இறந்த பின்னர் உயிருடன் இருப்போர்


இறந்த பின்னர் உயிருடன் இருப்போர்

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள்! இறந்தவர்கள் என எண்ணாதீர்கள்!'' என்று இவ்வசனங்கள் (2:1543:169) கூறுவதை முஸ்லிம்களில் சிலர் தவறாகப் புரிந்து வைத்துள்ளனர்.

மகான்களும்நல்லடியார்களும் இறந்த பின்பும் உயிரோடு உள்ளனர்எனவே அவர்களை வழிபடலாம்அவர்களை அழைக்கலாம்பிரார்த்திக்கலாம் என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாக அமைந்துள்ளதாக அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். இது பல காரணங்களால் தவறான விளக்கமாகும்.
இவ்வசனங்கள் நல்லடியார்கள் மற்றும் மகான்களைக் கொண்டாடவோஅவர்களுக்கு வழிபாடு நடத்துவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்ய ஒருவர் தயங்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே அருளப்பட்டன.
இவ்வசனங்கள் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோநபித் தோழர்களோ,அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை அழைக்கவோபிரார்த்திக்கவோ இல்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வசனங்களைக் கவனமாக ஆய்வு செய்தால் அவர்களின் விளக்கம் தவறு என்பதை அறியலாம்.
2:154 வசனத்தில் "அவர்கள் உயிருடன் உள்ளனர்'' என்பதுடன் "எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்'' என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் உயிருடன் இருப்பது நாம் உணர்ந்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தையே இது தரும்.
3:169 வசனமும் அதைத் தொடர்ந்து வரும் நான்கு வசனங்களும் இதை இன்னும் தெளிவாகக் கூறுகின்றன.
3:169 வசனம் "தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்'' எனக் கூறுகிறது. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனைப் பொறுத்த வரை அவர்கள் உயிருடன் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் முக்கியமானது.
அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படிஎன்று நாங்கள் கேட்ட போது "அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர் என இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 3500)
நியாயத் தீர்ப்புக்குப் பிறகு தான் நல்லோர் சொர்க்கம் செல்வார்கள். எனவே தான் மனித வடிவில் இல்லாமல் பச்சை நிறப் பறவைகளாக சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் கொடுத்த அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இல்லை. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் சாகாமல் நம்மைப் போல் உயிருடன் உள்ளனர் என்று யாரேனும் இதற்கு அர்த்தம் கொடுத்தால் அவர்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்துக்களை அவரது வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாமாஅவரது மனைவி மற்றவரை மணந்து கொள்ளலாமா?
இந்தக் கேள்விகளுக்கு செய்யலாம் என்று தான் மாற்றுக் கருத்துடையோர் பதிலளிப்பார்கள்.
உயிருடன் இருக்கும் ஒருவரை மண்ணுக்குள் புதைக்கலாமாஎன்று கேட்டால் கூடாது என்று தான் பதிலளிப்பார்கள். அவர்கள் நம்மைப் பொறுத்த வரை இறந்து விட்டார்கள் என்று இவர்களும் ஒப்புக் கொள்வதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமாஅவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமாநாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?
ஈஸா நபியவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர். (பார்க்க: திருக்குர்ஆன் 4:157-1595:7543:61)
ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள்ஈஸா நபிக்குச் சமமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் சரியானதாகும்?
அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும்அனைத்து ஆற்றலும் உள்ளவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும். உயிருடன் இருப்பதால் மட்டும் ஒருவரிடம் பிரார்த்திக்க முடியாது.
அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாராஅல்லது பெருமைக்காகப் போருக்குச் சென்று கொல்லப்பட்டாராஎன்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவை தவிர "அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது'' என்று கூறும் நூற்றுக்கணக்கான வசனங்கள் உள்ளன. அந்த வசனங்கள் இதோ:
2:1863:387:297:557:567:1807:1947:19710:1210:10613:1414:3914:4016:2017:5617:11019:4,21:9022:1222:1322:6222:7323:11727:6231:3035:1335:1435:4039:3840:1240:2040:6040:66,46:446:5
இறந்தவர்களின் ஆவிகளின் நிலை குறித்து இதே பகுதியில் 7983298 ஆகிய குறிப்புகளிலும் காணலாம்.
To read this explanation in English click here.

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை