ஆயுதமின்றி மட்டும் இருக்காதே” என்பது பைபிளின் கட்டளை

நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே” என்று பைபிள் கட்டளையிடுகிறது.

அன்பை, அகிம்சையையே பைபிள் போதிக்கிறது என்று மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவர்கள், “பல தெய்வ வழிபாடு உடையவர்கள் எல்லாம் கொல்லப்பட வேண்டும்” என்ற பைபிளின் உபதேசம் குறித்து மூச்சு விடுவதில்லை. தங்கள் மதப் பிரச்சாரத்தில் அத்தகைய வசனங்களை உட்படுத்துவதும் இல்லை.

நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூர
ியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,. அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும் அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். (உபாகமம் – 17: 2-5)

இஸ்லாம் வாளால் நிர்பந்தத்தால் பிரச்சாரம் செய்யப்பட்டது என்று உண்மைக்குப் புறம்பாக கூப்பாடு போடும் கிறிஸ்தவர்கள், மேற்கண்ட பைபிளின் கட்டளை குறித்து என்ன கூறப் போகிறார்கள்? அது பழைய ஏற்பாடு, அது செல்லாது என்று கூறினால் பழைய ஏற்பாட்டை இன்னும் வைத்துக் கொண்டிருப்பது ஏன்? அதையும் சேர்த்துத் தானே பரிசுத்த வேதாகமம் என்று கூறுகின்றனர்? ஒரு வாதத்துக்காக பழைய ஏற்பாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று கூறினால், “நீங்கள் உங்கள் ஆடைகளை விற்றாவது ஒரு ஆயுதத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று புதிய ஏற்பாட்டில் இயேசுவின் கட்டளையாகக் கூறப்பட்டிருப்பதைக் குறித்து என்ன விளக்கம் கூறுவார்கள்?

அதற்கு அவர், இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். (லூக்கா: 22:36)

“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்ட வேண்டும்” என்று கூறும் அதே பைபிள் தான், “உன் எதிரியிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ள உன் ஆடையை விற்றாவது ஒரு வாளை வாங்கிக் கொள்” என்று கட்டளையிடுகிறது. அதாவது “நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே” என்று பைபிள் கட்டளையிடுகிறது. பைபிளின் இவ்வசனப்படி கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு துப்பாக்கியின்றி இருக்கக் கூடாது. இக்கலாச்சாரத்தின் வெளிப்பாடாகத் தான் அமெரிக்காவில் பள்ளி மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறதோ

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை