தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை

தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை


1980 களுக்கு முன்னால் தமிழக முஸ்லிம்களின் நிலையும், தமிழக உலமாக்களின் நிலையும் எந்த நிலையில் இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை அவர்களிடமிருந்து அறவே எடுபட்டுப் போயிருந்தது. திருக்குர்ஆனிலும், நபி வழியிலும் அனுமதிக்கப்படாத போலிச் சடங்குகளைத்தான் இஸ்லாம் என்ற பெயரால் தமிழக முஸ்லிம்கள் செய்து வந்தனர்.
மத்ஹபு என்ற பெயரால் முரண் பட்டுக் கிடந்தனர். போலி ஷைகுமார்களின் கால்களில் விழுந்து வணங்கு வதை பெரும் பாக்கியமாகக் கருதி வந்தனர்.

இந்தக் காலகட்டத்தில்தான் மயிலாடுதுறை அருகில் அமைந்துள்ள சங்கரன்பந்தல் என்ற கிராமத்தி­ருந்து தவ்ஹீத் பொறி பற்றத் தொடங்கியது.

பைஜுல் உலூம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த அரபுக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்த இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த பி. சேகு அலாவுதீன் எனும் பி.எஸ். அலாவுதீன் அவர்களும், அவரது இளைய சகோதரர் மவ்லவி பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அந்த அரபுக் கல்லூரியில் படித்துக் கொடுப்பதோடு நின்று விடாமல் மக்களை நல்வழிப்படுத்த மாதந் தோறும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலானார்கள்.

தீன் விளக்கக் குழு என்ற பெயரில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதுடன் துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவும், அவ்வூரில் நிலவிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை நகரில் ஆற்றங்கரைப் பள்ளிவாசல் வளாகத்தில் தமிழக உலமாக்கள் சபை சார்பில் வலிமார்கள் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் உரையாற்றிய எல்லா உலமாக்களுமே தர்கா வழிபாட்டை ஊக்குவித்தும் ஆதரித்தும் பேசினார்கள். ஏகத்துவ சிந்தனைவாதிகளின் இரத்தம் சூடேறும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலை நியாயப்படுத்தினார்கள்.

அதைக் கண்டு கொதித்துப்போன பீ. ஜைனுல் ஆபிதீன், அம்மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் அனைத்தும் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரானவை என்பதைத் தக்க ஆதாரங்களுடன் ''ஒரு நாடகம் அரங்கேறியது'' என்ற தலைப்பில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு பிரசுரம் வெளியிட்டார்.

அப்பிரசுரத்தால் ஆத்திரம் அடைந்த உலமாக்கள் வேன்களில் வந்து இறங்கி சங்கரன் பந்த­ல் பணியாற்றும் பீ. ஜைனுல் ஆபிதீனை மதரஸாவில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி முறையிட்டனர். கல்லூரி நிர்வாகம் அதை ஏற்க மறுத்து விட்டாலும் உலமாக்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்தது.

மேலப்பாளையத்தைச் சேர்ந்த மவ்லவி ஷம்ஸுல்லுஹா, மவ்லவி முஹம்மது அலி ரஹ்மானி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி போன்றவர்களும் சங்கரன் பந்தல் சிராஜுத்தீன், அப்துல் பத்தாஹ் போன்ற நண்பர்களும் இப்பிரச்சாரத்துக் குப் பக்கபலமாக இருந்தனர்.

சங்கரன்பந்த­ல் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வேறு சில பகுதிகளிலும் பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்தது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் மவ்லவி கமாலுத் தீன் மதனி, கடையநல்லூரில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி, பேர்ணாம்பட்டில் பி. அன்வர்பாஷா, ரபீக் அஹ்மது தலை மையிலான குழுவினர், கோவையில் அப்துல் மஜீத் உமரி, திருச்சியில் அப்துல் மஜீத், அப்துல் சமத் தலைமையிலான குழுவினர், சென்னையில் உஸ்மான் கான் தலைமையிலான குழுவினர், பிரச்சாரம் செய்து வந்தனர். (இவர்களில் மவ்லவி அப்துல் ஜலீல் மதனி கொள்கையில் உறுதியாக நின்று மரணித்து விட்டார். மவ்லவி கமாலுத்தீன் மதனி, ரபீக் அஹ்மது அப்துல் மஜீத் உமரி அப்துல் மஜீத் அப்துல் சமத் உஸ்மான் கான் கொள்கையில் முரண்பட்டு நமக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.)

சங்கரன்பந்த­ல் பீ. ஜைனுல் ஆபிதீன் தெளிவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டு மேற்கண்ட பகுதிகளில் உள்ளவர்கள் அவரைப் பேச்சாளராக அழைத்து பொதுக்கூட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அவர்களுக்கிடையே அறிமுகமும், ஒருங்கிணைப் பும் ஏற்பட்டது.

இதே காலகட்டத்தில் துபையில் இஸ்லாமிய விழிப்புணர்வு மையம் ஐ.ஏ.சி. என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. இவர்களும் தமிழ் கூறும் துபை வாழ் மக்களிடம் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்து வந்தனர்.

மவ்லவி முஹம்மது இக்பால் மதனி, லெப்பைக்குடிகாடைச் சேர்ந்த ஜஹாங்கீர், கள்ளக்குறிச்சி சுலைமான், மேலப்பாளையம் ஃபளுலுல் இலாஹி உள்ளிட்டவர்கள் இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தை நடத்தி வந்தனர். (இவர்களில் ஜஹாங்கீர் கொள்கையில் உறுதி யாக நின்று மரணித்து விட்டார். மற்ற வர்கள் கொள்கையில் முரண்பட்டு நமக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர்.)

தமிழகத்தில் சில பகுதிகளில் தவ்ஹீத் பிரச்சாரம் நடந்தாலும் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் எழுத்தும், பேச்சும் பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில் தக்க ஆதாரங்களுடன் இருந்ததை ஒலி நாடாக்கள் மூலமும், துண்டுப் பிரசுரம் மூலமும் இஸ்லாமிய விழிப்புணர்வு மையத்தினர் கண்டறிந்தனர்.

சங்கரன்பந்தல் மதரஸாவில் தொடர்ந்து பணியாற்ற முடியாத அளவுக்கு கெடுபிடிகள் அதிகமானதால் அங்கிருந்து வெளியேறும் எண்ணத்தில் இருந்த பீ. ஜைனுல் ஆபிதீன் அவர் களை ஐ.ஏ.சி. இயக்கத்தினர் நேரிலும், தபால் மூலமும் தொடர்பு கொண்டனர்.

''உங்கள் எழுத்தாற்றலை பயன்படுத்தி ஏன் மாத இதழ் ஒன்றை நடத்தக் கூடாது'' என்று அவர்கள் பீ. ஜைனுல் ஆபிதீனிடம் கேட்டனர். தவ்ஹீத் அடிப்படையில் நடத்தப்படும் பத்திரிகைகளை இலாபகரமாக நடத்த முடியாது என்று பீ.ஜே., சொன்னபோது ''மாதா மாதம் எவ்வளவு நட்டம் ஏற்படுகிறதோ அதை நாங்கள் தந்து விடுகிறோம். நீங்கள் மதரஸாவை விட்டு வெளியேறி பத்தி ரிகை நடத்த முன் வாருங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர்.

''எழுதுகின்ற பணியை மட்டும்தான் என்னால் ஏற்க முடியும், பண விவகாரத்தை வேறு யாரிடமாவது ஒப்படைத் துக் கொள்ளுங்கள்'' என்று பீ.ஜே., திட்ட வட்டமாகக் கூறி விட்டார். அதன் பின்னர் திருச்சி அப்துல் சமத், அப்துல் மஜீத் தலைமையில் செயல்பட்டு வந்த திருச்சியில் வாட்ச் ரிப்பேர் கடை வைத்திருந்த அபூ அப்துல்லாஹ் என்பவரை நிர்வாகம் செய்ய ஐ.ஏ.சி. இயக்கத்தினர் நியமித்தனர்.

ஐ.ஏ.சி யின் சார்பில் அந்நஜாத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. அதன் எழுத்துப் பொறுப்பு முழுவதும் பீ.ஜே. யைச் சேர்ந்தது. இந்த இதழ் தமிழ்கத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. வளைகுடா நாடுகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் குடும்பத்திற்காக ஏராளமான சந்தாக்களை அனுப்பி பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

இதன் காரணமாகவே தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களை நஜாத் கூட்டம் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

பத்திரிகையின் மாபெரும் வளர்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஐ.ஏ.சி.,க் கும் அபூ அப்துல்லாஹ்வுக்கும் மத்தியில் பண விஷயத்தில் விவகாரம் ஏற்பட்டது. ஐ.ஏ.சி பக்கம் நியாயம் இருந்ததால் ஐ.ஏ.சி பக்கம் பீ.ஜே. நின்றார். ஆனாலும் அபூ அப்துல்லாஹ் நஜாத் பத்திரிகையைத் தனது சொந்தப் பத்திரிகை என்று பதிவு செய்து கொண்டதால் அவர்களால் நியாயம் பெற முடிய வில்லை. அந்த அநியாயத்துக்குத் துணை போகக்கூடாது என்று பீ.ஜே. நஜாத் பத்திரிகையி­ருந்து வெளியேறினார். பல்லாயிரம் பத்திரிகைகள் விற்பனையை சில நூறு பிரதிகளில் கொண்டு வந்து அபூ அப்துல்லாஹ் அதைக் கோமா ஸ்டேஜில் நிறுத்தினார்.

அதே காலகட்டத்தில்தான் தமிழகத் தில் பரவலாக ஆங்காங்கே பிரச்சாரம் செய்தவர்கள் கூட்டாக ஒரு அமைப்பை உருவாக்கி ஏன் செயல்படக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

அனைவரும் திருச்சியில் உள்ள தேவர் ஹா­ல் (இது இப்போது இல்லை) கூட்டப்பட்டு அஹ்லுல் குர் ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பீ. ஜைனுல் ஆபிதீன் தேர்வு செய்யப் பட்டார். பின்னர் இந்த இயக்கம் ஜம்மியத்து அஹ்­ல் குர்ஆன் வல்ஹதீஸ் (ஜாக்) என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.

ஓராண்டுக்குப்பின் தனக்கு தலைமை பொறுப்பு வேண்டாம். பொறுப்பு இருந்தால் அதிகமான பிரச்சார நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியவில்லை என்று பீ.ஜே. திட்டவட்டமாக மறுத்து கமா லுத்தீன் மதனியை தலைவராக்குமாறு வ­யுறுத்தினார். மக்கள் இதைக் கடுமையாக எதிர்த்தாலும் பீ.ஜே. தனது நிலையை மாற்றிக்கொள்ள விரும்பாததால் வேண்டா வெறுப்பாக கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அதன் பின்னர் கமாலுத்தீன் தலைமையில் பீ. ஜைனுல் ஆபிதீன், சம்சுல் லுஹா அலி ரஹ்மானி, உள்ளிட்ட பல அறிஞர்கள் தீவிரப் பிரச்சாரகர்களாகச் செயல்பட்டனர்.

மவ்லவி அப்துல்லாஹ் என்பவர் 'புரட்சி மின்னல்' என்ற பெயரில் பத்தி ரிகை நடத்தி வந்தார். ஏகத்துவப் பிரச் சாரத்தால் கவரப்பட்ட அவர் தனது பத்திரிகையை ஏகத்துவக் கொள்கையை பிரதிப­க்கும் இதழாக நடத்த முன் வந்தார். ஏற்கெனவே அந்நஜாத் பத்திரிகையை இழந்து புதிய பத்திரிகை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்த ஐ.ஏ.சி., இயக்கத்தினர் மவ்லவி அப்துல்லாஹ்வின் விருப்பத்தை ஏற்றுப் புரட்சி மின்னலைத் தத்தெடுத்தனர். பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களுடைய மற்றும் உலமாக்களுடைய ஆக்கங்களைத் தாங்கி 'புரட்சி மின்னல்' விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

மேடைப் பிரச்சாரம் மூலமாகவும் 'புரட்சி மின்னல்' பத்திரிகை வழியாகவும் முடுக்கி விடப்பட்ட தீவிரப் பிரச்சாரம் காரணமாக மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டதுபோல் எதிர்ப்பும் அதிகமானது. பள்ளிவாச­ல் தொழத் தடை, ஊர் நீக்கம், அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன.

இன்ஷா அல்லாஹ்... தொடரும்.....


உலமாக்களால் தூண்டி விடப்பட்ட மார்க்கம் அறியாத மக்கள் தவ்ஹீத் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் கல வரங்களை ஏற்படுத்தினார்கள்.

பீ.ஜே. அவர்கள் முத்துப்பேட்டை, நாகூர், மதுரை,
சென்னை, உமுராபாத், பொதக்குடி, பண்டாரவாடை, லெப்பைக் குடிக்காடு, தேங்காய்பட்டினம், கோவை எனப் பல ஊர்களில் தாக்கப்பட்டார். மேலப்பாளையத்தில், கொலை
செய்யும் முயற்சியில் மேடையேறி அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். மற்ற பிரச்சாரகர்களும் ஆங்காங்கே தாக்கப் பட்டனர்.



அந்தத் தடைகளைக் கண்டு தவ்ஹீத் பிரச்சாரங்களும் கொள்கைவாதிகளும் நிலை மாறவில்லை. முன்பைவிட இன்னும் உறுதியுடனும் தீவிரமாகவும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.



ஜாக் தலைவராக இருந்த கமாலுத்தீன் மதனியும், மதீனாவில் படித்த மற்ற மதனிகளும், சவூதி அரசி­ருந்து சம்பளம் பெற்று வந்தனர். இந்தத் தொடர்பை பயன்படுத்தி சவூதி ஆதரவுடன் தொடர்பு கொண்டு ஜாக் இயக்கத்துக்கும் நிதியாதாரங்களைப் பெற முயன்ற னர். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மேடையில் அரபு மொழியில் பெரிய பேனரைக் கட்டி அதை வீடியோவாக்கி அதை சவூதிக்கு அனுப்புவது மட்டுமே குறிக்கோளாக ஆனது.



அரபு நாட்டி­ருந்து உதவிகள் பெற வேண்டாம் என்று பீ.ஜே. மறுப்புத் தெரிவித்ததால் அவரை அழைக்காமலே ஆலோசனைக் கூட்டம் நடக்கலானது.



அரபு நாட்டுப் பணம் வர ஆரம்பித் துள்ளது என்பதற்காக இயக்கத்தில் சேர்ந்தவர்கள் சுய ஆதாயத்துக்காக அரபு நாட்டு நிதி உதவி பெறுவதை ஆதரித்து தூபம் போட்டனர். பள்ளி வாசல், மதரஸா, நோன்புக் கஞ்சி, தஃவா என்று பல வகைகளில் இலட்சம் இலட் சமாகப் பணம் வர ஆரம்பித்தது. என்ன வரவு என்பதும், என்ன செலவு என் பதும் மதீனாவில் சம்பளம் வாங்குப வர்களுக்கும் மட்டும்தான் தெரியுமே தவிர, ஜாக் மாநில நிர்வாகிகளுக்குக் கூட தெரியாத நிலை ஏற்பட்டது.



தங்களுக்கு கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக தவ்ஹீத்வாதி இல்லாத ஊரிலும், பள்ளிவாசல் கட்டப் பணம் வாங்குவது மட்டுமே இவர்களின் குறிக் கோளாக ஆனது. ஆனாலும் சிரமப் பட்டு உருவாக்கிய இயக்கம் பாழாகி விடக்கூடாது என்பதற்காக பிரச்சார கர்கள் உள்ளிருந்து போராடி வந்தனர்.



கோவை அய்யூப் உள்ளிட்ட பலர் மீது பொருளாதார மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் பீ.ஜே. யால் எடுத்துக்காட்டப்பட்டும் அவர் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார். அதற்கு கமாலுத்தீன் மதனியும் உடந்தை என்பது உறுதியானது. (ஜாக் விளக்கம் என்ற 5 சி.டி.களில் ஆதாரம் பார்க்கவும்.)



அரபு நாடுகளில் உதவி பெறக் கூடாது; மோசடிக்காரர்கள் பொறுப்பில் இருக்கக் கூடாது; கொள்கைவாதிகளுக்கு தட்டிக் கேட்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் அதற்காக உறுப்பி னர் அட்டை வழங்க வேண்டும் என் பன போன்ற கோரிக்கைகளை கமாலுத்தீன் மதனி ஏற்க மறுத்தார். இவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.



மற்ற நிர்வாகிகளுக்குக் கூடத் தெரியாமல் வரவு - செலவு வைப்பது முறையா? நீங்கள் மரணித்து விட்டால் என்னவாகும் என்று கமாலுத்தீன் மதனியிடம் பீ.ஜே. நேரடியாகக் கேட்டபோது, ''எல்லாக் கணக்குகளும் என் மனைவிக்குத் தெரியும்'' என்று பதில் அளித்தார். இவர் நிர்வாகிகளிடம் கூட கணக்குக் காட்டத் தயார் இல்லை என்றால், இதை விட மோசடி இருக்க முடியாது என்ற எண்ணம் தவ்ஹீத் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்த அனைத்து பிரச்சாரகர்களுக்கும் ஏற்பட்டது.



இதே காலகட்டத்தில்தான் அல்- ஜன்னத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. ஐ.ஏ.சி. இயக்கத்தின் ஆதரவில் தான் புரட்சி மின்னல் நடத்தப்பட்டாலும், நமக்கே சொந்தமான இதழ் இருந்தால்தான் இன்னும் அழுத்தமாக செய்திகளைச் சொல்ல முடியும் என்ற நோக்கத் தில்தான் அல்-ஜன்னத் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது.



பீ.ஜே.யின் சொந்தப் பத்திரிகையாக அவரது சொந்தப் பொறுப்பில் நடத்தப்பட்டது. அதில் கிடைக்கும் லாப - நட்டம் பீ.ஜே.யைச் சேர்ந்தது என்ற அடிப் படையில்தான் அல்-ஜன்னத் நடத்தப்பட்டது.



பத்திரிகையின் விற்பனை அதிகமாக இருந்தாலும், பத்திரிகையின் ஏஜெண்டுகள் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், நாளுக்கு நாள் நட்டம் அதிகரித்தது. இனிமேல் தொடர்ந்து நடத்துவது என்றால், மக்களிடம் நன்கொடை திரட்டித் தான் நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நன்கொடை கேட்டு மக்களி டம் அறிவிப்புச் செய்தால் கடந்த கால நட்டத்தையும் ஈடு செய்யலாம். இனியும் நட்டமில்லாமல் நடத்தலாம் என்று நண்பர்கள் ஆலோசனை கூறினார்கள்.



பத்திரிகையின் லாப - நட்டம் ஜமா அத்தைச் சேர்ந்தது என்றால், நன்கொடை கேட்கலாம். எனக்குச் சொந்த மான பத்திரிகை எனும்போது நன்கொடை கேட்க மாட்டேன் என்று திட்ட வட்டமாக மறுத்து, ''நான் ஆக்கங்களை எழுதித் தருகிறேன்; ஜாக் இதன் உரி மையைப் பெற்றுக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று பீ.ஜே. விட்டுக் கொடுத்தார். இதற்காக எந்தத் தொகையையும் அவர் கேட்கவில்லை.



இதன் பின்னர் ஐ.ஏ.சி.யின் சார்பில் புரட்சி மின்னலும் ஜாக் சார்பில் அல்-ஜன்னத்தும் இரட்டைக் குழல் துப்பாக் கிகளாக வலம் வந்தன.



ஷிர்க், ஃபித்அத், லஞ்சம், லாட்டரி, சினிமா போன்ற தீமைகளை மட்டுமே எதிர்த்துப் பிரச்சாரம் அமைந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சினைகளில் நாம் ஆர்வம் காட்டவில்லை.



சமுதாயப் பணியில் தவ்ஹீத் ஜமாஅத் பாபரி மஸ்ஜிதும் பயண மாற்றமும்



இப்படியே தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணம் தொடர்ந்தது. காலம் எனும் சாலையில் 89, 90, 91 என்றமைல் கற்களைத் தாண்டி 92 ஆம் ஆண்டில் அந்த நிகழ்வு நிகழ்ந்தது. 1992, டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டதுதான் அந்த நிகழ்வு. பட்டப்பக­ல் சங்பரிவார பயங்கரவாதி களால் பள்ளிவாசல் உடைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.



உடைக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டுமல்ல! சமுதாயத்தின் முதுகெலும்பும் தான்.



சமுதாய இயக்கங்கள் என்று சொல்லி­க் கொண்டிருந்த லீக்குகள் சமுதாயத் தைக் காக்கின்ற ஆயுதங்களாகவும், சமுதாயத்தின் மானம் காக்கும் ஆடைகளாகவும் இருக்கத் தவறி விட்டன.



பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகும் கேரளாவில் முஸ்­லிம் லீக், காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து அமைச்சர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில் முஸ்­லிம் சமுதாயம், தான் ஒரு அனாதை என்பதை உணர்ந்து கொண்டது.



இத்தகைய காரணங்களால் இவர்கள் சமுதாயத்தில் செல்லாக் காசானார்கள். செல்லரித்துப் போனார்கள். இந்த இயக்கங்கள் அவரச சிசிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெறவேண்டிய நிலையில் இருந்ததால் கேரளாவில் அப்துந் நாஸர் மதானி போன்றோர் சமுதாயப் பணி செய்யக் களமிறங்கினார்கள்.



இதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன் விருப்பமின்றியே ஒரு திருப்பம் திணிக்கப்பட்டது. சமுதாயப் பிரச்சினைகளில் தலையிட்டே ஆக வேண்டும் என்பது தலைவிதியானது



அதுவரை தவ்ஹீத் என்ற இலக்கை மட்டும் நோக்கிப் பயணம் செய்த தவ்ஹீத் ஜமாஅத், அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் சமுதாயப் பிரச்சினைகளையும் கையில் எடுத்தாக வேண்டும் என்று முடிவுக்கு சகோதரர் பீ.ஜே. வந்தார். தானாக வந்தார் என்று சொல் வதை விட அந்த முடிவுக்குத் தள்ளப் பட்டார்.



தமிழகத்தில் தலைகாட்டிய பி.டி.பி. (P.D.F)



அப்துந் நாஸர் மதானியின் உணர்வுப்பூர்வமான உரையில் மக்கள் கவரப்பட்டனர். மக்களிடம் அப்படியொரு தோற்றமும், தணியாத தாகமும் இருந்தது. அதனால் அவரது கட்சிக் கொடி கேரள எல்லையைத் தாண்டி தமிழகக் கம்பங்களிலும் பறக்க ஆரம்பித்தது. அந்த அளவுக்குத் தமிழக முஸ்­ம் சமுதாயத்திலும் ஒரு தேட்டம் இருந்தது. பி.டி.பி. (மக்கள் ஜனநாயகக் கட்சி) என்ற அவரது கட்சிக்கு தமிழகத்திலும் செல்வாக்கு ஏற்பட ஆரம்பித்தது.



ஆனால் அப்துந் நாஸர் மதானி அவர்கள் அப்போது ஷிர்க்கான கொள்கையில் இருந்தார். அவரது உரை, யாஸய்யிதீ, யாரசூலுல்லாஹி என்ற இணைவைப்புக் கவிதைகளுடனே துவங்கும்.



சமுதாயப் போர்க்களத்தில் ஒரு காலை இழந்தும் சிங்கமாய் கர்ஜித்துக் கொண்டிருந்த அவர் சிகரத்தைத் தொடவிருந்தார். ஆனால் அரசியல் கட்சிகளுடனான அவரது கூட்டணி அவரை ஏறிய அதே வேகத்தில் குப்புறத் தள்ளியது. முஸ்­ம் லீக் செய்த அதே பிழையை இவரும் செய்தார். அதனால் அதன் விளைவை அவர் சந்திக்க நேரிட்டது.



ஜிஹாத் கமிட்டி



கேரளத்தில் நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்கு அப்துந் நாஸர் மதானி தேவைப்பட்டது போலவே தமிழகத்தில் ஒருவர் தேவைப்பட்டார். பழனிபாபா அந்த வெற்றிடச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார்.



இவரிடம் பேச்சுத் திறமை இருந்தது. ஆனால் ஏகத்துவம் இல்லை. தெளிவான இஸ்லாமியக் கொள்கை இல்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே கூட் டத்தில் ஒருவரை எழுப்பி, ''உனக்கு ஐந்து க­மா தெரியுமா?'' என்று கேட் பார். இந்த ஐந்து க­மாக்கள் என்ப தெல்லாம் மார்க்கத்தில் இல்லை, இதைத் தெரிந்திருந்தால்தான் ஒருவர் முஸ்­ம் என்பதும் இல்லை என்ற மார்க்க ஞானம்கூட அவருக்கு இருக்க வில்லை.



எனினும் மக்களுக்கு ஒரு தேட்டம் இருந்தது. ஒரு தேவை இருந்தது. அந்தத் தேட்டத்தையும், தேவையையும் பழனிபாபா நிறைவேற்றினார்.



அவரது பேச்சில் அனல் பறக்கும். ஆங்கிலம் ஆட்டம் போடும். பிசிறடிக்காத அந்தப் பேச்சு இளைஞர்களைத் தன் வசப்படுத்தியது. அதன் விளைவு அவர் சென்று வரும் ஊர்களில் கலவரத் தீ பற்றிக் கொள்ளும் என்றானது.



அந்தக் கலவரத் தீயால் உயிர்களும், உடைமைகளும் சேதமாகும். எனவே அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி சிறைவாசம்!



இங்கே நாம் இதைக் குறிப்பிடக் காரணம், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஒரு வெற்றிடம் நிலவியது. அதை நிரப்புவதற்கு அப்போது யாருமில்லை. சமுதாயத்தி­ருந்து யார் அந்த வெற்றிடத்தை நிரப்ப முன் வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் காத்திருந்தது. அவரிடம் மார்க்கம் இருக்கின்றதா? என்ற தரத்தையெல்லாம் யாரும் பார்க்கத் தயாரில்லை.



சமுதாய உணர்வு, வீரம் உள்ள எவர் வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் தயாராக இருந்தது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.


இன்ஷா அல்லாஹ்... தொடரும்....



சத்தியத்திற்கு ஜாக்; சமுதாயத்திற்கு பி.டி.பி.

இந்த வெற்றிடம்தான் தவ்ஹீத் ஜமா அத்தினரிடம் ஒரு கேள்விப் புயலை மீண்டும் மீண்டும் கிளப்பியது. அதிலும் குறிப்பாக ஜாக்கின்
 மேல்மட்ட நிர்வாகக் குழு உறுப்பினருக்குக்கூட பி.டி.பி. மீது பகிரங்கக் காதல்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் பாணியில், அவரது பாதையில், தங்கள் பெற்றோர், உற்றாரைப் பகைத்துக் கொண்டு ஒன்று கூடியிருக்கும் ஓர் இயக்கத்தில், அதிலும் குறிப்பாக அதை வழி நடத் தும் உயர் பொறுப்பி­ருந்து கொண்டு, ஷிர்க்கைக் கொள்கையாகக் கொண்ட பி.டி.பி. தலைமை மீது காதல் கொள்கிறார்; புகழ்கிறார்; போற்றுகிறார் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் வெற்றி டம் என்ற கோளாறுதான்.

தவ்ஹீத் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடமே இந்த நிலை என்றால் தவ்ஹீத் இயக்கத்தில் உள்ள சாதாரண உறுப்பினர்களின் நிலை என்ன? உண்மையில் அவர்களிடமும் பி.டி.பி.யில் ஈடுபாடு இருந்தது. இன்னும் சிலருக்கு ஜிஹாத் கமிட்டியின் மீது நாட்டம் இருந்தது. இதுதான் பீ.ஜே.யை சமுதாயப் பிரச்சினையை நோக்கிக் கொண்டு சென்றது.

அப்போதிலிருந்து அவரது மேடைப் பேச்சுக்கள் சமுதாயப் பிரச்சினையையும் மையமாகக் கொண்டு சுழன்றது. மத்திய, மாநில அரசுகள், அரசியல்வாதிகள், கட்சிகள் முஸ்லி­ம்களுக்குச் செய்த துரோகங்களைத் தோலுரித்துக் காட்டியது.

பழனிபாபா, அப்துந் நாஸர் மதானி போன்று மக்களின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விடாமல், மக்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்தது. விடிவு காலம் இல்லை என்று விரக்தியில் வீழ்ந் திருந்தவர்களை வீறு கொண்டு எழ வைத்தது.

அத்துடன், சமுதாய வெற்றி என்பது சத்தியக் கொள்கை மூலமே சாத்தியம் என்பதை உணர்த்தி, மக்களை அசத்தியத்தி­ருந்து சத்தியப் பாதைக்குக் கொண்டு வந்தது.

சத்தியப் பேச்சுடன் சமுதாயப் பேச்சையும் கலந்து கொடுக்க ஆரம்பித்த மாத்திரத்தில் ஜாக் இயக்கம் பல பரிமாணங்களில் வளர்ச்சி கண்டது. இதனால் சமுதாய மக்கள் நம் மீது கொண்டிருந்த வெறுப்பின் அளவு மிகப் பெரிய அளவில் சரிந்தது.

ஆடியோ, வீடியோ அணிவகுப்பு

அந்தக் கட்டத்தில் வெளி நாடுகளில் இளைஞர் வட்டாரங்களில் மிக வேகமாக வலம் வந்தவை பழனிபாபா அவர்களின் ஒலி­ நாடாக்கள்தான். அந்த இடத்தை பீ.ஜே.யின் ஒலி­ நாடாக்கள் பிடித்தன. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

ஆடியோ, வீடியோ கேஸட்டுகள் வளைகுடா நாடுகளில் சமுதாய உணர்வுள்ள மக்களிடம் அணிவகுத்தன.

பீ.ஜே.யின் இந்த சத்தியப் பேச்சு அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தினரையும் ஓர் உலுக்கு உலுக்கியது. தமிழகத்தையே குலுக்கியது.

யாரையும் தடாவில் கைது செய்யலாம் என்ற ஒரு குட்டி அவசர நிலைப் பிரகடன நிலை மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த காலகட்டத்தில் பீ.ஜே. பேசிய பேச்சுக்கள் ஓர் அக்னிப் பிரவேச மாகும்.

சமுதாய மக்களை உசுப்பியும், உயிர்ப்பித்தும்விட்ட அந்த உரைகளில், ''இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய சதி'' என்ற தலைப்பில் பீ.ஜே. பேசிய பேச்சாகும். மேலப்பாளையம் பஜார் திட­ல், 94 அல்லது 95ல் ஆற்றிய இந்த உரை, உலகளாவிய வரவேற்பைப் பெற்றது. மதச்சார்புடைய கொள்கையைக் கொண்ட இலங்கையில் முஸ்­லிம்களுக்கு வழங்கப்படும் பிரதிநிதித்துவம், மதச்சார்பற்ற கொள்கையுடைய இந்தியாவில் வழங்கப்படவில்லை என்பதை மையப்படுத்தி இந்தப் பேச்சு அமைந்திருந்தது.

நாடாளுமன்றத்தி­ருந்து, வானொலி­, தொலைக்காட்சிவரை முஸ்லிம்களுக்கு இலங்கையில் வழங்கப்பட்டிருந்த பிரதிநிதித்துவத்தையும், இந்தியாவில் முஸ்லி­ம்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதையும் ஒப்பு நோக்கி அவ்வுரையில் பேசிய பேச்சு, பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. அவர்களைச் சிந்திக்க வைத்தது.

''இதைத்தான் யார் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது இவர்தான் பேசியிருக்கிறார்'' என்று கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த முஸ்­லிம் சகோ தரர் ஒருவர் மனநிறைவுடன் குறிப்பிட்டது இன்னும் காதில் ரீங்காரமிடுகின்றது. இப்படி ஒரு பாராட்டைத் தெரிவித்த அவர் ஆரம்பத்தில் தவ்ஹீதை முழு மூச்சாக எதிர்த்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.

இப்படி மக்களின் உள்ளங்களைச் சுண்டியிழுத்த இந்தப் பேச்சு மத்திய, மாநில உளவுத் துறையினரின் அகலாத ஆந்தைப் பார்வைக்கும் உள்ளானது.

சத்தியப் பிரச்சாரத்துடன் சமுதாயப் பிரச்சினையையும் கையில் எடுத்ததால் மத்திய, மாநில அரசுகளின் கழுகுப் பார்வைக்கும் பீ.ஜே. ஆளானார். அதனால்தான் இதை ஓர் அக்னிப் பிரவேசம் என்று குறிப்பிட வேண்டியுள்ளது.

ஆனால் அதுவும் அழைப்புப் பணிக்கு அடுக்கடுக்கான பலன்களைத் தந்தது. அதிகமான ஆட்களை சத்தியத்தில் கொண்டு வந்து சேர்த்தது.

இது, சத்தியப் பேச்சு என்ற ஆயுதத்தால் கிடைத்த வெற்றியாகும். அடுத்தது எழுத்துப் பணி!

மாத இதழ் அல்ல! மந்திர இதழ்!

தவ்ஹீத் ஜமாஅத்தினரின் கையில் இருந்த ஒரே ஒரு மாத இதழ் அல் ஜன்னத்தான். ஆனால் அன்று அது ஒரு மந்திர இதழாக இருந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, அதில் பீ.ஜே. தீட்டிய நுழைவாயில் (தலையங்கம்) பகுதி வாசகர்களின் உள்ளங்களை சத்தியத் தின் பக்கம் வளைத்துப் போட்டது.

சமுதாய மாற்றத்திற்கு தவ்ஹீத் கொள்கைதான் அவசியம் தேவை என்ற சிந்தனையை அவர்களின் உள்ளங்களில் பதிவு செய்தது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவ்விதழ், அவர்களைச் சத்தியத்தின் பக்கம் வரவழைத்தது. (இன்று இவ்விதழ் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகளை விட்டு விட்டு, அதற்கு எதிரான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது வேறு விஷயம்)

தவ்ஹீத்வாதிகளின் தடா எதிர்ப்புப் பேரணி

பேச்சு, எழுத்து என்ற இவ்விரு ஆயுதங்களைக் கொண்டு அல்லாஹ்வின் அருளால் நடத்திய அக்கினிப் பிரவேசத்தின் உச்சக்கட்டம்தான், தடா எதிர்ப்புப் பேரணி! 'இம்' என்றால் சிறைவாசம்! ஏன் என்றால் வனவாசம் என்ற அடிப்ப டையில் இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சில சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லி­ம்கள் சரமாரியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

தமிழகத்தில் ஒரு குட்டி அவசர நிலைப் பிரகடனம்தான் அப்போதைய ஜெயல­லிதா ஆட்சியில் நடைபெற்றது என்று உறுதியாகக் குறிப்பிடலாம்.

ஜெயல­தா ஆட்சியை எதிர்த்து சமுதாயமே குரல் கொடுப்பதற்கு அஞ்சிய காலம் அது! அடங்கிப்போன காலம் அது! காவல் துறையின் கைகள் கட்ட விழ்த்து விடப்பட்டிருந்த காட்டு தர்பார் அது!

குரல் கொடுப்பவரின் குரல்வளை நெறிக்கப்படும். கூட்டம் சேர்ப்பவரின் குறுக்கு உடைக்கப்படும். இக்கால கட்டத்தில்தான் மேலப்பாளையத்தில் திருக் குர்ஆன் மாநாட்டைத் தொடர்ந்து நடை பெற்ற தடா எதிர்ப்புப் பேரணி!

அனுமதி மறுத்த அன்றைய தலைமை

இந்தப் பேரணி நடத்துவதற்கு அன்றைய தலைமையிடம் அனுமதி கோரிய போது கமாலுத்தீன் மதனி அனுமதி தர மறுத்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்க ளுக்குப் பிறகு அனுமதி கிடைத்தது.

முதல் நாள் திருக்குர்ஆன் மாநாடு! இரண்டாம் நாள் பேரணி! அதன் முடிவில் ஒரு பொதுக்கூட்டம். இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம் இந்தப் பேரணிதான்.

சமுதாய இயக்கங்கள் சமாதி ஆன பின், சத்திய இயக்கமான தவ்ஹீத் ஜமாஅத் (ஜாக்) நடத்திய இந்தப் பேரணியில் இளைஞர் பட்டாளம் குவிந்தது.

நஜாத்காரன், நஜாத்காரன் என்று நம்மைத் தூர வைத்த, தூக்கி எறிந்த, தூற்றி எறிந்த சுன்னல் வல் ஜமாஅத்தினர் சாரை சாரையாக அணி வகுத்தனர். சிறைக் கைதிகளை விடுவிக்கச் சொல்­ சிங்கங்களாய் கர்ஜித்தனர். பெண்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது அந்த காலகட்டத்தில் புது அத்தியாயமாகும்.

தமிழகத்தில் தடாவை எதிர்த்து யாரும் குரல் உயர்த்தாத கால கட்டத்தில், இந்த தடா எதிர்ப்புப் பேரணியில் தங்கள் குழந்தை குட்டிகளுடன் தாய்மார்கள் கலந்து கொண்டது அதிகார வர்க்கத்திற்கு ஓர் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்தது.

தமிழகம் எங்கும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்களில் பெருமளவு பெண்கள் பங்கேற்பதற்கு அடிப்படையாகவும், அஸ்தி வாரமாகவும் அமைந்தது இந்தத் தடா எதிர்ப்புப் பேரணிதான்.

அல்லாஹ்வின் அருளால் அன்று தடா எதிர்ப்புப் பேரணியில் அடியெடுத்து வைத்த தாய்மார்கள் குடந்தை இடஒதுக்கீட்டுப் பேரணி, சிறை நிரப்பும் போராட்டம்வரை பங்கெடுத்து, தமிழகத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முஸ்லி­ம் இயக்கங்களில் தாய் மார்களை அதிகமாகக் கொண்டிருக்கும் அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத்துதான் என்ற தனிப் பெயரைப் பதிவு செய்வதற்கு அவர்கள் காரணமாக அமைந்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


பொது சிவில் சட்டம் என்ற புது சதித் திட்டம்

இப்படி தடாவை எதிர்த்து ஒரு போர் நடந்து கொண்டிருக்கும்போதே மீண்டும் ஒரு போர் முழக்கம் செய்ய வேண் டிய புது சோதனை உருவெடுத்தத
ு.

பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டபின்இ உடைந்து கிடந்த சமுதாயத்தை மேலும் உடைப்பதற்கு ஒரு புதுப்பிரச்சினை பூதாகரமாகக் கிளம்பியது. புயலாகப் புறப்பட்டது. அதுதான் பொது சிவில் சட்டம்.

சமுதாயம் மரண மவுனத்தில் கிடந்த சந்தர்ப்பத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும்படி சுப்ரீம் கோர்ட், மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இப்படி ஒரு உத்தரவை உச்ச நீதி மன்றம் வெளியிட்ட மாத்திரத்திலேயே அதைச் சமுதாயம் மிருக பலம் கொண்டு எதிர்த்தாக வேண்டும். அவ்வாறு எதிர்க்க வேண்டுமென்றால் சமுதாயம் அதன் தீமையை நன்றாக விளங் கியிருக்க வேண்டும்.

பொது சிவில் சட்டத்தின் பூதாகரமான பாதகங்களை சமுதாயத்திற்குப் புரிய வைக்கும் பணியை யாரும் செய்ய வில்லை. இந்த சமயத்தில் தமிழகத்தில் இந்தப் பணியை தவ்ஹீத் ஜமாஅத் தான் செய்தாக வேண்டிய நிலை.

அரசியல் பண்டிதர்கள், அரசியல் ஞானம் பெற்றவர்கள்இ அரசியல் சட்ட மேதைகள் என்று யாரும் அன்று தவ் ஹீத் ஜமாஅத்தில் இல்லை. அதிலும் பீ.ஜே. களமிறங்கினார். அதன் ஆக்கம் தான் பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு என்ற கட்டுரை!

அல்ஜன்னத்தில் அன்று வெளியான இந்த ஆக்கம் ஏகத்துவ அழைப்பாளர்கள், பொது சிவில் சட்டத்தின் பாதகங்க ளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும், சமுதாயப் பிரச்சினையில் நமது பங்களிப்பு எத்தகையது என்பதை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டும் வகையிலும் தனியாக வெளியி டப்பட்டுள்ளது.

சட்டம் படித்த வழக்கறிஞர்களும் விளக்குவதற்குத் தாளம் போடும் இந்தப் பொது சிவில் சட்டத்தைப் பாமரனுக்கும் விளங்கும் வகையில் மிக எளிய பரிமாணத்தில் சகோதரர் பீ.ஜே. அளித்திருந்தார்.

இது எழுத்தளவில், ஏட்டளவில் நின்று விடாமல் பொதுக் கூட்டங்களிலும் பீ.ஜே. உரை நிகழ்த்தினார். பொது சிவில் சட்டத்தைப்பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் வியக்கின்ற அளவில் அவரது உரை அமைந்திருந்தது. இந்த உரை ஒளி, ஒலி நாடாக்களில் பதிவு செய்யப் பட்டு உலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம்களைச் சென்றடைந்தது.

இந்தப் பணியை அன்று எந்த இயக்கமும் செய்யவில்லை. தமிழக மக்களிடம் கொண்டு செல்லவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்தான் இதை மக்களிடம் கொண்டு சேர்த்தது.

பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களின் பிணத்தின் மீதுதான் அமலாகும் என்ற பேச்சு மத்திய அரசின் காதில் விழுந்தது. அதனால் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அது செவி சாய்க்கவில்லை.

இப்படிப் பொது சிவில் சட்டத்தைப் பற்றிய ஒரு பொது விழிப்புணர்வை அன்று மக்களிடம் ஊட்டியதும் உணர்த் தியதும் தவ்ஹீத் ஜமாஅத்தான். பொது சிவில் சட்டத்திற்கு எதிரான இந்தப் போர் முழக்கம், முஸ்லிம்களை தவ்ஹீதின் பக்கம் ஈர்த்தது.

இதுபோன்ற சூழல்கள்தான் நம்மை சமுதாயப் பிரச்சினைகளைக் கையில் எடுப்பதற்குத் தள்ளியது என்பதற்கு இது மற்றோர் எடுத்துக்காட்டு!

ஜெயலலிதா ஆட்சியின்போது, ஒரு காலகட்டத்தில் தமிழகத்தில் இந்துத் துவா சக்திகளின் இஸ்லாமிய விரோதப் போக்கு ஓர் எல்லையைக் கடந்து சென்றது. காமத்தில் மிஞ்சியது கன்னி மேரியா? கதீஜாவா? மணியம்மையா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அந்தத் தீய சக்திகள் விஷம் கக்க ஆரம் பித்தன. அப்போதும் சமுதாயம் மயான அமைதியில்தான் இருந்தது. அதற்கும் ஆக்கப்பூர்வமான எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டியவர்கள் தவ்ஹீத்வா திகள்தான் என்ற நிலை ஏற்பட்டது.


ராஜகோபாலன் கொலை

இப்படிப்பட்ட அக்கினிப் பிரவேசத்தின்போது மதுரையில் இந்து முன்னணி தலைவராக இருந்த ராஜகோபாலன் என்பவர் கொலை செய்யப்படுகின்றார். அதில் ஜாக் இயக்கத்தைத் தொடர்புப டுத்தி செய்திகள் வெளியானது. அதற்கு மறுப்பும் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாகத்தான் எஸ்.எம். பாக்கர் தடாவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் அமைப்பு ரீதியாக ஜாக்கில் இல்லாவிட்டாலும் சமுதாயப் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுத்து வந்ததால் பீ.ஜே.யுடன் சேர்ந்து சமுதாயக் களப்பணியாற்றினார்.

அவர் தடாவில் கைது செய்யப்பட்டது தவ்ஹீத்வாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியானது. அப்போதுதான் ஓர் ஆழமான சிந்தனை தோன்றுகிறது. இன்று பாக்கர்! நாளை பீ.ஜே. என்று இந்தக் கைதுப் படலம் தொடரும். எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை முளையிலேயே கிள்ளி விட வேண்டும். அதற்கு வழி என்ன?

அப்போது வ­மையாக இருந்த ஜமாஅத் அமைப்பு ஜாக்தான். ஆனால் ஜாக்கின் தலைவர் கமாலுத்தீன் மதனி, இன்னும் சில செல்வந்தர்கள் இது போன்ற விஷப்பரீட்சைக்கு வரமாட் டார்கள்.

உளவுத் துறையின் ஆந்தைப்பார் வைக்கு அல்ஜன்னத் ஆளாகியிருக்கின்றது என்று தெரிந்த மாத்திரத்திலேயே பேர்ணாம்பட்டைச் சார்ந்த ஒரு செல்வந்தர் தலைதெறிக்க ஓட்டமெடுத்தார். அதில் ஒருபோதும் ஓட்டமெடுக்காத, ஆட்டம் காணாத செல்வந்தர் அதே பேர்ணாம்பட்டைச் சார்ந்த அன்வர் பாய் மட்டுமே!

இவரைத் தவிர்த்து கமாலுத்தீன் மதனி உட்பட செல்வந்தர்கள் இதற்கு இசைய மாட்டார்கள். இதற்கு என்ன செய்வது? இதற்கான ஆலோசனை அல் ஜன்னத் அலுவலகத்தில்தான் நடைபெற்றது. விடை கிடைத்தது. விடிய விடியப் பேசி ஒரு விடை கிடைத்தது. கூட இருந்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள். அவர்தான் நமக்கு அரசியல் குரு என்ற உண்மையை இங்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அவர் ஆலோசனை மட்டும் தர வில்லை. ஒரு அமைப்பையும் சேர்த்தே தந்தார். அதுதான் தமுமுக.

இப்போது தமுமுகவின் தலைவர்களாக வலம் வரக் கூடியவர்களுக்கு இந்த அமைப்பை உருவாக்குவதில் பெரிய பங்களிப்பு ஏதும் இல்லை. இதற்கு ஆதரமாக தமுமுக முத­ல் வெளியிட்ட பைலாவின் முதல் பக்கத்திலேயே காணலாம்!

தமுமுக துவங்கும்போது ஜவாஹிருல்லாவோ, ஹைதர் அலியோ மக்களால் அறியப்பட்டவராக இருக்க வில்லை. இவர்களது அழைப்பை ஏற்று வரக் கூடிய ஐம்பது பேர்கூட தமிழகத்தில் இருக்கவில்லை. மக்களை ஈர்க்கக் கூடிய சொல்லாற்றலும் இவர்களிடம் இருக்கவில்லை. கடந்த காலங்களில் சமுதாயத்துக்கு தியாகம் செய்த வரலாறும் இருக்கவில்லை.

பீ.ஜே. அவர்கள் பதினைந்து ஆண்டுகள் அடி உதைபட்டு கொள்கைச் சகோதரர்களையும், பிரச்சாரகர்களையும் உருவாக்கியிருந்ததால் - அவரே தமுமுகவின் தூணாகவும், முதல் நிலை தகுதி யுடையவராகவும் இருந்தார்.

நெருக்கடியான காலங்களில் எந்தப் போராட்டத்திலும் அதன் தற்போதைய தலைவர் கலந்து கொண்டதில்லை. பின் வாங்கி விடுவார். இப்போது கருணா நிதியின் சிறுபான்மைப் பிரிவாக ஆன பின்பு போராட்டத்தில் கலந்துகொள் ளும் துணிவு (?) அவருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய பொதுச்செயலாளர் 6வது இடத்திலும், இப்போதைய தலைவர் 76வது இடத்திலும் இருப்பதைக் காண்க!

இப்பேதைய தமுமுக தலைவவரின் பொதுச்செயலாளரின் அன்றைய நிலை தெரியும். பாக்கரைக் கைது செய்த காவல்துறை, மற்றவர்களையும் வேறு ஏதேனும் வழக்கில் தூக்கிப் போட்டு விடக் கூடாது. அதற்கு உடனே ஒரு தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கரின் கைதைக் கண்டித்தாக வேண்டும். அதற்கு மக்கள் கூட்டம் திரள வேண்டும்.

50 பேர் திரண்டால் காவல்துறை யிடம் அதற்கு ஒரு பார்வை! 100 பேர் திரண்டால் அதற்கு ஒரு பார்வை! 200 பேர் என்றால் காவல்துறையின் பார்வையில் ஒரு மாற்றமிருக்கும். 500 பேர் என்றால் அதற்கு ஒரு மரியாதை! மக்கள் நினைத்ததைச் சாதிக்கலாம். நாம் நான்கு பேர் கூடிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் என்ன பேசினாலும் அது காவல்துறையிடம் எடுபடாது. நமது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைதான் பேசும். அந்தப் பேச்சுதான் எடுபடும் என்ற அரசியல் அடிச்சுவட்டைப் போதித்தவர் குணங்குடி ஹனீபா அவர்கள்.

அவரது ஆலோசனைப்படி அந்தப் பேரணி சென்னை மன்றோ சிலைக் கருகில் திரண்டது. அங்கிருந்து கிளம்பி தலைமைச் செயலகம் நோக்கிப் புறப்பட்டது. இடையில் பாரிமுனை சிக்ன ­ல் நிறுத்தப்பட்டது. தமுமுகவின் முதல் பொதுச்செயலாளர் பொறியாளர் அப்துஸ்ஸமது, தலைவர் குணங்குடி ஹனீபா மற்றும் சிலர் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்து விட்டு வந்தனர்.

இதுதான் தமுமுகவின் முதல் பேரணி! இப்பேரணியில் மக்கள், வெள்ளம்போல் குவிந்தனர். தவ்ஹீத் மக்கள் தான் இதில் வந்து குவிந்தனர். அவர்களைப் பார்த்து மற்ற பொதுமக்களும் வந்து கலந்து கொண்டனர்.

குணங்குடி ஹனீபா அவர்கள் கூறியது போன்று இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, காவல்துறையின் பார்வையில் கண்ணியத்தை மட்டுமல்ல! ஒரு கலக் கத்தையும் ஏற்படுத்தியது.

இங்கு உறுதியாக ஒரு கருத்தைப் பதிவு செய்து கொள்கிறோம். அன்று தமிழகத்தில் வலிமை பெற்ற அமைப்பு, இன்னும் சொல்லப்போனால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகின்ற மக்கள் சக்தி கொண்ட அமைப்பாக ஜாக் என்ற தவ்ஹீத் அமைப்புதான் இருந்தது. அந்தத் தவ்ஹீத் மக்களை முதலீடாக, மூலதனமாகக் கொண்டுதான் தமுமுக என்ற அமைப்பு துவங்கியது என்பதை அழுத்தமாக மீண்டும் பதிவு செய்ய விரும்பு கிறோம்.

பீ.ஜே.வின் மதிப்பு என்ன? என்பதை அந்த மக்கள் விளங்கி வைத்திருந்தார்கள். காவல்துறையின் அடுத்த குறி, அக்னிப் பிரவேசம் மேற்கொண்டிருக்கும் பீ.ஜே.வை நோக்கித்தானே என்ற கவலைதான் அந்த தவ்ஹீத் மக்களை இயக்கியது. அதுதான் அவர்களை அங்கு வந்து குவித்தது.

பாக்கருக்காக இப்படியொரு ஆர்ப்பாட்டத்தைச் செய்து விட்டு அமர்ந்த ருப்போம். அதற்குள்ளாக ஒரு சில மாத இடைவெளியில் அடுத்தகட்ட நடவடிக்கை ஆரம்பித்தது. காரைக்கா­ல் ஜாக்கின் கட்டுப்பாட்டில் இருந்த ஜாமிஆ புஷ்ரா பெண்கள் மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜே.எஸ். ரிபாயி கைது செய்யப்பட்டார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...



முதல் மற்றும் கடைசி உண்ணாவிரதப் போர்

மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜாக் தலைமையிடம் இது தொடர்பாக பீ.ஜே. தொடர்பு கொண்டார். கலந்து பேசினார்.

ரிபாயியைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், காவல்துறை அதிகாரி இந்திர ஜித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உண்ணாவிரதம் நடத்துவதற்கு கமாலுத்தீன் மதனியிடம் பீ.ஜே. அனு மதி கேட்கின்றார். பலத்த யோசனை, தயக்கம், தடுமாற்றத்திற்குப்பின் அனுமதி கிடைக்கின்றது.


தலைவர் என்ற முறையில் தவ்ஹீத் மக்களைத் திரளுமாறு அழைப்பு விடுங்கள். தமுமுக என்ற பெயரில் அழைத்தால் மக்கள் வரமாட்டார்கள் என்று பீ.ஜே. வ­யுறுத்தினார். ஆனால் கமாலுத்தீன் மதனி அதற்கு உடன்பட வில்லை. எனது தலைமையில் உள்ள மக்களை, ஹனிபாவின் பின்னால் திரளுமாறு நான் அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார். இரண்டு தலைமை ஏற்படுவதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். அப்பாவிகள் கைது செய்யப் பட்டது அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவேயில்லை.

நீங்கள் அழைப்பு விடுக்காவிட்டால், பீ.ஜே. என்ற என் பெயரிலேயே மக்களை அழைப்பேன். நீங்கள் அழைப்பு விடுக்காமலே தவ்ஹீத் சகோதரர்கள் நிச்சயம் திரளுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். தனது தலைமைப் பீடம் டம்மியாகிவிடும் என்று அஞ்சிய தால் கீழிறங்கி வந்து, ஜாக் தலைவர் என்ற பெயரில் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அதைப் பிரசுரங்களாக வெளியிட்டோம்.

கமாலுத்தீன் மதனியின் பதவி ஆசை இப்போதுதான் தெளிவாக அனைவருக்கும் தெரிந்தது. தமுமுக என்பதற்கு தவ்ஹீத் மக்களைத் தவிர அன்றைக்கு கடுகளவு ஆதரவும் இருக்கவில்லை என்பதும் இதி­ருந்து தெளி வாகும்.

தவ்ஹீத்வாதிகளின் எழுச்சிமிகு உரையில் ஊர்கள் தோறும் தமுமுக கிளைகள் வேரூன்றின. இத்துடன் தவ்ஹீத் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இயக்கத்தில் இணைந்தனர்.

இயக்கம் வளர்ந்துவிட்டபின் இனி மேல் இயக்கம் தடை செய்யப்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டு, தமுமுக வுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டபின் பீ.ஜே. அமைப்பாளர் பொறுப்பி­ருந்து விலகினார். இப்போது இருப்பவர்கள் நல்ல தலைவர்கள் கஷ்டமான காலத்தில் நான் விட்டு விட்டு ஓடவில்லை. இனிமேல் நானில்லாவிட்டாலும் இயக்கத்தை சிறப்பாக நடத்துவார்கள் என்று மனம் திறந்து மடல் எழுதி, பொறுப்பிலிருந்து விலகினார்.

மாபெரும் மக்கள் இயக்கமாக ஒரு இயக்கத்தை வளர்த்துவிட்டு, அதன் முதல் நிலைத் தலைவராக இருக்கும் ஒருவர் மன நிறைவோடு ஒதுங்குவது எங்குமே நடந்திராத ஒன்று. இவர்கள் நன்றாக இயக்கத்தைக் கொண்டு செல்வார்கள் என்று பீ.ஜே.யை இவர்கள் நம்ப வைத்திருந்தார்கள்.

ஆனால் பீ.ஜே. முழுமையாக இயக்கத்தை இவர்கள் கையில் ஒப்படைத்த பிறகுதான் இவர்கள் நயவஞ்சக வேடம் போட்டது ஒவ்வொன்றாக அம்பலமானது.

பீ.ஜே. பொறுப்பி­ருந்து விலகியது முதல், பிஞ்சிலே பழுத்த ஒருவரை ஊர்கள்தோறும் அனுப்பி, நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து தவ்ஹீத்வாதிகளைக் களையெடுத்தனர்.

தவ்ஹீத்வாதிகளுக்கும், மற்றவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு நியாயம் கேட்டு தலைமையை அணுகினால் தமுமுக பொறுப்பில் இருப்பது என்றால் பிரச்சினைக்குரியவற்றை விட்டுவிலக வேண்டும் என்று இப்போதைய தலைவரும், செயலாளரும் எச்சரிக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.

பொறுப்பில் இருந்து பீ.ஜே. விலகினாலும் அமைப்புக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆலோசனை கேட்கும் போதெல்லாம் ஆலோசனை வழங்கத் தவறவில்லை. அதேசமயம் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலைபோவதைக் கவனித்து கவலைப்பட்டார். அந்த அளவுக்கு கீழ்த்தரமாகச் செல்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டார்.

ஜாக்கில் இருந்து கொண்டே, கமாலுத்தீனின் பணத்தாசை, பதவிவெறி யைக் கண்டு புழுங்கியது போன்ற நிலை ஏற்பட்டது. தவ்ஹீத் தாயிகள் மத்தியில் அதிருப்தியும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட தவ்ஹீத்வாதிகளுக்கு உதவமுடியாத நிலையில் இருக்கிறோமோ என்று வேதனைப்படும் அளவுக்கு தமுமுக தவ்ஹீதுக்கு எதிராகக் காய்களைத் திட்டமிட்டு நகர்த்தி வந்தது.

உண்ணாவிரதம் சென்னை குறளகத்திற்கு எதிரில் நடைபெறுகின்றது. மக்கள் அந்தப் போராட்டத்திற்கும் வந்து கலந்து கொண்டனர். காவல்துறையின் கண்களை மிரளச் செய்யும் அளவுக்கு மக்கள் கூட்டம்.

ஆம்! தவ்ஹீத்வாதிகளின் கூட்டம் வந்து குவிந்தது. குறளகத்திற்கு எதிரில் குரல் கொடுத்தோம்; கைதுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இவர்களில் யார் மீது கை வைத்தாலும் மக்கள் சக்தி திரளும் என்பதை ஒரு முறை அல்ல! இரண்டாவது முறையாக, வ­மையாக எடுத்துக் காட்டினோம்.

(உண்ணாவிரதம் நடத்துவது மார்க்கஅடிப்படையில் கூடுமா? என்பது விவாதப் பொருளாகி, இறுதியில் கூடாது என்று முடிவானது. இதனால் அன்றிருந்து உண்ணாவிரதத்தைக் கை கழுவி விட்டோம்.)


ஜாக் - தமுமுக உரசலும் விரிசலும்

தான் தடை செய்யப்படலாம் என்ற கவலை ஜாக்கிற்கு இருந்தது. இந்தத் தயக்கத்தை பீ.ஜே. நன்கு புரிந்து வைத்திருந்தார். அதனால்தான், தன்னால் ஜாக்கிற்கு எந்தவொரு ஆபத்தும் வந்து விடக்கூடாது என்பதற்காக ஜாக்கின் தலைமை நிர்வாகக் குழு பொறுப்பிருந்து விலகினார்.

(இதுவே அவருக்குப் பின்னர் பாதகமானது. அவர் வளர்த்த அந்த ஜாக் இயக்கத்தில் உறுப்பினர் உரிமைகூட இல்லாமல் பறிக்கப்பட்டது)

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாக்கின் அரசியல், சமுதாயப் பிரிவாக தமுமுகவை செயல்படுத்திக் கொள்ளலாம். இதை வெளிப்படையாகக் கூட கமாலுத்தீன் மதனி செய்ய வேண்டியதில்லை. மறைமுகமாக அனுமதி தந்தால் போதும். அதற்காக பொறியாளர் அப்துஸ்ஸமது, குணங்குடி ஹனீபா ஆகியோர் கமாலுத்தீன் மதனியிடம் பைஅத் செய்வதற்குக் கூடத் தயாராக இருந்தார்கள். (அப்போது நாம் 'அமீர்' சித்தாந்தத்தை ஆதரித்த காலம் அது)

பீ.ஜே. உட்பட பலர் மாநில அமீரிடம் ஒரு போராட்டத்தையே நடத்தினார்கள். பலப்பல அமர்வுகள்! பலப்பல கலந்தாலோசனைகள்! பல்வேறு கட்ட முயற்சிகள்! இத்தனையும் எதற்கு? இவ்வளவு நாள் வியர்வை அல்ல! இரத்தத் துளிகளால் வளர்ந்த ஓர் இயக்கத்தை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்பதற்காகவே!

ஜாக் என்ற கட்டமைப்பு வருவதற்கு முன்பே தவ்ஹீத் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்த சகோதரர் கலீல் ரசூல் அவர்களும், நானும் தனிப்பட்ட முறையில் கமாலுத்தீன் மதனியை நாகர் கோவி­ல் போய்ச் சந்தித்தோம். நீண்ட நேரம் உரையாடினோம்; கெஞ்சினோம். கல்லும் கரையும் என்பார்கள். ஆனால் கல்மனம் கொண்ட கமாலுத்தீன் மதனி கரையவில்லை.

இதன் பின்னர் திருச்சி அரிஸ்டோ ஹோட்ட­ல் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள தாயீக்கள் கலந்து கொண்டனர். அதில் தமுமுகவின் அப்போதைய செயல்பாடுகள் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியிருந்து பீ.ஜே. எடுத்து வைத்தார்.

நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்குப் பிறகு கமாலுத்தீன் மதனி, நான் பரிசீலித்து விட்டுச் சொல்கிறேன் என்று இறுதியில் சொல்­விட்டுப் போனார். பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் பேசுகின்ற மேடை தோறும் தமுமுவை விமர்சிக்கலானார்.

கமாலுத்தீன் மதனி, தமுமுகவை அடாது விமர்சித்தாலும், விடாது நமது தரப்பில் சமரச முயற்சிகளை மேற்கொண்டோம். ஜாக் உருவாக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் பங்கெடுத்து, உழைப்பு தியாகங்கள் செய்த சகோதரர்களைத் திரட்டி மீண்டும் அதே அரிஸ்டோ ஹோட்ட­ல் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மக்களைத் திரட்டும் பணியில் நானும், ஸைபுல்லாஹ் ஹாஜா, அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோரும் ஈடுபட்டிருந் தோம். ஊர் ஊராகச் சென்று ஆட்களை அழைத்தோம்.

அதன் பின்னர் 31.08.1997 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனது. காரணம், அப்போது மேலப்பாளையத்தில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்களில், சம்பந்தமில்லாமல் நானும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன்.

இந்தக் கூட்டத்திற்குப்பின் ஓர் இணக்கம் ஏற்பட்டது. ஜாக்கின் வேனை எடுத்துக் கொண்டு பீ.ஜே. திருச்சியில் நடைபெற்ற தமுமுக கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட அந்த இணக்கம் அற்ப ஆயுளிலேயே முடிந்து விட்டது. அந்த வருடம் ரமளான் பிறை விஷயத்தில் கமாலுத்தீன் தான்தோன்றித்தனமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் ஜாக் - தமுமுக உறவில் உரசல் அல்ல! விரிசல் ஏற்பட்டது.


தவ்ஹீத் பிரச்சாரக் குழு உதயம்

துளைத்தெடுத்த துரோகங்கள், வரம்பு மீறிய வாக்குமீறல்கள், அடுக்கடுக்கான அவமானங்கள் இவ்வளவுக்குப் பிறகும் இவருடன் இருக்க இயலாது என்பதைவிட இவர் நம்முடன் இருக்க விரும்பவில்லை, நம்மை வெளியேற்ற விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்டோம்.

வெளிநாட்டுத் தொடர்புகள், தொடர் வரவுகள் இவையெல்லாம் அவருக்குத் தன்னிறைவையும், தலைக்கனத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அதனால் ஜாக்கி­ருந்து வெளியேறி தவ்ஹீத் பிரச்சாரக் குழு என்ற இயக்கத் தைக் கண்டோம்.

தமுமுக என்ற அமைப்பு நம்மிடம் இருந்தாலும் தவ்ஹீதுக்கு என்று தனி அமைப்பு இருக்கட்டும் என்றெண்ணி இந்த அமைப்பைத் துவக்கினோம். அதற்கு ஹாமித் பக்ரி தலைவராக இருந்தார். அதன் பிறகு நான் (ஷம்சுல்லுஹா) தலைவராக நியமிக்கப்பட்டேன்.

இந்த அமைப்பின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, செய்யது முஹம்மது மதனீ, ஆர்.டி.ஓ.வில் பணி புரிந்த பஷீர் ஆகியோரின் முயற்சியில், நாகர் கோவில் ஹனீபா நகர் பள்ளிவாச­ல் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது. இதை சகோதரர் எம்.எஸ். சுலை மான் முன்னின்று ஏற்பாடு செய்தார்.

இந்த சமரசக் கூட்டத்திற்கு வர மாட்டேன் என்று கமாலுத்தீன் முரண்டு பிடித்தார். கடைசியில் ஒருவாறாக அவரைப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

இறுதியில் பீ.ஜே. ஒரு சில கோரிக் கைகளை அல்லது நிபந்தனைகளை முன் வைத்தார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


1. ஜாக்கில் உள்ள கொள்கைவாதிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்.

(நாங்கள் ஜாக் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை என்ற நிலை இருந்தது. பீ.ஜே. உட்பட அனைவருக்கும் இந்த கதி! எனவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது)

2. நிர்வாக சீரமைப்பு

இன்னும் இதுபோன்ற சில நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த எஸ். கமாலுத்தீன், நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் அவர்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவை உடனே கலைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதற்கு பீ.ஜே. நாங்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். ஆனால் மூன்று மாதங்களுக்கு இந்தப் பெயரில் செயல்படமாட்டோம். அதற்குள் எங்கள் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்.


காரணம், அடிக்கடி எஸ். கமாலுத்தீன் இப்படி வாக்குறுதி கொடுத்துவிட்டு மாறு செய்வார். வாக்கு றுதியை மீறுவார். எனவே தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். இந்த மூன்று மாதங்களுக்குள் நாங்கள் வைத்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பீ.ஜே. கேட்டுக் கொண்டார். அதற்கு நாங்கள் பொறுப்பு என்று சமரசக் குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


ஆறப்போட்டு நாறடித்தல்

ஆறப்போட்டு நாறடிக்கும் கலையில் வல்லவர் நரசிம்மராவ்! ஆனால் அவரை மிஞ்சிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது எஸ். எஸ். கமாலுத்தீன்தான். காலை வாருவதில் கை தேர்ந்த கமாலுத் தீன் மதனி வழக்கம்போல் இந்த சமரச முயற்சியிலும் காலை வாரினார். இம் முயற்சியில் இறங்கியவர்களின் முகத்தில் கரியைப்பூசினார்.

இனிமேல் நாம் நமது வழியில் தவ்ஹீதைச் சொல்வோம் என்று பிரச்சாரக் குழு என்ற பெயரிலேயே தவ்ஹீத் பணி தொடர்ந்தது. தவ்ஹீத் இயக்கத்தில் இருந்துகொண்டே சத்தியப் பணி யையும் சமுதாயப் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டும் என்ற எங்கள் முயற்சி, கமாலுத்தீனின் வறட்டுப் பிடி வாதத்தாலும், வாக்குமீறல்களாலும் தோற்றுப் போயிற்று! நாங்கள் வளர்த்த ஜாக்கை விட்டுவிட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டவே இந்தச் சுருக்க வரலாறு.

இப்போது சமுதாயப் பணிக்காகத் தொடங்கிய தமுமுகவின் வரலாறைப் பார்ப்போம்.


அவசரப் பிரசவம்

தமுமுக ஓர் அவசரப் பிரசவம் எனினும் அது அரைகுறைப் பிரசவமல்ல! முழுமையாகப் பிறந்த குழந்தை! ஏற்கனவே இருந்த சமுதாய இயக்கங்கள் அழிந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதுபோன்ற காரணங்கள், கரையான்கள் இதை அண்டக் கூடாது, அணுகக் கூடாது என்பதில் முழுக் கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படை யில்தான் தேர்த­ல் போட்டியிடக் கூடாது என்று கொள்கையாகக் கொள்ளப்பட்டது.

இதனால் தமுமுகவின் ஒவ்வொரு அறிமுக மற்றும் அடுத்த கட்டக் கூட்டங்களிலும், ''நாங்கள் உங்களிடம் ஒரு போதும் எங்களுக்காக ஓட்டுக் கேட்டு வரமாட்டோம்'' என்று வாக்குறுதி அளித் தனர். ''எங்களுக்கு வாக்குக் கேட்டால் எங்களைச் செருப்பால் அடியுங்கள்'' என்று கூடப் பேசியதுண்டு. இப்படி ஓர் உறுதியான குர­ல், உச்சஸ்தாயில் பேசியது மக்களுடைய உள்ளங்களில் ஊடுருவியது.


தவ்ஹீத் ஒரு தடைக்கல்லா?

வெகு வேகமாக இந்த இயக்கம் மக்களிடம் வளர்ச்சி கண்டது. இத்தனைக்கும் பீ.ஜே. ஒரு தீவிர தவ்ஹீத் வாதியாக இருந்தும், (தமுமுக வளர்ச்சிக்கு தவ்ஹீத் ஒருபோதும் தடைக் கல்லாக இருக்கவில்லை) தமுமுக மேடையில் சமுதாயப் பிரச்சினைகளை மட்டும் பேசுவோம்; அங்கு தவ்ஹீதைப் பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கினார். அதன்படி அந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்டது.


தனி இட ஒதுக்கீடும் தவ்ஹீத் ஜமாஅத்தும்

தமுமுக என்ற இந்த சமுதாய இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், ஆணி வேராகவும் அமைந்தது இட ஒதுக்கீடு கொள்கைதான். பாபரி மஸ்ஜித் முதல் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், முஸ்லிம்கள் கிள்ளுக்கீரைகளாக நடத்தப்படுவதற்கும் காரணம் சுதந்திரத்திற்குப் பிறகு, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டதுதான் என்பதைக் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு கோரிக்கையைக் கையில் எடுத்தது. இட ஒதுக்கீடு கிடைத்து விட்டால் தமுமுக வைக் கலைத்து விடுவோம் என்று கூட மக்களிடம் அறிவிக்கப்பட்டது.

இந்த இடஒதுக்கீட்டைக் கையில் எடுத்ததும், ஏற்கனவே சரிந்து விழுந்த சமுதாயம், ''இது சாத்தியமா?'' என்ற கேள்வியை எழுப்பினார்கள். சாத்தியமே என்று கூறி அதை மூலை முடுக்குக ளுக்கு அதன் பேச்சாளர்கள் எடுத்துச் சென்றார்கள்.


தவ்ஹீத் தாயீக்கள்தான் தமுமுக பேச்சாளர்கள்

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள் யார்? அவ்வியக்கத்திற்கென்று பேச்சாளர்கள் கிடையாது. நாவலர், பாவலர் கிடையாது. வாணியம்பாடி வாத்தியார் மட்டும் பாடம் நடத்துவார். அதுவும் இந்தியாவைத் தாண்டி, செசன்யா, கஜகஸ்தான் என்றுதான்.

இந்த இயக்கம் மக்களிடம் போய்ச் சேருவதற்கு தவ்ஹீத் தாயீக்கள்தான் முதலீடானார்கள். அவர்கள்தான் இந்த இடஒதுக்கீடு கொள்கையை எட்டுத் திக்குகளுக்கும் எடுத்துச் சென்றார்கள்.


விழிப்புணர்வை ஏற்படுத்திய விஜய் டிவி பேட்டி

இடஒதுக்கீடு என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்ற விளக்கங்கள் கூட சமுதாயத்திற்குத் தெரியாமல் இருந்தது. காயிதேமில்லத்திற்கு மணி மண்டபம் கட்டுவதையும், மீலாது நபிக்கு விடுமுறை அறிவிப்பதையும் முஸ்­ம் சமுதாயத்திற்குச் செய்த மிகப் பெரிய சாதனைகளாகக் கருதப்பட்ட காலம் அது!

இப்படிப்பட்ட காலத்தில்தான் விஜய் டி.வி.யில் பீ.ஜே.யின் பேட்டி ஒளிபரப்பானது. ''மணிமண்டபங்கள் கட்டுவதால், காயிதேமில்லத் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைப்பதால் முஸ்லிம்களுக்கு என்ன பயன்? முஸ்லிம்கள் வாழ்வுரிமை இழந்து நிற்கிறார்கள்.

வயிற்றுக்கு உணவில்லாமல் நிற்கிறார்கள். மணிமண்டபம் கட்டினால் முஸ்லிம்களின் பசி போய் விடுமா? எங்களுக்குத் தேவை இடஒதுக்கீடு தான்'' என்று ஆணியடித்தாற்போல் பீ.ஜே. கூறியபோது, அவரைப் பேட்டி கண்ட ரபி பெர்ணாட் என்பவர் அதிர்ந்து போனார்.

முஸ்லிம்களிடம் இப்படி ஒரு கோரிக்கை இருப்பதே அப்போதுதான் உலகுக்குத் தெரிய வந்தது. அந்தப் பேட்டி ஒளிபரப்பானவுடன் சட்டசபையில் கருணாநிதி அதற்குப் பதிலளித்துப் பேசினார். நாங்கள்தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று வழக்கம்போல் பல்லவி பாடினார். அதன் பிறகு இந்தத் தீ தமிழகமெங்கும் பற்றிக் கொண்டது.

தவ்ஹீத் பள்ளிவாசல்களின் ஜும்ஆ மேடைகளில் இடஒதுக்கீடு பற்றிப் பேசப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இதற்குப் பிறகு எல்லா அரசியல் கட்சிகளும் இந்தக் கருத்தை எதிரொ­க்க ஆரம்பித்தன.


பாபரி மஸ்ஜித் மீட்புக் கோரிக்கை

இடஒதுக்கீட்டிற்கான குரல் ஒரு பக்கம் ஒ­த்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு பக்கத்தில் பாபரி மஸ்ஜித் மீட்புக்கான போராட்டங்களை தமுமுக தொடர்ந்து நடத்தியது.

பாபரி மஸ்ஜித் இடிந்து விழுந்தது போலவே, அதை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற எண்ணமும் இடிந்து விழுந்திருந்தது. அதை மறக்க முற்பட்ட னர்.

அப்போதுதான் தவ்ஹீத் பேச்சாளர்கள் வெள்ளி மேடைகளிலும், இதர சொற்பொழிவு மேடைகளிலும், 'யார் தனது பொருளைப் பாதுகாப்பதற்காக போரிட்டுக் கொல்லப்படுகின்றானோ அவன் ஷஹீத் ஆவான்' என்ற ஹதீஸையெல்லாம் ஆதாரமாகக் காட்டி, பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காகப் போராட வேண்டும்; அதற்காகப் போர்க்குரல் கொடுக்க வேண்டும் என்று தூண்டினர். மஸ்ஜிதை மீட்பதற்கு முன்பாக மக்களை மறதியி­ருந்து மீட்டனர்.

இதன் விளைவாய் மக்கள் கடல் அலைபோல் டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் போராட்டங்களில் திரண்டனர். இந்தப் போராட்டங்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொ­த்தது.


முதல்வர் வீட்டு முற்றுகை

ஒரு டிசம்பர் 6 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி வீட்டை முற்று கையிட வேண்டும் என்று தமுமுக அறிவித்தது. அதற்கும் தவ்ஹீத்வாதிகள் தயாரானார்கள். அந்த அளவுக்கு தர்பி யாக்கள் நடத்தப்பட்டன.

அந்த தர்பியாக்களில் மரணத்திற்கு அஞ்சாத தியாகிகள் பற்றிப் போதிக்கப்பட்டன. குறிப்பாக மூஸா நபியவர்களிடத்தில் போட்டியிட வந்த மந்திரவாதிகள் ஈமான் கொண்டு, ஃபிர்அவ்னால் தண்டிக்கப்பட்ட வரலாறு பற்றி போதிக்கப்பட்டது. அதனால்தான் முறுக்கேறிய நரம்புகளுடன் முதல்வர் வீட்டு முற்றுகைக்கு தவ்ஹீத்வாதிகள் தயாராகினர். காக்கிச் சட்டை பயம் கழற்றி எறியப் பட்டது. இதற்கான அடிப்படையே தவ்ஹீதுதான். தவ்ஹீத் இல்லையேல் இந்தத் தெம்பு, திராணி, துணிச்சல் அவர்களுக்கு ஒருபோதும் ஏற்பட்டிருக்காது.

முதல்வராயிருந்தும் தன் வீட்டை முற்றுகையிடுவதைக் கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. கடுமையான கைது நடவடிக்கைகள், தடுப்புச் சுவர்கள், துப்பாக்கிச் சூடு நடக்கும் என்ற மிரட்டல்கள் இவையணைத்தையும் மிஞ்சி குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கொள்கைவாதிகள் குவிந்தனர்; கைது செய்யப்பட்டனர்; விடுவிக் கப்பட்டனர். இப்படிப் பாபரி மஸ்ஜித் மீட்புப் போர் மக்களிடம் துவக்கிவைக் கப்பட்டது.

இதன் மாபெரும் பயன், பாபரி மஸ்ஜித் மீட்கப்பட்டதோ இல்லையோ ஆனால் சங்பரிவாரங்களின் பட்டிய­ல் இருந்த காசி, மதுரா போன்ற பள்ளிவாசல்கள் மீது அவர்கள் கை வைக்க அஞ்சினர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...



இதர பிரச்சனைகளுக்காக எழுச்சிப் போராட்டங்கள்

கடந்த காலத்தைப் போன்றல்லாமல் சமுதாயத்தில் யார் அநியாயமாகக் கைது செய்யப்பட்டாலும் வீதியில் இறங்கும் வீரத்தைத் தந்தது தவ்ஹீத
் கொள்கை! வீறு கொண்டு எழ வைத்தது. முஸ்லிம்களின் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளில் அநீதி, அக்கிரமம் இழைக்கப்பட்டபோது ஆர்த்தெழும் போர்க்குணத்தை ஊட்டியது தவ்ஹீத் கொள் கைதான்.


தடையைத் தாண்டிய தமுமுக

இக்கட்டத்தில்தான் வாழ்வுரிமை மாநாடு! இதன் பயனாய் தடையி­ருந்து தப்பியது. தமிழக வட்டத்தில் மட்டுமின்றி டெல்­யிலும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை எதிரொ­க்கச் செய்தது.

இதன் பின்பு அவ்வப்போது தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தமுமுக நிர்வாகிகளுக்கும் அவ்வப்போது உரசல் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் மதுரை தமுக்கம் மைதானத்தில் தவ்ஹீதுக்கான ஒரு மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு உதயமானது.




நஞ்சைக் கலக்கிய தஞ்சை பேரணி

இதன் பின்பு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தஞ்சையில் இடஒதுக்கீடு கோரிக்கையை வ­லியுறுத்தி தமுமுக ஒரு பேரணியை நடத்தியது. இந்தத் தஞ்சை பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் அந்த இயக்கத்தின் நிர்வாகிகளின் உள்ளத்தில் நஞ்சைக் கலக்கியது. இந்தக் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தவ்ஹீத்வாதிகளை வெளியேற்ற வேண்டும் என்று தப்புக் கணக்குப்போட ஆரம்பித்தனர்.

அரசியல் கட்சிகளின் சகவாசங்கள் அவர் களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அரசியல் கட்சியினர் காணும் கனவு களை இவர்களும் காணத்துவங்கினர்.

இதற்கு முந்தைய சமுதாய இயக்கங்கள் நீர்த்துப் போவதற்கும் நிர்மூலமானதற்கும் அடிப்படைக் காரணம் தேர்த­ல் போட்டி என்ற நிலைபாடுதான். அதனால்தான் தேர்த ­ல் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைபாட்டை தமுமுக அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது. அந்த நிலைபாட்டைக் கடைப்பிடிப்பதில் பீ.ஜே. கண்ணும் கருத்து மாக இருந்தார்.


1. தேர்த­ல் பங்கெடுப்பதைத் தடுக்கும் பி.ஜே.யின் நடவடிக்கைகள்.

2 . தமுமுகவின் தனித்தன்மையைத் தக்க வைப்பதிலும், பிற இயக்கங்களுடன் கலந்து விடாமல் அதைக் காக்க பீ.ஜே. கொண்டிருந்த கரிசனம், காட்டிய கண்டிப்பு.

3. தமுமுக தலைவர்களிடம் நாள்பட நாள்பட தலைதூக்கிய தவ்ஹீத் கொள்கையிலேயே சமரசம் செய்யும் உணர்வு, இன்னும் சொல்லப்போனால் தவ்ஹீத் எதிர்ப்புணர்வு ஆகியவை ஏற்கனவே உரச­ல் இருந்ததை விரிசலாக்கியது. விளைவு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! தவ்ஹீத்வாதிகளுக்கு, குறிப்பாக தவ்ஹீத் தாயீக்களுக்கு இது உண்மையில் ஒரு விடுதலை உணர்வை அளித்தது.

தவ்ஹீத்வாதிகளை மூலதனமாகக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு இயக்கத்தில் சமுதாய நலனுக்காக தவ்ஹீதை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் அநியாயத்திலிருந்து விடுதலை! அதாவது கண்ணை விற்று ஓவியம் வாங்கும் அக்கிரமத்திலிருந்து ஒரு விடுதலை!

இந்த அநியாயங்களுக்கு விடுதலை இயக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது. அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக உருவெடுத்தது.

இந்த இயக்கத்தில் கண்தான் பிரதானமானது. சித்திரம் இரண்டாவது என்றானது. தவ்ஹீத் என்ற கண்ணுக்குத்தான் இங்கு முன்னுரிமை! முதலுரிமை! மற்றவை பின்னுக்கு!

எந்தச் சமுதாய நலனுக்கு தவ்ஹீத் கொள்கை பாதகமாக உள்ளது என்று நம்மை வெளியே தள்ளினார்களோ அந்தச் சமுதாயப் பணிகளுக்குத் தவ்ஹீத் ஒரு தடைக்கல் அல்ல என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் துவங்கிய இரண்டாண்டு காலத்தில் கும்பகோணத்தில் நிரூபித்தோம்.


குலுங்கியது கும்பகோணம்

''குடந்தை குலுங்கட்டும்'' என்று சொன்னோம். தவ்ஹீதை இந்த இயக்கம் முன் வைத்த காரணத்தால், நாம் இரண்டாவதாகக் கொண்ட இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான். குடந்தை குலுங்கட்டும் என்ற வார்த்தையை அவன் ஒப்புக் கொண்டான். இல்லையெனில் இவ்வளவு கூட்டத்தைக் கொண்டு வந்து குவித்திருப்பானா?

தவ்ஹீத் என்ற பெயரை நமது இயக்கத்தின் பெயரிலேயே தாங்கிக் கொண்டு, சமுதாயப் பிரச்சினைகளுக்காக அழைத்தால் மக்கள் வருவார்களா? என்ற ஐயம் தவ்ஹீத்வாதிகளிடம் இருந்தது. ஆனால் அந்த ஐயத்தை உடைக்கும் விதமாக, மக்களைக் கொண்டு வந்து கொட்டுகி றேன் என்று அல்லாஹ், குடந்தையைக் குலுங்க வைத்தான்.

தேர்தல் நேரத்தில் எங்களுக்காக வாக்குக் கேட்டு உங்களிடம் வர மாட்டோம் என்று சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுபவர்கள் இவர்கள்தான் என்று நம்மை நம்பி மக்கள் பெருக்கெடுத்தார் கள். காவிரியைத் தாங்க முடியாத குடந்தை இந்த மக்கள் கடலைத் தாங்குமா? என்ற கேள்வி எழுமளவுக்கு கும்பகோணத்தில் மக்கள் குழுமினார்கள்.

எதற்கு வாரியம் வாங்குவதற்காகவா? இலட்சக்கணக்கில் பணத்தை வாரிச் சுருட்டவா? இல்லை. தமுமுக மறந்து விட்ட இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்தப் பேரணியில் கடலாய்ப் பெருக்கெடுத்தனர். முத­ல் ஒரு கட்சியில் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு குடந்தை பேரணியைக் கூட்ட வில்லை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..


கையிலே காசு! வாயிலே தோசை!

இன்றைய ஆளும் திமுக, அன்றைய ஆளும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிளில் இடஒதுக்கீட்டை யார் அறிவிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் எங்கள் ஆதரவு என்று இரு க
ட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருந்தோம்.

அதிமுக முத­ல் பதிலளித்தது. ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீதிமன்றம் நிறுத்தி வைத்த கசப்பான அனுபவத்தையெல் லாம் கருத்தில் கொண்டு, இடஒதுக்கீடு கோரிக்கையைப் பரிசீ­ப்பதற்கான ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் நீதிமன்றம் தலையிடாது.

மேலும் இந்த ஆணையம் பரிந்துரைத்தால் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இடஒதுக்கீடு அளித்தே தீர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். கும்பகோணம் பேரணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இது அமைந்தது.

இதன் அடிப்படையில் சட்டமன்றத் தேர்த­ல் அதிமுகவுக்காக உழைத்தோம். தேர்த­ல் அதிமுக தோற்றாலும், திமுகவுக்குப் பெரும்பான்மை பலமில் லாத வெற்றி கிடைத்தது.

திமுகவின் கோட்டை என்று கருதப் பட்ட சென்னையை தனது பிரச்சாரத் தின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தகர்த்தெறித்தது. முஸ்­லிம்களின் வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் போட்டி யிட்ட கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலி ­ன் ஆகியோர்கூட இழுபறி வெற்றியைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்படி ஒரு தொங்கல் வெற்றி கிடைப்ப தற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் வ­மைலியான பிரச்சாரம்தான் காரணம் என்பதை திமுகவே உணர்ந்தது.

திமுக ஆட்சியும் இட ஒதுக்கீடும்

ஆட்சிக்கு வந்ததும் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்த்தோம். தானைத் தலைவர் கருணாநிதியும் ஆணையத்தைத்தான் அறிவித்தார். அன்றைய முதல்வர் ஜெயல­லிதா இந்தப் பணியைச் செய்தபோது, வெற்றுப் பேப்பர் என்று கே­யும் கிண்டலும் செய்த தமுமுக, இப்போது அதை வரவேற்றது.

மேற்படி ஆணையத்தில் ஜெயலலிதா ஒரு முஸ்­லிம் நீதிபதியை நியமித்திருந்தார். ஆனால் கருணாநிதி அறிவித்த ஆணையத்தில் முஸ்­லிம்கள் யாரும் இடம் பெறவில்லை.

மேலும் இந்த ஆணையம் தனது அறிக் கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஓராண்டு என்று நிர்ணயித்திருந்தார். ஆனால் கருணாநிதி ஆணையத்தின் காலக்கெடுவை இரண்டு ஆண்டுகளாக மாற்றினார். இதை எதிர்த்து களத்தில் குதித்தது தவ்ஹீத் ஜமாஅத்துதான்.

கருணாநிதியின் இந்தக் காலம் தாழ்த்தும் முயற்சியைக் கண்டித்து தமிழ கமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெரும் மக்கள் கூட்டம் திரண்டது.

இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஆணையத்தின் அறிக்கை தாக்கல் பணி நடைபெற்றது. அதில் கூறப்பட்ட பரிந்துரையின்படி இடஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்று காத்திருந்தோம். கண்கள் பூத்துப்போகும் வரை காத்திருந்தோம்.

கருணாநிதி காக்க வைத்து கழுத்தறுப்பதில் வல்லவர். அதனால் இவரிடம் அமைதி காத்தால், இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடஒதுக்கீடு எப்போதும் உண்டு என்று வசனம் பேசியே ஆட்சிக் காலத்தைக் கடத்தி விடுவார். அதனால் இவரிடம் போராடித்தான் பெறவேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி 2007 ஜனவரி 29 அன்று குடந்தைப் பேரணியை நினைவூட்டும் வித மாக, தமிழகமெங்கும் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தினோம்.

அந்தப் போராட்டத்திலேயே அடுத்த கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்தோம். அதன் பிறகும் இட ஒதுக்கீடு என்பது கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

சிறை நிரப்பும் போராட்டம்

மூச்சும் இல்லாமல், பேச்சும் இல்லாமல் கிடந்த இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு உயிர் கொடுக்கும் விதமாக, வாழ்வுரிமை மாநாடு நடைபெற்ற தினமான ஜூலை 4 ம் தேதியைத் தேர்ந்தெடுத்து அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். ஆண்களும் பெண்களும் வந்து குவிந்தனர். தாங்கள் பெற்ற பச்சிளம் குழந்தைகளுடன் வந்து குவிந்தனர். காவல் துறை வேனில் தொட்டில் கட்டித் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைத்த வரலாறு தமிழகத்தில் இதுவரை எந்தவொரு இயக் கமோ கழகமோ கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை.

சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சிறை நிரப்பும் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் நடத்தியதில்லை என்று உளவுத்துறையினர் வியக்கும் அளவுக்கு மக்கள் சிறை செல்லத் துணிந்தனர்.

டெல்­லி சுற்றுலா

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதே வீரியத்துடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாறிவிட்ட தமுமுக, திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டிருந்தது.

திமுக ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் வாரியப் பதவிகள் வாய்க்காமல் போய் விடும். ஆளுங்கட்சியின் கூட்டணி என்ற பெயரில் நடத்தும் அடாவடிகளுக்கு ஆப்பு வந்து விடும் என்று பயந்த தமுமுக, தனது சுய லாபங்களுக்காக சமுதாயத்திற்குக் குழி பறிக்கும் காரியங்களில் இறங்கியது.

இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உண்டு, மாநில அரசுகளுக்கு அதிகாரமே இல்லை என்று மனசாட்சியை விற்று மடமை வாதம் பேசியது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் படிப்பறிவில்லாமல் மாநில அரசிடம் போய் இடஒதுக்கீடு கேட்கிறார்கள் என்று நம்மைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தது. கருணாநிதி அரசைக் காப்பாற்றுவதற்காக, நாங்கள் டெல்­யில் போய் இடஒதுக்கீடு கேட்கப் போகிறோம் என்று மாய்மாலம் செய்தது.

ஊரான் வீட்டுப் பணத்தில் டெல்­லிக்கு உல்லாசப் பயணம் சென்றது. டெல்­லி சுற்றுலா சென்று மத்திய அரசை ஏதாவது அறிவிக்கச் செய்ததா? என்றால் ஒன்றுமில்லை. அழைத்த பிரமுகர் கள்கூட கல்தா கொடுத்தார்கள். ஒரு குட்டி அணி வகுப்பை நடத்திவிட்டு, டெல்­லியில் பேரணி நடத்தியதாக பீற்றிக் கொண்டனர்.

ஏற்கனவே உள்ள சமுதாய இயக்கங்கள் ஆளுங்கட்சியிடம் ஒரு சில சீட்டுக்களை வாங்கிவிட்டு, தன்மானத்தை இழந்து பிணமானார்கள் அல்லவா? அதுபோன்று இவர்களும் வாரியத்தை வாங்கிவிட்டு வாய்பொத்திக் கிடக்கின்றார்கள். இவர்கள் வாய்பொத்திக் கிடந்தால்கூடப் பரவா யில்லை. வாரியப் பதவியைப் பெறுவதற்காக சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான இடஒதுக்கீட்டையே ப­ கொடுக்கத் துணிந்து விட்டார்கள்.


இடஒதுக்கீட்டிற்கான இறுதி யுத்தம் - சட்டமன்ற முற்றுகை

பதவிக்காக யாரிடமும் கையேந்துவதில்லை என்ற கொள்கையில் அன்றி­ருந்து இன்றுவரை உறுதியாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இடஒதுக்கீட்டிற்காக இறுதிவரை போராட முன் வந்தது. அதன் உச்சக் கட்டமாகத்தான் சட்டமன்ற முற்றுகையை அறிவித்தது. சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் சமயத்தில் சட்ட மன்றத்தை முற்று கையிடுவோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.

இனியும் தாமதிக்க முடியாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உணர்ந்து இடஒதுக்கீட்டை அறிவிக்க முன் வந்தார். கனிமொழி மூலமாக இடஒதுக்கீட்டிற்கான சாத்தியக் கூறுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்தது. அதன்படி மூன்றரை சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க முன்வந்தார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...


நன்றி அறிவிப்புக் கூட்டம்

இதனிடையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க போராட்டங்களால் இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகிவிடும் என்ற செய்தி கசிய ஆரம்பித்தவுடன், டிசம்ப
ருக்குள் இடஒதுக்கீட்டை அறி விக்கவில்லையென்றால் போராட்டம் என்ற கே­க்கூத்தான அறிவிப்பை தமுமுக வெளியிட்டது. அதுவரை மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறிக் கொண்டிருந்த திமுகவின் சிறுபான்மைப் பிரிவினர் தமுமுக, இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட் டால் அதன் பலன் தவ்ஹீத் ஜமாஅத் திற்குச் சென்று விடும் என்று பயந்து இப்படியொரு அறிவிப்பைச் செய்துள்ளனர் என்று மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர்.

இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியான வுடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வரும் நாடாளுமன்றத் தேர்த­ல் தனது ஆதரவை திமுகவுக்கு அளிப்பதாக வாக்குறு தியும் கொடுத்து விட்டு வந்தனர். இதிலும் தங்களின் கேடுகெட்ட அரசியலை நடத்த தமுமுக முன் வந்தனர்.


தவ்ஹீத்வாதிகள் இருந்தவரைதான் தமுமுக சார்பில் இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் நடைபெற்றன. தவ்ஹீத் வாதிகளைக் கழற்றிவிட்டபின் இடஒ துக்கீட்டிற்காக உருப்படியான எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை என் பதை மக்கள் அறிவார்கள். அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்தபின் வாரியப் பதவி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், சிறுபான்மைப் பிரி வின் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை சுத்த மாக வீரியமிழந்தது. இதையெல்லாம் மக்களுக்கு மறக்கடிக்க வேண்டும் என் பதற்காக கருணாநிதிக்கு நன்றி அறிவிப் புக் கூட்டத்தை மானங்கெட்டுப் போய் நடத்தினார்கள். மாநில அரசுக்கு அதிகா ரமில்லை என்றார்கள்.

ஜெயல­தா ஒரு ஆணையத்தை அமைத்தபோது வெற்றுப் பேப்பர் என் றார்கள். கருணாநிதி அந்த ஆணை யத்தை மாற்றியமைத்தபோதும் இதற் கும் இடஒதுக்கீட்டிற்கும் சம்பந்த மில்லை என்றார்கள். அந்த ஆணை யத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு இடஒதுக்கீட்டை வழங் கியபோது, கருணாநிதியின் அறிவிப்பு செல்லாது என்று அறிக்கை விட்டு விட்டு ஒதுங்க வேண்டியதுதானே? அவ்வாறு செய்யாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து நன்றி அறிவிப்புக் கூட்டம் எதற்காக நடத்த வேண்டும்?

அப்போது அதிகாரமில்லை என்று சொன்னது, வாரியம் தந்த வள்ளலைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக! இப் போது நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத் துவது, நாங்கள்தான் வாங்கித் தந்தோம் என்று கூறி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்காக!


ஏமாற்றமளித்த இட ஒதுக்கீடு

இப்படிப்பட்ட துரோகங்களையெல் லாம் தாண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது. அத்துடன் காரியம் முடிந்து விடவில்லை.

கருணாநிதி அறிவித்த இடஒதுக்கீட் டில் குளறுபடிகள் இருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தமிழக அரசுத் தேர் வாணையம் வெளியிட்ட விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகித இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வில்லை என்பதைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கொதித்தெழுந்தது.

மூன்றரை சதவிகிதம் வழங்கப்பட வில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்து, சென்னையில் ஒரு கண் டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்தி சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஆனால் ஏற்கனவே இடஒதுக்கீட்டுக் கொள்கையில் துரோகமிழைத்த தமுமுக இந்த விஷயத்திலும் தனது சமுதாய விரோதப் போக்கைத் தொடர்ந் தது. பதவியையும், பதவி தந்தவர்களை யும் காப்பாற்றுவதற்காக வாரியடித்துக் கொண்டு, வரிந்து கட்டிக் கொண்டு, இந் தக் குளறுபடிகளை நியாயப்படுத்தினார்கள்.

ரோஸ்டர் முறை, புரோட்டா மாஸ்டர் முறை என்று வியாக்கியானம் கொடுத்தார்கள். படிப்பறிவில்லாததால் இதுவெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தின ருக்குத் தெரியவில்லை என்று தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் நையாண்டி பேசினார்கள். ஆனால் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இடஒதுக்கீட்டில் குளறு படிகள் நடந்திருப்பது உண்மைதான் என்று கருணாநிதியே முரசொலியில் எழுதி, இவர்களின் முகத்தில் கரியைப் பூசினார். இவர்களது சமுதாய துரோகத் தைத் தோலுரித்துக் காட்டினார்.

ஆள்பவரே சொல்­விட்ட பிறகு இந்த அடிமைகள் என்ன செய்ய முடி யும்? படிப்பறிவில்லாதவர்கள் சொன்ன அதே குற்றச்சாட்டை, முதல்வரிடம் சென்று கோரிக்கையாக வைத்து விட்டு, மானங்கெட்டுப்போய் அதைப்பத்திரிகைச் செய்தியாகவும் அளித்தார்கள்.

இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிக ளைச் சரி செய்ய வேண்டும் என்று இந் தப் படித்த(?) அறிவாளிகள் கருணாநிதி யிடம் சொல்­ விட்டு வந்தார்கள். இவர் களது அடிமைத்தனத்தையும், பதவிக்காக சமுதாயத்தை அடகு வைக்கும் போக்கையும் பார்த்து, ''நாங்க எவ்வளவோ பரவாயில்லைப்பா!'' என்று ஒரு லீக் பிரமுகர் சொன்னதுதான் இதில் வேடிக்கை!

உண்மையில் ஏனைய அரசியல்வாதி கள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண் டும். அந்த அரசியல்வாதிகள் இவர்க ளிடம் தோற்றுப் போய்விட்டார்கள் என்றே கூறவேண்டும்.

ஆனால் மக்கள் உண்மை நிலை யைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர்த்து வேறு யாரும் உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை என்பதை நன் றாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்தக் குளறுபடிகள் களையப்படுவதற்காக தவ்ஹீத் ஜமாஅத் காத்திருக்கின்றது. தவ்ஹீத் எழுச்சி மாநாட்டிற்குள் அவ் வாறு களையப்படவில்லை எனில், சட்ட மன்ற முற்றுகைக்கான தேதி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு, வல்ல ரஹ்மான் ஏற்படுத்திய நிர்ப்பந்தத் தால் சமுதாயப் பணிக்காகக் களமிறங்கிய தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு துரோகங்களை, குழி பறிப்புகளைத் தாண்டி இன்றுவரை களத்தில் நிற்கின்றது. இவ்வாறு நிற்பதற்குக் காரணம், நீர்த்துப் போகாத அதன் நிலைபாடு! நிறம் மாறாத நெருப்புக் கொள்கை!

இத்தனையும் எதற்கு? நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தேர்த­ல் சீட் வாங் கவா? இல்லை! இந்தச் சமுதாயப் பணிகளைக் கண்டு யாராவது தவ்ஹீத் கொள் கையை ஏற்றுக் கொள்ளமாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில்தான்.


இனி ஈரமைப்பில்லை! ஓரமைப்புதான்!

உலகாதாயத்தை மட்டும் லட்சியமாகக் கொண்ட இவர்களிடம் மறுமை லாபத்தை எதிர்பார்ப்பது இலவு காத்த கிளி கதைதான் என்றெண்ணி, சமுதாயப் பாதைக்கு ஓர் அமைப்பு, சத்தியப் பாதைக்கு அதாவது ஏகத்துவ அழைப்புப் பணிக்கு ஓர் அமைப்பு என்று கண்டோம்.

சமுதாயப் பணிக்காகக் கண்ட இயக்கம் காலப் போக்கில் தவ்ஹீத் பணியை ஜீரணிக்கவில்லை. சத்தியத்திற்குக் கிடைத்த கிரெடிட்டை, பலனை மட்டும் அனுப வித்துவிட்டு, சாறை உறிஞ்சிவிட்டு நம்மை சக்கையாக வெளியே தள்ளியது. முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளிய அந்த முனாஃபிக்குகள் முதுகில் குத்தினார்கள். ஏகத்துவம் எனும் வட்டத்திற்குள் நாங்கள் வர மாட்டோம்; நாங்கள் வகுக்கும் வட்டத்திற்குள்தான் ஏகத்துவம் வர வேண்டும் என்ற நிலைப்பாட்டை நிறுவினர்.

இதுதான் நம்மைச் சிந்திக்க வைத்தது. சத்தியத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண் டோம். அதில் மதனிகள் சம்பளத்தைக் கவனத் தில் கொண்டு சமுதாயப் பிரச்சினைகளை மறுத் தார்கள். சமுதாயத்துக்கென்று ஒரு அமைப் பைக் கண்டோம். அவர்கள் சத்தியத்திற்குக் கதவைச் சாத்துகிறார்கள். இனிமேல் நமக்கு முன் இருப்பது, சத்தியத்திற்கு ஓரமைப்பு, சமு தாயத்திற்கு வேறமைப்பு என்ற அத்தியாயத் திற்கு முடிவுரை எழுதிவிட்டு, இரண்டிற்கும் ஒரே அமைப்பு என்ற புதிய அத்தியாயத்தைத் துவங்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்தோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அதுதான் இன்று நம்மை அரவணைத்துக் கொண் டிருக்கின்ற ஓர் இயக்கம். அந்தப் பேரியக்கம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இப்போது சத்தியம், சமுதாயம் என்ற இரு சக்கரங்களுடன் இந்த இயக்கம் தமிழகத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் ஒரு வேதனையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சமுதாயப் பிரச்சினையை நாங்கள் கையில் எடுக்க மாட்டோம் என்று கூறிய அந்த இயக் கமும், ஏகத்துவம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் என்று நம்மை வெளியே அனுப்பிய பங்காளி இயக்கமும் நாம் வெளியே வந்த பிறகு, பக்காவாகக் கூட்டாளிகளாகிக் கொண் டன. எதற்கு? நம்மை எதிர்ப்பதற்கு!

இந்தக் கூட்டணிகளின் சதித்திட்டங்களை யெல்லாம் மீறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த (மே 10,11) எழுச்சி மாநாட்டிற்குப் பிறகு இந்த இயக்கம் மேலும் வலுப்பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவ னுக்கே!

சகோதரர் -சம்சுல்லுஹா 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை