தர்ஹாவை தரை இடித்து மட்டமாக்குவோம்



கப்ருகள்
தரைக்கு மேல்
ஒரு ஜான்
அல்லது அது போன்ற
அளவிற்கு உயர்த்தப்படுவதைத்
தான்
நான்
விரும்புகிறேன்.
அது கட்டப்படாமல்
இருப்பதையும்
பூசப்படாமல்
இருப்பதையும் நான் விரும்புகிறேன்.
ஏனென்றால் இது (கட்டுவதும்
பூசுவதும்) அலங்காரத்திற்கும்
பெருமைக்கும் ஒப்பாக உள்ளது.
மரணம் இதற்கு உரியதல்ல.
முஹாஜிரீன்கள் மற்றும்
அன்சாரி ஸஹாபாக்களின் கப்ருகள்
பூசப்பட்டதாக நான் காணவில்லை.
மக்கமா நகரில் அதிகாரிகள்
அங்கு கட்டப்பட்ட
கப்ருகளை இடித்ததைப் பார்த்தேன்.
இதை மார்க்க அறிஞர்கள் யாரும்
குறை கூறவில்லை.
இவ்வாறு ஷாஃபி இமாம் அவர்கள்
கூறினார்கள்.
(இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்த
நூல்: அல் உம்மு, பாகம்: 1 பக்கம்:
277)
ஷாஃபி மத்ஹபினர்
என்று சொல்லுபவர்கள்
நிறைந்து வாழும் நமது ஊரில்
பள்ளிக்குள் கப்ரும் தர்ஹாக்களும்
இன்றும் இருப்பது எப்படி?
இன்னுமா தயக்கம்?
இமாம்களையே அல்லது மற்றவர்களையே பின்பற்றுவதை விட்டுவிட்டு,
குர்ஆனையும் ஹதீசையும் பின்பற்ற
முன்வாருங்கள்.
கப்ர் வணக்கத்தை பற்றி நபி (ஸல்)
அவர்கள் சொன்ன
ஹதீஸ்களுக்கு செயல்வடிவம்
கொடுங்கள்.
உயர்த்தி கட்டப்பட்ட கபர்களை இடிக்க
கட்டளையிட்ட நபி (ஸல்) அவர்கள்:
‘உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும்
தரைமட்டமாக்காமல்
விடாதே என்று நபி (ஸல்) அவர்கள்
எனக்குக் கட்டளையிட்டார்கள்’
என்று அலி (ரலி) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல்
அஜதி (ரலி)
நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி,
அஹ்மத்
நபி (ஸல்) அவர்களின்
கட்டளைப்படி அபுல்ஹய்யாஜ்
அல்அசதீ (ரலி)
அவர்களுக்கு உயர்த்தி கட்டப்பட்ட
கப்ர்களை தரைமட்டமாக்க
கட்டளையிட்ட அலி (ரலி) அவர்கள்:
அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள்
என்னிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)
அவர்கள் எந்த வேலைக்காக
என்னை அனுப்பினார்களோ அந்த
வேலைக்காக உம்மை நான்
அனுப்புகிறேன். (அந்த
வேலை என்னவென்றால்) எந்த
உருவச்சிலையையும் நீர் அழிக்காமல்
விட்டுவிடாதீர். (தரையை விட)
உயர்ந்துள்ள எந்த கப்ரையும்
தரைமட்டமாக்காமல் விடாதீர்
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ்
அல்அசதீ அவர்கள்
நூல்: முஸ்லிம் 1764
கப்ருகள் கட்டப்படுவதையும்,
பூசப்படுவதையும் தடுத்த நபி (ஸல்)
அவர்கள்:
கப்ருகள் கட்டப்படுவதையும்,
கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள்
நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610
கப்ர் வணங்கிகளுக்கு சாபம்:
தங்கள் நபிமார்களின்
அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக
ஆக்கிக் கொண்ட யூதர்களையும்,
கிறித்தவர்களையும் அல்லாஹ்
சபிக்கிறான் என்று நபிகள் நாயகம்
(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390,
3454, 4441, 4444, 5816
கப்ரை வணங்குபவர்கள் மோசமான
படைப்பினங்கள்:
அவர்களில் ஒரு நல்ல மனிதர்
இறந்து விட்டால் அவரது அடக்கத்
தலத்தின் மேல் வணக்கத்
தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர்.
இவர்கள் தாம் அல்லாஹ்வின்
படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்
எனவும் நபிகள் நாயகம் (ஸல்)
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873
 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை