மாற்று மதத்தவருக்கு ஸலாம் சொல்லலாமா?


மாற்று மதத்தவருக்கு ஸலாம் சொல்லலாமா?

வேறுக் கொள்கையில் உள்ளவர்கள் நமக்கு சலாம் கூறினால் அந்த சலாத்திற்கு பதில் சலாம் சொல்லலாமா?

இஸ்லாம் அல்லாத வேறு கொள்கையில் இருப்பவர்களுக்கு சலாம் சொல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் இணைவைப்புக் கொள்கையில் இருந்த தனது தந்தைக்கு சலாம் கூறியுள்ளார்கள்.
قَالَ أَرَاغِبٌ أَنْتَ عَنْ آلِهَتِي يَا إِبْرَاهِيمُ لَئِنْ لَمْ تَنْتَهِ لَأَرْجُمَنَّكَ وَاهْجُرْنِي مَلِيًّا (46) قَالَ سَلَامٌ عَلَيْكَ سَأَسْتَغْفِرُ لَكَ رَبِّي إِنَّهُ كَانَ بِي حَفِيًّا (47)19
      வேறு கொள்கையில் இருப்பவர்களுக்கு சலாம் சொல்வது நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வழிமுறையாகும். எனவே மாற்று மதத்தைச் சார்ந்தவர்களுக்கு சலாம் கூறுவது தவறில்லை. 
  இப்ராஹிம் (அலை) அவர்களுடைய வாழ்கையில் அழகான முன்மாதிரி இருக்கின்றது என அல்லாஹ் கூறுவதினாலும் இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த இந்த காரியத்தை மார்க்கமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். தனது தந்தைக்காக அவர்கள் பாவமன்னிப்புத் தேடியதை மட்டும் தான் நாம் பின்பற்றக்கூடாது என அல்லாஹ் கூறுகிறான்.

  இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியதுதந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)
ஒரு விஷயத்தை இறைவன் கண்டிக்காமல் திருமறைக் குர்ஆனில் குறிப்பிட்டால் அது அனுமதிக்கப்பட்டதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும். இதனடிப்படையில் கஃபிராக இருந்த தன் தந்தைக்கு தந்தைக்கு இப்ராஹிம் (அலை) அவர்கள் சலாம் கூறியிருப்பதால் காஃபிர்கள் முஷ்ரிக்குகள் ஆகியோருக்கு சலாம் கூறலாம்.
   அவர்கள் நமக்கு முதலில் சலாம் கூறினாலும் அதற்கு பதில் சலாம் கூறலாம். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவராக இருந்தாலும் தெரியாதவராக இருந்தாலும் சலாம் சொல்லும்படி கூறியுள்ளார்கள். அறிமுகம் இல்லாதவர் என்கிற போது அவர் முஸ்லிமாகவும் இருக்கலாம் முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம். இதனடிப்படையில் மாற்றார்களுக்கு சலாம் கூறுவது குற்றமாகாது.
   ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எதுஎன்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பதும் உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதாகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரி (6236)
  மேலும் நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களும் யஹூதிகளும் முஸ்லிம்களும் கூடியிருந்த ஒரு சபைக்கு வந்தபோது அனைவருக்கும் சேர்த்து சலாம் கூறியுள்ளார்கள்.
உஸாமா பின ஸைத் (ர-) அவர்கள் கூறினார்கள் :
          நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்துஅதன் மீது "ஃபதக்நகர் முரட்டுத் துணி விரித்துஅதன் மீது அமர்ந்து தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக் கொண்டு (நோய்வாய்ப்பட்டிருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இருந்தார்.அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்ளும் முன் இது நடந்தது.
  அந்த அவையில் முஸ்லிம்கள்சிலை வணங்கிகளான இணை வைப்பாளர்கள்யூதர்கள் ஆகிய பல்வேறு வகுப்பாரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (லி) அவர்களும் இருந்தார்கள்.
    (எங்கள்) வாகனப் பிராணியி(ன் காலடியி)லிருந்து கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் பின் உபை தமது மேல் துண்டால் தமது மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, "எங்கள் மீது புழுதி கிளப்பாதீர்'' என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் சலாம் (முகமன்) கூறினார்கள். (தமது வாகனத்தை) நிறுத்தி இறங்கிஅல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அவர்களை அழைத்தார்கள். மேலும்அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டினார்கள்.
அறிவிப்பவர் உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல் புகாரி (5663)
   பிறருக்காக பிரார்த்தனை செய்யவதற்காகவே சலாம் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வின் சாந்தி நம்மை விட பலமடங்கு மாற்றுமதத்தவர்களுக்குத் தேவைப்படுகின்றது. ஏனென்றால் அல்லாஹ் நமக்கு நேர்வழிகாட்டியுள்ளான். ஆனால் அவர்களுக்கு இந்த பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை. ஆகையால் அவர்கள் நேர்வழிபெறுவதற்காக சலாம் கூறி பிரார்த்திப்பது குற்றமாகாது. அவர்களுக்கு நல்லது நினைப்பதாகத்தான் ஆகும்.
   முஸ்லிம் அல்லாதவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவதையே மார்க்கம் தடைசெய்துள்ளது. வேறு கொள்கையில் இருப்பவர்கள் நம்மை எதிர்க்காவிட்டால் அவர்களுக்கு இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றோ நேர்வழி பெற வேண்டும் என்றோ பிரார்த்தனை செய்வது தவறில்லை. இந்த அர்தத்தில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் வேண்டலாம். மார்க்கத்தில் நம்முடன் சண்டைக்கு வராதவர்களுக்கு நாம் நன்மை செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லை.
          மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும்உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
அல்குர்ஆன் (60 : 8)
முஸ்லிம்கள் அல்லாதோருக்கு சலாம் சொல்லக்கூடாது என்று ஒரு தவறான கருத்தை மார்க்க அறிஞர்கள் மக்களிடம் பரப்பியுள்ளனர். இதற்கு இவர்கள் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு செய்தியை ஆதாரமாகக் கூறுகின்றனர்.
4030حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَبْدَءُوا الْيَهُودَ وَلَا النَّصَارَى بِالسَّلَامِ فَإِذَا لَقِيتُمْ أَحَدَهُمْ فِي طَرِيقٍ فَاضْطَرُّوهُ إِلَى أَضْيَقِهِ و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ كُلُّهُمْ عَنْ سُهَيْلٍ بِهَذَا الْإِسْنَادِ وَفِي حَدِيثِ وَكِيعٍ إِذَا لَقِيتُمْ الْيَهُودَ وَفِي حَدِيثِ ابْنِ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ قَالَ فِي أَهْلِ الْكِتَابِ وَفِي حَدِيثِ جَرِيرٍ إِذَا لَقِيتُمُوهُمْ وَلَمْ يُسَمِّ أَحَدًا مِنْ الْمُشْرِكِينَ روا مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால்சாலையின் நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (4376)
    இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் அல்லாதோருக்கு சலாம் சொல்லக்கூடாது என்று ஒட்டுமொத்தமாக கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்களும் கிரிஸ்தவர்களும் மட்டும் இருக்கவில்லை. இவர்களல்லாத இணைவைப்பாளர்களும் இறைமறுப்பாளர்களும் இருந்தனர்.
    இவர்களுக்கு முதலில் சலாத்தை சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. யூத கிரித்தவ ஆகிய இரண்டு சமுதாயத்தாருக்கு மாத்திரம் முதலில் சலாம் சொல்ல வேண்டாம் என்று கூறினார்கள் என்றால் இதற்கு முக்கியமான ஒரு காரணம் உள்ளது.
    இந்த இரு சமுதாயத்தாரும் நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறும்போது அஸ்ஸலாமு அலைக் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று  கூறுவதற்கு பதிலாக அஸ்ஸாமு அலைக்(உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று கூறுபவர்களாக இருந்தார்கள். இதை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.
     (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.
அல்குர்ஆன் (58  8)
   முஸ்லிம் அழிய வேண்டும் என்ற எண்ணத்தாலும் நபி (ஸல்) அவர்கள் மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பினாலும் இவ்வாறு கூறிவந்தார்கள். ஆகையால் தான் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு மாத்திரம் முதலில் சலாம் சொல்ல வேண்டாம் எனத் தடைசெய்தார்கள்.
   இத்தகையவர்களுக்கு முதலில் நாம் சலாம் சொல்லும் போது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவோம். ஆனால் அவர்கள் நமக்கெதிராக மரணம் உண்டாகட்டும் என்று கூறுவார்கள். இதைத் தவிர்ப்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் முதலில் சலாம் சொல்ல வேண்டாம் என்று கூறினார்கள்.
   அவர்கள் முஸ்லிம்களுக்கு முதலில் சலாம் சொல்லும் போது முஸ்லிம்கள் உங்கள் மீதும் உண்டாகட்டும் என்று மட்டும் கூற வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
   ஏனென்றால் இவ்வாறு பதிலளிக்கும் போது அவர்கள் முஸ்லிம்களுக்கு சாலாத்தை வேண்டினால் அவர்களுக்கு நாம் சலாம் கூறுகிறோம். அவர்கள் முஸ்லிம்களுக்கு நாசத்தை வேண்டினால் அந்த நாசம் அவர்களுக்கே ஏற்படுமாறு நாம் கூறிவிடுகிறோம்.
   வேதம்கொடுக்கப்பட்டவர்கள் உங்களுக்கு சலாம் கூறினால் வஅலைக்கும் (உங்கள் மீதும் உண்டாகட்டும்) என்று (மாத்திரம்) கூறுங்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)புகாரி : புகாரி (6258)
6024 حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ دَخَلَ رَهْطٌ مِنْ الْيَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ قَالَتْ عَائِشَةُ فَفَهِمْتُهَا فَقُلْتُ وَعَلَيْكُمْ السَّامُ وَاللَّعْنَةُ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَهْلًا يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الْأَمْرِ كُلِّهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ قُلْتُ وَعَلَيْكُم رواه البخاري
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
            யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அஸ்ஸாமு அலைக்கும்' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட  நான் அவர்களுக்கு "வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)'' என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நலினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்று சொன்னார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான்தான் "வஅலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)'' என்று கேட்டார்கள்.
நூல் : புகாரி (6024)
6928 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ سُفْيَانَ وَمَالِكِ بْنِ أَنَسٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمُوا عَلَى أَحَدِكُمْ إِنَّمَا يَقُولُونَ سَامٌ عَلَيْكَ فَقُلْ عَلَيْكَ  رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     உங்களுக்கு யூதர்கள் சலாம் (முகமன்) சொன்னால் "ஸாமுன் அலைக்க'' (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்கு பதில் சலாமாக) "அலைக்க'' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று நீங்கள் சொல்லிவிடுங்கள்.
இதை இப்னு உமர் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி (6928)
    இஸ்லாம் அல்லாத கொள்கையில் இருப்பதால் அவர்களுக்கு சலாம் சொல்லக்கூடாது என்று அர்தத்தில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றது. சலாத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்காகவே முதலில் சலாம் கூற வேண்டாம் என்று நபியவர்கள் சொன்னார்கள். அவர்கள் நமக்கு சரியாக சலாம் சொன்னால் நாம் உங்கள் மீதும் என்று கூறும்போது உங்கள் மீதும் சலாம் உண்டாகட்டும் என்று அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். இதை மேற்கண்ட நபிமொழி அனுமதிக்கின்றது. எனவே முதலில் சலாம் சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு கொள்கை வேறுபாடு காரணமில்லை என்பதை அறிய முடிகின்றது. 
    மேலும் அன்றைக்கு வாழ்ந்த வேதம்கொடுக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முஸ்லிம்களை இழிவாகவும் தங்களை உயர்வாகவும் கருதினார்கள். இந்நேரத்தில் முஸ்லிம்கள் அவர்களுக்கு சலாம் சொன்னால் அது அவர்களுக்குப் பெருமையாகத் தோன்றும். பெருமையை தகர்த்து அவர்கள் முஸ்லிம்களிடம் பணிவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் முதலில் சலாம் சொல்வதை தடைசெய்தார்கள்.
      இன்று பெரும்பாலும் மாற்றுமதத்தினர்கள் நம்மிடம் அண்ணன் தம்பியைப் போன்று பழகிவருகிறார்கள். நம்மை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த அப்பாவிமக்களிடம் பெரும்பாலும் இல்லை. இவர்களையும் நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த வேதம் வழங்கப்பட்டவர்களையும் சமமாக கணக்கிட முடியாது. ஆகையால் இவர்களுக்கு நாம் சலாம் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.
    ஆயிஷா (ரலி) அவர்கள் யஹூதிகள் கூறியதை பெருமானார் (ஸல்) அவர்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை போலும் என்று எண்ணி கெட்ட எண்ணத்தில் வார்த்தையை மாற்றிக்கூறிய அவர்களை சபிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை கண்டிக்கிறார்கள். மென்மையை கையாளச் சொல்கிறார்கள். அவர்கள் கூறிய வார்த்தையைக் கூட அப்படியே திரும்பக் கூறாமல்  வஅலைக்கும் (உங்கள் மீதும் உண்டாகட்டும்) என்று மறைமுகமாகத்தான் கூறினார்கள். தீய எண்ணம் கொண்டவர்களிடத்தில் மென்மையை கடைபிடித்த நபி (ஸல்) அவர்கள் நல்லலெண்ணம் கொண்டு பழகும் மாற்றுமதநண்பர்களிடம் கடுமைகாட்டவா சொல்வார்கள்
                முதலில் சலாம் சொல்லக்கூடாது என்ற நபியவர்களின் உத்தரவு சலாத்தை முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்திய இஸ்லாமிய விரோதிகள் விசயத்தில் இடப்பட்டதாகும். நம்மை எதிர்க்காத முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் சொல்வதற்கு எந்தத் தடையுமில்லை.
www.onlinepj.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை