சிந்திப்பது இதயமா? மூளையா?

சிந்திப்பது இதயமாமூளையா?
மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமானநம்பிக்கை நிலவி வந்தது.
சிந்திப்பதுமகிழ்ச்சியடைவதுஇரக்கம் காட்டுவதுபொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக்காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்ததுநாடு,மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.
பின்னர்அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒருகருத்துக்கு உலகம் வந்ததுஇன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூடஇன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது.

ஒருவன் படிப்பில்சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும்குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும்,மூளை இருக்கிறதா?என்று கேட்கிறோம்.
ஒருவன் கொடியவனாகஇரக்கமற்றவனாகபேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம்உள்ளதா என்று கேட்கிறோம்சிந்திப்பது மூளையின் வேலை எனவும்கவலைப்படுவது போன்றவைஇதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிருந்து அறியலாம்இடைப்பட்ட காலத்தில் உலகமக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்ததுஅது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.
இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணிஇதைத் தவிர வேறுஎந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.
சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும்ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உடலின் முழுஇயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றனசிந்திப்பதும்கவலைப்படுவதும்,மகிழ்ச்சியடைவதும்பேராசைப்படுவதும்கோபப்படுவதும் மூளையின் வேலை தான்அனைத்துசெயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.
'இதயத்தில் உனக்கு இடம் இல்லைஎன்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம்கேலிசெய்கிறதுமூளை யில் உனக்கு இடமில்லை என்றுதான் கூற வேண்டும்ஒருவரை நேசிப்பதும்,பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.
இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம்சிந்தனை யைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல்மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம்இன்றைய உலகத்தின் முடிவுடன் அதுஅற்புதமாகப் பொருந்திப் போகும்.
ஆனால்இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்தகாலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனைநிராகரித்திருப்பார்கள்இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக்கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள்அவர்கள்நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.
குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில்கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள்ஆனால்மூளை தான் சிந்திக்கிறது'என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்இன்றைய அறிவியல்உலகம் அதை உண்மை என ஏற்காதுஇதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்கமுடியாது என்று வாதிடும்!
எனவேஅந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாதுஇதயம் என்றும் குறிப்பிட முடியாது.ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.
இப்போது என்ன செய்வதுஎல்லாக் காலத்துக்கும் பொருந் தக்கூடிய வகையில் இதை எவ்வாறுகூறுவதுநாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம்அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறுகுழப்பம் ஏதும் இல்லைஅவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.
அரபு மொழியில் கல்ப்என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளதுஇதயம் என்ற பொருளும்உள்ளது.
அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும்இதயத்தைக் குறிக்கவும் இச்சொல்பயன்படுத்தப்பட்டுள்ளதுமூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப்,முக்தாருஸ் ஸஹாஹ்சிந்திக்கும் திறன்மூளைஇதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளனஎனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான்.இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்குமொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச் சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள்அவர்களும்திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள்.
மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச்சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும்அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில்உள்ள பொருள் தான்.
5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியேகல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதுஇதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வதுதவறாகும்.
33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில்பயன்படுத்தப்பட்டுள்ளதுஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதுநீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும்அரபுமூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.
எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோஅதுவே இவ்வேதம் இறைவனுடையதுஎன்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.
மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில்கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும்அது அருளப்பட்டகாலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி - உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும்உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம்என்பதற்கான நிரூபனங்களில் ஒன்றாகவுள்ளது.

பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை