெப்பம் சென்னையை விட 12ஞஈ குறைவாகக் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் ஊட்டி சென்னையை விட கடல் மட்டத்திலிருந்து 2000 மீ. உயரத்தில் இருப்பது தான்! இதனால் புவியின் மேல் நாம் செங்குத்தாகச் செல்லச் செல்ல வெப்பம் குறைவதை உணரலாம். எனவே தட்பவெப்ப நிலைகளை நிர்ணயிக்கக் கூடியதாக அல்லாஹ் இந்த கீழ் அடுக்கை அமைத்திருக்கின்றான்.
இந்தக் கவசத்தின் முக்கியமான இன்னொரு அம்சம்இது சூரியனின் மிக அதிகமான வெப்பத்திலிருந்து பாதுகாக்கின்றது. சூரியனிடமிருந்து வரும் வெப்பம் முழுவதும் பூமியின் மேற்பரப்பை அடைந்தால் பூமி கடும் வெப்பத்தை அடைந்து விடும். சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தின் ஒரு பகுதியை வளி மண்டலத்திலுள்ள தூசி மற்றும் மேகம் திருப்பியனுப்பி விடுகின்றது. இதனால் புவிக்கு அளவான வெப்பம் கிடைக்கின்றது.
புவியைச் சுற்றி வளி மண்டலம் இல்லாவிட்டால் புவி பகல் நேரத்தில் தான் பெற்ற வெப்பத்தை விட அதிகமான வெப்பத்தை இரவு நேரத்தில் இழந்து விடும். இதனால் பூமி மிகவும் குளிர்ச்சியடைந்து விடும். இந்தக் கட்டத்தில் வளி மண்டலமானது ஒரு போர்வை போல் செயல்படுகின்றது. குளிர்காலங்களில் நமது உடல் மீது போர்த்தப் பட்ட போர்வைஉடலிலிருந்து வெப்பம் வெளியேறாமல் தடுக்கின்றது. இதுபோலத் தான் புவி மீது வளி மண்டலம் போர்வை போல செயல்பட்டு பகலில் சூரிய வெப்பம் முழுவதும் புவியை வந்தடையாமலும் இரவில் புவியிலிருந்து வெப்பம் விரைவாக வெளியேறாமலும் தடுக்கின்றது. இதை எவ்வளவு பொருத்தமாக அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான் என்று பாருங்கள்!
அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும்வானத்தை முகடாகவும் அமைத்தான். உங்களுக்கு வடிவம் தந்தான். உங்கள் வடிவங்களை அழகுற அமைத்தான். தூய்மையானவற்றை உங்களுக்கு வழங்கினான். அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

(அல்குர்ஆன் 
40:64)

படுகை அடுக்கு

கீழ் அடுக்கிற்கு மேலே 50 கி.மீ. வரை அமைந்துள்ள படுகை அடுக்கில் காற்றின் அடர்த்தி மிகவும் குறைவு! இவ்வடுக்கு முழுவதும் உயரத்திற்கேற்ப வெப்பம் மாறுபடுவதில்லை. இதன் எல்லாப் பகுதிகளிலும் சமமான வெப்பமே காணப்படுகின்றது. இந்தப் படுகை அடுக்கில் நீராவி காணப்படுவதில்லை. எனவே மேகம்இடிமின்னல்மழை முதலியவை தோன்றுவதில்லை. அதனால் வானிலை மாற்றங்கள் நிகழ்வதில்லை. இங்கு தான் விமானங்கள் மிகவும் வேகமாக நீண்ட தூரம் செல்வதற்குரிய பாதுகாப்பான சூழல் நிலவுகின்றது.

ஓசோன் படலம்

இந்தப் படுகை அடுக்கின் மேற்பகுதியில் 20 கி.மீ. முதல் 35 கி.மீ. வரை ஓசோன் வாயு உள்ளது. ஓசோன் வாயு சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை உட்கவர்ந்து புவிக்கு வர விடாமல் தடுத்து விடுகின்றது. புற ஊதாக் கதிர்கள் புவியில் வாழும் உயிரினங்கள் மீது பட்டால் அந்த உயிரினங்களின் உயிரணுக்கள் தாக்கப்பட்டு தோல் புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இத்தகைய தீமையிலிருந்து இந்த ஓசோன் வாயுப் படலம் நம்மைப் பாதுகாக்கின்றது. இது நாம் படுகை அடுக்கில் கண்ட அல்லாஹ்வின் அரிய அற்புதங்களாகும்.

நடு அடுக்கு

இந்த நடு அடுக்குபடுகை அடுக்கின் மேல் 50 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை பரவியுள்ள காற்றடுக்காகும். இந்த அடுக்கு தான் நம்மை நோக்கி வருகின்ற கல்மழையிலிருந்து காக்கும் கவசமாகும். நாட்டின் எல்லைப் புறத்தில் எதிரிகள் நுழைந்தால் இராணுவத்தினர் அவர்களை இரு விதத்தில் தாக்குவர். எதிரிகளை உள்ளே வர விடாது அடித்துத் தாக்கி அவர்களை எல்லைக்கப்பாலே துரத்தி அழிப்பது ஒரு விதம்! உள்ளே விட்டு ஒருவர் கூட தப்பி விடாமல் உள்ளுக்குள் வைத்தே தாக்கி அழிப்பது இன்னொரு விதம்! இந்த இரண்டாவது வகையைத் தான் இந்த அடுக்கைக் கையில் போட்டுக் கொண்டு புவி ஈர்ப்பு விசை செய்கின்றது. புவியின் உயிரினங்கள் மீது எதிரிகள் அண்ட விடாது காத்துக் கொண்டிருக்கின்றது.
பூமியில் எதிரிகள் உள்ளார்கள்அவர்களை நாம் பார்க்கிறோம் அதனால் ஒத்துக் கொள்கிறோம்! ஆனால் ஆகாயத்தில் எதிரிகளாயார் கண்டார்கள்யார் சொன்னதுஎன்று கேட்கலாம். இதற்கு அல்லாஹ்வே பதில் சொல்கின்றான்.
வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.

(அல்குர்ஆன் 
21:32)
வானத்தை "பாதுகாக்கப் பட்ட கூரைஎன்று வல்ல ரஹ்மான் இந்த வசனத்தில் கூறுகின்றான். அதாவது இந்தக் கூரைகளைப் பொத்துக் கொண்டு குதிக்கக் கூடிய எதிரிகள் இருக்கின்றார்கள்! அவர்கள் பொத்துக் கொண்டு உள்ளே வந்து விடாத வண்ணம் வானத்தின் மேற்கூரை அமைக்கப் பட்டிருக்கின்றது என்று கூறுகின்றான். இதன் மூலம் வானத்தில் எதிரிகள் இருக்கின்றார்கள் என்று சொல்லிக் காட்டுகின்றான். அப்படியானால் அந்த எதிரிகள் யார்அதற்கும் குர்ஆனிலிருந்தே பதிலைப் பார்ப்போம்.
வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களாஎனது எச்சரிக்கை எத்தகையது என்பதைப் அறிந்து கொள்வீர்கள்.
(அல்குர்ஆன் 67:17)
ஆகாயத்தில் மிதக்கும் மேகங்களிலிருந்து நீர் மழை பொழியக் கண்டிருக்கின்றோம். ஆனால் கல் மழை பொழியட்டுமாஎன்று அல்லாஹ் கேட்கின்றான் என்றால் மழையாகப் பொழியும் அளவுக்கு ஆகாயத்தில் கற்கள் இருக்கின்றன என்பது தான் அதன் பொருள்.
செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் இடையே ஆயிரக்கணக்கான விண் கற்கள் சுழன்று வருகின்றன. இவற்றில் சில பூமியின் ஈர்ப்பு சக்தியால் கவரப் பட்டுமணிக்கு 43,200 கி.மீ. முதல்57,600 கி.மீ. வரையிலான அசுர வேகத்துடன் பூமியை நோக்கிப் பாய்ந்து வருகின்றன. இவை நேராகப் பூமியை அடையுமானால் இந்தப் பூமி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விடும். மேலும் இப்பூமியில் வசிக்கும் நாமும் தூள் தூளாகி விடுவோம். ஏனெனில் இந்தக் கற்களில் சில 96,000சதுர மீட்டருக்கும் அதிகமான குறுக்களவு கொண்டவை! ஆனால் இந்தப் பிரமாண்டமான கற்கள் நேராக பூமியை அடைந்து விடாமல் நமது ஆகாயம் அவற்றைத் தடுக்கின்றது.
அசுர வேகத்தில் இந்தப் பூமியை நோக்கிப் பாய்ந்து வரும் இக்கற்கள் பூமியை அடைவதற்கு முன் பூமியில் மேல் போர்த்தப் பட்டுள்ள கூரையில் - அதாவது காற்று மண்டலத்தில் நுழைகின்றது. அப்போது காற்று மண்டலத்தின் எதிரியக்கம் (தங்-ஹஸ்ரீற்ண்ர்ய்) கற்களின் இயக்க வேகத்திற்கேற்ப அவற்றின் மீது வினை புரிவதால் அக்கற்கள் வெப்பமடைகின்றன. இந்த வெப்பம் அக்கற்களை எரித்துச் சாம்பலாக்கி பூமியின் மீது விழச் செய்கின்றது. பூமியின் மேற்பரப்பின் மீது இவ்வாறு விழும் சாம்பலின் எடை கூட நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கற்கள் தான் நமது எதரிகள்! அந்தக் கற்கள் நம் மீது விழுந்து விடாத வண்ணம் இந்த நடு அடுக்கின் மூலம் அல்லாஹ் நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான். இதைத் தான் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் சொல்லிக் காட்டுகின்றான். அல்லாஹ்வின் கோபப் பார்வை இறங்கி நம் மீது கல்மழை பொழியாமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!
1979ம் ஆண்டு ஸ்கைலாப் என்ற விண்ணாய்வி மண்ணகத்தை நோக்கி விழப் போகின்றது என்ற தகவல் கிடைத்ததும் எங்கே அது தங்கள் தலையில் விழுந்து விடுமோ என்று மக்கள் அலறித் துடித்தனர். ஆனால் அது யார் தலையிலும் விழாமல் மனித சஞ்சாரமற்ற பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதன் பின் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இதற்கே இந்தப் பாடு என்றால் விண்ணகத்து கற்கள் அனைத்தும் தொடர்ந்து இந்தப் பூமியில் விழுந்தால் என்னாவது?

வாலாட்ட முடியாத வால் நட்சத்திரங்கள்

நமக்கு மேலே உள்ள பேரண்டத்தில் நட்சத்திரங்கள்துணைக் கோள்கள்கோள்கள் மட்டுமின்றி மேலும் பல கோடிக்கணக்கான உடைந்து சிதறிய பாறைத் துண்டுகள் வலம் வருகின்றன. அப்பாறைத் துண்டுகளில் சிலவற்றுக்கு தலைப்பகுதி பெருத்தும் உடற்பகுதி வால் போன்று நீண்டும் காணப்படுகின்றன. இவற்றையே வால் நட்சத்திரங்கள் என்று நாம் அழைக்கின்றோம்.
வால் நட்சத்திரங்களுக்கு நட்சத்திரங்களைப் போன்று பிரகாசிக்கும் தன்மை கிடையாது. அண்டத்தில் சுற்றி வரும் வால் நட்சத்திரங்கள் (ஈர்ம்ங்ற்ள்) சூரிய குடும்பத்திற்கு அருகில் வரும் போது சூரியனின் வெளிச்சத்தினால் பிரகாசிக்கின்றன.
இரவில் வானத்தில் நட்சத்திரங்கள் வண்ணக்கோலத்தில் சிவகாசிப் பட்டாசு போல் எரிந்து விழுவதைப் பார்க்கின்றோம். இவை உண்மையில் நட்சத்திரங்கள் அல்ல! பேரண்டத்தில் வலம் வரும் பாறைத் துண்டுகள்! புவி ஈர்ப்பு சக்தியினால் ஈர்க்கப் பட்டு காற்று மண்டலத்தில் உராய்வுக்குள்ளாகி புஸ்வானமாக்கப் படுகின்றன! இவற்றையே எரி நட்சத்திரங்கள் (ஙங்ற்ங்ர்ழ்ண்ற்ங்ள்) என்று அழைக்கின்றோம்.
1994ம் ஆண்டு ஷூமேக்கர் லெவி (நட்ர்ங் ஙஹந்ங்ழ் கங்ஸ்ஹ்) என்ற வால் நட்சத்திரம் வியாழன் கிரகத்தின் மீது மோதிய போதுபத்திரிக்கைகள் தலைப்புச் செய்தி வெளியிட்டதை யாரும் மறந்திருக்க மாட்டோம். இதுபோல் இந்தப் பாறைகள் நமது பூமியின் மேல் மோதினால் நாம் என்னாவோம்?
வானங்களையும்பூமியையும் படைத்திருப்பதிலும் இரவுபகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் நின்றும்அமர்ந்தும்படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லைநீ தூயவன்எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (அல்குர்ஆன் 3:190,191) என்று நாம் உள்ளம் பொங்கக் கூறத் தோன்றுகிதல்லவாஇறைவா! உண்மையில் நீ தூய்மையானவன்!
இப்படி விண்கற்கள்எரி நட்சத்திரங்கள்வால் நட்சத்திரங்கள் போன்றவை பூமியில் வந்து விழாமல் இந்த நடு அடுக்கின் மூலம் அல்லாஹ் நம்மைப் பாதுகாக்கின்றான். இதைத் தான் ரப்புல் ஆலமீன்பாதுகாக்கப் பட்ட கூரை என்று கூறுகின்றான்.

கொலம்பியா ஓடமும் குர்ஆன் தரும் பாடமும்

புவி ஈர்ப்பு சக்தி இந்த நடு அடுக்கின் மூலம் அதாவது காற்று மண்டலத்தின் மூலம் புவிக்குப் பாய்ந்து வரும் விண் கற்களை உள்ளே விடாது இழுத்துப் பிடித்து அடித்து நொறுக்கி விடுகின்றது. காற்று மண்டலத்தில் இருந்து கிளம்பும் எதிரியக்கம் (தங்-ஹஸ்ரீற்ண்ர்ய்) அக்கற்களை சூடாக்கி சுட்டெரித்து விடுகின்றன! இந்த ராணுவ நடவடிக்கையில் தான் சமீபத்தில் கொலம்பியா விண்வெளி ஓடம் சிக்கிக் கொண்டது.
கொலம்பியா ஓடம் பூமிக்குத் திரும்பும் போது புவி ஈர்ப்பு சக்தியின் காரணமாக அதன் வேகம் மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர்! காற்று மண்டலமோ இங்கு யார் நுழைந்தாலும் சுட உத்தரவு என்று சுட்டுத் தீர்த்து விடுகின்றது. காற்று மண்டலத்திற்கு அல்லாஹ் இட்ட அந்தக் காவல் உத்தரவை அது காத்து நின்று பூமிக்கு வரும் ஆபத்தைத் தடுத்து விடுகின்றது.
எனவே காற்று மண்டலத்தின் காவல் கட்டுப்பாடுகளை கணக்கில் கொண்டு தான் இங்கிருந்து செல்வோர் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்று வரவேண்டும். இதில் ஏதேனும் மயிரிழை அளவுக்குத் தவறு ஏற்படுமானால் உயிர் தீக்கிரையாகிவிடும். அப்படி ஒரு தவறு நிகழ்ந்ததால் தான் - வெப்பத்தைத் தாங்குவதற்காக பொருத்தப்பட்ட தகடுகள் குறைந்ததால் தான் - கொலம்பியா கொழுந்து விட்டெரிந்து கொட்டி விழுந்த சாம்பலானது.
இங்கு கொலம்பியாவை நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது (ஸல்) அவர்கள் இன்றைய அறிவியல் உலகம் எண்பித்து நிற்கும் இந்த உண்மையை சுயமாக இயம்பியிருக்க முடியுமாஅப்படியானால் நிச்சயமாக இது இறைவாக்கு தான் என்று உறுதியாகின்றது.
புனித ரமளானில் இறங்கிய இவ்வேதத்தில் "வானம் பாதுகாக்கப் பட்ட முகடுஎன்று அல்லாஹ் கூறியதை இன்று கொலம்பியா விண்ணகத்துக்குச் சென்று நிரூபணமாக்கியிருக்கின்றது. இந்த உண்மையை இங்கு உணர்த்துவதற்காகத் தான் கொலம்பியாவை இங்கு குறிப்பிடுகின்றோம். விண் முகட்டின் இந்த வலிமையான பாதுகாப்பை எண்ணி நமது ஈமான் மென்மேலும் வளர்கின்றது;வலுக்கின்றது. இது தான் நடு அடுக்கு சாதித்துக் கொண்டிருக்கும் சாதனையாகும்.
பாதுகாக்கப் பட்ட முகடு எனும் போது நடு அடுக்கிற்கு முந்தைய அடுக்கான படுகை அடுக்கில் உள்ள ஓசோன் வாயு மண்டலத்தையும் சேர்த்துத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் புவியை சூரியனை விட்டும் 150 மில்லியன் கி.மீ. தூரத்தில் வைத்திருக்கின்றான். அவ்வளவு தூரத்தில் இருந்தும் அதிலிருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் உயிரினத்தின் மேனிகளில் ஓடும் உயிரணுக்களைத் தாக்கிக் கொல்லக் கூடிய சக்தியைப் பெற்றுள்ளன. அல்லாஹ் இந்த முகட்டின் மூலம் இந்த புற ஊதாக் கதிர்களின் தீய விளைவுகளிலிருந்தும் காக்கின்றான். இப்படிப் பட்ட மாபெரும் பயன்களை இவ்விரு அடுக்குகளும் தந்து கொண்டிருக்கின்றன. இந்த அடுக்குகளைத் தாங்கிப் பிடித்திருப்பது புவி ஈர்ப்பு விசை தான் என்பதை மறந்து விடக் கூடாது.

வெப்ப அடுக்கு

நான்காவதாக நாம் சந்திக்கவிருப்பது வெப்ப அடுக்காகும். பெயருக்கேற்றாற்போல் இவ்வடுக்கில் வெப்பநிலையின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் இங்குள்ள அணுக்கள் சூரிய வெப்பக் கதிர்களால் நிரந்தரமாக வெப்பப் படுத்தப்படுகின்றன. இவ்வடுக்கில் ஹீலியமும்,ஹைட்ரஜனும் அதிகம் காணப்படுகின்றன. இவ்வடுக்கின் கீழ் பகுதியில் அயனிகள் உள்ளன. அயனிகள் நிறைந்த இவ்வடுக்கை அயனி அடுக்கு என்றும் அழைப்பர். சுமார் 500 கி.மீ. உயரம் வரை இந்த அயனி அடுக்கு பரவியுள்ளது.

திருப்பித் தரும் வானம்

வானொலி நிலையங்களில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மின் காந்த அலைகளாக வளி மண்லத்திற்கு அனுப்பப் படுகின்றன. இவை அயனி அடுக்கிலுள்ள அயனிகளால் பிரதிபலிக்கப் பட்டு மீண்டும் புவியை அடைகின்றன. இதனால் நாம் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க முடிகின்றது. இதைப் பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!

(அல்குர்ஆன்
86:11)
இவ்வசனத்தில் "திருப்பித் தரும் வானம்என்று ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ் வானத்திற்குப் பயன்படுத்துகிறான்.
கடலிலிருந்தும்நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக நமக்கு வானம் திருப்பித் தருவதோடு மட்டுமல்லாமல் மேலே நாம் குறிப்பிட்டுள்ளது போல் இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது.
வெப்ப அடுக்கைப் பற்றியோ அதிலுள்ள அயனிகளைப் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத காலத்தில் "திருப்பித் தரும் வானம்என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா?
இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் என்றால்நிச்சயமாக இது அவர்களுடைய வார்த்தையாக இருக்க முடியாது;படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்பதை இந்த வசனம் மெய்ப்பிக்கின்றது.
இந்த வெப்ப அடுக்கிற்கு மேல் 1600 கி.மீ. முதல் சுமார் 10,000 கி.மீ. வரை வெளியடுக்கு பரவியுள்ளது. இங்கு மிகவும் அடர்த்தி குறைந்த காற்றே காணப்படுகின்றது. இந்த வெளியடுக்கு விண்வெளியுடன் கலந்து விடுகின்றது. இதன் பின் வெற்றிடமே காணப்படுகின்றது.
இவை தான் வளி மண்டலத்தின் சாராம்சம்! இந்த வளி மண்டலத்தின் இத்தனை அடுக்குகளையும் தாங்கி நிற்கும் புவி ஈர்ப்பு விசையைத் தான் "பார்க்க முடியாத தூண்கள்என்று வல்ல ரஹ்மான் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான். இந்தத் தூண்களில் தான் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்வும் அடங்கியிருக்கின்றது. இந்தப் புவி ஈர்ப்பு விசை மூலம் புவியைக் காத்துக் கொண்டிருக்கின்ற அந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று நாம் துதிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதைத் தான் தோற்றுவாயின் துவக்கத்தில் அமைத்து ஒவ்வொரு தொழுகையின் போதும் நம்மைச் சொல்ல வைத்திருக்கின்றான். தூய்மையான அந்த நாயனுக்கே புகழனைத்தும் என்று மீண்டும் ஒருமுறை கூறி அவனைத் துதிப்போமாக! 64:3,4 வசனங்களை மீண்டும் ஒருமுறை எண்ணிப் பார்ப்போமாக!
ஏகத்துவம் மாத இதழ்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை