பைபிள் மாற்றப்பட்டதற்கு பைபிளில் இருந்தே இன்னொரு சான்று :

பைபிள் மாற்றப்பட்டதற்கு பைபிளில் இருந்தே இன்னொரு சான்று :

யூதாஸ் இயேசுவை காட்டிகொடுத்து 30 வெள்ளிக்காசுகளை பெறுகிறான். அதை வைத்து ஒரு நிலத்தை வாங்குகிறான்.
அதிலேயே இரு சுவிஷேஷங்களுக்குள் பெரிய முரண்பாடு இருக்கிறது. யூதாஸ் அந்த நிலத்தை வாங்கினானா அல்லது யூத ஆசாரியர்கள் யூதாசின் 30 வெள்ளிக்காசுகளை வைத்து அந்த நிலத்தை வாங்கினார்களா என்று.
இவ்வாறு உளறல்கள் பைபிளில் மலிந்து கிடக்கிறது. ஆனால் "அந்த" சர்ச்சைக்குள் இப்போது நாம் நுழையப்போவது இல்லை. "மத்தேயுவின்" பிரகாரம் யூத ஆசாரியர்கள் தான் யூதாசின் 30 வெள்ளிக்காசுகளை வைத்து அந்த நிலத்தை வாங்குகிறார்கள்.அந்த நிகழ்ச்சியை பின்வரும் வசனங்கள் குறிக்கின்றன.
[மத்தேயு 27] 


8. இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.

9. இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,

10. கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.
---------
10 வது வசனத்தில் மேற்படியானவற்றை "எரேமியா தீர்கதரிசி உரைத்தார்" என்று மத்தேயு சொல்கிறார். ஆனால் பழைய ஏற்பாட்டில் எரேமியாவின் புஸ்தகத்தில் இப்படியாக ஏதாவாது எரேமியா சொல்லியுள்ளாரா என்று பார்த்தால் அவ்வாறு ஒரு வசனம் கூட சிக்காது !!!! அப்படி ஒரு வசனம் கூட எரேமியாவின் புஸ்தகத்தில் இல்லவே இல்லை.

அதனால் கிறிஸ்தவர்களுக்கு முன்னால் இப்போது இரண்டு options இருக்கின்றன.

1 . இவ்வாறு எரேமியா சொன்னார் என்று மத்தேயு சொன்னது தவறாக இருக்க வேண்டும்.
2 . அல்லது பைபிள் மாற்றப்பட்டிருக்க வேண்டும் !!!

ஏன் என்றால் எரேமியா சொன்னார் என்று மத்தேயு சொல்வது எரேமியாவின் புஸ்தகத்தில் இல்லை !!!!

இந்த இரண்டில் எந்த option ஐ வேண்டுமானாலும் கிறிஸ்தவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

மத்தேயு தவறாக சொல்லிருந்தாலும் பைபிள் இறைவேதமாக முடியாது. தப்பு தப்பாக உளரும் வேதம் எப்படி இறைவேதமாக முடியும் ?
 அல்லது பைபிள் மாற்றப்பட்டு விட்டதை ஒத்துக்கொள்ள வேண்டும். மாற்றப்படிருந்தாலும் அது இறைவேதம் அல்ல.
-------
இப்போது ஒரு கேள்வி வரலாம். "எரேமியாவால் உரைக்கப்பட்டது" என்று தானே மத்தேயுவில் இருக்கிறது, எழுதப்பட்டது என்று இல்லை அல்லவா ?!!!!
பைபிள் அந்த கேள்விக்கும் ஆப்பு அடித்து, தான் மாற்றப்பட்டதை உறுதிபடுத்துகிறது.

நன்றாக கவனிக்க.

[மத்தேயு 27]
10. கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

"கர்த்தர் எனக்கு கற்பித்தபடி" என்று எரேமியா சொல்கிறாராம் !!!! ஆக இந்த வசனத்திலிருந்து விளங்குவது என்ன ?

எரேமியா "இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.

இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,

குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள்" என்ற வார்த்தைகளை சொல்ல கர்த்தர்தான்

எரேமியாவிர்க்கு சொல்லிகொடுத்துள்ளார் என்று விளங்குகிறது.
--------------------------
இப்போது இன்னொரு வசனத்தையும் பாருங்கள்.

[எரேமியா 30]

1. கர்த்தராலே ஏரேமியாவுக்கு உண்டான வார்த்தை:

2. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.

நாம் ஏற்கனவே என்ன பார்த்தோம் ?

A) எரேமியாவிற்கு அந்த வார்த்தைகளை சொல்ல கர்த்தர்தான் சொல்லி கொடுத்துள்ளார்.

B) [எரேமியா 30:2] இல் எரேமியாவை பார்த்து கர்த்தர் என்ன சொல்கிறார் ? எரேமியாவிர்க்கு தான் சொல்கின்ற எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்ள சொல்கிறார். எல்லா வார்த்தைகளையும் !!! அதனால் சும்மா வாயால் மட்டுமே சொன்னார் என்ற பேச்சுக்கே இடமில்லை. கர்த்தர் எரேமியாவிர்க்கு சொன்னதயெல்லாம் எரேமியா எழுதி வைத்துள்ளார் என்று விளங்குகிறது.

எரேமியா புஸ்தகத்தில் "இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.
இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள்"
என்கின்ற வார்த்தைகள் எங்கே ? போச்சா ????????!!!!

பைபிள் மாற்றப்பட்டதற்கு ஏசுவும், பைபிளுமே சாட்சியாக இருக்கும் போது ஏன் கிறிஸ்தவர்கள் மட்டும் பைபிள் மாற்றப்பட்டதை ஏற்றுக்கொள்வதில்லை என்று எனக்கு தெரியவில்லை !!!!

ஆக்கம் : சகோ.ரஃபீக்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை