திக்குமுக்காட வைத்த திருப்பூர் விவாதம்-


திருப்பூர் விவாதம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருப்பூர் மாவட்டம் – காலேஜ் ரோடு கிளையில் ‎உள்ள டிஎன்டிஜே உறுப்பினர் ஒருவரிடத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிறித்தவ ‎சகோதரர் ஆனந்தன் என்பவர், “இயேசுவைத்தான் நாம் ரட்சகராக ஏற்றுக் கொள்ள ‎வேண்டும். அவர்தான் நமது பாவங்களைப் போக்க தன்னையே ஒப்புக்கொடுத்தார்” ‎என்று கூறி தங்களது மதத்திற்கு ஆள் பிடிக்கும் வேலையைச் செய்துள்ளார். இந்த ‎செய்தியை மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவிக்க, தலைமையில் நடைபெற்ற ஒரு மாதப் ‎பிரச்சாரகர் பயிற்சி வகுப்பில் பயிற்சி எடுத்த முஹம்மது யூசுப் அவர்கள் திருப்பூர் ‎மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கிறித்தவ போதகருடன் விவாதம் செய்ய அந்தப் ‎பகுதிக்குச் சென்று ஆனந்தன் என்ற அந்த கிறித்தவ சகோதரரிடத்தில் சில ‎கேள்விகளைக் கேட்டுள்ளார்.‎ இயேசு இரட்சிக்க வரவில்லை என்பதை ஒப்புக் கொண்ட கிறித்தவ போதகர் :‎ ‎ பேச்சைத்துவக்கியதுமே நமது தரப்பில் ஒரு கேள்வி அவரை நோக்கி ‎கேட்கப்பட்டுள்ளது. ஒரு கம்பெனியின் முதலாளி ஒரு நபரை கம்ப்யூட்டர் ‎ஆபரேட்டராக வேலைக்குச் சேர்த்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலையை நீ செய்ய ‎வேண்டும் என்று அவரிடத்தில் பொறுப்புக் கொடுத்து அனுப்பி வைக்கின்றார். ஆனால் ‎அந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டரோ தனது பணியின் முக்கியத்துவத்தை அறியாமல், ‎‎“முதலாளியே! முதலாளியே! ஏன் என்னை இந்த வேலைக்கு அனுப்பினீர்! என்னை ‎விட்டால் உனக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? இந்த வேலையைக் கொடுத்து ஏன் ‎என்னை சோதிக்கின்றீர்? ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கேட்பாரேயானால், அந்த ‎கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தனது வேலையை சரிவரச் செய்தார் என்று சொல்லலாமா? ‎அவருக்கு முதலாளி சம்பளம் கொடுப்பது சரியா?” என்ற ஒரு கேள்வியை ‎எழுப்பியுள்ளார்.‎ ‎ அதைக்கேட்ட கிறித்தவ போதகரோ, “அது எப்படி சரியாகும்? தனது வேலையை முழு ‎திருப்தியோடு செய்யாமல், என்னை ஏன் இந்த வேலைக்கு அனுப்பி சோதிக்கின்றீர்? ‎என்று ஒருவர் கேட்பாரேயானால் அது ரொம்பத் தவறு. அவர் தனது வேலையை முழு ‎திருப்தியோடு செய்தவராகமாட்டார். அவரே விரும்பி அந்த வேலையைச் ‎செய்தவராகமாட்டார்” என்று சொல்லியுள்ளார்.‎ ‎ அதற்கு நமது சகோதரர், “அப்படியானால், இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்; ‎அவர் நமக்காக தன்னையே ஒப்புக் கொடுத்தார். அவர் தன்னையே பலி கொடுத்தார் ‎என்று சொல்லுகின்றீர்களே! ஆனால் அவரோ தன்னை சிலுவையில் அறையும் போது, ‎‎”தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்!” என்று அழுது புலம்பி கர்த்தரை ‎திட்டிக் கொண்டல்லவா உயிரை விட்டுள்ளார். இவராக விரும்பி மரணித்தார் என்று ‎எப்படி சொல்கின்றீர்கள்? இந்த பாத்திரத்திலிருந்து என்னை விடுவித்துவிடும் என்று ‎சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னால் சாவுக்கேதுவான துக்கங்கொண்டு ‎புலம்பியவர்தான் ஏசு என்று பைபிள் கூறுகின்றது. அப்படியிருக்கையில் அவர் ‎நமக்காக பலியானார் என்பது சரியா?” என்று கேள்வி எழுப்பியவுடன், “பிரதர், நீங்க ‎ரொம்ப டீப்பா கிறித்தவத்தை ஆய்வு செய்துள்ளீர்கள். உங்களுக்கு என்னால் பதில் ‎சொல்ல முடியாது. கோயம்பத்தூரில் பெரிய போதகர்கள் குழு உள்ளது. அவர்களை ‎அழைத்து வருகின்றேன். அவர்களிடத்தில் என்ன கேள்வி வேண்டுமானாலும் நீங்கள் ‎கேளுங்கள். அவர்கள் அனைத்திற்கும் பதில் சொல்வார்கள்” என்று ஆனந்தன் ‎கூறியவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட விவாதம்தான் திருப்பூர் கிறித்தவ விவாதம்.‎ ‎ இதன் பிறகு நமது சகோதரர்களை தொடர்பு கொண்ட கிறித்தவத்தரப்பினர், “நீங்கள் ‎ஜெர்ரி தாமஸ் குழுவினரோடு நடத்திய விவாதத்தையெல்லாம் நாங்கள் ‎பார்த்துவிட்டோம். எங்களிடம் வந்து கேள்வி கேட்டுப் பாருங்கள்; நாங்கள் எப்படி பதில் ‎சொல்கின்றோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; நாங்கள் ஒன்றும் ‎ஜெர்ரிதாமஸ் போல உளறமாட்டோம்; அவரைப் போல திணற மாட்டோம். நீங்கள் ‎கேட்கும் கேள்விகளுக் கெல்லாம் நாங்கள் கிரிட்டிக்கலாக பதில் சொல்வோம்” என்று ‎கூறி அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டி என்ற இடத்திலுள்ள கோஸ்பல் ‎தேவாலயத்திற்கு நம்மை அழைத்து எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்க இருபுறமும் ‎ஒப்பந்தக்கடிதம் பரிமாறப்பட்டது. அதையடுத்து கடந்த 16.07.2012 திங்கட்கிழமையன்று ‎அன்று விவாதம் காலை 11 மணிக்கு ஆரம்பமானது.‎ ‎ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் ‎அப்பாஸ் அலி, தாங்கல் ஹபீபுல்லாஹ், அஹமத் கபீர், முஹம்மத் யூசுப், ‎சதாம்ஹுசைன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மத் ஹுசைன், அலாவுதீன் ‎ஆகியோர் கலந்து கொண்டனர்.‎ ‎ கோஸ்பல் (நிளிஷிறிணிலி) சபையின் சார்பாக சகோ. சாலமன், ஆனந்தன், சகோ. ‎நாப்தலின் மற்றும் அவர்களது குழுவினர் கலந்து கொண்டனர்.‎ ‎ சத்தியத்தைக் கண்டு அசத்தியவாதிகள் எப்படி சிங்கத்தைப் பார்த்து ‎வெருண்டோடக்கூடிய கழுதைகளைப் போல ஓடுவார்கள் என்பது இந்த விவாதத்திலும் ‎உண்மையானது. அவர்கள் கிரிட்டிக்கலாகக் கேட்ட கேள்விகளின் லட்சணம் என்ன? ‎வழக்கம்போல தவ்ஹீத் ஜமாஅத் குழுவினரிடத்தில் மாட்டிக் கொண்டு ‎எப்படியெல்லாம் விழிபிதுங்கித் திணறினர்? எப்படியெல்லாம் திக்குமுக்காடினர் என்பது ‎குறித்த முழுவிபரங்கள்

திக்குமுக்காட வைத்த திருப்பூர் விவாதம்-குழந்தைகளை கொலை செய்வோர் பாக்கியவான்கள்!

- போதகர்களின் விசித்திர விளக்கம்!!

கடந்த 16.07.2012 திங்கட்கிழமையன்று அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், திருப்பூர் கிறித்தவ போதகர்களுக்கும் இடையே திருப்பூரில் விவாதம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு ஆரம்பமான இந்த விவாதம் மாலை 5மணி வரை அனல் பறக்க நடந்தது.

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி, தாங்கல் ஹபீபுல்லாஹ், அஹமத் கபீர், முஹம்மத் யூசுப், ஹசதாம்ஹுசைன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மத் ஹுசைன், அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 கோஸ்பல் சபையின் சார்பாக சகோ. சாலமன், ஆனந்தன், சகோ. நாப்தலின் மற்றும் அவர்களது குழுவினர் கலந்து கொண்டனர்.

 சத்தியத்தைக் கண்டு அசத்தியவாதிகள் எப்படி சிங்கத்தைப் பார்த்து வெருண்டோடக்கூடிய கழுதைகளைப் போல ஓடுவார்கள் என்பது இந்த விவாதத்திலும் உண்மையானது.

 “நாங்கள் ஒன்றும் ஜெர்ரிதாமஸ் போல உளறமாட்டோம்; அவரைப் போல திணற மாட்டோம். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நாங்கள் கிரிட்டிக்கலாக பதில் சொல்வோம்” என்று கூறி அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டி என்ற இடத்திலுள்ள கோஸ்பல் தேவாலயத்திற்கு நம்மை அழைத்த கிறித்த போதகர்களின் அழைப்பை ஏற்று அவர்களது தேவாலயத்திற்கே சென்று அவர்களை விவாதக்களத்தில் சந்தித்தது டிஎன்டிஜேவின் விவாதக்குழு.

 “நீங்கள் எந்தக்கேள்வி கேட்டாலும் நாங்கள் கிரிட்டிக்கலாக பதில் அளிப்போம்” என்று சொன்ன கிறித்தவ போதகர்களின் நிலை விவாதத்தின் இறுதியில் அந்தோ பரிதாபம்தான்.

ஆரம்பத்திலேயே கதிகலங்கிய போதகர்கள் :

 விவாதத்தைத் துவக்கியவுடனேயே எடுத்த எடுப்பிலேயே படுபயங்கரமான(?) ஒரு கண்டிசனைப் போட்டுத்தான் விவாதத்தை துவக்கியுள்ளனர். பைபிளில் உள்ள ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசக்கூடாது என்பதுதான் அவர்களது கண்டிசன். அப்படி என்ன கண்டிசன் என்று கேட்கின்றீர்களா? பைபிளில் உள்ள ஆபாசங்களைப் பற்றி விவாதத்தில் நாம் வாய்திறக்கக்கூடாதாம். அப்படி நாம் அது குறித்து கேள்விகேட்டு அதற்கு கிறித்தவ போதகர்கள் பதிலளித்தால், அந்த விவாத டிவிடியை மக்கள் பார்க்க முடியாதாம். அதனால், “தேவனுடைய திட்டத்தைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும்; பைபிளில் உள்ள பலான விஷயங்கள் குறித்து பேசக்கூடாது” என்பதுதான் அவர்களது அற்புத(?) கண்டிசன். இதை ஏற்றுக்கொண்டால்தான் நாங்கள் விவாதிப்போம் என்று ஆரம்பத்திலேயே அசடு வழிந்துள்ளனர் கிறித்தவ போதகர்கள்.

 பைபிளின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், “அந்த” மேட்டராகத் தானே இருக்கின்றது. அதுதானே கண்ணுக்குத் தெரிகின்றது. புரட்டுகின்ற பக்கமெல்லாம் ஆபாசங்களும், அசிங்கங்களுமாகத்தானே காட்சியளிக்கின்றன. அத்தகைய அசிங்கங்களை பேசக்கூடாது; அப்படி அது குறித்து விவாதித்தால் நாற்றமெடுத்துவிடும் என்று அஞ்சும் அளவுக்கு கிறித்தவப் போதகர்களாலேயே பைபிள் வசனங்களைப் பற்றி பேசமுடியவில்லை என்றால் பைபிளின் மகத்துவத்தை விளங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

 கிறித்தவ போதகர்கள் போட்ட அற்புதமான(?) கண்டிசனையும் நாம் ஏற்றுக்கொள்ள விவாதக்களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

பைபிள் இறைவேதமில்லை என்பதை பைபிள் வசனங்களை வைத்தே நிரூபித்த டிஎன்டிஜே:

 எடுத்தவுடனேயே பைபிள் இறைவேதமில்லை என்பதை பைபிள் சொல்லும் வசனங்களையும், அளவு கோல்களையும் வைத்தே நிரூபித்தனர் நமது சகோதரர்கள்.

கடவுளுடைய வேதமாக இருந்தால்,

 1. அந்த வார்த்தைகள் குறையில்லாததாக இருக்க வேண்டும்

 2. கூட்டல் - குறைத்தல் இருக்கக்கூடாது

 3. பொய் இருக்கக்கூடாது

 4. முரண்பாடு இருக்கக்கூடாது

5.புடமிடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று பைபிள் பல இடங்களில் சொல்லிக்காட்டுகின்றது.

 அப்படியானால் இந்த அடிப்படையில் பைபிள் உள்ளதா என்று நாம் ஆய்வுசெய்து பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது கடவுளுடைய வார்த்தை இல்லை என்பதை பைபிள் சொன்ன அடிப்படையில் நீங்கள் ஒப்புக்கொள்ளத்தாயாரா? என்று கேட்டுவிட்டு அடுக்கடுக்கான பைபிள் வசனங்களை அள்ளிப்போட்டுள்ளனர் நமது விவாதக்குழுவினர்.

எட்டு வயது ராஜாவுக்கு, பதினெட்டு வயது - எப்படி?:

 யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்குப் பதினெட்டு வயது. அவன் எருசலேமில் மூன்று மாதம் அரசண்டான்.

(இரண்டாம் ராஜாக்கள் 24:80)

யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்கு எட்டு வயது அவன் மூன்று மாதமும் பத்து நாளும் அரசாண்டு...

(இரண்டாம் நாளாகமம் 36:9)

 மேற்கண்ட இரண்டு வசனங்களில் முதலில் வரும் வசனத்தில் யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்குப் பதினெட்டு வயது என்றும், இரண்டாவது வசனத்தில் யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்கு எட்டு வயது என்றும் நேர் முரணாக உள்ளதே!

 புனித ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் இப்படி நேர்முரணான பொய்கள் இருக்கலாமா? இது எப்படி இறைவேதமாக இருக்க முடியும் என்று கேள்வியெழுப்ப அதற்கு கிறித்தவ போதகர்கள் படுசொதப்பலான பதிலை அளித்துள்ளனர்.

 அதாவது யோயாக்கீன் ராஜாவான பிறகு சில வருடங்கள் கழித்து அதைப்பார்த்தவர் அவன் இத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்றும், இன்னும் சில ஆண்டுகள் கழித்து யோயாக்கீன் ஆட்சி புரிந்ததை பார்த்தவர் அவர் பார்த்த வருடங்களை கணக்கிட்டும் சொல்லியிருப்பார். இது எப்படி முரணாகும் என்று பதிலளித்துள்ளனர்.

 அவர்களிடத்தில், இங்கு சொல்லப்பட்ட விஷயம் ஆட்சி புரிவதைப்பற்றியல்ல. அவன் ஆட்சியில் அமர்ந்தது எந்த வயதில் என்பதுதான் கேள்வி. இரண்டாம் நாளாகமம் எனும் ஆகமத்தில் 8 வயதில் ஆட்சியில் அமர்ந்தான் என்றும், இரண்டாம் ராஜாக்கள் எனும் ஆகமத்தில் 18 வயதில் ஆட்சியில் அமர்ந்தான் என்றும் உள்ளதே! அதற்கும் நீங்கள் சொல்வதற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? ஏன் இவ்வாறு நீங்களும் பைபிள் போன்று உளறிக்கொட்டுகின்றீர்கள்? என்ற ரீதியில் குறுக்குக்கேள்வி கேட்க அதற்கு எந்த பதிலும் இல்லை.

பரிசுத்த ஆவி கணக்கில் வீக்காக உள்ளதா?

 பலவீனம் என்பதெல்லாம் மனிதனுக்குத்தான் வருமே ஒழிய பரிசுத்த ஆவிக்கு வராது என்பதுதான் அவர்களது நம்பிக்கை. பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டவர் சரியாக சொல்வார் என்று இருக்கும் போது,

தாவீது ராஜா போரிட்டதைப் பற்றி பைபிள் பேசுகின்றது:

அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.

இரண்டாம் சாமுவேல் 8:4

அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரைவீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களையும் வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.

இரண்டாம் நாளாகமம் 18:4

 மேற்கண்ட வசனத்தில் 700 (எழுநூறா?) அல்லது 7000 (ஏழாயிரமா?) என்று பரிசுத்த ஆவிக்கு தெரியவில்லையா? பரிசுத்த ஆவி கணக்குப் பாடத்தில் வீக்காக உள்ளதா? என்ற ரீதியில் எழுப்பிய கேள்விக்கு இது ஆராய்ந்து திரட்டி எழுதப்பட்டது. அதனால் இதுபோல எண்ணிக்கை வித்தியாசம் வரும் என்று சொல்லி அவர்களது வாய்களாலேயே பைபிள் கடவுளுடைய வார்த்தை இல்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

செத்துவிட்ட மலடி பெற்றெடுத்த பிள்ளைகள்:

சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது

(இரண்டாம் சாமுவேல் 6:23)

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சில்லாயின் குமாரன் ஆதரியேலுக்குப் பெற்ற ஐந்து குமாரரையும் பிடித்து...(இரண்டாம் சாமுவேல் 21:8)

 மேற்கண்ட இரண்டாம் சாமுவேல் என்ற அதிகாரத்தில் வரக்கூடிய இரண்டு அதிகாரங்களில் புனித ஆவி மிகவும் குழம்பிப்போய் இருப்பது தெளிவாகின்றது என்றும், சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது என்று 6வது அதிகாரத்தில் சொல்லிவிட்டு, 21வது அதிகாரத்தில் அவளுக்கு பிள்ளை பிறந்தது என்று புனித ஆவி தானும் குழப்பமடைந்து மற்றவர்களையும் குழப்புவது ஏன் என்று கேள்வி கேட்க, அதில் குழப்பமடைந்த போதகர்கள் கடைசி வரை அது குறித்து வாய்திறக்கவில்லை.

 தங்களது வேதத்தில் இவ்வளவு ஓட்டைகளையும், பொய்களையும், புரட்டுகளையும் வைத்துக்கொண்டு விவாதம் செய்ய வந்த போதகர்களின் பில்டப்புக்கு மட்டும் குறைவே இல்லை. எங்களது வேதாகமம் கடவுளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால் ஒரு ஆகமத்திலுள்ள செய்திகளைப் பற்றி வேறொரு ஆகமங்களில் பேசப்படுகின்றது. அந்த அளவிற்கு பைபிள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று பீற்றியுள்ளனர்.

இதுதான் இறைவேதம் பாதுகாக்கப்படும் லட்சணமா? :

 ஒரு ஆகமத்தில் உள்ள செய்திகள் குறித்தும், அந்த ஆகமங்கள் பற்றியும் பல ஆகமங்களில் பேசப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதா? அப்படியா? என்று நமது சகோதரர்கள் கேள்வியெழுப்பிவிட்டு, அப்படியானால் பைபிளில் பழைய ஏற்பாட்டில் உள்ள ஆகமங்களில் மேற்கோள்காட்டி பேசப்பட்டுள்ள பல ஆகமங்கள் பைபிளில் இப்பொழுது காணவில்லையே! அதுவெல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணமால் போய்விட்டதுதான் சிறப்பானமுறையில் பாதுகாக்கப்படும் லட்சணமா? என்று கேட்டுவிட்டு, “இதுதான் பைபிள்” என்ற புத்தகத்தில் பீஜே அவர்கள் பட்டியல் போட்டுவைத்துள்ள கீழ்க்கண்ட பட்டியலை நமது சகோதரர்கள் கேள்வியாக எழுப்பியுள்ளனர்.

காணாமல் போன ஆகமங்களை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்:

ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.

(முதாம் நாளாகமம் 29:29)

 இந்த வசனத்தில் மூன்று ஆகமங்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. இவற்றில் சாமுவேல் ஆகமம் பைபிளில் இன்றளவும் உள்ளது. ஆனால் தீர்க்கதரிசியாகிய நாத்தான் எழுதிய பிரபந்தமும் ஞானதிருஷ்டிக்காரனாகிய 'காத்” தின் பிரபந்தமும் பைபிளில் காணப்படவில்லை. இந்த இரண்டு ஆகமங்களும் எங்கே?

 காணாமல் போன ஆகமங்கள் இரண்டோடு முடியவில்லை; இன்னும் ஏராளமான ஆகமங்கள் காணாமல் போயுள்ளன.

ஆர் எனும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவோபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது எனும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

(எண்ணாகமம் 21:15)

இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா?

(யோசுவா 10:13)

சாலெமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும் சீயோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும் நேபாத்தின் குமரனாகிய யெரோபெயாமைக் குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.

(இரண்டாம் நாளாகமம் 9:29)

 மேற்கண்ட வசனங்களில் சுட்டிக் காட்டப்படுகின்ற இத்தனை ஆகமங்களும் பைபிளில் காணப்படவில்லை. அது காணாமல் போய் வெகுநாட்களாகிவிட்டன.

 1. நாத்தானுடைய புஸ்தகம் எங்கே?

 2. காத்துடைய பிரபந்தம் எங்கே?

 3. கர்த்தருடைய யுத்த புஸ்தகம் காணாமல் போன மர்மம் என்ன?

 4. யாசேருடைய புஸ்தகமும் காணாமல் போய்விட்டதா?

 5. அகயிர் எழுதிய புஸ்தகம் எங்கே போய்விட்டது?

 6. இத்தோ எழுதிய பிரபந்தம் தொலைந்து விட்டதா?

 என்று கேள்வியை அடுக்கியவுடனேயே சவடால் விட்டு வாதத்திற்கு அழைத்த போதகர்களுக்கு தலைசுற்றல் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு திக்குமுக்காடி போய்விட்டனர். ஒரு ஆகமத்தைப் பற்றி இன்னொரு ஆகமம் பேசுவதாக சொன்னீர்களே! பல ஆகமங்களையே காணவில்லையே என்று நாம் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை.

அன்பான கடவுள் குழந்தைகளை கொலை செய்யச் சொல்லி உத்தரவு போட்டது ஏன்? :

உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

சங்கீதம் 137 : 9

 மேற்கண்ட வசனத்தை வாசித்துக் காண்பித்து குழந்தைகளைப் பிடித்து கல்லின் மேல் மோதியடித்து அவர்களை கொலை செய்பவர்கள் பாக்கியவான்கள் என்று கர்த்தர் சொல்லுவதாக பைபிள் சொல்கின்றதே! அது ஏன்?

 ஒருவன் ஒரு தவறு செய்தால் அவனை தண்டிப்பதில் நியாயம் உள்ளது. அதை விட்டு விட்டு ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளை கல்லில் முட்டி கொலை செய்வதுதான் பாக்கியம் பெற்றுத்தரும் செயலா? அவனைத்தான் கர்த்தர் பாக்கியவானாக ஆக்குகின்றாரா? இப்படி உள்ள தேவனைத்தான் கருணையுள்ளம் கொண்டவர்; அன்பானவர் என்றெல்லாம் சொல்கின்றீர்களா? என்று கேள்வி கேட்டதற்கு அவர்கள் கூறிய பதிலை நேரில் கேட்டிருந்தால் அந்தக் காமெடியைக்கேட்டு நரசிம்மராவ் கூட சிரித்திருப்பார்.

 அப்பொழுது காலம் கெட்டுப்போய் இருந்தது. அந்தக் குழந்தைகள் எல்லாம் வளர்ந்து பெரிய மனிதர்களாக மாறி தீயசெயல்கள் செய்தால் நரகத்திற்கு போய்விடுவார்கள் என்பதால்தான் குழந்தைகளை கொலை செய்யச் சொல்லி கர்த்தர் கட்டளையிட்டு தனது கருணை உள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளார். கொலை செய்யப்பட்ட அந்தக்குழந்தைகள் எல்லாம் சொர்க்கம் போய்விடுவார்கள். எனவே அந்தக்குழந்தைகளை கல்லில் முட்டி கொலை செய்ததன் மூலம் சொர்க்கத்திற்கு அனுப்பியவர்கள் பாக்கியவான்கள் தானே!

 அதனால்தான் கர்த்தர், “உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்” என்று சொல்லுகின்றார் (சங்கீதம் 137:9) என அற்புதமான(?) விளக்கத்தைக் கொடுத்துள்ளனர்.

நீங்களெல்லாம் ஏன் பாக்கியவான்களாக ஆகவில்லை?:

 அவர்கள் அந்த அபத்தமான கூறுகெட்டதமான பதிலைக்கூறியவுடன் நம்முடைய சகோதரர்கள் அவர்களிடம் சில எதிர்க்கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

 அப்படியானால், இங்குள்ள குழந்தைகள் எல்லாம் பெரிய மனிதர்களாக ஆன பிறகு நரகத்திற்குரிய செயல்களைச் செய்து துர்பாக்கியசாலியாக ஆகாமல் இருப்பதற்காக அனைத்து குழந்தைகளையும் கல்லில் மோதி, நீங்கள் கொலை செய்ய வேண்டியது தானே! அப்படி கொலை செய்து நீங்கள் பாக்கியவான்களாக மாறாமல் ஏன் இருக்கின்றீர்கள். உடனடியாக குழந்தைகளை கொலை செய்து பாக்கியவான்களாக மாற முயற்சி மேற்கொள்ளுங்கள். கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். நீங்கள் நேரடியாக பரலோக ராஜ்ஜியம் செல்ல முயற்சி செய்யுங்கள்” என்று நமது சகோதரர்கள் கேட்க அவர்கள் விழிபிதுங்கி விட்டனர்.

 பைபிளில் கர்த்தர் சொல்லுவது போல குழந்தைகளை கல்லில் மோதவைத்து கொலை செய்தால் நேரடியாக பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாது. நேரடியாக கம்பி எண்ணுவதற்கு மாமியார் வீட்டிற்குத்தான் போக வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிந்துள்ளதால்தானே கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ள மறுக்கின்றார்கள்.

 குழந்தைகளை கொலை செய்து அவர்களுக்கு மட்டும்தான் அந்த மகத்தான பாக்கியத்தைப் பெற்றுத்தந்து பரலோக ராஜ்ஜியத்திற்கு அனுப்ப வேண்டுமா? முதியவர்களையும் கொலை செய்தால் அவர்களையும் பரலோக ராஜ்ஜியத்திற்கு அனுப்பி வைக்கலாமே!

 அதுமட்டுமல்லாமல் ஹிரோஷிமா நாகசாகி போன்ற நகரங்களில் அணுகுண்டு வீசி பல லட்சக்கணக்கான நபர்களை கொன்று குவித்ததும் கொலை செய்யப்பட்டவர்கள் பரலோக ராஜ்ஜியத்திற்குரியவர்களாக மாறி, கொலை செய்தவர்கள் பாக்கியவான்களாக ஆவதற்காகத்தானா? என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்க ஆடிப்போய்விட்டனர் பாக்கியவான்கள்(?).

 மேலும், அப்படி குழந்தைகள் கெட்டுப்போய் விடுவார்கள்; ஏனென்றால் அப்போது காலம் கெட்டுப்போய் இருந்தது என்று சொல்வதாக இருந்தால், இப்பொழுது உள்ள கால சூழல் அதைவிட படுமோசமாக அல்லவா உள்ளது. காலம் இப்போது ரொம்ப ரொம்ப கெட்டுப்போய் உள்ளது. பாதிரியார்களாக உள்ளவர்களே பல சேட்டைகளைச் செய்யக்கூடிய அளவிற்கு காலம் கெட்டுப்போய் உள்ளது. அப்படியானால் இப்பொழுது உள்ள குழந்தைகளை கொலை செய்வதுதான் அதிகம் பாக்கியம் பொருந்திய செயலாக இருக்கும். இப்போது ஏன் அந்த அதிகம் பாக்கியம்(?) பொருந்திய செயலை செய்யவில்லை என்று கேள்வியெழுப்ப செய்வதறியாது விழி பிதுங்கியுள்ளனர் பேதகர்கள்.

சுயமாய் எதுவும் செய்ய இயலாத ஏசு:

ஏசு சொல்கின்றார் :

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

யோவான் 14:10

நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

யோவான் 5:30

நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். யோவான் 12:49

 மேற்கண்ட வசனங்களை வாசித்துக் காண்பித்தவுடன் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்த போதகர்கள் கடைசி வரையில் அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை.

நம்மை சமாளிக்க வைத்துள்ள ரெடிமேட் அட்டைக்கத்தி:

 நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிபிதுங்கும் நேரமெல்லாம் இவர்கள் ஒரு ஆயுதத்தை கையில் எடுப்பார்கள். அந்த ஆயுதம் அட்டைக்கத்தியை விட முனை மழுங்கிய ஆயுதமாகத்தான் இருக்கும். அந்த அட்டைக்கத்தி ஆயுதத்தைப் பற்றியும் நாம் தெரிந்து வைத்துக் கொள்வது இவர்களைப் போன்றவர்களை தோலுரிக்க உதவும்.

 அதாவது நாம் அவர்களிடம் கேள்வி கேட்டு, அதற்கு அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால், உடனே அவர்கள் சொல்லும் ரெடிமேட் பதில் என்ன தெரியுமா?

 இதுவெல்லாம் உங்களுக்கு விளங்காது. இதற்கு நீங்கள் அர்த்தம் விளங்கிக்கொள்வதாக இருந்தால் ஏசுவை நீங்கள் ரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ரட்சகராக ஏற்றுக் கொண்டால்தான் அதுவெல்லாம் உங்களுக்கு விளங்கும் என்பதுதான் அந்த பதில்.
 அதே ரெடிமேட் பதிலை அவர்கள் நமது சகோதரர்களிடம் கூற, “சரி! நாங்கள்தான் ஏசுவை இரட்சகராக ஏற்கவில்லை; அதனால் அது எங்களுக்கு விளங்காது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள்தான் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ளீர்களே! உங்களுக்கு விளங்கும்தானே! அப்படியானால் உங்களுக்கு விளங்கியதை எங்களுக்கு விளக்குங்கள் என்று கிடுக்கிப்பிடி போட்டு கேள்வி கேட்க அதற்கும் பதில் இல்லை






ஏசு கடவுளா? மனிதனா? :

 அடுத்தபடியாக ஏசுவைக்குறித்து அவர் கடவுளா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர் நமது தரப்பினர். நாம் கேள்வி கேட்டவுடனேயே அவர் கடவுள்தான்; காரணம் என்னவென்றால் அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்துள்ளார் என்று ஒரு ஆதாரத்தைக் காட்டியுள்ளனர் எதிர் தரப்பினர்.

 இறந்தவர்களை உயிர்ப்பித்ததால் அவர் கடவுள் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், எசேக்கியல் தீர்க்கதரிசி பல ஆயிரக்கணக்கான மனித எலும்புகளை உயிர்ப்பித்ததாக பைபிளில் உள்ளதே! அப்படியானால் உங்கள் பார்வையில், நீங்கள் சொல்லும் அடிப்படையிலும், அளவுகோலின் படியும், எசேக்கியல் தீர்க்கதரிசி கடவுளுக்கெல்லாம் பெரிய கடவுளாகவல்லவா ஆகிவிடுவார் என்று கேட்டு அது குறித்து எசேக்கியல் 37வது அதிகாரத்தில் வரும் கீழ்க்கண்ட வசனங்களை எடுத்துக்காட்டியுள்ளனர்.

 1. கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி,

 2. என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க்கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது.

 3. அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன்.

 4. அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

 5. கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.

 6. நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.

 7. எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.

 8. நான் பார்த்துக் கொண்டிருக்கையில் இதோ, அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது.

 9. அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

 10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

 இந்த வசனங்களை வாசித்துக்காட்டியவுடன் சுதாரித்துக் கொண்ட போதகர்கள் எசேக்கியல் தீர்க்கதரிசி பல்லாயிரக்கணக்கான பேர்களுடைய எலும்புகளை உயிர் கொடுத்து எழுப்பியது கர்த்தருடைய ஆற்றலால் தானே தவிர, அவரது சுய ஆற்றலின் அடிப்படையில் அல்ல.

 ஆனால் ஏசுவோ தனது சுய ஆற்றலின்படி இறந்தவர்களை உயிர்ப்பித்தார். சுயமாக இந்த அற்புதங்களை ஏசு செய்ததால்தான் அவரைக் கடவுள் என்று சொல்கின்றோம் என்று சொல்லி வசமாக மாட்டியுள்ளனர் போதகர்கள்.

 அவர்களது அந்த மழுப்பலான பதிலுக்கு நமது சகோதரர்கள் பைபிளின் புதிய ஏற்பாட்டிலிருந்து ஏசு சொன்ன சில வசனங்களை எடுத்துப்போட ஆடிப்போயினர் அந்த போதகர்கள். தங்களது வேதத்திலுள்ள வசனங்களைப் படித்து தாங்களே அதிர்ச்சியடையக்கூடிய ஒரு வேதத்தையுடையவர்தான் இவர்கள் என்பது அப்போது வெட்ட வெளிச்சமானது. அவர்களது வேதபுத்தகமே அவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னது.

“நான் ஒரு தீர்க்கதரிசி தானே தவிர, நான் கடவுள் இல்லை” - ஏசுவின் வாக்குமூலம் :

 நீங்கள் ஏசுவை கடவுள் என்று சொல்கின்றீர்கள். ஆனால் ஏசுவோ தன்னை தீர்க்கதரிசி என்றுதான் சொல்லியுள்ளார். இதோ அதற்கான ஆதாரங்கள் என்று கீழ்க்கண்ட வசனங்களை எடுத்துப்போட்டுள்ளனர் நமது சகோதரர்கள்.

இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். மாற்கு 6:4

ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக்கா 4:24

 நான் கடவுள் அல்ல; நான் ஒரு தீர்க்கதரிசிதான் என்று தன்னைப்பற்றி ஏசு தெளிவான வாக்குமூலம் அளித்த பிறகு அவரை நீங்கள் கடவுள் என்று சொல்வது சரியா? என்று கேள்வியெழுப்ப அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

 கண்ணீர் விட்டு அழுதவர் கடவுளா?

 பசி எடுத்து பழம் தின்ன மரத்தை நோக்கிப் போனவர் கடவுளா?

 என்று கேட்டுவிட்டு அத்தி மரத்தில் பழம் உள்ளதா? என்று தேடி அத்தி மரத்தை நோக்கிப் போய் அந்த மரத்தில் பழம் இல்லாததால் ஆத்திரமடைந்து கோபப்பட்டு அத்தி மரத்தை சபித்தவர் எப்படி கடவுளாக முடியும் என்று கேள்வி எழுப்ப, இது மரத்தைப் பற்றியது அல்ல; இஸ்ரவேலர்களைப் பற்றியது; அவர்கள் மரமாக இருந்தும் மக்களுக்கு கனி கொடுக்காததால்தான் அவர்களைக் கண்டிக்கும் விதமாக அவ்வாறு சபித்தார் என்று அதற்கும் சப்பைக்கட்டு பதிலைத்தான் தந்துள்ளனர்.

 அப்படி மரம் - கனி என்று உவமை சொல்வதாக இருந்தால் வெறுமனே உவமை சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே! பிறகு ஏன் பசி எடுத்து அத்தி மரத்தை நோக்கிப் போக வேண்டும் என்று நமது சகோதரர்கள் கேட்டவுடன்தான் பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது.

எங்களுக்கும் இதே சந்தேகம்தான்:

 அவர்கள் நம்மிடம், “நீங்கள் கேட்கும் கேள்வி சரியானதுதான். இதே சந்தேகம் எங்கள் மக்களுக்கே வந்து, எங்களது கிறித்தவ சகோதரர்களுமே இதில் சந்தேகம் கொண்டுள்ளார்கள். எங்களுக்கும் இதே சந்தேகம் உள்ளது” என்று கூறி சேம்சைடு கோல் போட்டு சரண்டர் ஆகிவிட்டனர்.

வரும் ஆனா வராது பாணியில், தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பிய போதகர்கள்:

 கடைசியில் ஏசு கடவுளா? அல்லது மனிதனா? அல்லது இரண்டும் கலந்த கலவையா? என்று அவர்களுக்கே குழப்பம் மேலிட்டுள்ளது.

 ஏசு அடிமைதான்; ஏசு மனிதன் தான்; ஆனால் அடிமை இல்லை; மனிதன் இல்லை; என்று கூறி தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பியுள்ளனர்.

சினிமா படபாணியில் சீரிய பிரச்சாரமாம்:

 கடவுளுடைய வேதம் என்று சொல்கின்றீர்களே! அதில் ஏன் இவ்வளவு முரண்பாடும், பொய்களும், ஆபாசங்களும் நிறைந்துள்ளன என்று நாம் கேட்ட கேள்விக்கு, அதுதான் ஆபாச சேட்டைகளெல்லாம் பற்றி விளக்கிவிட்டு கடைசியில் அது கூடாது என்று சொல்லப்பட்டுவிட்டதே என்று அவர்கள் உளறல் பதில் சொல்ல, அப்படியானால், ஆபாச படம் எடுப்பவன் கூட அனைத்தையும் காட்டிவிட்டு கடைசியில் இப்படி செய்யாதீர்கள் என்று போர்டு போடுகின்றான். இதுதான் சரியான வழிமுறையா? என்று கேட்க அதற்கும் பதில் இல்லை. ஆகமொத்தத்தில் சினிமா படபாணியில்தான் தாங்கள் ஊழியம் செய்கின்றோம் என்று அவர்களையும் அறியாமல் ஒப்புக் கொண்டுள்ளனர்.

 • ஏசுவை ரட்சகராக ஏற்கலாமா?

 • ஏசு நம் அனைவரது பாவத்தையும் மன்னிப்பாரா?

 • நம் பாவங்களை ஏசு சுமந்து கொண்டாரா?

 என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்கள் அளித்த சொதப்பல் பதில்களையும், நாங்கள் அந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதாக இருந்தால் வீடியோ கேமராவில் படம்பிடிப்பதை நீங்கள் நிறுத்துங்கள். அப்போதுதான் நாங்கள் பதில் சொல்லுவோம் என்று அடம்பிடித்து கேமராவில் படம்பிடிப்பதை நிறுத்திய கூத்துக்களும் இந்த விவாதத்தில் அரங்கேறியுள்ளன.
 jesusinvites.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை