அல்லலூயாவின் அர்த்தம் என்ன?


அல்லலூயாவின் அர்த்தம் என்ன? – அஹ்மத் தீதாத்

இன்று உலகில் சுமார் 120 கோடி கிறித்தவர்கள் பைபிளை வேதமாக நம்பி அதன்படிச் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் நம்புகின்ற அந்த வேதம், இன்றைய நிலையில் அது உண்மையான இறை வேதமா என்று அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.
ஒரு நூலை வேதம் என்று நம்ப வேண்டுமென்றால், அது இறை வாக்கு என்று ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால் அவ்வேதத்தில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதக் கூடாது; முரண்படக்கூடாது. இது தான் வேதத்தின் முழு முதல் இலக்கணம். அது கடவுளின் வார்த்தை என்பதற்கான அடிப்படை விதி.
இந்த இலக்கணம் அடிபட்டுப் போனால் அது மனித மூளையில் உற்பத்தியான மலிவுச் சரக்கு, மனித அறிவு பிரசவித்த ஓர் அற்பக் கருத்து என்பது உறுதியாகி விடும்.
இந்த அடிப்படை விதிக்கும் வேதியியல் பரிசோதனைக்கும் பைபிள் உள்ளாக்கப்படும் போது அது மனிதச் சொற்கள் அதிகமதிகம் கலந்த ஒரு கலப்படம்; மனிதக் கற்பனைகளின் சங்கமம்; உண்மையை விடப் பொய்கள் மிகைத்து நிற்கும் ஒரு சாதாரண புத்தகம் என்பது மிகத் தெளிவாகப் புலப்படும்.
இன்று உலகில் எந்த ஒரு வேதியியல் பரிசோதனைக்கு உட்படுத்தினாலும் உடையாமல், ஒரு சிறு காயம் கூடத் தன் மேனியில் படாமல் சிலிர்த்துக் கொண்டு வருவது திருக்குர்ஆன் மட்டுமே! அறிவியல் உலகின் சிந்தனை சக்திக்கு ஒரு சிம்ம சொப்பனமாக, சந்திக்க முடியாத சவாலாக, சாகசமாகத் திகழ்ந்து கொண்டிருப்பது அல்குர்ஆன் எனும் அற்புதம் தான்.
இறை வார்த்தைகளைத் தன்னோடு கொண்டிருக்கும் தனித்தன்மையின் காரணத்தால் தான் அது உலக மக்களை நோக்கி அறைகூவல் விடுகின்றது.
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)
அபார அறிவியல் புரட்சியின் சிகரத்தில் இருக்கும் இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் கூட இந்த அறைகூவலை ஏற்பவர், எதிர் கொள்பவர் எவருமில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும்.
இத்தகைய தூய வேதம், தனக்கு முந்தைய வேதங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான் என்று சான்று கூறும் அதே வேளையில் அவற்றில் கலந்து விட்ட கலப்படத்தை, கற்பனையை, கறையை அடையாளம் காட்டி அம்பலப்படுத்துகின்றது.
என்ன தான் ஒரு வேதம் சின்னாபின்னமாக்கப்பட்டாலும், சிதைக்கப்பட்டாலும் அந்த உண்மை வேதம் உருத் தெரியாமல் ஆக்கப்பட்டாலும் அதில் ஒரு சில உண்மைகள் ஒட்டிக் கொண்டிருக்கத் தான் செய்கின்றன. அவ்வேதங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தான் என்று உரைக்கின்ற தடயங்கள், சான்றுகள் உடைக்கப்படாமல் ஒழிக்கப்படாமல் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இன்று கிறித்தவர்கள் தங்கள் திருச்சபைகளிலும் தெருச் சபைகளிலும் உரத்தக் குரல்களில் ஒலி பெருக்கிகளில் ஆர்ப்பரிக்கின்ற “அல்லலூயா” என்ற முழக்கமாகும். இதனுடைய அர்த்தம் என்ன? அதைக் காண்பதற்கு இந்த ஏகத்துவத்தின் பயணம் தொடர்கின்றது.
கிறித்தவர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அஹ்மத் தீதாத் அவர்கள் செய்த ஆய்வு, “அவனது பெயர் என்ன?” - What is his name? என்ற தலைப்பில் வெளியானது. அதன் தமிழாக்கத்தைத் தான் இந்த ஏகத்துவ இதழில் நீங்கள் நுகர்கின்றீர்கள்.
இதன் இறுதியில் அல்லலூயா என்பதன் பொருளைச் சுவைக்கின்ற போது, அல்லாஹ்வின் வேதமாக இருந்த பைபிள் சிதைக்கப்பட்டுள்ளது என்பதை மெய்ப்படுத்தி சத்தியக் குர்ஆன் கூறுகின்ற சான்றாண்மையையும் சேர்த்தே பார்க்கலாம். அதிலும் திருக்குர்ஆன் இறங்கிய அருள்மிகு ரமளான் மாதத்தில் இதைப் பார்ப்பது மிகவும் சாலப் பொருத்தமான ஒன்று!
அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தன் ஆயுள் முழுவதும் கிறித்தவத்தை மட்டுமே குறியாகக் கொண்டு விவாதம் மற்றும் எழுத்து ரீதியான ஆயுதங்கள் தாங்கி இறுதி வரை அதை எதிர்த்துப் போரிட்டவர். அதன் காரணமாக அவர்களது ஆய்வுகள் அனைத்துமே கிறித்தவத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன. அதற்காக அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! அவரது ஆய்வு அந்தத் திசையை நோக்கி மட்டும் சென்றதற்கு மற்றொரு காரணம், அவர் வாழ்ந்த தென்னாப்பிரிக்கப் பகுதி, சூழல் அனைத்தும் கிறித்தவ வயமாக இருந்தது தான்.
கிறித்தவ அழைப்பாளர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது ஓர் அவதூறு யுத்தத்தையே துவக்கியிருந்தனர். எனவே அவர்களின் ஆதிக்கம் அஹ்மத் தீதாதின் முழுக் கவனத்தையும் ஈர்த்தது. அவரது மொத்த உழைப்பையும் அது உறிஞ்சி விட்டது. அதனால் முஸ்லிம் சமூகத்திலேயே மலிந்து கிடக்கும் இணை வைப்பை நோக்கி அவரது கவனம் திரும்ப வாய்ப்பில்லை. அல்லது அவர் வாழ்ந்த அந்தப் பகுதியில் அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை.
இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், தமிழகத்திலுள்ள ஏகத்துவவாதிகள் இங்கு இணை வைப்பாளர்களை எதிர்த்துப் பல்வேறு களங்களைக் கண்டிருக்கின்றனர். இங்குள்ள அறிஞர்கள் அந்த ஆய்வில் ஒரு கரையும் கண்டிருக்கிறார்கள். எனவே இணை வைப்பு தொடர்பாக அஹ்மத் தீதாதின் ஆய்வு ஏகத்துவவாதிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையாமல் இருக்கலாம். அதே நேரத்தில் அவரது துறை கிறித்தவத்திற்கு எதிரானது மட்டுமே என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவரது ஆய்வுகள், ஒப்பீடுகள் போன்றவை நமது சிந்தனைக்குச் சற்று அந்நியமாகத் தெரிந்தால் அது மனித அறிவுக்குட்பட்டது என்று பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரது ஆய்வுகள், கொள்கைகள் அனைத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டுக்கு உட்பட்டது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இதனால் தான் இதை ஒரு மொழி பெயர்ப்பாக அல்லாமல், இயன்ற வரை ஜமாஅத்தின் தூய கடவுள் கொள்கை நிலைபாட்டுக்கு எதிராக உள்ளவற்றைத் தணிக்கை செய்து, இந்நூலை ஒரு கருத்தாக்கத் தழுவலாக அளித்திருக்கிறோம்.
காரணம், கிறித்தவத்திற்கு எதிராக மாபெரும் போர்க்கொடி தூக்கி புரட்சி செய்த அவர் மீலாத் விழாவை ஆதரிக்கின்றார். இது குறித்து அவரிடம் ஒரு சகோதரர் கேள்வி எழுப்பும் போது, மில்லியன் கணக்கான மக்கள் மீலாது கொண்டாடுகின்றனர் என்று காரணம் கூறுகின்றார். இதே காரணம் கிறித்தவத்திற்கும் பொருந்துமல்லவா? “இயேசு கிறிஸ்துவை ஏன் வணங்குகிறீர்கள்?’ என்று கிறித்தவர்களிடம் கேட்டால் அவர்கள் இதே பதிலைத் தான் கூறுகிறார்கள். இதை அஹ்மத் தீதாத் ஏற்றுக் கொள்வாரா?
இந்த அளவுக்குத் தான் பித்அத்துக்கள் விஷயத்தில் அஹ்மத் தீதாத் அவர்களின் நிலைப்பாடு அமைந்துள்ளது என்பதை இங்கே வாசகர்களின் பார்வைக்குத் தருகிறோம்.
எனினும் நாம் இந்த ஆய்வின் கருத்தாக்கத்தை இங்கு தருவதற்குக் காரணம், ஒரு ஏகத்துவவாதி கிறித்துவத்தைப் பற்றி எதையும் அறியாமல் இருக்கக் கூடாது. அவர்கள் எடுத்து வைக்கும் வாதத்திற்குப் பதில் சொல்லாமல் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் அஹ்மத் தீதாத் அவர்களின் ஆய்வை எடுத்துக் கொள்வோமாக!
அவன் பெயர் என்ன?
“அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன” என்று கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக! (அல்குர்ஆன் 17:110)
பொதுக் கடவுள் கொள்கை.
அஹ்மத் தீதாத் கூறுகின்றார்:
முஹம்மத் (ஸல்) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இயற்கையான அடுத்த வாரிசு என்ற தலைப்பின் கீழ் நான் ஆற்றிய உரைக்குப் பின்னால் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது ஒரு கிறித்தவப் பிரச்சாரகர் என்னிடம் ஒரு கேள்வியைத் தொடுத்தார்.
அவனது பெயர் என்ன? என்பது தான் அவரது கேள்வி.
பதிலளிப்பதற்காக எழுந்தேன். நான் வாயைத் திறப்பதற்கு முன் அவர் கேள்வி கேட்பதற்காக வைக்கப்பட்டிருந்த மைக்கின் முன் வந்து, தானே பதிலளிப்பதாகக் கூறினார்.
“கேள்வி கேட்டது நீங்கள்; பதிலளிப்பது என் கடமை தானே” என்று சொன்னேன்.
“அது சரி தான். எனினும் இந்தக் கேள்விக்கு நானே பதிலளிக்கிறேன்” என்று சொன்னார். அவையில் சிரிப்பலை எழுந்தது.
உண்மையில் அவர் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். ஒரு பெரும் கூட்டம் உள்ள இந்த சபையில் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு இனி எங்கே கிடைக்கப் போகின்றது? அதுவும் முஸ்லிம்களுடைய செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரும் கூட்டம்.
தொடருங்கள் என்றேன். ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு, கடவுளின் பெயர் இயேசு கிறிஸ்து என்று கூறி முடித்தார்.
இயேசு கடவுள் தானா? என்று அந்தக் கூட்டத்திலேயே விவாதிப்பதற்கு அது உரிய தருணமில்லை. இந்த இடத்தில் அதை அலசுவது உகந்ததும் அல்ல.
இப்போதைக்கு மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மத் (ஸல்) ஆகியோரது வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அந்த ஆற்றல் மிகக் கடவுளின் பெயர் அல்லாஹ் என்பது தான். இதற்கான ஆதாரம் பின்னர் தரப்படும்.
கடவுள் மீதுள்ள நம்பிக்கை, மனிதனின் இயற்கை குணத்துடன் ஒன்றியது; இரண்டறக் கலந்தது. அவனிடமிருந்து அந்த நம்பிக்கை ஒரு போதும் பிரியாது. மனிதன் இந்தப் புவியில் இருக்கும் வரை எல்லாம் வல்ல இறைவனின் ஞானமும் அவன் கூடவே இருந்து கொண்டு தான் இருக்கும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 35:24)
“இவரது இறைவனிடமிருந்து இவருக்கு ஏதேனும் சான்று அருளப்பட வேண்டாமா?” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். நீர் எச்சரிப்பவரே. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழி காட்டி உண்டு. (அல்குர்ஆன் 13:7)
பகுதிக் கடவுள் இல்லை.
தூய காற்று, மழை, சூரிய ஒளி போன்ற மனித வாழ்வுக்கு அத்தியாவசியமான பொருள் வளங்களில் பாரபட்சம், பாகுபாடு காட்டாத வல்ல இறைவன், ஆன்மீக அருள் வளங்களில் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. காரணம் அவன் பகுதிக் கடவுள் இல்லை. ஏதாவது ஒரு பெயரில் கடவுளை அறியாத எந்த ஒரு இனமும், சமுதாயமும் இப்பூமியில் இல்லை என்று தெளிவாகக் கூறலாம்.
படைத்த இறைவனே இந்த அறிவை, தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களின் வாயிலாக மக்களுக்கு வழங்கினான்.
நாம் தெரிந்து வைத்திருப்பது மிகக் குறைவான தூதர்களின் பெயர்களைத் தான். மற்ற பெயர்கள் தொலைந்து போயிருக்கின்றன, அல்லது ஆதாரமற்ற செய்திகளில் அமிழ்ந்து கிடக்கின்றன. கடவுளைப் பற்றிய அறிவு கடவுளிடமிருந்து வந்தாலும் மனித இனம் அந்தத் தூய, புனிதக் கடவுள் கொள்கையில் கவனமற்ற முறையில் கண்மூடித்தனமாக விளையாட ஆரம்பித்தது. அதனால் அவற்றில் கவர்ச்சிகரமான, அலங்காரக் கருத்துக்கள் கலந்து விட்டன.
“வேதத்தின் வரிகளை எளிதாக்குகிறோம் என்று கருதிக் கொண்டு, கற்றவர்கள் சில கட்டங்களில் அதன் வார்த்தைகளை மாற்றி விடுகின்றார்கள். ஆனால் உண்மையில் எளிதான வார்த்தைகளை இவர்கள் குழப்பி விடுகின்றனர்” என்று செவன்த் டே அட்வென்டிஸ்ட் என்ற கிறித்தவ இயக்கத்தின் பெண் தீர்க்கதரிசி எலன் ஜி ஒயிட் கூறுகின்றார்.
இவர்களின் இந்தக் கைவரிசை அந்த வேதம் கூற வந்த கருத்தையே குலைத்து விட்டது.
உலகத்தின் மத வரலாறுகளில் புனித பைபிள் என்று அழைக்கப்படுகின்ற யூத, கிறித்தவ வேதங்கள், கடவுளை மனிதத் தன்மையில் சித்தரிக்கும் அதிகமான உதாரணங்களைக் கொண்டிருக்கின்றன.
உலை வைக்கும் வர்ணனைகள்.
கீழே இடம் பெறுகின்ற இந்த பைபிள் வசனங்கள், கடவுள் தன்மைக்கு ஊறு விளைவிக்கின்ற, உலை வைக்கின்ற வர்ணனைகள் ஆகும். கடவுளை மனிதனாகச் சித்தரிக்கின்ற வசனங்களாகும்.
மனிதன் போன்ற கடவுள்.
மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.
(ஆதியாகமம் 11:5)
பின்பக்கத்தைப் பார்க்கும் மூஸா.
பின்பு, “நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” என்றார்.
(விடுதலைப் பயணம் 33:23)
யாக்கோபுடன் குத்துச் சண்டை.
அவர்; “நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், “உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, “இஸ்ரயேல்” எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார். (ஆதியாகமம் 32:28)
குடிகாரனைப் போல..
அப்பொழுது, உறக்கத்தினின்று எழுவோரைப்போல், திராட்சை மதுவால் களிப்புறும் வீரரைப்போல் எம் தலைவர் விழித்தெழுந்தார். (திருப்பாடல்கள் 78:65)
கவலைப்படும் கடவுள்?
மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.
(ஆதியாகமம் 6:6)
வாசனையை முகரும் கடவுள்?
ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது; “மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்” (ஆதியாகமம் 8:21)
மடங்கிப் படுத்த சிங்கம்?
அவன் துயில் கொண்டான்; சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்; அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்; எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்! (எண்ணாகமம் 24:9)
பற்றி எரியும் நெருப்பு.
மலை உச்சியில் ஆண்டவரது மாட்சியின் காட்சி, பற்றியெரியும் நெருப்புப்போன்று இஸ்ரயேல் மக்களின் கண்களுக்குத் தெரிந்தது. (விடுதலைப் பயணம் 24:17)
கடவுளை மனித நிலைக்குத் தரம் தாழ்த்துகின்ற மலிவான, மட்ட ரகமான வசனங்கள் 73 அத்தியாயங்களைக் கொண்ட ரோமர் கத்தோலிக்க கலைக் களஞ்சிய பைபிளிலும், 66 அத்தியாயங்களைக் கொண்ட புராட்டஸ்டண்ட் கலைக் களஞ்சிய பைபிளிலும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு கடவுளை மனித நிலைக்கு இறக்குகின்ற வர்ணனைகளை பைபிளிலிருந்து காட்ட வேண்டுமென்றால் அதற்கென தனியாக ஒரு நூல் வெளியிட வேண்டும். ஆனால் மேலே குறிப்பிட்ட அந்த உதாரணங்களே இந்தத் தலைப்புக்குப் போதும்.
ஆன்மீக சாம்ராஜ்யத்தில் இஸ்ரவேலர்களைப் போன்று திருந்துவதற்குரிய வாய்ப்புகளையும், சூழ்நிலைகளையும் வழங்கப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.
இது தொடர்பாக திரும்பத் திரும்ப எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தங்கத்தினால் செய்யப்பட்ட மாட்டை வணங்கினார்கள். மீண்டும் சிலை வணக்கத்தின் பக்கம் திரும்பினார்கள்.
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.
என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். (விடுதலைப் பயணம் 20:2-5)
இதுபோல் கிறித்தவ சமுதாயத்தின் பெரும் பகுதியினர் இந்த இணை வைப்பு எனும் களங்கத்திலிருந்து விடுபடவில்லை. லண்டனிலுள்ள செயின்ட் பால் தேவாலயத்திற்கும், ரோமிலுள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்திற்கும் சென்று பாருங்கள். அதற்கும் இந்தியாவிலுள்ள சோம்நாத் கோயிலுக்கும் எந்த வித்தியாசத்தையும் வேறுபாட்டையும் காண முடியாது.
கொள்கை, கோட்பாடுகள்.
உலகத்தின் மதம் தொடர்பான சொல்லியலில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரிய பாணியில், அவனுக்கே உரிய சொல் வழக்கில் வானம், பூமியின் ரட்சகனைக் குறிப்பதற்காக அழகிய பெயர்களை வழங்கியிருக்கிறார்கள்.
ஜுலு இனத்தின் கடவுள் கொள்கை.
தென் ஆப்பிரிக்காவில் வாழ்கின்ற ஜுலு இன மக்கள் உடல் வலிமை மிக்கவர்கள்; போர்க் குணம் கொண்டவர்கள்; அறியாமைக் காலத்திலும் அல்லாஹ்வைத் தெரிந்து வைத்திருந்த குறைஷி சமுதாயத்தைப் போன்றவர்கள். அவர்கள் எல்லாம் வல்ல இறைவனுக்கு மஙயஊகஒசணஆசஏஒ என்ற பெயரை வழங்கியிருக்கிறார்கள். இந்த வார்த்தை அதனுடைய சரியான பொருளில் உச்சரிக்கப்படும் போது “அல்லாஹ் செல்வந்தன்’ என்ற அர்த்தத்தைக் கொண்ட “வல்லாஹு கனி’ என்ற அரபி வார்த்தையை ஒத்திருக்கின்றது.
வட அமெரிக்காவில் அல்கனி (ஆப்ப்ங்ஞ்ஹய்ஹ்) என்ற செவ்விந்தியர்கள் உள்ளனர். அந்த வார்த்தைக்கும் இது ஒத்திருக்கின்றது. ஆப்ப்ங்ஞ்ஹய்ஹ் அல்கனி என்ற வார்த்தையின் மூலச் சொல் பொதுவாக அமெரிக்கர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஜுலு இனத்தைச் சார்ந்த ஒருவரிடம் மஙயஊகஒசணஆசஏஒ யார் என்று கேட்டுப் பாருங்கள். அவர் தெளிவாக தனது மொழியில், “அவன் தூய்மையானவன்; புனித ஆன்மா; அவன் பெறவுமில்லை; பெறப்படவுமில்லை. மேலும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை” என்று குறிப்பிடுவார்.
இஸ்லாமியக் கொள்கை.
இதை அப்படியே அல்குர்ஆன் 114வது அத்தியாயத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டிற்கும் இடையே பெரிய வித்தியாசத்தைக் காண முடியாது. தென் ஆப்பிரிக்காவில் ஸம்பாஸி ஆற்றுக்குத் தெற்கே உள்ள ஒவ்வொரு இனமும் இறைவனுக்குப் பல்வேறு பெயர்களைக் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, பஒலஞ, ஙஞஉஒஙஞ, மசஃமகமசஃம ஆகிய பெயர்களைக் குறிப்பிடலாம். இந்த வார்த்தைகளுக்கு ஆப்பிரிக்க மொழியைச் சார்ந்த எவரும் ஜுலு இனத்தினர் கூறும் அதே தூய கடவுள் பண்புகளைத் தான் கூறி விளக்குவர்.
இவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் பெயர்களை அவர்களால் பட்டியல் போட முடியாது. காரணம் அவர்களது மொழியில் எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் இல்லை. வெள்ளையர்கள் வருகின்ற வரை அந்த இனத்தவர்களில் ஒருவர் கூட சிலைகள் அல்லது மனித, விலங்குகளின் உருவப் படங்களைப் பார்த்து ஒருபோதும் குனிந்தது கிடையாது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தங்களது கிறித்தவ மதத்தை அங்கு அறிமுகப்படுத்தினர்.
தந்தை, மகன், புனித ஆவி என்று கடவுளுக்கு மனிதத் தன்மையைக் கற்பிக்கின்ற கடவுள் கொள்கையையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினர். இதன் காரணமாக அவர்களை இயேசு, மேரி, செயின்ட் ஜோசப், செயின்ட் கிறிஸ்டோபர் இன்னும் மற்றவர்களின் சிலைகளுக்கு முன்னால் வணங்கும்படி செய்தனர்.
உலகத்தில் வாழ்கின்ற பல்வேறு ஆப்பிரிக்க இனத்தவர்களில் எவரும் தங்களுடைய கடவுள் உருவத்தை வரைந்ததே இல்லை. இதனால் அவர்களுக்கு இந்தக் கலை தெரியாது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
மரத்திலிருந்து யானை, சிங்கம் போன்றவற்றைப் படைக்கின்ற, களி மண்ணிலிருந்து ஆண் பெண் சிலைகளை வடிக்கின்ற கலை வண்ணமும் கலை நுணுக்கமும் நன்கு தெரிந்தவர்கள். உலோகத்திலிருந்து வடிவமைக்கும் உலோகத் தொழிற்கலையும் ஓரளவு அவர்கள் தெரிந்திருக்கிறார்கள்.
நீங்கள் ஏன் உங்களுடைய கடவுளர்களின் சிலைகளைச் செய்வதில்லை? உருவமாக வடிப்பதில்லை என்று ஒரு வயது முதிர்ந்த ஜுலுவிடம் வினவிய போது அவர் தெரிவித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “அவன் (கடவுள்) ஒரு மனிதனைப் போன்றவனல்லன். அவன் ஒரு குரங்கைப் போன்று அல்லது ஒரு பாம்பைப் போன்றவனல்லன். அவன், நாம் கற்பனை செய்கின்ற அல்லது சிந்திக்கின்ற எந்த உருவத்தையும் தோற்றத்தையும் போன்றவனல்லன். அவன் தூயவன்; ஒரு புனித ஆத்மா! இத்தகைய பண்பைக் கொண்ட அவனை எப்படி வடிவமைக்க முடியும்?” என்று பதிலளித்தார்.
உலகில் வாழும் மக்கள் தாங்கள் வணங்கும் கடவுளுக்கு ஒவ்வொரு பெயரைக் கொடுத்திருந்தாலும் நம்மை மிக அதிகமாகத் திகைக்க வைத்த, திக்குமுக்காடச் செய்த பெயர் ஆபசஆபம என்ற பெயர் தான். இந்த வெளியீட்டிற்கு ரட்ஹற் ண்ள் ட்ண்ள் ய்ஹம்ங்? என்று தலைப்பிடுவதற்குப் பதிலாக ஆபசஆபம என்றே தலைப்பிடலாம்.
அப்படியென்ன ஆபசஆபம என்ற பெயரில் ஒரு வினோதம்? புதுமை?
தென் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமகன் தன்னுடைய கடவுளை ஆபசஆபம என்று அழைக்கிறான். இதற்குக் காரணம் என்ன?
வானத்தில் உள்ள தந்தை (இறைவன்), முழுமையாக, முற்றிலும் அனைத்துத் தேவைகளை விட்டும் நீங்கியவன்; அனைத்துத் தேவைகளை விட்டும் தூய்மையானவன்; அவன் தனித்தவன்; அவன் உணவு அல்லது குடிநீர் சாப்பிட மாட்டான்.
இவ்வாறு அவனுக்கு ஓர் இறைத் தூதர் பாடம் படித்துக் கொடுத்திருக்கலாம்; போதித்திருக்கலாம்.
தன்னுடைய முற்றிலும் பழமை வாய்ந்த, தங்கு தடையற்ற மொழியில் இந்தத் தூய தன்மைகளைக் குறிப்பதற்கு ஒரு வார்த்தையைத் தேர்வு செய்கிறான். அது தான் ஆபசஆபம.
ஆய்ன்ள் ஏனஸ் (மலக் கழிவு வாய்) இல்லாதவன்; அசுத்தம் ஏற்படாதவன்; மாசு, தவறு இல்லாதவன்.
இந்தப் புதுக் கருத்தை இந்து, முஸ்லிம், கிறித்தவ நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவர்களது உடனடியான எதிர் விளைவு (இது ஒரு முட்டாள்தனமான கருத்து என்பது போல்) மகிழ்ச்சியுடன் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். பாவம்! பரிகாசத்திற்குரியவர்கள் அவர்கள் தான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
ஆய்ன்ள் (மல வாய்) என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஒரு சிறிய வார்த்தையாக இருந்தாலும் அதிகமான மக்கள் அதைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இதற்குப் பகரமாக பேச்சு நடையில் உள்ள ஒரு வார்த்தையைப் பயன்படுத்த எனக்குப் பிடிக்கவில்லை. காரணம் மக்களின் அதிகப்பட்ச தவறான உணர் திறன் தான்.
அப்துல்லாஹ் யூசுப் அலீ அவர்களின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், “ஒரு கட்டத்தில் அழகாயிருந்த தங்களது மொழியை வெறும் கவர்ச்சி மிகு பிதற்றலாகவும் அர்த்தமற்ற உளறலாகவும் மாற்றி விட்டனர்” என்று தான் குறிப்பிட வேண்டும்.
எனவே இந்தச் சொல் பிரயோகத்தின் மூலம் ஏற்படும் பிரச்சனையைத் தவிர்க்க, பதட்டத்தைத் தணிக்க சுற்றி வளைத்து ஒய்ல்ன்ற் (உள்ளிடுகை), ஞன்ற்ல்ன்ற் (வெளியிடுகை) என்று ஒரு நாகரீக வார்த்தையில் குறிப்பிடலாம்.
உணவு உட்கொண்ட ஒருவர் கண்டிப்பாக தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றியாக வேண்டும்; கழிவறைக்குச் சென்றே தீர வேண்டும். மனிதனின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து தான் பழங்கால நண்பன் (தென் ஆஸ்திரேலிய குடிமகன்) இந்த குறைத் தன்மையை இறைவனுக்குக் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்து ஆபசஆபம அதாவது மலம் கழிக்கும் தன்மை இல்லாத நாயன் என்று அழைக்கிறான்.
உண்ணாத உன்னதக் கடவுள்.
பூர்வீக மனிதனின் கடவுள் பற்றிய இந்தப் புதுமைக் கொள்கை உண்மையில் புதுமையில்லை. இந்த உண்மையை இறைவன் தன்னுடைய இறுதி வேதமான புனிதக் குர்ஆனில் மனித குலத்திற்குத் தெரிவிக்கின்றான். தனித் தகுதியுள்ள, தன்னிகரில்லாத அந்த ஆசிரியனின் தகுதிக்கேற்ப அதை உயர்தர நடையில் தெளிவுபடுத்துகின்றான்.
அதன் அழகு, நயம் காரணமாக அதை ரசிப்பதுடன் மட்டும் நின்று விட்டு அதனுடைய செய்தியின் ஆழத்தை ஏனோ நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோம்.
உண்மையான அந்த ஓர் இறைவனை வணங்குவதை விட்டும் மறக்கடிக்கச் செய்ய முயல்வோருக்கு எதிராகத் திருக்குர்ஆன் நம்மை முழங்கச் சொல்கிறது.
“வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” என்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூôது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனவும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:14)
ஆம்! வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு யாரையும் பொறுப்பாளனாக ஆக்க மாட்டோம் என்று பிரகடனப்படுத்துமாறு நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.
யாருக்கேனும் மனிதக் கடவுள்கள் விஷயத்தில் நம்பிக்கை இருக்குமானால் அவர்களைக் கூட்டி வாருங்கள். சோதித்துப் பார்ப்போம். எங்கள் கடவுள் உணவளிப்பவன்; பிறரால் உணவளிக்கப்படுபவன் அல்லன். அவன் உணவு சாப்பிடுகின்ற தேவையில் இல்லை. உங்களுடைய மனிதக் கடவுள்கள் சாப்பிடுகிறார்களா? இல்லையா? அப்படிச் சாப்பிட்டால் அவர் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். எங்களுடைய கடவுளுக்கு அந்த அவசியம் இல்லை. காரணம் எங்கள் கடவுள் சாப்பிட மாட்டான்.
எவ்வளவு அழகிய, எளிய வாதம். ஆனால் அதே சமயம் திகைக்க வைக்கின்ற வாதம். வேதனைக்குரிய விஷயம்! நாம் பெற்றிருக்கின்ற இந்த ஆயுதத்தின் வலிமையை நமக்கு தென் ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்கள் நினைவுபடுத்த வேண்டிய பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கிறோம்.
பிரச்சாரக் கலையை, அழைப்புப் பணியின் திறமையை நாம் முற்றிலும் இழந்து விட்டோம். காரணம், பல நூற்றாண்டுகளாக நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இஸ்லாத்தைப் போதிப்பதையே நிறுத்தி விட்டோம்.
கிறித்தவர்கள் நம்முடைய வாசல் கதவுகளை வரிசையாக வந்து தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகக் குருட்டுத்தனத்தால் நம்மிடையே உள்ள எதிரிகளை எதிர் கொள்வதற்குப் பயப்படுகின்ற பயந்தாங்கொள்ளிகளை அந்தக் கிறித்தவர்களிடம் பார்க்க முடியவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்னால் குவைத்தில் ஒரேயொரு கிறித்தவக் குடும்பம் தான் இருந்தது. இன்றைய தினம் அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் 35 கிறித்தவ தேவாலயங்கள் உருவாகி விட்டன.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் உருவான “யேஹோவா சாட்சிகள்’ என்றழைக்கப்படுகின்ற ஒரு கிறித்தவ அமைப்பினர், அமெரிக்காவுக்கு வெளியே இரண்டாவது பெரிய சமுதாயமாக வாழ்கின்ற நாடு நைஜீரியா எனும் முஸ்லிம்களின் நாடு தான் என்று பெருமையடித்துக் கொள்கின்றனர்.
உலகத்திலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற நாடான இந்தோனேஷியாவில் மட்டும் 6,000 முழுநேர கிறித்தவப் பிரச்சாரகர்கள் இருக்கின்றனர். அவர்கள் தத்தமது தேவாலயங்களுக்குக் கீழ் இயங்கும் பாதிரியார்கள் கிடையாது. மாறாக, கிறித்தவர் அல்லாதவர்களை, அதாவது ஐங்ஹற்ட்ங்ய் ஹீதன் என்று அழைக்கப்படுபவர்களை சதாவும் தொந்தரவு செய்கின்ற, அவர்களுடன் புனிதப் போர் தொடுக்கின்ற போராளிகள்.
இந்தோனேஷியா அரசாங்கத்திடம் இருப்பதை விட இவர்களிடம் அதிகமான தனியார் விமானத் தளங்கள் உள்ளன. இவர்களிடம் பிரச்சாரக் கப்பல்கள் உள்ளன. இந்தோனேஷியா இண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடு. அந்த நாட்டில் கப்பல்களை நிறுத்துவதற்குத் துறைமுகங்கள் ஏதுமில்லை என்பதால் இந்தப் பிரச்சாரக் கப்பல்கள் எந்தத் தீவில் வேண்டுமானாலும் நங்கூரம் பாய்ச்சி நிற்கின்ற வசதியைப் பெற்றிருக்கின்றன.
கப்பல்களை அந்தத் தீவுகளில் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு அங்குள்ள மக்களை கப்பலில் வந்து உணவு சாப்பிடுவதற்கும் உல்லாசம் அனுபவிப்பதற்கும் அழைக்கின்றார்கள். அங்கே தங்களின் இஸ்லாத்திற்கு எதிரான நிந்தனைப் பிரச்சாரத்தையும் இகழாரத்தையும் ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுடைய கள்ளப் பிரச்சாரத்தை, கள்ளங்கபடமற்ற மக்களின் மூளையில் இறக்குமதி செய்கிறார்கள். அவர்களது இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஞல்ங்ழ்ஹற்ண்ர்ய் ஞஸ்ங்ழ்ந்ண்ப்ப் “உச்சக்கட்ட ஒழிப்பு’ அல்லது “அதிகப்பட்ச அழிப்பு’ என்று ரகசியப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக இந்தோனேஷியாவை ஒரு கிறித்தவ நாடாக மாற்றி விட வேண்டும் என்பது அவர்களின் குறியிலக்கு!
உலகம் முழுவதும் புழுதி பரப்புகின்ற அறுபதாயிரம் போராளிகளில் பாதிக்கும் அதிகமானோர் ஆப்பிரிக்காவில் தான் மையம் கொண்டிருக்கின்றனர். ஆப்பிரிக்கா இன்று முஸ்லிம் கண்டம். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக அதைக் கிறித்தவக் கண்டமாக மாற்றுவதற்காக இந்தப் போராளிகள் போர் விமானங்களிலும் போர்க் கப்பல்களிலும் வந்திறங்கி புனிதத் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
நம்பிக்கை என்ற போரில் நம்முடைய வாளும் கேடயமும் என்ன? அவை அல்குர்ஆனில் தான் இருக்கின்றன. நன்மைகளை வேட்டையாடுவதற்கு மட்டும் திருக்குர்ஆன் வசனங்களைப் பயன்படுத்திய நாம், அந்த வசனங்களை இந்தப் போர்க்களத்திற்கும் கொண்டு வர வேண்டும்.
இயேசு உணவு உண்டாரா?
மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!
(அல்குர்ஆன் 5:75)
மர்யமின் மகனான இயேசு கிறிஸ்து கடவுளின் தூதர்களில் வலிமை மிக்க ஒரு தூதர் என்று இஸ்லாமிய மார்க்கம் ஒப்புக் கொள்கின்றது. எந்த ஓர் ஆடவரின் தொடர்பும் இன்றி ஓர் அற்புதமாக அவரை, அவரது தாயார் மர்யம் (அலை) பெற்றெடுத்தார்கள். அவர் தான் மஸீஹ். அல்லாஹ்வுடைய அனுமதியுடன் இறந்தவருக்கு அவர் உயிர் கொடுத்தார். அல்லாஹ்வின் அனுமதியுடன் குருடர்களைப் பார்க்கச் செய்தார். அல்லாஹ்வின் அனுமதியுடன் குஷ்டரோகிகளுக்குக் குணமளித்தார் என்று இஸ்லாம் ஒப்புக் கொள்கின்றது. ஆனால் அவர் உணவு உண்ணவில்லையா?
அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார். (லூக்கா 24:42, 43)
அத்துடன் இயேசுவின் தாயார் உண்மை பேசுகின்ற, பக்தி மிக்க தூய பெண் என்று இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவர் உணவு உண்ணவில்லையா?
இதன் அர்த்தம் என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா? நமக்கு தெற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமகன் வந்து இது தொடர்பாக நினைவூட்ட வேண்டுமா? அவனது நினைவூட்டல் அவசியம் தேவை தான். இந்தப் போர்க்களத்தில் நம்முடைய உள்ளத்திற்கும் அறிவுக்கும் ஆபசஆபம என்ற ஆயுதம் நமக்குத் தேவைப்படுகின்றது.
அவனுடைய எளிய கிராமத்து மொழியில், அவனுடைய சிறு பிள்ளைத்தனமான குழந்தை மொழியில் தன்னுடைய கடவுள் உண்ண மாட்டான்; சாப்பாடு சாப்பிட மாட்டான் என்று தெரிவிக்கின்றான்.
உணவு சாப்பிடுபவன் கடவுளாக இருக்க முடியாது. காரணம் அவன் ஆபசஆபம இல்லை. இதைச் சொல்வதற்கு இந்தப் பூர்வீகக் குடிமகனுக்கு எந்தத் தடையும் தயக்கமும் இல்லை. உலக மக்களுக்கு அவன் எந்தவொரு ஒளிவு மறைவுமற்ற உண்மையைப் போட்டு உடைக்கின்றான்.
முஹம்மதியர்?
பெயர்களை இட்டுக் கட்டிப் புனைவதில் மேற்கத்தியவர்கள் கைதேர்ந்தவர்கள். அவன் ஒளி வீசுகின்ற மின் விளக்கைக் கண்டு பிடித்தவுடன் அதற்கு ஙஹக்ஷ்க்ஹ கஹம்ல்ள் – மஜ்டா விளக்கு என்று சொன்னான். பார்சி மதத்தவர்களின் ஒளிக் கடவுள் தான் மஜ்டா.
ஐரோப்பியர்கள், தென்னாப்பிரிக்காவில் செயற்கை வெண்ணைக்கு தஹம்ஹ ஙஹழ்ஞ்ஹழ்ண்ய்ங் என்று பெயரிட்டு அதன் விற்பனையில் பெரும் வெற்றி கண்டு விட்டான். இந்தியாவில் கணிசமான மக்கள் தொகையினர் ராமரை மனிதக் கடவுள் என்று கூறுகின்றனர்.
இந்த வெள்ளையன் தன்னை கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்கிறான். காரணம் அவன் கிறிஸ்துவை வணங்குவதால்! புத்தரை வணங்குபவர்களை புத்திஸ்ட் என்று குறிப்பிடுகிறான். இதே வாதத்தின் அடிப்படையில், முஸ்லிம்கள் முஹம்மது நபியை வணங்குகிறார்கள் என்று கருதிக் கொண்டு முஹம்மதியர் என்று அழைக்கின்றான். ஆனால் உலகில் வாழும் ஆயிரம் மில்லியன் முஸ்லிம்களில் ஒருவர் கூட முஹம்மதை வணங்குபவர் அல்ல என்பது தான் உண்மை.
முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கக்கூடிய முட்டாள் ஒருவன் இருக்கின்றான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் அவனை வேண்டுமானால் முஹம்மதியன் என்று அழைக்கலாம். ஆர்வக் கோளாறில் முஹம்மதை வணங்கும் ஒரு முட்டாள், தெற்கு ஆஸ்திரேலியா பூர்வீகக் குடிமகனிடம் போய் தனது கடவுள் முஹம்மது என்று சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பூர்வீகக் குடிமகனின் பதில் என்னவாக இருக்கும்? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். குழந்தைத் தன்மையை ஒத்த அந்தப் பூர்வீக மக்கள் இந்த முஹம்மதியரிடம் கேட்கப் போகும் கேள்வி, முஹம்மது ஆபசஆபமவா? அதற்கு இந்த முட்டாளிடமிருந்து வரப் போகும் பதில், இல்லை என்பது தான்.
இது தான் உண்மை நிலை எனும் போது படித்த, பண்டித, நாகரீகமிக்க பல மில்லியன் மக்களால் வழிபாடு செய்யப்படுகின்ற கதாநாயகர், கதாநாயகிகளின் நிலைமை என்ன?
நீங்கள் கடவுளாக வழிபடுகின்ற ஆண், பெண் கடவுளர்களை, தேவர்களை, தேவிகளை இந்தப் பூர்வீகக் குடிமகனுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள். தங்களிடம் வருகின்ற கடவுளர்களிடம் ஆபசஆபம என்ற மட்டையால் அடித்து ஒரு சிக்ஸர் விளாசி விடுவான்.
உண்மையில் இந்தப் பூர்வீகக் குடிமகன், தன்னுடைய கடவுள் கொள்கையில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் வாழ்கின்ற மில்லியன் கணக்கான மக்களின் கடவுள் கொள்கையை விட உயர்ந்து நிற்கவில்லையா?
பின்னடைவில் ஒரு முன்னேற்றம்.
சந்திரனில் இறங்கி தடம் பதித்து, நடை பயில்கின்ற அமெரிக்கனையும் செயற்கைக் கோள்கள் போன்ற சாதனங்கள் வாயிலாக அங்குள்ள நிலப்பரப்பில் நடக்கும் நிகழ்வுகளை தன் வீட்டிலிருந்து கொண்டே கண்காணித்துக் கொண்டிருக்கும் அவனுடைய இனத்தாரையும் பாருங்கள். அருமையிலும் அருமை தான்.
வங்காள விரிகுடா துயரச் சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். கடலில் நிகழவிருக்கின்ற சுனாமி அலைத் தாக்குதலைப் பற்றி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்ததை நினைத்துப் பாருங்கள். அரபுகள் விரைவில் உங்கள் நாட்டைத் தாக்கப் போகிறார்கள் என்று இஸ்ரேலை அமெரிக்கா எச்சரிக்கை செய்ததை எண்ணிப் பாருங்கள். 1973ல் ரமளானில் நடக்கவிருந்த போரைப் பற்றி அமெரிக்கா முற்கூட்டியே எச்சரித்ததை சிந்தித்துப் பாருங்கள்.
பல்வேறு சீர்கேடுகளைக் கொண்டிருந்தாலும் இந்த அமெரிக்கர்கள் ஒட்டு மொத்த அனைத்து மனிதக் கடவுள்களை விடவும் மாபெரும் அதிகாரம், ஆதிக்கம் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர். இத்தகைய பலமான, வலிமையான இந்த அமெரிக்கர்களும், இவர்களுடைய ஐரோப்பா மற்றும் இதர நாடுகளின் கூட்டாளிகளும் மனிதனையும் குரங்கையும் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை! அந்த ஷைத்தானை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி?
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். அவர்களது செயல்களை ஷைத்தான் அழகாக்கிக் காட்டினான். இன்னும் அவனே இன்று அவர்களின் உற்ற நண்பன். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 16:63)
தனி நபர் வழிபாடு மனிதனுடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து கிடக்கும் ஓர் உணர்வு. உண்மையான கடவுளை வணங்கவில்லையெனில் வேறு எதையாவது அவன் வணங்குவான். கண்டிப்பாக வணங்கியே தீருவான்.
கண்டதையும் வணங்குவதை விட தன் இனத்தைச் சார்ந்த அழகிய ஆண் அல்லது பெண்ணைக் கடவுளாக்கி வணங்குவது அவனுக்கு முன் சிறந்த வழிமுறையாகத் தெரிகின்றது. கடவுளுக்கு மனிதப் பண்பு அல்லது வடிவம் கற்பிக்கும் கொள்கை (ஆய்ற்ட்ழ்ர்ல்ர்ம்ர்ழ்ல்ட்ண்ள்ம்) அதாவது தன்னுடைய விருப்பத்திற்குத் தக்கவாறு மனிதன் கடவுளைக் கற்பனை செய்கின்ற வழிமுறை மனித சமுதாயத்தில் தொன்று தொட்டு இருந்து வருகின்றது. இதில் நவீன காலம், பழைய காலம் என்ற வேறுபாடு இல்லை. தன்னைப் போலவே, தன்னுடைய உருவத்தைப் போன்றே மனிதன் கடவுளைப் பற்றிச் சிந்திக்கிறான்.
அப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். (ஆதியாகமம் 1:26)
மேலே நாம் மேற்கோள் காட்டியிருக்கும் பைபிளின் ஆரம்ப அத்தியாயத்தில் உள்ள வசனத்தில் இடம் பெறுகின்ற உருவம் மற்றும் நாம் என்ற வார்த்தைகளை பரிதாபத்திற்குரிய, இருளில் மூழ்கிக் கிடக்கின்ற கிறித்தவர்கள் தவறாக விளங்கிக் கொண்டனர்.
பிதா, மகன், புனித ஆவி ஆகிய மூவரும் ஒன்றாகச் சங்கமிப்பதால் தான் நாம் என்று வருகின்றது என்று ஒரு கிறித்தவர் விளக்கமளிக்கின்றார். அரபியிலும் ஹிப்ருவிலும் இரண்டு விதமான பன்மைகள் இருக்கின்றன என்பதை அவர் விளங்கத் தவறி விட்டார். ஒன்று, ஒருவருக்கு மேற்பட்டவரை (நாம் என்று குறிக்கும்) பன்மையாகும். மற்றொன்று, ஒருவரை மட்டுமே குறிக்கின்ற மரியாதைப் பன்மையாகும்.
“இவர்களுக்கு சான்றுகளை (நாம்) எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக” என்று திருக்குர்ஆன் 5:75 வசனத்தில் வருகின்ற “நாம்’ என்ற வார்த்தையைக் கவனியுங்கள். உண்மையில் இது மரியாதைப் பன்மையாகும்.
நாம் என்று வருவதால் கடவுள் தன்மையில் பலர் இருப்பதாக எந்தவொரு முஸ்லிமும், அரபுக் கிறித்தவரும், யூதரும் ஒருபோதும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
தவ்ராத்தின் (பழைய ஏற்பாட்டின்) ஆரம்பத்தில் வருகின்ற “நாம்’ என்ற வார்த்தை எத்தனை கடவுள்களைக் குறிக்கிறது என்று ஹிப்ரு மொழி தெரிந்த ஒரு யூதரிடம் கேட்டால் அவர் நாம் சொல்வதைப் போன்று தான் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் பதில் சொல்வார்.
இன ஒதுக்கீடு கடவுள்கள்.
மனித சமுதாயத்தில் தவறான சிந்தனையுடையவர்கள் கடவுளைத் தங்கள் உடல் அமைப்பு ரீதியில் மட்டும் கற்பனை செய்யவில்லை. கடவுளுக்கும் இன ஒதுக்கீடு அடிப்படையிலான பாகுபாட்டையும் வித்தியாசத்தையும் கற்பித்து விட்டனர்.
எத்தியோப்பிய கடவுளுக்கு எத்தியோப்பியர்களைப் போன்ற உதடுகள், வெண்கலக் கன்னங்கள், கம்பளி மயிர் போன்றவற்றைக் கொடுத்தார்கள். கிரேக்கக் கடவுள்கள் கிரேக்கர்களைப் போன்றே கூரிய கண்கள், பழமை மிக்க, பார்ப்பதற்கு அழகு மிக்க தோற்றம் கண்டார்கள்.
இப்படிக் கடவுளுக்கு மத்தியிலும் இன ஒதுக்கீட்டுக் கொள்கை கொண்டு வந்து விட்டனர்.
கிரேக்கர்களும் ரோமர்களும் தங்களுடைய அறிவுக் கடவுள் (ஙண்ய்ங்ழ்ஸ்ஹ) ஒளி மற்றும் சூரியக் கடவுள் (ஆல்ர்ப்ப்ர்) மகத்தான சாதனை புரிந்த ஹெர்குலிஸ் போன்றவர்களைக் கழற்றி விட்டு விட்டு, கைவிட்டு விட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் கடவுளான இயேசு கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்றுக் கொள்ள முன்வந்து விட்டனர்.
தங்களுடைய புராணக் கடவுளர்களை மேற்கத்திய ஐரோப்பாவிற்கு இறக்குமதி செய்தவர்களின் முன்னணி வகித்தவர்கள் ரோமானியர்கள் தான். அவர்களில் ஸ்காண்டிநேயர்கள் போர் மற்றும் உழவுக்குரிய இடி மின்னல் தெய்வத்தை (பட்ர்ழ்) வணங்கிக் கொண்டிருந்தனர். ஆங்கில சாக்சானியர்களின் கடவுள் தான் எல்லாக் கடவுள்களுக்கும் தலைமைக் கடவுள். அறிவு மற்றும் போருக்குரிய கடவுளான இவர் ஒற்றைக் கண் கொண்ட ஆண் கடவுள். இவரது பெயர் ஓடின் (ரர்க்ங்ய்) என்பதாகும். அவர்கள் தோர், ஓடின் போன்ற கடவுள்களை விட்டு விட்டு, அந்த மனிதக் கடவுளை (இயேசுவை) மிக்க மகிழ்ச்சியுடன் விரைந்து ஏற்றுக் கொண்டனர். இதற்குப் பதிலாக ஐரோப்பியர்கள் தாங்கள் ஆதிக்கம் செலுத்திய ரோமானிய காலனிகளில் முக்கடவுள் கொள்கையை அறிமுகம் செய்தனர். மண்ணின் மைந்தர்கள் வணங்கிய, கண்ட கண்ட கடவுள்களை விட அழகு நிறைந்த மனிதக் கடவுள்களைக் கொடுத்தனர்.
படங்களிலும் சிற்பங்களிலும் திரைப்படங்களிலும் எப்படி இயேசுவை மாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்.
கிங் ஆஃப் கிங்ஸ் என்ற படத்தில் ஜெஃப்ரி ஹன்டர் என்ற நடிகர் வருவது போன்ற ஓர் அழகிய கோணத்தில் தங்க நிறத் தலைமுடிகளுடனும், நீல நிறக் கண்களுடனும் அவரைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு யூதரைப் போன்று அவரது தோற்றம் இல்லை. யூதருக்கு மூக்கு சற்று வித்தியாசமாக அமைந்திருக்கும். ஆனால் அவர்கள் காட்சிப்படுத்திய கடவுள் உடல் அமைப்பில் எலும்பு கட்டமைப்பில் ஓர் ஆங்கில, ஜெர்மானிய, ஸகாண்டிநேவிய தோற்றத்தில் தான் தெரிகிறாரே தவிர ஓர் யூதரைப் போல் காட்சியளிக்கவில்லை.
வெள்ளையர்களின் மனிதக் கடவுள் நீல நிற மனிதக் கடவுளுக்கு மாற்றமாக அமைந்திருப்பார். (இந்து மதக் கடவுள் படங்களில் ராமர், கிருஷ்ணர் ஆகியோரை நீல நிறத்தில் வரைந்திருப்பார்கள்.)
இப்படி இவர்களது கதை, சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாக, ஏற்கனவே இருந்த இணை வைப்பை விடக் கொடூரமான இணை வைப்பிற்கு மாறி விட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம்களின் கடமை.
இருளில் கிடக்கின்ற பல மில்லியன் கிறித்தவர்கள் விஷயமாக நாம் எதுவுமே செய்யவில்லை. நாம் அவர்களை அவர்களது இணை வைப்புக் கொள்கையிலிருந்து கரையேற்ற வேண்டும். அல்லது அவர்கள் நம்மை இவ்வுலகிலும் மறு உலகிலும் நாசத்தில் கொண்டு போய் தள்ளி விடுவார்கள்.
அல்லாஹ்வின் பூமியில் உண்மையான அந்த இறைவனை வணங்குபவர்களை விட மிக அதிகமான கோடிக்கணக்கான மக்கள் மனிதக் கடவுள்களையே வணங்குகின்றனர். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் காட்டுகின்ற அலட்சியத்தினால் தான் முஸ்லிம் நாடுகளில் துன்பங்கள் தொடர்கின்றன.
தூய இஸ்லாத்தின் நம்பிக்கையைப் பரப்புவது தான் ஒரு முஸ்லிமுடைய கடமையாகும். இந்த இஸ்லாத்தை நாம் குறைத்து மதிப்பீடு செய்தால் அது நமது அழிவுக்குக் காரணமாகும். அல்லாஹ்வின் சாட்டை எந்தச் சப்தமும் இல்லாமல் நம்மைச் சாய்த்து விடும்.
இந்தத் தூய அழைப்புப் பணியில் உங்கள் பங்கு என்ன? பணி என்ன? அது மிக எளிது தான்.
மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! (அல்குர்ஆன் 5:75)
இந்த வசனத்தை மனனம் செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய அட்டைத் துண்டில் இந்த வசனத்தை எழுதி சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். பார்க்கும் போதெல்லாம் அதை, இறைவன் கொடுத்த இயற்கை கம்ப்யூட்டரான மூளையில் பதிய வையுங்கள்.
இந்த ஒரு வசனத்தை ஆபசஆபம என்ற ஆயுதத்தைக் கொண்டு, கடவுளுக்கு மனிதப் பண்பு கற்பிக்கும் (ஆய்ற்ட்ழ்ர்ல்ர்ம்ர்ழ்ல்ட்ண்ள்ம்) கொள்கையின் அடிவேரை, ஆணி வேரை அறுத்தெறியுங்கள். இது உங்களுடைய உரிமையும் இஸ்லாமிய மார்க்கத்தின் விதியும் ஆகும். அல்லாஹ் சொல்கின்றான்:
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? (அல்குர்ஆன் 4:122)
அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?
அல்லாஹ்வை அழைக்கும் கிறித்தவர்கள்.
யூதர்களும் கிறித்தவர்களும் தத்தமது பங்கிற்கு, தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களில் திணிக்க வேண்டியதைத் திணித்தும், தணிக்கை செய்ய வேண்டியதைத் தணிக்கை செய்தும் கொண்டனர். ஆனால் அவர்களது அத்தனை திருகுதாளங்களையும் தில்லுமுல்லுகளையும் தாண்டி, அவர்களது கத்தரிக்கோல்களையும் கடந்து “அல்லாஹ்’ என்ற வார்த்தை பைபிளில் மட்டுமல்ல! அவர்களது அன்றாட ஜெபங்களிலும் பிரச்சாரத்திலும் பிரார்த்தனையிலும் ஆழமான, அழுத்தமான ஓர் இடத்தைப் பிடித்திருக்கின்றது.
இப்போது அவர்களுக்கு முன்னால் இருப்பது இரண்டே இரண்டு வழிமுறைகள் தான். ஒன்று, அல்லாஹ் என்ற வார்த்தையை இவர்கள் தவிர்க்க வேண்டும். அது ஒரு போதும் இவர்களால் முடியாது. அல்லது இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.
அவர்கள் எப்படி, எங்கே அல்லாஹ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம்.
பைபிள் என்பது இரண்டு ஏற்பாடுகளைக் கொண்டது. ஒன்று பழைய ஏற்பாடு! இதன் மூல மொழி ஹிப்ரு மொழியாகும்.
மற்றொன்று புதிய ஏற்பாடு! இதன் மூலமொழி கிரேக்க மொழியாகும்.
ஹிப்ரு மொழியில் தோரா என்றழைக்கப்படும் தவ்ராத் வேதத்தில் யூதர்கள் செய்த திருத்தத்தைப் பார்ப்போம். அதற்கு முன், ஹிப்ரு மொழிக்கும் அரபு மொழிக்கும் இடையேயுள்ள சில ஒற்றுமையைப் பார்ப்போம்.
1. வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக எழுதுதல்
2. யூதர்கள் இஸ்ஹாக் நபியின் வழியில் வந்தவர்கள்; அரபிகள் இஸ்மாயீல் நபியின் வழியில் வந்தவர்கள். இரு இனங்களுமே இப்ராஹீம் நபி அவர்களின் வழி வந்தவர்கள்.
3. இரு மொழிகளிலும் படர்க்கை மற்றும் முன்னிலையில் மரியாதைப் பன்மை இல்லாவிட்டாலும் தன்னிலையில் மரியாதைப் பன்மை உண்டு. உதாரணத்திற்கு அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன். குர்ஆனை இறக்கியதைப் பற்றிக் குறிப்பிடும் போது, “நான் இறக்கினேன்’ என்று சில இடங்களிலும், “நாம் இறக்கினோம்’ என்று சில இடங்களிலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இங்கு நாம் என்றால் அல்லாஹ்வுடன் கூட யாரும் இருப்பதாக விளங்க மாட்டோம். மாறாக மரியாதைப் பன்மையில் “நாம்’ என்று அல்லாஹ் தன்னை அழைக்கிறான் என்று விளங்கிக் கொள்வோம். இதே போன்ற மரியாதைப் பன்மை ஹிப்ரு மொழியிலும் உண்டு.
அடுத்து, இந்த இரு மொழிகளிலும் ஒரே விதமாக, சிறிய மாற்றங்களுடன் அமைந்த வார்த்தைகளைப் பார்ப்போம்.
ஹிப்ரு எலாஹ் அரபி  இலாஹ் ஆங்கிலம் God- கடவுள்
ஹிப்ரு எகுத் அரபி அஹத் ஆங்கிலம் One- ஒருவன்
ஹிப்ரு யவ்ம் அரபி  யவ்ம் ஆங்கிலம் Day- நாள்
ஹிப்ரு சாலோம் அரபி  ஸலாம் ஆங்கிலம் Peace- அமைதி
ஹிப்ரு யாஹுவா அரபி  யாஹுவா ஆங்கிலம் OhB He- அவனே
இதில் யா ஹு வஹு (வ.ஐ.ர.ஐ.) என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. இதிலுள்ள யா என்பது அழைப்புக் குறியாகும். நாம் ஒரு நண்பனை அழைக்கும் போது, “நண்பனே!’ என்று அழைக்கின்றோம். நண்பன் என்ற வார்த்தையுடன் “ஏ’காரம் சேர்ந்து விட்டால் அது அழைப்பு வார்த்தையாகி விடுகின்றது. தமிழில் ஒரு வார்த்தையின் பின்னால் அழைப்புக்குறி வருவது போன்று அரபியில், “யா’ என்ற வார்த்தையை முன்னால் சேர்க்க வேண்டும்.
அல்லாஹ் என்ற வார்த்தையுடன் “யா’ என்பதை முன்னால் சேர்த்து “யா அல்லாஹ்’ என்றால் “அல்லாஹ்வே!’ என்று அழைப்புக் குறியாக மாறி விடும். ஹிப்ரு மொழியிலும் இவ்வாறு “யா’ என்பதை முன்னால் சேர்ப்பது தான் அழைப்புக்குறியாகப் பயன்படுத்தப்படுகின்றது.
இதன் படி ஹுவ என்றால் அவன் என்று பொருள். யா என்பது அழைப்புக் குறி! இரண்டையும் இணைத்துப் (யாஹுவ) பொருள் கொள்ளும் போது, “அவனே!’ என்ற அழைப்புச் சொல்லாகி விடுகின்றது. சிலர் இதற்கு, எங்கள் கடவுள் என்றும் பொருள் கொள்கின்றனர்.
யாஹுவ என்பதற்கு என்ன அர்த்தமும் இருந்து விட்டுப் போகட்டும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது இந்த யாஹுவ என்ற வார்த்தையை மொழியக் கூடாது என்று யூத குருமார்கள் தடை விதித்திருக்கிறார்கள் என்பதைத் தான். ஏனெனில் அது கடவுள் பெயராகும்; எனவே அதை மொழியக் கூடாது. அவ்வாறு மொழிந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும். கடவுளுடைய வேதத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கு உரிமையில்லை என்பது வேடிக்கைக்குரிய விஷயமாகும்.
இவ்வாறு அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதற்குத் தடை என்பதால் யாஹுவ என்பதற்கு முன்னால் அடோனாய் அல்லது எலோஹிம் என்ற வார்த்தையை இடையில் திணித்துள்ளார்கள். இலாஹ் என்றால் கடவுள். இம் என்றால் மரியாதைப் பன்மையாகும். அதாவது “கடவுள் அவர்கள்’ என்று சொல்லலாம். ஐரோப்பிய மொழிகளில் மரியாதைப் பன்மை கிடையாது. அதனால் கிறிஸ்துவை இதை ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கும் போது பன்மையாகவே மொழிபெயர்த்து உண்மையிலேயே மூன்று கடவுள்கள் இருப்பதாக நம்பி விட்டனர். யாஹுவா என்பதை எழுத்தளவில் தணிக்கை செய்யாவிட்டாலும் வாயளவில் சொல்வதைத் தடை செய்து விட்டனர்.
பத்துக் கட்டளைகள்.
செய்! செய்யாதே! என்ற பத்துக் கட்டளைகள் வெற்றி பெற்றதை விட இந்தக் கட்டளை வெற்றி பெற்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும். யாஹுவா என்பது கடவுள் பெயர். அது கடவுள் பெயர் எனும் போது பழைய ஏற்பாட்டில் இடம் பிடித்தது போன்று புதிய ஏற்பாட்டிலும் இடம் பிடித்திருக்க வேண்டும். ஏனெனில் புதிய ஏற்பாடு என்ற பெயரில் 27 நூல்களும் பழைய ஏற்பாட்டுடன் இணைக்கப்பட்ட கடவுளின் வெளிப்பாடு தான். தெய்வீக அறிவிப்பு தான். இதை இறைவனிடமிருந்து வந்த புத்தம் புதிய கடவுள் வார்த்தை என்று கிறித்தவர்கள் மார் தட்டிக் கொள்கின்றனர்.
அத்துடன் அவர்கள் நிற்கவில்லை. தங்கள் கைவசம் கிரேக்க மொழியிலுள்ள புதிய ஏற்பாட்டின் 24 ஆயிரம் மூல ஏடுகள் இருப்பதாகவும் பீற்றிக் கொள்கின்றனர். ஆனால் அந்த ஏடுகளில் ஒரு இடத்தில் கூட கடவுளின் பெயரான யாஹுவா இடம்பெறவில்லை. மாறாக அந்தப் பெயர் ஃஹ்’ழ்ண்.ர்ள் மற்றும் பட்ங்.ர்ள்’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இதன் பொருள் ஏர்க் கடவுள், கர்ழ்க் எஜமான் என்பதாகும்.
இவர்களுடைய ஆந்தைப் பார்வையிலிருந்தும் அடித்தல் வேலையிலிருந்தும் அல்லாஹ் என்ற வார்த்தை மட்டும் தப்பி விட்டது.
ஜே கலாச்சாரம்.
அரபி, ஹிப்ரு மொழியில் யா என்ற தொடங்கும் வார்த்தைகளை ஜே என்று மாற்றும் கலாச்சாரம் மேற்கத்தியர்களிடம் முளைத்தது.
யூனுஸ் – ஜோனா
யூசுப் – ஜோசப்
யஹுதா – ஜுதா (ஜுடாஸ்)
ஏஸஸ் – ஜீஸஸ்
என்று மாற்றினர். இந்த அடிப்படையில் பழைய ஏற்பாட்டில் வந்த யாஹுவாவை ஜேஹுவா என்று மாற்றி, கடவுள் பெயர் ஜேஹுவா என்று அமெரிக்காவிலுள்ள கிறித்தவர்களில் ஒரு சாரார் அழைக்கத் துவங்கினர். அவன் பெயர் என்ன? என்று கடவுளின் பெயரைப் பற்றி சாதாரணமாக ஒரு கிறித்தவரிடம் கேட்டால் ஏர்க் கடவுள் என்று பதில் சொல்வான். இப்படிப் பதில் சொல்லும் அந்தக் கிறித்தவனை நோக்கி, “கடவுள் என்றால் வழிபடும் ஒரு பொருள்” என்று கூறி அந்தக் கூட்டத்தினர் அதை மறுத்தனர். அடுத்து அந்தக் கிறித்தவன், Fatherதந்தை என்று சொன்னதும், உன்னுடைய தந்தை என்ன கடவுளா? என்று கேட்டுக் கிண்டல் பேசினர். இதுவெல்லாம் கடவுள் பெயர் கிடையாது; கடவுள் பெயர் ஜேஹுவா தான் என்று இவர்கள் குறிப்பிட்டனர்.
பழைய ஏற்பாட்டில் யாஹுவா (ஜேஹுவா) 6823 இடங்களில் தனியாகவும், ஏங்ய்ங்ள்ண்ள்ல் மட்டும் எலோஹிம் என்ற வார்த்தையுடன் சேர்ந்து 156 இடங்களிலும் இடம்பெறுகின்றது என்று இவர்கள் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.
கடவுளின் பெயர் அல்லாஹ் என்ற வார்த்தை பைபிளில் இடம் பெற்றுள்ளது. இது தெரியாத குருடர்களாக இவர்கள் எப்படித் தட்டழிகின்றனர்?
அத்துடன் புதிய ஏற்பாடும் கடவுளின் வாக்கு தான் என்பது கிறித்தவர்களின் நிலைப்பாடு. ஆனால் இந்த சாரார் பழைய ஏற்பாட்டில் வருகின்ற கடவுள் பெயரை ஏற்றுக் கொண்டு புதிய ஏற்பாட்டில் வருகின்ற கடவுள் பெயரை ஏற்க மறுக்கின்றார்கள். இரண்டில் எது கடவுளின் வாக்கு? எது சரி? என்பதை வினவுவதற்காக இதை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.
பழைய ஏற்பாட்டில் அல்லாஹ்.
இங்கே Rev. C.I. Scofield, D.D. (இறைமையியல் முனைவர்) அவர்களால் தணிக்கை செய்யப்பட்ட ஆங்கில பைபிளில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே அளிக்கின்றோம். இவர் கிறித்தவ உலக அறிஞர்களால் பாராட்டப்பட்டவர். அவரது புதிய, திருத்தப்பட்ட பதிப்புக்குக் கீழ்க்கண்ட கிறித்தவ இறைமையியல் முனைவர்கள் குழுமம் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்.
Rev. Henry G. Weston, D.D., LL.D., President Crozer Theological jeminary.
Rev. W. G. Moorehead, D.D., President Xenia (U.I,) Theological Seminary.
Rev. lames M. Gray, D.D., President Moody Bible Institute.
Rev. Elmore Harris, D.D., President Toronto Bible Institute.
Rev. William !. Erdman, D.D., Author “The Gospel of John,” etc.
Rev. Arthur T. Pierson, D.D., Author, Editor, Teacher, etc.
Rev. William L. Pettingill, D.D., Author, Editor, Teacher.
Arno C. Gaebelein, Author “Harmoney of Prophetic Word,” etc.
இதை நாம் இங்கு வெளியிட்டிருப்பது அவர்களது பட்டங்களைக் கண்டு உங்கள் புருவத்தை உயர்த்துவதற்காக அல்ல! இந்தத் திருத்தப்பட்ட பைபிளில் அவர்கள் கொண்டிருக்கும் ஏகோபித்த கருத்தொற்றுமையைத் தெரிவிப்பதற்காகத் தான் இவர்களது பட்டியலை வெளியிட்டுள்ளோம்.
Elohim – எலோஹிம் சில வேளைகளில் El – எல் அல்லது Elah -  எலாஹ் என்று உச்சரிக்கப்படும். இவற்றின் பொருள் God கடவுள் என்பதாகும். மாற்றாக Alahஅலாஹ் என்று உச்சரிக்கப்படும். (அதாவது அல்லாஹ் என்பதில் ஒரேயொரு “ல்’ என்பதை மட்டும் நீக்கியிருக்கின்றார்கள்.)
அலாஹ் என்பதற்கும் அல்லாஹ் என்பதற்கும் இவர்கள் ஓர் எழுத்து தூரத்தில் தான் இருக்கின்றார்கள்.
இந்த பக்கம் அண்மையில் The New scofield Reference Bible என்ற பெயரில் வெளியான, மன்னர் ஜேம்ஸின் அதிகாரப்பூர்வ பைபிள் பதிப்பில் “அலாஹ்’ என்ற வார்த்தையைக் கன கச்சிதமாக, படு கவனமாகத் தூக்கி விட்டார்கள். மேலே நாம் எடுத்துக் காட்டியிருக்கும் இறைமையியல் முனைவர்களை விட அதிகம் பட்டம் பெற்ற முனைவர்கள் ஒன்று சேர்ந்து முந்தைய பதிப்பில் இடம் பெற்றிருந்த அலாஹ் என்ற வார்த்தையை நீக்கி விட்டார்கள்.
மூலப் பிரதியில் Elohim  அல்லது El அல்லது Elah அல்லது அலாஹ் என்றிருந்ததை இவர்கள் ஏர்க் என்று மொழிபெயர்ப்புச் செய்தனர்.
முஸ்லிம்கள் “அல்லாஹ்’ என்று அழைக்கின்றனர். அதற்கு இது ஒத்திருந்து, உண்மை வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அதை இவர்கள் உருத் தெரியாமல் ஆக்கினாலும் அதை ஒரு போதும் மூடி மறைத்து விட முடியாது. இந்த உண்மையைப் படம் பிடித்துக் காட்டுவதற்காக அரபி பைபிளின் பதிப்பையும் இதே புத்தகத்தின் ஆங்கிலப் பக்கத்தின் பதிப்பையும் தருகின்றோம்.
1:1 In the beginning, when God created the heavens and the earth,
1:2 the earth was a formless wasteland, and darkness covered the abyss, while a mighty wind swept over the waters.
1:3 Then God said, “Let there be light,” and there was light.
1:4 God saw how good the light was. God then separated the light from the darkness.
Genesis 1:1-4
பாதிரிகளுக்குப் பகிரங்க அழைப்பு.
6823 தடவை யாஹுவா என்று தனியாகவும், எலோஹிம் என்ற வார்த்தையுடன் சேர்த்து 156 தடவையும் ஹிப்ரு மொழியில் பழைய ஏற்பாட்டில் வருவதை ஸ்காஃபீல்டு தலைமையிலான முனைவர்களின் குழுமம் “அல்லாஹ்’ என்று ஒப்புக் கொள்கின்றது. முஸ்லிம்கள், கிறித்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே ஒரு நாயனை வணங்கும் அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.
நீங்கள் ஒப்புக் கொள்கின்ற அந்த அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவது போல் பாதிரிகளாகிய உங்களையும் உங்களை நம்பியிருக்கின்ற ஒட்டு மொத்த கிறித்தவர்களையும் நோக்கி இந்த அழைப்பை விடுகின்றோம்.
“வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!” எனக் கூறி விடுங்கள்!  (அல்குர்ஆன் 3:64)
தனி நாயனுக்கு ஒரு தனிப் பெயர்.
அல்லாஹ் என்பதற்கு ஏர்க் கடவுள் என்று மொழி பெயர்க்கிறார்கள். இந்த ஏர்க் என்ற வார்த்தை எப்படியெல்லாம் தவறாகவும் தப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்று பாருங்கள்.
உதாரணத்திற்கு இந்துக்களின் கோயில்களில் உள்ள சிலைகளைப் பற்றி நம்முடைய குழந்தைகளுக்கு நாம் சொல்லும் போது, ஏர்க்ள் ர்ச் ஐண்ய்க்ன்ள் இந்துக் கடவுள்கள் என்று குறிப்பிடுகின்றோம். இதை ஓர் இந்து கேட்டால் அதைக் குறையாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவர்களுடைய நம்பிக்கையைத் தான் அப்படிச் சொல்கிறோம்.
இதுபோல் கிரேக்க ஆண் கடவுள் (God) பெண் கடவுள் (ஏர்க்க்ங்ள்ள்) ஆகியோரை எடுத்துக் கொண்டால் குடித்து விட்டுக் கும்மாளம் போடும் ஏர்க்களும் இருக்கின்றனர். இவ்வளவு ஏன்? சதி செய்து, சூழ்ச்சி வலைகள் பின்னி சூட்சுமமாக அடுத்த Godகளின் மனைவிகளைக் கடத்திக் கொண்டு போகும் Godகளும் இருக்கின்றனர்.
God Father.
ஒரு குழந்தையை ஒருவர் எடுத்து வளர்க்கின்றார் என்றால் அவருக்குத் தமிழில் வளர்ப்புத் தந்தை – பொறுப்பாளர் என்று குறிப்பிடுவோம். இதுபோல் ஒரு குழந்தையை ஒரு பெண் எடுத்து வளர்த்தால் வளர்ப்புத் தாய் என்று சொல்வோம். இதுபோல் அந்தக் குழந்தைக்கு வளர்ப்புப் பிள்ளை, வளர்ப்பு மகன் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் ஆங்கிலத்தில் இதற்கு ஏர்க் எஹற்ட்ங்ழ், ஏர்க் ஙர்ற்ட்ங்ழ், ஏர்க் ஈட்ண்ப்க் என இதற்கும் கடவுளை இழுத்து விடுகின்றனர்.
Tin – God.
இல்லாத தகுதிகளை இருப்பதாகக் காட்டிக் கொள்வோருக்கு தமிழில் பந்தா பேர்வழி என்போம். இதற்கு ஆங்கிலத்தில் கடவுளைத் தான் வம்புக்கு இழுக்கின்றனர். இந்தப் போலிப் பேர்வழிகளை Tin – God என்று அழைக்கின்றனர்.
இதுவே கடவுள் தன்மையில் பல தரங்கள் இருப்பதாக, கடவுளில் பல கூறுகள் இருப்பதாக உணர்த்துகின்றது. இதே வார்த்தைக்குப் பின்னால் ஒரு “S’ சேர்த்து, அதாவது ஏர்க்ள் என்றால் கடவுள்கள் என்று பன்மையாக்கி கடவுளுக்கு இணை கற்பிக்கலாம். God என்பதற்குப் பின்னால் dess சேர்த்து விட்டால் கடவுளைப் பெண்ணாக்கி விடலாம்.
God என்பதற்குப் பின்னால் ling என்று சேர்த்து விட்டால் கடவுளுக்கு ஒரு குட்டிக் கடவுளை உருவாக்கி விடலாம். ஆனால் இந்த விளையாட்டுக்களெல்லாம் Allah என்ற வார்த்தையில் அறவே நடக்காது. Allah father, Allah mother, Allah child என்றெல்லாம் சொல்ல முடியாது.
மேற்கத்தியர்கள் கடவுள் தன்மையில் எப்படியொரு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டை விளையாடுகின்றார்கள் என்று பாருங்கள். கடவுள் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி தரும் பொருளைப் பாருங்கள். கிரேக்கர்களின் கடவுள்களைப் பற்றி அகராதி தரும் பொருள் இதோ:
ஜூபிடர் – வியாழன் – விண் கடவுள்
புளூட்டோ – ஒன்பதாவது கோள் – நரகக் கடவுள்
மார்ஸ் – செவ்வாய் – போர்க் கடவுள்
நெப்டியூன் – ஒரு கோள் – கடல் கடவுள்
சியஸ் – இவை அனைத்திற்கும் தந்தை அல்லது தலைமைக் கடவுள்
அப்போலோ, ஹோரஸ், ஹெர்குலிஸ் என்று கிரேக்கர்களின் கடவுள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
ஒரு பெண் புனித மைக்கேலுக்கு ஒரு மெழுகுவர்த்தியும் ஷைத்தானுக்கு ஒரு மெழுகுவர்த்தியும் ஏற்றிக் கொண்டாளாம். சுவனத்திற்குப் போனாலும் ஒரு கூட்டாளி கிடைப்பார்; நரகத்திற்குப் போனாலும் ஒரு கூட்டாளி கிடைப்பார் என்பதற்காக வேண்டி இவ்வாறு செய்தாளாம்.
இந்தப் பெண்ணைப் போன்று இஷ்டத்திற்குக் கடவுள்களைத் தேர்வு செய்கின்ற அளவுக்கு மேற்கத்தியர்களின் நிலை அமைந்துள்ளது.
ஆனால் அல்லாஹ் என்ற பெயரைக் கறைப்படுத்த முடியாது. குறை காண முடியாது. புனித நாயனுக்கு ஏற்ற புனித வார்த்தையாக அமைந்திருக்கின்றது. தனித்த நாயனுக்குரிய தனியொரு பெயராக அமைந்திருக்கின்றது.
அல்லாஹ்வுக்கு அணி சேர்க்கின்ற அழகுப் பெயர்களை திருக்குர்ஆன் தருவதைப் பாருங்கள்.
அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.
அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) பேரரசன்; தூயவன். நிம்மதியளிப்பவன்; அடைக்கலம் தருபவன்; கண்காணிப்பவன்; மிகைத்தவன்; ஆதிக்கம் செலுத்துபவன்; பெருமைக்குரியவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.
அவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன்; உருவாக்குபவன்; வடிவமைப்பவன்; அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 59:22-24)
அனைத்து பைபிள்களிலும் அல்லாஹ்வின் பெயர்.
படைத்த இறைவனுக்கு அவனது தனித்தன்மையைக் குறிக்கின்ற வகையில் ஒவ்வொரு மொழியிலும் ஒரு பெயரைக் கொடுக்கின்றனர். ஆனால் செமட்டிக் மொழிகளில் அதாவது மோஸே, ஏசு, முஹம்மது ஆகிய தூதர்களின் மொழிகளில் அல்லாஹ் என்று அழகுற அமைந்த வார்த்தையைப் போன்று அமையவில்லை. அல்லாஹ் என்ற இந்த வார்த்தை (அல்லது அதன் வேர்ச் சொல்லாக அமைந்திருக்கும் இலாஹ்) பைபிளின் அனைத்து மொழியாக்கங்களிலும் தனஓக்குரிய இடத்தைப் பிடித்திருக்கின்றது.
உலகத்தில் பேசப்படும் மொழிகளில் 1500 மொழிகளுக்கு மேற்பட்ட மொழிகளில் பைபிளை மொழிபெயர்த்து விட்டதாகக் கிறித்தவ உலகம் மெச்சிக் கொள்கின்றது.
அந்த மொழியாக்கங்களிலெல்லாம் அல்லாஹ் என்ற வார்த்தை நுழைந்து தன்னுடைய ஆளுமையை, அழகை அற்புதமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மேற்கத்தியர்கள் கூறுவது போன்று இது விவிலிய உண்மை (Gospel Truth). . அப்படியானால் உலகில் வாழும் 120 கோடி கிறித்தவர்களுக்கு இது ஏன் தெரியாமல் போய் விட்டது என்று கேட்கலாம். இதற்குக் காரணம் அவர்களுக்குச் செய்யப்பட்ட மூளைச் சலவை தான்.
அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. (மத்தேயு 13:13)
இந்த பைபிள் வசனம் கூறுவது போல் அவர்கள் பார்ப்பதில்லை, செவியுறுவதில்லை, சிந்திப்பதும் இல்லை.
ஏசு உதிர்த்த இனிய வார்த்தைகள்.
சிலுவையில் தொங்கியதாகக் கருதப்படும் ஏசு உதிர்த்த இனிய வார்த்தைகள் இதோ:
பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, “எலோயி, எலோயி, லெமா சபக்தானி?” என்று உரக்கக் கத்தினார். “என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பது அதற்குப் பொருள். (மாற்கு 15:34)
புனித மார்க்கின் கருத்துப்படி இது எபிரேய மொழியின் மூல, கையெழுத்துப் பிரதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாகும். காரணம், மூல நூல்கள் என்றழைக்கப்பட்ட இவ்வேதங்கள் எபிரேய மொழியில் தான் எழுதப்பட்டன.
அதே சமயம் மத்தேயு சொல்வதை சற்றுக் கவனியுங்கள். அவர்கள் யூதர்களை இலக்காகக் கொண்டு பைபிளை எபிரேய மொழியிலேயே எழுதியதாகக் கருதப்படுபவர்.
புனித ஜீரோம் என்பவர் கி.பி. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவத் தந்தை ஆவார். இவர் மத்தேயு பற்றிக் குறிப்பிடுவதாவது:
லெவி (கங்ஸ்ண்) என்று அழைக்கப்படக் கூடிய மத்தேயு வரி வசூல் செய்யும் பொது அதிகாரி. அனைத்து நற்செய்தியாளர்களை விடவும் முதன் முதலில் வந்து தூதரானவர். ஏசு கிறிஸ்துவுடைய விவிலியத்தை நம்பிக்கை கொண்ட, விருத்த சேதனம் செய்த யூதர்களின் எபிரேய மொழியிலும் அவர்களது தன்மைக்கு ஒப்பவும் இயற்றினார். உண்மையில் மத்தேயுவின் மொழி உச்சரிப்பு, மார்க்கின் உச்சரிப்பை விட அதிகமாக செமட்டிக் மொழி உச்சரிப்புக்கு ஒத்திருக்கும். இதைப் பின்வரும் வசனத்தை, முன்னால் இடம் பெற்ற வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும்.
மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார். (மத்தேயு 27:46)
ஏலி, ஏலி லெமா சபக்தானி என்ற வார்த்தைகளை தயவு செய்து மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.
ஏசு சிலுவையில் அறையப்படும் போது ஜேஹுவா, ஜேஹுவா என்று சொன்னாரா? என்று ஒரு உண்மை கிறித்தவரிடம் கேளுங்கள். இல்லை என்றே பதிலளிப்பார். தந்தையே, தந்தையே என்று சொன்னாரா? என்று கேளுங்கள். அதற்கும் அவர் இல்லை என்றே பதிலளிப்பார். நிச்சயமாக அவரது பிரார்த்தனை இலீ, இலீ – இலாஹ், இலாஹ் என்று தான் அமைந்திருந்தது. ஒரு கண்ணியமிக்க கிறித்தவர் இந்த உண்மையில் உங்களுடன் உடன்படாமல் இருக்க மாட்டார்.
அல்லலூயா.
உங்களுடைய கிறித்தவ நண்பரிடம் அல்லலூயா என்ற வார்த்தையைப் பற்றிக் கேளுங்கள். கிறித்தவர் என்று பெயர் பெற்ற எவரும் இந்த வார்த்தையைத் தெரியாமல் இருக்க மாட்டார். அல்லாஹு அக்பர்; அல்லாஹு அக்பர் என்று முஸ்லிம்கள் தக்பீர் கூறுவது போன்று அவர்கள் அல்லலூயா என்று சொல்வார்கள். அல்லலூயாவின் அர்த்தம் என்ன? இதற்குப் புதிய ஏற்பாட்டின் 27வது புத்தகமான இறுதிப் புத்தகம் திருவெளிப்பாடு (வெளிப்படுத்தின சுவிஷேசம்) செல்வோம்.
ஏசுவுடைய மாணவர் ஒரு காட்சியைக் காண்கிறார். அதை இப்போது பார்ப்போம்.
1. இதன்பின் பெருந்திரளான மக்களின் கூச்சல் போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது; “அல்லேலூயா! மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.
2 ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.”
3 மீண்டும் அந்த மக்கள், “அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது” என்றார்கள்.
4 அந்த இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருந்த கடவுள்முன் விழுந்து வணங்கி, “ஆமென், அல்லேலூயா” என்று பாடினார்கள்.
5 அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.
6 பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல்போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் எழுந்த போரொலியைக் கேட்டேன். அது சொன்னது; “அல்லேலூயா! நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்; அவர் ஆட்சி செலுத்துகின்றார்.
7 எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.
8 மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே.”
9 அந்த வானதூதர் என்னிடம், “ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார்.
10 நான் வானதூதரை வணங்கும் பொருட்டு அவரது காலடியில் விழுந்தேன். ஆனால் அவரோ என்னிடம், “வேண்டாம். இயேசுவுக்குச் சான்று பகர்ந்த உனக்கும் உன் உடன்பிறப்புகளுக்கும் நான் உடன்பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார். ஏனெனில் இயேசு பகர்ந்த சான்றே இறைவாக்குகளுக்கு உயிர்மூச்சு.
(திருவெளிப்பாடு 19:1-10)
இதற்கு அரபி பைபிளில் அமைந்த வார்த்தை:
அரபி பைபிளில் இடம் பெறும் சொற்களுக்காக திருச்சபை வழக்குச் சொற்கள் அகராதி என்று ஓர் அகராதியை இணைத்திருக்கின்றார்கள்.
அதில் இதற்குப் பொருள் கூறும் போது, “இது எபிரேய வார்த்தை. இவ்வாறு தான் (இவ்விரு விதமாகத் தான்) அனைத்து மொழிகளிலும் மொழியப்படுகின்றது. அதாவது “ஹல்லிலூ (தூய்மைப்படுத்துங்கள்) யாஹுவா (யாஹுவாவை)’ அதாவது இறைவனைத் தூய்மைப்படுத்துங்கள்; அல்லது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் என்பது இதன் பொருளாகும்” என்று இந்த அகராதி குறிப்பிடுகின்றது.
இதிலிருந்து நாம் தெளிவாக விளங்குவது, அல்லலூயா என்பதே அல்லாஹ்வைத் துதிப்பது தான்.
இங்கே இந்த அத்தியாயத்தின் அரபியாக்கத்தை அரபிப் பிரதியிலிருந்து தருகிறோம்.
தமிழ் பைபிளில் கடவுள், கர்த்தர் என்ற வார்த்தைகள் வந்த இடத்தில் அல்லாஹ் என்ற வார்த்தை வருகின்றது. இதில் நான்காவது வசனத்தில் அரபியில் அர்ஷ் என்ற வார்த்தை இடம்பெறுகின்றது. இதற்குத் தமிழ் மொழி பெயர்ப்புகளில் சிம்மாசனம், அரியணை என்று அர்த்தம் செய்யப்பட்டிருக்கின்றது. அரியணையில், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற… என்ற வாசகம் அமையப் பெற்றிருக்கின்றது.
அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக! (திருக்குர்ஆன் 25:59)
அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. குர்ஆனில் இதுபோன்ற அதிகமான வசனங்கள் இடம் பெற்றாலும் இங்கு உதாரணத்திற்காக ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துக் காட்டியுள்ளோம்.
இவையெல்லாம் அல்லாஹ்வை மட்டும் தான் சந்தேகமில்லாமல் குறிப்பிடுகின்றன. ஒருபோதும் ஏசுவைக் குறிக்காது. அவ்வாறு குறிக்காது என்பதற்கு இதிலுள்ள 10வது வசனமும் ஒரு சான்றாகும்.
யோனா வானவரின் காலில் விழும் போது, “நீ அல்லாஹ்விற்கு மட்டும் தான் சிரம் பணிய வேண்டும்; நான் உன்னுடனும் உனது சகோதரர்களுடனும் உள்ள ஓர் அடிமை தான்” (அதாவது, அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்று) ஏசு அளித்த சான்று தான் தூதுச் செய்தியின் உயிர் மூச்சு என்று இந்த 10வது வசனமும் குறிப்பிடுகின்றது.
இதுவும் அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக, அர்ஷில் இருக்கும் அல்லாஹ்வைத் தான் சந்தேகத்திற்கு இடமின்றி குறிப்பிடுகின்றது. இதன் அடிப்படையில் கிறித்தவ நண்பர்களே! அல்லலூயா என்று நீங்கள் அழைப்பது உங்களையும் எங்களையும் படைத்த உண்மையான அல்லாஹ்வைத் தான்.
அல்குர்ஆன் 3:64 வசனத்தின்படி உண்மையான அல்லாஹ்வை வணங்க வாருங்கள் என்று அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு: அஹ்மத் தீதாத் அவர்கள், “அல்லலூயாவில் “அல்ல’ என்பது அல்லாஹ்வைக் குறிக்கின்றது; யா என்பது ஓர் ஆச்சரியக் குறி” என்று குறிப்பிட்டு விட்டு அந்த “யா’வை முன்னால் கொண்டு வந்து, “யா அல்லாஹ்’ என்பது தான் அல்லலூயாவின் பொருள் என்று தெரிவிக்கின்றார்கள்.
ஆனால் “யா’ என்பது அரபியிலும் எபிரேயுவிலும் முன்னால் தான் இடம் பெறுகின்றது என்று அஹ்மத் தீதாத் அவர்களே மற்றொரு இடத்தில் குறிப்பிடுகின்றார். அல்லலூயாவில் அது பின்னால் இடம் பெறுகின்றது. இதை எப்படி முன்னால் கொண்டு வர முடியும் என்ற விளக்கத்தை அவர் தரவில்லை. அத்துடன் அரபியில் “யா’ என்பது அழைப்புக் குறியாகத் தான் வருகின்றது. ஆச்சரியக் குறியாக வருவதில்லை.
எனவே அல்லலூயாவிற்கு அரபி பைபிள் கொடுக்கின்ற விளக்கம் தான், “ஹல்லிலூ (தூய்மைப்படுத்துங்கள்) யாஹுவா (யாஹுவாவை)” அதாவது “இறைவனைத் தூய்மைப்படுத்துங்கள்” என்ற விளக்கம் தான் ஓரளவுக்குப் பொருத்தமாக இருக்கின்றது என்பதால் அந்த விளக்கமே இங்கே அளிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடவுள் தந்தை.
குர்ஆனிலும் பைபிளிலும் கடவுளுக்கென்று பொதுவான பெயர்கள் இருக்கின்றன. ஆனால் குர்ஆனில் அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. அந்தப் பெயர்களில் “அப்’ – தந்தை என்ற வார்த்தை அறவே இடம்பெறவில்லை. ஆனால் இதற்கு மாற்றமாக “ரப்’ என்ற வார்த்தை மிக அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதற்கு இறைவன், எஜமான் என்று பொருள்.
குர்ஆனில் தந்தை என்ற வார்த்தை இடம் பெறாததற்கு ஒரே காரணம், கிறித்தவர்கள் வானத்தில் உள்ள தந்தைக்கு மகனாக ஏசுவை ஆக்கியது தான். இது புனித மிக்க கடவுளின் தரத்தை பாலியல் தேட்டத்திற்கு உட்பட்ட மனித, மிருக இனங்களின் தரத்திற்கு இறக்கும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.
குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை.
“வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” என்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்கு மாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூôது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்” எனவும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:14)
உணவு சாப்பிடுகின்ற எவரும் எவனும் ஆபசஆபமஆக, கடவுளாக இருக்க முடியாது. இந்த ஓர் உரை கல்லை வைத்து மனிதக் கடவுளை வணங்குகின்ற கோடிக்கணக்கான படித்த, பண்டித அறிவிழந்த ஜென்மங்களை மீட்டெடுத்து நரகத்திலிருந்து காத்து விடலாம்.
இந்த அடிப்படையில் கடவுளை ஆபசஆபம என்று கூறும் தெற்கு ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடிமக்கள், இனத்தால் பழங்குடியினராக இருந்தாலும் கடவுள் பற்றிய தங்களது சரியான சிந்தனையினால் கிழக்கத்திய, மேற்கத்திய நாகரீக (?) மக்களை விட விஞ்சி விட்டார்கள் என்பது தான் உண்மை.
ஏகத்துவம் மாத இதழ்.

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை