மற்ற மதங்களை விமர்சிக்கக் கூடாதா?


மற்ற மதங்களை விமர்சிக்கக் கூடாதா?

பதில்ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும்கூறப்படவில்லைபிற மதத்தவர்கள் கடவுளர்களாகக் கருதுவோரை ஏசக் கூடாது என்று தான் குர்ஆன்கூறுகிறது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக் கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.
(திருக்குர்ஆன் 6:108)
ஏசுவதற்கும்விமர்சிப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

முஸ்லிமல்லாதவர்களால் கடவுளர்களாக மதிக்கப்படு வோரின் தனிப்பட்ட நடத்தைகள்போன்றவற்றைக் கேலி செய்வதும்தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுவதும் தான் ஏசுதல் என்பதன்பொருளாகும்.
கொள்கைகோட்பாடு மற்றும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் இது தான் சரியானது என்றுவாதிடுவதையும் மற்ற கொள்கைகள் தவறானவை என்று கூறுவதையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.
குர்ஆனில் அதிகமான இடங்களில் அறிவுப்பூர்வமான இத்தகைய வாதங்களும்விமர்சனங்களும்காணப்படு கின்றனஆனால் ஒரு இடத்திலும் பிற மதத்தினரால் கடவுளர்களாக மதிக்கப்படுவோர்ஏசப்படவே இல்லை.
ஈஸா நபியைக் கிறித்தவர்கள் கடவுளின் மகன் எனக் கூறுவதை இஸ்லாம் மறுக்கிறதுஅதற்கானகாரண காரியங்களையும் தெளிவாகக் கூறுகிறதுஆனால் ஒரு இடத்தில் கூட ஈஸா நபியைப் பற்றிதரக் குறைவான ஒரு சொல்லையும் குர்ஆன் பயன்படுத்தவில்லை.
வேதமுடையோரேஉங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறா தீர்கள்அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர(வே றெதனையும்கூறாதீர்கள்மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனதுகட்டளை யா(ல் உருவானவருமா)வார்அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான்அவனதுஉயிருமாவார்எனவே அல்லாஹ்வையும்அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்மூவர் எனக்கூறாதீர்கள்விலகிக் கொள் ளுங்கள்! (அதுஉங்களுக்குச் சிறந்ததுஅல்லாஹ் வே ஒரேவணக்கத்திற்குரியவன்தனக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்வானங்களில்உள்ளவையும்பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியனஅல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.
(திருக்குர்ஆன் 4:171)
'மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்எனக் கூறிய வர்கள் (ஏக இறைவனைமறுத்து விட்டனர்.'இஸ்ராயீ லின் மக்களேஎன் இறைவனும்உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான்.அவர்கள் சென்றடையும் இடம் நரகம்அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லைஎன்றேமஸீஹ் கூறினார்.
(திருக்குர்ஆன் 5:72)
மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லைஅவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்.அவரது தாய் உண்மையாளர்அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர்அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராகபின்னர் அவர்கள் எவ்வாறு திசைதிருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!
(திருக்குர்ஆன் 5:75)
லாத்உஸ்ஸா போன்ற பெண் பாத்திரங்களைக் கடவுளின் புதல்விகள் என்று மக்காவில் வாழ்ந்தவர்கள்நம்பி வந்தனர்உங்களுக்கு மட்டும் ஆண் மக்கள்அல்லாஹ்வுக்கு மட்டும் பெண் மக்களாஎன்றுகுர்ஆன் கேள்வி எழுப்பியதுஇறைவனுக்கு மனைவியும்மக்களும் அறவே இல்லை என்பதையும்கூறியதுலாத்உஸ்ஸா பற்றி அவர்கள் நம்பி வந்த கட்டுக் கதைகளின் அடிப்படையில் கீழ்த்தரமாகவிமர்சிக்க முடியும்அப்படி எந்த விமர்சனமும் குர்ஆனில் இல்லை.
இந்துக்கள் கடவுளர்களாக மதிக்கும் இராமன்கிருஷ்ணன்முருகன்விநாயகர்சிவன்விஷ்ணுபோன்றவர்கள் குறித்து முஸ்லிம்கள் அவர்களைக் குறை கூறக் கூடாதுஅதைத் திருக்குர்ஆன் தடைசெய்கிறது.
அதே நேரத்தில் ஒரு கடவுள் தான் இருக்க முடியும்பல கடவுள்கள் இருக்க முடியாது என்று வாதம்செய்யலாம்பல கடவுள் கொள்கையை நம்புவ தால் ஏற்படும் கேடுகளைப் பட்டியலிட்டு கொள்கைப்பிரச்சாரம் செய்யலாம்மற்றவர்கள் கடவுளர்களாக மதிக்கக்கூடியவர்களின் பெயர்களைக்குறிப்பிடாமலேயே இத்தகைய பிரச்சாரத்தைச் செய்ய முடியும்.
அறிவுப்பூர்வமான வாதங்களின் அடிப்படையில் இவ்வாறு பிரச்சாரம் செய்வதை இஸ்லாம்அனுமதிக்கிறதுஇத்தகைய பிரச்சாரத்தால் சமூக நல்ணக்கத்திற்கு எந்தக் கேடும் ஏற்படாதுஎனவேஏசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதும் அறிவுப்பூர்வமாக விமர்சனம் செய்யலாம் என்பதும்ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல.
 
பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை