பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை



பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

நாத்திக்ர்கள் விவாத பின்னணி என்ன?
நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தின் போது அவர்கள் படு தோல்வி அடைந்ததை வீடியோ காட்சிகள் மூலம் அறிந்திருப்பீர்கள்.
பொதுவாக விவாதங்களின் போது எதிர்த் தரப்பினர் எதிர்பார்க்காத சில வாதங்கள் முன் வைக்கப்படும் போது அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்படலாம். பின்னர் அதற்கான விடையை அவர்கள் கண்டு பிடிப்பார்கள். ஆனால் நாத்திகர்களுடன் நடந்த இந்த விவாதம் அத்தகையது அல்ல.
மாறாக இறைவன் இருக்கிறான் என்பதற்கு நாம் என்னென்ன ஆதாரங்களை எடுத்துக் காட்டுவோம் என்பதும்குர் ஆன் இறைவேதம் என்பதற்கு நாம் எத்தகைய சான்றுகளை எடுத்துக் காட்டுவோம் என்பதும்நாத்திகர்களின் மூட நம்பிக்கை குறித்து நாம் எத்தகைய கேள்விகளை எடுத்துக் காட்டுவோம் என்பதும் பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டன.
பல மாதங்களூக்கு முன்பே கேள்வித்தாள் வழங்கப்பட்டும் பதில் எழுதாத மாணவனைப் போல் அவர்கள் ஆகி விட்டனர். எத்தனை மாதங்கள் அவர்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டாலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு இஸ்லாம் தெளிவாக இருக்கிறது என்பதும் இதில் நிரூபணமாகியுள்ளது.
உணர்வு வார இதழில் பல வாரங்கள் நான் தொடராக எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட் அதே விஷயங்கள் தான் விவாதத்தின் போதும் கேட்கப்பட்டன்.
நேயர்கள் பயனடைவதற்காக அந்தத் தொடரை இங்கே வெளியிடுகிறோம்.
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 1
இராமர் உண்மையிலேயே வாழ்ந்தவரா அல்லது கற்பனைப் பாத்திரமா என்ற விமர்சனம் தலை தூக்கியிருந்த சமயத்தில் அதற்குப் பதில் சொல்லப் புகுந்த ராமகோபாலன் நபிகள் நாயகம் பற்றி இப்படிக் கேள்வி கேட்க முடியுமா?என்று எதிர் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு மறுப்பு அளிக்கும் வகையில் உணர்வில் எழுதப்பட்ட கட்டுரையில்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கற்பனைப் பாத்திரமன்று. அவர்கள் ஒரு முன் மாதிரி. அதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டுஅறிவியல் பூர்வமான நிரூபணங்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரைக் கற்பனைக் கதாபாத்திரத்தோடு ஒப்பிடுவது மடத்தனம் என குறிப்பிட்டிருந்தோம். (உணர்வு 5-11-2007)
இராமர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் இவ்வுலகில் வாழ்ந்த உண்மையான பாத்திரம் என்பதற்கு சான்று உள்ளது என்பதுதான் இதன் சாராம்சம்.
உணர்வில் எழுதப்பட்டதை ஒருவர் விமர்சிப்பது என்றால்எழுதப்பட்டது குறித்துத் தான் விமர்சிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கற்பனைப் பாத்திரமே என்று சான்றுகளை எடுத்துக் காட்ட வேண்டும். அல்லது நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்தார் என்பதை நிரூபிக்க இயலுமா என்று அறை கூவல் விட வேண்டும்.
ஆனால் பகுத்தறிவு என்ற போர்வையில் மூடநம்பிக்கைகளை மூட்டை மூட்டையாக முதுகில் சுமந்துள்ள திராவிடக் கழகத்தின் மாதமிருமுறை ஏடான உண்மை எனும் ஏடு தனது அறியாமையைப் பறைசாற்றும் வகையில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.
புஷ்பக விமானமும் புராக் விமானமும்என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் உணர்வில் எழுதப்பட்ட மேற்கண்ட வரிகளை எடுத்துக் காட்டி சில வினாக்களை எழுப்பியுள்ளது.
முகம்மது நபி (ஸல்) அவர்கள் புராக் என்ற மிருக விமானத்தில் ஏறி மிஹ்ராஜ் என்கிற விண்வெளிப் பயணம் சென்றதாக இஸ்லாம் மார்க்கத்தில் நம்பப்படுகிறது (நூல் - புகாரி : 3207).
இராமன் சென்ற புஷ்பக விமானமும் முகம்மது நபி சென்ற புராக் விமானமும் எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது?
புராக் விமானத்தில் முகம்மது நபி அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சிக்கு அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்? (உண்மைஏடு ஜுன் 1-15, 2008)
இந்தக் கேள்வியின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழவில்லைஅவர்கள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று வாதிடும் அளவுக்கு போலி பகுத்தறிவாளர்களுக்கு பகுத்தறிவு முற்றிப் போய் உள்ளது.
இஸ்லாம் குறித்த இந்தக் கேள்விகளையும்இதைத் தொடர்ந்து உண்மை ஏடு எழுப்பும் அத்தனை வாதங்களையும் பகுத்தறிவோடு எதிர் கொள்ள உணர்வு இதழ் தயார் என்பதை அறிவித்துக் கொள் கிறோம்.
போலி பகுத்தறிவுவாதிகள் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள அறியாமையையும்போலி பகுத்தறிவுவாதிகளிடம் மண்டிக்கிடக்கும் மூட நம்பிக்கைகளையும் தோலுரித்துக் காட்டுவதற்கு முன் உண்மை ஏடு ஏற்கனவே நம்மிடம் சூடு பட்டு பல வருடங்கள் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்த வரலாற்றை நினைவுபடுத்துகிறோம்.
அல் ஜன்னத்ஏட்டின் ஆசிரியராக நான். இருந்த போது அதில் இடம் பெற்ற ஏ.கே. அப்துர் ரஹ்மான் அவர்களின் கட்டுரை குறித்தும்உண்மை ஏடு இது போல் விமர்சனக் கட்டுரை எழுதியது.
இன்றைய அறிவியலை திருக்குர்ஆன் அன்றைக்கே சொன்னது என்று எழுதப்பட்ட கட்டுரையை மறுக்கப் புகுந்த உண்மை ஏடு அல் ஜன்னத் ஏட்டில் எழுதப்பட்டது போல் எந்த அறிவியல் அறிஞரும் கூறவில்லை என்ற ரீதியில் தனது விமர்சனக் கட்டுரையை எழுதியிருந்தது. நிரூபிக்க இயலுமா என சவாலும் விட்டிருந்தது.
இதற்கு பதிலடியாக அல் ஜன்னத் ஏட்டில் ஏ.கே. அப்துர் ரஹ்மான் அவர்கள் அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்து வைத்து தொடர் கட்டுரை எழுதினார்.
நேர்மையான சிந்தனையும்பகுத்து உணரும் அறிவும் உண்மை ஏட்டை நடத்துவோருக்கு இருந்தால் இந்த வாதங்களை மறுத்து கட்டுரை எழுதியிருக்க வேண்டும் அல்லது நாங்கள் தவறாக எழுதி விட்டோம் என்று வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆண்டுகள் 15 ஓடிய பிறகும் இன்று வரை உண்மை ஏடு வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டது.
இந்தப் பழைய வரலாறு மக்களுக்குத் தெரிந்திருக்காது என்ற எண்ணத்தில் உணர்வுஏட்டில் எழுதப்பட்ட ஒரு பாராவைப் பிடித்துக் கொண்டு விமர்சனம் செய்திருக்கிறது உண்மை ஏடு. இனியும் இது போன்ற விமர்சனம் தொடரும் என்ற எச்சரிக்கை வேறு விட்டுள்ளது. பகுத்தறிவு என்ற பெயரில் இவர்கள் செய்யும் கேலிக் கூத்துகளை நாம் விமர்சிக்கப் புகுந்தால் தலை தெறிக்க ஓட்டம் எடுக்கும் முடிவை பெரியார் தொண்டர்கள் எடுப்பார்கள் என்று நாம் மறு எச்சரிக்கை விடுக்கிறோம்.
அறிவியலுக்கு ஜால்ரா அடித்து தங்களின் வேதங்களையும்கடவுள்களையும் காப்பாற்றிக் கொள்ளும் நிலையை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் இது போன்ற பெரியாரின் பகுத்தறிவுச் சவுக்கடி இன்னும் தொடரும்என்று உண்மை ஏடு மிரட்டியுள்ளது.
மிஹ்ராஜ் பயணம் குறித்து மட்டுமல்ல... இன்னும் பல விஷயங்கள் குறித்தும் கேள்விகள் கேட்க முடியும். கடவுள் இருப்பதாக நம்புகிறீர்களேஅதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?
மரணித்த பின் மனிதன் உயிர்ப்பிக்கப்படுவான் என்று நம்புகிறீர்களேஅதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?
சொர்க்கம்நரகம் என்கிறீர்களேஅதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?
வானவர்கள்ஷைத்தான்கள் இருப்பதாக நம்புகிறீர்களே அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமாஇது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்கலாம்.
எதையெடுத்தாலும் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா என்று கேட்பது மூடர்களின் கேள்வியே தவிர பகுத்தறிவாளர்களின் கேள்வி அல்ல...
அறிவியல் சோதனைக்கு உட்படுத்தத் தக்கவைகளைத் தான் அறிவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஒன்றை நம்புவதற்கு அறிவியல் மட்டுமே போதுமான சாதனம் அல்ல என்பதை இந்தப் பகுத்தறிவாளர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விரும்புகிறான். இவன் அவனை விரும்புகிறான் என்று அறிவியல் ரீதியில் நிரூபிக்க முடியுமா?
ஒருவன் முன்னால் சுவையான உணவு உள்ளது. அந்த உணவில் அவன் ஆசைப்படுகிறானா இல்லையா என்பதை அறிவியல் மூலம் நிரூபிக்க முடியுமா?
அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாத பல விஷயங்கள் பகுத்தறிவுப் பூர்வமானதாக இருப்பதை மறுப்பவன் பகுத்தறிவுவாதியே அல்ல.
இந்தப் போலி பகுத்தறிவுவாதிகள் கேட்ட கேள்விக்கு அவர்களது முதுகெலும்பை முறிக்கும் பதிலைத் தரவுள்ளோம். அதற்கு முன்னால் சில அடிப்படையான விஷயங்களை அனைவருக்கும் (போலி பகுத்தறிவாளர்களுக்கு) நாம் விளக்க வேண்டியுள்ளது.
1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முஹம்மது என்ற மனிதர்தமக்கு இறைவனிடமிருந்து செய்திகள் வருவதாக வாதிட்டார். அன்றைய மக்கள் அவரது நாற்பதாண்டு கால தூய்மையான வாழ்க்கையைக் கண்டு அவர் மேல் மதிப்பு வைத்திருந்ததால் அவரை இறைவனின் தூதர் என்று நம்பினார்கள்.
எந்தச் செய்திகள் இறைவனிடமிருந்து வருகிறது என்று முஹம்மது அவர்கள் கூறினார்களோ அது தான் திருக்குர்ஆன். இந்தக் குர்ஆனைத் தான் முஹம்மது நபியவர்கள் வேதம் என்று கூறினார்கள் என்பதை நிரூபிக்க தாஷ் கண்ட்இஸ்தான்பூல் ஆகிய நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதிகள் சான்று கூறிக் கொண்டிருக்கின்றன.
முஹம்மது நபி அவர்கள் எதை இறைவனின் செய்திகள் என்று கூறினார்களோ அந்தச் செய்திகளைப் பார்க்கும் போது எந்தப் பகுத்தறிவாளனும் அதை முஹம்மது அவர்களின் வார்த்தை என்ற முடிவுக்கு வரமாட்டான். அகில உலகையும் படைத்து பராமரிக்கும் பேரறிவாளனாகிய இறைவனின் கூற்றாக இருக்க முடியும் என்ற முடிவுக்குத்தான் வருவான்.
நபிகள் நாயகம் காலத்தில் பூமி உருண்டை வடிவமானது என்ற அறிவு மனிதனுக்கு இருக்கவில்லை. ஆனால் பூமி உருண்டை என்பதையும்கோள்களும்துணைக் கோள்களும் சுழல்கின்றனசுற்றுகின்றன என்பதையும் திருக்குர்ஆன் கூறுகிறது. நாத்திகர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால் இதனை முஹம்மது நபி கூறினார்.
இதை முஹம்மது நபியால் எப்படிக் கூற முடிந்தது என்பதற்கான அறிவியல் விளக்கத்தைப் பெரியாரின் அடிப்பொடிகள் கூறத் தயாரா?
அன்றைக்கு வாழ்ந்த எந்த மனிதனும் அன்றைக்கு இருந்த அறிவைக் கொண்டு இதைக் கூற முடியாது என்று நாங்கள் பகுத்தறிவோடு முடிவு செய்கிறோம். மனிதனை விட பேராற்றல் மிகுந்தவனிடமிருந்து தான் இச்செய்தி வந்திருக்க வேண்டும் என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி முஸ்லிம்களாகிய நாங்கள் முடிவு செய்கிறோம்.
சூரியன் பல்லாயிரக் கணக்கான மைல் வேகத்தில் அதன் கோள்களை இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது என்ற அறிவியல் உண்மை முஹம்மது நபியின் காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் திருக்குர்ஆன் இதைத் தெளிவான வார்த்தைகளால் கூறுகிறது. பெரியாரடிகளின் பாஷையில் சொல்வதாக இருந்தால் முஹம்மது இவ்வாறு கூறியுள்ளார்.
எந்த மனிதனும் இந்த அறிவைப் பெற்றிராத காலத்தில் இதை முஹம்மது நபி எவ்வாறு கூறினார் என்று பகுத்தறிவுப் பூர்வமான விளக்கம் கூற போலி பகுத்தறிவாளர்கள் தயாரா?
பூமியின் ஈர்ப்பு விசை குறித்த அறிவு முஹம்மது நபியின் காலத்து மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இதைப் பற்றி குர்ஆன் பேசுகிறது. போலி பகுத்தறிவுவாதிகள் பாஷையில் சொல்வதாக இருந்தால் முஹம்மது கூறியிருக்கிறார்!
எனவே இதை முக்காலமும் அறிந்த பேரறிவாளன் இறைவன் தான் கூறியிருக்க முடியும் என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் நம்புகிறோம்.
முஹம்மது அன்றைக்கே இதை எப்படிக் கூறினார் என்பதற்கான அறிவியல் விளக்கத்தை போலி பகுத்தறிவுவாதிகள் கூறத் தயாரா?
பெரு வெடிப்புக் கொள்கை பற்றியும் அண்ட சராசரங்கள் உருவான விதம் பற்றியும் முஹம்மது நபியின் காலத்து மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இதை எப்படி முஹம்மது சுயமாகக் கூறியிருக்க முடியும்?
இரண்டு கடல்களுக்கிடையே கண்களுக்குப் புலப்படாத திரை ஒன்று உள்ளது. அதன் காரணமாக இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஞானம் முஹம்மது நபி காலத்து மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இதை தெளிவான வார்த்தைகளால் திருக்குர்ஆன் கூறுவது எப்படி?
போலி பகுத்தறிவுவாதிகள் இதற்கு பகுத்தறிவுக்கேற்ற விளக்கம் தரத் தயாரா?
தேனீயின் வாய் வழியாக தேன் உற்பத்தியாகிறது என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த காலத்தில்தேனீ உணவாக உட்கொண்ட குளுக்கோஸ் செரிமானம் ஆகி அதன் வயிற்றிலிருந்து தான் தேன் வெளிப்படுகிறது என்ற அறிவியல் உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரால் எப்படிச் சொல்ல
முடிந்ததுஇதற்கான பகுத்தறிவுப் பூர்வமான பதிலை போலி பகுத்தறிவுவாதிகள் தரத் தயாரா?
விண்வெளிப் பயணம் சாத்தியம் என்பதையும் அதற்கேற்ற சாதனத்தின் மூலம் தான் செல்ல இயலும் என்பதையும்,அன்றைக்கே முஹம்மது நபி சொன்னது எப்படிஐயா போலி பகுத்தறிவாளர்களே! இதற்கு விடை சொல்லத் தயாரா?
இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி கூறியதை நாங்கள் அறிந்து இது முஹம்மது நபியின் கூற்று அல்ல என்று பகுத்தறிவுக்கேற்ப முடிவு செய்கிறோம். முஹம்மது நபி வாதிட்டது போல் அது இறைவனின் வார்த்தை என்று பகுத்தறிவு தீர்ப்பளிப்பதால் அதை ஏற்றுக் கொள்கிறோம்.
எப்போது நம்மை மிஞ்சிய பேராற்றல் மிக்க இறைவன் இருப்பதாக பகுத்தறிவைப் பயன்படுத்தி நம்பிவிடுகிறோமோ அந்த படைத்தவனே மறுமைசொர்க்கம்நரகம்மிஹ்ராஜ் உள்ளிட்ட அனைத்தையும் கூறுவதால் அவனுக்கு அது இயலும் என்பதால் நம்புகிறோம். சொர்க்கத்தைநரகத்தைமிஹ்ராஜை அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதாக இஸ்லாம் வாதாடவில்லை என்பதை பீடிகையாகக் கூறிக் கொள்கிறோம்.
போலி பகுத்தறிவுவாதிகள் தயார் என்றால் கீழ்க்கண்ட அறைகூவலை விடுக்கிறோம்.
குர்ஆன் கூறுகின்ற அறிவியல் உண்மைகளை அதற்கான அறிவியல் ஆதாரங்களோடு பொது மேடையில் நாங்கள் எடுத்துக் கூறுகிறோம். இதை எப்படி 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது கூறினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் அளிக்க வீரமணி வகையறாக்கள் தயாரா?
அது போல் பகுத்தறிவாளர்கள் நியாயப்படுத்தும் பல மடமைகளைப் பற்றி நாங்கள் கேள்வி கேட்போம். அதற்கு அறிவியல் பூர்வமாக பொது மேடையில் விளக்கம் தர போலி பகுத்தறிவுவாதிகள் தயாரா?
பகுத்தறிவும்சிந்தனையும் உண்மைஏட்டுக்கு இருந்தால் இந்த பகிரங்க அறைகூவலை ஏற்க முன் வர வேண்டும்.
அடுத்தடுத்த தொடர்களில் எடுத்துரைக்கப்படும் செய்திகளின் அடிப்படையில் அறைகூவல் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லிக் கொள்கிறோம்.
போலி பகுத்தறிவுவாதிகளுக்கு முதுகெலும்பை முறிக்கும் பதில்கள் இன்னும் வரும்... இன்ஷா அல்லாஹ்.
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 2
முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் உண்மை எனும் ஏடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் பற்றி கிண்டலடித்து கட்டுரை எழுதியதையும்உண்மைஏட்டின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு முன்னால் புரிந்து கொள்ள சில விஷயங்களையும் சென்ற இதழில் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.
மிஹ்ராஜ் பற்றிய உண்மை ஏட்டின் விமர்சனத்துக்குள் நுழைவதற்கு முன்னால் போலி பகுத்தறிவுவாதிகளுக்குச் சொல்ல வேண்டிய சில செய்திகளையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
மதவாதிகள் மூட நம்பிக்கைமிக்கவர்கள்சுயமரியாதை அற்றவர்கள் என்றெல்லாம் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் போலி பகுத்தறிவுவாதிகள் முதலில் தங்களின் நடவடிக்கைகளை பகுத்தறிவுப்பூர்வமாகவும் அறிவியலுக்கு ஏற்றவாறும் அமைத்துக் கொள்ள வேண்டும். மதவாதிகள் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் அறிவியல்பூர்வமாக அமைத்துக் கொண்டதாக உரிமை கொண்டாடுவதில்லை. அவர்களிடம் சில மூட நம்பிக்கைகள் இருப்பதை மன்னித்து விடலாம். ஆனால் பகுத்தறிவையும்சுயமரியாதையையும்ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துள்ள வீரமணி வகையறாக்களிடம் மூட நம்பிக்கை இருந்தால் அது மன்னிக்க முடியாததாகும்.
திராவிட இனம்
போலி பகுத்தறிவுவாதிகள் தம்மை திராவிடர் கழகம் என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
மனித குலத்தை ஆண்கள்பெண்கள் என்று வகைப்படுத்துவதில் அறிவியல் பூர்வமான நிரூபணம் இருக்கிறது.
மனித குலத்தை இரத்த வகைகளின் அடிப்படையில் குரூப்களாக வகைப்படுத்துவதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும். மனித குலத்தை அவர்களின் நடத்தை அடிப்படையில் நல்லவன்கெட்டவன் என்று வகைப்படுத்துவது அறிவுப்பூர்வமானது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
மனிதர்களை திராவிடர் எனவும்ஆரியன் எனவும் இவ்விரண்டிலும் சேராதவர்கள் எனவும் வகைப்படுத்துவதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா?
ஒரு ஆரியனின் உடலையும்திராவிடனின் உடலையும்இரண்டிலும் சேராதவரின் உடலையும் அறிவியலின் அனைத்து வகையில் சோதித்துப் பார்த்தாலும் அந்த அறிவியல் காரணமாக இவர் திராவிடர்இவர் ஆரியர் என்று நிரூபித்துக் காட்ட வீரமணி வகையறாக்கள் முன் வருவார்களா?
சிந்திக்கும் திறன் குறைந்த காலத்தில் சிலர் தம்மை ஆரியர் என்று வகைப்படுத்திக் கொண்டனர். மற்றும் சிலர் தம்மை திராவிடர் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். இந்த மூடத்தனத்தை சிந்திக்காமல் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது எந்த வகையான பகுத்தறிவு என்பதை போலி பகுத்தறிவுவாதிகள் பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?
திராவிடன் எல்லாம் நல்லவன் என்றும்ஆரியன் எல்லாம் கெட்டவன் என்றும் கூறுவதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா?
திராவிடனான மலையாளியும்திராவிடனான கன்னடனும்திராவிடனான தெலுங்கனும்திராவிடனான தமிழனுக்கு தண்ணீர் தர மறுக்கிறார்களே! திராவிடன் தண்ணீர் தர மறுப்பதால் நாம் அதைத் தட்டிக் கேட்கக் கூடாது என்று போலி பகுத்தறிவுவாதிகள் கூறுவார்களா?
ஆரியன் எல்லாம் கெட்டவன் என்று ஒரு பக்கம் மூட நம்பிக்கையை விதைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் ஆரியரான ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்தீர்களே! இந்த இரண்டில் எது பகுத்தறிவுப்பூர்வமானதுஎது அறிவுப்பூர்வமானதுபோலி பகுத்தறிவுவாதிகளால் விளக்க முடியுமா?
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற மூடநம்பிக்கைக்கு பகுத்தறிவு சாயம் பூசும் போலி பகுத்தறிவுவாதிகளே! உங்கள் நம்பிக்கைப்படியே திராவிடக் குரங்கிலிருந்து திராவிடனும்ஆரிய குரங்கிலிருந்து ஆரியனும் தோன்றினான் என்றால் அதை நிரூபிக்க முடியுமாடார்வின் தத்துவத்தின் படி கூட உங்களால் இதை நிரூபிக்க முடியாது.
உங்கள் பகுத்தறிவே பல்லிளிக்கும் போது மற்றவர்களிடம் பகுத்தறிவு வாதம் பேச கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டாமா?
ஜீனோம் இரகசியம் மனிதனின் ஜீன்களைப் பற்றியும் இரத்த வகைகளைப் பற்றியும்உடலின் உட்கூறு பற்றியும்முழு அறிவு இல்லாத காலத்தில் டார்வின் என்பவன் வெளித் தோற்றத்தின் அடிப்படையில் ஊகமாக (அறிவியல் பூர்வமாக அல்ல) குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூறினான். அவன் காலத்து அறிவு அவ்வளவு தான் என்பதால் டார்வினை மன்னித்து விடலாம்.
ஆனல் அறிவியல் பூர்வமாக இது பொய் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் அதே மூட நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்வது எந்த வகை பகுத்தறிவு?
போலி பகுத்தறிவுவாதிகளுக்கு நாம் அறைகூவல் விடுக்கிறோம். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதை அறிவியல் நிரூபணத்துடன் நிரூபித்துக் காட்ட நீங்கள் தயாராமனிதன் எந்த இனத்திலிருந்து வந்தவனோ அந்த இனமும் மனித இனமும் உடலின் உட்கூறு விஷயத்தில் நெருக்கமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அதிலிருந்து இது வந்தது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகும். மனிதனின் இரத்தம்குரங்கின் இரத்தம் இரண்டையும் சோதித்துப் பார்த்து குரங்கின் இரத்தம் மனிதனின் இரத்தத்திற்கு 90 சதவீதம் நெருக்கமாக உள்ளது என்று நிரூபித்தால் இதில் ஏதோ அறிவியல் இருக்கிறது என்று முடிவு செய்ய இயலும்.
ஆனால் இது பற்றியும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆபத்தான சமயங்களில் இரத்தம் கிடைக்காமல் மனிதர்கள் மரணித்து விடுகின்றனர். எனவே மிருகங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆய்வு செய்த போது குரங்கின் இரத்தம் மனித இரத்தத்துடன் எந்த வகையிலும் ஒத்துப் போகவில்லை. அடர்த்தி,வெள்ளைசிவப்பு அணுக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட எதுவுமே மனித இரத்தத்திற்கு நெருக்கமாக இல்லை என்று கண்டறிந்து விட்டனர்.
மிருகங்களில் பன்றியின் இரத்தம் மட்டுமே மனிதனின் இரத்தத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது என்பது தான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஓரளவாவது அறிவியல் பூர்வமாக நடக்க போலி பகுத்தறிவுவாதிகள் விரும்பினால் பன்றியிலிருந்து மனிதன் தோன்றியிருக்கலாம் என்று கூறினால் அது டார்வின் ஊகத்தை விடச் சிறந்ததாக இருக்கும்.
அது போல் மனிதனின் இதயம் செயல் இழந்து போவதால் பலரும் மரணிக்கிறார்கள். எனவே மிருகங்களின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்த முடியும் என்றால் பலரது உயிரைக் காப்பாற்றலாமே என்று விஞ்ஞானிகள் முயன்றனர்.
குரங்கின் அடுத்த மேல்நிலை தான் மனிதன் என்பது உண்மையாக இருந்தால் குரங்கின் இதயம் மனிதனின் இதயத்துக்குச் சமமானதாக அல்லது அதிக நெருக்கமானதாக இருக்க வேண்டுமல்லவா?
விஞ்ஞானிகளின் முடிவு டார்வினைப் பொய்ப்பிக்கும் வகையில் தான் அமைந்தது. இதயத்தின் அளவுஅதன் துடிப்பு,அது பம்ப்பண்ணும் வேகம் உள்ளிட்ட எதிலுமே மனிதன் இதயத்துடன் குரங்கின் இதயம் கொஞ்சமும் ஒத்துப் போகவில்லை என்று கண்டறிந்தனர். எந்த மிருகத்தின் இதயத்தை விடவும் பன்றியின் இதயமே மனிதனின் இதயத்துக்கு நெருக்கமானது என்று கண்டறிந்து விட்டனர்.
அறிவியல் பூர்வமாக மனிதனுக்கும்குரங்குக்கும் எந்த நெருக்கமும் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமான பின்பும் குரங்கின் புதல்வர்கள் இனி மேல் தம்மை பன்றியின் புதல்வர்கள் என்று அறிவிக்கத் தயாரா?
இதை விட முக்கியமானது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீனோம் இரகசியம்
மதுரையைச் சேர்ந்த பிறமலைக் கள்ளர் சமுதாயம் உள்ளிட்ட உலகின் பல மக்களின் ஜீன்களை சோதித்து விஞ்ஞானிகள் எடுத்த முடிவு என்ன?
மனித குலம் முழுவதும் ஒரே ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் என்பது தான் அந்த முடிவு. (இது போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் போலிப் பகுத்தறிவுவாதிகளுக்கு தெரியாவிட்டால் இந்தியா டுடேயில் மிகவும் தெளிவாகஆதாரப்பூர்வமாக இது பற்றி சிறப்பிதழ் போட்டார்கள். அதையாவது வாசிக்கட்டும்).
மனிதர்களில் திராவிடர்ஆரியர் என்பதெல்லாம் கிடையாது. அனைவருமே ஒரே தாய்தந்தையிலிருந்து பிறந்தவர்கள் என்று இஸ்லாம் கூறுவது போலவே அறிவியலும் கூறுகிறது என்பதை போலிப் பகுத்தறிவுவாதிகள் கவனிக்கட்டும்.
பிறந்த நாளும்நினைவு நாளும்
போலிப் பகுத்தறிவுவாதிகள் பெரியாரின் பிறந்த நாள்இறந்த நாள் என்று குறிப்பிட்ட நாளில் கொண்டாடுகின்றனர்.
பிறந்த நாளின் போது இவர்கள் செய்யும் மூடநம்பிக்கைகளைத் தனியாகப் பார்ப்போம். பிறந்த நாள்இறந்த நாள் என்று ஆண்டுதோறும் கொண்டாடுவது எந்த வகையில் அறிவியல் பூர்வமானது என்பதை போலி பகுத்தறிவுவாதிகள் நிரூபிக்கத் தயாரா?
01.01.1900த்தில் ஒருவர் பிறந்ததாக வைத்துக் கொள்வோம். அந்த நாள் தான் அவரது பிறந்த நாள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. 01.01.1901, 01.01.1902 என்று அடுத்தடுத்த வருடங்களில் வரும் நாளை பிறந்த நாள் என்று கூறுவது அறிவியலுக்கு எதிரானது இல்லையா?
01.01.1900 என்பது போய் விட்டது. அறிவியல் பூர்வமாக அந்த நாள் திரும்பி வரப் போவது இல்லை. 01.01.1901என்பது 01.01.1900த்தில் பிறந்தவரின் பிறந்த நாளாக எப்படி ஆகும்? 01.01.1901ல் பூமி ரிவர்சில் சுற்றி 01.01.1900த்தை அடைகிறதா?
பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று போலி பகுத்தறிவுவாதிகளால் எள்ளி நகையாடப்படுவோர் பிறந்த நாள்நினைவு நாள் என்று மூடத்தனமாக அறிவியலுக்கு எதிராக முடிவு செய்ததை கண் மூடி நம்பிக் கொண்டு இவர்களும் பின்பற்றுகின்றனர் என்பதைத் தவிரஇதில் எள்ளின் முனையளவும் அறிவியல் கிடையாது.
மற்றவர்கள் எப்படி உணர்வுப்பூர்வமாக எந்தக் காரியத்தையும் செய்து வருகிறார்களோ அது போல தான் பகுத்தறிவின் மொத்த குத்தகைதாரர்களும் நடக்கின்றனர். மற்றவர்களின் நம்பிக்கைக்கு அறிவியல் விளக்கம் கேட்பதற்கு முன்னால் தங்களின் இந்த நம்பிக்கையையும் அறிவியல் ஆதாரத்துடன் வீரமணி வகையறாக்கள் நிரூபிக்க தயாரா என்பதை அறைகூவலாக முன் வைக்கிறோம்.
சந்தி சிரிக்கும் உங்கள் சுயமரியாதையையும்போலி பகுத்தறிவையும் இன்னும் கிழித்து எறிய வேண்டியுள்ளது. அதை முடித்துவிட்டு மிஹ்ராஜ் பற்றி பதில் தருவோம்.
இன்ஷா அல்லாஹ்...
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 3
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண் வெளிப் பயணம் குறித்து தேவையில்லாமல் விமர்சித்து திராவிட கழகத்தின் உண்மை ஏடு முஸ்லிம்களை வம்புக்கிழுத்தது.
எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க இயலுமா என்று கேட்டு தங்களை மேதாவிகள் போல் காட்டிக் கொள்ளும் போலி பகுத்தறிவுவாதிகளின் மடமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட அவர்களே நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்து விட்டார்கள்.
எனவே மிஹ்ராஜ் பற்றி விளக்குவதற்கு முன்னால் பகுத்தறிவின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களின் மடமைகளையும் மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்தி வருகிறோம்.
நாம் எழுப்பும் கேள்விகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா என்று வீரமணி வகையறாக்களைக் கேட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறோம்.
பெரியாருக்குச் சிலை
ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் மரணித்து விட்டார். அவர் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாகி விட்டார் என்பது வரலாற்று உண்மை. அறிவியல்பூர்வமாக நிரூபிக்க அறைகூவல் விட்டால் அதை நிரூபிக்க முடியும்.
ஆனால் பகுத்தறிவின் மொத்த குத்தகைதாரர்கள் பெரியாருக்கு நாடெங்கும் சிலைகளை நிறுவியுள்ளனர். இரும்பு,செம்புபாறை போன்றவற்றை பெரியாரைப்போல் செதுக்கி வைத்துள்ளனர். அந்தச் சிலைகளின் பீடத்தில் பெரியார் என்று எழுதியும் வைத்துள்ளனர்.
எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிவரும் பகுத்தறிவு கொழுந்துகளிடம் இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்குமாறு அறைகூவல் விடுக்கிறோம்.
பெரியாரின் வெண்கலச் சிலையையும்பெரியார் எதிர்த்த இந்துக் கடவுள்களின் வெண்கலச் சிலையையும் உலகில் உள்ள எந்தச் சோதனைக் கூடத்திலாவது சோதித்துப் பார்த்து இது பெரியார் வெண்கலம்இது சாமி சிலையின் வெண்கலம் என்று வீரமணி வகையறாக்கள் நிரூபித்துக் காட்டுவார்களா?
பெரியாரின் கற்சிலையையும்அதே கல்லால் ஆன அம்மிக் குளவியையும் அறிவியல்பூர்வமாக சோதித்தால் இரண்டும் ஒன்று என்ற முடிவு தான் கிடைக்கும்.
இது பெரியார் எனக் கூறுவதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை என்று தெரிந்து கொண்டே பெரியார் சிலை நிறுவுவது எந்த வகையான பகுத்தறிவு?
பொது இடங்களில் இத்தகைய சிலைகளை நிறுவுவதால் மக்களுக்கு இடையூறு தவிர எந்தப் பயனும் இல்லை என்பதையும்பொருள் விரயம் என்பதையும் அறியாத இவர்கள் எப்படி தம்மை பகுத்தறிவுவாதிகள் எனக் கூறிக்கொள்கிறார்கள்?
சிலைக்கு மாலை அணிவித்தல்
சிலை வடிப்பது எந்த அளவுக்கு மடமையோ அது போன்ற - அதையும் மிஞ்சுகின்ற மடமை தான் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது. பெரியாரின் பெயரால் மூடத்தனமாக நிறுவப்பட்ட ஒரு சிலைக்கு இவர்கள் மாலை அணிவிக்கிறார்களே இந்த மாலை அணிவிப்பதை அந்தச் சிலை உணருமாஅல்லது அந்தச் சிலையின் மூலம் யாரை நினைக்கிறார்களோ அந்தப் பெரியார் தான் இதை உணருவாரா?
இதில் அடங்கியுள்ள அறிவியல் தத்துவம் என்ன? இதில் உள்ள பகுத்தறிவு என்ன என்பதை பகிரங்க மேடையில் பட்டியல் போட்டு எமது கேள்விகளை எதிர் கொள்ள போலி பகுத்தறிவுவாதிகள் தயாரா?
இது போன்ற சிலைகளை வடித்துக் கொண்டுஇந்து மத பக்தர்கள் பூவையும்தேங்காயையும்சூடத்தையும் காட்டுவது மட்டும் மூடநம்பிக்கை என்றால் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது மட்டும் பகுத்தறிவா?
குறிப்பிட்ட சிலைக்குள் அவர்கள் ஒருவரைப் பார்ப்பதற்கும் அது போன்ற சிலையில் பெரியாரைப் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
தெய்வங்களை நீங்கள் மாற்றிக் கொண்டீர்களே தவிர நம்பிக்கை ஒரே மாதிரியானது தானே!
அவர்கள் படையல் செய்யும் பொருட்கள் வேறு! நீங்கள் படையல் செய்யும் பொருட்கள் வேறு என்ற வித்தியாசத்தைத் தவிர இரண்டு நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?
கடவுள் சிலையைக் கடத்திச் சென்றால் அதிலிருந்து அந்தக் கடவுள் தன்னைத் தானே காத்துக் கொள்வாராபக்தர்கள் தானே காக்க வேண்டும்கடவுள் சிலை காணாமல் போய் விட்டால் அதைப் போலீஸ் தானே மீட்டுத் தர வேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு வாதம் பேசினீர்களே! இதே கேள்வியை உங்களிடம் கேட்டால் அதற்கு அறிவியல்பூர்வமாக உங்களால் மறுமொழி கூற முடியுமா?
பெரியார் சிலையை யாரேனும் கடத்திச் சென்றாலும் அவரது பக்தர்கள் தானே அதைத் தடுக்க வேண்டும். பெரியாரின் சிலையே தன்னைத் தானே காத்துக் கொள்ளுமாபெரியார் சிலை காணாமல் போனால் போலீஸ் தானே அதை மீட்க வேண்டும்?
காக்கைகள் எச்சம் போடுவதைக் கூட அந்தச் சிலையால் தடுக்க முடியாது எனும் போது அதைப் பெரியார் என்று உருவகப்படுத்துவது எந்த வகையில் பகுத்தறிவு என்பதை வீரமணி வகையறாக்கள் விளக்க வேண்டும்.
இந்தக் கேள்வியை திராவிடக் கொழுந்து ஒருவரிடம் நாம் நேரில் கேட்டபோதுஅவர் அளித்த பதிலைத் தான் இவர்களும் தர முடியும்.
கல்லைக் கடவுள் என்று எண்ணுவோர் அந்தக் கல்லிடம் வேண்டுதல் செய்கிறார்கள். பெரியாரின் சிலையிடம் நாங்கள் வேண்டுதல் எதுவும் செய்வதில்லையே என்பது தான் அந்த திராவிடக் கொழுந்து அளித்த பதில். இதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா?
யானைக்கு சிலை வடிப்பவர்கள் அதில் யானையைக் காண்பார்கள். பூனைக்கு சிலை வடிப்பவர்கள் அதில் பூனையைக் காண்பார்கள். மனிதனின் சிலை வடிப்பவர்கள் அதில் மனிதனைக் காண்பார்கள். கடவுளின் சிலை வடிப்பவர்கள் அதில் கடவுளைக் காண்பார்கள். எல்லாமே இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்வதன் வெளிப்பாடு தான். இந்த அடிப்படையை விளங்காமல் நாங்கள் பெரியாரிடம் வேண்டுதல் செய்தோமா என்று கேட்பது என்னே மதியீனம்!
யானை சிலையைக் காண்பவன் அதற்கு மாலை அணிவிக்க மாட்டான். ஆனால் பெரியார் சிலையைக் காண்பவன் அதற்கு மாலை அணிவிக்கிறான். இதனால் பெரியார் சிலை வடிப்பவர்களை விட யானை சிலை வடிப்பவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் வாதம் செய்தால் அதை வீரமணி வகையறாக்கள் ஒப்புக் கொள்வார்களா?
நினைவிடமும் அஞ்சலியும் !
பெரியார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் எழுப்புவதும்அதில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதும் போலி பகுத்தறிவுவாதிகளின் வணக்க வழிபாடாக அமைந்துள்ளது.
ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் அவரது நினைவிடம் என்று முடிவு செய்வதில் உள்ள பகுத்தறிவு என்னஎந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்திருக்கும். அந்த இடத்தில் நடந்த ஏராளமான காரியங்களில் இந்த மனிதர் அடக்கம் செய்யப்பட்டதும் ஒன்று.
அத்தனையையும் அலட்சியம் செய்துவிட்டு இன்னாரின் நினைவிடம் என்று அந்த இடத்தை முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு?
அந்த மனிதர் அடக்கம் செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டால் அவர் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் இருப்பார்.
காலாகாலத்துக்கும் அதை அவரது நினைவிடம் என்று கருதிக் கொண்டாடுவதற்கும்பகுத்தறிவுக்கும் என்ன சம்மந்தம்அதையாவது மன்னித்து விடலாம். அந்த இடத்தில் இலட்சக்கணக் கான ரூபாய்கள் செலவு செய்து அழகு படுத்துவது தான் பகுத்தறிவா?
இதையும் கூட மன்னித்து விடலாம். அந்த இடத்தில் மலர் வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்துகிறீர்களே! நீங்கள் மலர் வளையம் வைப்பதை பெரியார் அறிவாராஉணர்வாராஉணர மாட்டார் என்றால் அங்கே மலர் வளையம் வைப்பதில் உள்ள அறிவியல் தத்துவம் என்ன என்பதை முஸ்லிம்களை வம்புக் கிழுக்கும் வீரமணிகள் விளக்குவார்களாஇவர்களின் பகுத்தறிவும் சுயமரியாதையும் இன்னும் அம்பலமாகும்.
இன்ஷா அல்லாஹ்... 
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 4
பிறரை நோக்கி கேள்வி எழுப்புவோர் அது போன்ற கேள்விகள் தம்மை நோக்கி எழாதவாறு தமது கொள்கை கோட்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
எல்லா மதத்தினரையும் மூடர்களாகச் சித்தரித்து கேலி செய்யும் போலிப் பகுத்தறிவுவாதிகளான திராவிடர் கழகத்தினர்மதவாதிகளை மிஞ்சும் வகையில் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பதை நாம் அம்பலப்படுத்தி வருகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் குறித்து அவர்கள் உணர்வு ஏட்டை வம்புக்கு இழுத்ததன் காரணமாகவே அவர்களை அம்பலப்படுத்தும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். கடந்த மூன்று தொடர்களை வாசிக்கத் தவறியவர்களுக்காக இந்த விபரத்தைத் தெரிவிக்கிறோம்.
பகுத்தறிவையும்அறிவியலையும்சுயமரியாதையையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு உணர்வுகளின் அடிப்படையில் போலிப் பகுத்தறிவுவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என்பதற்கான மேலும் சில ஆதாரங்களைக் காண்போம்.
கருஞ்சட்டை
தம்மைப் பகுத்தறிவுவாதிகள் என்று அடையாளப்படுத்தி கருப்புச் சட்டை அணிவதை திராவிடர் கழகத்தினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதைச் செய்யலாம்இதைச் செய்யலாகாதுஇதை உண்ணலாம்இதை உண்ணக் கூடாது என்று மதங்களில் பல்வேறு கட்டளைகள் உள்ளன. அந்தந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.
போலிப் பகுத்தறிவுவாதிகள் இதைக் கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எல்லா உணவும் உண்பதற்கு உரியது தானேஇதை உண்ணக் கூடாதுஇதைத் தான் உண்ண வேண்டும் என்பது மூட நம்பிக்கையில்லையாவலது கையால் சாப்பிட வேண்டும்இடது கையால் சாப்பிடக் கூடாது என்று கூறி இடது கையை ஒதுக்குவது மூட நம்பிக்கையில்லையா என்றெல்லாம் பயங்கரமான கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.
ஒரு சமுதாயத்தினர் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக நெற்றியில் திருநீறு இடுவதையும்பூநூல் அணிவதையும் கேலி செய்வதுடன் சில நேரங்களில் பூநூல் அறுப்பிலும் இவர்கள் இறங்கியதை நாடு அறியும்.
இவர்களின் இந்த நிலைப்பாடு தான் அறிவுப்பூர்வமானது என்றால் இந்த நிலைப்பாட்டை மீறாமல் இவர்கள் நடக்க வேண்டுமன்றோ?
ஆனால் உலகில் எத்தனையோ வண்ண ஆடைகள் இருக்க கறுப்பு தான் பகுத்தறிவின் அடையாளம் என்று நடக்கின்றார்களே! இதில் ஏதாவது பகுத்தறிவு உள்ளதா?
இவர்கள் பேசும் போலிப் பகுத்தறிவை பச்சை சட்டை போட்டுக் கொண்டு பேசினால் நாக்கு எழாதா?
உலகில் உள்ள எல்லா நிறங்களையும் சோதனைக் கூடத்தில் சோதித்துப் பார்த்து கறுப்பு நிறத்துக்குள் மட்டும் தான் பகுத்தறிவு ஒளிந்து கிடக்கின்றதுமற்ற நிறங்களில் மூட நம்பிக்கை தான் ஒளிந்து கிடக்கின்றது என்று கண்டு பிடித்த பின் தான் கறுப்புச் சட்டைக்காரர்களாக அவதாரம் எடுத்தார்களா?
நாங்கள் இந்தக் கொள்கையுடையவர்கள் அல்லது இந்த இனத்தவர்கள் என்று மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பூநூல் அணிவது மூட நம்பிக்கை என்றால்நாங்கள்தான் பகுத்தறிவின் மொத்த வியாபாரிகள் என்பதன் அடையாளமாக கருப்புச் சட்டை அணிவதும் மூடநம்பிக்கை அல்லாமல் வேறு என்ன?
இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே எனக் கூறி எத்தனையோ இன்பங்களை மனித குலத்துக்குக் கிடைக்காமல் செய்து விட்டனர் என்று மதத்தவர்களை நோக்கி கேள்வி எழுப்பும் கருஞ்சட்டைக்காரர்களே! பல்வேறு வண்ணங்களில் ஆடைகளை அணிந்து அதனால் கிடைக்கும் இன்பங்களை இழந்து விட்டீர்களே!
மதங்களால் இன்பங்களை இழப்பது போல் உங்கள் போலிப் பகுத்தறிவின் காரணமாகவும் எவ்வளவு இன்பங்களை மனிதர்களுக்குக் கிடைக்காமல் செய்து விட்டீர்கள்.
என்ன தான் பகுத்தறிவுவாதம் பேசினாலும்அறிவியல் என்று கத்தினாலும் நீங்களும் அதைக் கடந்து வெளியே சென்று விடுகிறீர்களே. இதை எண்ணிப் பார்க்க மாட்டீர்களா?
பெரியார் சொன்னார் என்ற குருட்டு பக்தி தவிர இதில் பகுத்தறிவோ அறிவியலோ உள்ளதா?
அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது
கடவுள் இல்லை என்பது தான் போலிப் பகுத்தறிவுவாதிகளின் பிரதானக் கொள்கை. அதிலும் இந்துமத தெய்வங்கள் பற்றி புராணங்களில் எழுதப்பட்டிருப்பதைக் காரண காரியத்துடன் பொது மேடையில் இவர்கள் விமர்சனமும் செய்கிறார்கள். கடவுள்களின் கதைகளில் உள்ள ஆபாசத்தையும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
கடவுள் எனக் கூறி சிலைகளை வழிபடுவதும்அவற்றின் முன்னே உணவைப் படைப்பதும் மூட நம்பிக்கை எனவும் இவர்கள் கூறுகின்றனர்.
பொது இடங்களில் பிள்ளையார் போன்ற சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவித்தும் செருப்பால் அடித்தும் தமது வெறுப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
இந்து மதக் கடவுள்கள் தான் தீண்டாமையையும்சாதி வேறுபாட்டையும் உருவாக்கியவர்கள் எனவும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த வாதங்களில் அவர்கள் பகுத்தறிவுடன் நடக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.
இப்படி ஒரு பக்கம் கூறிக் கொண்டு அந்தக் கல்லுக்கு பூஜை செய்யும் உரிமை அனைவருக்கும் வேண்டும் என்று இவர்கள் கோருகின்றனர்.
ஒரு நம்பிக்கைஒரு செயல் தவறு என்றால் அதை ஒழிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது தான் பகுத்தறிவு.
பாண்டிச்சேரிக்காரன் மது அருந்துகிறான்அது தவறுஅதை ஒழிக்க வேண்டும்எனவே தமிழ்நாட்டு மக்களுக்கும் குடிப்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று ஒருவன் பேசுவதற்கும் உங்கள் பிரச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்?
எதைக் கல் என்று நம்புகிறீர்களோ அதைக் கடவுள் என்று சிலர் நம்புகிறார்கள் என்றால்நீங்கள் நம்புவது போல் அவனையும் நம்ப வைக்கத் தான் நீங்கள் பாடுபட வேண்டும்.
அது கல் தான்எல்லோரும் அதை பூஜை செய்ய வேண்டும் என்று கூறினால் ஒரு இனத்தின் மீதான வெறுப்புணர்வு தான் அதன் பின்னணியில் உள்ளதுபகுத்தறிவு ஏதும் இல்லை.
இந்துக் கடவுள்களின் ஆபாசக் கதைகளை அதை விட ஆபாசமாக மேடையில் முழங்கி விட்டு இவ்வளவு ஆபாசமான கடவுளை என் மக்களும் வழிபட்டு ஆபாசக் கடவுளுக்கு மரியாதை செய்யும் வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்பதில் பகுத்தறிவோஅறிவியலோ இருக்கிறதா?
சிலைகளுக்கு முன்னால் உணவுகளைப் படைத்து வீணாக்கலாமா என்று ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து கொண்டு இவ்வாறு வீணாக்கும் உரிமை என் மக்களுக்கும் வேண்டும் எனக் கேட்பதில் அறிவியல்பூர்வமான பார்வை ஏதும் இருக்கிறதா?
கடவுளின் பெயரால் அர்ச்சனை செய்தால் அதை ஐயர் தான் எடுத்துக் கொள்கிறார்கடவுள் எடுத்துக் கொள்வதில்லை என்று ஒரு புறம் கூறிக் கொண்டு என் மக்களுக்கும் இது போல் மக்களை ஏமாற்றும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்பதில் அடங்கியுள்ள பகுத்தறிவு சித்தாந்தம் என்ன?
இந்த முரண்பாட்டின் காரணமாகத் தானே உங்களால் மக்களை வென்றெடுக்க முடியவில்லை.
எது மிகப் பெரிய தவறு என்று சாதிக்கிறார்களோ அதில் மக்களைத் தள்ளும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச் சகராக வேண்டும் எனக் கூறி மக்கள் விழிப்புணர்வு அடைவதைத் தடுப்பதில் உள்ள பகுத்தறிவு தத்துவம் என்ன?போலிப் பகுத்தறிவுவாதிகள் விளக்கத் தயாரா?
உணர்ச்சிக்கு இடம் கொடுப்பவர்கள் தான் இது போன்ற முரண்பாடான முடிவை எடுக்க முடியுமே தவிர அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பவர்கள் இது போல் முடிவு எடுக்க மாட்டார்கள்.
மத நிகழ்ச்சிகள் மூலம் வருவாய் ஈட்டுதல்
பெரியாரின் பெயரால் திடலை அமைத்து அதில் மண்டபமும் அமைத்து அதை வாடகைக்கு விட்டு பொருளீட்டி வருகிறார்கள் வீரமணி வகையறாக்கள்.
இவர்கள் எதை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்கிறார்களோ அந்த மதங்களின் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டு மதக் கருத்தைப் பரப்ப துணை நிற்கிறார்களே! இதில் வியாபாரம் - அதுவும் நெறி தவறிய வியாபாரம் தான் உள்ளதே தவிர பகுத்தறிவு ஏதும் இல்லை.
நாம் கூட பெரியார் திடலில் நிகழ்ச்சிகள் நடத்தி இஸ்லாத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்திருக்கிறோம்.
எதைத் தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை ஒழிப்பதில் தான் பகுத்தறிவும் சுயமரியாதையும் உள்ளது.
காசு வருகிறது என்பதற்காக நாம் எதிர்க்கும் காரியத்தையே நமது இடத்தில் நடத்திக் கொள்ள அனுமதிப்பது மானம் கெட்ட செயலே தவிர சுயமரியாதைக்கு உகந்த செயல் அல்ல.
விபச்சாரம் செய்யக் கூடாது என்று பிரச்சாரம் செய்பவன் எனது வீட்டிலே வந்து அதைச் செய்து கொள் என்று கூறினால் அவன் சுயமரியாதை உள்ளவனா?
போலிப் பகுத்தறிவுவாதிகளை இன்னும் அம்பலப்படுத்திவிட்டு நபிகள் நாயகத்தின் விண்வெளிப் பயணம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் தருவோம்.
இன்ஷா அல்லாஹ்...
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 5
தமிழில் அர்ச்சனை
கடவுள் இல்லை என்று ஒரு புறம் கூறிக் கொள்ளும் போலிப் பகுத்தறிவுவாதிகள் இன்னொரு புறம் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமெனவும் கூறி வருகின்றனர்.
கடவுள் இல்லை என்றால் அதற்கு அர்ச்சனை செய்வதை - எந்த மொழியில் இருந்தாலும் - அதை எதிர்க்க வேண்டும். அர்ச்சனை செய்து மூடர்களாக ஆகாதீர்கள் என்று கூறி மக்களை விழிப்படையச் செய்திருக்க வேண்டும். நேர்மையான - சமரசம் செய்து கொள்ளாத - பகுத்தறிவு இப்படித் தான் தீர்ப்பளிக்கும்.
தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் எனக் கூறுவதும் அதை வரவேற்பதும் எந்த வகையில் பகுத்தறிவு சார்ந்ததாகும்?
இதற்கு போலிப் பகுத்தறிவுவாதிகள் கூறுகின்ற காரணங்கள் யாவும் பகுத்தறிவுக்கு வெளியே நின்று கொண்டு கூறுகின்ற காரணங்களாகவே உள்ளன.
பகுத்தறிவுக்கு இது ஒவ்வாத செயல் தான்! பார்ப்பனரைப் பழி தீர்க்க இது அவசியம் என்று கூறுவார்களானால் இந்த வகையில் இவர்களும் மதவாதிகளைப் போல் தானே நடக்கின்றனர்?
இன உணர்வுபழிவாங்கும் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில்இல்லாத கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வது அனைத்து மூட நம்பிக்கைகளையும் மிஞ்சிய மூட நம்பிக்கையல்லவா?
இல்லாத கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வது பகுத்தறிவுக்கு அல்லது அறிவியலுக்கு உட்பட்டது தான் என்பதை நிரூபிக்க போலிப் பகுத்தறிவுவாதிகள் தயாரா என்று அறைகூவல் விடுக்கி றோம்.
கடவுளின் பெயரால் பண விரயம்
இல்லாத கடவுளை உருவாக்கிக் கொள்வதுடன் கடவுளுக்காக அபிஷேகம் என்ற பெயரில் பொருட்களைப் பாழாக்கலாமா என்று மேடை போட்டு போலிப் பகுத்தறிவுவாதிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தப் பிரச்சாரத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதை முஸ்லிம்களாகிய நாமும் வரவேற்போம். ஆனால் எதைப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் என்று இவர்கள் சித்தரித்தார்களோ அது போன்ற காரியங்களை இவர்களே செய்தும் வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் நடத்தும் விடுதலை 05-08-2008 நாளேட்டில் படத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு 1001 லிட்டர் பாலை அபிஷேகம் செய்து பாலை வீணாக்கியுள்ளனர். எத்தனையோ குழந்தைகள் சத்துணவுக் குறைவாலும் பசியாலும் அவதியுறும் போது இப்படி பாலை வீணாக்கலாமா'என்றெல்லாம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். நல்ல கேள்விகள் தான். ஆனால் அதற்கு மறு நாள் வெளியான விடுதலை நாளேட்டில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.
சைதை பகுதியில் பெரியார் சிலை நிறுவ தி.க.வினர் முடிவு செய்துள்ளார்களாம். அதற்கு முதல் கட்டமாகஎம்.பி. பாலு என்பவர் பத்தாயிரம் ரூபாய் அவரது குடும்பத்தினர் பதினைந்தாயிரம் ரூபாய்மதியழகன் பத்தாயிரம்அவரது குடும் பத்தார் ஐயாயிரம்தென்றல் பத்தாயிரம்அவரது குடும்பத்தினர் ஐயாயிரம்பத்ம நாபன் ஐயாயிரம்இரவி ஆயிரம், பிரபாகரன் ஆயிரம் என நிதி வழங்கினார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதெல்லாம் ஆரம்ப கட்டமாகத் திரட்டப்பட்ட நிதியாம். புதுச்சேரியில் 1001 லிட்டர் பால் அபிஷேகம் செய்தார்கள் என்றால் 50 லிட்டர் பாலுடன் 500 லிட்டர் தண்ணீர் கலந்து தான் அபிஷேகம் செய்திருப்பார் ள். கறந்த பாலை அப்படியே அபிஷேகம் செய்திருக்க மாட்டார்கள்.
ஒரு லிட்டர் பால் பதினெட்டு ரூபாய் என்ற கணக்கின்படி 500 லிட்டர் பால் ஒன்பதாயிரம் ரூபாய் ஆகும். தண்ணீர் இல்லாத பால் என்றால் கூட 1000 லிட்டருக்கு பதினெட்டாயிரம் ரூபாய் தான் ஆகும்.
இந்த பதினெட்டாயிரம் ரூபாயை நூற்றுக்கணக்கான பக்தர்களிடம் ஐந்தும் பத்துமாகத் திரட்டியிருப்பார்கள். ஒவ்வொரு பக்தனும் நூறு இருநூறு ரூபாய் பணத்தை வீணாக்கியிருப்பான்.
ஆனால் மூட நம்பிக்கையின் முதல் அடையாளமான ஒரு கற்சிலையை நிறுவ ஒரு குடும்பமே 25 ஆயிரம் (பதினைந் தாயிரம்பத்தாயிரம்) என்று கொடுக்கும் அளவுக்கு பயங்கர சிந்தனையாளர்களாக இருக்கிறார்களேஇந்தப் பகுத்தறிவைக் கண்டு புல்லரிக்கிறது போங்கள்!
பாலுக்காக செலவிட்ட பணத்தை மட்டும் தான் ஏழைக் குழந்தைகளின் உணவுக்கு செலவிட முடியுமாகல்லுக்காக செலவிட்ட பல்லாயிரம் ரூபாய்களைக் கொண்டு வறுமையை விரட்டியிருக்கலாமே! ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்கியிருக்கலாமே!
அது கூட மதவாதிகளுக்குத் தான் சாத்தியமாகும். அக்மார்க் பகுத்தறிவுவாதிகள் ஏழைக் குழந்தைகளுக்கு தான தர்மம் செய்யக் கூடாது என்று தான் இவர்களின் ஆசான் பெரியார் இவர்களுக்குப் போதித்துள்ளார்.
ஆகவே தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும் பணக்காரர்களின் அயோக்கியத்த னங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்
குடியரசு 21-04-1945 இத ழில் பெரியார்.
கல்லுக்கு அபிஷேகம் செய்தால் அதுவும் மூட நம்பிக்கையாகி விடுகிறது. அந்தப் பாலை ஏழைகளுக்குத் தர்மம் செய்தால் அதுவும் உங்கள் தந்தையின் பார்வையில் அயோக்கியத்தனமாக ஆகி விடுகின்றது. இந்த இரண்டில் எது பகுத்தறிவுப்பூர்வமானது?
இவர்களால் விமர்சிக்கப்படும் மதவாதிகளாவது கற்சிலைகளுக்கு பாலை அபிஷேகம் செய்வதற்கு ஒரு புறம் பணத்தை வீணாக்கினாலும் ஏழைக் குழந்தைகளுக்காகவும் தங்கள் நிதியாதாரத்தை செலவிட்டு வருகின்றனர்.
ஆனால் அக்மார்க் பகுத்தறிவாளர்கள் சிலைக்கு மட்டும் தான் செலவு செய்வார்கள். ஏழை எளிய மக்களுக்கு தர்மம் செய்து அயோக்கியர்களாக மாட்டார்கள்.
மக்களுக்கு உதவாத இந்தப் பகுத்தறிவை விட மக்களுக்கு கருணை காட்டும் அந்த மதவாதிகள் ஆயிரம் மடங்கு சிறந்து விளங்குகிறார்கள்.
பெரியார் பிறந்த (நாளாக இவர்கள் கூறும்) நாட்களின் போதும் இறந்த நாளின் போதும் அவரது சிலைக்காக ராட்சத மலர் மாலைகள் நூற்றுக்கணக்கில் போடப்படுகிறதே! இதற்கு ஆகும் செலவு பாலாபிஷேகத்திற்கு ஆகும் செலவை விட பல மடங்கு அதிகமாக உள்ளதே!
பொருளாதாரத்தை நாசமாக்கலாமா என்று நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளையும் அதை விட வலிமையாக இந்து மதவாதிகள் உங்களை நோக்கி கேட்க முடியுமே?
மற்றவர்களை நோக்கி நீங்கள் எழுப்பும் கேள்விகள் மட்டும் அறிவுப்பூர்வமாக இருந்தால் போதுமாஅவர்கள் உங்களை நோக்கி அதே கேள்விகளைக் கேட்கும் நிலைமையில் நீங்கள் இருக்கக் கூடாது என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை?
போலிப் பகுத்தறிவுவாதிகளான உங்களைப் பொருத்தவரை மற்ற எவரையும் விமர்சனம் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்துமுதலில் உங்கள் நடவடிக்கைகளைச் சரி செய்யும் வழியைப் பாருங்கள்!
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 6
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம் குறித்து கிண்டலடித்து முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்து திராவிடக் கழகத்தின் உண்மை எனும் பொய் ஏடு முஸ்லிம்களையும் உணர்வு இதழையும் வம்புக்கு இழுத்திருந்தது.
எனவே பகுத்தறிவு வேடம் போட்டுத் திரியும் இவர்கள் தான் உண்மையில் மூட நம்பிக்கையாளர்கள் என்பதைத் தக்க காரணங்களுடன் கடந்த ஐந்து வாரங்களாக நாம் அம்பலப்படுத்தி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறோம்.
ஒரு மனிதன் பகுத்தறிவாளன் என முடிவு செய்வதாக இருந்தால் அல்லது ஒரு இயக்கம் பகுத்தறிவுடன் இயங்குகிறது என முடிவு செய்வதாக இருந்தால் அதற்குச் சில அடிப்படைத் தகுதிகள் இருந்தாக வேண்டும்.
அதில் மிக முக்கியமான தகுதிதனக்குத் தானே முரண்படாமல் இருப்பதாகும். தான் பிரச்சாரம் செய்து வரும் கருத்தை நேரடியாகவோமறைமுகமாகவோ ஒருவன் தானே மறுத்தால் அவனிடம் பகுத்தறிவும்தெளிவான சிந்தனையும் இல்லை என்று எளிதாக முடிவு செய்துவிடலாம்.
போலி பகுத்தறிவுவாதிகளின் பிரச்சாரத்தையும்அவர்களின் நடவடிக்கைகளையும் நாம் கவனித்தால் மத நம்பிக்கையுடைவர்களை விட அதிக முரண்பாடு உடையவர்களாக அவர்கள் இருப்பதைக் காணலாம்.
திருமணமும் பகுத்தறிவும்
திருமணம் என்ற பந்தத்தின் மூலம் ஆணும் - பெண்ணும் இணைந்து ஒரு குடும்பமாக உருவாகிறார்கள். திருமணம் செய்வது பகுத்தறிவுக்கு ஏற்றதா இல்லையா என்று பகுத்தறிவுவாதிகள் பயங்கர ஆராய்ச்சியில் இறங்கி திருமணம் என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
இது பற்றி பகுத்தறிவாளர்களின் தலைவர் பெரியார் அவர்கள் ஆணித்தரமாகக் கூறுவதைக் கேளுங்கள்!
மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாகபெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோஅதைப் போலத் தான் மக்களின் சரி பகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்று தான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகைநட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.
பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும்புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்திற்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்கு பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியைபெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் கலியாணம்என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால் தான்கணவன் - மனைவி என்ற உறவும்பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால் தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பனர் தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!
- (விடுதலை 28-06-1973)
இந்த மாதிரி வாழ்க்கைத் துணை ஒப்பந்த முறையைக் கூடக் கிரிமினல் ஆக்க வேண்டுமென்று இப்போது (89ஆம் வயதில்) நான் எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகிறேன். கலியாணமென்று சொன்னாலே அது கிரிமினல் சட்டப்படித் தவறாக வேண்டும். அந்தக் கொடுமையினாலே மனித வளர்ச்சி தடைபட்டுக் கிடக்கிறது.
- (விடுதலை 16-11-1967)
எப்படி மனிதன் மனிதனை அடிமை கொள்ளுவதைத் தவறுசட்டப்படிக் குற்றமான காரியம் என்று ஆக்கி இருக்கின்றோமோ அதே போல மனிதன் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கிக் கொள்வதைச் சட்டப்படியான குற்றம் என்று செய்ய வேண்டும்
- (விடுதலை 02-05-1973)
இந்தக் கலியாண முறைகள் இருப்பதால் தானே குழந்தை குட்டிகள்அவற்றுக்குச் சொத்துக்கள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக்கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. மந்திரி ஆகிறவன் கூட கலெக்டர் ஆகிறவன் கூடப் பெண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்றத் தானே இருக்கிறான். இந்த வகையில் அமைப்பு முறை என்றால் உலகத்தைப் பற்றியோசமுதாயத்தைப் பற்றியோ எவன் கவலைப்படுகிறான்பொது உணர்ச்சி எப்படி ஏற்படும்அவனவன் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைக்கே ஈடு கொடுத்துக் கொண்டு இருப்பதென்றால் சமுதாய உணர்ச்சி எப்படி ஏற்பட முடியும்
(விடுதலை 27-06-1973)
பெரியார் கூறும் கருத்துக்களின் தொகுப்புகளில் மேலும் சிலவற்றை வரும் வாரங்களில் பார்க்கலாம். பின்னர் இக்கருத்துக்களில் அவர் எப்படியெல்லாம் முரண்படுகிறார் என்பதையும் விரிவாக அலசலாம்.
இன்ஷா அல்லாஹ்...
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 7
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு ஒன்றில் திருமணம் பற்றிக் கூறப்படும் மேலும் சில செய்திகளைப் பார்ப்போம்
திருமண முறையானது காட்டுமிராண்டிக் காலத்தில் அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காக கடைப்பிடிக்க வேண்டும்ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களைப் பலி கொடுக்கிறார்களோ அது போலவே பெண்ணைப் பலி கொடுக்கிற விழா தானே திருமணம்!
இந்த நாட்டின் மக்கள் தொகையில் சரி பாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்?இந்தத் திருமண முறை பெரிதும் சுயநலத்துக்காகவே ஒழியபொது நலத்துக்கு அல்லவே புருஷனுடைய வேலை பெண்டாட்டியைப் பாதுகாப்பதும்பெண்டாட்டி புருஷனைப் பாதுகாப்பதும்இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால்,அவற்றை இரண்டு பேருமே
சேர்ந்து காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே ஒழிய சமுதாயத்துக்குப் பயன்படுவதே இல்லை.
அடுத்த வீடு நெருப்புப் பிடித்தாலும் அது பற்றிக் கவலைப்பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அது அவன் வீட்டுக்குத் தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவேயாகும். ஆண்களும்பெண்களும் இத்தகைய தொல்லையில் மாட்டிக் கொள்ளாமல்படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமாஅதனை அடுத்துபுருஷன் பெண்டாட்டியாகி தனிக்குடித்தனம்தனிச் சமையல் என்று ஆக்கிக் கொண்டுபொதுநல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகின்றார்கள்.
உலகம் வளர்ச்சி அடைய வேண்டுமானால்உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால் திருமணம் என்பதைக் கிரிமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் பிறகு வந்தே தீரும். நான் சொன்னது நடக்காமல் இருக்கவில்லையே! எனவே திருமணத்துறையில் மாற்றம் ஏற்பட்டாக வேண்டும். சம எண்ணிக்கையுடையதும் சம உரிமைகளைப் பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படிக் கொடுமைப்படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.
பெற்றோர்கள் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். பிறகு ஒரு தொழிலும் கிடைக்கச் செய்த பிறகே வாழ்க்கைத் துணையைப் பற்றி நினைக்க வேண்டும். அதுவும் அந்தப் பெண்ணாகப் பார்த்து ஒரு ஆணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கிடக் கூடாது!
திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது. உலகில் கற்புகாதல் என்பன போன்ற வார்த்தைகள்எப்படிப் பெண் ஆள வேண்டும் என்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ அது போலவே தான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றிமற்றவர்கள் வாழப் பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமே அல்லாமல் அதில் உண்மையோ,சத்தோ ஒன்றுமே கிடையாது... எனவே பெண்ணடிமை ஒழியதிருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டும் என்றாலும்இந்தத் திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்
(- தந்தை பெரியார்உயர் எண்ணங்கள்பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு)
திருமணங்களில் சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளன என்பதற்காக பெரியார் திருமணத்தை எதிர்க்கவில்லை. திருமணத்தினால் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதால் தான் திருமணமே கூடாது என்றார். சடங்குகள் இல்லாமல் நடத்தப்படும் சுயமரியாதை (?) திருமணங்களையும் கூட பெரியார் கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்று கூறியுள்ளதையும் மேலே காணலாம்.
பகுத்தறிவு ஆராய்ச்சிப்படி திருமணம் என்ற முறையே தவறு என்றால் ஆடு மாடுகளைப் போல தேவைக்கேற்ப சுகம் அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்பது பகுத்தறிவுத் தந்தையின் கண்டு பிடிப்பு.
பெரியாரும் நாகம்மை என்ற பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணம் பற்றி கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் இந்தத் திருமணம் இது போன்ற பிரச்சாரத்தை பெரியார் செய்வதற்கு முன்னர் நடந்த திருமணமாகும்.
ஆனால் நாகம்மையார் மரணித்த பிறகு பெரியார் மணியம்மை என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தாரே! அந்தத் திருமணம் செய்த போது திருமணமே கூடாது என்ற பிரச்சாரத்தை செய்து வந்தார்.
பெரியார் திருமணம் செய்து கொண்டதன் மூலம் தனக்குத் தானே முரண்பட்டார். அது மட்டுமின்றி பெரியார் இவ்வாறு கூறியது மடத்தனமானது. அறவே சிந்தனையற்றவனின் கூற்று எனச் சொல்லாமல் பெண்ணுரிமைக்காக பெரியார் பாடு பட்டதாகக் கூறும் போதெல்லாம் மேற்கண்ட பெரியாரின் தத்துவங்களை போலி பகுத்தறிவுவாதிகள் மேற்கோளாக எடுத்துக் காட்டுகின்றனர்.
பெரியாரின் இந்தக் கருத்துக்களில் தான் பெண்ணுரிமை அடங்கியுள்ளது என்று கருதக் கூடிய போலி பகுத்தறிவுவாதிகள்தாங்கள் திருமணம் செய்து கொண்டது ஏன்வீரமணியிலிருந்து கலைஞர் வரை அனைத்து பெரியாரின் சீடர்களும் திருமணம் செய்து கொண்டது ஏன்?
திருமணமே கூடாது என்று பிரச்சாரம் செய்த கால கட்டத்தில் பலருக்கு பெரியார் திருமணமும் நடத்தி வைத்திருக்கிறார் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.
தனக்குத் தானே முரண்படுபவர் யாராக இருந்தாலும் அவர் ஒருக்காலும் பகுத்தறிவாளராக இருக்க முடியாது. ஒருவர் தனக்குத் தானே முரண்பட்டதை வைத்து ஒருவரது பகுத்தறிவை எடை போடாமல் அந்த முரண்பாட்டைத் தூக்கிப் பிடிப்பதும் பகுத்தறிவாளர்களின் செயலாக இருக்க முடியாது.
போலி பகுத்தறிவுவாதிகள் இதற்குச் சொல்லக் கூடிய எந்த விளக்கமும் எந்த வாதமும் பகுத்தறிவுக்கு வெளியே நின்று செய்யும் வாதமாகவே இருக்கிறது.
எந்த ஒரு சித்தாந்தமாக இருந்தாலும் அது அறிவுப்பூர்வமானதாகவும் பகுத்தறிவுக்கு ஏற்றதாகவும் இருந்தால் அதை மிகச் சிலராவது கடைப்பிடிப்பார்கள். குறைந்தபட்சம் அக்கொள்கையை முன்னெடுத்துச் செல்பவர்களாவது அதைக் கடைப்பிடித்துக் காட்டுவார்கள்.
ஆனால் திருமணமே செய்யக் கூடாது என்ற பெரியாரின் கருத்தை ஒரே ஒருவர் கூட பெரியார் சொன்ன தத்துவத்துக்காக கடைப்பிடிக்கவில்லை. ஆண்மை இல்லை என்பதற்காக சிலர் திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம். இது பெரியாருக்கு முன்பே இருந்த நிலை தான்.
வேசித் தொழில் செய்பவர்கள் திருமணம் செய்யாமல் இருந்திருக்கிறார்கள். இதுவும் பெரியாரின் தத்துவத்தின் காரணமாக அல்ல. பெரியாருக்கு முன்பே அத்தகையோர் இப்படித் தான் இருந்தனர்.
வேறு பல பொறுப்புகளைச் சுமப்பதற்கு முதலிடம் கொடுத்த பலரும் திருமணம் செய்யாமல் உள்ளனர். இதுவும் ஆரம்ப காலம் முதல் உள்ள நிலைமை தான்.
ஒரு மனிதன் கூறும் தத்துவம்அதுவும் தீவிரமாக தொடர்ந்து வலியுறுத்திப் பேசும் தத்துவம் அவராலும் கடைப்பிடிக்கப்படவில்லை. அவரது வலது இடது கரங்களாக உள்ளவர்களாலும் கடைப் பிடிக்கப்படவில்லை. அவரை மதிக்கும் ஒரே ஒருவராலும் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் இது வடிகட்டிய மடமை என்று தானே கூற வேண்டும்?
தவறான அறிவுக்குப் பொருந்தாத கருத்தை பார்ப்பனர்கள் சொன்னார்கள் என்பதற்காக அவர்கள் மீது பாய்ந்து பிராண்டும் போலி பகுத்தறிவுவாதிகள் அதே வேகத்துடன் இந்தக் கருத்துக்கு எதிராகப் பாய்ந்ததுண்டாஇந்தக் கருத் தைச் சொன்னவர் மீது பாய்ந்ததுண்டா?
இந்தப் போக்கில் சிந்தனைத் தெளிவோ நடுநிலை நோக்கோ உள்ளதா என்று போலி பகுத்தறிவுவாதிகளை நாம் கேட்கிறோம்.
மிகச் சில பேர் இதுபற்றி விமர்சித்துள்ளனர். சொல்லுக்கும் செயலுக்குமிடையே இடைவெளி இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று மென்மையான முறையில் தடவிக் கொடுத்து விமர்சித்துள்ளனர்.
சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு என்பது சில விஷயங்களில் அனைவரிடமும் இருக்கும். ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் உயிர்நாடியாகக் கருதும் கொள்கைகளில் இருக்கக் கூடாது. இது மோசடிபித்தலாட்டம்மடமை போன்ற சொற்களால் விமர்சிக்கப்பட வேண்டுமே தவிர ஒருவர் மீது ஏற்பட்டுவிட்ட அன் பின் காரணமாக மயிலிறகால் வருடுவது நாணயமான விமர்சனம் ஆகாது.
பெரியாரின் கருத்துக்காக எங்களை எப்படி விமர்சிக்கலாம் என்று நழுவுவதும் நாணயமான நடவடிக்கையாக இருக்க முடியாது.
பெரியாரை போலி பகுத்தறிவுவாதிகள் நேசிப்பதை விட கோடி மடங்கு நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் போது உணர்வில் எழுதிய ஒரு தகவலை மறுக்கிறேன் என்ற பெயரில் நபிகள் நாயகத்தையும் நபிகள் நாயகம் தொடர்புடைய மிஹ்ராஜ் பயணத்தையும் கேலி செய்வதில் உள்ள நியாயத்தை விட பெரியாரின் தவறான கருத்துக்களை விமர்சனம் செய்வது எந்த வகையிலும் குறைந்ததல்ல.
கிருஷ்ணரோஇராமரோ செய்ததாகச் சொல்லப்பட்டவைகளுக்காக இன்றைய இந்துக்களை இவர்கள் விமர்சிப்பதில் உள்ளதை விட பெரியார் சொன்னதற்காக அவரது பிள்ளைகளை விமர்சிப்பதில் அதிக நியாயம் உள்ளது. ஏனெனில் இவர்கள் தான் தங்களைப் பகுத்தறிவின் ஏஜெண்டுகளாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.
பெரியாரின் இந்தக் கருத்தை இவர்களில் சிலர் வருடிக் கொடுத்து விமர்சிப்பது போல்நாடகமாடுவது போல் இந்து மதத்திலும் இராமர்கிருஷ்ணரை வருடிக் கொடுத்து விமர்சிப்பவர்கள் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர்.
எனவே தனக்குத் தானே முரண்பட்டு பெரியார் கூறியது சரி என்றால் அது பற்றி பகிரங்க விவாதத்துக்கு முன் வர வேண்டும்.
இல்லாவிட்டால் இந்த மடமையை அதற்குரிய கடுமையான சொற்களால் விமர்சித்து பெரியாரின் இந்த மூடக் கருத்தை நிராகரிக்கிறோம் என்று அறிவிக்க வேண்டும்.
தனக்குத் தானே முரண்படும் இவர்களின் மடமையை இன்ஷா அல்லாஹ் இன்னும் வெளிப்படுத்துவோம்.
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 8
திராவிடர் கழகத்தினரால் நடத்தப்படும் உண்மை எனும் ஏடு இஸ்லாத்தையும்உணர்வு இதழையும் வம்புக்கு இழுத்ததாலும்முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாலும் போலி பகுத்தறிவாளர்களின் மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் அவசியத்தை ஏற்படுத்தித் தந்தனர்.
மூடநம்பிக்கையின் மொத்த வடிவமாக போலி பகுத்தறிவுவாதிகள் திகழ்கிறார்கள் என்பதைக் கடந்த ஏழு வாரங்களாக நாம் விளக்கி வருகிறோம்.
அந்த வகையில் திருமணம் என்பதே ஒழிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே பெரியார் தானே திருமணம் செய்து தனது கொள்கையை மீறினார் என்ற முரண்பாட்டை சென்ற இதழில் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.
அவர் மணியம்மையைத் திருமணம் செய்ததன் மூலம் தனது மற்றொரு உயிர் மூச்சான கொள்கையையும் தானே குழி தோண்டிப் புதைத்தார். மணியம்மையைத் திருமணம் செய்த போது பெரியாரின் வயது 72. மணியம்மையின் வயது 26. அவ்விருவருக்கும் 46 வயது இடைவெளி இருந்த நிலையில் தான் அவர் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்.
தக்க வயதை அடைந்தவர்கள் மனமொப்பிவயதில் மூத்தவரைத் திருமணம் செய்வதை நாம் விமர்சிக்கவில்லை. இளம் பெண்ணை வயதானவர் திருமணம் செய்வது பற்றி பெரியார் என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்ற அடிப்படையிலேயே விமர்சிக்கிறோம்.
மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும்பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்து விட்டார்களாதலால் கட்டுப்பட்டுத் தான் தீர வேண்டும் என்ற நிர்பந்த முறையில் நடப்பதும் சுய மரியாதை அற்ற திருமணம் என்றே சொல்லலாம்.
(குடியரசு 3-6-1928 இதழில் பெரியார்)
வயது பொருத்தம் இல்லாத திருமணமும்கட்டாயத் திருமணமும் சுயமரியாதை அற்ற திருமணங்கள் என்பது பெரியாரின் பிரச்சாரமாக இருந்தது.
வயதான சாமியார்கள் இளம் பெண்களை மயக்கி திருமணம் செய்வதைக் கேலி செய்தும்கண்டித்தும் தனது விடுதலை ஏட்டில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரையை வெளியிட்டு மகிழ்ந்தவர் பெரியார்.
தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்த மனைய உடலே படைத்த வயதான ஒரு பார்ப்பனக் கிழவர் துள்ளு மத வேட்கைக் கனையாலே தாக்கப்பட்டு கல்யா ம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். அவரின் வயது 72.
ஏற்கனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளை குட்டி பேரன் பேத்தியும் பெற்றவர் இந்தப் பார்ப் னக் கிழவர். ஆயினுமென்னஇருண்ட இந்தியாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆண்மகன் திருமணம் செய்து கொள்ளலாமே
(1940ல் விடுதலை நாளேட்டில் அண்ணா எழுதி பெரியார் வெளியிட்டது.)
1940ல் இப்படி எழுதிய பெரியார் ஆறு ஆண்டுகளில் அந்தப் பார்ப்பனக் கிழ ருக்கு போட்டியாக பேத்தி வயதுடைய மணியம்மையை மணந்து கொண்டாரே! இப்படி நடப்பது தான் பகுத்தறிவா?
குடியரசு இதழில் வெளியான கட்டு களைத் தேடிப் பிடித்து விடுதலையில் வெளியிடும் பொறுப்பில் இருந்தவர் இராம அரங்கண்ணல்.
தான் பெரிதாக மதிக்கும் பெரியார் பொருந்தாத் திருமணம் செய்ததால் மனம் வெறுத்த அரங்கண்ணல் தக்க வயதுப் பொருத்தமே திருமணத்தின் லட்சியம் என்று குடியரசு ஏட்டில் பெரியார் எழுதி தை எடுத்து விடுதலையில் அச்சிட்டு வெளியாக்கி விட்டு பணியிலிருந்து வில னாரே அவர் தான் பகுத்தறிவாளராகவும்சுயமரியாதைக்காரராகவும் காட்சியளிக்கி றார்.
பெரியாரின் பொருந்தாத் திருமணம் அன்றைக்கு ஏற்படுத்திய கொந்தளிப்பை அண்ணா அவர்கள் அன்று எழுதியதில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
அப்பாஅப்பா என்று அந்த அம்மையார் மனம் குளிர வாய் குளிரகேட்போர் காது குளிர அழைப்பதும் - அம்மா,அம்மா என்று கேட்போர் பூரிப்பும்பெருமையும் அடையும் விதமாக பெரியார் அந்த அம்மையாரை அழைப்பதும் - இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்பு மகள் இந்த மணியம்மைஎனப் பல்லாயிரவர் எண்ணி மகிழ்வதான நிலை இருந்தது.
அந்த வளர்ப்புப் பெண்தான் இன்று பெரியாரின் மனைவியாகி இருக்கிறார். பதிவுத் திருமணமாம்! கையிலே தடி மண மகனுக்கு. கருப்பு உடை மணமகளுக்கு என்று ஊரார் பரிகாசம் செய்கிறார்களே! ஊருக்குத் தானய்யா உபதேசம்என்று இடித்துரைக்கிறார்களே! எனக்கென்ன வயதோ 70க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் ஒரு காலை சுடு காட்டிலும் வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை’ என்றெல்லாம் பேசிய பெரியார், ‘கல்யாணம் செய்து கொள்கிறாரய்யா’ என்று கடைவீதி தோறும் பேசிக் கை கொட்டிச் சிரிக்கிறார்களே! வெட்கப்படுகிறோம்.
அயலாரைக் காண வேதனைப்படுகிறோம். தனிமையிலே. பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை எவ்வளவு காரசாரமாக எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்திருக்கிறோம். இப்போது எவ்வளவு சாதாரணமாக நம்மையும்,நமது உணர்ச்சிகளையும்கொள்கையையும்இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி நமது தலை வர் 72ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப் பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார். நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்து விட்டார். இதைச் சீர்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்திருப்பது காலத்தால் துடைக்க முடியாத கறை என்பது மறுக்க முடியாதே!
இந்த நிலையை யார்தான் எந்தக் காரணம் கொண்டு தான் சாதாரணமானதென்று சொல்ல முடியும்நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைக் காட்டிப் பெருமையாக இதோ தாத்தாவைப் பார்! வணக்கம் சொல்லு!’ என்று கூறுவர். கேட்டோம். களித்தோம். பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி தாத்தா பொண்ணு என்று கூறுவர். இன்று அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் - பணிவிடை செய்து வந்த பாவையுடன். சரியாமுறையாஎன்று உலகம் கேட்கிறது. அன்புள்ள சி.என். அண்ணாதுரை
(திராவிட நாடு 3-7-49)
அதிக வயது வித்தியாசம் கொண்ட திருமணத்தைப் பெரியார் எந்த அளவு கண்டித்திருந்தால் அண்ணா இவ்வளவு கடும் எதிர்ப்பைக் காட்டியிருப்பார்.
உரத்த குரலில் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும் இனி தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவைக் காப்பாற்றிட முடியாது. போற்றிப் பரப்பி வந்த லட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டு போய்விட்டு விட்டது.
(அண்ணா - திராவிட நாடு 21-8-49)
ஒரு கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஒரு தலைவரின் பின்னே செல்வதை ஏற்றுக் கொள்ளலாம். கொள்கைக்காக தலைவன் மீது கொண்ட பக்தி முற்றிப் போய் கொள்கையை விட தலைவனே பெரிது என்று எண்ணினால் அவர்கள் மூட நம்பிக்கையாளர்களே தவிர பகுத்தறிவாளர்கள் அல்லர்.
பெண்ணினத்துக்காக குரல் கொடுக்கிறார். வயதுப் பெண்களை சாமியார்கள் மயக்குவதைக் கடுமையாகச் சாடுகிறார் என்பன போன்ற காரணங்களுக்காக பெரியாரைத் தலைவராக ஏற்றவர்கள்பெரியாரே அக்கொள்கைக்கு சாவு மணி அடித்து சமாதி கட்டிய பிறகு அவர் பின்னே சென்றதும்சென்று கொண்டிருப்பதும் மூடப் பக்தியாசிந்தனைத் தெளிவா?
அண்ணாவையும் அவருடன் வெளியேறியவர்களையும் தான் இந்த வகையில் பகுத்தறிவாளர்கள் என்று கூறலாமே தவிர இதன் பின்னரும் பகுத்தறிவுத் தந்தைஎன்று பட்டம் சூட்டித் திரிபவர்களை பெரியாருக்கு கடவுள் அந்தஸ்து கொடுக்கும் பக்தர்களாகத் தான் கருத முடியும்.
ஒருவர் மீது குருட்டுத் தனமாக ஒருவன் அன்பு வைத்து அவர் செய்த எந்தச் செயலும் அவனைப் பாதிக்கவில்லை என்றால் அவன் ஒருக்காலும் பகுத்தறிவைப் பயன்படுத்தியவனாக ஆக முடியாது.
போலி பகுத்தறிவாளர்களிடம் நாம் கேட்கிறோம்.. பெரியார் செய்தது போல் இன்று ஒரு 75 வயதுக் கிழவன் 20வயதுக் குமரியை மணப்பது குறித்து உங்கள் பகுத்தறிவின் தீர்ப்பு என்ன?
இது போல் நடக்கும் திருமணங்களை இன்றும் கூட கேலி செய்து உங்கள் பத்திரிகைகளில் எழுதுகிறீர்களே! இதில் உள்ள பகுத்தறிவு தத்துவம் தான் என்ன?
பெரியாரைத் தவிர வேறு யாரும் இதைச் செய்தால் நாங்கள் எதிர்ப்போம்! கிண்டல் பண்ணுவோம்! என்று நடப்பது தான் பகுத்தறிவா?
இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்...
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 9
எந்த ஒரு கொள்கையைப் பிரதானமாக ஒருவர் பிரச்சாரம் செய்கிறாரோ அந்தக் கொள்கையை அவர் உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும். அக்கொள்கை அனைவராலும் கடைப்பிடிக்க முடியாததாக இருந்தாலும் அக்கொள்கையை ஆதரிப்பவர்களால் மட்டுமாவது அது பின்பற்றப்பட வேண்டும். உலகில் எவராலும் கடைப்பிடிக்கப் பட முடியாத எந்தக் கொள்கையும் பகுத்தறிவு சார்ந்ததாக இருக்க முடியாது.
பகுத்தறிவுத் தந்தை என்று போலி பகுத்தறிவுவாதிகளால் அழைக் கப்படும் பெரியார் முழங்கிபோலி பகுத்தறிவுவாளர்கள் பெருமையுடன் வெளியிட்டு வரும் இந்தக் கொள்கையைப் பாருங்கள்!
எனவே பெற்றோர்களே! பெண்களைப் பெண் என்று அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப் போல் கட்டுவித்தல் வேண்டும்
(வாழ்க்கைத் துணை நலம் நூலிலிருந்து... 1958ஆம் ஆண்டு பதிப்பு)
பெண்களைப் பெண்கள் என்று அழைப்பது தான் பகுத்தறிவுஅறிவியல் முடிவு. பெண்ணையும் ஆணையும் பகுத்தறிவின் துணை கொண்டு ஆய்வு செய்தாலும்உடற்கூறு அடிப்படையில் ஆய்வு செய்தாலும் மற்றும் அறிவியலின் எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் இரண்டும் தனித்தனி என்பது நிரூபணமாகும். நிதர்சனமான உண்மைக்கு எதிரான இந்தக் கருத்து பகுத்தறிவுக்கு எந்த வகையில் ஏற்றது என்பதைப் போலி பகுத்தறிவாளர்கள் விளக்கத் தயாரா?
இது அறிவியலுக்கும்பகுத்தறிவுக்கும் எதிரானது என்றால் இதைக் கூறியவர் பகுத்தறிவுக்கே தந்தை என்று வாதிடுவதில் உள்ள பகுத்தறிவு என்னஒரு மனிதனின் மேல் குருட்டு பக்தி வைத்து அவர் அறிவியலுக்கு எதிரான கருத்தைப் பேசினாலும் அதையும் பகுத்தறிவு என்று வாதிடும் இவர்களுக்கும்முன்னோர்கள் எழுதி வைத்த கட்டுக் கதைகளை நம்புபவர்களுக்கும் இடையில் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை.
மேலும் தந்தை பெரியார் கூறியபடி அவரது பிள்ளைகள்(?) யாரும் பெண்களை ஆண் என்று சொல்லி வளர்ப்பதில்லை. ஆண்களின் பெயரை இடுவதும் இல்லை. ஏற்கனவே இடப்பட்ட பெண் பெயர்களை ஆண் பெயர்களாக மாற்றுவதும் இல்லை.
பெரியார் கூட தனது முதல் மனைவியின் நாகம்மாள்என்ற பெயரை மாற்றா விட்டாலும் தனது கொள்கையை ஏற்றுக் கொண்ட மணியம்மையின் பெயரை மணியப்பன் என்றோ மணிவண்ணன் என்றோ ஆண் பெயராக மாற்றவில்லை.
வீரமணி வகையறாக்கள் தமது குடும்பப் பெண்களுக்கு எழில் அரசிதமிழரசி என்பது போல் தான் பெயர்களைச் சூட்டு கிறார்கள். பெண்ணுக்கு எழிலரசன் என்றோ தமிழரசன் என்றோ பெயர் சூட்டுவதில்லை.
மதவாதிகளை விட போலி பகுத்தறிவாளர்கள் அதிக மூட நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
பகுத்தறிவுத் தந்தையின் மற்றொரு கொள்கை முழக்கத்தைப் பாருங்கள்.
பெண் இல்லாமலும் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம். ஆனால் ஆண் இல்லாமல் பெண் வழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என் பதை ருசுப்படுத்திக் கொள்ள முடியாத வர்களாயிருக்கிறார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுற்றவர்களாயிருக்கிறார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்களுக்கு ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாகி விடுகிறது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும்’.
(குடியரசு 12, 8, 2, 3, 10:3)
பெண்கள் பிள்ளை பெறக் கூடாது என்பது பெரியாரின் பகுத்தறிவுச் சிதறல்களில் ஒன்று.
பெண்கள் திருமணம் செய்யாவிட்டாலும்கர்ப்பமடைந்து குழந்தைகள் பெறாவிட்டாலும் உடல் ரீதியாக அவர்களுக்குப் பலவிதமான கோளாறுகள் ஏற்படும். பல விதமான புற்று நோய்கள் ஏற்படவும் இது காரணமாக அமையும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பெரியார் வாழ்ந்த காலத்திலேயே இந்த உண்மையை மனிதன் கண்டு பிடித்து விட்டான். இந்த அறிவியல் உண்மைக்கு எதிராகபெண்களுக்குப் பெருங்கேடு விளைவிக்கும் இக்கருத்தைப் பகுத்தறிவு சார்ந்தது என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?
மேலும் பெண்கள் பிள்ளை பெறா விட்டால் நாம் வாழும் காலத்தோடு மனித குலம் அழிந்து போய்விடும். ஒட்டு மொத்த மனித குலத்தையும் அழிக்கும் இந்த ஆபத்தான சிந்தனையில் என்ன பகுத்தறிவு உள்ளதுஎன்ன அறிவியல்உள்ளது?
பெரியாரை பகுத்தறிவுத் தந்தையாக ஏற்றுக் கொள்ளும் வீரமணி வகையறாக்களும் மிஹ்ராஜ் பற்றி விமர்சித்த விமர்சகரும் பிள்ளைகள் பெற்றதில்லையாதங்கள் புதல்விகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு அவர்களுக்குப் பிள்ளை பிறக்கக் கூடாது என்று தான் விரும்புவார்களாபிள்ளை பெற வேண்டாம் என்ற அறிவுரையைத் தான் பிள்ளைகளுக்குக் கூறுவார்களா?
உலகில் உள்ள மூளையுள்ள ஒரு மனிதன் கூட இந்தக் கருத்தை மடமை என்று தான் கூறுவான். நடைமுறைச் சாத்தியமற்றது என்று எடுத்த எடுப்பிலேயே கூறி விடுவான்.
பெண்களின் உடல் நலனுக்கும் மனித குல நலனுக்கும் இது மிகவும் ஆபத்தானது என்பதை அறிவுடைய ஒவ்வொருவரும் கூறுவார்கள்.
மதங்களில் சொல்லப்பட்டதற்கு அறிவியல் ஆதாரம் கேட்கும் போலி பகுத்தறிவாளர்கள்பெரியாரின் இந்தக் கருத்தை அறிவியல் துணை கொண்டு நிரூபிப்பார்களா?
பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாயிருப்பதால் சாதாரணமாய்ப் பெண்கள் பிள்ளைகளைப் பெறுவது என்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்கிறோம். ...அதனால் தான் நாம் கண்டிப்பாய்ப் பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிறோம். எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை வைத்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்வோம்.
பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்பதோடுபெண்களுக்கு விடுதலையும் இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல் போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது
என்றெல்லாம் பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூலில் பயங்கர ஆராய்ச்சி செய்து பெரியார் கண்டு பிடித்துள்ளார்.
இதனால் ஏற்படும் அழிவையும் அவர் ஒப்புக் கொண்டே இந்த அழிவுக் கொள்கைக்கு மக்களை அழைத்தார். அதே நூலில் அவர் கூறுவதைக் கேளுங்கள்!
பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால் உலகம் விருத்தியாகாது. மானிட வர்க்கம் விருத்தியாகாது என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன கஷ்டம் வரும்மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக் கூடும். அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத் தான் என்ன கஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை. இது வரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் ஏற்பட்ட நன்மை தான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.’.
என்றெல்லாம் உலகத்தை அழித்தொழிக்க அற்புதமான வழியை ஆராய்ந்து கண்டுபிடித்து அதில் கல்லுப் போன்ற உறுதியுடனும் பெரியார் இருந்துள்ளார்.
போலி பகுத்தறிவாளர்கள் தர்ம நியாயத்தின் பக்கம் நின்று பிள்ளை பெறுவது ஏன்சிலை வணக்கம்சில சடங்குகளை எதிர்த்தார் என்பதைக் கழித்துப் பார்த்தால் அறிவுக்குப் பொருந்தாமல் அதிகம் பேசியவர்கள் பட்டியலில் பெரியார் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார். பகுத்தறிவுத் தந்தையின்(?) தத்துவங்கள் இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்...
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 10
போலி பகுத்தறிவுவாதிகளான திராவிடர் கழகத்தினர் இஸ்லாத்தை வம்புக்கிழுத்ததன் அடிப்படையில் அவர்கள் மதவாதிகள விட அதிக மூட நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதைத் தக்க சான்றுகளுடன் அம்பலப்படுத்தி வருகிறோம்.
நமது வாதங்களுக்கும்அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கும் பதில் சொல்ல வக்கற்ற போலி பகுத்தறிவாளர்கள்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன் என்று இணைய தளங்களில் விஷமப் பிரச்சாரம் செய்வதைப் பதிலாக்கியுள்ளனர்.
மணியம்மை என்ற இளம் வயதுப் பெண்ணை பெரியார் என்ற முதியவர் மணந்தது சரியா என்பது நமது கேள்வியல்ல. ஆணோபெண்ணோ தமது விருப்பத்திற்கேற்ப அதிக வயதுடையவரை மணந்தால் அதை இஸ்லாம் மறுக்காது.
நமது கேள்வியும் அதைப் பற்றியது அல்ல.
வயதான கிழவர்கள் இளம் பெண்ணை மணக்கக் கூடாது என் பதைக் கொள்கையாகக் கொண்ட ஒருவர்தானே அதை மீறியது ஏன் என்பது தான் மணியம்மை திருமணம் குறித்த நமது கேள்வி.
இதற்குப் பதில் சொல்லத் துப்புக் கெட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணம் பற்றி இணைய தளங்களில் கேள்வி எழுப்புவது அவர்களின் பகிரங்கத் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்என்ற எமது நூலில் இதுபற்றி மிக விரிவாக ஏற்கனவே நாம் பதிலளித்துள்ளாம்.
(இது பற்றி அறிய விரும்புவோம் நமது திருக்குர் ஆன் தமிழாக்கத்தின் இந்த பகுதியைப் பார்க்கவும்.)
போலி பகுத்தறிவுவாதிகள் நமது கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தரட்டும். அல்லது நபிகள் நாயகம் அவர்களின் பல திருமணங்கள் உட்பட அனைத்து விஷயங்களப் பற்றியும் பகிரங்க விவாதத்துக்கு முன் வரட்டும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.
இனி எடுத்துக் கொண்ட தலைப்புக்கு வருவோம்.
பெரியாரிடம் காணப்பட்டது போன்ற முரண்பாடுகள் கொண்ட ஒரு தலைவரை தமிழகத்தில் காண்பது அரிது என்பதற்கான மற்றொரு சான்றைப் பாருங்கள்.
பெண்கள் வீட்டு வேலை செய்வதுகோலம் போடுவதுசாணி தட்டுவதுபாத்திரம் கழுவுவதுகும்மியடிப்பது,கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்’.
குடியரசு : 08031936
பெண்கள எப்படி நடத்த வேண்டும் என்று இது போன்ற பல அறிவுரைகளப் பெரியார் கூறினார். ஆனால் அவர் கூறிய அனைத்தையும் அவரே முதலில் மீறக் கூடியவராக இருந்தார்.
நாகம்மாள் என்ற முதல் மனைவி மறைந்த போது நாகம்மாளை பெரியார் எப்படி நடத்தினார் என்பதை அவரே வெளிப்படையாக அறிவித்தார்.
நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு இருந்தேனேயில்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை...
‘... பெண்கள் சுதந்திர விஷயமாகவும்பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோபோதிக்கிறேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை’.
‘...ஆனால் நாகம்மாளோபெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும் சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும்அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்’. குடியரசு : 14051933
ஊருக்கெல்லாம் எதை மிக அதிகமாக வலியுறுத்திப் பெரியார் பேசி வந்தாரோ அதை மிக அதிக அளவில் தெரிந்து கொண்டே பெரியார் மீறியுள்ளார். எந்த உரிமைகள் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்றாரோ அதை அவரது மனைவிக்குக் கூட அவரால் கொடுக்க முடியவில்லை.
தான் போதிக்கும் தத்துவம் தன்னாலேயே நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று என்று அறிவித்த பின்னர் இதில் என்ன நேர்மை உள்ளது?
தோழர்கள! ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் உருவச் சின்னங்களாமதக் குறியோசாஸ்திரசம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது. கண்டிப்பாய் இருக்கக் கூடாது.
விடுதலை : 17081962
இவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தன் அளவில் மட்டுமின்றி தன் குடும்பத்திலும் இவர் கூறும் கொள்கையைக் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்று கூறும் பெரியார்தன் மனைவியை சாஸ்திரசம்பிரதாயங்களில் கூறியபடியே நடத் தியிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய மோசடி!
இதை நாம் விமர்சிக்கும் போது இந்த விமர்சனம் நியாயம் தானே என்று எடுத்துக் கொள்ளாமல் பெரியார் என்ற கடவுள் மேல் பக்தி கொண்டு கோபப்படுவது எந்த வகை பகுத்தறிவு?
எது பெண்ணுரிமை என்று பெரியார் வாதிட்டாரோ அதை முதல் மனைவிக்கு மட்டுமின்றி இரண்டாம் மனைவிக்கும் அவர் வழங்கவில்லை.
வயதான காலத்தில் மூத்திரக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட போது மணியம்மையை மணந்து தனக்குப் பணிவிடை செய்வதற்காகவே பயன்படுத்திக் கொண்டார்.
எனது காயம் சற்றுக் கடினமானது தான்எளிதில் குணமாகாது. மூத்திர வழியே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் தேவையிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை. எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும்உதவியும் அளவிடற் கரியது.விடுதலை : 17091967
பெரியாரின் மூத்திரத்தைச் சுத்தம் செய்வது தான் அவரது மனைவியின் கடமையாஇதைத் தானே பெண்ணுரிமைக்கு எதிரானது என்று பெரியார் கூப்பாடு போட்டார். தனக்குச் சேவை செய்வதற்காக ஒரு இளம் பெண்ணை மணந்து பயன்படுத்திக் கொண்டது அவர் போதித்த பெண்ணுரிமைக்கு எதிரானது என்று அவரது பக்தர்களுக்கு ஏன் தோன்றவில்லை?
மணியம்மை தாமாக விரும்பித் தான் இதைச் செய்தார்’ என்று இன்று போலி பகுத்தறிவுவாதிகள் கூறும் சமாதானம் ஏற்கத்தக்கது அல்ல. பெரியார் பாஷையில் சொல்வதானால் அயோக்கியத்தனம்.
எல்லா மனைவிமார்களும் விரும்பியே கணவனுக்குப் பணிவிடை செய்வதைத் தான் பெரியார் கண்டித்தார். அவ்வாறு விரும்புவதே தவறு என்பது தான் அவரது வாதம்.
மணியம்மை விரும்பினாலும் அதை பெரியார் ஏற்றிருக்கக் கூடாது என்பதை இவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்?கண்ணை மூடிக் கொண்டு நவீன தெய்வமாக பெரியாரைக் கருதிக் கொண்டது தான்.
எனவேதான் பேசிய எந்த ஒன்றையும் பெரியார் முதலில் மீறியவராக இருந்தார் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.
பெண்கள வீட்டு வேலை செய்வது கோலம் போடுவதுசாணி தட்டுவதுபாத் திரம் கழுவுவதுகும்மியடிப்பது,கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்குடியரசு : 08031936
மேற்கண்ட போதனையை மற்றொரு விஷயத்திலும் தானே மீறினார். அதை அடுத்த இதழில் காண்போம். இன்ஷா அல்லாஹ்.
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 11
பெண்களை வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவதுசாணி தட்டுவதுபாத்திரம் கழுவுவதுகும்மியடிப்பது,கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்’ என்று 8.3.1936 குடியரசு ஏட்டில் எழுதிய பெரியார் அவர்கள் தமது இரு மனைவிகளுக்கும் கூட அந்த உரிமையை வழங்கவில்லை என்பதைத் தக்க சான்றுகளுடன் சென்ற இதழில் தெளிவுபடுத்தியிருந்தோம்.
பெரியார் தனது மேற்கண்ட அறிவுரையைத் தானே மற்றொரு விஷயத்தில் மீறியிருக்கிறார் என்பதை இப்போது காண்போம்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்துக்கள் பொங்கல் எனும் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். வீட்டுப் பொங்கல்,மாட்டுப் பொங்கல்கன்னிப் பொங்கல்காணும் பொங்கல் என்று இதில் பலவகை உண்டு. இந்தப் பண்டிகையும் பகுத்தறிவு அடிப்படையில் எதிர்க்கப்பட வேண்டியதே என்றாலும் இப்பண்டிகையில் பிராமணர்களின் ஆதிக்கம் இல்லாத ஒரே காரணத்துக்காக பொங்கல் பண்டிகையை பெரியார் ஆதரித்தார். அதைக் கொண்டாடுமாறு வலியுறுத்தினார்.
கன்னிப் ங்கலை ஆதரித்து அவர் உதிர்த்த தத்துவத்தைப் பாருங்கள்!
இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்பது சிறு பெண் அதாவதுபூப்படையாதகல்யாணமில்லாதகலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்காக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள் அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையைச் சொல்லிக் கொடுப்பார்கள்.
(விடுதலை : 14.01.1972ல் பெரியார்)
பெண்களுக்குச் சமையல் கற்றுக் கொடுப்பதுபாத்திரம் கழுவக் கற்றுக் கொடுப்பது பெண்ணுரிமைக்கு எதிரானது என்று ஒருபுறம் கூறிக்கொண்டு இன்னொருபுறம் (அவரது வாதப்படி) பெண் ணுரிமைக்கு எதிராகப் பெண்ணைத் தயார் படுத்தும் கன்னிப் பொங்கலைக் கொண்டாடுவதை அவர் நியாயப்படுத்தியதில் எது பகுத்தறிவுப்பூர்வமானது?
பெரியார் கூறிய காரணத்திற்காகத்தான் கன்னிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்றால் மற்றவர்களைவிட பெரியார் பொங்கல் பண்டிகையை எதிர்க்க வேண்டுமல்லவா?
குறிப்பிட்ட நாளில் சமையல் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி அதற்காகப் பண்டிகையும் கொண்டாடினால் பெண்களை அடிமையாக்குவதை ஒட்டுமொத்த சமூகமே அங்கீகரிக்கிறது என்பதுதானே அதன் பொருள்?
எதிலுமே பகுத்தறிவுக்கு ஏற்ற பார்வைவிசாலமான சிந்தனை பெரியாரி டம் இருந்ததில்லை என்பதற்கும்,தனக்குத்தானே முரண்படுவதுதான் பெரியாரின் தனித்தன்மை என்பதற்கும் இதுவும் சான்றாக அமைந்துள்ளது.
கன்னிப் பொங்கலை நியாயப்படுத்திட இவர் எடுத்து வைத்த காரணம் இன்னொரு வகையிலும் பகுத்தறிவுக்கு எதிரானதாக உள்ளது. பெண்களுக்குச் சமையல் கற்றுக் கொடுப்பது குறித்த பெரியாரின் முரண்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்ப்போம்.
பெண்களுக்குச் சமையல் முதலான வேலைகளைக் கற்றுக் கொடுப்பது என்றால் பெற்றோருக்கு எப்போது வசதிப்படுமோ அப்போது கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் பகுத்தறிவுப்பூர்வமானது. குறிப்பிட்ட நாளில்தான் அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று திணிப்பது மதவாதிகளுக்குச் சரியாக இருக்கலாம். பகுத்தறிவுப் பகலவனுக்குச் சரியாக இருக்குமாஅந்த நாளில்தான் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உள்ள பகுத்தறிவு தத்துவம் என்னவேறு நாட்களில் கற்றுக் கொடுத்தால் அதில் உள்ள மூடநம்பிக்கை என்னஇதைப் போலிப் பகுத்தறிவாளர்களால் விளக்க முடியுமா?
மேலும் பெரியார் கூறுவதில் உண்மை இல்லை என்பதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
கன்னிப் பொங்கலை எதிர்பார்க்காமலும்பெண்கள் கன்னிப் பருவத்தை அடைவதை எதிர்பார்க்காமலும் சிறுமிகளாக இருக்கும்போதே சமையல் தொடர்பான வேலைகளைப் பெற்றோர் கற்றுக் கொடுப்பார்கள் என்பதுதான் உண்மை.கன்னிப் பொங்கல் வரும்வரை சமையலறைப் பக்கம் வராதே’ என்று பெண் பிள்ளைகளுக்குப் பெற்றோர் தடை ஏதும் விதிப்பதில்லை.
அதற்கு முன் பெண்கள் சமையலறைப் பக்கமே போவதில்லை என்பது போலவும்கன்னிப் பொங்கல் அன்று தான் சமையலைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்பது போலவும் பெரியார் கூறுவது தனது மனோ இச்சையை நியாயப்படுத்த பெரியார் செய்த பொய்யான கற்பனையாகும்.
மேலும் கன்னிப் பொங்கல் அன்று சோறு சமைப்பதற்கு மட்டும்தான் கன்னிப் பெண்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள்.
சாம்பார்பிரியாணிசூப் போன்றவைகளைக் கற்றுக் கொடுப்பதற்கு மட்டும் ஏன் பண்டிகை இல்லை?
13 வயதில் கன்னியாகி 22 வயதில் திருமணம் நடந்தால் முதல் வருடம் மட்டுமே அப்பெண் சமையலைக் கற்றுக் கொள்வாள் என்பதில் உண்மையிருக்க முடியும். அதன் பின்னர் எட்டு ஆண்டுகள் அவள் ஏன் கன்னிப் பொங்கல் கொண்டாட வேண்டும்அவள்தான் முதல் வருடமே கற்றுக் கொண்டு விட்டாளேமுதல் வருடம் கற்றுக்கொண்ட சோறு பொங்குவதையே எட்டு ஆண்டுகள் திரும்பத் திரும்பக் கற்றுக்கொள்வது ஏன்?
பொங்கல் பண்டிகையும் பகுத்தறிவுக் கொள்கைப்படி தவறானதுதான்’ என்று அறிவித்து பொங்கல் பண்டிகையை போலி பகுத்தறிவுவாதிகள் ஏன் எதிர்க்கவில்லைமதவாதிகள் தமது முன்னோர் கூறியதைக் கண்மூடிப் பின்பற்றுவதற்கும் தமது கடவுளாகிய பெரியார் சொல்லிவிட்டதால் அதைக் கண்மூடிப் பின்பற்றுவதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?
பொங்கல் பண்டிகை குறித்து பெரியார் உதிர்த்த இன்னும் பல தத்துவங்களை எவ்வாறு பகுத்தறிவுக்கு எதிராக உள்ளது என்பதை அடுத்த இதழில் காண்போம். இன்ஷா அல்லாஹ்.
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 12
திராவிடர் கழகத்தின் உண்மை எனும் ஏடு தேவையில்லாமல் முஸ்லிம்களையும்இஸ்லாத்தையும் வம்புக்கிழுத்து அர்த்தமற்ற கேள்விகளை கேட்டிருந்தது. அவர்களே வீண் வம்புக்கு நம்மை இழுத்ததன் அடிப்படையிலேயே போலி பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கைகளை நாம் தோலுரித்துக் காட்டி வருகிறோம்.
கன்னிப் பொங்கல் பற்றி பெரியார் கூறிய தத்துவத்தில் எந்தப் பகுத்தறிவும் இல்லை என்பதை விளக்கிவிட்டுபொங்கல் பற்றி பெரியார் கூறிய பொருந்தாத காரணங்களை அடுத்த இதழில் காண்போம் என்று சென்ற இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் திராவிடர் கழக நண்பர்கள் அந்தத் தொடர் குறித்து தக்க விளக்கம் கூறுவதைத் தவிர்த்து விட்டு,பெரியார் இஸ்லாம் பற்றி உயர்வான கருத்தைக் கொண்டு இருந்ததைச் சுட்டிக் காட்டி முஸ்லிம் அபிமானியாகத் திகழ்ந்த பெரியாரை விமர்சிப்பது நியாயமானது தானாஎன்று உரிமையுடனும்நட்புடனும் நம்மிடம் கேட்டு வருகிறார்கள். நமது விமர்சனத்தின் மூலம் பெரியாரை முஸ்லிம் விரோதி என்று யாராவது எண்ணிவிடக்கூடாது என்றும் அந்த நண்பர்கள் கூறுகின்றனர். பெரியார் அவர்கள் இஸ்லாம் குறித்து உயர்வான அபிப்பிராயம் வைத்திருந்ததை நாமும் நன்றாக அறிவோம். பெரியாரின் சொத்துக்களை அனுபவித்து வரும் வீரமணி வகையறாக்கள் இஸ்லாம் குறித்து பெரியார் கூறியதைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தாலும் இஸ்லாத்தைப் பற்றி பெரியார் உயர்ந்த கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை யாரும் மறைத்துவிட முடியாது.
அந்த நண்பர்கள் கூறியதை ஏற்று இஸ்லாம் பற்றி பெரியார் கூறிய கருத்துக்களை எடுத்துக் காட்டிவிட்டு பெரியாரின் தவறான கருத்துக்களையும் கண்மூடிப் பின்பற்றுவோரின் அறியாமை பற்றிய விமர்சனத்தையும் தொடருவோம்.
இஸ்லாத்தைப் பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தார் என்பதற்காக ஒருவரது கருத்துக்களில் உள்ள தவறுகளை விமர்சிக்காமல் இருப்பது நேர்மையற்றதாகிவிடும் என்பதற்காகவே பெரியாரின் கருத்துக்களை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்துகிறோம்.
பெரியார் கூறுகிறார்:
முகமதிய மதம்
வெளிப்படையாய் நாம் பேசுவதானால்அம்பேத்கரும்அவரைப் பின்பற்றுவோரும் நாத்திகர்களாவதற்கும்,மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல்அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டுஅதற்காக முகமதியராகிவிடலாம் என்று அவர்கள் கருதினால்அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம். முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்கோஷம் இருக்கலாம்;கடவுள் இருக்கலாம்மூடநம்பிக்கை இருக்கலாம்மதச்சின்னம்மதச்சடங்கு இருக்கலாம்சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாதுசுயமரியாதைக்காரருக்குக் கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்நாத்திகர்களுக்கும்பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்சமதர்மவாதிகளுக்கும்பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். ஆனால்தீயர்கள்பறையர்கள்புலையர்கள்நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற,ஒதுக்கப்பட்டிருக்கின்றதாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுநாயிலும்மலத்திலும்புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம்தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம். ஏனெனில்அவன் கிறிஸ்தவனாகிகிறிஸ்தவப் பறையன்கிறிஸ்தவச் சக்கிலிகிறிஸ்தவப் பிள்ளைகிறிஸ்தவ நாயக்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதை விடபறத் துலுக்கன் என்றோசக்கிலிய முகமதியன் என்றோதீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும்அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்ற சமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோகொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, ‘எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்’ என்கின்றவன் போனால்இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும், ‘சரிஎப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக்கொள்’ என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம். நமக்குக் கடிதம் எழுதின நண்பர், ‘இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறதுஇஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறதுபெண்களுக்கு உறைபோட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்’ என்று எழுதி இருக்கிறார். அது (உறைபோட்டு வைத்திருப்பது) உண்மை என்றும்தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இதுபெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழியதீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.
(17.11.1935 குடியரசுஇதழில் பெரியார் எழுதிய தலையங்கம்)
மேலும் பெரியார் கூறுகிறார்:
காட்டுமிராண்டிகளைத் திருத்திய முகமது நபிகள்தான். முகமது நபி
தோன்றி அவற்றை யெல்லாம் ஒழித்து ஒரே கடவுளையும்அது பிறப்பு இறப்பு இல்லாததாகவும்ஒன்றும் வேண்டாததாகவும்அருளானதாகவும்அன்பானதாகவும் முஸ்லிம் ஆக்கிக்கொண்டான். அதன் காரணமாகவே முன்னேறுகின்றான்.
(விடுதலை 30.10.1960)
மேலும் பெரியார் கூறுகிறார்:
தீண்டப்படாத மக்கள் கும்பல் கும்பலாய் முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்
சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகிவிட்டதால்அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோஅவர்களுக்கு மோட்ச லோகம்கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோகடவுளோடு கலந்து விட்டார்கள்என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும் படிச் சொல்வதும் இல்லை. அன்றியும்ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும்எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என் பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.
இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும்முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும்மதத்தின் காரணமாக கருதுவது மூட நம்பிக்கையே ஒழியஇரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால்பாவபுண்ணியத்தையும்மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.
மற்றென்னவென்று கேட்பீர்களேயானால்இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69ஆதிதிராவிடர்களும்பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடுபாமரத் தன்மையும் காட்டு மிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும்அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.
அதாவதுமேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய் விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன்,சக்கிலிசண்டாளன் என்று இழிவாய்க் கூறமுடியாது. அவர்களும் மற்றவர்களை சாமிசாமிபுத்தி என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல்குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.
வண்ணான்நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும்கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும்பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழ வேண்டியதில்லை. இனி எந்தப் பொதுத் தெருவிலும் நடக்கலாம்எந்த வேலைக்கும் போகலாம்யாருடனும் போட்டி போடலாம்அரசியலில் சமபங்கு பெறலாம்மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள்போக தாராள உரிமை உண்டு. வேதம் படிக்க உரிமையுண்டு.
எனவேஇவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும்அறிவு வளர்ச்சித் தடையிலும்சமூக இழிவிலும்சுயமரியாதைக் குறைவிலும்அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும் போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில்தீண்டாமை,நெருங்காமைபார்க்காமைபேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால்,வேத சாஸ்திரங்களின் பேரால்கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.
ஆகையால்தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும்ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும்மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலைமுதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பதுஎனது தாழ்மையானதும்கண்ணியமானதுமான அபிப்பிராயம்.
நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதியிருக்கிறார்கள். அது வாஸ்தவமானால்தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால்அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ளமாட்டார்கள் அல்லவாமற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?
ஆகையால்இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும் வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால்நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும்மதத்தினிடத்திலோ இந்து சமூ கத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால்அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன் வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத் துழைக்கத் தயாராயிருக்கிறேன்.
(நன்றி கீற்று இணையதளம்)
மேலும் பெரியார் கூறுகிறார்:
ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்!
நான் இந்து மதத்தைப் பற்றியோஇஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால்நான் பேசுவது என்பதுஇரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும்அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.
அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறதுஎன்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால்அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.
இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம்சகோதரத்துவம்ஒற்றுமைஅன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரை விடத் துணிவது என்பது தான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக் கூடாதவன்,குளத்தில் இறங்கக் கூடாதவன்கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும்,மனிதன் மிருகத்தை விடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம்,சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.
மதத்தத்துவ நூலைவேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும்மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்பார்த்தாக வேண்டும்கேட்டாக வேண்டும். இந்து மத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிரபார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும்ஏழையானாலும்யோக்கியனானாலும்,அயோக்கியனானாலும் சரிஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.
இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும்,எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப் பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளேவிட மறுத்துவாசற்படியில் காவல் காக்கின்றதுதன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.
ஆதித் திராவிடர்களை நான்இஸ்லாம் மதத்தில் சேருங்கள்என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை;சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில்மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லைஅல்லது ஆத்மார்த்தத்திற்கோ'கடவுளை அடைவதற்கோநான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வதுசத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்இனியும் சொல்கின்றேன்.
சட்டம் செய்வது கஷ்டம்செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக் கிரகம் செய்வதும் கஷ்டம்;செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால்,ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டாஅல்லதுஅன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டாஅவன் ஆத்திகனாய் இருந்தால் என்னநாத்திகனாய் இருந்தால் என்னஉண்மை இஸ்லாம் ஆனால் என்னபொய் இஸ்லாம் ஆனால் என்னஉலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போதுஇஸ்லாம் மதமும் ஒழியும்.
ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாதுஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாதுகிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன்,பார்ப்பாரக் கிறிஸ்தவன்வேளாளக் கிறிஸ்தவன்நாயுடு கிறிஸ்தவன்கைக்கோளக் கிறிஸ்தவன்நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறு பாடுகள் இருக்கின்றனவா?கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாதுவேண்டுமானால்வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.
(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று பெரியார் ஆற்றிய உரை. குடியரசு' 2.8.1931)
முஸ்லிம் மார்க்கத்தை தஞ்சமடைக!
இந்து மத ஊழல்களைத் திருத்தப்பாடு செய்த புது மதக் கொள்கைகளே இன்று கிறிஸ்து மார்க்கம்முஸ்லிம் மார்க்கம் முதலிய பல புதிய மார்க்கங்களாக தோன்றலாயின. இந்துமதக் கொடுமை தாங்கமாட்டாமலேதான் பல கோடிப் பேர்கள் முஸ்லிம்களாகவும்கிருஸ்தவர்களாகவும் ஆனார்கள். இன்றும் இந்துக்கள்தான் பிறமதம் புகுகிறார்கள். என்றாலும்முஸ்லிம் மார்க்கம் தவிரவேறு எந்த மார்க்கத்துக்கு மனிதன் போனாலும் அவன் பின்னாலேயே ஜாதிச் சனியன் தொடர்ந்து கொண்டே போகிறது. உதாரணமாகஒருவர் கிறிஸ்தவனான பிறகும்பார்ப்பனக் கிறிஸ்தவன்,பள்ளக் கிறிஸ்தவன், பறை கிறிஸ்தவன்நாயுடு கிறிஸ்துவன்ஆசாரி கிறிஸ்தவன்நாடார் கிறிஸ்தவன் என்கின்ற பாகுபாடும்சடங்கு ஆச்சார அனுஷ்டானமும் எந்தக் கிறிஸ்தவனையும் விட்டுத் தொலைவதில்லை. பிரார்த்தனை ஸ்தலங்களிலும் இந்துக் கோயில்கள்போல் பேதங்கள் பல இருந்து வருகின்றன.
ஆனால்இந்த இழிவு ஆபாசம் முஸ்லிம் மார்க்கத்திலே காணமுடிவதில்லை. ஒரு தீண்டாதான்முஸ்லிம் மதத்தைத் தழுவிவிட்டால்உடனே தீண்டாமை பறந்து போகிறது. அவன்அந்த சமூகத்தில் மனித சுதந்திரத்தைசமத்துவத்தைப் பெறுகிறான். அங்கு பறமுஸ்லிம் என்று யாரேனும் சொல்லிதங்கள் பற்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஏன்?அவர்கள் தங்கள் மதத்தினிடை சமத்துவம் நிலவ வேண்டுமென்ற உணர்ச்சியை அவ்வளவு அதிகமாகக் கொண்டுள்ளார்கள். அதனாலேயே தீண்டாமையை விலக்கிக் கொள்ள வேண்டுமென்கிறவர்களை முஸ்லிம் மார்க்கத்தைத் தஞ்சமடையும் படி இந்த 10 வருஷமாய்ச் சொல்லி வருகிறேன்.
(23.01.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்றமாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை யில் கடவுள் பற்றிய பகுதி - குடியரசு' 30. 1. 1938).
பகுத்தறிவாளர்களுக்குக் கூட மறைக்கப்பட்ட பெரியாரின் சில அறிவுரைகளை நாமே எடுத்துக்காட்டிவிட்டோம். பெரியார் மீது எமக்கு எந்தத் துவேசமும் இல்லை. அதே நேரத்தில் எவரது கருத்தையும் எடை போட்டுப் பார்ப்பதே பகுத்தறிவு என்ற அடிப்படையிலேயே நமது விமர்சனம் அமைந்துள்ளது என்பதைப் பெரியார் அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இனி ஏற்கனவே அறிவித்த படி பொங்கல் பற்றி பெரியாரின் கருத்தை அலசுவோம் இன்ஷா அல்லாஹ். 
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 13
இந்து மதத்தின் பண்டிகைகளையும்சடங்குகளையும் பெரியார் எதிர்த்ததற்கு ஒரே காரணம் பிராமணர் என்ற இனத்தின் ஆதிக்கம் அவற்றில் உள்ளது என்பதால் தானே தவிர அவை பகுத்தறிவுக்கு ஏற்றது அல்ல என்பதற்காக இல்லை.
இதன் காரணமாகவே பார்ப்பனர் ஆதிக்கம் இல்லாத மூடநம்பிக்கைகளையும்சடங்குகளையும் பெரியார் ஆதரித்து,அதற்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரணங்களைக் கூறியிருப்பதை பெரியாரின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
பகுத்தறிவின் அடிப்படையில் பெரியாரின் வாதங்கள் உள்ளன. அதன் காரணமாகவே பெரியாரின் பின்னே செல்கிறோம் என பெரியாரின் அபிமானிகள் வெளியில் சொல்லிக்கொண்டாலும்தாங்கள் நஞ்சென வெறுத்த பிராமண ஆதிக்கத்தைப் பெரியார் எதிர்க்கிறார் என்ற காரணத்துக்காகவே அவர் பின்னே சென்றார்கள்.
இதன் காரணமாகத்தான் பகுத்தறிவுக்குப் பொருந்தாத வகையில் தனக்குச் சிலை வைப்பதை பெரியார் ஆதரித்த போது இவர்களும் ஆதரித்தனர். இது போல பகுத்தறிவுக்கு எதிரான பெரியாரின் இன்னும் பல கருத்துக்களை அவரது சீடர்கள் ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே காரணம். தம்மால் உடைக்க முடியாமல் இருந்த பிராமண ஆதிக்கத்தை இன இழிவை ஒழிப்பதற்கு ஒரு தலைவர் கிடைத்து விட்டாரே என்ற எண்ணமே பெரியாரின் பின்னே சிலர் சென்றதற்குக் காரணமாக இருந்தது. இன இழிவு நீங்கும் என்பதற்காக இஸ்லாத்தில் இணைவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்ததற்கும் இதுவே காரணம்.
ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி பொங்கல் பண்டிகையை எடுத்துக்கொள்வோம்.
பெரியார் கூறுகிறார்...
பொங்கல் என்பது தமிழனுக்கு பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால்... விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக்கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.
நமது மற்ற பண்டிகைகள் என்பவையெல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால்தான் முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும்அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
விடுதலை 14.01.1972)
பொங்கலை நியாயப்படுத்தி பெரியார் எடுத்துக் காட்டும் எந்தக் காரணமும் பகுத்தறிவுப்பூர்வமானதாக இல்லை. பிராமண ஆதிக்கத்தை எதிர்க்க இப்பண்டிகை உதவும் என்ற நோக்கம் மட்டுமே இதில் உள்ளதை அனைவரும் அறியலாம்.
விவசாயத்தில் உற்பத்தியான பொருளை அவ்வாண்டு முதல் தடவையாக சமைப்பதை பெரியார் ஒரு காரணமாகக் கூறுகிறார். இதன் காரணமாக இது தமிழனின் பண்டிகை என்றால்தமிழர்கள் அனைவரும் விவசாயிகளாக இருந்தால்தான் ஏற்புடையதாக அமையும். எந்த ஒரு சமுதாயத்திலும் அனைவருமோ அல்லது பெரும்பான்மையினரோ விவசாயிகளாக இருக்க மாட்டார்கள். மிகக் குறைந்த சதவிகிதம் பேர் மட்டுமே விவசாயிகளாக இருக்கும் நிலையில் இது எப்படி ஒட்டு மொத்த தமிழரின் பண்டி கையாகும்?
விவசாயிகளாக இல்லாத 90 சதவிகிதம் தமிழர்கள் விவசாயத்தின் மூலம் எதையும் உற்பத்தி செய்திருக்க மாட்டார்கள். அதை முதல் தடவையாகச் சமைக்கும் நிலையும் ஏற்படாது.
பெரும்பான்மையான தமிழர்களுக்கு இக்காரணம் பொருந்தாது எனும்போது பொங்கலைத் தமிழர் பண்டிகை என்பது எப்படி பகுத்தறிவுப்பூர்வமானதாக இருக்க முடியும்?
மொத்த சமுதாயத்தில் சுமார் 10 சதவி கிதமாக உள்ள விவசாயிகள் அனைவருக்கும் இது பொருந்துமா என்றால் அதுவும் இல்லை. தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் சரியாக விளைவதில்லை. மிகச் சில மாவட்டங்களில் மட்டுமே தை மாதம் அறுவடை செய்யப்படும் நிலை இருக்க வாய்ப்புண்டு. மழை பொய்த்ததால் அல்லது ஆறுகள் வரண்டதால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் அதிகமாக இருக்கும்போது பொங்கல் பண்டிகை விவசாயிகளின் பண்டிகையாகக்கூட இருக்க முடியாது.
தமிழகமே வரண்டுவிட்டால் அப்போது ஒருவருக்குமே இக்காரணம் பொருந்தாமல் போய்விடும். மேலும் பயிர்கள் பல்வேறு மாதங்களில் அறுவடை செய்யப்படுவதுண்டு. சிலவேளை இரண்டு பருவங்களில்கூட அறுவடை நடக்கும். தை மாதம் ஒரு பொங்கலும்பங்குனி மாதம் ஒரு பொங்கலும் கொண்டாடவேண்டும் என்ற கருத்தையும் பெரியார் கூறும் காரணம் ஏற்படுத்துகிறது.
ஒரு ஊரில் ஒரு பகுதியில்கூட பல்வேறு நாட்களில் அறுவடை நடக்கும். சிலருக்கு தை முதல் தேதி கடந்த பின்பு கூட அறுவடை நடக்கும். இவர்களது பொங்கலுக்கு பெரியார் கூறும் காரணம் அறவே பொருந்தாது.
மேலும் அறுவடை செய்த அனைவரும் பொங்கல் தினத்தில்தான் அதை முதன் முதலாகச் சமைக்க வேண்டும் என்பதற்கு பகுத்தறிவுப்பூர்வமான எந்தக் காரணமும் இல்லை. கஷ்டத்தில் உள்ளவர்கள் பொங்கலுக்கு முன்னர் அறுவடை செய்ததை பொங்கலுக்கு முன்பே சமைக்கும் நிலையிலும் இருப்பார்கள். இவர்களுக்கும் பெரியார் கூறும் காரணம் பொருந்தாது.
மேலும் விவசாயம் என்பது உண்ணும் பொருள் மட்டுமன்று. நெல்லை உற்பத்தி செய்வது போலவே பருத்திமஞ்சள்,சூரியகாந்திஎள்மிளகாய்தக்காளி என்று எண்ணற்ற விளைபொருட்கள் உள்ளன. இவற்றைப் பயிரிடும் விவசாயிகள் அவற்றை தை முதல் நாள்தான் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்று கூறுவது பகுத்தறிவுக்கு ஏற்ற வாதம் அல்ல.
மாசி மாதம் தக்காளி பயிரிடும் விவசாயிகள் அதை பதினோரு மாதம் பாதுகாத்து பொங்கல் அன்று சமைப்பதில்லை. பொங்கல் பண்டிகையைத் தமிழனின் பண்டிகை என்று கருதிய பெரியார்அதற்குக் கூறிய இந்தக் காரணம் பகுத்தறிவுப் பூர்வமானது அல்ல. அவனவனுக்கு வசதி வரும் நாள் தான் அவனவனுக்குப் பண்டிகை என்று தான் பெரியார் வாதிட்டிருக்க வேண்டும். அப்படிக் கூறியிருந்தால்தான் அதில் பகுத்தறிவு இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள முடியும்.
மேலும் கால்நடை ஜீவன்களைப் பாராட்டுவதற்காக மாட்டுப் பொங்கல் என்ற காரணத்திலும் பகுத்தறிவு இல்லை.
கால்நடைகளை பொங்கல் தினத்தில் மட்டும் பாராட்டுவதில் என்ன பகுத்தறிவு உள்ளதுஅன்றாடம் கால்நடைகள் மனிதனுக்குப் பயன்பட்டே வருகின்றன. எனவே தினமும் அவற்றைப் பாராட்டினால் அதில் ஓரளவு பகுத்தறிவு உள்ளது என்று கருதலாம். அல்லது கால்நடைகளைப் பாராட்டினால்அலங்கரித்தால் அதை உணரும் அறிவு அவற்றுக்கு இல்லை என்பதால் மிருகத்தைப் பாராட்டுவது மூடநம்பிக்கை என்று கூறினால் அதை முழுப் பகுத்தறிவு என்று எடுத்துக் கொள்ளலாம்.
விவசாயத்துக்கு மாடுகள் பயன்படுவதால் மாட்டுப் பொங்கல் என்றால் விவசாயத்துக்குப் பயன்படாத பசு மாட்டுக்கு ஏன் பாராட்டுஆடுகளுக்கு ஏன் பாராட்டுநகர்ப்புறங்களில் உள்ள மாடுகள் விவசாயத்துக்கு பயன்படுவதில்லையே?அவற்றுக்கு ஏன் பாராட்டு?
கால்நடைகள் இல்லாமல் அனைத்தும் எந்திரமயமாகி விட்ட நிலையில் டிராக்டர் பொங்கல்கொண்டாடலாம் என்று பகுத்தறிவாளர்கள் கூறுவார்களா?
எனவே பெரியாரின் இலக்கு பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே தவிர பகுத்தறிவுவாதம் அல்ல. பெரியாரின் அபிமானிகளும்,பார்ப்பன எதிர்ப்பு என்ற அடிப்படையில்தான் அவரைப் பின்பற்றுகிறார்களே தவிர பகுத்தறிவில் உரசிப் பார்த்து அல்ல என்பதற்கு பொங்கல் பண்டிகையே போதுமான சான்றாக அமைந்துள்ளது.
இதையும் பெரியார் தெளிவாகக் கூறுகிறார்.
பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால் பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும் மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.
(விடுதலை 14.01.1972)
இவர்களைப் போலி பகுத்தறிவுவாதிகள் என்று நாம் அடைமொழியிட்டு அழைப்பதன் காரணம் இதுதான். தங்கள் நடவடிக்கையையே பகுத்தறிவுக்கு எதிராக அமைத்துக்கொண்டவர்கள் மதவாதிகளிடம் பகுத்தறிவுவாதம் பேசுவதில் எள்ளளவும் நியாயம் இல்லை.
போலிப் பகுத்தறிவுவாதிகளின் மூட நம்பிக்கை இன்னும் வரும். இன்ஷா அல்லாஹ். 
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 14
பெரியார் அவர்கள் சீர்திருத்தக் கருத்துக்கள் சிலவற்றைக் கூறினாலும் முழு ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் முழு விபரங்களுடனும் அணுகாத காரணத்தால் அவரிடம் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றன.
இதற்கு மற்றொரு உதாரணமாக கிறிஸ்தவ மதம் குறித்து அவர் கூறியதையும் சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.
கடவுள் என்றால் மூடநம்பிக்கைக்கு ஆளாகக் கூடாதுஜாதி கடவுள்அரசமரம்வில்வமரம்கல்படம்பொம்மை எல்லாம் நம் கடவுள்கள் என்றால் என்ன நியாயம்ஆறறிவு உள்ள மனிதனா இவ்வளவு காட் டுமிரண்டியாயிருப்பது?கடவுள் வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளுங்களேன். அந்தக் கடவுளுக்கு உருவம் கிடையாதுஎங்கும் இருப்பார்பேர் இல்லாதவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். முகமதியரும் கிறிஸ்தவரும் அப்படித்தானே வைத்திருக்கிறார்கள்ஒரு கடவுள் என்றுதானே எல்லோரும் பேசியிருக்கிறார்கள்?
விடுதலை 14.7.1957
மேல்நாட்டவன் தோற்றுவித்த தங்கள் காட்டுமிராண்டிக் கடவுள்களையும்மதத்தையும்சாஸ்திரங்களையும் இப்போது ஒழித்து விட்டு புதிதாகக் கடவுளையும்மதத்தையும் உண்டாக்கிக் கொண்டான். அதுதான் கிறிஸ்தவன் கூறும் கடவுள்கிருஸ்தவ மதம்அவனது ஒரே கடவுள்அது பிறப்பு இறப்பு இல்லாததுஎதுவும் வேண்டாதது. அதற்கு உருவம் இல்லைஅருளானதுஅன்பானது என்று ஆக்கிக் கொண்டான். அதன் காரணமாக அறிவு பெற்றான். தாராளமாக தன் அறிவைச் செலுத்தி முன்னேறுகின்றான்.
விடுதலை 30.10.1960
கிறிஸ்தவ மார்க்கத்தில் சாதி இல்லைஒரே கடவுள் கொள்கை உள்ளதுகிறிஸ்தவ மார்க்கத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை என்றெல்லாம் கூறிய பெரியார் அவர்கள் தமக்குத் தாமே முரண்பட்டு கிறிஸ்தவ மார்க்கத்தில் சாதி உண்டு என்று கூறியதை உணர்வு 13:08 இதழில் நாம் தெளிவுபடுத்தியுள்ளாம்.
மேலும் கிறிஸ்தவ மதம் பற்றியும்இந்து மதத்தில் புரோகிதர்கள் மக்கள ஏமாற்றுவது போலவே கிறிஸ்தவ மதத்திலும் புரோகிதர்கள் மக்கள ஏமாற்றுவதாக பெரியார் முரண்பட்டு கூறுவதையும் நாம் காணலாம்.
நம் நாட்டு இந்து ஜனங்களுக்கு பாதிரி மார்களென்றால் ஒரு வித பக்தியும் மரியாதையும் அவர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இரகசியத்தை நமது மக்கள் உணரவே முடியாமல் போய் விடுகிறது. பொதுவாக பாதிரிமார்கள் என்போர் ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு நடுத்தூண் போன்றவர்கள். சுருக்கமாய் ஒரு வார்த்தையில் சொல்லுவதானால் அரசாங்கத்திற்கும் இந்தியக் குடிமக்களுக்கும் இடையில் உள்ள ஒற்றர்கள் என்று தான் அவர்களைச் சொல்ல வேண்டும்.
அப்பாதிரிமார்களிலேயும் உண்மையாய் கிருஸ்து நாதருடைய கட்டளைப் படி நடக்கக் கூடியவர்களோநடக்க வேண்டும் என்கிற ஆசையுள்ளவர்களோ சிலர் இருக்கலாம். நாம் நமது கண்ணுக்குத் தென்பட்ட அளவுக்கு பெரும்பான்மையானவர்களைப் பற்றி நமது அபிப்ராயத்தை எழுதுவோம். ஒரு தேசத்தையோ ஒரு மதத்தையோ ஜெயித்துக் கைப்பற்ற வேண்டுமானால்எப்படி திருடன் ஒரு வீட்டில் திருடுவதானால் கன்னம் வைத்து துவாரம் செய்துகொண்டு முதலில் தன் காலைவிட்டு பார்ப்பானோ அதுபோல் பாதிரிமார்களை அதாவது மத குருக்கள் என்பவர்களை முதலில் அனுப்புவது என்பது ஒரு வித தந்திரம். உதாரணமாகநமது நாட்டில் பிராமணர்கள் எப்படி தங்கள் மதத்தைக் காக்க - பரப்ப - தங்களுக்குள்ளாகவே ஒருவரை லோககுரு என்றும்ஆச்சாரியார் என்றும்,மடாதிபதிகள் என்றும்மகந்துகள் என்றும் சொல்லிக்கொண்டு அவர்களுக்கு மற்றவர்கள் பார்த்து பயந்து பக்தி கொள்ளும் வண்ணம் அணிவிடை பணிவிடைகள் செய்வதும் கைவாய் பொத்திப் பேசுவதும்சுவாமிகள்சுவாமிகள் என்று கூப்பிடுவதும்அடியேன்அடியேன் என்று சொல்லிக் கொள்ளுவதுமான தந்திரங்களைச் செய்து தங்கள் மதப் பிரசாரம் செய்து (மதப் பிரசாரம் என்பது பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றும்தன்னைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் படும்படியான மனப் பான்மையை உண்டாக்கி விடுவது) தங்கள் உயர் வாழ்க்கையை நிலை நிறுத்த ஆக்கந் தேடிக் கொள்ளுகிறார்களோஅதுபோல் ஐரோப்பியர்களும் தங்களுக்குள் ஒருவரை மதக்குரு என்பதாக பேர் வைத்து நமது நாட்டுக்கு அனுப்புவதும்அவர் நமது நாட்டின் இரகசியங்களையும் இங்குள்ள ஜனங்களின் யோக்கியதைகளையும் அறிய மதப் பிரசாரம் செய்வதுபோல் ஏழை மக்களிடையும் பாமர மக்களிடையும் இடம்,பொருள்ஏவல் என்கிற சௌகரியங்களால் திரிந்து பழகி அவர்களை தங்கள் மதத்திலும் சேர்த்துக் கெண்டு தங்கள் சுவாதீனமும் செய்து கொண்டு நம் நாட்டு இரகசியங்களை அறிந்துபிறகு நாட்டையே சுவாதீனப்படுத்திக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் செய்வதுமாயிருக்கிறது. இந்தப் பாதிரிகள் பெரும்பாலும் நமது குருக்களைப் போலவே பார்வைக்கு கண்ணை மூடிக்கொண்டு ஜபம் செய்பவர்களாயிருந்தாலும்அந்தரங்கத்தில் இவர்களும் அவர்களைப்போலவே பெரிய ராஜ தந்திரிகளாய்த்தான் இருப்பார்கள். (ராஜதந்திரம் என்றால்தான் தெரியுமே! அதாவது,பொய் செல்லலாம்உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசலாம்மோசம் செய்யலாம்நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்அதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் எதையும் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால்இதற்கு ஒரு விலக்குண்டு. அதாவது இவ்வளவும் தனது சுய நலத்திற்காகச் செய்யக் கூடாது;பொது நன்மைக்காக என்று செய்யலாம் என்றும் இதற்காதாரமாகவும் தாராளமாகவும் பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில் என்கிற குறளையும் சொல்லிவிடுவார்கள். இதை நமது லோகமான்யர்களில் அநேகர் ஒப்புக்கொண்டாலும் நமது ராஜீயவாதிகளில் 100க்கு 69தே முக்கால் பேர் ஒப்புக் கொண்டாலும் - காரியத்தில் செய்து வந்தாலும் மகாத்மா காந்தியடிகள் மாத்திரம் இதைக் கண்டிப்பாய் ஒப்புக் கொள்வது இல்லை. இம்மாதிரி ராஜதந்திரத்தில் அவருக்கு நம்பிக்கையுமில்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் தாட்சண்யத்தாலும்,வாத்சல்லியத்தாலும்கருணையினாலும் சில சமயங்களில் ஏமாந்து போய்விடுகிறார் என்று பலர் சந்தேகப்பட சொல்லிக் கொள்ளக் கூடும். ஆனால் அவரது சிஷ்யர்கள் வெகு பேருக்கு ராஜதந்திரத்தில் நம்பிக்கையுண்டு. ) ஒவ்வொரு ஊரிலும் பிராமணர்கள் எப்படி கட்சிபிரதி கட்சி உண்டாக்கி ஆளைத் தூக்கி ஆள் மேல் போட்டு ஒரு கட்சியில் தாங்கள் சேர்ந்துக் கொண்டு பீசில்லாமல் பேசுவதும்விலையில்லாமல் கூட தீர்ப்புக் கொடுப்பதுமாயிருக்கிறார்களோஅதுபோலவே ஆங்காங்கு உள்ள பாதிரிமார்களும்தங்களுக்கு அநுகூலமாக ஒரு கட்சியில் சேர்ந்துக் கொள்ளுவதும் வழியில்லா வழியில் அவர்களது அக்கிரமங்களுக்கு அநுகூலம் செய்வதுமான காரியங்களால் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள். ராஜீய விஷயங்களிலும் யார் பேரைச் சொன்னால் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தை வைத்துக்கொண்டு நமது பிராமணர்களில் பலர் இரவும் பகலும் உள்ளத்தில் மகாத்மாவை திட்டிக்கொண்டிருந்தாலும் அவர்கள் கொள்கைகளை அழிக்க பிரயத்தனப்பட்டா லும் வெளியில் அவர் பேரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுகிறார்கள்.
அதுபோலவே ஒத்துழையாமைத் தத்துவத்திற்கு யோக்கியதை இருக்கிற காலத்தில் மனதில் ஒத்துழைத்து பதவியும் பணமும் சம்பாதிக்க ஆசை இருந்தாலும் ஒத்துழையாமையின் பெயரைச் சொல்லிக் கொண்டுஎப்படி தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்களோஅதுபோலவே இப்பாதிரிமார்களும் மகாத்மாவின் கொள்கை உண்மையில் தங்கள் உத்தேசத்திற்கு விரோதமாயிருந்தாலும் மகாத்மா பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியத்திற்கு ஆக்கம் தேடுவதும் சுயராஜ்யக் கட்சியில் உள்ள புரட்டுகளும் பித்தலாட்டங்களும் அதை நடத்துவோரின் நாணயக் குறைவுகளும் தங்களுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தாலும் இக்கட்சிக்கு யோக்கியதை ஏற்பட்டால் தங்கள் காரியங்களை தாராளமாய் நடத்தலாம் என்றும்இக்கட்சியின் பலனால் தங்கள் நாட்டுக்கும் தங்கள் கவர்மெண்ட்டுக்கும் நிம்மதி ஏற்பட்டு தாராளமாய் தங்கள் காரியம் நடந்தேறுமென்பதையும் மனதில் வைத்துக் கெண்டு அக்கட்சியையும் கட்சியாளர்களையும் பாராட்டுவதும் அநுபோகத்தில் பார்த்து வருகிறோம்.
அப்படிக்கில்லாமல் இருந்தால் அஹிம்சைசத்தியம் முதலியது கொண்ட ஒத்துழையாமையைப் பற்றி குற்றம் சொல்லி இந்தியர்களுக்கு புத்தியில்லை என்று சொன்ன பாதிரிகள் பொய்யும் புரட்டும் மோசமும் கொண்ட சுயராஜ்யக் கட்சி ஏற் பட்ட பிறகு இப்போதுதான் இந்தியர்களுக்கு புத்தி வந்திருக்கிறது என்று சொல்லுவார்களாஆதரிப்பார்களாஎன்பதை நுட்பமாய்க் கவனிப்பவர்களுக்குத் தெரியாமற் போகாது. இந்தியர்களுக்கு சுவாமியார்குருசன் யாசிதுறவி என்கிற பதங்கள் மிகுதியும் மரியாதை செய்யத் தக்கதாகி விட்டதால்நம்மை ஏய்க்க வேண்டியவர்கள் இந்த வேஷத்தைப் போட்டுக்கொண்டு நம்மை ஏய்த்துத் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளுகின்றார்கள். அப்படி இல்லாமலிருக்கும்பட்சத்தில் நம்மை ஏமாற்றி நம்மை இழிவுபடுத்தி நமது இரத்தத்தை உறிஞ்ச வந்த பாதிரிமார்களுக்கும்சங்கராச்சாரியார்களுக்கும்லோக குருக்களுக்கும்மடாதிபதிகளுக்கும்மகந்துகளுக்கும் நாம் இவ்வளவு குருட்டு பக்தி வைப்போமா?
(குடியரசு 07.03.1926)
பாதிரிகளும் இந்து மதக் குருக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி அவர்களப் பெரியார் இனம் காட்டியுள்ளார். 1926லேயே அவர்கள பற்றி நன்கு அறிந்திருந்த பெரியார் பின்னர் கிறிஸ்தவர்களுக்கு நற்சான்று அளித்ததில் எந்தப் பகுத்தறிவும் இல்லை.
மேலும் கிறிஸ்தவ மார்க்கத்தில் ஒரு கடவுள் கொள்கை உண்டு என்று கூறிய பெரியார் அவர்கள் அவ்வாறு இல்லை என்பதை இன்னொரு சமயத்தில் மாற்றிக் கூறுவ தையும் காண்கிறோம். இதுபோல்தான் மற்ற கிறிஸ்துஇஸ்லாம் (முகமது) முதலிய மதங்களுமாகும்.
கிறிஸ்துவ மதத் தலைவர் ஏசு கிறிஸ்து என்பவர் 2000 - ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல்பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம் (தேவ குமாரனாம்) ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம். செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம். பல அற்புதங்களைச் செய்தாராம். வியாதிகளைப் பார்வையால் சவுகரியப்படுத்தினாராம். ஒரு ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான பேர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றினாராம். குருடர்களுக்கு கண்ணைக் கொடுத்தாராம். இப்படி பல காரியங்கள் செய்தாராம். இவற்றையெல்லாம் நம்பினால்தான் கிருஸ்தவ மதம் இருக்க முடியும். அறிவைக் கொண்டு பார்த்தால் தேவனுக்குகடவுளுக்குக் குமாரன் எதற்குகடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆன பிறகு அப்போது (2000 வருடங்க ளுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார்அதற்கு முந்தின காலத்தில் ஏன் உண்டாக்கவில்லைஅப்போதெல்லாம் செத்தவர்கள் இல்லையாகுருடர்கள் இல்லையாபசித்தவர்கள் இல்லையா?அந்த (கி.பி. 1 ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்ததுகடவுள் செய்ய வேண்டியதை சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லைஇன்று ஏன் அவர் வரவில்லைஇப்போது கிறிஸ்துவை ஏற்காதவர்கள்நம்பாதவர்கள்வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்தேவகுமாரனுக்கு இவ்வளவுதான் சக்தியா?இதுபோலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது?
உண்மை இதழில்தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். பெரியார் களஞ்சியம் - தொகுதி: 2 பக்கம்:57-62 14-06-1971
குருடர் பார்க்கிறார்செவிடர் கேட்கிறார்
என்றெல்லாம் பாமர மக்கள ஏமாற்றி ஆசை வார்த்தை காட்டி திருச் சபைகள் மத மாற்றம் செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். மேலும் இயேசுமேரி ஆகியோரின் சிலைகள அவர்கள் வழிபடுவதையும் நாம் கண்டு வருகிறோம். எனவே பெரியாரின் இந்த விமர்சனங்கள் சரியானதுதான்.
ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் ஒரே கடவுள் கொள்கை உண்டுஉருவச் சிலை இல்லை. சாதி இல்லை என்றெல்லாம் பெரியார் கூறியது பகுத்தறிவுப் பூர்வமானதாக தெரியவில்லை. இதுபோல் முரண்பட்டு பெரியார் பேசியவை இன்னும் உண்டு இன்ஷா அல்லாஹ்.
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 15
பெரியார் அவர்கள் திருக்குறளைப் பற்றிக் கூறியுள்ள கருத்துக்களை நாம் பார்க்கும்போதுஅவர் தீவிரமான பிராமண எதிர்ப்பு என்ற கண்ணோட்டத்துடன் மட்டும் அணுகியுள்ளார். பகுத்தறிவுக்கு ஏற்றதா என்ற அடிப்படையில் அனைத்தையும் அவர் அணுகவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். பெரியாரின் பல் வேறு கொள்கைக்கு நேர் எதிராக திருக்குறள் அமைந்திருந்தும்அவர் எப்படியெல்லாம் அதற்கு வக்காலத்து வாங்குகிறார் என்பதைக் காணுங்கள்!
குறளிலும் இன்றைய நிலைக்குப் புறம்பாக கருத்துக்கள் சில இருக்கலாம். அவற்றை மாற்றிவிட வேண்டியதுதான். அத்தகையை மாற்றத்துக்கு இடம் தருவது தான் குறள். குறளை முஸ்லிம்கள்கிறிஸ்தவர்கள் உட்பட யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது எனலாம். காய்கனிகள்தானியங்கள் இவை அபரிமிதமாகக் கிடைக்குமானால் மாமிசம் திண்ண வேண்டிய அவசியம்தான் என்ன இருக்கிறது.
விடுதலை 1.6.1950ல் பெரியார்
இவ்விமர்சனத்தின் துவக்கத்திலேயே பெரியார் செய்துகொள்ளும் சமரசம் தெளிவாகத் தெரிகிறது. குறளில் இன்றைய நிலைக்குப் புறம்பாக சில கருத்துக்கள் இருக்கலாம் என்று மென்மைப்படுதியும்உறுதிப்படுத்தும் வகையிலும் கூறுகிறார். இருக்கலாம்என்று கூறாமல் இருக்கிறதுஎன்று கூறுவதுதான் நேர்மையான விமர்சனமாகும். விமர்சித்தது போலவும் இருக்க வேண்டும். விமர்சிக்காதது போலவும் இருக்க வேண்டும் என்று இருதரப்பினரையும் பேலன்ஸ்செய்வதற்காகவே இருக்கலாம்என்ற பிரயோகம்.
மேலும் பெரியார் கூறும் அடிப்படைக் கொள்கைகளையே தகர்க்கும் அளவுக்கு பாரதூரமான கருத்துக்கள் திருக்குறளில் இருப்பது பெரியாருக்கு நன்றாகத் தெரியும். (இது பின்னர் எடுத்துக் காட்டப்படும்) மற்ற இதிகாசங்களையும்புராணகளையும் பெரியார் எதிர்த்ததுபோல் திருக்குறளையும் அவர் எதிர்த்திருக்க வேண்டும். திருவள்ளுவர் படத்திறப்பு விழா என்பதால் தான் அவர் இவ்வாறு சமரசம் செய்கிறார். திருக்குறளில் உள்ள அத்தகைய கருத்துக்களை மாற்றிவிட வேண்டியதுதான். அதற்கு திருக்குறள் இடம் தருகிறது எனவும் சப்பைக் காட்டுகிறார்.
பெரியார் கூறுவது உண்மையானால் அத்தகையை மாற்றத்துக்கு திருக்குறளே இடம் தந்திருக்கும்போது மாற்றப்பட்டதாக திருக்குறளை அவர் வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது அவரது பக்தர்களாவது அத்தகைய குறள்களை நீக்கி விட்டு அல்லது மாற்றிவிட்டு வெளியிட்டிருக்க வேண்டும். வீரமணியோகுறலோவியம் எழுதிய கலைஞரோ எந்தக் குறளையும் நீக்கவும் இல்லைமாற்றவும் இல்லை என்பதைக் காண்கிறோம். மேலும் ஒரு மனிதர் எதை எழுதினாரோ அதுதான் அவரது கருத்தாகும். அவர் எழுதாத ஒன்றை அல்லது அவர் எழுதியதற்கு மாற்றமான ஒன்றை அவர் பெயரால் வெளியிடுவது அயோக்கியத்தனமே தவிர நாணயமான செயல் அல்ல.
பிள்ளையாரை கும்பிடுமாறு பெரியார் போதித்தார் என்று பெரியார் பெயரால் ஒருவர் எழுதினால் அவரைப்பற்றி நாம் எந்த முடிவுக்கு வருவோம். அதே முடிவுக்குத்தான் பெரியாரின் அந்தக் கருத்திலும் நாம் முடிவு செய்ய வேண்டும்.
வள்ளுவர் எழுதியதை மாற்றி விட்டால் அது திருக்குறளாகவோவள்ளுவர் எழுதியதாவோ ஆகாது என்பதுதான் சரியான பகுத்தறிவு.. ஆனால் பெரியார் இதற்கு மாற்றமாகப் பேசுகிறார்.
திருக்குறளில் உள்ள தவறான ஒரு கருத்தை அவரே எடுத்தும் காட்டுகிறார். மாமிசம் சாப்பிடுவது மறுக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தைக் கூறிய பெரியார் அதை மாற்றியமைக்குமாறு கூறாமல் அதை நியாயப்படுத்துவது எந்தவகை பகுத்தறிவு?
காய்கனிகள்தானியங்கள் கிடைக்குமானால் மாமிசம் திண்ணவேண்டிய அவசியம்தான் என்ன என்று கூறி பகுத்தறிவுக்கு எதிராகவே பேசி நியாயப்படுத்துகிறார்.
தானியம் அபரிமிதமாக கிடைத்தால் மாமிசம் ஏன் என்று வள்ளுவர் கூறவில்லை. தானியம் அதிகமாகக் கிடைத்தாலும் மாமிசம் கூடாது என்றுதான் வள்ளுவர் கூறியிருக்கிறார்.
கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி எல்லா உயிரும் தொழும்.
என்றுதான் வள்ளுவர் கூறுகிறார். மாமிசம் சாப்பிடுவதால் உயிர்வதை நடக்கிறது. அதைத் தவிர்த்தால் எல்லா உயிரும் மனிதனைக் கை கூப்பி வணங்கும் என்பதுதான் வள்ளுவரின் வாக்கு.
தானியம் கிடைக்கிறதா இல்லையா என்பது பற்றி வள்ளுவர் பேசவில்லை. உயிரைக் கொல்லக் கூடாது என்பதற்காகவே புலாலை மறுக்கச் சொல்கிறார். இந்த உண்மையைத் தெரிந்து கொண்டே பெரியார் அவர்கள் அறிவுக்குப் பொருந்தாத வகையில் நியாயப்படுத்துகிறார்.
அவரது வாதத்தில் இன்னொரு அபத்தமும் உள்ளது.
காய்கனிகள்தானியங்கள் அபரிமிதமாகக் கிடைத்தால் மாமிசம் ஏன் என்று கேட்பது அபத்தமான வாதமாகும். காய் கனிகள் அபரிமிதமாகக் கிடைத்தாலும் மாமிசத்திலிருந்து கிடைக்கும் சில சத்துக்கள் காய்கனிகளில் கிடைக்காது என்பதால் மாமிசம் திண்ணும் அவசியம் இருக்கிறது. காய்கனியின் ருசியைவிட மாமிசத்தின் ருசி ஒருவருக்கு பிடிக்கும் என்றால் இதன் காரணமாக அவர் மாமிசம் சாப்பிடும் அவசியம் உள்ளது. அனைவரும் தானியத்தின்பால் சென்றுவிட்டால் அதன் விலை தாறுமாறாக ஏறிவிடும். அதைத் தவிர்ப்பதற்காக பல வித உணவுகளை உண்ண வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆடுமாடுகோழிகள் வளர்த்து அதன் மூலமே வருவாய் ஈட்டும் எண்ணற்ற மக்கள் வயிறு வளர்ப்பதற்காக மற்றவர்கள் மாமிசம் சாப்பிடும் அவசியம் உள்ளது.
இப்படி பகுத்தறிவுப்பூர்வமாகக் சிந்திக்க வேண்டிய பல விஷயங்களை அவர் சிந்திக்கவில்லை. ஆழமான சிந்தனையோஆய்வோ அவரிடம் இல்லை என்பதை இதிலிருந்தும் நாம் அறிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து அவர் கூறுவதைப் பாருங்கள்.
முஹம்மது நபியவர்களால் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களை குறளில் அப்படியே காணலாம். முஸ்லிம்களுக்கு எதிராக அதில் ஒன்றுமே காணமுடியாது. அது மனு தர்மத்துக்கு உண்மையான விரோதி நூல் என்று திடமாகவே கொள்ளலாம்.
விடுதலை 1.6.1950ல் பெரியார்
முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்றுமே இல்லை என்று கூறி தனக்குத்தானே முரண்படுகிறார். மாமிசம் சாப்பிடுவது பற்றி வள்ளுவர் கூறியது முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லையாமேலே நாம் எடுத்துக்காட்டியதும்இங்கே எடுத்துக் காட்டியதுமான இரண்டு மேற்கோள்களும் அடுத்தடுத்து ஒரே பாராவாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மாமிசம் பற்றி வள்ளுவர் இஸ்லாத்துக்கு எதிராகக் கூறியதை எடுத்துக்காட்டி விட்டு அடுத்த விநாடி இஸ்லாத்துக்கு எதிராக ஒன்றுமே இல்லை எனக் கூறுகிறார்.
இன்னும் ஏராளமான விஷயங்கள் இஸ்லாத்துக்கு எதிராக குறளில் உள்ளன. தலைப்பிலிருந்து விலகிவிடக்கூடாது என்பதற்காக அதை இங்கே தவிர்க்கிறோம்.
ஜைனர்நம்மவர் என்று கூறி அவரை மொட்டைத் தலையராகக் காட்டுகிறார்கள். சைவர்கள்அவரைக் தம்மவர் என்று கூறி ஜடா முடியுடன்விபூதிப்பட்டையுடன் காட்டுகிறார்கள்.
விடுதலை 1.6.1950ல் பெரியார்
வள்ளுவரின் உருவம் இதுதான் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவர்கள் தமது இஷ்டத்துக்கு ஏற்ப வளைத்துக்கொண்டார்கள் என்று பெரியாரே இங்கே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.
இந்த இழிதன்மையைமானமற்ற தன்மையைகவலையற்ற தன்மையை உங்களிடம் முறையிட்டுக்கொள்ள வேண்டித் தான் வள்ளுவர் படத்தைத் திறந்துவைக்க ஒப்புக்கொண்டேன்.
விடுதலை 1.6.1950ல் பெரியார்
வள்ளுவர் உருவம் இதுதான் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிந்து வைத்திருந்த பெரியார் பகுத்தறிவாளர் என்றால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்?
இதுதான் வள்ளுவரின் உருவம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்க வேண்டும். இந்த வடிவம்தான் வள்ளுவரின் வடிவம் என்பதற்கு ஆதாரம் இல்லாததால் இதை வள்ளுவரின் உருவம் என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்க வேண்டு மல்லவா?
தெய்வங்கள் என்று கற்பனை வடிவம் தந்தவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடுஎன்று அவர் கேட்டு படத்திறப்பை மறுத்திருக்க வேண்டுமல்லவா?
வள்ளுவர் அல்லாத கற்பனையான வடிவத்தை வள்ளுவர் என்று நம்ப வைப்பதற்கும்கடவுள் என்று கற்சிலைகளை நம்ப வைப்பதற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடுகூர்மையான ஆய்வுக் கண் உடைய ஒருவரால் இத்தகைய மூடநம்பிக்கையை ஆதரிக்க முடியுமா?
இன்னும்கூட போலி பகுத்தறிவுவாதிளின் நாளேடுகளிலும்வார ஏடுகளிலும் வரையப்படும் வடிவம்தான் வள்ளுவர் உருவம் என்று தக்க சான்று இல்லாத ஒன்றை நம்புவதும் பரப்புவதும் வடிகட்டிய மடமை தவிர வேறில்லை என்பதைப் போலி பகுத்தறிவாளர்கள் உணரட்டும்.
உண்மைத் திராவிடன் தீட்டிய திருக்குறள் குப்பையிலே கிடக்கதிராவிடத் துரோகி தீட்டிய ராமாயணமும்ஆசிரியர் தீட்டிய கீதையும் அதிகாரத்தில் இருந்து வருகின்றன.
விடுதலை 1.6.1950ல் பெரியார்
பெரியார் குறளை நியாயப்படுத்தியது பகுத்தறிவின் அடிப்படையில் அல்ல. பகுத்தறிவுக்கு எதிரான இன உணர்வின் அடிப்படையில்தான் என்பதை அவரே ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்துள்ளார்.
திருக்குறள் தொடர்பாக பெரியார் கூறிய மூடக் கருத்துக்கள் இன்னும் வரும். இன்ஷா அல்லாஹ்...
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 16
திருக்குறள் பற்றி பெரியார் பெருமளவுக்கு முரண்பட்டு தனது கருத்துக்களைக் கூறியிருக்கிறார். பகுத்தறிவுக்கு பொருந்தாத காரணங்களைக் கூறி திருக்குறளை நியாயப்படுத்தி இருக்கிறார். அவற்றை இப்போது காண்போம்.
குறள் - ஹிந்து மதக் கண்டனப் புத்தகம் என்பதையும்அது சர்வமதத்திலுமுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும். விரும்பிப் படித்து அதன்படி நடக்க வேண்டும். ஒவ்வொருவனும் தான் ஹிந்துவல்ல திராவிடனே - திருக்குறளானே என்று கூறிக் கொள்வதில் பெருமையடைய வேண்டும். விபூதியையும் நாமத்தையும் விட்டொழிக்க வேண்டும். புராணங்களைப் படிக்கக் கூடாது. என்ன மதம் என்றால் குறள் மதம்மனித தர்ம
மதம் என்று சொல்லப் பழக வேண்டும். யார் எதைச் சொல்லிய போதிலும்எது எத்தன்மையுடையதாயிருப்பினும் ஒவ்வொருவரும் நன்கு சிந்தித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்து பார்த்து பிறகே எது உண்மை என்பதை முடிவு செய்ய வேண்டும்.
விடுதலை 10-8-2008
மேலும் பெரியார் கூறுவதைக் கேளுங்கள்:
இனி முஸ்லிம்கள் தங்களின் பாதுகாப்புக்காக ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து கொள்வதுதான் நல்லது. இன்றுள்ள இம் மாகாண முஸ்லிம் தலைவர்கள் சொற்ப சலுகைகளுக்காகவும் பயந்துக்காகவும் சுயநலத் துக்காகவும் காங்கிரஸ்காரர்களின் காலடியில் இருந்து கொண்டு வருகின்றனர். தமக்குக் கிடைக்கும் சலுகைக்காக முஸ்லிம் இனத்தையே காட்டிக் கொடுக்கத் துணிந்த அவர்களைக் கோழைகளாக்கிவிட்டனர். இதை முஸ்லிம் பாமர மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். காங்கிரஸுடன் சேர்ந்து கொள்வதாயிருந்தால் தாராளமாய்ச் சேர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் வேண்டாமென்று கூறவில்லை. 100க்கு 90 பேராயுள்ள எங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களா 100-க்கு 7 பேரான உங்களுக்கு வளைந்து கொடுத்து விடப்போகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இன்னும் நாங்கள் உங்களை எங்கள் உடன் பிறந்தவர்களாகத்தான் கருதி வருகிறோம். நீங்களும் குறள் மதக்காரர்கள் என்றே கருதுகிறோம். நாங்களும் உங்களைப் போல் ஹிந்து மதத்தை வெறுக்கிறோம் என்பதோடு குறளை ஒருபோதும் வெறுப்பவர்கள் அல்ல. ஒன்றுமே முடியாது போனால் உங்களைப் போன்று குல்லாயாவது போட்டுக் கொள்ளலாம் என்றுதான் நாங்கள் கருதியிருக்கிறோம். எனவே எங்கள் இனத்தவர் நீங்கள் என்பதற்காக உங்களை இந்த அளவுக்கு அளவளாவும் ஆதரிக்கும் எங்கள் கழகத்தில் வேண்டுமானாலும் சேருங்கள். அல்லது வட நாட்டானால் பல கோடி செலவிட்டு பத்திரிக்கைகளை கொண்டு தீவிரப் பிரச்சாரம் செய்து ஹிந்துக்களை தூண்டி விட்டுஉங்களைக் கொள்ளையடிக்க நினைக்கும் பார்ப்பனர்களோடாவது சேர்ந்து கொள்ளுங்கள்.
விடுதலை 10-8-2008
முஸ்லிம்களுடைய குறைவான எண்ணிக்கையுடைய கிறிஸ்தவர்களுக்கும் சொல்கிறேன். கிறிஸ்தவர்களாகி விட்டதாலேயே நீங்கள் உயர்ந்தவர்களென்று கருதிக் கொண்டு விடாதீர்கள். நீங்களும் குறள் மதக்காரர்கள். பைபிளுக்கு விரோதமாக குறளில் ஒன்றும் கிடையாது. பார்ப்பனர்களின் தயவுக்காக வேண்டி சுயமரியாதை இழந்துவிடாதீர்கள். உங்கள் நன்மையைப் பாதுகாத்துக் கொள்வதாயிருந்தால்ஜாதி சமய பேதமின்றிப் பாடுபடும் திராவிடர் கழகத்தில் சேருங்கள். திராவிடர் கழகம் திருவள்ளுவர் குறளைப் பின்பற்றி நடந்து வரும் கழகம். இந்நாட்டில் மனுதர்மம் ஒழிந்து மனிதத் தன்மை ஏற்படப் பாடுபட்டு வரும் கழகம். அதற்குக் குறள்தான் வழிகாட்டி. எந்த முன்னேற்றத்திற்கும் விரோதமில்லாமல் பணியாற்றி வரும் கழகம் என்பதை உங்களால் உணர்ந்துஆன எல்லா உதவியையும் அதற்களித்து ஆதரியுங்கள்
விடுதலை 10-8-2008
தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும்நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர் பார்ப்பனர். எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும். நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச் சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும் உலகத்துக்குங் கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை மீண்டும் அடைய முடியும். விடுதலை 22-3-1960
இதன் மூலம் பெரியார் பல விஷயங்களைக் கூறுகிறார். திருக்குறள் இந்து மதத்தைக் கண்டிக்கும் நூல்.
எல்லா மதங்களிலும் கூறப்பட்ட நல்ல விஷயங்களின் தொகுப்பாக திருக்குறள் அமைந்துள்ளது.
இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்களும் திருக்குறளை ஏற்க வேண்டும்.
என்றெல்லாம் பல விதங்களில் திருக்குறளைப் புகழ்ந்து பேசிய பெரியார் தனது மேற்கண்ட கூற்றுக்கு தானே எவ்வாறு முரண்படுகிறார் என்று பாருங்கள்!
அவரது குறளில் இந்திரன்பிரம்மாவிஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறு பிறப்புசுவர்க்கம்நரகம்மேலோகம்,பிதுர்தேவர்கள் முதலிய ஆரிய மத சம்பிரதாயங்களையும்மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப் பார்க்கக் காணலாம்.
20-01-1929 குடியரசு இதழில் பெரியார்
திருக்குறள் இந்துமதக் கண்டன நூல் என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு இன்னொரு பக்கம் இந்து மதத்தில் கூறப்பட்ட அனைத்து தவறான கொள்கைகளும் திருக்குறளில் உண்டு என்கிறார்.. கீதை ராமாயனம் ஆகிய நூல்களை என்ன காரணம் கூறி பெரியார் ஒழிக்கச் சொன்னாரோ அந்தக் காரணங்கள் அனைத்தும் திருக்குறளிலும் உண்டு என்று மேலே ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறார். திருக்குறளில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன என்பதால் அதை ஆதரித்தார் என்று கூறினால் அதுவும் சரியான கருத்தாக இருக்க முடியாது. ஏனெனில் எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை திருக்குறள் உள்ளடக்கி உள்ளது என்று அவரே கூறியதை மேலே எடுத்துக் காட்டியுள்ளோம். எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்கள் உள்ளன என்று பெரியார் இதன் மூலம் ஒப்புக் கொள்கிறார்.
வள்ளுவர் குறளையும்அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறைசொல்லும்போது பலர் என்னிடம்எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்என்று கேட்பார்கள். நான்,இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..என்று பதில் கூறுவேன்.-
விடுதலை 01-06-1950ல் பெரியார்
திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.
தமிழும் தமிழரும் ஏன்ற நூலில் உ.வே.ரா
தற்காலம் நமது தமிழ்நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூல்களிலெல்லாம் திருவள்ளூவனால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகின்றதானாலும் அதையும் பார்ப்பனர்களோ சைவர்களோ வைணவர்களோ மற்றும் எந்தப் பிரிவினர்களோ அடியோடு காரியத்தில் ஒப்புக் கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும். என்றாலும் திருவள்ளூவரைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்து விடுவார்கள். பார்ப்பனர்களென்றாலோ திருவள்ளுவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்து விடுவார்கள். இவ்வளவு இருந்தாலும்திருவள்ளுவர் யார்என்ன ஜாதிஎன்ன மதம்அவரது கொள்கை என்ன என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. சைவர்கள் திருவள்ளுவரைத் தம் சமயத் தலைவர் என்று பாத்தியம் கொண்டாடிக் கொள்கிறார்கள். வைணவர்களில் சிலர் அவரை வைணவர் என்று கொண்டாடுகின்றனர். சமணர்கள் அவரைத் தம் சமயத்தவர் என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒரு சாராராகிய பறையர்கள் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரைத் தம் இனத்தவர் என்று சுதந்திரம் பாராட்டுகிறார்கள். அவரைப் பற்றிக் கிடைத்திருக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது. இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டு விட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோஅதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய்க் காணப்படவில்லை. அவரது குறளில் இந்திரன்பிரம்மாவிஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்புசெர்க்கம்,நரகம்மேல்லோகம்பிதுர்தேவர்கள் முதலிய ஆரியமத சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கையையும் கொண்ட விஷயங்களையும் பார்க்கலாம். எனவேஇவற்றைக் கொண்டு திருவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப் போமானால்அவர் தற்காலப் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக் கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள்புராணங்கள் முதலியவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டுபார்ப்பனீயம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும்தாங்கள் பெரிய கல்வி கேள்வி ஆராய்ச்சி முதயவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தங்களை வெளியில் சமரச சன்மார்க்கச் சமயத்தவர் என்றும்உள்ளூக்குள் சைவ சமயம்தான் தன்னுடைய மதம் என்றும் மற்றும் இதுபோல் உள் ஒன்றும் புறமொன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்துகொண்டு தங்களை ஒரு பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளூம் இப்போதைய சீர்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகிறார். இவை எப்படி இருந்தாலும் திருவள்ளுவரின் பெண்ணுரிமைத் தன்மையைப் பற்றிக் கவனித்தால் பெண்களுக்கு அவர் கூறிய குறளிலுள்ள நீதிகள் ஒருபுறம் இருக்கதிருவள்ளுவன் மனைவியாகிய வாசுகியம்மையாரின் சரித்திரத்தைக் கேட்போர் மனம் பதறாமலிருக்க முடியாது. அதாவது வாசுகி அம்மையாரைத் திருவள்ளுவர் தம் மனைவியாக ஏற்றுக் கொள்ளும் முன் ஆற்று மணலைக் கொடுத்து சாதம் சமைக்கச் சொன்னாராம். அதாவது வாசுகி கற்புள்ளவரா அல்லவா என்று பரிட்சிக்க. அவ்வம்மையார் அந்தப்படியே மணலைச் சாதமாகச் சமைத்து கொடுத்து திருவள்ளுவருக்குத் தமது கற்பைக் காட்டினாராம். அம்மையார் கிணற்றில் நீர் இறைக்கும்போது நாயனார் அம்மையாரைக் கூப்பிடஅம்மையார் கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்த போது கயிறு கிணற்றில் விழாமல் அப்படியே தொங்கிக் கொண்டிருந்ததாம். திருவள்ளுவர் ஒரு நாள் பகலில் நூல் நூற்கும்போது நூற்கதிர் கீழே விழஉடனே அம்மையாரைக் கூப்பிட்டு, 'விளக்கேற்றிக் கொண்டுவாநூற்கதிரைத் தேடவேண்டும் என்று சொல்ல அம்மையார் 'பகல் நேரத்தில் விளக்கு எதற்கு என்று கேட்காமல் - கேட்டால் பங்கம் வந்து விடுமெனக் கருதி உடனே விளக்குப் பற்றவைத்துக்கொண்டு வந்து கொடுத்தார்களாம். ஒரு நாள் நாயனார் பழைய சாதம் சாப்பிடும்போது 'சாதம் சுடுகின்றது என்று சொன்னவுடன் அம்மையார் 'பழைய சாதம் சுடுமா என்று கூடக் கேட்காமல் - கேட்டால் பதிவிரத தன்மை கெட்டுப்போகுமோ என்று கருதி உடனே விசிறி எடுத்துக்கொண்டு வந்து வீசி ஆற்றினாராம். திருவள்ளுவர் அம்மையாரைத் தினமும் ஒரு டம்ளரில் தண்ணீரும் ஒரு ஊசியும் தனியாகக் கொண்டு வந்து வைத்துவிட்டுசாதம் பரிமாறும்படி கட்டளையிட்டிருந்தாராம். அவ்வம்மையாரும் 'இது எதற்காக 'என்று கேட்காமல்கேட்டால் பதிவிரதாதன்மை கெட்டுப்போகுமே என்று கருதிக் கொண்டு தினமும் அந்தப்படியே செய்து வந்தாராம். ஆனால் அம்மையாரின் மரணத் தருவாயில் அம்மையார் உயிர் போகாமல் ஊசலாடிக் கொண்டிருக்கஅது ஏன் என்று திருவள்ளுவர் அம்மையாரைக் கேட்கும்போதுஅம்மையார் பயந்து கொண்டு 'தினமும் பாத்திரத்தில் தண்ணீரும் ஊசியும் வைக்கச் சொன்னீர்களே அது எதற்காக என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை முடிவுபெறாமல் இருப்பதால் உயிர் போகாமல் ஊசலாடி மரணாவஸ்தைப்படுகிறேன்என்று சொன்னாராம். பிறகு திருவள்ளுவர் தயவுசெய்து பெரிய மனது வைத்து அதன் காரணத்தைஅதாவது சாப்பிடும்போது அன்னம் கீழே விழுந்தால் அந்த ஊசியில் குத்தி எடுத்து அந்த டம்ளர் தண்ணீரில் கழுவுவதற்கு என்று சொன்னாராம். அதன் பிறகுதான் அம்மையாரின் உயிர் நீங்கிற்றாம். இது திருவள்ளுவர் புராணத்தில் உள்ள அவரது மனைவியின் சரித்திரம். எனவே இது இடைச் செருகலாகவோகற்பனைக் கதையாகவோ இல்லாமல் உண்மைக் கதையாயிருந்தால் திருவள்ளுவரின் பெண்ணுரிமை என்ன என்பதையும் கற்பனையாக இருந்தால் கற்பனையல்லாத புராணம் எது ?அதற்கு என்ன பரிட்சைஎன்பதையும் அறிஞர்கள் வெளிப்படுத்துவார்களாக.
- ஜனவரி 20, 1929 குடியரசு இதழில் பெரியார் சித்திரபுத்திரன் என்னும் புனை பெயரில் ஏழுதிய கட்டுரை.
திருக்குறள் எவ்வளவு மூடத்தனம் நிறைந்தது என்று பின் வரும் கற்பனை உரையாடல் மூலம் பெரியார் தெளிவுபடுத்துகிறார்.
நா : தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை என்கின்ற பொய்யாமொழிப் புலவரின் வேதவாக்கைக் கேட்டிருக்கிறீர்களா?
ஆ.பெண்: ஆம் கேட்டிருக்கின்றேன்.
நா: கற்புடைய மங்கையர்கள் மழை பெய்யென்றால் பெய்யும் என்கின்ற வேத வாக்கையும் கேட்டிருக்கின்றீர்களா?
ஆ.பெண்: ஆம் கேட்டிருக்கின்றேன்.
நா: சரி... ஊரில் மழை பெய்து மூன்று வருஷமாச்சுதுகுடிக்கத் தண்ணீர் கிடையாது. தயவு செய்து ஒரு இரண்டு உழவு (2 அங்குலம்) மழை பெய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது,
சில விஷயங்களை ஒருவர் சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருந்து பின்னர் தமது கருத்தை மாற்றிக் கொண்டால் அது முரண்பாடு ஆகாது என்று சிலர் சப்பைக் கட்டு கட்டுவார்கள். இது எப்போது சரியான கருத்தாக இருக்கும்?திருக்குறளில் உள்ள தவறுகளைக் கவனிக்காமல் இருந்துவிட்டு பின்னர் தவறை அறிந்து மாற்றிக் கொண்டால் தான் அது சரியானதாகும். திருக்குறளில் உள்ள தவறுகளை விமர்சனம் செய்து விட்டு பின்னர் திருக்குறளை ஆதரித்தால் அப்போது இந்தக் கருத்து சரியாகாது. திருக்குறளில் உள்ள தவறுகளை அறிந்த பின்னர் சந்தர்ப்பவாதத்துக்காகவோ கொள்கையில் சமரசம் செய்து கொள்வதற்காகவோ முரண்படுவதாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும். திருக்குறளின் குறைகளை விமர்சித்து விட்டு பின்னர் அவர் ஆதரித்திருப்பதை மேலே நாம் எடுத்துக் காட்டியதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
திருக்குறளைப் பெரியார் புகழ்ந்ததை மட்டும் தான் வீரமணி வகையராக்கள் வெளியிட்டு திருக்குறளை தூக்கிப் பிடிக்கிறார்களே தவிர பகுத்தறிவுக்கு எதிரான திருக்குறளை விமர்சனம் செய்த பெரியாரின் கூற்றுக்களை இருட்டடிப்பு செய்து தாங்கள் பகுத்தறிவை வந்த விலைக்கு விற்று விட்டவர்கள் என்பதை சொல்லாமல் சொல்லிவருகின்றனர். இன்னும் வரும். இன்ஷா அல்லாஹ்
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 17
திருக்குறளைப் பற்றி பெரியார் செய்துள்ள முன்னுக்குப் பின் முரணான விமர்சனங்களைக் காணும்போது பெரியார் அவர்களிடம் தெளிவான பார்வை இருக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. பகுத்தறிவுவாதிகள் என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்பவர்கள் எத்தகைய தெளிவு தம்மிடம் உள்ளதாக வாதிடுகிறார்களோ அந்தத் தெளிவு பெரியார் அவர்களிடம் காணப்படவில்லை என்பதைக் கடந்த சில இதழ்களின் மூலம் அறிந்து வருகிறோம்.
பெரியாரின் திருக்குறள் விளக்கம்
திருக்குறளை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டால் அதற்குப் பகுத்தறிவுச் சாயம் பூசி விளக்கம் அளிப்பதும்எதிர்க்கும் போது மௌட்டீகச் சாயம் பூசி எதிர்ப்பதும் பெரியாரின் நடைமுறை.
திருக்குறளின் முதல் குறளே கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
எழுத்துக்கள் அனைத்துக்கும் அகரம் (அ'னா என்ற எழுத்து) முதலாக அமைந்துள்ளது. அதுபோல் உலகத்துக்குக் கடவுள் என்பது முதன்மையாக அமைந்துள்ளதுஎன்பது இதன் நேரடிப் பொருள். இதை வாசிக்கும் தமிழறிவு பெற்ற ஒவ்வொருவரும் இப்படித்தான் இக்குறளைப் புரிந்து கொள்வார். திருக்குறளைப் பெரியார் ஆதரிக்கும் மனநிலையில் இருந்தபோது முதல் குறளே கடவுள் நம்பிக்கையில் துவங்குவது அவருக்குப் பேரிடியாக விழுகின்றது.
கடவுளே இல்லைஎன்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு கடவுள் உண்டு என்ற அடித்தளத்தில் நிறுவப்பட்ட திருக்குறளை எப்படி ஆதரிக்கிறீர்கள் என்று கேள்வி எழுமே என்று பெரியார் யோசிக்கிறார். யோசித்து இக்குறளுக்கு புதுமையான விளக்கத்தைக் கூறுகிறார். அவர் கூறும் விளக்கம் இதுதான்.
இதற்குப் பொருள் : எப்படி எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் அகரம் முதன்மையாக உள்ளதோ அதுபோல இந்த உலகத்திற்குக் கடவுள் முதன்மையாக உள்ளது என்று உரை எழுதியவர்கள் கற்பித்து உள்ளார்கள். விஞ்ஞானப்படி பார்த்தால் உலக உற்பத்திக்குக் கடவுள் ஒன்று அவசியம் இல்லை. அது இயற்கையாகவே நிகழக் கூடியது என்கிறார்கள். மற்றும் இந்த உலகமானதுசூரியனிலிருந்து சிதறி விழுந்த ஒரு தீப்பிழம்பானது குளிர்ச்சியடைந்து பூமியாயிற்று என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆகவே சூரியனே இந்தப் பூமி உண்டாவதற்கு ஆதாரமானவன். ஆதிகாலம் தொட்டு இருந்து வருபவன் என்பதோடல்லாமல் மேல்நாட்டினரும் சூரியனைத்தான் வணங்கி வந்திருக்கிறார்கள். ஆதலால் பகவன்என்பது சூரியனைத்தான் குறிக்கும்.
(விடுதலை 22.3.1960ல் பெரியார்)
பகுத்தறிவுத் தந்தை என்று மதிக்கப்படும் பெரியாரின் இந்த விளக்கத்தில் பகுத்தறிவுக்கும் உண்மைக்கும் முரணான எவ்வளவு கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன என்பதைப் பாருங்கள்.
வள்ளுவரின் வார்த்தைக்கு வள்ளுவரின் விளக்கமே ஏற்புடையதாகும். அதற்கு முரணாக ஒருவர் விளக்கம் அளித்தால் அவர் உண்மைக்கு மாறாகப் பேசுகிறார் என்பதே பொருள்.
உண்மைக்கு முரணாகப் பேசுவதும் பகுத்தறிவுக்கு எதிரானது தான்.
வள்ளுவர் இந்தக் குறளில் சூரியனைத்தான் குறிப்பிடுகிறார் என்று பெரியார் கூறுவதை அடுத்து வரும் எல்லாக் குறல்களுமே மறுத்து நிராகரிக்கின்றன. இரண்டாவது குறளில்கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாற் தொழார் எனின்.
அறிவே உருவான கடவுளின் பாதத்தைத் தொழாதவர் கல்வி கற்றதனால் என்ன பயன்?என்று வள்ளுவர் கூறுகிறார்.
கடவுளுக்குச் சிந்திக்கும் திறன் இருந்தால்தான் அறிவே உருவான கடவுள் எனக் கூற முடியும். சூரியனுக்குச் சிந்திக்கும் திறன் இல்லை என்பதுதான் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு. சர்வ சக்தி பெற்ற கடவுளைத்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறாரே தவிர சூரியனை அல்ல என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பு அற்றவனின் அடி சேர்ந்தவர்க்கு என்றும் துன்பம் இல்லை என்று வள்ளுவர் கூறுகிறார்.
விருப்பு வெறுப்பு உள்ளவன் என்பதும்விருப்பு வெறுப்பு அற்றவன் என்பதும் பகுத்தறிவுள்ளவர்களுக்குப் பயன்படுத்தப்படும் சொற்களாகும்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர் ஒழுக்கநெறி நின்றார் நீடு வாழ்வார்.
ஐந்து புலன்களில் இருந்தும் விடுபட்டவர் கடவுள். அதனால் அவர் தவறு செய்ய மாட்டார். அவரைப் பின்பற்றுவோர் நீண்ட நாள் வாழ்வார்கள் என்கிறார் வள்ளுவர். இதுவும் சூரியனைக் குறிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
கடவுள் என்பது சூரியனைக் குறிப்பிடவில்லை என்று வள்ளுவர் விளக்குகிறார்.
இன்னும் கடவுள் வாழ்த்தில் கூறப்படும் அனைத்துக் குறள்களும் பெரியாரின் மேற்கண்ட விளக்கத்தை அடியோடு நிராகரிக்கின்றன.
முதல் குறள் மட்டும்தான் மக்களுக்குத் தெரியும். மற்ற குறள்கள் தெரியாது என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி பெரியார் முதல் குறளுக்கு மட்டும் ஏற்கத் தகாத விளக்கம் கூறி மக்களைத் திசை திருப்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பெரியாரின் இந்த விளக்கத்தில் உண்மையும் இல்லை. நேர்மையும் இல்லை. தான் செய்து வந்த பிரச்சாரத்தின்படி திருவள்ளுவர் ஒரு காட்டுமிராண்டி என்றுதான் கூறியிருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற சப்பைக் கட்டுதல் கூடாது.
அடுத்து இன்னொரு அறியாமையும் பெரியாரின் விளக்கத்தில் உள்ளது. சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய தீப்பிழம்புதான் பூமி என்ற விஞ்ஞானத்தின் அடிப்படையில் வள்ளுவர் சூரியனைத்தான் கூறுகிறார்என்கிறார்.
இவர் கூறுகிற விஞ்ஞானம் அரதப் பழசு. பெரியார் காலத்திலேயே புறந்தள்ளப்பட்டது. பெருவெடிப்பின் மூலமே சூரியன் பூமி உள்ளிட்ட அனைத்தும் உண்டானது என்பதுதான் விஞ்ஞானம். உலகுக்கே சூரியன் முதலாவதாக இருந்ததில்லை என்ற விஞ்ஞானக் கருத்தைக்கூட அவர் அறியாமல்நிராகரிக்கப்பட்ட பழைய கருத்தை விஞ்ஞானம் எனக் கூறிதான் அறிவியலில் பூஜ்ஜியம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். இது இரண்டாவது அறியாமை.
பெரியாரின் காலத்துக்கு முன்னர் பெரியார் கூறிய இக்கருத்து சில விஞ்ஞானிகளால் கூறப்பட்டது. இதைச் சரியானது என்று வைத்துக் கொண்டாலும் பெரியாரின் இந்த விளக்கம் தவறானதாகும்.
ஏனெனில் எந்த ஒரு மனிதனும் தனது காலத்தில் உள்ள அறிவியலுக்கு ஏற்பத்தான் எதையும் பேச முடியும். தனது காலத்தில் கண்டுபிடிக்கப்படாததை எந்த மனிதனும் சுயமாகப் பேச முடியாது.
சூரியனிலிருந்துதான் பூமி தோன்றியதுஎன்ற கருத்து வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் மக்களால் அறியப்பட்டிருந்தால் தான் வள்ளுவர் இவ்வாறு கூறமுடியும். வள்ளுவரின் காலத்தில் பெரியார் சுட்டிக் காட்டும் விஞ்ஞான அறிவு இருக்கவில்லை. வள்ளுவருக்கும் இந்த அறிவு இருக்கவில்லை. அதனால்தான் சந்திர கிரகணத்தைப் பற்றிப் பேசும்போது திங்களைப் பாம்பு கொண்டற்றுஎன்று வள்ளு வர் கூறுகிறார்.
சந்திரனைப் பாம்பு விழுங்கி அதனால் சந்திர கிரகணம் ஏற்படுவதுபோலஎன்று வள்ளுவர் கூறியதிலிருந்து அவரது காலத்திலிருந்த அறிவு நமக்குத் தெரிகிறது.
சிவபெருமானின் கழுத்தில் உள்ள பாம்புசிவபெருமானின் தலையில் உள்ள சந்திரனை விழுங்குவதே சந்திர கிரகணம் என்று அந்தக் காலத்தில் ஒரே நம்பிக்கையாக இருந்தது. அதை அப்படியே எதிரொலிப்பவருக்கு சூரியனிலிருந்து தான் பூமிசந்திரன் அனைத்தும் தோன்றியது என்ற அறிவு (?) இருந்திருக்குமாவள்ளுவர் காலத்தில் இதுபோன்ற அறிவு இருந்தது என்று பெரியார் கூறுவது மற்றொரு அறியாமையாகும்.
உலகம் தோன்றுவதற்கு கடவுள் என்ற ஒன்று தேவையில்லை என்று விஞ்ஞானம் கூறுவதாக போகிற போக்கில் பெரியார் கூறுகிறார். பெருவெடிப்புக் கொள்கைக்குப் பின் உலகம் தோன்றுவதற்குக் கடவுள் தேவை என்ற கருத்துத் தான் விஞ்ஞானிகளின் கருத்து.
(இது உணர்வுஇதழில் ஏ.கே. அப்துர் ரஹ்மான் கட்டுரையில் தெளிவுபடுத்தப்பட்டது).
அடுத்ததாக,சூரியன்தான் முதலாவது என்ற அடிப்படையில் சூரியனை வணங்கலாம்என்கிறார்.
அறிவும் ஆற்றலும் மிக்க ஒரு
படைப்பாளன் இருக்கிறான் என்று நம்பி அவனை வழிபடுவதிலாவது பகுத்தறிவுக்கு இடமுள்ளது.
அறிவோசிந்தனையோ இல்லாத ஜடப்பொருளான சூரியனை வணங்குவது பகுத்தறிவுக்கு எதிரானது என்ற சாதாரண விஷயம்கூட பெரியாருக்குத் தெரியவில்லை.
இதுதான் பகுத்தறிவாஇதுதான் சுய மரியாதையா என்பதைப் பகுத்தறிவாளர்கள் சிந்திக்க வேண்டும்! தனது பொருத்தமில்லாத இந்த விளக்கத்தைதானே மறுக்கவும் செய்கிறார்.
ஆனால் எதற்கொடுத்தாலும் குறள்குறள் என்று சொன்னால் நாம் எப்படி முன்னேறுவதுதிருவள்ளுவர் 2000வருடத்துக்கு முன்னாலே தோன்றிய ஒரு சிறந்த அறிவாளி. அப்போது அவர் கருத் துக்குப்பட்டதை எடுத்துச் சொன்னார். அவர் சொன்னவை முக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது? 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னது இனி வரப்போகும் உலகத்துக்கு எவ்வாறு பகுத்தறிவுக்கு ஏற்றததாகும்.
(விடுதலை 02.02.1950ல் பெரியார்)
1960ல் அவர் கூறியதற்கு 1959ல் அவரே அட்வான்ஸாக பதிலளித்து விட்டார்.
பகுத்தறிவுக்குத் தொடர்பில்லாமல் பெரியார் உதிர்த்த இன்னும் பல தத்துவங்களைப் பார்த்துவிட்டு போலி பகுத்தறிவாளர்கள் பற்றிய விமர்சனத்தைத் தொடர்வோம் - இன்ஷா அல்லாஹ்...
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 18
போலி பகுத்தறிவுவாதிகளின் மற்றொரு மூட நம்பிக்கையானது உருவப்படத் திறப்புகளும்அதற்கான விழாக்களுமாகும்.
உருவப்படங்களும் சிலைகளும்
உலகத்தில் சீர்திருத்தக் கருத்துகளைக் கூறியவர்களை அல்லது சீர்திருத்தக் கருத்துக்களைக் கூறியதாகக் கருதப்பட்டவர்களை மதிக்கிறோம் என்ற பெயரில்தான் உருவப் படங்களும்சிலைகளும் உருவாக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக மககள் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர்கள் அவதாரங்கள் எனவும்தெய்வங்கள் எனவும் கருதப்படும் நிலை ஏற்பட்டது.
எந்த மதத்தவரும் தமது வழிகாட்டிகளை மதிப்பதைவிட நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் அதிகம் மதிக்கின்றார்கள். நபிகள் நாயகம் அளவுக்கு மதிக்கப்படும் தலைவர்கள் உலகில் இல்லை எனலாம். எவ்வளவுதான் நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் மதித்தாலும் அவர்களைக் கடவுள் என்று முஸ்லிம்கள் கருதுவதில்லை. நபிகள் நாயகத்தை வழிபடுவதுமில்லை. ஆனால் மற்ற அனைவரும் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
இதற்கான காரணங்களில் முதன்மையானது மற்றவர்களுக்கு உருவப்படமும்சிலைகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் நபிகள் நாயகத்துக்கு உருவப்படமும் இல்லைசிலையும் இல்லை என்பதுதான். எந்தச் செயலால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதன் அடிப்படையில் முடிவு செய்வதுதான் பகுத்தறிவு. ஆனால் உருவப்படங்கள் திறப்பதை நியாயப்படுத்தி பெரியார் எடுத்து வைக்கும் வாதங்கள் எதுவும் பகுத்தறிவுப்பூர்வமானதாக இல்லை.
நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூசை செய்யவோதேங்காய்பழம் ஆராதனை செய்துவிழுந்து கும்பிட்டுப் பக்தி செய்துநமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோநாம் செய்த - செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாகக் கருதிக்கூட நாம் எந்தப் படத்திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும் எப்படிப்பட்ட படத்திற்கும் பூசை செய்யும்படியோகோவில்களிலோ தேர்இரதம்விமானம்சப்பரம் ஆகியவைகளிலோ வைத்து ஊர்வலம் ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கோ அல்ல.
ஆனால் மற்றெதற்கு என்றால்மனித சமூக நலனுக்கு - சுயநலமில்லாமலும்மற்றவர்களிடமும் எவ்விதக் கூலியோ,புகழோபிரயோஜனமோ பெறாமலும்தன் முயற்சியால்தன் பொருளால்தன் பொறுப்பென்று கருதித் தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங்களையும். தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம்மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா என்பதற்காகவேதான். மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம்கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்.
(குடியரசு 10-1-1948)
பெரியாரின் வாக்குமூலமும்முரண்பாடும்
இப்படி காரணம் கற்பித்த பெரியார் அடுத்த பாராவிலேயே தனது இந்த வாதம் தவறு என்று தன்னையும் அறியாமல் வாக்கு மூலம் தருகிறார்.
உதாரணமாககிரீஸ் தேசத்துச் சாக்ரடீஸ் என்பவர் - எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். கவுதம புத்தர் என்பவர் - ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார். இயேசு கிறித்து விக்கிரக ஆராதனைகோவில் பூசை முதலியவைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற்காகச் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார். முகமது நபி அநேக மூடப்பழக்கவழக்கங்களையும் பல தெய்வ வணக்கத்தையும் பெண் கொடுமையையும் எதிர்த்துப் பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததற்காகப் பல முறை சங்கடப்படுத்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களும் மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன்னவர்களும் அவர்களது ஆயுள் காலத்தில் இது போல் எவ்வளவு துன்பப்படுத்தப்பட்டுஎவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டுஎவ்வளவு தொல்லைப்படுத்தப்பட்டு இருந்தாலும் இன்று அவர்கள் கோடானுகோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப்படுகிறார்கள். கோடிக்கணக்கான பேர்களால் பின் பற்றப்படுகிறார்கள்.
அதுபோலவேதான்நாங்களும் இன்று எங்கள் அபிப்பிராயங்கள் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும்பாமர மக்களாலும்சுயநலச் சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டுத் தொல்லைகள் விளைவிக்கப்பட்டு அல்லல்பட்டாலும்பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன் தரக்கூடியதாயும்பாராட்டக்கூடியதாயும்,மக்களை ஞானவழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கிறோம். இல்லாவிட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டைப் பெரும்பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற்கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம்.
(குடியரசு 10-1-1948)
பெரியார் இங்கே யாரையெல்லாம் சுட்டிக் காட்டுகிறாரோ அவர்களில் நபிகள் நாயகத்தைத் தவிர மற்றவர்கள் தெய்வங்களாகவும்தெய்வ நிலையில் வைத்தும் போற்றப்படுவது அனைவரும் அறிந்த உண்மை.
இதுபோல் புகழப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்களும் உருவப்படம் திறக்கிறோம் என்று கூறுகிறார். அதாவது ஏசுபுத்தர் ஆகியோர் எவ்வாறு மதிக்கப்பட்டார்களோ அவ்வாறு மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உருவப்படங்கள் எனறு தனக்குத் தானே முரண்படுகிறார்.
அறிந்து கொண்டே நியாயப்படுத்துகிறார்
இதற்கு அடுத்த பாராவில் அவர் கூறுவது இதை விட் வேடிக்கையானது.
பிரச்சாரம் செய்வதற்கு உருவப்படம் பயன்படும் என்று வாதிடும் பெரியார் இதனால் ஒரு பயனும் ஏற்படாது என்கிறார். பெரியார் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை வீரமணியாலும் விளக்க முடியாது.
நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார்அன்னி பெசண்ட் அம்மையார் புகழப்பட்டார்காந்தியும் புகழ்ப்படுகிறார். சரித்திரத் தில் எத்தனையோ ஆச்சாரியார்கள்நாயன்மார்கள்ஆழ்வார்கள்சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் தெய்வீகம் கற்பிக்கப்பட்டார்கள்பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதனாளெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா?ஏற்பட்டதாஏற்படும் என்கின்ற குறியாவது காணப்படுகின்றதாஇவர்கள் எல்லாம் புராணங்களுக்குப் புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள்போல் தோன்றிபாமரர்களுடைய பக்திக்கும் பூசைக்கும் ஆளாகிமுட்டாள்தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகிறோம் என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் - சாகின்றார்கள் - சாகப் போகின்றார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறதே தவிரகண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்!
(குடிஅரசு 10-1-1948)
உருவப்படங்களால் ஏற்பட்ட விளைவுகளை அவர் நன்கு அறிந்து கொண்டே தான் உருவப்படங்களை அவர் நியாயப்படுத்துகிறார்.
அப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதித் தொண்டாற்றியவர்களே ஒழிய,மக்கள் தங்களைப் போற்றிப் புகழ்ந்து பூசிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்லர். ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி - அவர்களின் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்துஅம்மாதிரியான உள்ளம் பெற்று சமூகத்துக்குத் தொண்டாற்ற முற்படவேண்டும் என்பதற்காகவே அவர்களது உருவப்படத் திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக் கொள்கிறோம். (குடியரசு 10-1-1948)
ஆகவேநாம் நினைவு நாள் கொண் டாடும் மக்களைஉண்மையான மனிதர்க ளாய்க் கருதிஅவர்களது மனிதத் தன் மையை மதித்துமற்றவர்களும் அந்தத் தன் மைக்கு வரவேண்டுமென்கிற ஆசைக்காகஎடுத்துக் காட்டுக்காக,பிரச்சாரத்திற்காகக் கொண்டாடுகிறோம்.
(குடியரசு 14-4-1945)
உருவப்படங்கள் திறப்பதால் அதைப் பார்த்து அவரது கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று பெரியார் வாதிடுவதிலும் எந்த உண்மையும் இல்லை.
உறுதியான நிலைப்பாடே மாற்றம் தரும்
உறுதியான நிலைப்பாடுதளர்வில்லாத பிரச்சாரம் ஆகியவற்றால்தான் ஒரு மனிதனிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமே தவிர சிலைகளையும் உருவப்படங்களையும் நிறுவுவதால் அல்ல.
சென்னையில் எத்தனையோ பேரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்தச் சிலைகள் யாருடையவை என்பது 99சதவிகித சென்னைவாசிகளுக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அந்தச் சிலைக்குரியவர்களின் கொள்கை என்ன?கோட்பாடு என்ன என்பது யாருக்கும் தெரியாது! போலி பகுத்தறிவுவாதிகளுக்குக் கூடத் தெரியாது. தனது மனோ இச்சைப்படிதான் விரும்பிய ஒன்றை நியாயப்படுத்துவதற்காக பெரியார் இப்படிக் கூறினார். அவரது வாதத்தில் எந்தப் பகுத்தறிவும் இல்லை என்பதை அறியாமல் பெரியாரைக் கடவுள் நிலையில் வைத்து அவர் கூறுவதை அப்படியே நம்புகின்றனர்.
பெரியாரின் தத்துவம்
எத்தனையோ பேர் சாகிறார்கள். ஏதோ இரண்டொருவர்கட்குத்தான் நாம் நினைவு நாள் கொண்டாடுகிறோம். செத்துப்போனவர்களின் பணத்தை உத்தேசித்தோபடிப்பை உத்தேசித்தோஅதிகாரம்பட்டம்பதவிஅறிவுசாமர்த்தியம் முதலியவைகளைப் பற்றியோ நாம் எவருக்கும் நினைவு நாள் கொண்டாடுவதில்லை. இவைகள் காரணமாக நாம் எவரையும் போற்றுவதுமில்லைதுதிப்பதுமில்லை.
பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால்ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென் றால் பெரிய லைப்ரரியைத்தான் மதிக்க வேண் டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் என்சைக்ளோபீடியாரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும். இப்படி அனேகவற்றை - உயிரில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால்நாம் மதிப்பதுபேசுவதுநினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல.
(குடியரசு 14-4-1945)
இதை விட பயங்கரமான தத்துவத்தையும் பெரியார் கூறி இருக்கிறார். பணக்காரர்கள் என்பதற்காக நாங்கள் படம் திறக்கவில்லை என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல் சூப்பரான தத்துவம் ஒன்றையும் சொல்லி இருக்கிறார்.
பணக்காரன் என்பதன் பொருளைக் கூட விளங்காமல் ரிஸர்வ் வங்கியை பணக்காரன் என்று கூற வேண்டுமாம்! லைப்ரேரிதான் பெரிய படிப்பாளியாம்! என்சைக்ளொபீடியா தான் பெரிய அறிவாளியாம்! இதிலிருந்து பெரியாரிடம் ஆழமான சிந்தனை எதுவும் இருந்ததில்லை என்பதும்அவரைப் பின்பற்றுவோர் கண்ணை மூடிக்கொண்டுதான் பின்பற்றுகின்றனர் என்பதும் மேலும் தெளிவாகிறது.
இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்

நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தைப் பார்க்கவும்
இறைவன் இருக்கின்றானா
குர்ஆன் இறைவேதமா
நாத்திகர்களின் மூட நம்பிக்கைகள்
www.onlinepj.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை