கண்கெட்ட பின்பு



கண்கெட்ட பின்பு


அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்துஅல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும்அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.
பின்பற்றப்பட்டோர்வேதனையைக் காணும் போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவுகள் முறிந்து விடும்.
"(உலகுக்கு) திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள் எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக் கொள்வோம்'' என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித் தான் அல்லாஹ் அவர்களது செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதாகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து வெளியேறுவோர் அல்லர்.
 (திருக்குர்ஆன்2:165-167)
இந்த மூன்று வசனங்களும் விளக்கம் தேவைப்படாத அளவுக்கு மிகவும் எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையில்அமைந்துள்ளனமுஃமின்களின் உள்ளங்கள் நடுங்கும் அளவுக்குக் கடுமையான எச்சரிக்கைகள் இவ்வசனத்தில்அடங்கியுள்ளன.
தமிழக முஸ்லிம்களின் பெரும்பாலான நடவடிக்கைகளை நாம் கவனித்தால் இந்த வசனங்கள் குர்ஆனில் இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லையாஅல்லது தெரிந்தே அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்கிறார்களாஎன்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறதுஎனவே இவ்வசனங்கள் பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது.
அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்துஅல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர் என்று அல்லாஹ் கூறுவதை நம்மவர்களின் நடைமுறையோடு பொருத்திப் பார்ப்போம்.
நம்மவர்களில் எவரும் அல்லாஹ்வுக்குச் சமமாக அவ்லியாக்களை நேசிப்பதாகக் கூற மாட்டார்கள்.வாயளவில் அவர்கள் இவ்வாறு கூறாவிட்டாலும் அவர்களின் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்தால் அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வை விடஅதிகமான நேசம் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை அறிய முடியும்அவர்களின் சில நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
பள்ளிவாசலில் ஒரு இமாம் சொற்பொழிவு நடத்திக் கொண்டிருப்பார்அதைச் சில நூறுபேர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்அந்தச் சொற்பொழிவின் போது அல்லாஹ் என்ற திருநாமத்தைப் பல தடவை அவர் குறிப்படுவார்கேட்பவர்களிடம் அந்தத் திருநாமம் எத்தகைய சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை.  சொல்பவரிடம் கூட எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லைசில நேரங்களில் அப்துல்காதிர் ஜீலானி என்ற பெயரை அந்த இமாம் குறிப்பிடுவார்இந்தப் பெயரைக் கேட்பவரின் உள்ளங்கள் பூரிப்படைகின்றனஅவர்களின் மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொள்கின்றன.அவர்களை அறியாமலே 'கத்தஸல்லாஹுஸிர்ரஹுஎன்ற வார்த்தை அவர்களின் வாயிலிருந்து புறப்படுகின்றதுகேட்பவர்கள் மட்டுமின்றி சொல்லக்கூடிய இமாமும் அல்லாஹ் என்ற திருநாமத்துக்குக் கொடுக்காத அழுத்தத்தை அப்துல்காதிர் என்ற பெயருக்குக் கொடுப்பார்.சர்வசாதாரணமாக இந்தச் சமுதாயத்தில் இதை நாம் காண முடிகின்றது.
'அல்லாஹ் மட்டும் கூறப்படும் போதுமறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன.அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.'  திருக்குர்ஆன்39:45
இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுவது போன்று இவர்கள் நடந்து கொள்ளக் காரணம் இவர்களின் உள்ளம் அல்லாஹ்வைவிட மற்றவர்களை அதிகம் மதிக்கிறது. அதிகம் நேசிக்கிறது என்பதுதான்.
அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கி இருக்கிறான் என்பதும்தினமும் ஐந்துமுறை பள்ளிவாசலிலிருந்து அழைப்பு விடப்படுகிறது என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.அழைக்கப்பட்டும் அல்லாஹ்வின் இல்லத்திற்கு வருதைத் தவிர்க்கக்கூடியவன் அழைக்கப்படாமலே தர்காவுக்கு ஓடுகிறான்தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு இவனது உள்ளத்தில் அல்லாஹ்வுக்கு வழங்கிய இடத்தைவிட அதிக இடம் இருக்கிறது என்பதைத் தவிர இதற்கு வேறுகாரணம் இருக்க முடியாது.
துன்பங்கள் ஏற்படும்போது அல்லாஹ்வை நினைத்து அவனிடம் பிரார்த்திக்கக் கடமைப்பட்டவர்கள்'யாமுஹ்யித்தீனே!என்று அழைப்பதும் இதே காரணத்தினால்தான்.
இறைவனை விட மற்றவர்கள் மீது அதிகநேசம் கொண்ட இத்தகையவர்கள் படுபயங்கரமான விளைவுகளை எதிர்நோக்கியுள்ளனர் என்பதையும் இந்த வசனங்களில் இறைவன் பட்டியலிடுகிறான்.
1)   அவர்கள் அக்கிரமக்காரர்களாக இறைவனால் கருதப்படுவர்கள்.
2)   நன்மை பெறுவோம் என்ற நம்பிக்கையில் மண்விழுந்து அல்லாஹ்வின் வேதனையை அதுவும் கடுமையான வேதனையை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
3)   அன்றைய தினத்தில் எவரும் எதிர்க்கேள்வி கேட்க இயலாமல் நிற்பார்கள்எல்லா வல்லமையும் அவனுக்கு மட்டுமே அன்றைய தினம் இருக்கப் போவதையும் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள இருக்கிறார்கள்.
4)   இதைவிட முக்கியமான அம்சம்இவர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்த இந்த நல்லடியார்கள் இவர்களைக் கைகழுவி விடுவார்கள்காட்டிக் கொடுத்து விடுவார்கள்அவர்களுக்கிடையே யாதொரு உறவும் அன்றைய தினம் இருக்காது.
5)   அவர்கள் செய்து வந்த ஏனைய நல்லறங்கள் யாவும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்க மாட்டாஅவை அவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக ஆகிவிடும்.
6)   இதனால் நரகத்தில் நுழைந்த அவர்கள் என்றென்றும் அதிலேயே தங்கி விடுவார்கள்ஒரு போதும் நரகிலிருந்து வெளியேற இயலாது.
இப்படி ஆறுவகையான இழப்புக்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன என்பதை இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றனமறுமையை நம்பக்கூடிய மக்களுக்கு இது கடுமையான எச்சரிக்கையாகும்.
இதில் கடைசி மூன்று அம்சங்களும் மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டும்.
எந்தப் பெரியார்களை இவர்கள் பெரிதும் நம்பி இந்த அக்கிரமம் புரிந்தார்களோ அந்தப் பெரியார்களே கைகழுவி விடுவார்கள் என்பதைப் பல இடங்களில் இறைவன் விரிவாகவும் விளக்குகின்றான்.
'மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும்என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!என நீர்தான் மக்களுக்குக் கூறினீரா?' என்றுஅல்லாஹ் (மறுமையில்கேட்கும் போது,நீதூயவன்எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன்நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய்எனக்குள் உள்ளதை நீ அறிவாய்உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன்நீயே மறைவானவற்றை அறிபவன்என்று அவர் பதிலளிப்பார்.
'நீ எனக்குக் கட்டளையிட்டபடி எனது இறைவனும்உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்என்னை நீகைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.'
திருக்குர்ஆன்5:116,117
ஈஸா நபியவர்களைப் பெரிதும் நம்பியிருந்தவர்கள் மறுமையில் ஈஸா நபியால் கை விடப்படுவார்கள் என்று இங்கே இறைவன்கூறுகிறான்கிரித்தவர்கள் அடையும் இதேநிலையைத் தான் இறைவனைவிட மற்றவர்களை நேசிப்பவர்கள் அடைவார்கள் என்றால் அது எவ்வளவு கடுமையான குற்றம் என்பது விளங்கவரும்.
'நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள்.செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்கள்கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள்.          
திருக்குர்ஆன்35:14
'உங்களுக்கு நாம் வழங்கியவற்றையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டுவிட்டு உங்களை ஆரம்பத்தில் நாம்படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்!தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்தஉங்கள் பிரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையேஉங்களுக்கிடையே (உறவுகள்முறிந்து விட்டன' (என்று கூறப்படும்)
திருக்குர்ஆன்6:94
10:28வசனத்திலும் இந்தக் கருத்தைக் காணலாம். ஈஸா நபி போன்ற மிகப் பெரிய நல்லடியார்களேயானாலும் இத்தகையவர்களைக் கைவிட்டு விடுவார்கள் என்பதை இவ்வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன.
இறைவனை விட மற்றவர்களை அதிகம் நேசித்தவர்கள் எவ்வளவுதான் நல்லாறங்களை நிறைவேற்றினாலும் அந்த நல்லறங்களில் எதையுமே இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.அவற்றுக்கு எந்தக்கூலியும் அவனால் வழங்கப்பட மாட்டாது எனவும் இறைவன் கூறுகிறான்.
'நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர்.'
திருக்குர்ஆன்39:65
'அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.'
திருக்குர்ஆன்6:88
இறைவனை விட மற்றவர்களை அதிகம் நேசிப்பதும் பச்சையான இணைவைத்தல் தான் என்பதும் இணைவைப்பதால் ஏற்படும் விளைவுகள் இதனாலும் ஏற்படும் என்பதும் தெளிவாகிறது.
இவ்வாறு நடந்து கொண்டவர்கள் நரகிற்குச் சென்று விட்டு ஏதோ ஒரு சமயத்தில் சுவர்க்கத்தை அடைய முடியுமாஎன்றால் நிச்சயமாக முடியாதுஅவர்கள் நரகைவிட்டு வெளியேற மாட்டார்கள் என்று தெளிவாக இங்கே குறிப்பிடுகிறான் இறைவன்.
'அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம்அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'  என்றே மஸீஹ்கூறினார்.
திருக்குர்ஆன்5:72
'தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ்நிலையில் உள்ள(பாவத்)தைதான் நாடியோருக்கு மன்னிப்பான்.'
திருக்குர்ஆன் 4:48
இறைவனின் மன்னிப்பை அறவே பெறமுடியாத துர்பாக்கியசாலிகளாக அவர்கள் திகழ்வார்கள் என்று இந்த வசனங்களும் தெளிவாக விளக்குகின்றனமறுமை வாழ்க்கையைப் பாழாக்கும் இந்த அக்கிரமத்திலிருந்து நாம் விடுபடுவோமாக!   
பீ.ஜைனுல்ஆபிதீன்


Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை