சிசேரியன் கொடுமை விழிப்புணர்வு அவசியம்


சிசேரியன் கொடுமை விழிப்புணர்வு அவசியம்

தாய்மை ஒரு பெண்ணிற்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும் விஷயம்நிழலின் அருமை வெயிலின் போது தான்தெரியும் என்பதை போலதாய்மையடைவதின் அருமை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மிக்கநன்றாக புரியும்.  தாய்மையடைவது எவ்வளவு மகிழ்ச்சியானதோஅதே நேரத்தில் கர்ப்ப காலமும்குழந்தை பெற்றுக் கொள்வதும் அதற்கு நேர் எதிரானது என்பதை பெண்கள் நன்றாகவே உணர்ந்துஇருக்கின்றனர்.
இயற்கை மார்க்கமான இஸ்லாம்தாய்மையடையும் போது ஒரு தாய் அடையும் துன்பத்தைஎடுத்துக்காட்டிபெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையை அழகாக எடுத்து காட்டுகிறது.

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலி-யுறுத்தியுள்ளோம்அவனை அவனது தாய்பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள்அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.எனக்கும்உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாகஎன்னிடமே திரும்பி வருதல் உண்டு.
(அல்குர்ஆன் 31 : 14)
கர்ப்ப காலம்பிரசவம் ஒரு பெரும் சோதனை என்றிருக்கும் போதுஇன்றைய நவீன விஞ்ஞானம்பிரசவத்தை இலகுவாக்கியிருப்பதை காட்டிலும்கடினம் ஆக்கியிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.  சுக பிரசவம் என்பது இன்று அரிதாகி விட்டது. 
ஆங்கில செய்தி தொலைக்காட்சியான NDTV வலைத்தளத்தில் 26.04.2011 அன்று வெளியான செய்திஒன்று திடுக்கிடச் செய்கிறது.  கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழாவில் காரணமின்றி பிரசவங்களின்போது சிசேரியன் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இதைப் போலவேஏப்ரல் 16, 18மற்றும் 19 தேதிகளில்மூன்று நாட்களில் மட்டும் கொல்லம் மாவட்டத்தில் கடக்கால் தாலுக்காவில் 19சிசேரியன் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.  
சிசேரியன் செய்யப்பட்டதற்கான காரணம் விநோதமானது.  ஏப்ரல் 20 ஆம் தேதி முதல்மருத்துவமனையில் பணியாற்றும் மயக்கமடைய செய்யும் மருத்துவ நிபுணர் (Anaesthetist) பத்துநாட்களுக்கு விடுமுறையில் செல்ல இருந்ததால்பிரசவங்கள் முன்கூட்டியே சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் செய்யப்பட்டுள்ளனமாவட்ட மருத்துவ அதிகாரியை இது சம்பந்தமாக விசாரிக்குமாறுமாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொடூரத்தின் உச்ச கட்டம் என்னவென்றால்ஆலப்புழா அரசு மருத்துவமனையில் 48 மணி நேரங்களில்4 மருத்துவர்கள் 21 சிசேரியன் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர்காரணம் என்ன தெரியுமாஇந்த மருத்துவர்கள் தங்களுக்கு ஈஸ்டர் (புனித வெள்ளிவிடுமுறை கிடைக்க வேண்டும் என்பதற்காகபிரசவங்களை முன்கூட்டியே சிசேரியன் மூலம் செய்துள்ளனா;.
கல்வியில் முதன்மை மாநிலம் என பெயர் எடுத்திருக்கும் கேரளாவிலே இந்த நிலமை என்றால்மற்றமாநிலங்களின் நிலமையை சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.
எனவேபெண்களேபிரசவத்தின் போது மிகவும் கவனமாக இருங்கள்.  சுக பிரசவம் இல்லாமல்,சிசேரியன் செய்யப்பட வேண்டும் என மருத்துவர் கூறினால் அதற்கான காரணத்தை கேளுங்கள்.
டி சிசேரியன் செய்வதற்கான காரணம் என்ன?
டி சிசேரியன் செய்யாமல் இன்னும் சில நாட்கள் சுக பிரசவத்திற்காக காத்திருப்பதால் ஏற்படும்பாதகங்கள் என்ன?
டி வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனிற்காக சிசேரியன் செய்யப்படுகிறது என்றால்குழந்தையின்தற்போதைய நிலை என்ன ?
டி சிசேரியன் செய்யாமல்சுக பிரசவத்திற்கு எதிர்பார்த்தால் குழந்தைக்கு ஏற்படும் பாதகங்கள் என்ன?
போன்றவற்றை தெளிவாக மருத்துவர்களிடம் கேளுங்கள்காரணமின்றி சிசேரியன் செய்யப்படுவதை தவிர்க்கபெண்களும்ஆண்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

இதைப் போலவேகர்ப்ப காலத்தின் போதே சுக பிரசவத்திற்கான வழிமுறைகளை மருத்துவர்களின்ஆலோசனையுடன் பெண்கள் தெரிந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்தினால் சிசேரியன்தவிர்க்கலாம்.
மேலும் பல மருத்துவமனைகள் பணத்திற்கு ஆசைப்பட்டு அறுவை சிகிச்சைக்கு முனைவதைகாண்கிறோம்அதுவும் முஸ்லிம்கள் என்றால் பெரும்பாலும் அறுவை சிகிச்சையே செய்யப்படுகிறது.எனவே கர்ப்பமுற்றவுடன் நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை என்பதுநிர்பந்ததிற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று இருந்தால் மட்டுமே அங்கு காட்டுங்கள்.
பணத்திற்கு ஆசைப்படும் இஸ்லாத்தை வெறுக்கும் பல மருத்துவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகஅறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.
எழுத்து : இப்னு சாபிரா

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை